search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷால்"

    `சண்டக்கோழி-2' படத்தில் விஷால் பிசியாகி இருக்கும் நிலையில், விஷாலின் அடுத்த படத்தை `ரோமியோ ஜூலியட்', `போகன்' படங்களை இயக்கிய லஷ்மண் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Vishal #Lakshman
    விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான இரும்புத்திரை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், விஷால் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்தில் நடித்து வருகிறார். 

    இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர். ராஜ்கிரண், சூரி, மாரிமுத்து, ஹரிஷ் பேரடி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற அக்டோபர் 18-ல் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், விஷால் அடுத்ததாக `ரோமியோ ஜூலியட்', `போகன்' படங்களை இயக்கிய லஷ்மண் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதுமட்டுமின்றி விஷால் அடுத்ததாக தெலுங்கில் வெளியாகி மெகாஹிட்டான `டெம்பர்' படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குநராக பணியாற்றிய வெங்கட் மோகன் இந்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Vishal #Lakshman

    தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இருக்கும் பலர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார்கள். #Arya #STR
    தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் பலர் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள். 30 வயதானாலே கதாநாயகிகள் திருமணம் பற்றி யோசிக்கிறார்கள்.

    ஆனால் கதாநாயகர்கள் 35 வயதை தாண்டியும்கூட திருமணம் பற்றி யோசிக்காமல் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் நடிகர் ஆர்யா பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் வந்துவிட்ட நிலையிலும் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சில் பெண் தேடியும் செட்ஆகவில்லை.



    ஆனால் அதற்குள் அவர் தம்பி காதல் திருமணம் செய்துகொண்டார். அவரது நண்பர் விஷாலும் நடிகர் சங்க கட்டிடம் கட்டிவிட்டு திருமணம் என்று கூறி வருகிறார். அஞ்சலியுடன் கிசுகிசுக்கள் வந்தாலும், ஜெய் திருமணம் பற்றி வாயே திறப்பதில்லை. இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இவர்களுக்கு எல்லாம் சீனியர். இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். 

    இவர்கள் தவிர சிம்பு, அதர்வா, கவுதம் கார்த்திக் என இளம் கதாநாயகர்கள் இன்னமும் திருமணம் செய்யாமலேயே இருக்கின்றனர். #Arya #STR
    தெலுங்கு சினிமாவை தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். #Karthi #SriReddy
    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். சொந்த பந்தங்களின் ஒற்றுமை, விவசாயத்தின் முக்கியத்துவத்தை கருவாக கொண்டு படம் உருவாகி இருக்கிறது.

    படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து, நடிகர் கார்த்தி மற்றும் படக்குழுவினர் ஒவ்வொரு ஊராக திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.

    நேற்று கார்த்தி, பாண்டிராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் புதுக்கோட்டை சென்றனர். அங்குள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்த ரசிகர்களை சந்தித்தனர்.  



    இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் கார்த்தி கூறியதாவது:-

    துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளது பெருமைக்குரியது. அதேபோல் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு என்று கவனம் செலுத்தி திட்டத்தை வகுக்க வேண்டும் என்று துணைக் குடியரசுத் தலைவர் கடிதம் எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது.

    ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டு குறித்து கேட்ட போது, ஸ்ரீரெட்டி கூறும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது. நடிகர் சங்க உறுப்பினர்கள் யாராவது ஸ்ரீரெட்டி மீது புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். #KadaikuttySingam #Karthi #SriReddy

    திரைத்துறை பிரபலங்கள் பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்திக் கொண்டாதாக குற்றம்சாட்டியுள்ள நடிகை ஸ்ரீரெட்டி, தனது பட்டியலில் மேலும் சிலர் இருப்பதாக கூறியுள்ளார். #SriReddy #SriLeaks #TamilLeaks
    சென்னை:

