search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜடேஜா"

    ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. # #AsiaCup2018 #BANvIND #INDvBAN
    துபாய்:

    14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகள் அடுத்த சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. தங்களது இரண்டு லீக்கிலும் தோல்வியை தழுவிய இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறின.

    இந்நிலையில், சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கியது. இதில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில்  பந்து வீச்சை தேர்வு செய்தது.  

    வங்காளதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களான லிட்டான் தாஸ், நுஸ்முல் ஹூசைன் ஆகியோர் 5.1 வது ஓவர்களுக்குள் தலா 7 ரன்களுடன் வெளியேறினர். இதனையடுத்து வங்காளதேச பேட்ஸ்மேன்கள் வலுவான கூட்டணியை அமைக்க இந்தியா அனுமதிக்கவில்லை.

    வங்காளதேசத்தின் முன்னணி வீரர்களை இந்திய பவுலர்கள் துல்லியமாக பந்து வீசி அவுட்டாக்கியதால் அந்த அணி 101 ரன்களை எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த மோர்டசாவும், மெஹிதி ஹசனும் பொறுப்புடன் ஆடினர். இந்த ஜோடியால் வங்காளதேசம் அணி 170 ரன்களை கடந்தது.



    இறுதியில், வங்காளதேசம் அணி 49.1 ஓவரில் 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக மெஹிதி ஹசன் 42 ரன்களும், மோர்டசா 26 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இதைத்தொடர்ந்து, இந்திய அணி சேசிங் செய்ய தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும்
    களமிறங்கினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

    அணியின் எண்ணிக்கை 61 இருந்த போது ஷகிப் அல் ஹசன் வீசிய பந்தில் தவான், எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 47 பந்துகளில் ஒரு சிக்சர், 4 பவுண்டரிகள் உள்பட 40 ரன்களை குவித்தார். ராயுடு 13 ரன்களின் ரூபல் ஹூசய்ன் பந்தில் விக்கெட்கீப்பர் ரஹிமிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

    அடுத்து களமிறங்கிய தோனி 3 விக்கெட்டுக்கு ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார், இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வங்காளதேச வீரர்களின் பந்துவீச்சை நாலா புறமும் சிதறடித்தனர்.

    இருப்பினும் வெற்றிக்கு 4 ரன்களே எஞ்சியிருந்த நிலையில் மோர்டாசா வீசிய பந்தை சிக்சருக்கு விரட்ட நினைத்தார் தோனி, ஆனால் அதை எல்லைக்கோட்டுக்கு அருகே இருந்த மிதுன் கேட்ச் பிடித்தார். இதனால், தோனி 33 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    இறுதியில், இந்திய அணி 36.2 ஓவர்கள் முடிவில் 174 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 83 ரன்களுடனும் தினேஷ் கார்த்திக் ஒரு ரன்னுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். வங்காளதேச அணி தரப்பில் ஷகிப் அல் ஹசன், ரூபல் ஹூசைய்ன் மற்றும் மோர்டாசா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். #AsiaCup2018 #BANvIND #INDvBAN
    வங்காள தேசம் 65 ரன்கள் அடிப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது. ஜடேஜா அபாரமாக பந்து வீசினார். #AsiaCup2018 #INDvBAN
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவிற்குப் பதிலாக ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டார்.

    லிட்டோன் தாஸ், நஸ்முல் ஹுசைன் ஷான்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 5-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் லிட்டோன் தாஸ் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் நஸ்முல் ஹுசைன் 7 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    தொடக்க விக்கெட்டுக்களை 16 ரன்னுக்குள் இருவரும் வீழ்த்தினார்கள். அதன்பின் ஷாகிப் அல் ஹசன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த நினைக்கும்போது ஜடேஜா பந்தில் 17 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இலங்கைக்கு எதிராக சதம் அடித்த முஷ்பிகுர் ரஹிமை 21 ரன்னிலும், முமகது மிதுனை 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஜடேஜா வெளியேற்ற வங்காள தேசம் 65 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்து திணறியது.

    6-வது விக்கெட்டுக்கு மெஹ்முதுல்லா உடன் மொசாடெக் ஹுசைன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி வருகிறது. வங்காள தேசம் 25 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வங்காள தேசத்திற்கு எதிராக இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #AsiaCup2018 #INDvBAN #PAKvAFG
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தது. ‘ஏ’ பிரிவில் இந்தியா முதல் இடத்தையும், பாகிஸ்தான் 2-வது இடத்தையும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தையும், வங்காள தேசம் 2-வது இடத்தையும் பிடித்தன.

