search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷால்"

    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ் - வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தின் விமர்சனம். #Sandakozhi2Review #Vishal #Varalakshmi
    தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பல ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் தடைப்பட்டுள்ளது. எப்படியாவது இந்த ஆண்டு திருவிழாவை நடத்தியாக வேண்டும் என்று ஊர்த்தலைவரான ராஜ்கிரன் முடிவு செய்கிறார்.

    7 வருட பகையை தீர்த்துக் கொள்ள விரும்பும் வரலட்சுமியின் குடும்பம், ராஜ்கிரன் பாதுகாப்பில் வளரும் ஜானி ஹரியை திருவிழாவில் வைத்து கொலை செய்ய திட்டமிடுகிறது. இந்த நிலையில் 7 வருடமாக ஊரில் இல்லாத நாயகன் விஷால் ஊர் திருவிழாவுக்காக கம்பம் வருகிறார். அங்கு போலீசாக வேண்டும் என்று முயற்சி செய்து வரும் கீர்த்தி சுரேஷுக்கும், விஷாலுக்கும் காதல் வருகிறது.



    கடைசியில், திருவிழாவில் நல்ல படியாக நடந்ததா? வரலட்சுமியின் குடும்ப பகை தீர்ந்ததா? விஷால் - கீர்த்தி சுரேஷ் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    விஷால் தனது வழக்கமான அதிரடியுடன் பஞ்ச் வசனங்களை பேசி ரசிகர்களை கவர்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் தனக்கே உரிய ஸ்டைலில் பட்டையை கிளப்புகிறார். காதல் காட்சிகளும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் முற்றிலும் மாறுபட்ட குறும்புத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.



    வரலட்சுமிக்கு அழுத்தமான கதாபாத்திரம், வில்லியாக வித்தியாசமான தோற்றத்தில் வந்து பாராட்டை பெறுகிறார். படத்தின் ஓட்டத்திற்கு, படத்தின் தூணாக நிற்கிறார் ராஜ்கிரன். அவரது கதாபாத்திரமே படத்திற்கு பெரிய பலம். சூரி, முனிஸ்காந்த், கஞ்சா கருப்பு காமெடிக்கு துணை நிற்கின்றனர். மற்றபடி அர்ஜய், ஹரிஷ் பேரடி, அப்பானி சரத், சண்முக ராஜன், தென்னவன் துரைசாமி, விஸ்வந்த் என மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்துக்கு பெரிதும் உதவுகின்றனர்.

    சண்டக்கோழி இரண்டாவது பாகத்தையும் பழிவாங்கல் கதையை மையப்படுத்தியே உருவாக்கி இருக்கிறார் லிங்குசாமி. இருப்பினும் முதல் பாகத்தை போலவே இதிலும் குடும்பம், காதல், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்தையும் தனது பாணியில் கலந்து கொடுத்திருக்கிறார்.



    யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம். பாடல்களும் கேட்கும் ரகமாகவே உள்ளது. கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக நகர்கிறது.

    மொத்தத்தில் `சண்டக்கோழி 2' சீற்றம். #Sandakozhi2Review #Vishal #Varalakshmi

    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தில் வில்லியாக நடித்துள்ள வரலட்சுமி, தான் பயங்கரமான தோற்றத்திற்கு மாற ராஜ்கிரண் தான் காரணம் என்று கூறினார். #Sandakozhi2 #Varalaksmi
    சண்டக்கோழி 2, சர்கார் என 2 படங்களில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வரலட்சுமி வில்லியாக நடிக்கிறார்.

    இதுகுறித்து கேட்டபோது ‘இரண்டு படங்களில் நாங்கள் இணைந்து நடித்தாலும் இரண்டிலுமே எங்களுக்கு இணைந்து தோன்றும் காட்சிகள் இல்லை. கீர்த்தி சுரேஷ் மிக சிறந்த நடிகை.

