search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமாரசாமி"

    • கட்சியை விட்டு சென்றவர்கள் பற்றி கவலைப்பட போவதில்லை.
    • எங்கள் கட்சிக்கு மக்கள் ஒரு முறை வாய்ப்பளிக்க வேண்டும்.

    பெங்களூரு :

    பெங்களூருவில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநிலத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கூட்டணி ஆட்சியில் நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்றேன். எந்த நெருக்கடியாக இருந்தாலும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தற்கும் முக்கியத்துவம் கொடுத்தேன். கர்நாடக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க ஜனதாதளம் (எஸ்) கட்சி போராடி வருகிறது.

    எங்கள் கட்சிக்கு மக்கள் ஒரு முறை வாய்ப்பளிக்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்கள் விரும்பியபடி ஆட்சி செய்வோம். மக்கள் விரும்பியபடி ஆட்சி கொடுக்காவிட்டால், ஜனதாதளம் (எஸ்) கட்சியை கலைத்து விடுவேன். ஜனதாதளம் (எஸ்) கட்சி 4 மாவட்டங்களுக்கு மட்டுமே பிரபலமானது, குமாரசாமி செல்லும் பகுதிகளில் மக்கள் கூடுவார்கள், ஆனால் மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள் என்ற கருத்து உள்ளது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் இது மாற வேண்டும்.

    கட்சியை விட்டு சென்றவர்கள் பற்றி கவலைப்பட போவதில்லை. எந்த தொகுதியில் யார் சென்றாலும், சாதாரண தொண்டரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறும் சக்தி கட்சிக்கு உள்ளது. சான்ட்ரோ ரவி கைது செய்யப்பட்டு இருப்பதாக பா.ஜனதா அரசு கூறி வருகிறது. எனக்கு இருக்கும் தகவல்படி அவர் உடுப்பியில் இருந்து கேரளா, அங்கிருந்து புனேக்கு சென்றிருந்தார். புனேயில் இருந்து குஜராத்திற்கு எப்படி சென்றார்?, அவரை அங்கு அழைத்து சென்றது யார்? என்பது தெரியவில்லை.

    3 நாட்களுக்கு முன்பாகவே சான்ட்ரோ ரவி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த சாட்சிகள் அனைத்தையும் போலீசார் அழித்து விட்டனர். சான்ட்ரோ ரவி கைதாகும் முன்பாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா எதற்காக குஜராத் சென்றார். சான்ட்ரோ ரவியை குஜராத்தில் வைத்து கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?. அங்கு பா.ஜனதா அரசு உள்ளது. அவர்களால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். சாட்சி, ஆதாரங்களை அழித்த பின்பு சான்ட்ரோ ரவி கைதாகி எந்த பிரயோஜனமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜனதாவினரை போல் நாங்கள் தரம் தாழ்ந்து பேச மாட்டோம்.
    • சித்தராமையாவை நாங்கள் தோற்கடிக்க வேண்டியது இல்லை.

    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கோலார் தொகுதியில் சித்தராமையா போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை தோற்கடிக்க அந்த தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு பா.ஜனதா ஆதரவு அளிக்கும் என்று சிலர் தகவல்களை வெளியிட்டுள்ளனர். அந்த கட்சியுடன் நாங்கள் எந்த விதமான ரகசிய கூட்டணியும் வைத்துக்கொள்ளவில்லை.

    அது தொடர்பாக நாங்கள் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. சித்தராயைா கோலார் உள்பட எங்கு போட்டியிட்டாலும் சரி, அவருக்கு எதிராக நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து செயல்பட மாட்டோம். பா.ஜனதாவினரை போல் நாங்கள் தரம் தாழ்ந்து பேச மாட்டோம். நாங்கள் என்ன செய்தாலும், வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பது மக்கள் தான்.

    கோலாரை பொறுத்தவரையில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஜனதா தளம் (எஸ்) சார்பில் யாரை நிறுத்துவது என்பதை நாங்கள் முடிவு செய்தோம். சித்தராமையாவுக்கு எதிராக போட்டியிட எங்கள் கட்சியில் தகுதியான வேட்பாளர்கள் உள்ளனர். சித்தராமையாவை நாங்கள் தோற்கடிக்க வேண்டியது இல்லை. கோலாரில் காங்கிரஸ் கட்சியினரே அவரை தோற்கடிப்பார்கள். வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து எங்கள் கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினேன்.

