search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமாரசாமி"

    • துமகூரு மாவட்டத்தில் 11 தொகுதிகள் உள்ளன.
    • கட்சி தொண்டர்களே என்னுடைய சொத்து.

    துமகூரு :

    ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துமகூரு மாவட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பிரசாரம் செய்த போது பேசியதாவது:-

    துமகூரு மாவட்டத்தில் 11 தொகுதிகள் உள்ளன. அதில், 10 தொகுதிகளில் ஜனதாதளம்(எஸ்) வெற்றி பெறுவது உறுதி. 2 தேசிய கட்சிகளும், நமது கட்சி மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஓட்டுப்போட்டால் காங்கிரசுக்கு போடுவது என்று பா.ஜனதா தலைவர்களும், நமது கட்சிக்கு ஓட்டுப்போட்டால் பா.ஜனதாவுக்கு வாக்களித்ததாக ஆகிவிடும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பொய் பிரசாரம் செய்கிறார்கள்.

    பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர், மத்திய உள்துறை மந்திரி, பல மாநில முதல்-மந்திரிகள் வருகிறார்கள். காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் தலைவர்கள் வருகிறார்கள். ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு பிரசாரம் செய்ய யாரும் தேவையில்லை. எங்கள் கட்சி தொண்டர்களே போதும், அவர்களே நட்சத்திர பேச்சாளர்கள் ஆவார்கள்.

    பா.ஜனதா, காங்கிரசும் ஊழல் கட்சிகள். ஜனதாதளம்(எஸ்) தான் விவசாயிகள், ஏழைகளுக்கான கட்சியாகும். துமகூரு புறநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். தேர்தலுக்கு முன்பாக வரும் கருத்து கணிப்பு முடிவுகளை நமது கட்சியினர் யாரும் நம்ப வேண்டாம். இந்த முறை நமது கட்சி ஆட்சிக்கு வருவது உறுதி.

    நான் பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் முழு ஆதரவு அளித்து வருகின்றனர். கருத்து கணிப்பு முடிவுகள் பற்றி ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் கவலைப்பட தேவையில்லை. கட்சி தொண்டர்களே என்னுடைய சொத்து. தேசிய கட்சிகளால் கர்நாடகத்திற்கு எந்த பயனும் இல்லை. இதனை மாநில மக்கள் புரிந்து கொண்டு ஜனதாதளம்(எஸ்) கட்சியை நிச்சயமாக ஆதரிப்பார்கள்.

    இவ்வாறு குமாரசாமி பேசினார்.

    • காங்கிரஸ் கட்சியினர் பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதித்துள்ளனர்.
    • பஜ்ரங்தள அமைப்பிலும் ஒன்றும் அறியாத இளைஞர்கள் இருக்கிறார்கள்.

    கொப்பல் :

    கொப்பல் மாவட்டத்தில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக பா.ஜனதா தலைவர்கள் டெல்லியில் இருந்து வந்து முகாமிட்டுள்ளனர். திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று பிரதமர் மோடி மக்களை பார்த்து கை அசைக்கிறார். கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக பா.ஜனதா கட்சி என்ன செய்தது?. பா.ஜனதாவும், காங்கிரசும் கர்நாடகத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்காக என்ன செய்துள்ளார்கள்.

    விவசாயிகளுக்கு ஜனதாதளம் (எஸ்) கட்சி ஒன்றுமே செய்யவில்லை என்று பிரதமர் கூறுகிறார்.எங்கள் கட்சி விவசாயிளுக்கு என்ன செய்யவில்லை என்று விளக்கமாக கூற வேண்டும். பிரதமர் மோடி மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அவர், பிரதமராகி 9 ஆண்டுகள் ஆகி விட்டது. தற்போது அவரது அலை எங்கும் வீசவில்லை, தற்போது குறைந்து விட்டது.

    எனவே பிரதமர் மோடியின் பிரசாரம் இந்த சட்டசபை தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. காங்கிரஸ் கட்சியினர் பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதித்துள்ளனர். தடை விதிப்பதால், ஏதாவது பயன் கிடைக்க போகிறதா?. பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடுமா?. அந்த அமைப்பை சேர்ந்தவர்களால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள்.