    இன்னும் பல உயரங்களை தொடுவார். சண்டக்கோழி 2 படத்தில் ராஜ்கிரணோடு நடித்தபோது அவர் என்னை பார்த்து உன்னை பார்த்தால் வில்லி மாதிரியே தோன்றவில்லை. கல்லூரி மாணவி போல இருக்கிறாய் என்றார். இதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சி ஆனது. எடையை கூட்டி பார்க்க பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன். #Sandakozhi2 #Varalaksmi

    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ் - வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தின் முன்னோட்டம். #Sandakozhi2 #Vishal #KeerthySuresh
    விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் மற்றும் பென் ஸ்டூடியோஸ் சார்பில் அக்‌ஷய், தவால், ஜெயந்திலால் கடா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சண்டக்கோழி 2'.

    விஷால் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா, கஞ்சா கறுப்பு, ராம்தாஸ், கபாலி விஷ்வந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மீரா ஜாஸ்மின் கவுரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

    இசை - யுவன் ஷங்கர் ராஜா, படத்தொகுப்பு - கே.எல்.பிரவீன், ஒளிப்பதிவு - கே.ஏ.சக்திவேல், கலை இயக்குனர் - வி.செல்வகுமார், சண்டைப்பயிற்சி - அனல் அரசு நடனம் - ராஜு சுந்தரம், தயாரிப்பு - விஷால், ஜெயந்திலால் கடா, தயாரிப்பு நிறுவனம் - விஷால் பிலிம் பேக்டரி, பென் ஸ்டூடியோஸ், திரைக்கதை - லிங்குசாமி, பிருந்தா சாரதி, வசனம் - எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்து, இயக்கம் - லிங்குசாமி.



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷால் பேசும் போது,

    25 படங்களில் என்னுடன் சேர்ந்து பயணம் செய்த அனைவருக்கும் நன்றி. சண்டக்கோழி எனக்காக எழுதப்பட்ட கதையில்லை. விஜய் அல்லது சூர்யாவுக்காக எழுதப்பட்டது. இந்த மாதிரி ஒரு கதை இருப்பதாக எனக்கு தெரியவந்து நான் தான் லிங்குசாமியிடம் சென்று கேட்டேன். அவர் என்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவா கொண்டு வந்து நிறுத்திவிட்டார். 24 படங்களை முடித்துவிட்டு 25-வதாக சண்டக்கோழி-2 படத்தில் நடித்திருக்கிறேன். கண்டிப்பாக இந்த படம் எனது வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும். கீர்த்தி உடன் நடித்ததில் பெருமை. 

    தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஒரு கோரிக்கையை வைக்கிறேன். படத்திற்கு விமர்சனம் செய்பவர்கள் தயவுசெய்து 3 நாட்களுக்கு பிறகு விமர்சியுங்கள். அப்போது தான் சிறிய படம் என்றாலும், பெரிய படம் என்றாலும் வரவேற்பு கிடைக்கும். 

    படம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Sandakozhi2 #Vishal

    சண்டக்கோழி 2 படத்தின் டீசர்:


    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிகர் கார்த்தியும் இணைந்து பணியாற்றி இருக்கிறார். #Vishal #Karthi #Sandakozhi2
    விஷால் நடிப்பில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘சண்டக்கோழி 2’. முதல் பாகத்தை இயக்கிய லிங்குசாமியே இதையும் இயக்கியுள்ளார்.

    அக்டோபர் 18-ந்தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தியும் இணைந்து பணியாற்றியுள்ளார். இதுகுறித்து இயக்குனர் லிங்குசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சண்டக்கோழி-2”வில் வாய்ஸ் ஓவர் கொடுத்ததற்காகவும் இப்படக்குழுவில் இணைந்தமைக்காகவும் கார்த்திக்கு எனது சிறப்பு நன்றிகள்” எனக் கூறியுள்ளார்.