    தெலுங்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் திரைத்துறையில் சிலர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு வாய்ப்பு தராமல் ஏமாற்றியதாக கூறி வருகிறார். தனது முகநூல் பக்கத்தில் தமிழ் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் பெயரை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    இன்று வெளியிட்டுள்ள பதிவில், விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், ஆனாலும் கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் தந்தி டிவிக்கு  அளித்த பேட்டியில் ஸ்ரீ ரெட்டி கூறியதாவது:-

    நடிகர்கள் பற்றி நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். இது தென்னிந்திய திரையுலகிற்கே அவமானம். சில முக்கிய நபர்கள் உண்மையை மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள். இதோடு முடிந்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். நியாயம் கிடைப்பதற்கான முயற்சி எடுக்க அவர்கள் முன்வரவில்லை.



    சினிமா துறை மட்டுமல்ல, 90 சதவீத பெண்கள் இந்த பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். சினிமாத் துறையில், சின்ன சின்ன உடைகளை பெண்கள் அணிந்து நடிக்க வேண்டும் என்கிறார்கள். சினிமாவில் பெண்களை கவர்ச்சி பொருளாகவே ஆண்கள் பார்க்கிறார்கள். பாலியல் ஆதாயத்தில் மட்டுமே சிலர் கவனம் செலுத்துவது ஏன் என தெரியவில்லை. கதையில் கவனம் செலுத்தினால், படங்கள் நன்றாக ஓடும்.

    கேள்வி - மேலும் யாருடைய பெயர்களையாவது வெளியிட நீங்கள் திட்டமிட்டிருக்கிறார்களா?

    பதில்- ஆம், எனது பட்டியலில் மேலும் சிலர் இருக்கிறார்கள்.

    இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறினார். #SriReddy #SriLeaks #TamilLeaks

    தமிழ் திரையுலகில் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றியவர்கள் பட்டியலை வெளியிட்டு வரும் ஸ்ரீ ரெட்டி, தனக்கு விஷால் மிரட்டல் விடுத்திருப்பதாக கூறியிருக்கிறார். #SriReddy #Vishal
    சென்னை:

    தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளைப் படுக்கைக்கு அழைப்பதாக தொடர்ச்சியாக புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருப்பதாக அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் தமிழ் சினிமா உலகிலும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு, வாய்ப்பு அளிக்காதவர்களின் பட்டியலை வெளியிடப்போவதாக கூறியிருந்தார்.

    அதன்படி, தமிழ்லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ஸ்ரீரெட்டி. அவரது முகநூல் பக்கத்தில், தமிழ் பட இயக்குனர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பெயரை வெளியிட்டு தமிழ் திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்தார். அந்த வரிசையில் நேற்று ராகவா லாரன்சையும் இணைத்துள்ளார்.

    மூன்று முக்கிய நபர்களின் பெயர்களை ஸ்ரீ ரெட்டி அம்பலப்படுத்தியது, தமிழ் திரையுலகை கதிகலங்கச் செய்துள்ளது. இன்னும் எத்தனை பேர் ஸ்ரீரெட்டியின் பட்டியலில் வருவார்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது.



    இந்நிலையில், ஸ்ரீ ரெட்டி தனது அடுத்த பதிவை இன்று வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாக கூறியுள்ளார். ஆனாலும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். #SriReddy #SriLeaks #TamilLeaks #Vishal

    நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், தனது படத்தை ஆயுத பூஜை தினத்தில் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார். #Vishal #Sandakozhi2
    `இரும்புத்திரை' படத்திற்குப் பிறகு விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சண்டக்கோழி 2’. லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. 

    இதில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிக்கிறார். மேலும் ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரித்திருக்கிறார்.

    இந்நிலையில், இப்படத்தை ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18ம் தேதி வெளியிட இருப்பதாக விஷால் அறித்துள்ளார். மேலும் இப்படத்தின் சிங்கிள் டிராக்கை விரைவில் வெளியிட இருப்பதாகவும் கூறியிருக்கிறார். 



