search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    தமிழகத்தில் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு கருணைத் தொகை, முன் பணம் வழங்க அதிக செலவாகாது என ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு பள்ளிகளில் மிகக்குறைந்த ஊதியத்துக்கு பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தீப ஒளி திருநாள் கொண்டாட பொருளாதாரம் இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு தீப ஒளி திருநாளை மகிழ்ச்சியானதாக மாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

    பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. மே மாதத்துக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு பல ஆண்டுகளாக பணி நிலைப்பு வழங்கப்படவில்லை. போனஸ், கருணைத் தொகை எதுவும் வழங்கப்படுவதில்லை.

    தமிழகத்தில் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு கருணைத் தொகை, முன் பணம் வழங்க அதிக செலவாகாது. ஆனால், அது அவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கும். எனவே அவர்களுக்கு அரசு கருணைத்தொகை, முன் பணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், பூந்தமல்லி மற்றும் தாம்பரம் ரெயில் நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் என 6 மையத்தில் இருந்து வரும் 3 ஆம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 20,334 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 9,806 பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

    இதற்காக கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், பூந்தமல்லி மற்றும் தாம்பரம் ரெயில் நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் என 6 மையத்தில் இருந்து வரும் 3 ஆம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு மொத்தமாக 9,806 பேருந்துகள் இயக்கப்படுகிறது, இன்று மட்டும் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 2,491 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    அரசு பேருந்துகள்

    அரசு பேருந்து இயக்கம் தொடர்பான தகவல்களை 044 24749002 எண்ணிற்கு அழைத்து தெரிந்து கொள்ளலாம். அதேபோல் தனியார் பேருந்துகளை கண்காணிக்கவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் குழு அமைத்துள்ளனர். தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் தொடர்பாக 1800 425 6151 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். 

    பார்களில் பராமரிப்பு மற்றும் தூய்மை பணிகள் முழுவீச்சில் கையாளப்பட்டன. வழிகாட்டு நெறிமுறைகளின் படி தெர்மல் ஸ்கேனர், கிருமிநாசினி உள்ளிட்டவை தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
    சென்னை :

    கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த ஜூன் 14-ந்தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனாலும் பார்கள் திறக்கப்படவில்லை. இந்தநிலையில் தமிழகம் முழுவதும் 1-ந்தேதி (இன்று) முதல் பார்கள் திறக்கலாம் என்ற உத்தரவை டாஸ்மாக் நிர்வாகம் நேற்று பிறப்பித்தது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து பல மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடை பார்கள் இன்று திறக்கப்பட உள்ளன. இதையொட்டி நேற்று பார்களில் பராமரிப்பு மற்றும் தூய்மை பணிகள் முழுவீச்சில் கையாளப்பட்டன. வழிகாட்டு நெறிமுறைகளின் படி தெர்மல் ஸ்கேனர், கிருமிநாசினி உள்ளிட்டவை தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    அதேவேளை பல பார்களில் பராமரிப்பு பணி இன்னும் முழுவீச்சில் நடைபெறாத நிலையும் தொடருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மதுக்கூட கட்டிட உரிமையாளர்கள்-ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க தலைவர் எம்.அன்புசெல்வன் கூறியதாவது:-

    பார்கள் மீண்டும் திறக்கப்படுவது மகிழ்ச்சி தான். அதற்காகத்தான் நாங்களும் போராடி வருகிறோம். ஆனால் திடீரென்று பார் திறக்கப்படும் என்ற அறிவிப்பு எதிர்பார்க்கவில்லை. இதனால் முழுமையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது. ஊழியர்கள் விடுமுறைக்கு சென்றிருப்பதால், பண்டிகை முடிந்துதான் அவர்களது வருகையை எதிர்பார்க்க முடியும். எனவே பார் திறப்பு குறித்த தேதியை குறைந்தபட்சம் 10 நாட்கள் தள்ளிவைக்க வேண்டும். இதுதொடர்பாக நாளை (இன்று) டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரை சந்திக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எது எப்படி இருந்தாலும் இத்தனை மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடை பார்கள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து மதுபிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ‘இதுதான் உண்மையான தீபாவளி பரிசு’ என குதூகலம் அடைந்திருக்கிறார்கள்.

    பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி இன்று சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. #FireCrackers
    சிவகாசி:

    இந்தியாவின் 80 சதவீத பட்டாசு தேவையை சிவகாசி பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்து வருகிறது. பட்டாசு உற்பத்தி மையமாக விளங்கும் இங்கு 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன.

    இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசு அடைவதாக கூறி பட்டாசு உற்பத்திக்கு தொடர்ந்து கடுமையான தட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று குறிப்பிட்ட நேரத்தில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதன் காரணமாக பட்டாசு விற்பனை பெருமளவில் சரிந்தது. மேலும் பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பட்டாசு தொழிலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

    உச்சநீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும், பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி சிவகாசியில் கடந்த ஒரு மாதமாக பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.


    இதன்காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடந்தது. அதுவும் தோல்வியில் தான் முடிந்தது.

    பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், தொழிலாளர்கள் சங்கம், அச்சக உரிமையாளர்கள் சங்கம், சிறுவணிகர்கள் சங்கம் என அனைத்து தரப்பினரும் இன்று (21-ந்தேதி) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று சிவகாசி மற்றும் திருத்தங்கல், வெம்பக்கோட்டை, தாயில் பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. சிவகாசியின் முக்கிய வீதிகள் வெறிச்சோடியது.

    மார்க்கெட், பஸ் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    கடையடைப்பு போராட்டம் காரணமாக சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. #FireCrackers
    தீபாவளியையொட்டி 9 நாட்களுக்கு மட்டுமே திறக்கப்பட்ட ஹாசனாம்பா கோவில் நடை நேற்று மூடப்பட்டது.
    ஹாசன் டவுனில் அமைந்துள்ளது ஹாசனாம்பா கோவில். இக்கோவிலில் ஹாசனாம்பா அம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலின் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு வருடமும் தீபாவளியையொட்டி 9 நாட்களுக்கு மட்டுமே நடை திறக்கப்படும்.

    பின்னர் நடை மூடப்படும்போது அம்மனுக்கு போடப்பட்டிருக்கும் மாலைகள், கோவிலில் வைக்கப்பட்ட மலர்கள், படையல்கள் ஆகியவை கெட்டுப்போகாமல் அடுத்த ஆண்டு கோவில் திறக்கப்படும் வரை அப்படியே இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கோவிலில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்குகளும் அணையாமல் அடுத்த ஆண்டு வரை எரிந்து கொண்டே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

    இப்படி பல்வேறு சிறப்பு மிக்க ஹாசனாம்பா கோவில் இந்த ஆண்டு தீபாவளியையொட்டி கடந்த 1-ந் தேதி திறக்கப்பட்டது. கோவில் திறக்கப்பட்ட நாள் முதல் தினமும் காலை 5 மணியளவிலும், மதியம் 1.30 மணி முதல் 3.30 மணி வரையிலும் ஹாசனாம்பா அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களும், அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்யப்பட்டன. மற்ற நேரங்களில் அம்மனை பக்தர்கள் தரிசித்து வந்தார்கள்.

    இப்படி ஹாசனாம்பா அம்மனை கடந்த 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 2 கோடியே 25 லட்சம் பக்தர்கள் தரிசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக இலவச தரிசன வரிசையில் மட்டும் கோவிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் காத்திருந்து அம்மனை தரிசித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிறப்பு கட்டணம் செலுத்தியும் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தார்கள்.

    இவ்வாறாக சிறப்பு கட்டணம், அர்ச்சனை கட்டணம், பிரசாதம் விற்றது உள்ளிட்டவை மூலம் ரூ.21.45 லட்சம் வசூலாகி உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம்தான் ஹாசனாம்பா கோவில் திறக்கப்பட்டு 8-வது நாள் ஆகும். அதனால் நேற்று முன்தினத்துடன் அம்மனை, பக்தர்கள் தரிசனம் செய்தது முடிவுக்கு வந்தது. பின்னர் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.

    பின்னர் நேற்று காலை 5 மணியளவில் மீண்டும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தன. மதியம் 2 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சரியாக 2 மணிக்கு அம்மனுக்கு மாலைகள் அணிவித்து, படையலிட்டு, விசேஷ பூஜைகள் செய்து, விளக்கேற்றி, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு பின்னர் கோவில் நடை மூடப்பட்டது.

    பின்னர் கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பிரசித்திபெற்ற ஹாசனாம்பா கோவில் கடந்த 1-ந் தேதி அன்று திறக்கப்பட்டது. 8-வது நாளான நேற்று முன்தினம் வரை கோடிக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தார்கள். தினமும் காலை 5 மணியளவிலும், பின்னர் மதியம் 1.30 மணி முதல் 3.30 மணி வரையிலும் அம்மனுக்கு அலங்காரங்கள், அபிஷேகங்கள் செய்யப்பட வேண்டி இருந்ததாலும் அந்த நேரங்களில் மட்டும் அம்மனை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    நேற்று முன்தினம் மாலையோடு அம்மனை, பக்தர்கள் தரிசித்தது முடிவுக்கு வந்தது. கோவில் திறக்கப்பட்டு 9-வது நாளான(கடைசி நாள்) நேற்று பக்தர்கள் யாரும் அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை. காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டு பின்னர் சரியாக 2 மணிக்கு கோவில் நடை மூடப்பட்டது. கோவிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படும் பணி சித்தேஸ்வரா கோவில் வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது. உண்டியல் காணிக்கை மூலம் கோவிலுக்கு கிடைத்த வருமானம் குறித்து தகவல்கள் வெளியிடப்படும்’’ என்று கூறினார்.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காளி தேவியின் உக்கிரத்தை தணிக்கும் வகையில் வினோதமான வழிபாடு நடைபெற்றது. #HimachalDhamiVillage #StonePeltingRitual
    ஷிம்லா:

    இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகையான தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தென் மாநிலங்களில் 6-ம் தேதியும், வட மாநிலங்களில் 7-ம் தேதியும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதேபோல் வெளிநாடுகளிலும் உள்ள இந்துக்களும் இப்பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

    ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக தீபாவளியை முன்னிட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், இமாச்சல பிரதேசத்தில் உள்ள தாமி என்ற கிராமத்தில், தீபாவளியையொட்டி வினோதமான ஒரு வழிபாடு நடத்தப்படுகிறது. தலைநகர் சிம்லாவில் இருந்து 26 கிமீ தொலைவில் இந்த கிராமத்தில், மக்களின் காவல் தெய்வமான காளி தேவியின் உக்கிரத்தை தணிக்கும் வகையில், பாரம்பரியமாக இந்த பூஜை நடத்தப்படுகிறது.



    அதாவது, கிராமத்தின் இரண்டு வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து கற்களை வீசி தாக்கிக்கொள்வார்கள். அதில் முதலில் காயமடையும் நபர் துணிச்சல் மிக்கவராக கருதப்படுகிறார். அத்துடன், அவர் தன் ரத்தத்தை காளியின் நெற்றியில் திலகமாக பூசுவார். இந்த ஆண்டு தாமி கிராமத்தில் நேற்று கல்வீச்சு சடங்கு நடந்தது. இதில், 28 வயது வாலிபர் சுராஜ் முதலில் காயமடைந்ததால், அவர் தனது ரத்தத்தினால் காளிக்கு திலகமிட்டார். அப்போது கிராம மக்கள் அனைவரும் காளிதேவியை வணங்கி வழிபட்டனர்.

    இந்த வினோதமான கல்வீசி தாக்கும் சடங்கில் பங்கேற்ற மேலும் சிலர் காயமடைந்தனர். அனைவருக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த வழிபாடு ஆபத்து நிறைந்ததாக இருந்தபோதிலும், மக்களின் வலுவான கடவுள் நம்பிக்கைக்கு மதிப்பு அளிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #HimachalDhamiVillage #StonePeltingRitual


    நாகப்பட்டினம் மாவட்டத்தில் தீபாவளிக்கு முதல் நாளும், தீபாவளி அன்றும் ரூ.6 கோடியே 83 லட்சத்து 57 ஆயிரத்து 700-க்கு மது விற்பனை ஆகி உள்ளது.
    நாகப்பட்டினம்:

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சாதாரண நாட்களை விட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், பண்டிகை நாட்களிலும் மது விற்பனை வழக்கத்தை விட அதிக அளவில் இருக்கும்.

    தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை ஆகிய பண்டிகை நாட்களில் ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 96 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தீபாவளி பண்டிகையையொட்டி தீபாவளிக்கு முதல் நாளும், தீபாவளி அன்றும் ரூ.6 கோடியே 83 லட்சத்து 57 ஆயிரத்து 700-க்கு மது விற்பனை ஆகி உள்ளது.

    5-ந் தேதி(தீபாவளிக்கு முதல் நாள்) பீர் வகைகள் ரூ.36 லட்சத்து 60 ஆயிரத்து 840-க்கும், மது வகைகள் ரூ.3 கோடியே 13 லடசத்து 52 ஆயிரத்து 70-க்கும் விற்பனை ஆகி உள்ளது.

    6-ந் தேதி(தீபாவளி அன்று) பீர் வகைகள் ரூ.60 லட்சத்து 80 ஆயிரத்து 700-க்கும், மது வகைகள் ரூ.2 கோடியே 72 லட்சத்து 64 ஆயிரத்து 90-க்கும் விற்பனை ஆகி உள்ளது.

    தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த ஆண்டு நாகை மாவட்டத்தில் ரூ.6 கோடியே 11 லட்சத்து 2 ஆயிரத்து 760-க்கு விற்பனை ஆனது. இந்த ஆண்டு ரூ.6 கோடியே 83 லட்சத்து 57 ஆயிரத்து 700-க்கு விற்பனை ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.72 லட்சத்து 54 ஆயிரத்து 940 அதிகம் ஆகும்.
    தீபாவளிக்கு சென்னையில் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 2190 பேரிடம் அபராதம் வசூலிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் பொதுமக்கள் இதனை கண்டு கொள்ளாமல் விரும்பிய நேரங்களில் எல்லாம் பட்டாசு வெடித்தனர்.

    இது தொடர்பாக தமிழகம் முழுவதும் 2190 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவர்கள் அனைவரும் கண்டிப்பாக கோர்ட்டில் அபராதம் செலுத்த வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். விதிமுறைகளை மீறிய அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதன்படி பட்டாசு வழக்கில் சிக்கிய அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    சென்னையில் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக ஏற்கனவே 343 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்கள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் மேலும் 15 பேர் பட்டாசு வெடித்த குற்றத்துக்காக போலீசில் சிக்கியுள்ளனர். #tamilnews
    தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் சென்றிருந்தவர்கள் இன்று காலை சென்னை திரும்பியதால் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    தாம்பரம்:

    தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் வசிக்கும் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.

    தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து இன்று காலை அவர்கள் சென்னை திரும்பினர். ஒரே நேரத்தில் ஏராளமான கார்களிலும், பஸ்களிலும் அவர்கள் வந்ததால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை பெருங்களத்தூருக்கு அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் வந்தன. இதனால் பஸ் நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை அதிகாலை முதல் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    நெரிசலை சமாளிக்க போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்து அதிகாரிகளும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். அரசு பஸ்கள், தனியார்கள் பஸ்கள் நிறுத்த தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

    காலை சுமார் 10 மணிக்கு பின்னரே போக்குவரத்து சீரானது. நெரிசல் காரணமாக காலையில் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர். வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை சாலையை அகலப்படுத்தும் பணி முடிந்துள்ளது. இதனால் வாகன நெரிசல் குறைந்து இருந்தது.
    புதுடெல்லியில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறைக்கு 300-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Diwali #DelhiFireCalls
    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காவல்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. பட்டாசு வெடிக்கும்போது முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும், தீ விபத்து ஏதேனும் ஏற்பட்டால் உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    அதன்படி தீபாவளி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட பட்டாசு விபத்து, வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு ஏராளமான அழைப்புகள் சென்றுள்ளன. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தினர்.



    இந்நிலையில் தலைநகர் டெல்லியில் நேற்று நள்ளிரவு வரை தீ விபத்து தொடர்பாக 271 அழைப்புகளும், அதன்பின்னர் இன்று காலை 8 மணி வரை 74 அழைப்புகளும் வந்ததாக டெல்லி தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தீ விபத்து குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சதார் பஜார் குடிசைப்பகுதியில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், 2 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறை அதிகாரி கூறினார். #Diwali #DelhiFireCalls
    தீபாவளிக்கு திறக்கப்பட்ட ஹாசனாம்பா தேவி கோவிலில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் தான் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலின் நடை ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். இத்தகைய புகழ்பெற்ற இந்த கோவிலின் நடை தீபாவளியை முன்னிட்டு கடந்த 1-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் கோவிலில் தினமும் ஹாசனாம்பாவுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    கோவில் நடை திறந்து நேற்றுடன் 7-வது நாள் ஆகிறது. நேற்றும் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (வியாழக்கிழமை) மட்டும் தான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த நாள் (9-ந்தேதி) கோவிலில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அன்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. வருகிற 10-ந்தேதி சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
    உத்தர பிரதேசத்தில் 3 வயது குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Diwali #DiwaliCrackers #UPGirl #SuttliBomb
    மீரட்:

    உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் மில்லக் கிராமத்தில் திங்கட்கிழமை இரவு சிறுவர்கள் சிலர் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சசிகுமார் என்பவரின் 3 வயது மகள்  பட்டாசு விபத்தில் பலத்த காயமடைந்தார். அவரது வாய் சிதைந்த நிலையில் அலறித் துடித்தாள். அவளது வாயில் ஒரு வாலிபர் பட்டாசு வைத்து வெடித்ததாக கூறப்படுகிறது.



    உடனடியாக குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையின் வாய்ப்பகுதியில் 50 தையல்கள் போடப்பட்டுள்ளன. தொண்டையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவளது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது.

    விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் வாயில், அதே பகுதியைச் சேர்ந்த ஹர்பால் என்ற வாலிபர் பட்டாசை வைத்து வெடிக்க செய்ததாக காவல்நிலையத்தில் அவளது தந்தை புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஹர்பாலை தேடி வருகின்றனர்.

    குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Diwali #DiwaliCrackers #UPGirl #SuttliBomb

    ×