search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98817"

    இந்தியன் 2 படத்தை தொடர்ந்து ஷங்கர் அடுத்ததாக இயக்கவிருக்கும் காதல் படத்தில் விஜய் மற்றும் விக்ரமின் மகன்கள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vijay #Vikram #Shankar
    ‌ஷங்கர் தற்போது கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். 2.0, இந்தியன் 2 என்று 2 சீரியசான கதைகளை அடுத்தடுத்து இயக்கியதால் தனது அடுத்த படத்தில் இளமைக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் எடுக்க முடிவு செய்து இருக்கிறார் என்கிறார்கள்.

    ‌ஷங்கர் கடைசியாக இளைஞர்களை கவரும் வகையில் பாய்ஸ் என்ற படத்தை இயக்கினார். அதுபோன்ற ஒரு கதையை தான் இயக்க இருப்பதாக செய்தி வந்துள்ளது. இந்த படத்தில் விஜய் மகன் சஞ்சய் மற்றும் விக்ரம் மகன் துருவ் இருவரையும் நடிக்க வைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கிறார்கள். #Vijay #Vikram #Shankar #SanjayVijay #DhruvVikram

    கமல் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. #KadaramKondan #HappyPongal2019
    விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் `கடாரம் கொண்டான்'. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினருடன் இரவு விருந்தை முடித்த இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா, படப்பிடிப்பு முடிந்துவிட்டது, ஒரு பாடல் மட்டும் பாக்கி இருப்பதாக தெரிவித்தார்.

    தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டீசரை வெளியிட்டிருக்கிறார். இந்த டீசர் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவை செய்துள்ளார்கள். படத்தை வருகிற ஏப்ரல் 2019-ல் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். #KadaramKondan #HappyPongal2019
    நடிகர் விக்ரமின் கட்டுக்கோப்பான உடலமைப்புக்கு நிகராக அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம், தன்னுடைய உடலமைப்பை மாற்றி வருகிறார். #Vikram #DhruvVikram
    நடிகர் விக்ரம் தன்னுடைய உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். தற்போது இவரது நடிப்பில் கடாரம் கொண்டான் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் இவரின் உடலமைப்பு அனைவரையும் கவர்ந்தது. தற்போது இவரது உடலுக்கு நிகராக இவரது மகன் துருவ் விக்ரம் உடலை ஏற்றி வருகிறார்.

    துருவ் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் விக்ரமின் உடலுக்கு நிகராக உங்கள் உடம்பு உள்ளது என்று கூறி வருகிறார்கள்.



    துருவ் விக்ரம் நடிப்பில் தற்போது ‘வர்மா’ திரைப்படம் உருவாகியுள்ளது. பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த `கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், விக்ரம் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். #KadaramKondan #ChiyaanVikram
    விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினருடன் இரவு விருந்தை முடித்த இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா, அவரது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, ஒரு பாடல் மட்டும் பாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கின்றனர். படத்தை வருகிற ஏப்ரலில் 2019-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் டீசர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


    கடாரம் கொண்டான் படப்பிடிப்பு நிறைவு பெற்றதால், விக்ரம் அடுத்ததாக கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். விரைவில் மகாவீர் கர்ணா படத்திலும் விக்ரம் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #KadaramKondan #ChiyaanVikram

    செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில், அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு உள்ளிட்டோர் நடிக்கவிருக்கிறார்களாம். #Maniratnam
    மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் செக்கச்சிவந்த வானம். பிரகாஷ்ராஜ், அரவிந்தசாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல முன்னணி நடிகர், நடிகைகளை படத்தில் நடிக்க வைத்து இருந்தார்.

    படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு படத்தில் நடித்த அனைவருக்கும் பெயர் வாங்கி கொடுத்தது. அடுத்து மணிரத்னம் தன்னுடைய நீண்ட நாள் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ கதையைக் கையில் எடுத்து இருக்கிறார்.



    கடந்த முறை விஜய், மகேஷ் பாபு என மிகப்பெரிய நடிகர்களை வைத்து இந்த படத்தைத் தொடங்க முயற்சி செய்தார். ஆனால் பட்ஜெட் பிரச்சினையால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. தற்போது, விக்ரம், விஜய் சேதுபதி, சிம்பு மற்றும் ஜெயம் ரவியை வைத்து மறுபடியும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஜெயம் ரவி அல்லது விஜய் தேவரகொண்டா என்ற முடிவில் இருக்கிறார்.

    இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயும் நடிக்கலாம் என்கிறார்கள். இருவரிடமும் கதை சொல்லிவிட்டாராம் மணிரத்னம். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். #Maniratnam #PonniyinSelvan #AmitabhBachchan #Vikram #JayamRavi #VijaySethupathi #STR #AishwaryaRai

    ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `கடாரம் கொண்டான்' படத்தின் இரண்டாவது போஸ்டர் மற்றும் முக்கிய அறிவிப்பு ஒன்றை புத்தாண்டில் வெளியிடுகின்றனர். #KadaramKondan #ChiyaanVikram
    விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஜனவரிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை `தூங்காவனம்' பட இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்று கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி, கடாரம் கொண்டான் படத்தின் இரண்டாவது போஸ்டர் புத்தாண்டுக்கு வெளியாக இருப்பதாகவும், அத்துடன் மற்றொரு சிறப்பு அறிவிப்பு ஒன்றும் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


    விக்ரமுடன் இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

    ஜிப்ரான் இசையமைக்க, ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கின்றனர். படத்தை வருகிற ஏப்ரலில் 2019-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #KadaramKondan #ChiyaanVikram

    ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும் கடாரம் கொண்டான் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #KadaramKondan #ChiyaanVikram
    விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பை ஜனவரிக்குள் முடித்துவிட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை `தூங்காவனம்' பட இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார்.

    மலேசியாவில் முக்கிய காட்சிகளை படமாக்கிய பின்னர், சென்னை திரும்பி படக்குழு பூந்தமல்லி சாலையில் பிரம்மாண்ட அரங்குகளை அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். விக்ரமுடன் இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.



    ஜிப்ரான் இசையமைக்க, ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கின்றனர். படத்தை வருகிற ஏப்ரலில் 2019-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. `கடாரம் கொண்டான்' படப்பிடிப்பை முடித்த பின்னர் விக்ரம் அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

    அந்த படத்தை தொடர்ந்து, பிரம்மாண்டமாக உருவாகும் `மகாவீர் கர்ணா' படத்தில் இணையவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #KadaramKondan #ChiyaanVikram

    இமைக்கா நொடிகள் படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்து அடுத்ததாக இயக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்க இருக்கிறார். #Vikram #AjayGnanamuthu
    திரில்லர் படங்கள் இயக்குவது இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் பாணி. இவரது முதல் படமான டிமாண்டி காலனி திரைப்படம் ஹாரர் திரில்லர் பாணியில் வெளியாகி கவனம் பெற்றது. சில மாதங்களுக்கு முன் நயன்தாரா முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்த இமைக்கா நொடிகள் கிரைம் திரில்லர் பாணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அனுராக் காஷ்யப், அதர்வா, ராஷி கண்ணா, விஜய் சேதுபதி அந்தப் படத்தில் நடித்திருந்தனர். 

    இந்த நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்த படம் ஆக்‌‌ஷன் திரில்லர் பாணியில் உருவாக உள்ளது. இந்தப் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்க உள்ளார். விக்ரம் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் `கடாரம் கொண்டான்' படத்தில் நடித்து வருகிறார். ராஜேஷ்.எம்.செல்வா இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. 



    இந்தப் படத்தை தொடர்ந்து விக்ரம் மலையாளத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் `மகாவீர் கர்ணா' படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பின் அவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 

    டிமாண்டி காலனி படம் வெளிவந்த பின்பு 2016-ம் ஆண்டிலேயே அஜய்-விக்ரம் கூட்டணியில் புதிய படம் உருவாக இருந்தது. ஆனால் அப்போது அது கைகூடவில்லை. இருவரும் வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இருவரும் இணையவிருக்கின்றனர். அடுத்த ஆண்டு இதன் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அ]றிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. #Vikram #AjayGnanamuthu

    ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் உருவாகும் ‘மகாவீர் கர்ணா’ படத்தில் கர்ணனாக நடிக்கும் விக்ரம், அதற்காக உடல் எடையை கூட்டியதுடன், குதிரையேற்ற பயிற்சி எடுத்து வருகிறார். #Vikram #MahavirKarna
    மலையாளத்தில், ‘என்னு நிண்டே மொய்தீன்’ எனும் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக இயக்கும் படம் ‘மகாவீர் கர்ணா’. மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளாவில் உள்ள ஸ்ரீ பத்மநாபர் கோயிலில் உள்ள மணி ஒன்றைப் படக்குழுவினர் பெற்றுள்ளனர். படத்துக்காக உருவாக்கப்பட உள்ள 30 அடி உயரமுள்ள கர்ணனின் ரதத்தில் இந்தக் கோயில் மணி இடம்பெற உள்ளது.



    ஐதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் கனடாவில் இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கும் இந்தப் படம் 32 மொழிகளில் டப் செய்யப்படுகிறது. இந்த படத்துக்காக தனது உடல் எடையை ஏற்றி ஆஜானு பாகுவான தோற்றத்துக்கு மாறி இருக்கும் விக்ரம், குதிரையேற்ற பயிற்சிகளும் எடுத்து வருகிறார். #Vikram #MahavirKarna

    ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் ‘மகாவீர் கர்ணா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கேரளாவில் நேற்று துவங்கியது. #MahaveerKarna #Vikram
    ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களும் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றன. வசூலிலும் சாதனை படைத்தன.

    இதை தொடர்ந்து சரித்திர படங்களை பிரமாண்டமாக தயாரிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. தற்போது, தெலுங்கில் சிரஞ்சீவி, நயன்தாரா ஜோடியுடன் அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடிக்கும் ‘சைரா’ படம் உருவாகி வருகிறது. இது தவிர மகாபாரத கதை மலையாளம், இந்தியில் ரூ.1000 கோடி செலவில் தயாராக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் ‘சங்கமித்ரா’ பிரமாண்டமாக படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் விக்ரம் நடிப்பில் ‘மகாவீர் கர்ணா’ என்ற பிரம்மாண்ட படமும் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ‘மகாவீர் கர்ணா’ படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் பூஜையுடன் நேற்று துவங்கியுள்ளது. பூஜையில் படக்குழுவினருடன் பிரபல நடிகர் சுரேஷ் கோபியும் பங்கேற்றிருந்தார்.


    இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இது ரூ.300 கோடி செலவில் தமிழ், இந்தியில் இந்த படம் தயாராகிறது. மேலும் படத்தை தெலுங்கு, மலையாளத்திலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். #MahaveerKarna #Vikram

    செக்கச் சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்தில் விஜய், விக்ரம், சிம்பு இணைந்த நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Maniratnam #PonniyinSelvan
    மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் சமீபத்தில் வெளியானது. மணிரத்னத்தின் இந்த படத்தை அனைத்து ரசிகர்களும் ஏற்றுக் கொண்டனர். படத்தின் திரைக்கதையும் நன்றாக இருந்ததால் ஓரளவு வெற்றியும் பெற்றது.

    இந்த நிலையில் விஜய், விக்ரம், சிம்பு கூட்டணியில் மணிரத்னம் புதிய படத்தை இயக்க உள்ளதாக ஒரு பேச்சு திரையுலகில் உலவுகிறது. இந்த படமும் தாதாக்கள் பற்றிய கதையாக தளபதி பாணியில் இருக்கும் என்கிறார்கள். இவர்களில் விக்ரமும், சிம்புவும் ஏற்கனவே மணிரத்னம் படங்களில் நடித்துவிட்டார்கள்.



    இதுதவிர மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் வரலாற்று கதையை படமாக்க இருப்பதாகவும், அதற்கான பணிகளில் இறங்கியிருப்பதாகவும், அதில் தான் இவர்கள் மூன்று பேரும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. #Maniratnam #PonniyinSelvan #Vijay #STR #Vikram

    பிறந்தநாள் கொண்டாடி வரும் கமலுக்கு நடிகர் விக்ரம் கடாரம் கொண்டான் படக்குழுவினருடன் இணைந்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். #Kamal #Vikram
    `சாமி ஸ்கொயர்' ரிலீசுக்கு பிறகு விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும் இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘கடாரம் கொண்டான்’ என்று தலைப்பு வைத்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளியை முன்னிட்டு வெளியானது.

    விக்ரமின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை மிரளவைத்தது. தற்போது கடாரம் கொண்டான் படக்குழுவினருடன் சேர்ந்து கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    விக்ரமின் 56-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். #Vikram #KamalHaasan #KadaramKondan
    ×