    பா.ஜனதாவினர் பள்ளி கட்டிடங்களுக்கு காவி நிறத்தை பூச திட்டமிட்டுள்ளனர். இதனால் கற்றலின் முக்கியத்துவம் போய்விடும். மைசூருவில் பஸ் நிறுத்தம், மசூதி போல் கட்டப்பட்டுள்ளதை இடிப்பதாக பிரதாப் சிம்ஹா கூறியுள்ளார். அவர்களுக்கு புதிதாக கட்டிடங்கள் கட்டி பழக்கமில்லை. இடித்து தான் பழக்கம். மக்களுக்கு நிழல் கொடுப்பது தான் முக்கியம். நிழல் கொடுக்க பஸ் நிறுத்த நிழற்குடை எப்படி இருந்தால் என்ன?.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    • பெண்ணின் கண்ணத்தில் அமைச்சர் அறையும் வீடியோ சமூக வளைதளத்தில் வைரலானது.
    • பாஜக அமைச்சரை பதவி நீக்கம் செய்ய கர்நாடகா காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

    சாம்ராஜ்நகர்:

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஹங்கலா கிராமத்தில் அரசு நிலத்தில் வீடு கட்டி வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா கலந்து கொண்டு, அந்த பகுதி மக்களுக்கு நில உரிமை பட்டாக்களை வழங்கினார்.

    அப்போது அங்கு திரண்டிருந்த கூட்டத்தினர் மத்தியில் நெரிசல் ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பெண் ஒருவர் தள்ளப்பட்டதால் அவர் அமைச்சர் மீது விழுவது போல் சென்றுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் கன்னத்தில் அமைச்சர் சோமண்ணா அறையும் வீடியோ காட்சி சமூக வளைதளத்தில் வெளியாகி வைரலானது. 


    அமைச்சரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அவரை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என்று கர்நாடகா காங்கிரஸ் கட்சி, வலியுறுத்தி உள்ளது.

    இந்நிலையில் குடகு மாவட்டம் மடிகேரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அம்மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் சோமண்ணா பெண்ணை அறைந்தது அவரது மனிதாபிமானமற்ற செயலை காட்டுகிறது என்று கூறியுள்ளார். பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் பாஜக அதிக ஆர்வம் காட்டி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 113 இடங்களில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அக்கட்சியே ஆட்சிக்கு வர முடியும்.
    • யாரை ஆதரிக்க வேண்டும் என்பது குறித்து மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.

    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    சித்தராமையா பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவருக்கு விழாவில் ஒரு அஞ்சலி கூட செலுத்தவில்லை.

    கட்சி தொண்டருக்கே உரிய மரியாதை வழங்காத சித்தராமையா வீராவேசமாக பேசுகிறார். நாங்கள் எங்கள் கட்சி சார்பில் ஜனதா ஜலதாரே மாநாடு நடத்தினோம். அதில் 50 சதவீதத்தை கூட சித்தராமையா பிறந்த நாள் விழா எட்டவில்லை. அனைவருக்கும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

    ஆனால் 113 இடங்களில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அக்கட்சியே ஆட்சிக்கு வர முடியும். யாரை ஆதரிக்க வேண்டும் என்பது குறித்து மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். கர்நாடக பா.ஜனதா அரசு உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும். மாநிலத்தில் மழை பெய்து பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து விவாதித்து அதற்கு தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    • வெள்ளத்தால் இறந்தவர்கள் பற்றி இந்த அரசுக்கு கவலை இல்லை.
    • ஏழைகளின் ரத்தமே பா.ஜனதாவின் அதிகார அமிர்தம்.

    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நாகமங்களாவில் எங்கள் கட்சி மாநாடு நடைபெற்றது. அதை எங்களின் தந்தை தேவேகவுடா வீட்டில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அவரால் நேரில் வர முடியவில்லையே என்று நான், எனது சகோதரர் மற்றும் மேடையில் இருந்தவா்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினோம். இதை பா.ஜனதா மோசமான நிலையில் விமர்சித்துள்ளது.

