search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98754"

    ஏடிபி டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சை வீழ்த்தி ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சுவேரேவ் சாம்பியன் பட்டம் பெற்றார். #AlexanderZverev #ATPFinals #NovakDjokovic
    லண்டன்:

    ஏ.டி.பி. டூர் டென்னிஸ் இறுதி சுற்று லண்டனில் நடந்தது. ‘டாப் 8’ வீரர்கள் பங்கேற்ற இந்தப்போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சுவேரேவ் சாம்பியன் பட்டம் பெற்றார்.



    அவர் 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ‘நம்பர் ஒன்’ வீரரான ஜோகோவிச்சை (செர்பியா) அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார். #AlexanderZverev #ATPFinals #NovakDjokovic
    ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் வெற்றி பெற்றார்கள். #ATPFinal #Djokovic
    ‘டாப் 8’ வீரர்கள் இடையிலான ஏடிபி பைனல் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது. ‘குகா குயர்டன்’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஜோகோவிச் - ஜான் இஸ்னெர் ஒரு ஆட்டத்தில் மோதினார்கள். இதில் நம்பர் ஒன் வீரரா ஜோகோவிச் 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார்.



    இதேபிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் -மரின் சிலிச் பலப்பரீட்சை நடத்தினார்கள்.இதில் இரண்டு செட்டுகளும் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் 7(7) - 7(6), 7(7) - 7(1) என அலெக்சாண்டர் கடும் போராட்டத்திற்குப்பின் வெற்றி பெற்றார்.
    உலக டென்னிஸ் வீரர் தரவரிசைப்பட்டியலில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் (8,045 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்தார். #Djokovic
    பாரீஸ்:

    உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் (8,045 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

    முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (7,480 புள்ளிகள்) 2-வது இடத்துக்கு சறுக்கி இருக்கிறார். சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (6,020 புள்ளிகள்), அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ (5,300 புள்ளிகள்) ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரே (5,085 புள்ளிகள்), தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் (4,310 புள்ளிகள்), குரோஷியா மரின் சிலிச் (4,050 புள்ளிகள்), ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் (3,895 புள்ளிகள்) ஆகியோர் முறையே 3 முதல் 8 இடங்களில் தொடருகின்றனர்.
    ஜப்பான் வீரர் நிஷிகோரி (3,390 புள்ளிகள்) 2 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தையும், அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் (3,155 புள்ளிகள்) ஒரு இடம் பின்தங்கி 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர். பாரீஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற ரஷிய வீரர் காரென் கச்சனோவ் 7 இடங்கள் ஏற்றம் கண்டு 11-வது இடத்தை பெற்றுள்ளார்.
    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ்-ஐ வீழ்த்தியதன் மூலம் ஜோகோவிச் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். #Djokovic
    டென்னிஸ் விளையாட்டில் நடால், ரோஜர் பெடரர், நோவக் ஜோகோவிச் ஆகியோர் முன்னணி வீரர்களாக திகழ்ந்து வருகிறார்கள். டென்னிஸ் தரவரிசையில் நடால் முதல் இடத்திலும், ரோஜர் பெடரர் 2-வது இடத்திலும், நோவக் ஜோகோவிச் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    தற்போது ஷாங்காய் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. அரையிறுதி ஒன்றில் நோவக் ஜோகோவிச் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ்-ஐ எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-2, 6-1 என நேர்செட் கணக்கில் வீழ்த்தினார்.



    இதன்மூலம் ஜோகோவிச் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த ரோஜர் பெடரரை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். திங்கட்கிழமை அதிகாரப்பூர்வ தரவரிசை வெளியிடப்பட இருக்கிறது.
    ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் 6-3, 7-5 என்ற நேர்செட்டில் ஜெர்மி சார்டியை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். #Shanghai #NavakDjokovic
    ஷாங்காய்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள செர்பியா வீரர் ஜோகோவிச், 41-ம் நிலை வீரரான ஜெர்மி சார்டியை (பிரான்ஸ்) சந்தித்தார். 1 மணி 23 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 7-5 என்ற நேர்செட்டில் ஜெர்மி சார்டியை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் மரின் சிலிச் (குரோஷியா) 6-2, 6-7 (6-8), 5-7 என்ற செட் கணக்கில் நிகோலஸ் ஜார்ரியிடம் (சிலி) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்ற ஆட்டங்களில் மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா), போர்னா கோரிச் (குரோஷியா), பீட்டர் ஜோகோவிஸ்க் (ஜெர்மனி) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தனர். 
    அமெரிக்கா கிராண்ட் ஸ்லாத்தை வென்றதன் மூலம் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு முதல் மூன்று இடத்திற்குள் முன்னேறியுள்ளார் ஜோகோவிச். #Djokovic #NaomiOsaka
    அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இது அவரின் 14-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இந்த சாம்பியன் பட்டம் மூலம் உலக டென்னிஸ் தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதல் மூன்று இடத்திற்குள் வந்துள்ளார். நடால் முதல் இடத்திலும், ரோஜர் பெடரர் 2-வது இடத்திலும் உள்ளனர்.



