search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98754"

    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச் #Wimbledon2018
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2-வது அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீரரான ரபெல் நடால் 12-ம் நிலை வீரரான ஜோகோவிச்சை எதிர்கொண்டார். இரண்டு பேரும் 10-க்கும் மேற்பட்ட கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர்கள் என்பதால் ஆட்டம் கடும் சவால் நிறைந்ததாக இருந்தது.

    முதல் செட்டை 6-4 என ஜோகோவிச் வென்றார். 2-வது செட்டில் ஆக்ரோசமான ஆட்டத்தை நடால் வெளிப்படுத்தினார். இதனால் 6-3 என 2-வது செட்டை கைப்பற்றினார். 3-வது செட்டில் இருவரும் மல்லுகட்டினார்கள். இதனால் ஆட்டம் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் 7(11) - 6(9) என ஜோகோவிச் கைப்பற்றினார். 4-வது செட்டை நடால் 6-3 என எளிதில் கைப்பற்றினார்.



    இதனால் இருவரும் 2-2 என சமநிலையில் இருந்தனர். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டில் வெற்றி பெற்றாக வேண்டும் என இருவரும் களம் இறங்கினார்கள். இறுதியில் ஜோகோவிச் கையே ஓங்கியது அவர் 10-8 என ஐந்தாவது செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார்.

    6-4, 3-6, 7(11)-6(9), 3-6, 10-8 என நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜோகோவிக் தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்கொள்கிறார்.
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரரான ரபேல் நடாலுடன் செர்பியா வீரரான ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்துகின்றனர். #RafaelNadal #NovakDjokovic #wimbledon
    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டங்கள் இன்று நடக்கிறது.

    மாலை 5.30 மணிக்கு நடக்கும் முதல் அரை இறுதியில் 8-ம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனும், (தென்ஆப்பிரிக்கா)- 9-ம் நிலை வீரர் ஜான் இஸ்னர் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    இவர்கள் இருவரும் கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்றதில்லை. இதில் ஆண்டர்சன் கடந்த ஆண்டு அமெரிக்க ஒபனில் இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தார்.

    நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரரை கால் இறுதியில் வீழ்த்திய ஆண்டர்சன் நம்பிக்கையுடன் உள்ளார்.

    இரவு 7.30மணிக்கு மற்றொரு அரை இறுதியில் 2-ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்)- ஜோகோவிச் (செர்பியா) பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    17 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ள நடால் விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு 6-வது முறையாக தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளார்.

    அவர் விம்பிள்டன் பட்டத்தை (2008, 2010) 2 முறை கைப்பற்றி உள்ளார். சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நடால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார். ஆனாலும் அவருக்கு ஜோகோவிச் கடும் சவால் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    12 கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ள ஜோகோவிச் விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு இதுவரை 4 முறை தகுதி பெற்று உள்ளார். அதில் 2011, 2014, 2015-ம் ஆண்டுகளில் பட்டம் வென்றார்.

    முன்னாள் நம்பர் ஒன் வீரரான அவர் கடந்த ஆண்டு கடும் சறுக்கலை சந்தித்தார். அதில் இருந்து மீண்டும் தற்போது விம்பிள்டன் அரை இறுதியை எட்டி உள்ளார். இருவரும் இதுவரை 51 முறை மோதி உள்ளனர். இதில் ஜோகோவிச் 26 தடவையும், நடால் 25 தடவையும் வெற்றி பெற்றனர். #RafaelNadal #NovakDjokovic #wimbledon
    விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ரபெல் நடால், பலம் வாய்ந்த ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார். #Wimbledon2018 #RafelNadal #NovakDjokovic
    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் 2-வது தரவரிசையில் இருப்பவரும், 2 முறை சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) கால்இறுதியில் 5-வது வரிசையில் இருக்கும் டெல் போட்ரோவை (அர்ஜென் டினா) எதிர்கொண்டார்.

    இதில் நடால் 7-5, 6-7 (7-9), 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 4 மணி 47 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    நடால் அரை இறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், 3 முறை விம்பிள்டன் பட்டம் வென்றவருமான ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொள்கிறார். அவர் கால் இறுதியில் ஜப்பான் வீரர் நிஷிகோரியை தோற்கடித்து இருந்தார்.

    மற்றொரு கால்இறுதியில் 9-வது வரிசையில் இருக்கும் ஜான் இஸ்னெர் (அமெரிக்கா) 6-7 (5-7), 7-6 (9-7), 6-4, 6-3 என்ற கணக்கில் ரோனிக்கை (கனடா) வீழ்த்தினார். இஸ்னெர் அரை இறுதியில் கெவின் ஆண்டர்சனை (தென்ஆப்பிரிக்கா) சந்திக்கிறார்.

    ஆண்டர்சன் கால்இறுதியில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீரருமான ரோஜர் பெடரரை (சுவிட்சர்லாந்து) வீழ்த்தி இருந்தார். அரை இறுதி ஆட்டங்கள் நாளை நடக்கிறது.