    பஜ்ரங்தள அமைப்பிலும் ஒன்றும் அறியாத இளைஞர்கள் இருக்கிறார்கள்.அந்த இளைஞர்களிடம் ஏதாவது சொல்லி, அவர்களது வாழ்க்கையை பாழாக்குகின்றனர். அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு ஒரு அமைப்புக்கு தடை விதிப்பது சரியானது இல்லை.

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிக்காமல் தற்போது சட்டதேர்தல் அறிக்கையில் தடை விதிப்பதாக கூறுவது ஏன்? என்று காங்கிரஸ் தலைவர்கள் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேவகவுடா தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
    • இளைஞர்கள் எங்கள் கட்சியை ஆதரிக்க வேண்டும்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று ராமநகரில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அங்கு நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இந்த நாட்டில் விவசாயிக்கு ஓய்வூதியம் கொடுக்கிறேன் என்று சொல்லும் ஒருவர் இருக்கிறார் என்றால் அது குமாரசாமி தான். மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்றும் ஒரே தலைவர் குமாரசாமி தான். காங்கிரசின் கேலி-கிண்டல்களுக்கு மத்தியில் விவசாய கடன்களை குமாரசாமி தள்ளுபடி செய்தார். அதாவது ரூ.26 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார். இந்த தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வெற்றி பெற்று குமாரசாமி முதல்-மந்திரி ஆவது உறுதி. இளைஞர்கள் எங்கள் கட்சியை ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு தேவேகவுடா பேசினார்.

    • கர்நாடகம்-மகாராஷ்டிரா இடையே பெலகாவி எல்லை பிரச்சினை உள்ளது.
    • இந்த இரு கட்சிகளாலும் நாட்டு மக்களுக்கு தீர்வுகாணவில்லை.

    மண்டியா :

    மண்டியா மாவட்டத்தில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்தில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா தேசிய தலைவர்களும், காங்கிரஸ் தேசிய தலைவர்களும் இங்கு வந்துள்ளனர். ஆனால் இவர்கள் இங்கு நிலவும் பிரச்சினைகள் பற்றி பேசவில்லை. கர்நாடகத்தில் துரதிர்ஷ்டம் அவர்கள் ஒருவரை ஒருவர் பற்றி குற்றம்சாட்டி பேசி வருகிறார்கள். காங்கிரசார், பிரதமரை விஷப்பாம்பு என்று கூறுகிறார்கள்.

    பதிலுக்கு பா.ஜனதாவினர் காங்கிரசாரை தாக்கி பேசுகிறார்கள். கர்நாடகத்தின் பிரச்சினைகள் பற்றியும், மத்திய அரசின் திட்டங்கள் பற்றியும் யாரும் பேசுவதில்லை. கர்நாடகம்-மகாராஷ்டிரா இடையே பெலகாவி எல்லை பிரச்சினை உள்ளது. இதுபற்றி யாரும் வாய்திறப்பதில்லை. மவுனமாக இருக்கிறார்கள். இரு தேசிய கட்சிகளும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த என்னென்ன செய்யப்போகிறோம் என பேசுவதில்லை. இந்த இரு கட்சிகளாலும் நாட்டு மக்களுக்கு தீர்வுகாணவில்லை.

    ஜனதாதளம் (எஸ்) கட்சி அதிர்ஷ்டத்தை எதிர்பார்ப்பதாக மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார். எங்கள்கட்சிக்கு 20 இடங்கள் தான் கிடைக்கும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. யார்-யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கிறது என பார்ப்போம்.

    நடிகை சுமலதா எம்.பி. சிறந்த தலைவர். பெரிய கட்சிக்காரரும் கூட அவர். நாங்கள் சிறிய கட்சி என்பதால் அவரை பற்றி பேச முடியாது. எங்களுக்கு நேரம் வரும் போது பேசுகிறேன். நான் மாநில முதல்-மந்திரியாக இருந்த போது லாட்டரியை ஒழித்தேன். சாராயத்தை ஒழித்தேன். அவர்களுக்கு தெரியும் யாருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடகத்தின் மொத்த மக்கள்தொகையில் மத சிறுபான்மையினர் 20 சதவீதம் பேர் உள்ளனர்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வெற்றி பெற்றால் நாங்கள் அமல்படுத்த போகும் திட்டங்களை இதில் கூறியுள்ளோம். குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதங்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை, விதவை பெண்களுக்கான உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்.

    அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.5 ஆயிரம் வரை உயர்த்தப்படும். 15 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும். முதல் நிலை கல்லூரிகளில் படிக்கும் 18 வயது பூர்த்தியான பொருளாதாரத்தில் நலவுற்ற மாணவர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.

    நிமான்ஸ் ஆஸ்பத்திரி போல் 500 படுக்கைகளை கொண்ட நரம்பியல் ஆஸ்பத்திரி அமைக்கப்படும். எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, இதய நோய், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கிறவர்களுக்கு முதல்-மந்திரியின் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். 6 ஆயிரத்து 6 கிராம பஞ்சாயத்துகளில் தலா 30 படுக்கைகளுடன் கூடிய உயர்தர ஆஸ்பத்திரி அமைக்கப்படும்.

    விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி, இளம் விவசாயிகளை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை, விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை, விவசாய பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வினியோகம் வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.

    கர்நாடகத்தின் மொத்த மக்கள்தொகையில் மத சிறுபான்மையினர் 20 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களுக்கு பட்ஜெட்டில் 5 சதவீத நிதி ஒதுக்கப்படும். புதிதாக தொழில் தொடங்குவோருக்கு ரூ.10 லட்சம் மானியம், சிறு தொழில் தொடங்குவோருக்கு ரூ.2 லட்சம் மானியம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்.

    போலீசாரின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும். புதிதாக வக்கீல் தொழில் தொடங்குவோருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். பதிவு செய்யப்பட்ட காவலாளிகளுக்கு மாதம் ரூ.2,000, பொருளாதார ரீதியாக நலிவுற்ற நிலையில் உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு மாதம் ரூ.2,000 நிதி உதவி வழங்கப்படும். முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு மீண்டும் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதி திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ள மேகதாது திட்டம் அமல்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாங்கள் யாருக்கும் பணம் கொடுத்து கருத்து கணிப்பு நடத்தவில்லை.
    • தேசிய கட்சிகளுக்கு பண பலம் உள்ளது.

    பெங்களூரு :

    பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குமாரசாமி முன்னிலையில் முன்னாள் மந்திரி ஆல்கோட் ஹனுமந்தப்பா ஜனதா தளம் (எஸ்) கட்சியில் சேர்ந்தார். அதன் பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    முன்னாள் மந்திரி ஆல்கோட் ஹனுமந்தப்பா மீண்டும் தனது சொந்த வீட்டிற்கு வந்துள்ளார். காங்கிரசில் அவரது சக்தியை பயன்படுத்தி கொள்ளவில்லை. நேற்று வரை அவரது உடல் காங்கிரசிலும், மனது ஜனதா தளம் (எஸ்) கட்சியிலும் இருந்தது. அவர் என்னுடன் தொடர்பில் தான் இருந்தார். காங்கிரஸ் அவருக்கு உரிய மரியாதை வழங்காததால், அவர் மீண்டும் இங்கு வந்துள்ளார். அவருக்கு மாநில அளவில் கட்சியின் செயல் தலைவர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அவரை போல் இன்னும் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் எங்கள் கட்சிக்கு வரவுள்ளனர். துமகூருவில் 11 தொகுதிகளிலும் எங்கள் கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. 123 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

    தேசிய கட்சிகளுக்கு பண பலம் உள்ளது. எங்களுக்கு பண பலம் இல்லை. எங்கள் கட்சியின் வேட்பாளரை இழுக்க மந்திரி சோமண்ணா முயற்சி செய்துள்ளார். இதை நான் கண்டிக்கிறேன். நாங்கள் யாருக்கும் பணம் கொடுத்து கருத்து கணிப்பு நடத்தவில்லை. 150 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று ரத்தத்தில் எழுதி கொடுப்பதாக டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். பாவம் அவர் ரத்தத்தில் எழுதி கொடுக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அவரது உடலில் ரத்தம் குறைந்துவிடும்.