    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகா செரீனா வில்லியம்சை வீழ்த்தி முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார். இதன்மூலம் 12 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். செரீனா வில்லியம்ஸ் 26-வது இடத்தில் இருந்து 16-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் மில்மேனை வீழ்த்தி ஜோகோவிச் அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். சிலிச் அதிர்ச்சிகரமாக தோற்றார். #USOpen2018
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் 6-ம் நிலை வீரரும், அமெரிக்க ஓபன் பட்டத்தை 2 முறை வென்றவருமான ஜோகோவிச் (குரோஷியா) கால்இறுதியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மில்மேனை எதிர்கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். அவர் தொடர்ந்து 11-வது முறையாக அரை இறுதிக்கு முன்னேறினார்.

    மில்மேன் 4-வது சுற்றில் ரோஜர் பெடரரை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி இருந்தார். கால் இறுதியில் அவரது ஆட்டம் ஜோகோவிச் முன்பு எடுபடவில்லை.

    உலகின் 7-ம் நிலை வீரரும், 2014-ம் ஆண்டு சாம்பியனுமான சிலிச் (குரோஷியா) கால் இறுதியில் அதிர்ச்சிகரமாக தோற்றார். 21-ம் நிலை வீரரான நிஷி கோரி (ஜப்பான்) 2-6, 6-4, 7-6, (7-5), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி சிலிச்சை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

    24 வயதான நிஷிகோரி 2014-ம் ஆண்டு அமெரிக்க ஒபன் இறுதிப் போட்டியில் சிலிச்சிடம் தோற்றதற்கு தற்போது பழி தீர்த்துக் கொண்டார். நிஷிகோரி அரை இறுதியில் ஜோகோவிச்சை சந்திக்கிறார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 14-வது வரிசையில் இருக்கும் மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) கால் இறுதியில் ஸ்பெயினைச் சேர்ந்த கர்லா சுராஸ் நவரோவை எதிர்கொண்டார். இதில் கெய்ஸ் 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு கால் இறுதியில் 20-வது இடத்தில் உள்ள நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-1, 6-1 என்ற நேர்செட் கணக்கில் லெசியாவை வீழ்த்தி முதல் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றார். ஒசாகா அரை இறுதியில் மேடிசன் கெய்சை சந்திக்கிறார்.

    ஜப்பான் டென்னிஸ் வரலாற்றில் இவை முக்கியமான நாள். அந்நாட்டை சேர்ந்த இருவர் அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளனர். #USOpen2018
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் பெடரர், ஜோகோவிச் 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர். #USOpen2018 #NovakDjokovic
    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் பெடரர், ஜோகோவிச் 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர். முன்னணி வீராங்கனை ஜெர்மனியின் கெர்பர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 6-வது நாளான நேற்று முன்தினம் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.



    ஆண்கள் பிரிவில் 5 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-4, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோசை தோற்கடித்து 17-வது முறையாக அமெரிக்க ஓபனில் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். பெடரர் அடுத்து ஜான் மில்மானை (ஆஸ்திரேலியா) எதிர்கொள்கிறார். மற்றொரு ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-2, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்சின் ரிச்சர்ட் கேஸ்கியூட்டை எளிதில் வீழ்த்தினார்.

    முன்னாள் சாம்பியனான குரோஷியாவின் மரின் சிலிச், ஆஸ்திரேலியாவின் இளம் வீரர் அலெக்ஸ் டி மினாருடன் மல்லுகட்டினார். இதில் முதல் இரு செட்டுகளை பறிகொடுத்த (4-6, 3-6) மரின் சிலிச் அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு எஞ்சிய மூன்று செட்டுகளை 6-3, 6-4, 7-5 என்ற கணக்கில் வென்று அதிர்ச்சி தோல்வியில் இருந்து தப்பினார்.

    பெண்கள் பிரிவில் 5-ம் நிலை வீராங்கனையான பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) 5-7, 1-6 என்ற நேர் செட்டில் 20-ம் நிலை வீராங்கனை அரினா சபலென்காவிடம் (பெலாரஸ்) மண்ணை கவ்வினார். இதன் மூலம் சபலென்கா, கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் முதல்முறையாக 4-வது சுற்றை எட்டியுள்ளார்.

    இதே போல் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், விம்பிள்டன சாம்பியனுமான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரும் 3-வது சுற்றை தாண்டவில்லை. அவரை 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் சுலோவக்கியாவின் சிபுல்கோவா விரட்டினார். இதே போல் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் பிரான்சின் கரோலின் கார்சியா 7-5, 4-6, 6-7 (4-7) என்ற செட் கணக்கில் 24-ம் நிலை வீராங்கனை சுவாரஸ் நவரோவிடம் (ஸ்பெயின்) 2 மணி 24 நிமிடங்கள் போராடி வீழ்ந்தார்.