    இப்படத்தின் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது. #Vishal #Sandakozhi2
    அரசியலில் நடிகர்கள் ரஜினியும், கமல்ஹாசனும் இணைந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்று நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். #Rajini #Kamal #Vishal
    தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், ராஜ்கிரன், மீரா ஜாஸ்மின், மலையாள நடிகர் லால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த சண்டக்கோழி திரைப்படம் வெற்றி பெற்றது. தற்போது அதே கூட்டணியில் மீண்டும் சண்டக்கோழி-2 திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தின் காட்சிகள், திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள தனியார் தோட்டத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.

    படப்பிடிப்பின் இடையே நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- செவாலியர் சிவாஜிகணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது பற்றி உங்கள் கருத்து?

    பதில்:- மிக்க மகிழ்ச்சியான விஷயம். தமிழ்த்திரை உலகினருக்கு ஒவ்வொரு மாதமும் 2-ம் சனிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்துள்ளோம். அதுபோல செவாலியர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை தமிழ்த்திரை உலகின் விடுமுறை நாளாக அறிவிக்க உள்ளோம்.

    கேள்வி:- கமல்ஹாசன், ரஜினி அரசியல் பற்றி?

    விஷால்:- ரஜினியும், கமல்ஹாசனும் இணைந்து அரசியலில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும். வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் திரையுலகினரும், புதியவர்களும் அதிக அளவில் போட்டியிடுவார்கள்.



    கேள்வி:- திருட்டு வீடியோவை தடுப்பது குறித்து உங்கள் நடவடிக்கைகள் என்ன?

    விஷால்:- பல கோடி ரூபாய் செலவு செய்து ஒரு திரைப்படத்தை எடுக்கிறார்கள். பொதுமக்கள் திரையரங்குக்கு சென்று பார்த்தால் தான் அந்த பணத்தை தயாரிப்பாளர் எடுக்க முடியும். ஆனால் திருட்டு வீடியோ வெளியிடுவோர், அது தவறு என்று தெரிந்தும் அந்த தொழிலை செய்து வருகிறார்கள். விரைவில் இதற்கு நல்ல முடிவு ஏற்படும்.

    கேள்வி:- உங்கள் திரைப்படங்களில் நாடக நடிகர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கிறீர்களே ஏன்?

    பதில்:- அழிந்து வரும் கலையாக நாடகம் உள்ளது. திரைப்பட நடிகர்களின் ஆணிவேராக இருப்பவர்கள் நாடக நடிகர்களே. அதனால் தான் என்னுடைய திரைப்படங்களில் அப்பகுதியில் உள்ள நாடக நடிகர்களை பயன்படுத்தி வருகிறேன்.



    கேள்வி- உங்களின் திருமணம் எப்போது நடக்கும்?

    பதில்:- நான் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும்போது சொன்னது தான். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டிய பின்பு தான் எனது திருமணம். அதுபோல 2019-ம் ஆண்டு நடிகர் சங்க கட்டிடம் திறந்து முடித்தவுடன், எனது திருமணம் தமிழக மக்கள் ஆசியுடன் நடக்கும்.

    கேள்வி:- சண்டக்கோழி-2 படத்தின் சிறப்பு என்ன?

    பதில்:- லிங்குசாமியை பொறுத்தவரை குடும்பத்துடன் வந்து தன்னுடைய படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பக்கூடியவர். சண்டக்கோழி படம் தமிழகம் முழுவதும் உள்ள பட்டிதொட்டி கிராமங்களில் கூட எனது பெயர் தெரியும் அளவுக்கு மாபெரும் வெற்றியை தேடி கொடுத்தது. இப்போது 12 ஆண்டுகள் கழித்து, சண்டக்கோழி-2 படம் வெளிவருகிறது. சண்டக்கோழியை முதல் பாகத்தைவிட இந்த படம் எனக்கு அதிக அளவில் பெயர் பெற்றுக்கொடுக்கும் என எதிர்பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார். 
    சிவாஜியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு நடிகர் பிரபு, நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் நன்றி தெரிவித்து உள்ளனர். #SivajiGanesan
    எங்கள் குடும்பத்தின் கோரிக்கை என்பதைவிட தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இது. தமிழர்களின் வீடுகளில் ஒரு அப்பாவாக, ஒரு தாத்தாவாக, ஒரு அண்ணனாக குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்துகொண்டு இருக்க கூடியவர் எங்கள் தந்தை.

