search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷால்"

    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் `சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில், நடிகை வரலட்சுமி தனது டப்பிங்கில் முதல் பாதியை முடித்துள்ளார். #Sandakozhi2 #VaralakshmiSarathKumar
    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் `சண்டக்கோழி-2' உருவாகி வருகிறது. விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில், நடிகை வரலட்சுமி படத்தின் முதல் பாதிக்கான தனது டப்பிங்கை முடித்துவிட்டதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கிடையே யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்தில் இருந்து கம்பத்து பொண்ணு என்ற பாடல் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    விஷாலின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரித்துள்ளார்.

    ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. #Sandakozhi2 #Vishal #KeerthySuresh #VaralakshmiSarathKumar

    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்திசுரேஷ், வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் சண்டக்கோழி-2 படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், மொத்த படக்குழுவுக்கும் விஷால், லிங்குசாமி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர். #Sandakozhi2 #Vishal
    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் `சண்டக்கோழி-2' படம் உருவாகி வருகிறது. விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன் படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் படக்குழுவினருக்கு தங்க நாணயம் வழங்கினார். அதைத் தொடர்ந்து நாயகன் விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி ஆகியோர், தனித்தனியாக படக்குழுவினர் 150 பேருக்கு தலா ஒரு தங்க நாணயத்தை பரிசாக வழங்கியதுடன், அனைவருக்கும் விருந்தளித்து படக்குழுவினரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளனர். 



    விஷாலின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளியாகிய `செங்கரட்டான் பாறையில' என்ற பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 



    ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. #Sandakozhi2 #Vishal #KeerthySuresh

    செங்கரட்டான் பாறையில பாடல் வீடியோ:


    சண்டக்கோழி படத்தை அடுத்து விஷால் அடுத்ததாக நடிக்க இருக்கும் ‘அயோக்யா’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. #Vishal #Ayogya
    விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சண்டக்கோழி 2’. லிங்குசாமி இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் 18ம் தேதி வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், விஷாலின் அடுத்த படம் இன்று தொடங்கியுள்ளது. லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு ‘அயோக்யா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கி உள்ளது.
     
    வெங்கட் மோகன் இயக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். மேலும் பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.



    இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் தயாரிப்பாளர் ஜிகே.ரெட்டி, கலைப்புலி எஸ்.தாணு, ரவி பிரசாத், கே.எஸ்.ரவிக்குமார், காட்ராகட்ட பிரசாத், கிருஷ்ணா ரெட்டி, இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
    விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் சண்டக்கோழி 2 திரைப்படம் வெளியாகும் நாளிற்கு ஒரு நாள் முன்னதாகவே தனுஷ் களமிறங்க இருக்கிறார். #Dhanush #VadaChennai
    விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘சண்டக்கோழி 2’. லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இப்படத்தை ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், தனுஷின் ‘வடசென்னை’ திரைப்படம் ஒருநாள் முன்னதாக அக்டோபர் 17ம் வெளியிட இருக்கிறார்கள்.



    வடசென்னை படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதில் தனுஷுடன், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
    நாசர் தலைமையினான அணி நடிகர் சங்கத்தினை நிர்வகித்து வரும் நிலையில், நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படுவதால் நடிகர் சங்கத் தேர்தல் 6 மாதம் தள்ளிவைக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #NadigarSangamMeet
    சென்னை:

    தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார்.

    பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி, நடிகை ஸ்ரீதேவி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் பொதுக்குழுவில் விஷால் பேசியதாவது:-

    ‘நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 19 கிரவுண்ட் நிலத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த இடத்தை ரூ.26 ஆயிரத்துக்கு வாங்கினார்கள். இப்போது அதன் மதிப்பு ரூ.150 கோடியில் இருந்து ரூ.200 கோடி வரை இருக்கும். கட்டிடம் கட்டுவதை எதிர்த்து பல தடைகள் ஏற்படுத்தினார்கள். கோர்ட்டுக்கு சென்றார்கள். அதையெல்லாம் மீறி கட்டிட வேலைகள் நடந்து வருகின்றன. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆத்மா நமக்கு துணையாக இருக்கிறது.



    நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு தான் எனது திருமணம் நடைபெறும். வேங்கட மங்கலத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தை விற்றது தொடர்பாக முந்தையை நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு விஷால் பேசினார்.

    கூட்டம் முடிந்ததும் நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    ‘நடிகர் சங்க பொறுப்பில் 3 வருடங்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளோம். உறுப்பினர்களுக்கு பல நலப்பணிகள் செய்துள்ளோம். வாக்குறுதி அளித்தபடி சங்க கட்டிடத்தையும் கட்டி வருகிறோம். உறுப்பினர்கள் பட்டியலில் உள்ள குறைகளை சரி செய்வதற்காக நடிகர் சங்க தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று 10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சங்கத்துக்கு கடிதம் கொடுத்துள்ளனர். எனவே தேர்தலை 6 மாதத்துக்கு தள்ளிவைத்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.



