search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98745"

    • சாயத் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மொடக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
    • எங்களது கோரிக்கையை ஏற்காமல் அனுமதி அளித்தால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று பொதுமக்கள் அறிவித்தனர்.

    மொடக்குறிச்சி, ஜூலை.19-

    மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டு பாளையம் பகவதி நகரில் அமைய உள்ள சாயத் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

    தொடர்ந்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியான காட்டு பாளையம் பகவதி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே சாயத் தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் அனுமதி வழங்க முயற்சி நடப்பதாகவும் தெரியவருகிறது.

    இந்நிலையில் இன்று நடைபெறும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் சாய தொழிற்சாலை அமைய கட்டிட அனுமதி மற்றும் போர்வெல் அமைப்பதற்கான அனுமதி வழங்க இருப்பதாகவும் அறிந்தோம்.

    எனவே குறித்து சாயத் தொழிற்சாலையை தொடங்க அனுமதிக்க கூடாது இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கெட்டுவிடும். மேலும் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும் என்று பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளோம் .

    இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் 4-வது தீர் மானமாக கட்டிடத்திற்கு மற்றும் போர்வல் அமைக்க அனுமதி வழங்கப்படுவதாக தெரிந்து அனைவரும் இங்கு வந்துள்ளோம்.

    இதற்கு அனுமதிக்க கூடாது என்று பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் மனு அளித்தனர். மேலும் எங்களது கோரிக்கையை ஏற்காமல் அனுமதி அளித்தால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று பொதுமக்கள் அறிவித்தனர்.

    • மதுரை மேலூரில் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் திடீர் மறியல், முற்றுகையில் ஈடுபட்டனர்.
    • காய்கறி வியாபாரிகள் சந்தைப்பேட்டை பகுதி வியாபாரம் செய்வதற்கு ஏற்ற இடம் இல்லை தெரிவித்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் செக்கடியில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    மார்க்கெட்டின் கட்டிடம் பழமையானது என்பதால் அதனை இடித்து புதிதாக கட்டிடம் கட்ட நகராட்சி முடிவு செய்தது. இதன் காரணமாக செக்கடி காய்கறி வியாபாரிகள் சந்தைப்பேட்டை உழவர் சந்தை பகுதியில் தற்காலிகமாக கடையை அமைத்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு காய்கறி வியாபாரிகள் சந்தைப்பேட்டை பகுதி வியாபாரம் செய்வதற்கு ஏற்ற இடம் இல்லை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் காய்கறி வியாபாரிகள் சங்கத்தலைவர் மணவாளன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இன்று மேலூர் நகராட்சி அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது நகர் பகுதியிலேயே கடை அமைத்துத்தர ஏற்பாடு செய்ய வேண்டுமென தெரி வித்தனர்.

    இதுகுறித்து கமிஷனர் ஆறுமுகம், என்ஜினீயர் பட்டுராஜன், கவுன்சிலர் திவாகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து போரா ட்டக்காரர்கள் திடீரென அங்கிருந்து புறப்பட்டு மதுரை-திருச்சி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையை வாடிக்கையாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்..
    • காமநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் வங்கி நிர்வாகத்தினர் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வரும் சேகர் (வயது57) என்பவர் வாடிக்கையாளர்களின் நகைகளை மோசடி செய்தார்.இதையடுத்து சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 4 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. வங்கி நிர்வாகம் இழப்பீடு வழங்க தாமதம் செய்வதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என கேத்தனூர் வங்கி நகைமீட்பு இயக்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையை வாடிக்கையாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் வங்கி நிர்வாகத்தினர் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் வங்கி அதிகாரிகள் தரப்பில், இழப்பீடு குறித்த தகவல்களை உயர் அதிகாரிகளின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம் இன்னும் பதில் கிடைக்கவில்லை, வரும் ஜூலை30க்குள் இழப்பீடு குறித்த உறுதியான தகவல்கள் அளிக்கப்படும் என வங்கியின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனை ஆட்சேபித்த வாடிக்கையாளர்கள் இதுவரை 5 முறை பேச்சுவார்த்தை நடந்தும் இழப்பீடு குறித்து எந்த தகவலும் இல்லை. ஒவ்வொரு முறை கேட்கும்போதும் உயரதிகாரிகளிடம் பேசுகிறோம், பேசுகிறோம் என்று காலதாமதம் செய்கின்றனர்.