    இந்தப் பதிவால் கார்த்தி ரசிகர்களும் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடிகர் கார்த்தி வெறும் வாய்ஸ் ஓவர் மட்டும்தான் கொடுத்திருக்கிறாரா அல்லது படத்திலும் நடித்திருக்கிறாரா எனும் விபரம் இனிமேல்தான் தெரியவரும்.

    லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி ‘பையா’ படத்தில் ஏற்கெனவே நடித்திருக்கிறார். விஷாலும் கார்த்தியும் இணைந்து பிரபுதேவா இயக்கத்தில் வெள்ளை ராஜா கறுப்பு ராஜா என்ற படத்தில் நடிக்க இருந்து அந்த படம் கைவிடப்பட்டது.
    நடிகைகள் பாலியல் தொடர்பு புகார் அளித்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நடிகர் சங்கத்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று நடிகை ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார். #MeToo #Sripriya #Vishal
    சேலம்:

    சேலத்தில் நடிகை ஸ்ரீபிரியா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகைகள் பாலியல் தொடர்பு புகார் அளித்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நடிகர் சங்கத்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. எந்த ஒரு புகார் என்றாலும் விசாரிக்கப்பட வேண்டும்.


    சின்மயி பொறுப்பானவர். தான்தோன்றித்தனமாக பேசக்கூடியவர் அல்ல. ஏன்? முன்பே அவர் சொல்லவில்லை என்பது இரண்டாம்பட்சம். இப்போதாவது வெளியானதே என்பது முக்கியம்.

    இதனால் வருங்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் குறையும். திரைத்துறை மட்டுமல்ல, எந்த இடத்தில் பெண்களுக்கு தொல்லைகள் நேர்ந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MeToo #Sripriya #Vishal
    மீடூ மூலம் வெளிச்சத்துக்கு வரும் நடிகைகளின் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அறிவித்துள்ளார். #MeToo #Vishal
    சென்னை:

    சமீபத்தில் இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து பாலியல் புகாரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.

    அவருக்கு பெண்கள் அமைப்பு, பெண் எழுத்தாளர்கள், பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர். தனுஸ்ரீ தத்தாவைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மேலும் பல பெண் பிரபலங்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளை வெளியிட முன்வந்தனர்.

    இதற்காக சமூக வலைதளத்தில் ‘மீ டூ’ ஹேஷ்டேக் தொடங்கப்பட்டது. அதில் பல பெண்கள் தெரிவித்த பாலியல் புகார்கள் வெளியிடப்பட்டன.


    முதலில் மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார்.

    தென்னிந்தியாவில் முதல் முறையாக பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் செய்தார். சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா மற்றும் சுவிட்சர்லாந்தில் நடந்த இசை நிகழ்ச்சி என பல இடங்களில் தனக்கு வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என்று தெரிவித்தார்.

    இதேபோல் மேலும் பல பாடகிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    சின்மயிக்கு நடிகைகள் சமந்தா, வரலட்சுமி, ஆன்ட்ரியா, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சித்தார்த் உள்பட பலர் ஆதரவு தெரிவித்தனர். நடிகர் கமல்ஹாசன், கனிமொழி எம்.பி. போன்றோரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து கருத்து வெளியிட்டனர்.

    பாடகி சின்மயிக்கு ஆதரவாக திரைத்துறையினர் குரல் கொடுக்க வேண்டும், அவர்கள் மவுனமாக இருப்பது ஏன் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி நடிகர் சங்க பொதுச்செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷாலிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-


    திரையுலகில் பாலியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகும் பெண்களுக்கு என்ன தீர்வு காணப்போகிறீர்கள்? என்ற கேள்வியை பலரும் முன் வைத்தனர். பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது கூறியிருக்கும் பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால், நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்படும்.

    தமிழ் திரையுலகில் மீ டூ விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்கென்றே 3 பேரை கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.

    ஜூனியர் கலைஞர்கள் முதல் மூத்த கலைஞர்கள் வரை புகார் செய்யலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். குழுவில் நடிகர்-நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரது பிரதிநிதிகள் தலா ஒருவர் இடம் பெறுவார்கள்.