    அதே போல் ஜெகதீஷ் ஷெட்டரை தோற்கடிப்பதாக ரத்தத்தில் எழுதி கொடுப்பதாக எடியூரப்பா சொல்கிறார். யாரும் ரத்தத்தில் எழுதி கொடுக்க வேண்டாம். 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் சொல்கின்றன. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் என்பதை கூற வேண்டும்.

    நான் பஞ்சரத்னா யாத்திரை மூலம் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தேன். மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். அதனால் மக்களின் ஆதரவு எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    • கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது.
    • பா.ஜனதா ஜெயிக்க போவது இல்லை.

    மைசூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி நேற்று மைசூரு மாவட்டத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அமித்ஷா, ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி ஆகியோர் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. அவர்கள் பிரசாரம் செய்வதால் இங்கு ஒன்றும் நடக்க போவது இல்லை. ஏன் பிரதமர் மோடியே கர்நாடகத்திற்கு பிரசாரம் செய்ய வந்தாலும் பா.ஜனதா ஜெயிக்க போவது இல்லை. வருகிற சட்டசபை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி யாருடனும் கூட்டணி இல்லாமல் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும்.

    மாநிலத்தில் பிரதமர்நரேந்திர மோடி, அமித்ஷா, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோருக்கு பொதுமக்களிடம் வரவேற்பு இல்லை. பா.ஜனதாவினர் நடத்தும் மாநாடு, பொதுக்கூட்டங்களில் மக்கள் கூட்டம் இல்லை.மாற்று கட்சிகளில் இருந்து ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு வந்த 20 பேருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் வெற்றி பெற செய்வோம்.

    ஓய்வில்லாமல் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதி்ப்பு ஏற்பட்டது. தற்போது நலமாக உள்ளேன். தொடர்ச்சியாக 10 நாட்கள் ஓய்வில்லாமல் பிரசாரத்தில் கலந்து கொள்கிறேன். அதன் பிறகு ஓய்வு எடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஹாசனில் வலுவான கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.
    • சில சகுனிகள் தேவகவுடா குடும்பத்தை அழிக்க நினைக்கிறார்கள்.

    உப்பள்ளி :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் ஹாசன் தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் யாருக்கு டிக்கெட் கிடைக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. தேவேகவுடாவின் மூத்த மகன் எச்.டி.ரேவண்ணா தனது மனைவி பவானிக்கு ஹாசன் தொகுதியில் டிக்கெட் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

    ஆனால் தேவேகவுடாவின் மற்றொரு மகன் எச்.டி.குமாரசாமி தனது ஆதரவாளரான ஸ்வரூப் என்பவருக்கு டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதனால் அக்கட்சிக்குள் பனிப்போர் நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் உப்பள்ளியில் அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.டி.குமாரசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஹாசனில் வலுவான கட்சி நிர்வாகிகள் உள்ளனர். ஹாசன் தொகுதியில் வேட்பாளர் யார் என்பதை அவர்களே முடிவு செய்வார்கள். அது தான் இறுதி முடிவு. நான் அந்த தொகுதியின் யதார்த்தத்தை பற்றி அறிந்துள்ளேன். பவானி ரேவண்ணா ஹாசனில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது.

    நான் நடத்திய கள ஆய்வில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. இதனால் தான் நான் ஆரம்பத்தில் இருந்தே சாதாரண கட்சி தொண்டருக்கு ஹாசனில் டிக்கெட் கொடுக்கும்படி கூறி வருகிறேன். சில சகுனிகள் தேவகவுடா குடும்பத்தை அழிக்க நினைக்கிறார்கள். அவர்கள் தான் ஹாசன் தொகுதி விவகாரத்தை ஊதி பெரிதாக்குகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நானும், தேவகவுடாவும் நட்சத்திர பேச்சாளர்கள் இல்லை.
    • பஞ்சரத்னா யாத்திரைக்கு மக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    பெங்களூரு :

    பெங்களூருவில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    பா.ஜனதா ஆட்சியில் மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. வளர்ச்சி பணிகள் செய்திருந்தால் தான் சட்டசபை தேர்தலில், தங்களது ஆட்சியில் செய்த பணிகள் குறித்து மக்களிடம் கூறி பிரசாரம் செய்ய முடியும். அதனால் பிரசாரத்திற்காக நடிகர்கள், நட்சத்திர பேச்சாளர்களை பா.ஜனதாவினர் அழைத்து வருகின்றனர்.

