search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98754"

    அமெரிக்காவை சேர்ந்த பீட் சாம்ராஸ் 6 ஆண்டுகள் நம்பர்-1 இடத்தில் இருந்ததே சாதனையாக இருந்தது. இதை ஜோகோவிச் முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

    பாரீஸ்:

    உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரராக ஜோகோவிச் (செர்பியா) திகழ்கிறார். 34 வயதான அவர் 20 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்று ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆகியோருடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார்.

    இந்த நிலையில் ஜோகோவிச் புதிய வரலாற்று சாதனை புரிந்துள்ளார். பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அவர் இறுதி போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்த ஆண்டு இறுதிவரை நம்பர்-1 இடத்தில் நீடிப்பார்.

    அவர் அரை இறுதியில் போலந்தை சேர்ந்த ஹூபர்ட்டை 3-6, 6-0, 7-6 (7-5) என்ற கணக்கில் வீழ்த்தினார்.

    ஜோகோவிச் தொடர்ந்து 348 வாரங்களாக நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறார். இந்த ஆண்டு இறுதி வரை அவர்தான் நம்பர்-1 இடத்தில் நீடிப்பார். இதன் மூலம் ஜோகோவிச் 7-வது ஆண்டாக நம்பர்-1 இடத்தில் இருக்கிறார்.

    அவர் ஏற்கனவே 2011, 2012, 2014, 2015, 2018, 2020, ஆகிய ஆண்டுகளில் நம்பர்-1 இடத்தில் இருந்தார். தற்போது இந்த ஆண்டிலும் (2021) முதல் வரிசையில் உள்ளார்.

    இதற்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த பீட் சாம்ராஸ் 6 ஆண்டுகள் நம்பர்-1 இடத்தில் இருந்ததே சாதனையாக இருந்தது. இதை ஜோகோவிச் முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். சாம்ராஸ் 1993 முதல் 1998 வரை தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தார்.

    ரோஜர் பெடரர் தொடர்ந்து 310 வாரங்கள் நம்பர்-1 இடத்தில் இருந்ததை ஜோகோவிச் கடந்த மார்ச் 8- ந் தேதி முறியடித்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்த அமெரிக்க ஓபன் இறுதி போட்டியில் அவர் மெட்வதேவிடம் தோற்றார்.

    தற்போது பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சிறப்பாக ஆடி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

    ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 9 முறையும், பிரஞ்ச் ஓபன் பட்டத்தை 2 தடவையும், விம்பிள்டனை 6 முறையும், அமெரிக்க ஓபன் பட்டத்தை 3 தடவையும் கைப்பற்றி உள்ளார்.

    செம்மண் தரையில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது. பெண்கள் பிரிவில் செரீனா சாதனைப் படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒவ்வொரு ஆண்டும் 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும். முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் கடந்த ஜனவரி மாதம் மெல்போர்னில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் ஜோகோவிச்சும் (செர்பியா), பெண்கள் பிரிவில் ஒசாகாவும் (ஜப்பான்) பட்டம் பெற்றனர்.

    இந்த ஆண்டின் 2-வது கிராண்ட்சிலாம் போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் இன்று தொடங்குகிறது. ஜூன் 9-ந்தேதிவரை இந்த போட்டி நடக்கிறது.

    உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச், நடப்பு சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), டொமினிக் தீயெம் (ஆஸ்திரியா), அலெக்ஸாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

    பெண்கள் பிரிவில் முதல் நிலை வீராங்கனை ஒசாகா, நடப்பு சாம்பியன் சிமோனா ஹாலெப், கரோலினா, கெர்பர் மற்றும் 10-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), போன்ற முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.



    பிரெஞ்ச் ஓபன் போட்டியில் நடால் இதுவரை 11 பட்டங்களை வென்றுள்ளார். 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று இருந்தார். அவர் 12-வது முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று சாதிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 18-வது கிராண்ட்சிலாம் பட்டத்துக்காக காத்து இருக்கிறார்.

    ஜோகோவிச், பெடரர் ஆகியோர் அவருக்கு கடும் சவாலாக விளங்குவார்கள். பெடரர் 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று முதல் இடத்திலும், ஜோகோவிச் 15 பட்டம் வென்று 3-வது இடத்திலும் உள்ளனர்.



    பெண்கள் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் 24-வது கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்று முத்திரை பதிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவர் இதுவரை 23 பட்டம் வென்றுள்ளார். பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 3 முறை கைப்பற்றி உள்ளார். அவருக்கு ஒசாகா, சிமோனா ஹாலெப், முகுருஜா போன்ற முன்னணி வீராங்கனைகள் கடும் சவாலாக இருப்பார்கள்.
    ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
    ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் நகரில் மாட்ரி் ஓபன் டென்னிஸ் நடைபெற்றது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 8-ம் நிலை வீரரான கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபனாஸ் டிசிட்சிபாஸ்-ஐ எதிர்கொண்டார்.