    அனைத்து உறுப்பினர்களுமே தேர்தலை தள்ளி வைக்க ஆதரவு தெரிவித்தனர். அடுத்த மார்ச் மாதம் கட்டிட வேலைகளை முடித்து திறப்பு விழா நடத்த முடிவு செய்துள்ளோம். நடிகர் சங்க தேர்தலும் புதிய கட்டிடத்திலேயே நடைபெறும். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க மேலும் ரூ.20 கோடி தேவைப்படுகிறது. எனவே நட்சத்திர கலைநிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். சர்வதேச தரத்தில் இந்த கட்டிடமும் அரங்குகளும் கட்டப்பட்டு வருகிறது என்றார்கள். 

    பொதுக்குழுவில் நடிகர்கள் விஜயகுமார், பாக்யராஜ், எஸ்.வி.சேகர், விஜய்சேதுபதி, ஜீவா, ஐசரி கணேஷ், பூச்சி முருகன், நந்தா, ஸ்ரீமன், கே.ராஜன், சரவணன், உதயா, ஆனந்தராஜ், நடிகைகள் லதா, சரோஜா தேவி, பூர்ணிமா, சச்சு, காஞ்சனா, சோனியா, சங்கீதா, குட்டி பத்மினி, ஷீலா, ரோகிணி, கோவை சரளா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். #NadigarSangamMeet #Vishal #Nasser

    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்திசுரேஷ், வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் சண்டக்கோழி-2 படத்தின் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Sandakozhi2 #Vishal #KeerthySuresh
    விஷால் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்தில் நடித்து வருகிறார். விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

    விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 
    விஷாலின் 25-வது படமாக இந்த படம் உருவாகி வருகிறது. படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அக்டோபர் 18-ல் ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக படத்தின் முதல் சிங்கிள் வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Sandakozhi2 #Vishal #KeerthySuresh

    தொடர் மழையால் பாதிக்கப்பட்டு வரும் கேரளா மாநிலத்திற்கு நடிகர் விஷால், ரூ.10 லட்சம் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். #Vishal
    கடந்த சில நாட்களாக கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலம் வெள்ளத்தாலும், மழை, மண் சரிவினாலும் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை மிகவும் துயர்த்துக்குள்ளாகியுள்ளது. வரலாறு காணாத இயற்கை சீற்றத்தை சந்தித்து வரும் அம்மாநில மக்களுக்கு தமிழ் திரை உலகம் நேசக்கரம் கொடுத்து உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    தென்னிந்திய நடிகர் சங்கம், நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி நடிகை ரோஹிணி ஆகியோர் ஏற்கனவே நிதி உதவிகள் அளித்துள்ளனர். இந்நிலையில் மதுரையில் படப்பிடிப்பில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுசெயலாளருமான நடிகர் விஷால் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குகிறார். 

    மேலும் அவர் திரைத்துறையினரிடமும், ரசிகர்களிடமும், மக்களிடமும் இயற்கையின் சோதனைகளை சந்தித்து துயரபட்டுக்கொண்டிருக்கும் நமது சகோதரர்களான கேரளா மாநில மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை அளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
    நடிகர் சங்கம் சார்பில் நடக்கும் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் கலந்துக் கொண்ட விஷால், நடிகர் சங்க கட்டிடத்தில் கருணாநிதியின் பேனாவை வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். #KalaignarKarunanidhi #Vishal
    மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் காமராஜர் அரங்கில் நடந்து வருகிறது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்று கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நினைவேந்தல் கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டுள்ளார்.

    இதில் விஷால் பேசும்போது, ‘புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டடத்தில் கருணாநிதி பயன்படுத்திய பேனாவை வைக்க வேண்டும். அது அடுத்த தலைமுறை கலைஞர்களுக்கு கருணாநிதியின் புகழை எடுத்துச் செல்லும்’ என்றார்.

    நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது, ‘பராசக்தி படம் மட்டும் வராமல் இருந்தால், தமிழ் சினிமா 20 ஆண்டுகள் பின்நோக்கி சென்றிருக்கும்’ என்றார். 
    கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படத்தின் படக்குழுவினருக்கு பரிசளித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். #KeerthySuresh
    நடிகையர் திலகம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சண்டக்கோழி 2’. இதில் விஷால் நாயகனாக நடித்துள்ளார். லிங்குசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. கீர்த்தி சுரேஷ் சம்மந்தப்பட்ட காட்சிகள் நேற்றோடு நிறைவு பெற்றது.