    நடிகர் சுதீப் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவித்திருப்பது, அவரது தனிப்பட்ட விஷயமாகும். இதற்காக நடிகர்கள் பற்றி நான் கீழ்மட்டமாக பேச விரும்பவில்லை. நடிகர்கள் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்ப கூடியவர்கள். அவர்களை ஒரு கட்சிக்கு மட்டும் தேவைப்படுவராக மாற்றக்கூடாது.

    சினிமா நடிகர்களை பார்க்க மக்கள் கூடுவார்கள், ஆனால் அது ஓட்டுக்களாக மாறுவதில்லை. நடிகர்களை பார்க்க வரும் மக்கள், அந்த கட்சிக்கு தான் ஓட்டுப்போடுவார்கள் என்று சொல்ல முடியாது. ஜனதாதளம் (எஸ்) கட்சியை பொறுத்தவரை நானும், தேவகவுடாவும் நட்சத்திர பேச்சாளர்கள் இல்லை. எங்கள் கட்சியில் இருக்கும் அனைத்து தொண்டர்களும் நட்சத்திர பேச்சாளர்கள் தான். அதற்கான திறமை எங்களது கட்சி தொண்டர்களிடம் இருக்கிறது.

    பஞ்சரத்னா யாத்திரைக்கு மக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சட்டசபை தேர்தலை சந்திக்க எங்கள் கட்சி பஞ்சரத்னா திட்டங்களை கொண்டுள்ளது. அந்த திட்டங்களை மக்களிடம் கூறி பிரசாரம் செய்வோம். எங்கள் கட்சிக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களை அழைத்து வருவது குறித்து இன்னும் முடிவாகவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாயிகளுக்காக பஞ்சரத்னா திட்டத்தில் சில திட்டங்களைச் சேர்த்துள்ளேன்.
    • விவசாயிகள் மகன்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றார் குமாரசாமி.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவர் குமாரசாமி பஞ்சரத்னா யாத்திரையை நடத்தி வருகிறார். அவர் நேற்று துமகூரு மாவட்டம் திப்தூரில் இந்த யாத்திரை நடத்தினார். அப்போது கட்சி தொண்டர்களிடம் குமாரசாமி பேசியதாவது:

    விவசாயிகள் கடன்காரர்களாக இருக்கக்கூடாது. இதற்காக நான் எனது பஞ்சரத்னா திட்டத்தில் திட்டங்களைச் சேர்த்துள்ளேன்.

    ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பு உழவு பணிகளை மேற்கொள்ள ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அதிகபட்சமாக 10 ஏக்கர் வரை ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

    விவசாயிகளின் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்ய கிராம பஞ்சாயத்துகள் தோறும் அரசு பப்ளிக் பள்ளிகள் தொடங்கப்படும்.

    கிராம பஞ்சாயத்துகளில் சுகாதார நிலையங்கள் நிறுவப்படும். விவசாயிகளின் மகன்களுக்கு யாரும் பெண் கொடுப்பது இல்லை என்றும், இதற்கு ஏதாவது வழி காண வேண்டும் என்றும் கோரி என்னிடம் விவசாயிகள் பலர் மனு கொடுத்தனர்.

    கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) ஆட்சி அமைந்தால் விவசாயிகளின் மகன்களை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.

    விவசாயிகள் நமக்கு உணவு வழங்குபவர்கள். அவர்களை நன்றாக வைத்துக்கொள்வது நமது கடமை. இந்த திட்டத்திற்கு தேவையான நிதி எவ்வளவு என்று கணக்கிட்டு அதை ஒதுக்குவேன் என தெரிவித்தார்.

    • என்னை விமர்சிப்பவர்கள் பற்றி நான் கவலைப்படவில்லை.
    • எனக்கு தோல்வி பயம், ஏமாற்றம் என்று சொல்கிறார்கள்.

    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவின் சாதியை சேர்ந்தவரை முதல்-மந்திரி ஆக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது என்று நான் கூறினேன். எனது இந்த கருத்தில் குழப்பம் இல்லை. ஆனால் தெளிவு இருக்கிறது. சிருங்கேரி மடத்தின் மீது அந்த சாதியினர் தாக்குதல் நடத்தினர். இது வரலாறு. இந்த வரலாற்றை யாரும் திரித்து கூற முடியாது. நான் கூறிய கருத்தே ஒன்று, அதை பா.ஜனதாவினர் திரித்து வேறொரு கருத்தை கூறுகிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும். உண்மையை கூறியுள்ளேன். அதுபற்றி விவாதம் நடைபெறட்டும்.