    இதை தான் ஆர்.எஸ்.எஸ். பா.ஜனதாவுக்கு கற்று கொடுத்ததா?. ஆபரேஷன் தாமரையை நம்பி கொண்டுள்ள மோசமான கட்சி பா.ஜனதா. கொலைகளை செய்வதே அவர்களின் தொழில். ஏழைகளின் ரத்தமே பா.ஜனதாவின் அதிகார அமிர்தம். நான் இன்னொருவரின் கண்ணீர் குறித்து குறைத்து பேச மாட்டேன். ஆனாலும் மோசமான மனநிலை கொண்ட பா.ஜனதாவுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

    விதான சவுதாவில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தபோது தலைவர் கண்ணீர் சிந்தியபடி பேசினாரே அவர் யார்?, எந்த கட்சியை சேர்ந்தவர்?. வெள்ளத்தால் இறந்தவர்கள் பற்றி இந்த அரசுக்கு கவலை இல்லை. நடுரோட்டில் கொலை செய்யப்பட்டவர்களின் நிலை பற்றி கவலை இல்லை. ஆனால் சினிமாவில் நாய் இறந்ததை கண்டு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கண்ணீர் விட்டு அழுதார். அவர் எந்த கட்சியின் முதல்-மந்திரி?.

    அழுவது என்பது எங்களின் சகஜமான குணம். ஆனால் உங்களை போல் இன்னொருவரை அழிக்கும் ராவண கலாசாரம் எங்களுடையது அல்ல. ஒருவரின் வாழ்க்கைக்கு தீ வைக்க மாட்டோம். வன்முறை, படுகொலையே உங்களின் எண்ணம். கொலை செய்துவிட்டு காசிக்கு காரிடார் அமைத்துவிட்டால் அந்த சிவன் உங்களை மெச்சுவாரா?.

    பெங்களூருவில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் நீரில் மிதக்கின்றன. இது இந்த அரசின் கண்களுக்கு தெரியவில்லையா?. தந்தை-மகன்களின் உறவில் இருக்கும் உணர்ச்சி பூர்வமான விஷயத்தை விமர்சிக்கும் பா.ஜனதாவுக்கு வரும் நாட்களில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். நாடு முழுவதும் ஆபரேஷன் தாமரை என்ற துர்நாற்றம் வீசுகிறது. இது உங்களுக்கு அறுவறுப்பாக இல்லையா?.

    இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.

    • குமாரசாமிக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • டாக்டர்களின் ஆலோசனைப்படி குமாரசாமி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டிய நிலையில் அது மீண்டும் ஆயிரத்திற்கு கீழ் சரிந்துள்ளது.

    இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே ஒரு முறை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குமாரசாமி, தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், லேசான பாதிப்பு மட்டுமே இருப்பதால் டாக்டர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    • ஆர்.ஆர்.நகரில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது.
    • தற்போது பெங்களூருவை கொள்ளையடிக்கும் முயற்சியில் தேசிய கட்சிகள் ஈடுபட்டுள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க தேசிய கட்சிகளை போன்று ஜனதாதளம் (எஸ்) கட்சியும் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக ஜனதா ஜலதாரே யாத்திரை தொடங்கப்பட்டு, மாநிலம் முழுவதும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ஜனதாதளம் (எஸ்) கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார். தற்போது பெங்களூரு மாநகராட்சி தேர்தலை கருத்தில் கொண்டும், சட்டசபை தேர்தலுக்காகவும் பெங்களூருவில் கட்சியை வளர்க்கும் விதமாக ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் ஜனதா மித்ரா யாத்திரை நேற்று தொடங்கப்பட்டது. பெங்களூரு ஜே.பி.பவனில் நடந்த நிகழ்ச்சியில் குமாரசாமி பேசியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பெங்களூருவில் 15 தொகுதிகளில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சட்டசபை மற்றும் பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கு முன்பாக கட்சியை வளர்க்கும் நோக்கத்துடன் தற்போது ஜனதா மித்ரா யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. பெங்களூரு நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஜனதாதளம் (எஸ்) கட்சியும் வளர்ந்து வருகிறது.

    ஆர்.ஆர்.நகரில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. இதனை நமது கட்சி தொண்டர்கள் மறந்து விடக்கூடாது. நமது கட்சி ஆட்சியில் இருந்த போது மக்கள் பணத்தை கொள்ளையடித்தது இல்லை. கடவுளின் ஆசிர்வாதத்தால் 2 முறை முதல்-மந்திரியாக இருந்த போது மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினேன். தற்போது பெங்களூருவை கொள்ளையடிக்கும் முயற்சியில் தேசிய கட்சிகள் ஈடுபட்டுள்ளனர். இதனை முழுமையாக முறியடிக்க வேண்டியது நமது கட்சியின் நோக்கம், குறிக்கோள் ஆகும்.

