search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பிறகு இன்று காற்று மாசு அளவு அபாய அளவைத் தாண்டியது. #DelhiPollution #AirPollution #Diwali
    புதுடெல்லி:

    நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றில் மாசின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. அண்டை மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் கோதுமை அடித்தாள் எரிக்கப்படுவதாலும், வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து வருகிறது.

    காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவெண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீடுகளில் தெய்வ வழிபாட்டுக்கு ஊதுவத்தி கொளுத்துவதைக் கூட நிறுத்தும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், காற்று மாசு குறைந்தபாடில்லை.

    தீபாவளி பண்டிகைக்கு முன், காற்று மாசு அளவு மிக மோசமான நிலைக்கு சென்றது. காற்றின் தரக்குறியீடு மிக மோசம் என்ற அளவில், 345 என்ற அளவிற்கு மாசு அதிகரித்தது.



    டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்ட நிலையில், காற்று மாசு படிப்படியாக உயர்ந்து அபாய அளவை தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி டெல்லி ஆனந்த் விஹாரில் 999, அமெரிக்க தூதரக பகுதி மற்றும் சாணக்யபுரி பகுதியில் 459, மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டு மைதானத்தில் 999 என அபாயகரமான அளவில் காற்றின் தன்மை இருந்தது.

    டெல்லியில் இன்று காலையில் சாலைகள் தெரியாத அளவிற்கு புகை மூடியிருந்தது. புகைமூட்டம் அடர்ந்து காணப்பட்டதால் வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்கினர். புகையில் இருந்து காத்துக்கொள்ள பலர் முகமூடி அணிந்து சென்றனர். #DelhiPollution #AirPollution #Diwali
    தீபாவளியையொட்டி 3 ஆயிரம் அடி மலை உச்சியில் உள்ள தேவிரம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சிக்கமகளூரு மாவட்டம் மல்லேனஹள்ளி தாலுகா பிண்டுகா கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தேவிரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே பெரிய மலை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த மலையின் உச்சியில் தேவிரம்மன் சிலை அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

    அதுபோல் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி, மலையின் அடிவாரத்தில் உள்ள தேவிரம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல் மலையில் உள்ள தேவிரம்மன் சிலைக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேவிரம்மனை தரிசனம் செய்ய கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதனால் அந்த மலை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படு கிறது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலையின் அடிவாரத்தில் உள்ள தேவிரம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் மலையின் உச்சியில் உள்ள தேவிரம்மனை தரிசிக்க மலையேறினர். கூட்டம், கூட்டமாக பக்தர்கள் மலையேறி 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள தேவிரம்மன் சிலை பகுதிக்கு வந்தடைந்தனர்.

    அங்கு தேவிரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் அம்மன் சிலை திரையால் மூடப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. அம்மனுக்கு அலங்காரம் முடிவடைந்ததும் காற்றின் அசைவால் மூடப்பட்டிருந்த திரை தானாக திறந்தது.

    தேவிரம்மன் சிறப்பு பூஜையில் பங்கேற்ற பக்தர்கள்.

    இந்த நிகழ்வு அங்கிருந்த பக்தர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனை பார்த்து பக்தர்கள் அனைவரும் உணர்ச்சி பொங்க சாமி தரிசனம் செய்தனர். நேற்று மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    விழாவையொட்டி கோவிலில் இன்று (வியாழக்கிழமை) தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. அதைதொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) அம்மன் பல்லக்கில் ஊர்வலமும் நடக்கிறது. இந்த பல்லக்கு ஊர்வலத்தை காண கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு குவிந்து வருகின்றனர்.