    இவ்வாறு விஷால் கூறினார்.

    ஏற்கனவே ‘மீ டூ’வில் வரும் பாலியல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி அறிவித்து இருந்தார்.

    ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய 4 பேர் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று தெரிவித்து இருந்தார். தற்போது நடிகர் சங்கமும் குழு அமைக்க முடிவு செய்து இருப்பதன் மூலம் பாலியல் புகார்கள் விஸ்வரூபம் எடுக்கிறது.

    ஏற்கனவே ஆந்திராவில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது ஒட்டு மொத்தமாக பாலியல் குற்றச்சாட்டு கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். சினிமா வாய்ப்பு தருவதாக கூறி நடிகர்கள், இயக்குனர்கள் பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்தி ஏமாற்றி விட்டார்கள் என்றார்.

    அவர் ஐதராபாத்தில் அரைநிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #MeToo #Vishal
    பாலியல் தொல்லை பற்றிய மீ டூ இயக்கத்தில் பலரும் புகார் தெரிவித்து வரும் நிலையில், சின்மயி சொன்ன புகார்களில் உண்மை இருப்பது தெளிவாக தெரிகிறது என்று நடிகை வரலட்சுமி கூறினார். #MeToo #TimesUp #Varalakshmi
    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சண்டக்கோழி-2. படத்தில் நடிகை வரலட்சுமி வில்லியாக நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    எனக்கு கதாநாயகியாக மட்டுமே நடிப்பதில் ஆர்வம் இல்லை. வித்தியாசமான வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன். அப்படித் தான் சண்டக்கோழி-2, சர்கார் படங்கள் அமைந்தன.

    ‘மீ டூ’ இயக்கம் இப்போது தான் வந்துள்ளது. ஆனால் நான் போன வருடத்தில் இருந்தே இதை பற்றி பேசி வருகிறேன். சேவ்சக்தி என்ற அமைப்பையும் பெண்கள் பாதுகாப்புக்காக தொடங்கினேன்.



    பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அநியாயங்களை பேச தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரத்தில் இவ்வளவு நடந்திருக்கிறதா என்ற வருத்தமும் ஏற்படுகிறது.

    ஒரு பெண் சமூகத்தில் இருக்கும் நல்ல பெயரை பணயமாக வைத்து தான் தனக்கு நேர்ந்ததை பகிர்கிறார். எனவே அவரது வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். நாம் அவர்களை சந்தேகப்பட கூடாது.

    இது சினிமாவில் மட்டுமல்ல. உங்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு கூட நடந்திருக்கலாம். எனக்கு கூட நடந்திருக்கிறது. ஏன் இப்போது சொல்கிறீர்கள்? ஏன் அவரை சொல்கிறீர்கள்? என்ற கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. பெண்களுக்கு பல வி‌ஷயங்களில் தயக்கம் இருந்திருக்கலாம்.

    ஒரு பெண் இந்த அளவுக்கு தன்னை தாழ்த்திக்கொண்டு விளம்பரம் தேடுவாரா என்றும் பார்க்க வேண்டும். வரும் கதைகள் எல்லாம் முழு விபரங்களுடன் வருகிறது. சின்மயி சொன்ன புகார்களில் உண்மை இருப்பது தெளிவாக தெரிகிறது.



    பார்ப்பவர்கள் எல்லோரும் நல்லவர் அல்ல. நல்லவர் போல நடிப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எல்லாம் தெரிந்தும்கூட ஒன்றுமே தெரியாதவர்கள் போல நடிக்கிறார்கள். சின்மயிக்கு கூட மிகச் சிலரே ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

    அடுத்து வருபவர்களாவது பாதிப்பில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கிறோம்.

    இந்த புகார்களுக்காக மத்திய அரசு எல்லா மாநிலங்களிலுமே தனி கோர்ட்டு அமைத்திருக்கிறது.