    நமது கட்சி தொண்டர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, தேசிய கட்சிகளின் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஜனதா மித்ரா நிறைவு விழாவின் போது பெங்களூருவில் வருகிற 17-ந் தேதி பிரமாண்ட மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பிரமாண்ட மாநாடு நடத்தப்படும். கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறலாம். வருகிற டிசம்பர் மாதம் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எப்போது சட்டசபை தேர்தல் வந்தாலும், அதனை சந்திக்க ஜனதாதளம் (எஸ்) கட்சி தயாராக உள்ளது.

    இவ்வாறு குமாரசாமி பேசினார்.

    • ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு அதிகளவில் ஆதரவு கிடைத்துள்ளது.
    • பழங்குடியின பெண் இவ்வளவு பெரிய உயரத்தை அடைவது மற்றவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது.

    பெங்களூரு:

    ஜனாதிபதி பதவிக்கு வருகிற 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜனதா சார்பில் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த்சின்கா ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். பா.ஜனதா வேட்பாளருக்கு பா.ஜனதாவின் கூட்டணி கட்சிகள் மற்றும் கூட்டணியில் இல்லாத கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பா.ஜனதா வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு வழங்குவதாக ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி சூசகமாக கூறியுள்ளார். இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு அதிகளவில் ஆதரவு கிடைத்துள்ளது. அதனால் எங்கள் கட்சியின் ஆதரவு அக்கட்சிக்கு தேவை இல்லை. ஆயினும் பா.ஜனதா எங்களிடம் ஆதரவு கேட்டுள்ளது. திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாகவே நான் கருதுகிறேன். அவர் தேவேகவுடாவை 2 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி ஆதரவு வழங்குமாறு கேட்டார்.

    பெங்களூருவுக்கு நேரில் வந்து ஆதரவு கேட்பதாகவும் கூறினார். ஆனால் நேரில் ஆதரவு கேட்க தேவை இல்லை. அவர் அடிமட்டத்தில் இருந்து எப்படி வளர்ந்து மேல்நிலைக்கு வந்துள்ளார் என்பதை நான் அறிவேன். பழங்குடியின பெண் இவ்வளவு பெரிய உயரத்தை அடைவது மற்றவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    • மாநிலங்களவையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் 32 வாக்குகள் உள்ளன.
    • ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் வெற்றி அடையும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

    மைசூரு:

    முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவருவமான குமாரசாமி மைசூருவுக்கு வந்தார். இதையடுத்து அவர், சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு தெற்கு பட்டதாரி தொகுதி தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் போட்டியிடும் ராமுவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெங்களூருவில் எடியூரப்பா-சித்தராமையா சந்தித்து பேசியுள்ளனர். அவர்கள் 2 பேரும் எந்த நோக்கத்துடன் சந்தித்து பேசினார் என்பது தெரியவில்லை. தனி அறைக்குள் 2 பேரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நோக்கம் என்ன?.

    மாநிலங்களவை தேர்தல் போட்டியில் இருந்து ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் விலக வேண்டும் என்று சித்தராமையா கூறியுள்ளார். சித்தராமையாவுக்கு பா.ஜனதா தோல்வி அடைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நான் அல்லது எனது தந்தை தேவகவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பார்.

    மாநிலங்களவையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் 32 வாக்குகள் உள்ளன. ஆனால் காங்கிரசுக்கு குறைவான வாக்குகளே உள்ளது. இதனால் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் வெற்றி அடையும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தேவைப்பட்டால் எங்களது 2-வது வாக்குகள் உரிமையை காங்கிரஸ் வேட்பாளருக்கு கொடுக்கிறோம்.

    அதற்கு காங்கிரஸ் கட்சி அவர்களது இரண்டாவது வாக்குகள் உரிமையை ஜனதாதளம்(எஸ்) வேட்பாளருக்கு தரவேண்டும். இதுசம்பந்தமாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சுர்ஜேவாலாவுடன் தெரிவித்துள்ளேன். இதற்கு தற்போது வரை அவர் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின்போது எம்.எல்.ஏ.சா.ரா. மகேஷ், ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் ராமு உள்ளிட்டோர் இருந்தனர்.