    மேலும் தேவிரம்மனை தரிசனம் செய்ய வரும் வெளிமாநில பக்தர்களுக்கு ஏதுவாக கர்நாடக அரசு சார்பில் சிக்கமகளூருவில் இருந்து பிண்டுகாவுக்கு ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பிண்டுகா மலை அடிவாரம் மற்றும் மலை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    15 ஆண்டுகளாக அமெரிக்க வெள்ளைமாளிகையில் நடைபெற்று வந்த தீபாவளிக் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. #Diwali #America #WhiteHouse #Trump
    வாஷிங்டன்:

    அமெரிக்க வாழ் இந்திய மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் பதவிக்கு வந்த அதிபர் ஒபாமாவும் அந்த வழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்தார்.

    இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு நடைபெறவில்லை. கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில் அதில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார்.

    இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் நடத்தப்படாததற்கு, நாடாளுமன்ற இடைக்கால தேர்தல், பிரச்சாரம், வாக்கு எண்ணிக்கை போன்றவை காரணமாக கூறப்படுகிறது. #Diwali #America #WhiteHouse #Trump
    மேற்கு வங்காளத்தில் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 200 பேர்களை போலீசார் கைது செய்தனர். #WestBengal #firecrackers #Diwali
    கொல்கத்தா:

    தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. மேலும் குறிப்பிட்ட டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடையும் விதிக்கப்பட்டு உள்ளது.

    மேற்கு வங்காளத்தில் தீபாவளியுடன், காளி பூஜையும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகைகளை கோலாகலமாக கொண்டாடிய மக்கள் அதிக அளவு பட்டாசுகளை வெடித்ததுடன், வாணவேடிக்கைகளையும் நிகழ்த்தினர். இதனால் கொல்கத்தா உள்ளிட்ட நகரங்கள் முழுவதும் வண்ணமயமாகவே காட்சியளித்தன.



    இதில் அனுமதிக்கப்பட்ட டெசிபலுக்கு அதிகமான ஒலி எழுப்பும் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன. இவ்வாறு தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடித்தவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்த 2 மணி நேரத்தை தாண்டியும் பட்டாசு வெடித்தவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

    இவ்வாறு நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை மாநிலம் முழுவதும் 200-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இதில் கொல்கத்தா நகரில் மட்டும் 60-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #WestBengal #firecrackers #Diwali 
    சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 64½ டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 15½ டன் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Diwali #Crackers
    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி பட்டாசு வெடித்து குதூகலிப்பது வழக்கம். பட்டாசு வெடிக்கும்போது அதில் சுற்றியிருக்கும் காகிதங்கள் சிதறும். இதனால் தீபாவளி கொண்டாட்டத்துக்கு பிறகு தெருக்கள் முழுவதும் காகித குப்பைகளாகவே காணப்படும். பெரும்பாலானோர் வீட்டின் முன்பு உள்ள குப்பைகளை கூட்டி தெருக்களில் ஆங்காங்கே மேடுகளாக அமைத்து வைத்துவிடுவார்கள். அதனை மாநகராட்சி ஊழியர்கள் வந்து அகற்றுவார்கள்.

    அந்தவகையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் என மொத்தம் 19 ஆயிரம் பேர் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் (மாலை 5.30 மணி வரை) 64½ டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளது.

    இந்த கழிவுகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள அபாயகரமான கழிவுகளை சேகரிக்கக்கூடிய தனியார் நிறுவனத்திடம் ஒவ்வொரு கட்டமாக ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் கடந்த ஆண்டு 80 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டன. அந்தவகையில் கடந்த ஆண்டை விட 15½ டன் குறைந்துள்ளது. பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லண்டனில் உள்ள விமான நிலையத்தில் ஆடிப்பாடி, கோலாகலமாக பயணிகள் தீபாவளியை கொண்டாடினர். #Diwali
    லண்டன்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லண்டனில் உள்ள விமான நிலையத்தில் ஆடிப்பாடி, கோலாகலமாக பயணிகள் மற்றும் ஊழியர்கள் தீபாவளியை கொண்டாடினர். #Diwali

    இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி திருநாள் (6.11.18) உலகம் முழுவதும் மிகவும் பிரம்மாண்டமாக பல்வேறு வழிகளில் கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை இந்துக்கள் மட்டுமின்றி, பல்வேறு மதத்தினரும் பாகுபாடு இன்றி இந்தியாவில் கொண்டாடினர்.

