search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98969"

    சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பின் நிறைவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் இருவரும் அமைதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். #TrumpKimSummit #USPresidentDonaldTrump #TrumpKimSignedDocument
    சிங்கப்பூர்:

    அமெரிக்கா, வடகொரியா இடையிலான பகைமை உணர்வு மறைந்து நட்புறவுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார். அதன்பின்னர் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தன. இதற்காக சிங்கப்பூரில் ஜூன் 12-ம் தேதி அமெரிக்க அதிபர், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறும் என நாள் குறிக்கப்பட்டது.

    எனினும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த சந்திப்பு நடைபெறுமா? என்பதில் சந்தேகம் நீடித்தது. பின்னர் நீண்ட இழுபறிக்குப் பிறகு சந்திப்பு உறுதி செய்யப்பட்டது. அதன்படி சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் இன்று டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்திப்பு நடந்தது. உலகமே உற்றுநோக்கிய இந்த சந்திப்பின்போது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

    இந்த சந்திப்பு எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்ததாகவும், மிகப்பெரிய பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். இதேபோல் கிம் ஜாங் அன்னும் சாதகமான கருத்தையே கூறினார்.



    அதன்பின்னர், இரு நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், டிரம்ப், கிம் ஜாங் அன் இருவரும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனால், அமைதி மற்றும் நட்புறவு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒப்பந்தமாக இருக்கலாம் என தெரிகிறது.  #TrumpKimSummit #USPresidentDonaldTrump #TrumpKimSignedDocument

    அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்பாக அரசியல் கைதிகளை விடுவிக்கும் பணியை வடகொரியா தொடங்க வேண்டும் என ஐ.நா. வல்லுநர் கேட்டுக்கொண்டுள்ளார். #TrumpKimMeeting
    ஜெனீவா:

    அடுத்தடுத்த அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகள் என கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை அதிகரித்து வந்த வடகொரியா, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. அணு ஆயுத சோதனையை கைவிடுவதாக அறிவித்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.

    அதன்பின்னர் பகைமையை மறந்து வடகொரியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தைக்கும் தயாராகி உள்ளன. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் அன்னும் நேரடியாக சந்தித்து பேச உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

    இந்த சந்திப்பையொட்டி வடகொரிய அரசாங்கம், அரசியல் கைதிகளை விடுவிக்கும் பணியை தொடங்க வேண்டும் என வடகொரியாவுக்கான ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.



    வடகொரியாவில் மனித உரிமைகள் தொடர்பான நிலவரங்களை கவனித்து வரும் ஐ.நா. சிறப்பு அதிகாரியான தாமஸ் ஓஜா குயின்டனா, ஜெனீவாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கைது செய்யப்பட்ட மூன்று அமெரிக்கர்களை வடகொரியா கடந்த மாதம் விடுதலை செய்தது வரவேற்கத்தக்கது. இது நல்லெண்ண அடிப்படையாகும். இது படிப்படியான நடைமுறையாகவும் இருக்கலாம். ஒருவேளை அப்படி இல்லை என்றால், வடகொரியா சிறைகளை திறந்து, அரசியல் கைதிகளை படிப்படியாக விடுவிக்க வேண்டும். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் வடகொரியாவில் சிறை வைக்கப்பட்டிருக்கலாம்.

    டிரம்ப்-கிம் ஜாங் அன் இடையிலான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். பேச்சுவார்த்தையில் மனித உரிமைகள் இடம்பெற வேண்டும். ஏனென்றால் மனித உரிமைகள், பாதுகாப்பு மற்றும் அமைதி ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TrumpKimMeeting
    வடகொரிய அதிபர் கெஞ்சி கேட்டதனால் தான் ரத்து செய்யப்பட்ட சந்திப்புக்கு மீண்டும் ட்ரம்ப் சம்மதித்ததாக ட்ரம்பின் வழக்கறிஞர் ரூடி தெரிவித்துள்ளார். #trumpkimsummit
    வாஷிங்டன்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இனி அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலமாக கொரிய தீபகற்பம் இருக்கும் என்று உறுதியளித்தார்.

    இதன்பிறகு அமெரிக்காவுடன், வடகொரியா சமாதான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இரு நாடுகளும் நெருங்கி வரும் சூழலும் காணப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூர் நகரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. ஆனால் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல்களைத் தொடர்ந்து, டிரம்ப் இந்த சந்திப்பை திடீரென ரத்து செய்தார்.