    இதில் ஜோகோவிச் 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஜோகோவிச் அரையிறுதியில் டொமினிக் தியெம்-ஐ கடும் போராட்டத்திற்குப்பின் ( 7(7)-6(2), 7(7)-6(4)) வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
    ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஒபன் டென்னிஸ் தொடர் காலிறுதியில் ஜோகோவிச் - மரின் சிலிச் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றன. #MadridOpen
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு  முந்தைய சுற்றில் முதல் நிலை வீரரான ஜோகோவிச் சார்டியை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-1, 7(7) - 6 (2) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 9-ம் நிலை வீரரான மரின் சிலிச் லாஸ்லோ டேர்-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டை மரின் சிலிச் 4-6 என அதிர்ச்சிகரமாக தோற்றார். அதன்பின் சுதாரித்துக்கொண்ட சிலிச் 2-வது செட்டை 6-3 எனவும், 3-வது செட்டை 6-2 எனவும் கைப்பற்றி பெற்றி பெற்றார்.



    6-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷிகோரி வாவ்ரிங்காவிடம் 6-3, 7(7)-6(3) என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். 5-ம் நிலை வீரரான தியெம் 6-4, 7-5 என போக்னினியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதியில் 1-ம் நிலை வீரரான ஜோகோவிச் 9-ம் நிலை வீரரான மரின் சிலிச்சை எதிர்த்து விளையாடுகிறார். ரோஜர் பெடரர் தியெம்-ஐ எதிர்த்தும், அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் டிசிட்சிபாஸ்-ஐ எதிர்த்தும் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை, ஸ்பெயின் வீரர் பாவ்டிஸ்டா அகுட் 6-1, 5-7, 3-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெளியேறினார். #MiamiOpen #NovakDjokovic #BautistaAgut
    மியாமி:

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை, ஸ்பெயின் வீரர் பாவ்டிஸ்டா அகுட் 6-1, 5-7, 3-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெளியேறினார். #MiamiOpen #NovakDjokovic #BautistaAgut

    மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவக் ஜோகோவிச் (செர்பியா), ஸ்பெயின் வீரர் பாவ்டிஸ்டா அகுட்டை சந்தித்தார்.



    2 மணி 29 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான ஜோகோவிச் 6-1, 5-7, 3-6 என்ற செட் கணக்கில் பாவ்டிஸ்டா அகுட்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இந்த சீசனில் பாவ்டிஸ்டா அகுட், ஜோகோவிச்சை சாய்த்து இருப்பது இது 2-வது முறையாகும்.

    மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 7-5, 7-5 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 1 மணி 51 நிமிடம் நடந்தது. இன்னொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜான் இஸ்னர் (அமெரிக்கா) 7-6 (7-5), 7-6 (7-3) என்ற நேர்செட்டில் இங்கிலாந்து வீரர் கைல் எட்முன்டை சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் ஜான் இஸ்னர், பாவ்டிஸ்டா அகுட்டுடன் மோதுகிறார்.

    மற்ற ஆட்டங்களில் டெனிஸ் ஷபோவாலோவ் (கனடா), போர்னா கோரிச் (குரோஷியா), பிரான்சஸ் டியாபோ (அமெரிக்கா), பெலிக்ஸ் அகெர் (கனடா) ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள ஆஷ்லிக் பார்டி (ஆஸ்திரேலியா) 2 மணி 30 நிமிட போராட்டத்துக்கு பிறகு 7-6 (8-6), 3-6, 6-2 என்ற செட் கணக்கில் 2-ம் நிலை வீராங்கனையான கிவிடோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். ஆஷ்லிக் பார்டி, கிவிடோவாவை தோற்கடித்தது இதுவே முதல்முறையாகும்.

    மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் எஸ்தோனியா வீராங்கனை அனெட் கோன்டாவெய்ட் 3-6, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் ஹிசை சு வெய்யை விரட்டியடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார்.
    மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), அர்ஜென்டினா வீரர் பெடெரிகோ டெல்போனிசை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். #NovakDjokovic #MiamiOpenTitle
    மியாமி:

    மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினா வீரர் பெடெரிகோ டெல்போனிசை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 22-ம் நிலை வீரரான பாடிவ்ஸ்டா அகுட் (ஸ்பெயின்) 6-4, 6-4 என்ற நேர்செட்டில் இத்தாலி வீரர் பாபியோ போக்னினியை சாய்த்து 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். 4-வது சுற்றில் ஜோகோவிச்-பாடிவ்ஸ்டா அகுட் ஆகியோர் மோதுகிறார்கள். மற்ற ஆட்டங்களில் கைல் எட்முன்ட் (இங்கிலாந்து), நடப்பு சாம்பியன் ஜான் இஸ்னர் (அமெரிக்கா), பெலிக்ஸ் அகெர் (கனடா), நிகோலோஸ் பாசிலாஷ்விலி (ஜார்ஜியா), போர்னா கோரிச் (குரோஷியா), நிகோலஸ் கிர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 3-6, 2-6 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் தட்ஜனா மரியாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்ற ஆட்டங்களில் சிமோனா ஹாலெப் (ருமேனியா), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்கள்.
    இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், வீராங்கனை நவோமி ஒசாகா ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டனர். #IndianWellsTennis #Djokovic #Osaka
    இன்டியன்வெல்ஸ்:

    இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவக் ஜோகோவிச் (செர்பியா), 39-ம் நிலை வீரரான ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரீபரை சந்தித்தார்.

    மழையால் பாதிக்கப்பட்டு மறுநாளில் தொடர்ந்த இந்த ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஜோகோவிச் 4-6, 4-6 என்ற நேர்செட்டில் பிலிப் கோல்ஸ்கிரீபரிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். ஜோகோவிச்சிடம் தொடர்ச்சியாக 11 முறை தோல்வி கண்ட கோல்ஸ்கிரீபர் அவருக்கு எதிராக முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளார். பின்னர் கோல்ஸ்கிரீபர் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதனை எனது பயிற்சியாளருடன் இணைந்து கொண்டாடுவேன். எனக்கு நிறைய வாழ்த்து செய்திகள் வந்து இருக்கின்றன’ என்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-1 என்ற நேர்செட்டில் 26-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் செபாஸ்டியன் ஸ்வார்ட்ஸ்மானை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் வாவ்ரிங்காவை வீழ்த்தினார். ஜப்பான் வீரர் நிஷிகோரி, குரோஷியா வீரர் மரின் சிலிச் ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் தோல்வி கண்டு வெளியேறினார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்) 3-6, 1-6 என்ற நேர்செட்டில் 23-ம் நிலை வீராங்கனையான பெலின்டா பென்சிச்சிடம் (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற பிறகு நவோமி ஒசாகா சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். தொடர்ச்சியாக 11-வது வெற்றியை ருசித்த பெலின்டா பென்சிச் காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா) 2-6, 6-3, 2-6 என்ற செட் கணக்கில் செக்குடியரசு வீராங்கனை மார்கெடா வோன்ட்ரோசோவாவிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார். மற்ற ஆட்டங்களில் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தனர். #IndianWellsTennis #Djokovic #Osaka
    உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை செர்பியா டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தட்டிச் சென்றார். #NovakDjokovic
    மொனாக்கோ:

    ஆண்டு முழுவதும் விளையாட்டு உலகில் ஆதிக்கம் செலுத்தி சாதனை படைக்கும் வீரர்-வீராங்கனைகள் மற்றும் விளையாட்டுக்கு சிறந்த பங்களிப்பை அளித்து வருபவர்களுக்கு 2000-ம் ஆண்டு முதல் மொனாக்கோவை சேர்ந்த லாரெஸ் உலக விளையாட்டு அகாடமி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான லாரெஸ் உலக விளையாட்டு அகாடமி விருது வழங்கும் விழா மொனாக்கோவில் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடைபெற்றது.

    இதில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச் (செர்பியா) சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார். இந்த விருதை அவர் 4-வது முறையாக கைப்பற்றி உள்ளார். கடந்த ஆண்டு காயத்தில் இருந்து மீண்டு களம் கண்ட ஜோகோவிச் விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார். அத்துடன் கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். இது அவரது 15-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

    அமெரிக்காவை சேர்ந்த 21 வயதான ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோனே பைல்ஸ் சிறந்த வீராங்கனை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். அவர் ஒலிம்பிக் போட்டியில் 4 தங்கப்பதக்கமும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 14 தங்கப்பதக்கமும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சரிவில் இருந்து மீண்டு வந்த வீரருக்கான விருதை அமெரிக்காவை சேர்ந்த கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் பெற்றுள்ளார்.

    2018-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தையும், கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் வென்ற ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா திருப்புமுனை ஏற்படுத்திய வீராங்கனை விருதை தனதாக்கி இருக்கிறார். உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் கால்பந்து அணி சிறந்த அணிக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.


    லாரெஸ் விருதுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கும் இந்திய இளம் கால்பந்து வீராங்கனைகள்.