    இந்நிலையில், லண்டன் நகரில் உள்ள ஹெத்ரோ விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் தீபாவளியை ஆனந்தமாக ஆடிப்பாடி கொண்டாடியுள்ளனர். இந்த காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. #Diwali
    திருப்பூர் அருகே தீபாவளி பண்டிகைக்கு துணிகள் தைத்து தரமுடியாத விரக்தியில் பெண் டெய்லர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் பாப்பண்ணா நகரில் கடந்த 5 ஆண்டுகளாக பெண்கள் தையல் நிலையம் நடத்தி வருபவர் பத்மினி (வயது 41). திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்த இவர் தனது கணவரை பிரிந்து தனது தாய் அம்பிகா, மகள் தமிழரசி மற்றும் மகன் லிபின்சாகர் ஆகியோருடன் திருப்பூரில் தங்கி சொந்தமாக பெண்கள் தையல் நிலையமும் நடத்தி வருகிறார்.

    இவர் தைத்து தரும் துணிகள் நன்றாக இருந்ததால் அப்பகுதியை சேர்ந்த பலர் இவரிடம் தங்கள் துணிகளை கொடுத்து தைத்து வந்துள்ளனர். இதனால் நம்பிக்கையானவர் என்ற பெயரையும் பத்மினி அந்த பகுதியில் பெற்றிருந்தார். இந்த நற்பெயரின் காரணமாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு துணிகள் தைத்து தர ஏராளமானோர் நாடியுள்ளனர். ஒரு கட்டத்தில் அதிக துணிகள் வரவே தன்னால் தைத்து தரமுடியாது எனவும் பத்மினி தெரிவித்துள்ளார். எனினும் வாடிக்கையாளர்கள் உங்களால் முடியும் தைத்து தாருங்கள் என தெரிவித்துள்ளனர்.

    இதனால் கடந்த 4 நாட்களாக இரவு பகலாக தைத்து வந்துள்ளார் எனினும் இறுதியாக சில துணிகளை தைத்து தரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக நற்பெயர் பெற்று வந்த நிலையில் தைத்து தருவதாக வாங்கிய துணிகளை தைத்து தரமுடியாததால் நற்பெயர் கெட்டு விடும் என மனமுடைந்து சாணிபவுடரை கரைத்து குடித்து பத்மினி தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்து விரைந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் பத்மினியின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பூட்டான், மியான்மர் நாடுகளின் அருணாச்சலப் பிரதேசம் மாநில எல்லையோரத்தில் பணியாற்றும் ராணுவ வீரர்களுடன் இன்று தீபாவளி கொண்டாடினார். #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    பூட்டான், மியான்மர் நாடுகளையொட்டியுள்ள அருணாச்சலப் பிரதேசம் மாநில எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் நமது தாய்நாட்டை பாதுகாக்கும் கண்காணிப்பு மற்றும் காவல் பணியில் இரவு,பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தன்னலம் கருதாத அவர்களின் கடமையை பாராட்டும் வகையில் பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று அங்கு சென்றார். வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து, இனிப்பு வழங்கி அவர்களை மகிழ்வித்தார்.



    எல்லைப்பகுதியில் உள்ள கண்காணிப்பு அரண்களை பார்வையிட்ட நிர்மலா சீதாராமன் ராணுவ உயரதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார். #NirmalaSitharaman #Diwaliwithjawans #ArunachalPradesh
    குமரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 7 பேர் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். #Diwali
    நாகர்கோவில்:

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    இந்த ஆண்டு முதல் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு விதித்திருந்தது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 7 பேர் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    நாகர்கோவில் வடிவீஸ்வரத்தைச் சேர்ந்த குமாரசாமி (வயது 24), இடலாக்குடியைச் சேர்ந்த முபாரக் (26), ஆரல்வாய்மொழி அனந்தபத்மநாபபுரத்தைச் சேர்ந்த முருகன் (42), ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்த தினகரன் (40), சுசீந்திரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (55), பிச்சைமணி (50), ராஜாக் கமங்கலத்தைச் சேர்ந்த லிங்கராஜ் (61) ஆகியோர் கைதானார்கள்.

    நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக அரவிந்த் (21), கன்னியாகுமரியில் பாலபிரசாத் (35), வடசேரியில் சிவா (28), செல்வம் (48), ரமேஷ் (27), சுகிஷ் (24), முகிலன் குடியிருப்பில் ஏசுமணி (63) என்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தக்கலை கேரளபுரத்தில் தங்கராஜ் (62), பிரசாத் (28), சிவசதா (37), அஞ்சுகிராமத்தில் செல்வம் (45), பிரபு (35), ஆனந்த் (24), மணிகண்டன் (25), ஈத்தாமொழியில் விஜய் (22), மார்த்தாண்டம் திக்குறிச்சியில் அனிஷ் (23), சந்திரசேகர் (36), ராஜாக்கமங் கலத்தில் நாகலிங்ம் (23) உள்பட 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் கோழிப் போர்விளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த ராஜகுமார் (45) என்பவரை கைது செய்தனர். இதேபோல் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெகன் தலைமையிலான போலீசார் மயிலோடு பகுதியில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த ராஜு என்பவரை கைது செய்தனர். #tamilnews
    உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தீபாவளி நாளில் பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko
    ஈரோடு:

    ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று ஈரோட்டுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    பட்டாசு வெடிக்க இரண்டு மணிநேரம் மட்டும் என்று நேரம் கொடுத்துள்ளனர். அதாவது நாம் காலம் காலமாக வந்து நாள் முழுக்க காலை முதல் மாலை வரை பட்டாசு வெடித்து வருகிறோம். சிறுவர்கள், இளைஞர்கள் ஆர்வம் மிகுதியால் சில இடங்களில் பட்டாசு போட்டிருக்கலாம். அவர்களை எச்சரித்து இதுபோன்று செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டு விட்டு இருக்கலாம்.

    அதை விட்டுவிட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்வது தவறானது. 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விருப்பமில்லாமலேயே இருக்கிறார். ஏற்கனவே நீதிமன்றம் விடுதலை செய்யலாம் என்று பச்சைக் கொடி காட்டி விட்டது.

    அதுபோன்ற தமிழ்நாடு அமைச்சர் அவையும் தீர்மானம் போட்டு அனுப்பி விட்டது. அரசியல் சட்டத்தின் 161 வது பிரிவின்படி அவர்களை விடுதலை செய்ய வேண்டியது ஆளுநரின் மனிதாபிமான கடமையாகும். அவர்கள் கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் தங்கள் வாழ்க்கையை சிறையில் கழித்து விட்டனர்.

    அதனால் ஆளுநர் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யலாம். ஆனால் ஆளுநர் உச்சநீதிமன்றத்தில் இன்னொரு தரப்பினர் வழக்கு போட்டு உள்ளனர் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.


    முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அவர்கள் அணையை உடைக்க வேண்டும் எண்ணத்திலேயே செயல்பட்டு வருகின்றன. இரண்டு கமிட்டிகள் ஆய்வு செய்து அதை மிக வலுவாக இருக்கிறது என்று சொல்லிவிட்டது.

    ஆயிரம் ஆண்டுகளானாலும் பாதிப்பு இல்லை என்றும் கூறி விட்டது. உச்சநீதிமன்றம் அமைத்த நீதிபதி ஆனந்த் தலைமையிலான கமிட்டி குழுவில் கேரளா சார்பில் நீதிபதி தாமஸ் தமிழ்நாடு சார்பில் நீதிபதி லட்சுமணன் அடங்கிய கமிட்டி மிகத் தெளிவான அறிக்கை கொடுத்துள்ளது. இன்னொரு அணை கட்டுவதற்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறிவிட்டது. ஆனாலும் கேரள அரசு வழக்கு போட்டுள்ளது. இந்த விசயத்தில் மத்திய அரசு துரோகம் செய்துள்ளது.