    எப்போதும் படப்பிடிப்பு நிறைவடைந்தால் எல்லோரும் கேக் வெட்டி, செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் கீர்த்தி சுரேஷ் செய்த செயல் படக்குழுவினர் 150 பேரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நாயகி கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் 1 கிராம் கோல்ட் காயின் வழங்கியுள்ளார். தன்னுடைய படக்குழுவை மிகவும் நேசித்து கீர்த்தி வழங்கிய பரிசு படக்குழுவினர் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது. 



    விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. அக்டோபர் மாதம் 18-ம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக இந்தப் படம் ரிலீஸாகிறது.
    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஷால் மெரினா என்று வந்துவிட்டால் எப்போதுமே நீதி வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    கருணாநிதி உடலுக்கு இன்று காலை ராஜாஜி அரங்குக்கு நேரில் சென்று நடிகர் விஷால் அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது ட்விட்டர் பக்கத்தில், 

    நல்லது, மெரினா என்று வந்துவிட்டால் எப்போதுமே நீதி வெல்லும்... இப்படியாக ஒரு மைல்கல் தீர்ப்பை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு மனமார்ந்த நன்றிகள்... மெரினா கலைஞர் ஐயாவுக்கான இடம் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

    மெரினாவில் கருணாநிதிக்கு இடமளிக்க தமிழக அரசு மறுத்த நிலையில், மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar
    தமிழில் கதாநாயகர்களாக நடித்து பெயர் பெற்றவர்கள் சிலர், தற்போது தயாரிப்பாளர்களாக மாறி தடுமாறி வருகிறார்கள். #Dhanush #Arya #Vishal #Atharvaa
    தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகர்களுக்கு ஒருசில படங்கள் வெற்றி பெற்றாலே சொந்த படம் தயாரிக்கும் ஆசை வந்துவிடுகிறது. ஆனால் அப்படி சொந்த படத்தில் காலடி வைப்பவர்கள் சரியான கதையை தேர்ந்தெடுக்காமல் தயாரிப்பதால் படங்கள் தோல்வி அடைந்து நஷ்டத்துக்குள்ளாகிறார்கள். சமீபத்தில் அதர்வா நடித்து தயாரித்த செம போத ஆகாதே படம் தோல்வி அடைந்தது. இனி தயாரிப்பில் ஈடுபடவே மாட்டேன் என்று அதர்வா கூறிவிட்டார்.

    ஆர்யா தயாரித்த வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, கடம்பன் ஆகிய படங்கள் சரியாக போகாததால் அவர் தயாரிப்பை சிலகாலம் ஒதுக்கி வைத்து இருக்கிறார். விஜய்சேதுபதி தயாரித்து சமீபத்தில் வெளியான ஜுங்கா படத்தாலும் இழப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    விஷால் தயாரித்து நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தன. இரும்புத்திரை படம் தான் காப்பாற்றியது. தனுஷ் தயாரித்த அம்மா கணக்கு, படம் பெரிதாக போகவில்லை. விஜய் ஆண்டனிக்கும் சில படங்கள் அடி. எனவே கதாநாயகர்கள் தயாரிப்பில் இறங்குவதற்கு யோசிக்கிறார்கள்.



    மூத்த தயாரிப்பாளர் ஒருவர், நடிப்பதற்கு கதை கேட்பது என்பது வேறு. தயாரிப்புக்கு கதை கேட்பது என்பது வேறு. சரியான கதைகளை தேர்ந்தெடுத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். நட்பு பார்த்து படங்கள் கொடுத்தால் இழப்பை தான் சந்திக்க நேரிடும்’ என்று எச்சரித்தார்.
    லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், டார்லிங் வருவுக்கு நன்றி என்று கூறியுள்ள விஷால் வரலட்சுமியை பாராட்டியுள்ளார். #Vishal #Sandakozhi2
    `இரும்புத்திரை' படத்தை தொடர்ந்து விஷால் தற்போது `சண்டக்கோழி-2' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், வரலட்சுமி அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து விஷால் தெரிவித்துள்ளதாவது,

    சண்டக்கோழி-2 படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டோம். இன்றுடன் வரலட்சுமி சரத்குமாரின் காட்சிகள் முடிந்துவிட்டது. இது சிறப்பானது. கிளைமேக்ஸ் சண்டைக்காட்சிகள் அதிரவைக்கும்படியாக வந்துள்ளன. டார்லிங்க வருவுக்கு நன்றி. நான் பார்த்த சிறந்த தொழில் தெரிந்த நடிகை. அக்டோபர் 18-க்காக காத்திருப்போம்.

    இவ்வாறு கூறியுள்ளார். 

    விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷாலின் 25-வது படமாக இந்த படம் உருவாகி வருகிறது. படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அக்டோபர் 18-ல் ரிலீசாக இருக்கிறது. 

    ×