    இன்று சூப்பர் 4 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் இந்தியா - வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான டாஸ் 4.30 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். ஹர்திக் பாண்டியாவிற்குப் பதிலாக ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.



    அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள அக்சார் பட்டேல், ஷர்துல் தாகூருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் ஜடேஜா, சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்று விளையாடும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இந்தியா நேற்று பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சூப்பர் 4 பிரிவில் வங்காள தேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை இந்தியா எதிர்கொள்கிறது. இதில் சிறப்பாக செயல்பட்டால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

    இந்திய அணியில் ஷர்துல் தாகூர், அக்சார் பட்டேல் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். தற்போது ஷர்துல் தாகூருக்கு இடுப்பு பகுதியிலும், அக்சார் பட்டேலுக்கு கை பெருவிரலிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இதனால் இருவருக்கும் பதிலாக சித்தார்த் கவுல் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் உடனடியாக துபாய் சென்று அணியில் இணைய இருக்கிறார்கள்.

    ஏற்கனவே ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தீபக் சாஹர் அணியில் சேர்க்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடருக்கான சவுராஷ்டிரா அணியில் புஜாரா, ஜடேஜா இடம்பிடித்துள்ளனர். #Pujara #Jadeja
    இந்தியாவின் முதன்மையான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடராக விஜய் ஹசாரே டிராபி கருதப்படுகிறது. ரஞ்சி டிராபியில் விளையாடும் அணிகள் இதில் பங்கேற்று விளையாடும். இந்த தொடர் வரும் 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    இதற்கான சவுடிராஷ்டிரா அணியில் புஜாரா, ஜடேஜா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இருவரும் இந்திய ஒருநாள் அணியில் சமீப காலமாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



    சவுராஷ்டிரா தனது முதல் ஆட்டத்தில் 19-ந்தேதி உத்தர பிரதேசத்தை எதிர்கொள்கிறது. அக்டோபர் 4-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் தொடங்குவதால் இருவரும் தொடரின் முதல் பாதி ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்பார்கள்.
    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் ஜடேஜா பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு தனது திறமையை வெளிபடுத்தி உள்ளார். #ENGvIND #Jadeja
    லண்டன்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 332 ரன் குவித்து 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து இருந்தது.

    நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 292 ரன் எடுத்து ‘ஆல்அவுட்’ ஆனது. இது இங்கிலாந்தின் ஸ்கோரைவிட 40 ரன் குறைவாகும்.

    ரவிந்திரஜடேஜா 86 ரன்னும், புதுமுக வீரர் ஹனுமா விஹாரி 56 ரன்னும் எடுத்தனர். ஆண்டர்சன், பென்ஸ்டோக்ஸ், மொய்ன்அலி தலா 2 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட், ஆதில் ரஷீத், குர்ரான் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    40 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன் எடுத்து இருந்தது. அந்த அணி தற்போது 154 ரன் முன்னிலை பெற்றுள்ளது. கைவசம் 8 விக்கெட் இருக்கிறது.

    இந்த டெஸ்டில் ரவிந்திர ஜடேஜா ஏற்கனவே பந்து வீச்சில் சாதித்து இருந்தார். அவர் 4 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதேபோல பேட்டிங்கிலும் ஜடேஜா முத்திரை பதித்தார்.



    8-வது வீரராக களம் இறங்கிய அவர் 80 ரன்கள் எடுத்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார். அவர் 156 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி, 1 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மேலும் இங்கிலாந்தின் 2-வது இன்னிங்சில் 1 விக்கெட் கைப்பற்றினார்.

    ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜா இந்த டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டார். முதல் 4 டெஸ்டில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த டெஸ்டில் கிடைத்த வாய்ப்பை ஜடேஜா பயன்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்தினார். #ENGvIND #Jadeja
    புதுமுக வீரர் ஹனுமா விஹாரி, ஜடேஜா ஆகியோரின் அரைசதங்களால் இந்தியா முதல் இன்னிங்சில் 292 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 332 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்திருந்தது. ஹனுமா விஹாரி 25 ரன்னுடனும், ஜடேஜா 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஹனுமா விஹாரி 104 பந்தில் அரைசதத்தை தொட்டார். அறிமுக போட்டியிலேயே, கடுமையான ஸ்விங் பந்தை எதிர்த்து சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து விளையாடிய அவர் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஜடேஜே உடன் இஷாந்த் ஷர்மா ஜோடி சேர்ந்தார். இந்தியா 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் சேர்த்திருந்தது. ஜடேஜா 41 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இஷாந்த் ஷர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமி 1 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் விளையாடிய ஜடேஜா அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    95 ஓவரில் 292 ரன்கள் எடுத்திருக்கும்போது பும்ரா ரன்அவுட் ஆக, இந்தியா ஆல்அவுட் ஆனது. ஜடேஜா 86 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தற்போது வரை இந்தியா 40 ரன்கள் பின்தங்கியுள்ளது.
    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்தியாவின் புதுமுக வீரர் ஹனுமா விஹாரி அரைசதம் அடித்தார். ஜடேஜா போராடுகிறார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 332 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்திருந்தது. ஹனுமா விஹாரி 25 ரன்னுடனும், ஜடேஜா 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆண்டர்சன், பிராட், பென் ஸ்டோக்ஸ் ஸ்விங் பந்தை திறமையாக எதிர்கொண்டு விளையாடினார்கள். ஹனுமா விஹாரி 104 பந்தில் அரைசதத்தை தொட்டார். அறிமுக போட்டியிலேயே, கடுமையான ஸ்விங் பந்தை எதிர்த்து சிறப்பாக விளையாடினார்.

    தொடர்ந்து விளையாடிய விஹாரி மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் மொயீன் அலி பந்தில் ஆட்டமிழந்தார். ஹனுமா விஹாரி - ஜடேஜா ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் குவித்தனர்.



    அடுத்து இஷாந்த் ஷர்மா களம் இறங்கினார். இவர் ஜடேஜாவுடன் இணைந்து மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டார். இந்தியா 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் சேர்த்துள்ளது.

    ஜடேஜா 41 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா முதல் இன்னிங்சில் 92 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
    இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 198 ரன் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம் என்று ஜடேஜா கூறியுள்ளார். #ENGvIND

    லண்டன்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஹர்த்திக் பாண்ட்யா, அஸ்வின் ஆகியோருக்கு பதிலாக புதுமுக வீரர் ஹனுமா விஹாரி, ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தனது கடைசி டெஸ்டில் விளையாடும் தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான குக்குக்கு அனைத்து வீரர்களும் மரியாதை செய்தனர்.

    நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்து இருந்தது. குக் 71 ரன்னும், மொய்ன் அலி 50 ரன்னும் எடுத்தனர். பட்லர் 11 ரன்னும், ஆதில் ரஷீத் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

    இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும், பும்ரா, ரவிந்திரஜடேஜா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 133 ரன் என்ற வலுவான நிலையில் இருந்தது. இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் 48 ரன்னில் 5 விக்கெட்டை இழந்தது.

    நேற்றைய ஆட்டம் குறித்து ஜடேஜா கூறியதாவது:-

     



    எங்களது பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குக்கும், மொய்ன்அலியும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பவுண்டரிகளை விட்டுக் கொடுக்கக்கூடாது என்பது எங்களது திட்டமாக இருந்தது. 2-வது செசனில் நாங்கள் எந்த விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. ஆனால் ரன்களையும் வாரி கொடுக்கவில்லை. இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

    ஆடுகளம் சமமான நிலையில் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்தது. நேரம் செல்ல செல்ல ஆடுகளத்தில் லேசான மாற்றம் இருந்தது. இதை பயன்படுத்தி வேகப்பந்து வீர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 3 வேகப்பந்து வீரர்களும் அபாரமாக பந்து வீசினார்கள்.

    பந்துவீச்சில் என்னால் நேர்த்தியாக செயல்பட முடிந்தது. இதேபோல பேட்டிங்கிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் 4 டெஸ்டிலும் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அஸ்வின் காயம் அடைந்ததால் 5-வது டெஸ்டில் வாய்ப்பை பெற்றார். அவர் ஜென்னிங்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் முக்கிய விக்கெட்டை கைப்பற்றினார்.