    மத்திய அரசு தொடர்ந்து தமிழக பிரச்சனையில் தலையிட்டு வருகிறது. மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்ற எல்லா பிரச்சனைகளும் அனைத்தும் அரசுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு இப்போது உள்ள சட்டங்களை வைத்து கடுமையான நடவடிக்கை எடுக்கலாம்.

    இவ்வாறு வைகோ கூறினார். #MDMK #Vaiko
    தீபாவளிக்கு முன்னும் பின்னும் கணக்கிட்டதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்றில் மாசு பாதியாக குறைந்திருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. #Diwali #AirPollutioncontrolboard
    சென்னை:

    தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அளவை கணக்கிட ஒவ்வொரு ஆண்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கருவிகள் அமைத்து கணக்கெடுப்பது வழக்கம்.

    அதே போல் இந்த ஆண்டும் திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை, தி.நகர், நுங்கம்பாக்கம், மணலி, வேளச்சேரி, ஆலந்தூர் ஆகிய இடங்களில் காற்று மாசு கணக்கிடப்பட்டது.

    தீபாவளிக்கு முன்னும் பின்னும் கணக்கிட்டதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்றில் மாசு பாதியாக குறைந்திருந்தது கண்டறியப்பட்டது.

    தீபாவளி தினமான 6-ந்தேதி இரவு மட்டும் காற்றில் மாசு சிறிது அதிகரித்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

    தீபாவளியன்று காற்றில் மாசு அளவு மணிலியில் 168 புள்ளிகளாக இருந்தது. வேளச்சேரியில் 94 புள்ளியும், ஆலந்தூரில் 129 புள்ளிகளாகவும் பதிவாகி இருந்தது. #Diwali #AirPollutioncontrolboard
    ஈரோடு மாவட்டங்களில் கோர்ட்டு அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    ஈரோடு:

    இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு நீதிமன்றம், மற்றும் அரசு சார்பில் பல்வேறு கட்டுபாட்டுகளை விதித்திருந்தது.

    தொடர்ச்சியாக வெடிக்க கூடிய வெடிகள், அதிக புகை வரும் வெடிகளை வெடிக்க கூடாது என்று அரசு அறிவித்தது. அதே போன்று நீதிமன்றம் பட்டாசு வெடிக்கும் நேரத்தை 2 மணி நேரமாக குறைந்தது.

    இதையடுத்து தமிழக அரசு பட்டாசு வெடிக்கும் நேரத்தை காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை வெடிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.

    நீதிமன்ற உத்தரவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். மீறி பட்டாசு வெடித்தால் 6 மாத சிறை தண்டனை என்றும் அறிவித்தது.

    ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுபடி அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அனுமதி அளித்த நேரத்தை தாண்டி நீதிமன்ற தடையை மீறி பட்டாசு வெடித்ததாக நேற்று தீபாவளி அன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோயில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தடையை மீறி பட்டாசு வெடித்த கோபியை சேர்ந்த தேவராஜ்(வயது25), குமரேசன்(19), நல்லகவுண் டன் பாளையத்தை சேர்ந்த தீரன்(21), சிவகுமார்(22), முருகேசன்(24), மொடச்சூரை சேர்ந்த (பாலு22) ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இதே போன்று கவுந்தப்பாடி, சத்தியமங்கலம், பங்களாபுதூர், புளியம்பட்டி, பெருந்துறை, சித்தோடு, பவானி, கருங்கல்பாளையம், சூரம்பட்டி ஆகிய பகுதியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக ஒரு வரும், வீரப்பன்சத்திரத்தில் 3 பேரும் என மாவட்டம் முழுவதும் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. #tamilnews
    ×