    இன்னொரு ஆட்டத்தில் ரஷியாவின் மரிய ஷரபோவா 6-3, 6-2 என்ற நேர் செட்டில் ஆஸ்டாபென்கோவை (லாத்வியா) துவம்சம் செய்து 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஜப்பானின் நவோமி ஒசாகா தன்னை எதிர்த்த சாஸ்னோவிச்சுக்கு (பெலாரஸ்) ஒரு கேம் கூட விட்டுக்கொடுக்காமல் 6-0, 6-0 என்ற நேர் செட்டில் வெற்றி கண்டு மிரட்டினார்.  #USOpen2018 #NovakDjokovic
    அமெரிக்காவில் நடைபெற்று வந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச் #Federer #Djokovic
    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 2-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர், 10-ம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 4-6, 4-6 என ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

    பெண்களுக்கான இறுதிப் போட்டியில் 1-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் தரநிலை பெறாத கிகி பெர்ட்டென்ஸ்-ஐ எதிர்கொண்டார்.

    இதில் முதல் செட்டை சிமோனா ஹாலெப் 6-2 என எளிதாக கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் பெர்ட்டென்ஸ் கடுமையான அளவில் பதிலடி கொடுத்தார். இரண்டு பேரும் மாறிமாறி கேம்ஸை கைப்பற்ற ஆட்டம் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது.



    இறுதியில் கிகி பெர்ட்டென்ஸ் 7(8) - 6(6) என சிமோனா ஹாலெப்பை வீழ்த்தினார். இதனால் 1-1 என இருவரும் சமநிலை பெற்றதால் போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி செட்டை கைப்பறியே ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு களம் இறங்கினார்கள்.

    ஆனால் சிமோனா ஹாலெப் 2-6 என எளிதில் சரணடைந்தார். இதனால் பெர்ட்டென்ஸ் 2-6, 7(8) - 6(6), 6-2 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்.
    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் - ஜோகோவிச் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். #CincinnatiMasters
    அமெரிக்காவின் ஒஹியோ சின்சினாட்டி அருகே உள்ள மேசன் என்ற இடத்தில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் அரையிறுதி ஒன்றில் 10-ம் நிலை வீரர் ஜோகோவிச் - 7-ம் நிலை வீரர் மரின் சிலிச் ஆகியோர் மோதினார்கள்.

    இதில் ஜோகோவிச் 6-4, 3-6, 6-3 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் - 11-ம் நிலை வீரரான கோபின் ஆகியோர் மோதினார்கள்.



    இதில் 20-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் முதல் செட்டை 7(7) - 7(3) என கைப்பற்றினார். 2-வது செற்றில் இருவரும் 1-1 என சமநிலையில் இருக்கும்போது கோபின் ஆட்டத்தில் இருந்து விலகினார். இதனால் பெடரர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.



    இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடக்கும் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் - ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்த இருக்கிறார்கள்.
    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் ஜோகோவிச்சை கிரிஸ் நாட்டைச் சேர்ந்த 19 வயது இளைஞரான ஸ்டீபனோஸ் வீழ்த்தினார். #Djokovic
    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் கனடாவில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டமொன்றில் 13 முறை கிராண்ட் ஸ்லாம் வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கிரீ்ஸ் நாட்டைச் சேர்ந்த 19 வயதே ஆன ஸ்டீபனோஸ் டிசிட்சிபாஸ்-ஐ எதிர்கொண்டார்.

    இதில் ஸ்டீபனோஸ் ஜோகோவிச்சிற்கு கடும் சவாலாக விளங்கினார். முதல் செட்டை 6-3 என எளிதில் கைப்பற்றி ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சியளித்தார்.

    2-வது செட்டில் ஜோகோவிச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருந்தாலும் ஸ்டீபனோஸ் கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் 2-வது செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் ஜோகோவிச் 7(7)- 6(5) என கைப்பற்றினார்.



    வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டை ஸ்டீபனோஸ் 6-3 என ஜோகோவிச்சை வீழ்த்தினார். இதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஸ்டீபனோஸ் முன்னேறியுள்ளார். 
    கெவின் ஆண்டர்சனை நேர்செட் கணக்கில் வீழ்த்தி விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச். #Wimbledon2018 #Djokovic
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் 8-ம் நிலை வீரரான கெவின் ஆண்டர்சன் - 12-ம் நிலை வீரரான ஜோகோவிச் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தின.

    பெடரர், இஸ்னெரை கடும் போராட்டத்திற்குப் பின் வீழ்த்திய ஆண்டர்சன் இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முதல் இரண்டு செட்டுகளையும் 2-6, 2-6 என இழந்தார். 3-வது செட்டில் சற்று வேகம் காட்டினார் ஆண்டர்சன். இதனால் ஆட்டம் ‘டைபிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் ஜோகோவிச்  7(7)-6(3) என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார். #Wimbledon2018 #Djokovic
    ×