    ப:- இல்லை. நான் நடித்தால் ஜெயலலிதா வேடத்தில் மட்டுமே நடிப்பேன். சசிகலா வேடத்தில் நடிக்க மாட்டேன்.

    நான் அரசியலுக்கு வருவேன். ஆனால் இப்போது இல்லை. எனக்கான நேரம் வர வேண்டும். அப்பா கட்சியில் சேரமாட்டேன். அரசியலை நோக்கி நான் செயல்படவில்லை.

    கற்பழிப்புக்கு தண்டனையை அதிகப்படுத்த வேண்டும். சவுதியில் உள்ளது போன்ற கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேட்டி அளித்தார். #MeToo #TimesUp #Varalakshmi #Chinmayi

    லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 படத்தில் விஷால் ஜோடியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தானும், வரலட்சுமியும் சேர்ந்து நடிக்கவில்லை ஆனால் அவர் மிரட்டலாக நடித்திருக்கிறார் என்று கூறினார். #Sandakozhi2 #KeerthySuresh
    சண்டக்கோழி 2 படத்தில் விஷாலுக்கு ஜோடியாகி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அவர் அளித்த பேட்டி:-

    இந்த படத்தில் என் பெயர் செம்பருத்தி. கிராமத்தில் இருக்கும் குறும்புத்தனமான பெண்ணாக வருகிறேன். முதல் பாகத்தில் மீரா ஜாஸ்மின் பார்ப்பதற்கு அடக்கமான பெண்ணாக இருந்துகொண்டு வால்தனம் செய்வார். ஆனால் இதில் பார்த்தாலே இது இப்படித்தான் என்று தெரிந்துவிடும். மீரா ஜாஸ்மின் செய்த கதாபாத்திரம் என்றதும் பயந்தேன். லிங்குசாமி கொடுத்த தைரியம் தான் நடிக்க காரணம். அவர் நடித்தே காட்டுவார். எனவே எளிதாக இருந்தது.

    வரலட்சுமி?

    இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் இல்லை. அவர் நடித்த சில காட்சிகள் பார்த்தேன். மிரட்டி இருக்கிறார்.

    விஷால்?

    ரொம்ப நட்பான நபர். நம் மீது அக்கறை எடுத்துக்கொள்வார். எப்போது பார்த்தாலும் பிசியாகவே இருப்பார். எப்போதும் போனும் கையுமாகவே பார்க்கலாம். ஒவ்வொரு காட்சியும் பேசி ஆலோசனை செய்துவிட்டு தான் நடிப்போம்.



    சாவித்திரியாக நடித்த பிறகு கமர்ஷியல் படங்களில் நடிப்பது ஏன்?

    ஒரு நடிகையாக எல்லா விதமான படங்களிலும் நடிக்கத் தான் ஆசைப்படுகிறேன். முன்னணி ரோல் தான் என்று இல்லாமல் ஹீரோவுடன் கமர்ஷியல் படங்களிலும் நடிக்க வேண்டும். அதிலும் நல்ல வேடங்களாக நடிக்க வேண்டும்.

    சாவித்திரியாக நடித்ததற்கு கிடைத்த பாராட்டுகள் உங்கள் மனதில் ஏதாவது மாற்றத்தை உருவாக்கியதா?

    பொறுப்பு அதிகரித்துள்ளது. நான் நடிக்க வந்த 4 ஆண்டுகளில் இந்த ஒன்றரை மாதம் தான் நடிக்காமல் ஓய்வில் இருக்கிறேன். இதுவரை 20க்கும் மேற்பட்ட கதைகள் கேட்டுள்ளேன். எதிலும் கமிட் ஆகவில்லை. கதை தேர்வில் இனி அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

    பயோபிக் படங்களாக நடிக்க ஆர்வம் இல்லை. சாவித்திரியாக நான் தெரிந்தது ஒரு மேஜிக். திரும்பவும் அதே சாவித்திரி கதாபாத்திரத்திலேயே என்னால் நடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். ஏர்போர்ட்டில் ஒரு பெரியவர் என்னிடம் வந்து நீங்கள் சாவித்திரியா? என்று கேட்டார். இல்லை சாவித்திரியாக நடித்தேன் என்று கூறினேன்.