    சிவாஜி, பசவவேஸ்வரய்யா, புத்தர், மகாத்மா காந்தி, அம்பேத்கர் போன்ற மாபெரும் தலைவர்களையே சங்பரிவார் அமைப்புகள் விட்டு வைக்கவில்லை. என்னை விமர்சிப்பவர்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் கருத்தை விட்டுவிட்டு தேவை இன்றி பா.ஜனதா தலைவர்கள் ஆவேசம் அடைகிறார்கள். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.

    எனக்கு தோல்வி பயம்

    எனக்கு எதிராக பா.ஜனதா தலைவர்கள் பேசலாம், சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி தவறான கருத்துகளை பரப்பலாம். எனக்கு தோல்வி பயம், ஏமாற்றம் என்று சொல்கிறார்கள். அம்பேத்கர், பசவேஸ்வரா, புத்தர் கூறியதையே நான் சொல்கிறேன். இதில் பிராமணர் வகுப்பை நான் எங்கு அவமானப்படுத்தினேன். நான் அந்த சமூகத்தை அவமதிக்கவில்லை, அவமதிக்கவும் மாட்டேன். அதனால் இதற்கு மீண்டும் மீண்டும் நான் விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமற்றது.

    இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.

    • எங்கள் கட்சியை அழிக்க காங்கிரஸ் தலைவர்கள் கனவு காண்கிறார்கள்.
    • நாட்டில் தற்போது காங்கிரஸ் கட்சி காணாமல் போய் வருகிறது.

    ராய்ச்சூர் :

    ராய்ச்சூரில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    ஜனதாதளம் (எஸ்) கட்சி கலைக்கப்பட இருப்பதாகவும், குழப்பத்தில் இருக்கும் தொண்டர்கள் காங்கிரசில் சேரலாம் என்றும் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். எங்கள் கட்சியை அழிக்க காங்கிரஸ் தலைவர்கள் கனவு காண்கிறார்கள். அவர்களது கனவு பலிக்காது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு மக்கள் முழு ஆதரவு அளிப்பார்கள். எங்கள் கட்சியை தேசிய அளவுக்கு மக்கள் கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    மக்கள் யாருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, எங்கள் கட்சி 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று கூறி இருக்கிறார். எங்களது கட்சியை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? என்று காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்கிறேன். நாட்டில் தற்போது காங்கிரஸ் கட்சி காணாமல் போய் வருகிறது. கர்நாடகத்தில் மட்டும் 60, 70 தொகுதிகளில் வெற்றி பெற்று வருகிறார்கள்.

    எங்கள் கட்சியை அழிக்க நினைத்தால், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய் விடும். 200 யூனிட் இலவச மின்சாரம், ரூ.2 ஆயிரம் உதவித் தொகை என்று மக்களை ஏமாற்றுவது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பேசிக் கொண்டு இருந்தால், சட்டசபை தேர்தலில் கூடுதலாக 4 தொகுதிகள் கிடைக்கும். ஜனதாதளம் (எஸ்) கட்சி பற்றி பேசினால், காங்கிரசுக்கு அந்த தொகுதிகளிலும் கிடைக்காமல் போய் விடும்.

    பவானி ரேவண்ணா தேர்தலில் போட்டியிடுவது பற்றியும், எனது மகன் போட்டியிடுவது குறித்தும் ஈசுவரப்பா பேசி இருக்கிறார். எனது மகன் மட்டும் தான் தேர்தலில் போட்டியிடுகிறாரா?. சித்தராமையா தனது மகனை எம்.எல்.ஏ. ஆக்கவில்லையா?. ஈசுவரப்பா, எடியூரப்பா தங்களது மகன்களை எம்.எல்.ஏ.க்கள் ஆக்க மறைமுக முயற்சி செய்யவில்லையா?. ஜனதாதளம் (எஸ்) கட்சி விவகாரங்களில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    ×