    அந்த வகையில் தமிழக ரசிகர்கள் சார்பாக இந்த அறிவிப்புக்கு முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர், செய்தித்துறை அமைச்சர் கட்ம்பூர்ராஜு உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார் பிரபு.

    தமிழ் சினிமாவின் அடையாளங்களில் முக்கியமானவர் சிவாஜி அவர்கள். காலத்தால் அவரது புகழ் மறைந்துவிடக்கூடாது என்பதற்காக அவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    இதற்காக முயற்சி எடுத்த தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், செய்தித்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று விஷால் கூறியுள்ளார்.
    சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நடிகர் விஷால் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். #Vishal
     சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட ராட்சத அலையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இன்று மேலும் 50 வீடுகள் ராட்சத அலையால் பாதிக்கப்பட்டுள்ளன.

    கடல் சீற்றத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நடிகர் விஷால் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ‘கடந்த சில நாட்களாகவே பகலில் அமைதியாக இருக்கும் கடல் இரவு நேரங்களில் சீற்றத்துடன் காணப்படுகிறது என்று சென்னை கடலோர மக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர்.

    தற்போது கடல் சீற்றத்தால் சீனிவாசபுரத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு அடைந்திருப்பது வேதனையை தருகிறது. இது தொடர்ச்சியாக நடக்கிறது. இந்த சம்பவம் பெரிய செய்தியான பின்னரும் கூட எந்த அதிகாரியும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்பது அதைவிட வேதனை.

    தமிழக அரசு இந்த வி‌ஷயத்தில் தேவையான நடவடிக்கைகளை உடனே எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் மேலும் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தரமான தமிழ் திரைப்படங்களுக்கு மானியம் வழங்கிய தமிழக அரசுக்கு தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் நன்றி தெரிவித்துள்ளார். #Vishal
    குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு மானியம் வழங்கும் வகையில் 10 தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலைகளை நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதற்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விஷால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சிறுபட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு 2007 முதல் 2014 வரை வெளியான குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட சமூக கருத்துள்ள திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு 20.06.2018 சென்னை தலைமை செயலகத்தில் ரூ.7 - லட்சம் மானியம் வழங்கி அவர்களை கௌவித்த மாண்புமிகு. தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், துணை முதல் அமைச்சர் திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கும் செய்தித்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் & அனைத்து அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறிப்பிட்டுள்ளார்.



    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான `இரும்புத்திரை' படத்தின் தெலுங்கு பதிப்பான `அபிமன்யுடு' படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு படக்குழுவை பாராட்டியுள்ளார். #Irumbuthirai Vishal
    சமீபகாலமாக தமிழ் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உருவாகி வருகிறது. சூர்யா, விஷால், கார்த்தி, விஜய் ஆண்டனி ஆகியோரது படங்கள் இரண்டு மொழிகளையும் குறி வைத்தே எடுக்கப்படுகின்றன. கடந்த மாதம் வெளியான விஷாலின் `இரும்புத்திரை' படத்திற்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்து. 

    அதேபோல `அபிமன்யுடு' என்ற பெயரில் தெலுங்கில் இந்த படம் வெளியானது. தெலுங்கு ரசிகர்களிடையேயும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், தெலுங்கில் நேரடியாக வெளியான படங்களைவிட `அபிமன்யுடு' படத்திற்கு நல்ல வசூல் கிடைத்திருப்பதாக தெலுங்க வட்டாரத்தில் பேசப்படுகிறது. 