    எனவே உடனடி நடவடிக்கை எடுத்து இழப்பீடு குறித்து அறிவிக்க வேண்டும். 584 பேருக்கு சமரச பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் அடகு வைத்த நகைகளை திருப்பிய 84 பேருக்கும் சேர்த்து இழப்பீடு வழங்க வேண்டும். நகை மோசடி பிரச்சனை தீரும் வரை வங்கி மேலாளரை இடமாற்றம் செய்யக்கூடாது. வரும் 30-ந்தேதிக்குள் இழப்பீடு குறித்த உறுதியான தேதியை அறிவிக்க வேண்டும் என வாடிக்கையாளர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

    • விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி இன்று ஏலம் விடப்பட்டு, ஏல தொகை அறிவிப்பு ஒட்டப்பட்டது.
    • குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் ரூ 5 ஆயிரம் வரை மட்டுமே வியாபாரிகளால் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த எருக்கூரில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளதுஇங்கு வாரந்தோறும் காட்டும ன்னார்கோவில், சிதம்பரம், சீர்காழி, கொள்ளி டம், வைத்தீஸ்வரன் கோயில் திருவெண்காடு, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.

    அதன்படி விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி இன்று ஏலம் விடப்பட்டு, ஏலத் தொகை அறிவிப்பு ஒட்டப்பட்டது.

    ஏலத்தில் அரசு 1குவிண்டாலிற்கு நிர்ணயத்த விலையை விட மிக குறைவாக குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் ரூ 5 ஆயிரம் வரை மட்டுமே வியாபாரிகளால் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் இரவு, பகலாக கண்விழித்து ஏல விற்பனைக்காக காத்திருந்த விவசாயிகள் ஆத்திரம் அடைந்து பருத்தி ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகளை முற்றுகை யிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு நிர்ணயித்த விலையை நிர்ணயிக்கக் கூறி கண்டன கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று கூடி சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்த சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார்மற்றும் கொள்ளிடம் போலீசார் விரைந்து வந்து விவசாயி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சு வார்த்தை யில் வரும் வாரங்களில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விலை நிர்ணயம் செய்யப்படும் எனவும், பகல் நேரத்தில் ஏலம் விடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை யடுத்து பருத்தி விவசாயிகள் போராட்டத்தை கைவி ட்டனர்.

    • முக்கிய சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்தையும் இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர்.
    • நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை நகர போலீஸ் நிலையத்தின் அருகில் டாஸ்மாக் கடை செயல்படுவதற்கு அப்பகுதி மக்கள் பல மாதங்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    முக்கிய சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் சாலையோரத்தில்நின்று மது அருந்துவதுபோன்ற சட்ட விரோத செயல்க ளில் ஈடுபடுவதால்கோவி லுக்கு, பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாண விகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்தையும் இன் ல்களையும் சந்தித்து வருகி ன்றனர். இந்நிலையில் டாஸ்மாக் கடையை உடனடி யாக மூட வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்கப்படும் எனபோலீசார் கூறியதை தொட ர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • புதிய வணிக வளாகம் கட்ட நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
    • தினசரி மார்க்கெட் கடைகளை இடித்து புதுப்பிப்பதற்காக காய்கறி வியாபாரிகளை காலி செய்யச் சொல்லி உள்ளனர்.

    தாராபுரம் :

    தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள பழைய பஸ் நிலையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.சுமார் 100 ஆண்டு பழமை வாய்ந்த இந்த காய்கறி மார்க்கெட்டை இடித்து புதிய வணிக வளாகம் கட்ட நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் ஆணையரிடம் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை விவரம் வருமாறு:-

    தாராபுரம் நகராட்சி பழைய பஸ் நிலையம் தினசரி மார்க்கெட் கடைகளை இடித்துபுதுப்பிப்பதற்காக காய்கறி வியாபாரிகளைகாலி செய்யச் சொல்லி உள்ளனர். மாற்று ஏற்பாடாக பாதுகாக்கப்பட்ட இடம் காய்கறி வியாபாரிகளுக்கு ஒதுக்கவேண்டும். மின் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். புதிய வணிக வளாகம் கட்டிய பிறகு தற்போது கடையை நடத்தி வருபவருக்கே முன்னுரிமை அளித்து பழைய வாடகைக்கு கடையை ஒதுக்கவேண்டும் .இவ்வாறு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என நகராட்சி ஆணையர் உறுதியளித்தார்.எனினும்கடைகளை காலிசெய்யும்படிவத்தில்கையெழுத்திட மறுத்து காய்கறி வியாபாரிகள் சென்றனர்.