    இன்று நடைபெறும் பெண்கள் அரை இறுதி ஆட்டங்களில் கெர்பர் (ஜெர்மனி)- ஒஸ்டா பென்கோ (லாத்வியா), செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) -ஜூலியா ஜார்ஜெஸ் (ஜெர்மனி) மோதுகிறார்கள். #Wimbledon2018 #RafelNadal #NovakDjokovic
    ஜப்பான் வீரர் நிஷிகோரியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் செர்பியா வீரர் ஜோகோவிச். #Wimbledon2018 #Djokovic #nishikori
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    முதல் காலிறுதியில் 12-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 24-ம் நிலை வீரரான ஜப்பானின் கெய் நிஷிகோரியை எதிர்கொண்டார். முதல் செட்டை ஜோகோவிச் 6-3 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை நிஷிகோரி 6-3 எனக் கைப்பற்றினார்.



    அதன்பின் இரண்டு செட்டுகளையும் 6-2, 6-2 என எளிதில் கைப்பற்றி ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார். 
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரரான ரபெல் நடால் ஆகியோர் கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். #NovakDjokovic #RafaelNadal
    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் இரண்டாம் நிலை வீரரும், 2 முறை பட்டம் வென்றவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 4-வது சுற்றில் செக்குடியரசை சேர்ந்த வெஸ்லியை எதிர் கொண்டார். இதில் நடால் 6-3, 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    அவர் 6-வது முறையாக கால் இறுதியில் நுழைந்து உள்ளார். விம்பிள்டனில் 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்த முன்னேற்றத்தை அடைந்து உள்ளார்.

    நடால் கால்இறுதியில் 5-வது வரிசையில் இருக்கும் டெல் போட்ரோ (அர்ஜென்டினா) அல்லது ஷிமோனை (பிரான்ஸ்) சந்திக்கிறார். இருவரும் மோதிய 4-வது சுற்று ஆட்டத்தில் டெல்போட்ரோ 7-6 (7-1), 7-6 (7-5) 5-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. இந்த ஆட்டம் தொடர்ந்து இன்று நடைபெறும்.

    3 முறை சாம்பியனும், 12-வது வரிசையில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் ரஷியாவைச் சேர்ந்த கச்சனோவை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால் இறுதியில் நிஷிகோரியை சந்திக்கிறார்.

    மற்ற ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), இஸ்னர் (அமெரிக்கா), நிஷிகோரி (ஜப்பான்), ரோனிக் (கனடா) ஆகியோர் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), கெர்பர் (ஜெர்மனி), பெர்டன்ஸ் (நெதர்லாந்து), ஒஸ்டா பென்கோ (லாத்வியா), ஜுலியா ஜார்ஜஸ் (ஜெர் மனி), சிபுல்கோவா (சுலோ வாக்கியா), டாரியா கசாட் சினா (ரஷியா), கேமிலா ஜியோர்பி (இத்தாலி) ஆகியோர் 4-வது சுற்றில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்கள். பெண்கள் கால்இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. #NovakDjokovic #RafaelNadal
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், கெர்பர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். #wimbledon2018
    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டியில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    12-ம் நிலை வீரரும், 2 முறை சாம்பியனுமான ஜோகோவிச் (செர்பியா) 4-6, 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எட்மன்டை (இங்கிலாந்து) வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    ரபெல் நடால் (ஸ்பெயின்), நிஷிகோரி (ஜப்பான்), டெல்போட்ரோ (அர்ஜென்டினா) ஆகியோரும் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். 4-ம் நிலை வீரர் சுவரேவ் (ஜெர்மனி) அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    11-ம் நிலை வீராங்கனையான கெர்பர் (ஜெர்மனி) 6-2, 6-4, என்ற நேர் செட் கணக்கில் ஒசாகாவை (ஜப்பான்) வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    முதல் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப் (ருமேனியா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். #wimbledon2018
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.#FrenchOpen2018 #NovakDjokovic
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-6 (7-1), 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஸ்பெயின் தகுதி சுற்று வீரர் ஜார்மி முனாரை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். #FrenchOpen2018 #NovakDjokovic
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் இங்கிலாந்து வீரர் கைல் எட்முன்ட்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். #MadridOpen #NovakDjokovic
    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 3-6, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் இங்கிலாந்து வீரர் கைல் எட்முன்ட்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் 7-5, 6-3 என்ற நேர்செட்டில் நெதர்லாந்து வீரர் ராபின் ஹாஸ்சை தோற்கடித்தார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-1, 6-4 என்ற நேர்செட்டில் செக்குடியரசின் கிறிஸ்டினா பிளிஸ்கோவாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 6-2, 6-3 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஸ்டீபென்ஸ்சை வீழ்த்தினார். இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 2-6, 2-6 என்ற நேர்செட்டில் நெதர்லாந்து வீராங்கனை பெர்டென்ஸ்சிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து நடையை கட்டினார்.  #MadridOpen #NovakDjokovic 
    ×