    இந்த நிலையில், `அபிமன்யுடு' படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகஷே் பாபு படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இதுகுறித்து மகேஷ் பாபு அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

    `அபிமன்யுடு படத்தை பார்த்து வியந்தேன். பி.எஸ்.மித்ரன் தனது நோக்கத்தை திரையில் அறிவுப்பூர்வமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். விஷால் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்' இவ்வாறு கூறியிருக்கிறார். 

    இந்த படத்தில் அர்ஜுன், சமந்தா, ரோபோ சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். #Irumbuthirai Vishal

    விருது வழங்கும் விழாக்களில் கலந்து கொள்ள நடிகர் - நடிகைகளுக்கு, நடிகர் சங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. #NadigarSangam
    தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:- கடந்த காலங்களில் திரையுலகில் திரைப்பட விழாக்கள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகள் நடந்துள்ளன. அந்த நிகழ்ச்சிகளில் நடிகர்-நடிகைகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். ஆனால், சமீப காலங்களில், அது வியாபார நோக்கத்தில் நடத்தப்படுவதால், அந்த பயனை நடிகர்-நடிகைகளும் பெறவேண்டும் என்ற நோக்கத்தில், நடிகர் சங்கத்தின் சிறப்பு கூட்டத்தில், இதுபற்றி விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது.

    அன்று எடுத்த முடிவில் இனிமேல் இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகர்கள், இலவசமாகவோ அல்லது மரியாதைக்காகவோ கலந்துகொள்ள வேண்டாம். ஒன்று, அவர்கள் பணம் பெற்றுக்கொண்டு கலந்துகொள்ள வேண்டும். அல்லது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறக்கட்டளைக்கு பயன்படும் வகையில் பணம் கிடைப்பதை உறுதி செய்த பின், அந்த விழாவில் கலந்து கொள்ளலாம்.

    இந்த பணம் பல நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காகவே பயன்படும் என்பதாக ஒரு முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு பின் நடந்த தனியார் விழாக்களில் இந்த நடைமுறையில் பணம் பெற்று, கலைஞர்களும் கலந்துகொண்டார்கள். இதன் தொடர்ச்சியாக ஐதராபாத்தில் நடந்த ஒரு ஆங்கில பத்திரிகை விருது வழங்கும் நிகழ்ச்சிக்காகவும், அந்த நிறுவனத்திடம் அன்பளிப்பு தொகை பேசப்பட்டது. அதற்கு இன்று வரையிலும் எந்த பதிலும் வரவில்லை.

    இதை, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர்-நடிகைகளிடம் தெரிவித்தோம். அதில் பல நடிகர்-நடிகைகள் எங்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, விழாவினை தவிர்த்து இருக்கிறார்கள். சிலர் தவிர்க்க முடியாத காரணத்தினால், கலந்துகொண்டும் இருக்கிறார்கள்.

    நாங்கள் அனைவரின் உணர்வுகளை மதிக்கிறோம். இனி எதிர்காலத்தில் நாம் ஒற்றுமையுடன் இருந்து இதுபோன்ற பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதையும், நாம் ஒரு பொதுநோக்கோடு செயல்படுவதையும் உறுதி செய்யவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

    எனவே இனிமேல், தாங்கள், தொலைக்காட்சி, விருது வழங்கும் நிகழ்ச்சி போன்ற நிகழ்வுகளாக இருந்தாலும், ஒன்று நீங்கள் பொருளாதார ரீதியில் பயன்பெறுங்கள். இல்லையேல் தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளைக்கு அந்த பொருளாதாரத்தை நீங்கள் உறுதி செய்து கொடுத்தால், அது பல நலிந்த கலைஞர்களின் வாழ்க்கையில் விளக்கு ஏற்றும் விதமாக அமையும்.

    இதனை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் நலிந்த கலைஞர்களின் உணர்வுகளை மதித்து, இன்று (நேற்று) ஐதராபாத்தில் ஒரு ஆங்கில பத்திரிகையின் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளாத நடிகர்கள் கார்த்தி, விஜய்சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, குஷ்பு மற்றும் அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×