    • தொண்டி அரசு ஆஸ்பத்திரியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் வேலை பார்த்து கொண்டிருந்த போது அவரது காதில் கட்டுக்கம்பி குத்தியது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அண்ணாநகரை சேர்ந்தவா முருகன் (வயது 35). டைல்ஸ் பதிக்கும் தொழிலாளி. இவருக்கு தொண்டீஸ்வரி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் வேலை பார்த்து கொண்டிருந்த போது அவரது காதில் கட்டுக்கம்பி குத்தியது. காயமடைந்த அவர் அருகில் உள்ள தனியார் கிளீனிக்கில் சிகிச்சை பெற்றார். அப்போதிருந்து முருகனின் உடல் நிலை மோசமானது. நேற்று இரவு முருகனின் உடல் நிலை கவலை கிடமானதால் தொண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தவறான சிகிச்சை அளித்ததால் முருகன் இறந்ததாக புகார் கூறிய உறவினர்களும், அப்பகுதி பொதுமக்களும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி தொண்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு நடந்த ஆர்ப்பாட்டம் குறித்து தகவலறிந்த ஏ.டி.எஸ்.பி.பாஸ்கரன் தலைமையில், பரமக்குடி டி.எஸ்.பி. திருமலை, தொண்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் விஜயபாஸ்கர், காசி, ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், மகளிர் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயபிரிட்டோ, சப்-இன்ஸ்பெக்டர்கள் சித்ராதேவி, சுதர்சன், பாலசிங்கம் மற்றும் ஏராளமான போலீசார்கள் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முருகனின் சாவு குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

    • பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவ மாணவிகளின் கல்வி தரம் கேள்விக்குறியாக உள்ளதாக கூறி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டுனர்
    • பள்ளி வளாகத்தின் சுகாதாரமற்ற முறையில் சாக்கடை நீர் ஓடுவதால் மாணவ மாணவியருக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் பத்மாவதிபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 900 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவ மாணவிகளின் கல்வி தரம் கேள்விக்குறியாக உள்ளதாக கூறி இன்று காலை 100க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் கூறுகையில் பள்ளியில் ஆசிரியர் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது. மேலும், பள்ளியில் கழிப்பிடம் மற்றும் சுகாதார வசதி மிக மோசமாக உள்ளதால் மாணவர்களும் மாணவிகளும் கழிப்பறை இல்லாமல் பள்ளிக்கு வெளியே ஒதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி வளாகத்தின் சுகாதாரமற்ற முறையில் சாக்கடை நீர் ஓடுவதால் மாணவ மாணவியருக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணவர்களின் கல்வித் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கூறினர்.

    தகவல் கிடைத்ததும் அனுப்பர்பாளையம் போலீசார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை பெற்றோர்களிடம் சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக கூறி உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததில் பேரில் பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பரமத்தி வேலூரில் ரூ.48 லட்சம் மோசடி, வங்கி ஊழியர்களை கண்டித்து சுயஉதவிக்குழுவினர் முற்றுகையிட்டனர்.
    • இந்த போராட்டத்தால் வங்கி முன்பு சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூரில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவினர் தொழில் தொடங்க கடன் பெற்றுள்ளனர். கடனை மாதந்தோறும் மகளிர் சுய உதவிக் குழுவினர் செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா காலத்தில் வங்கி மூலமாக சுய உதவிக் குழுவினரிடம் பணம் வசூல் செய்வதற்காக தற்காலிக வணிக தொடர்பாளராக சரண்யா, ஹோமா ஆகிய இரு பெண்கள் நியமிக்கப்பட்டு சுய உதவிக் குழுவினரிடம் மாதமாதம் பணத்தை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

    வசூல் செய்த பணத்தை வங்கியில் செலுத்தாமல் இருவரும் 4 மாதத்தில் ரூ.48 லட்சம் மோசடி செய்ததை அறிந்த மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வங்கி மேலாளர் அழகரசனிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் அழகரசன் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்வதாக கூறி காலதாழ்த்தி வந்துள்ளார். வங்கி கிளை மேலாளர் அழகரசன் பணிமாறுதல் சென்றதை அறிந்த பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவை பெண்கள் இந்தியன் வங்கி முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த வேலூர் காவல் ஆய்வாளர் வீரம்மாள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பின்னர் வங்கியில் உள்ள உதவி மேலாளர் சுப்பிரமணியத்திடம் மனு கொடுத்தனர்.

    மனுவில், மோசடி செய்த சரண்யா, ஹோமா மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் வங்கி மேலாளர் அழகரசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

    புகார் மனுவை பெற்ற சுப்பிரமணியம் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு மனுவை அனுப்பி விசாரணை நடத்த கூறியதையடுத்து பெண்கள் கலைந்துசென்றனர். இந்த போராட்டத்தால் வங்கி முன்பு சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    • கடலூரில் தீபாவளி சீட்டு 310 பேரிடம் ரூ. 48 லட்சம் வசூல் பொது மக்கள் முற்றுகை- போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • பணம் வசூல் செய்தது தொடர்பாக போலீசாரிடம் உரிய முறையில் புகார் அளித்தும் இதுநாள் வரை சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை‌.