    நீங்கள் சாவித்திரியாக நடிப்பதாக செய்தி வந்ததும் அதை கிண்டல் செய்து வந்த மீம்ஸ்களை கவனித்தீர்களா?

    நான் கவனிக்கவில்லை. நடிகையர் திலகம் புரமோ‌ஷனின் போது தான் கேள்விப்பட்டேன். ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் சாவித்திரியாக நான் நடிப்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பது தெரியும். எனக்கே பயம் இருந்தது. படம் அவற்றுக்கான பதிலை கொடுத்துவிட்டது.

    ஆமாம். எனக்கு கவிதைகள் எழுத மிகவும் பிடிக்கும். தமிழில் சில கவிதைகள் எழுதியுள்ளேன். என் கவிதைகள் ரொம்ப ஆழமாக இருக்கும். எமோ‌ஷனலான கவிதைகள். நிறைய படிப்பேன். #Sandakozhi2 #Vishal #KeerthySuresh #Varalakshmi

    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தில் மீசைவச்ச வேட்டைக்காரன் பாடலுக்காக பாடலாசிரியர் அருண்பாரதி ஒரு புத்தகத்தையே எழுதியிருப்பதாக கூறினார். #Sandakozhi2 #ArunBharathi
    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் `சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளியான பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்த படத்தில் `மீசவச்ச வேட்டக்காரன்' என்ற ஒரு பாடலை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் அருண்பாரதி.

    இந்த பாடல் பற்றி அருண்பாரதி கூறிய போது, 

    மீசைவச்ச வேட்டைக்காரன் பாடலுக்கு நான் பல வரிகளை எழுதிக்கொடுத்தேன். எங்க அப்பா, ராஜ்கிரண் ரசிகர் என்பதால் எனக்கும் அவரை பிடிக்கும். அதனாலேயே அவருக்காக " நல்லி எலும்போட அடுப்புலதான் வெள்ளாடு மெதக்குதய்யா; அத அள்ளிக் கடிக்கத்தான் அடிவயிறு தண்டோரா அடிக்குதய்யா " என்ற வரிகளை எழுதினேன். மேலும் விஷாலுக்காக " நம்ம தான் நம்ம தான் கருப்பு தங்கம் யாருக்கும் அடங்காத மதுர சிங்கம் திமிருதான் திமிருதான் நம்ம ரத்தம் நாம திமுருனா திரும்புமே ஊரு மொத்தம் " என பாடல் வரிகளை எழுதினேன். 



    மேலும் இந்தப் பாடலுக்காக நான் எழுதிய எல்லாமே இயக்குனருக்கு பிடிச்சுருந்துச்சு. எல்லாத்தையும் வைக்கமுடியாது என்பதால் சிலவற்றை மட்டும் இந்த பாடலில் பயன்படுத்தி உள்ளோம். இந்த பாடல்களுக்காக நான் எழுதிய வரிகளை வைத்து ஒரு புத்தகமே வெளியிடலாம் அந்த அளவுக்கு ஒரு பத்து திருவிழா பாடலுக்கான வரிகள் உள்ளது சீக்கிரமே அதை புத்தகமாக வெளியிட உள்ளேன் என்றார். #Sandakozhi2 #ArunBharathi

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள், நடிகைகளாக இருக்கும் விஷால், வரலட்சுமி, பிரசன்னா ஆகியோர் கமல் வழியை பின்பற்றி வருகிறார்கள். #Kamal
    கமல்ஹாசன் சினிமாவில் பிசியாக இருக்கும்போதே டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக களம் இறங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 சீசன்களையும் அவரே தொகுத்து வழங்கினார்.