    எனக்கு 5 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை வழங்கினால், விவசாயிகள் ஒரு ரூபாய் கூட கடன் வாங்காத நிலையை ஏற்படுத்துவேன் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பெங்களூருவில் உற்பத்தி ஆகும் கழிவுநீரை கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களுக்கு அனுப்புகிறார்கள். இதன் மூலம் அந்த மக்களுக்கு இந்த அரசு விஷம் கொடுக்கிறது. சித்தராமையா இருந்தபோது ரூ.16 ஆயிரம் கோடியில் எத்தினஒலே குடிநீர் திட்டத்தை தொடங்கினார். ஒரே ஆண்டில் பணிகளை முடித்து எத்தினஒலே குடிநீர் திட்டத்தில் நீரை கொண்டு வருவதாக கூறினார். அதன் பிறகு பல முதல்-மந்திரிகள் வந்து சென்றுவிட்டனர். இப்போது பசவராஜ் பொம்மை முதல்-மந்திரி பதவியில் அமர்ந்துள்ளார்.

    எத்தினஒலே குடிநீர் திட்டத்தின் மதிப்பீடு இன்று ரூ.24 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. அந்த திட்டத்திற்கான நீர் இன்னும் சக்லேஷ்புராவை தாண்டவில்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது ரூ.25 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தேன். நான் கிராமம், கிராமமாக சென்று ஜனதா தளம்(எஸ்) கட்சியை பலப்படுத்த முடிவு செய்துள்ளேன்.

    எனக்கு 5 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை வழங்கினால், விவசாயிகள் ஒரு ரூபாய் கூட கடன் வாங்காத நிலையை ஏற்படுத்துவேன். ஆட்சியை பிடிக்க நான் கடைசியாக போராடுகிறேன். மக்கள் எங்கள் கட்சிக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை நடத்துவேன். விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவேன்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.
    கார்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து மரியாதை நிமித்தமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவர் சந்தித்து பேசினார். #Kumaraswamy #RahulGandhi
    புதுடெல்லி :

    கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. அம்மாநில முதல்வராக பதவியேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைவதை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் குமாரசாமி சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி அவர்களிடம் குறிப்பிட்டுள்ளதாவது :-

    கர்நாடக முதல்வராக பதவியேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது, இதற்காக வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ராகுல் காந்தியை சந்தித்து பேசினேன். இந்த சந்திப்பின் போது கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் மற்றும் இன்னும் நிரப்படாமல் உள்ள பல்வேறு வாரியத் தலைவர்கள் பதவிகளை நிரப்புவது பற்றி விரைவாக முடிவெடுக்கும்படி ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாக ராகுல் மகிழ்ச்சி தெரிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், அடுத்த முதல்வராவேன் என சமீபத்தில் சித்தராமையா கூறியது பற்றி செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த குமாரசாமி, ’சித்தராமையா ஒரு தலைவர் அவர் முதல்வராக ஆசைப்படுவதில் தவறு இல்லை. கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவரான சித்தராமையாவின் தலைமையின் கீழ் கூட்டணி ஆட்சி தற்போது பாதுகாப்பாக உள்ளது. ராகுலுடனான சந்திப்பில் சித்தராமையா கூறிய கருத்தை பற்றி விவாதிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

    மேலும், கர்நாடக மந்திரிசபையில் முதல்வர், துணை முதல்வர் உள்பட காங்கிரசை சேர்ந்த 16 பேர், மஜத-வை சேர்ந்த 10 பேர் என் மொத்தம் 26 பேர் மந்திரிகளாக உள்ளனர். விதிமுறைகளின்படி மேலும் 4 பேர் புதிய மந்திரிகளாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராகுல் காந்தியுடனான சந்திப்பிற்கு பிறகு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மற்றும் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங் மற்றும் ஜிதேர்ந்திர சிங் ஆகியோரையும் குமாரசாமி சந்தித்து பேசினார். #Kumaraswamy #RahulGandhi
    ஆண்டுதோறும் பெங்களூருவில் நடக்கும் விமான கண்காட்சி இந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இதற்கு கர்நாடக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. #AeroIndia #AirExpo
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆண்டு தோறும் விமான கண்காட்சி நடப்பது வழக்கம். கடந்த 1996-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த கண்காட்சியை இம்முறை உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்த தகவலோ, மறுப்பு தகவலோ வரவில்லை.

    விமான கண்காட்சி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதும், கர்நாடக மாநில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 2019 உள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு பெங்களூருவில் நடைபெறும் உலக புகழ் பெற்ற விமான கண்காட்சியை உத்தரபிரதேசத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது என அம்மாநில முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும், விமான கண்காட்சியை நடத்துவதற்கான அனைத்து விதமான கட்டமைப்பு வசதிகளும் பெங்களூருவில் உள்ளது. ஆயினும் இந்த விமான கண்காட்சியை உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 

    இந்நிலையில், குமாரசாமி இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். 
    ×