    இதற்கிடையே இந்த டெஸ்டில் கருண்நாயரை சேர்க்காதது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    வீரர்கள் தேர்வு குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ஆகாஷ் சோப்ரா, பத்ரிநாத், வர்ணனையாளர் ஹர்ஷா போகலே உள்ளிட் டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக கருண்நாயர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதுமுக வீரர் ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. #ENGvIND

    லண்டன் ஓவல் டெஸ்டில் அலஸ்டைர் குக், மொயீன் அலி நிதான ஆட்டத்தால் இங்கிலாந்து தேனீர் இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. இந்திய அணியில் ஹனுமா விஹாரி அறிமுகமானர். இந்திய அணியில் அறிமுகமாகும் 292-வது டெஸ்ட் வீரர் இவராவார். ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகியோர் நீக்கப்பட்டனர். அஸ்வினுக்குப் பதிலாக ஜடேஜா இடம்பிடித்தார்.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலஸ்டைர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினார்கள். அணியின் எண்ணிக்கை 60 ஆக இருந்தபோது, ஜென்னிங்சை வெளியேற்றினார் ரவீந்திர ஜடேஜா. ஜென்னிங்ஸ் 23 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து மொயீன் அலி களமிறங்கினார். இந்த ஜோடி மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.



    உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்திருந்தது. அலஸ்டைர் குக் 37 ரன்னுடனும், மொயின் அலி 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. இஷாந்த் ஷர்மா, பும்ரா ஆகியோர் பந்து வீச்சை தொடங்கினார்கள். இருவரும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். இஷாந்த் ஷர்மா பந்தில் குக் கொடுத்த கேட்சை ரகானே பிடிக்க தவறினார். அடுத்த 2-வது பந்தில் பும்ரா வீசிய பந்தில் மொயீன் அலி அடித்த பந்தை விராட் கோலி பிடிக்க தவறினார்.



    கண்டத்தில் இருந்து தப்பிய இருவரும் அதன்பின் நிலைத்து விளையாட தொடங்கினார்கள். அலஸ்டைர் குக் 139 பந்தில் அரைசதம் அடித்தார். இருவரும் தேனீர் இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இங்கிலாந்து அணி முதல் நாள் தேனீர் இடைவேளை வரை 59 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. அலஸ்டைர் குக் 66 ரன்னுடனும், மொயீன் அலி 23 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    லண்டன் ஓவல் டெஸ்டில் இந்தியா பேட்டிங் செய்கிறது. 292-வது வீரராக ஹனுமா விஹாரி அறிமுகமாகியுள்ளார். ஹர்திக் பாண்டியா இல்லை #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. இந்திய அணியில் ஹனுமா விஹாரி அறிமுகமாகியுள்ளார். இந்திய அணியில் அறிமுகமாகும் 292-வது டெஸ்ட் வீரர் இவராவார்.



    ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டு ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் அஸ்வின் நீக்கப்பட்டு ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.
    இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்தியா அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருடன் விளையாட வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டிலும் இந்தியா தோல்வியடைந்தது. டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    தற்போது முடிந்துள்ள 3 டெஸ்டில் இந்தியா 1-2 என பின்தங்கியுள்ளது. இந்நிலையில் 4-வது டெஸ்ட் நாளைமறுநாள் (30-ந்தேதி) சவுதாம்ப்டனில் தொடங்குகிறது. இந்த ஆடுகளம் சற்று பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா இரண்டு அஸ்வின், ஜடேஜா ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வேண்டும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘நான்காவது டெஸ்டில் ரவீந்திர ஜடேஜா அஸ்வின் உடன் இணைந்து விளையாட வேண்டும். தலைசிறந்த இவர்களால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடியும்.

    அஸ்வின் உடற்தகுதி பெறாவிடில், ஒரு சுழற்பந்து வீச்சுடன் விளையாடினால் அது இந்தியாவிற்கு சிக்கலானதாக இருக்கும். இந்தியா இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும். அஸ்வின் உடற்தகுதி பெற வாழ்த்துகிறேன். இரண்டு பேருடன் களம் இறங்க வேண்டும். இரண்டு பேரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். அது இந்தியாவிற்கு அதிக வலுவூட்டும்’’ என்றார்.
    ×