    அவர் வழியில் தற்போது விஷால் ஒரு தனியார் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறி இருக்கிறார். அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. அடுத்து கமல், விஷால் வரிசையில் வரலட்சுமியும் இணைந்துள்ளார். அவரும் ஒரு டிவியில் சமூக சேவை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார்.



    நடிகர் பிரசன்னாவும் தொலைக்காட்சி தொகுப்பாளராக மாறி இருக்கிறார். சிவகார்த்திகேயன், மாகாபா.ஆனந்த், ரோபோ சங்கர் என டிவியில் இருந்து சினிமாவுக்கு ஆட்கள் வந்த நிலைமை மாறி சினிமாவில் இருந்து பிரபலங்கள் டிவி பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள்.
    சண்டக்கோழி-2 பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷால் பதிலுக்கு கீர்த்தி சுரேஷ் சிரித்தது கேவலமாக இருப்பதாக, தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். #Sandakozhi2 #KeerthiSuresh #SriReddy
    சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னையும் படுக்கையில் பயன்படுத்தி விட்டு நடிக்க வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டதாக கூறினார். 

    பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் அந்த பட்டியலில் இருந்தனர். இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்கள் சங்கத்தினர் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக திரண்டனர். தேசிய மகளிர் ஆணையமும் இந்த பிரச்சினையில் தலையிட்டது. ஐதராபாத்தில் பாதுகாப்பு இல்லை என்று ஸ்ரீரெட்டி தற்போது சென்னையில் குடியேறி இருக்கிறார். அவரது வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாக தயாராகிறது. 

    இந்த படத்தை தடை செய்யும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலுக்கு அவர் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதுகுறித்து சண்டக்கோழி-2 பட விழாவில் விஷாலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, 



    ‘‘ஸ்ரீரெட்டிக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை வரவேற்கிறேன். இந்த படத்தில் நடிக்கும்போது எல்லோரும் உஷாராக இருப்பார்கள். அவர் தனது பாதுகாப்புக்கு எல்லா இடத்திலும் கேமரா வைத்து இருப்பார்’’ என்றார். ஸ்ரீரெட்டி பற்றி விஷால் பேசியதை கேட்டு அருகில் இருந்த கீர்த்தி சுரேஷ் சிரித்ததாக கூறப்படுகிறது. இந்த சிரிப்பு ஸ்ரீரெட்டியை கோபப்படுத்தி உள்ளது. 

    கீர்த்தி சுரேசை தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீரெட்டி கண்டித்துள்ளார். ‘‘கீர்த்தி சுரேஷ் சிரிப்பு மிகவும் கேவலமாக இருந்தது. கவலைப்படாதீர்கள் மேடம். நீங்கள் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்க முடியாது. ஒரு நாள் போராடுபவர்கள் வலியை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் சிரித்ததை நான் மறக்க மாட்டேன். நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள்’’ என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். #Sandakozhi2 #KeerthiSuresh #SriReddy

    நடிகர் விவேக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எழுமின்’ திரைப்படம் விஷாலின் ‘சண்டக்கோழி 2’, தனுஷின் ‘வட சென்னை’ திரைப்படத்துடன் மோத இருக்கிறது. #Ezhumin
    வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து, இயக்கி இருக்கும் திரைப்படம் “எழுமின்”. விவேக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் தேவயானி கதை நாயகியாக நடித்திருக்கிறார். அழகம் பெருமாள் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தற்காப்பு கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்ற 6 சிறுவர்களும் நடித்திருக்கிறார்கள்.

    முன்னதாக வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் தேதி மாற்றப்பட்டிருக்கிறது. அதன்படி வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி விடுமுறை தினத்தில் உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    அதே நாளில்தான் தனுஷ் நடித்திருக்கும் “வடசென்னை” திரைப்படமும், விஷால் நடித்துள்ள “சண்டக்கோழி 2” திரைப்படமும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×