    விளையாட்டுக்கான நல்லெண்ண விருதுக்கு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த யுவா என்ற தன்னார்வ அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு ஊரக பகுதியில் உள்ள கால்பந்து வீராங்கனைகளை அடையாளம் கண்டு பயிற்சி அளித்து அவர்களது திறமையை வளர்த்து வருகிறது. இந்த அமைப்பின் மூலம் 450 வீராங்கனைகள் கால்பந்து பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்களில் ஹேமா, நீதா, ராதா, கோனிகா ஆகியோர் விழாவில் நேரில் கலந்து கொண்டு இந்த விருதை பெற்றுக் கொண்டனர். இந்தியாவை சேர்ந்த ஒரு அமைப்புக்கு இந்த விருது கிடைப்பது இது 3-வது முறையாகும்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் இறுதிப்போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச். #AUSOpen #NovakDjokovic #RafaelNadal
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் செர்பியாவின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சும், ஸ்பெயின் வீரரான 2ம் நிலை வீரரான ரபேல் நடாலும் மோதினர்.



    ஜோகோவிச் ஆட்டத்திற்கு நடாலினால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் ஏழாவது முறையாக பட்டம்  வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #AUSOpen #NovakDjokovic #RafaelNadal
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஜோகோவிச் லூகாஸ் பவுலியை நேர்செட் கணக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். #AUSOpen
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் பிரான்சின் லூகாஸ் பவுலியை எதிர்கொண்டார். நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் ஆட்டத்திற்கு 28-ம் நிலை வீரரான லூகாஸ் பவுலியால் ஈடுகொடுக்க முடியவில்லை.



    இதனால் ஜோகோவிச் 6-0, 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் 2-ம் நிலை வீரரான நடாலை எதிர்கொள்கிறார்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கெய் நிஷிகோரி ஆட்டத்தின் இடையே காயத்தால் வெளியேறியதால் ஜோகோவிச் எளிதாக அரையிறுதிக்கு முன்னேறினார். #AUSOpen
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் - 8-ம் நிலை வீரரான கெய் நிஷிகோரி பலப்பரீட்சை நடத்தினார்கள்.

    முதல் செட்டை எந்தவித சிரமமின்றி ஜோகோவிச் 6-1 எனக்கைப்பற்றினார். 2-வது செட்டில் ஜோகோவிச் 4-1 என முன்னிலையில் இருக்கும்போது நிஷிகோரி காயத்தால் விலகினார். இதனால் ஜோகோவிச் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.



    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் மிலோஸ் ரயோனிக் - லூகாஸ் பவுலி மோதினார்கள். இதில் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் விளையாடினார்கள். ‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை லூகாஸ் பவுலி 7(7)-6(4) எனக் கைப்பற்றினார். 2-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார்.

    ஆனால் ‘டை பிரேக்கர்’ வரை சென்ற 3-வது செட்டை ரயோனிக் கைப்பற்றினார். 4-வது செட்டை பவுலி 6-4 எனக்கைப்பற்றி வெற்றி பெற்றார்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், நிஷிகோரி ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள். #AustralianOpen #Djokovic #Medvedev #Nishikori
    மெல்போர்ன்:

    இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவாலோவை தோற்கடித்து 12-வது முறையாக 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அத்துடன் அவர் இந்த மாத இறுதி வரை நம்பர் ஒன் வீரராக நீடிப்பதை உறுதி செய்தார்.



    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-3, 6-3, 6-2 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் ‘வைல்டு கார்டு’ வீரர் அலெக்ஸ் போல்ட்டை விரட்டியடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் 8-ம் நிலை வீரரான நிஷிகோரி (ஜப்பான்) 7-6 (8-6), 6-1, 6-2 என்ற நேர்செட்டில் போர்ச்சுகல் வீரர் ஜாவ் ஜோய்சாவை வெளியேற்றி 7-வது முறையாக 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் டானில் மெட்விடேவ் (ரஷியா), மிலோஸ் ராவ்னிக் (கனடா), பாப்லோ கார்ரினோ பஸ்டா (ஸ்பெயின்), போர்னா கோரிச் (குரோஷியா), லூகாஸ் பொய்லி (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் 7 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இதேபோல் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் உக்ரைன் வீராங்கனை டயானா யாஸ்ட்ரெம்ஸ்காவை விரட்டியடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். 4-வது சுற்றில் சிமோனா ஹாலெப்-செரீனா வில்லியம்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    2018-ம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்) தொடக்க சரிவில் இருந்து மீண்டு வந்து 5-7, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் சீன தைபே வீராங்கனை சு வெய் ஹிக்கை வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 7-6 (7-5), 6-2 என்ற நேர்செட்டில் சுவிட்சர்லாந்தின் டிம் பாசின்ஸ்கியை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு தகுதி கண்டார். மற்ற ஆட்டங்களில் கரோலினா பிலிஸ்கோவா (செக் குடியரசு), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), செவஸ்டோவா (லாத்வியா) ஆகியோர் வெற்றி கண்டனர்.

    ×