    கடலூர்:

    கடலூர் திடீர்குப்பம் சேர்ந்தவர் ராஜா. இவர் பொதுமக்களிடமிருந்து தீபாவளி பண்டு சீட்டு நடத்தி வந்த நிலையில் ஒரு நபரிடம் 15,600 ரூபாய் என்ற கணக்கில் 310 பேரிடம் சுமார் 48 லட்ச ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. சில மாதத்திற்கு முன்பு ரா‌ஜாவுக்கு அதிக கடன் ஏற்பட்டதால், திடீரென்று தற்கொலை செய்தார். இதன் காரணமாக அவரிடம் பணம் கட்டிய அனைவரும் அதிர்ச்சி அடைந்து அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பணம் கட்டியவர்களிடம் பணம் வழங்குவதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பணம் கொடுத்த நபர்கள் பணம் தொடர்பாக தொடர்ந்து அவர்களிடம் கேட்டு வந்தனர். ஆனால் இதுநாள் வரை பணம் சரியான முறையில் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இறந்த ராஜா வீட்டிற்கு இன்று காலை நேரில் சென்றனர். பின்னர் தங்களுக்கு பணம் உடனடியாக வழங்க வேண்டும் எனக் கூறி இறந்த ராஜா மனைவியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் கூறுகையில், உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்து உரிய முறையில் வழக்குப்பதிவு செய்து பணம் மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது போன்று போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், பணம் வசூல் செய்தது தொடர்பாக போலீசாரிடம் உரிய முறையில் புகார் அளித்தும் இதுநாள் வரை சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை‌. எங்கள் பணம் தொடர்பாக கேட்கிறோம் என தெரிவித்தனர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வீட்டிலிருந்த இறந்த ராஜாவின் மனைவியை போலீசார் மீட்டு அவர்களது உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பிரபல தனியார் பீடி கம்பெனியில் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி சுற்றி வருகின்றனர்.
    • பீடி சுற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பீடி கடையை முற்றுகையிட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இருந்து செட்டியூர் சாலையில் இயங்கி வரும் பிரபல தனியார் பீடி கம்பெனியில் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி சுற்றி வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சம்பளம், விடுமுறை, ஊதியம், பொங்கல் மற்றும் தீபாவளி போனஸ், தொழிலாளர் வைப்பு நிதி தொகை என எதுவும் அவர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    அதனை கண்டித்து அங்கு பீடி சுற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பீடி கடையை முற்றுகையிட்டனர். அவர்கள் வாசலில் நின்றுகொண்டு பீடி கம்பெனி நிர்வாகத்தை கண்டித்து கோசங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசு உடனடியாக தலையிட்டு பீடி சுற்றி வரும் பெண்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என்கிற கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர்.

    பா.ஜனதா கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் கார்மேகநாதன், தொழில் துறை பிரிவு ஒன்றிய தலைவர் சரவணன், இளைஞரணி மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஒன்றிய பொதுச்செயலாளர் ஜோதி செல்வம், விளையாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் சக்தி கருப்பையா உள்ளிட்டோரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காங்கயத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த பாதுகாப்பை மீறி 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை காங்கயத்தில் உள்ள நெடுஞ்சாலைதுறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    காங்கயம்:

    வெள்ளகோவில் விவசாயிகள் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு உரிய தண்ணீர் வழங்காததால் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அதிகாரி களை கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அன்று இரவுமுழுவதும் பொதுப்பணித்துறை அலுவலகத்திலேயே சமையல் செய்து காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

    2-வது நாளாகவும் போராட்டத்தை தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து அத்துமீறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக விவசாயிகள் 60 பேர் மீது பொதுப்பணித்துறை சார்பில் புகார் செய்யப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஒவ்வொரு சுற்று தண்ணீர் திறப்பின்போதும் காங்கேயம், வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு கொடுக்க வேண்டிய தண்ணீர் வருவதில்லை எனக்கூறி பல்வேறு கட்ட போராட்டத்தை விவசாயிகள் நடத்தினார்கள்.

    பி.ஏ.பி. வாய்க்காலில் நடைபெறும் நீர் திருட்டை கண்டுகொள்ளாமல் விவசாயிகளை வஞ்சிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பரம்பிக்குளம் ஆழியாறுபிரதான கால்வாய் அருகில் கிணறுகள் வெட்டி தண்ணீர் திருடுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்தும் இன்று வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்புசங்கத்தின் சார்பில் காங்கேயத்தில் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

    இதனையடுத்து காங்கயத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த பாதுகாப்பை மீறி 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை காங்கயத்தில் உள்ள நெடுஞ்சாலைதுறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலிருந்து  விவசாயிகள் வரக்கூடும் என்பதால் காங்கேயம் நகருக்குள் வரும் வெள்ளகோவில் சாலை, ஈரோடு சாலை, சென்னிமலை சாலை, தாராபுரம் சாலை ஆகிய பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
    ×