    பின்னர், வடகொரிய அதிபருடனான சந்திப்புக்கு ஒப்புக்கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், திட்டமிட்டபடி ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடக்கும் எனவும் தெரிவித்தார். இந்த சந்திப்பு சிங்கப்பூரின் பிரபல கேபல்லா விடுதியில் நடைபெற உள்ளது. இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு என்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த ட்ரம்ப்பின் தலைமை வழக்கறிஞரும், நியூ யார்க் நகர முன்னாள் மேயருமான ரூடி கிலியானி, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், மண்டியிட்டு கெஞ்சி கேட்டதனால் தான் அவரை சந்திக்க ட்ரம்ப் மீண்டும் ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

    திட்டமிட்டபடி, இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு இன்னும் ஒரு சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில், இவரது இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #trumpkimsummit
    சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத் அரசு முறை பயணமாக வடகொரியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #SyriaPresident #Assad #NorthKorea
    பியாங்காங்:

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் வருகிற 12-ந் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச இருப்பதை உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில், சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத் அரசு முறை பயணமாக வடகொரியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பஷர் அல்-ஆசாத், ‘நான் வடகொரியா சென்று அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச இருக்கிறேன்’ என கடந்த 30-ந் தேதி கூறியதாக வடகொரியாவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயம் பஷர் அல்-ஆசாத், எந்த தேதியில் வடகொரியா செல்கிறார் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.



    கிம், வடகொரியாவின் தலைவராக பதவியேற்றுக்கொண்டது முதல் இதுவரை எந்த ஒரு அதிபரும் வடகொரியாவுக்கு சென்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது கிடையாது. அந்தவகையில், வடகொரியாவில் கிம் ஜாங் அன்னை சந்திக்கும் முதல் அதிபர் என்கிற பெயரை பஷர் அல்-ஆசாத் பெறுகிறார்.  #SyriaPresident #Assad #NorthKorea 
    வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் உடனான சந்திப்பு திட்டமிட்டபடி வருகிற 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். #Singaporesummit #KimJongUn #DonaldTrump

    வாஷிங்டன்:

    அமெரிக்காவும், வட கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் அடிக்கடி மிரட்டி வந்தார்.

    இந்த நிலையில் சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம்ஜாங் உன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார்.

    வருகிற 12-ந் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் சில கருத்து வேறுபாடி ஏற்பட்டது, இதனால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது.

    இந்நிலையில், இந்த சந்திப்பு சம்பந்தமான முன்னேற்பாடுகள் தொடர்பாக பேசுவதற்காக வடகொரிய அதிபரின் உதவியாளர் கிம் யாங் சோல் நேற்று அமெரிக்கா சென்றார். டிரம்பை சந்தித்த அவர், கிம் ஜாங் உன் சார்பில் ஒரு கடிதத்தையும் அவரிடம் கொடுத்தார்.



    இதையடுத்து, திட்டமிட்டபடி வருகிற 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் கூறியதாவது:-

    நாங்கள் ஜூன் 12-ம் தேதி அந்நாட்டு தலைவரை சந்திக்க உள்ளோம். இது ஒரு வெற்றிகரமான செயற்பாடாக இருக்கும். நான் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூர் பயணம் செய்கிறேன். இது ஒரு ஆரம்பமாக இருக்கும். ஒரு கூட்டத்தில் நல்லது நடக்கும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. இந்த ஒரு கூட்டத்தில் மிகவும் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என நினைக்கிறேன். இன்று நடந்த சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இது ஒரு பெரிய தொடக்கமாகும் என நினைக்கிறேன். நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி பேசினோம். ஜூன் 12 ம் தேதி சிங்கப்பூரில் பெரிய விஷயம் நடைபெறும். 

    இவ்வாறு டிரம்ப் கூறினார். #Singaporesummit #KimJongUn #DonaldTrump

    நியூயார்க் நகருக்கு வந்துள்ள வடகொரியாவை சேர்ந்த மூத்த அதிகாரியான கிம் யோங்-சோல், அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி பாம்பியோ உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். #NorthKoreaOfficialinUSA #TrumpKimsummit #KimYongchol

    நியூயார்க்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம்(ஜூன்) 12-ந் தேதி சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது.

    இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட டிரம்ப் பின்பு மறுத்தார். இதற்கிடையே தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை கிம் ஜாங் அன் முற்றிலுமாக தகர்த்ததுடன் டிரம்பை சந்தித்து பேசுவதிலும் உறுதியாக இருந்தார். இதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதற்கு பலனும் கிடைத்தது. கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை மீண்டும் டிரம்ப் உறுதிப்படுத்தினார். 

    இதைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதற்காக அமெரிக்க அதிகாரிகளை பியாங்யாங் நகருக்கு அனுப்பி வைத்தார். 



    இந்நிலையில், வடகொரியாவை சேர்ந்த மூத்த அதிகாரியும், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு மிகவும் நெருக்கமானவருமான கிம் யோங்-சோல் நேற்று அமெரிக்காவுக்கு வந்தார். கடந்த 20 ஆண்டுகளில் முக்கிய வடகொரிய அதிகாரி ஒருவர் அமெரிக்காவுக்கு வந்திருப்பது இதுவே முதல்முறையாகும். நியூயார்க் நகருக்கு வருகை தந்துள்ள அவர் அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி பாம்பியோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

    இந்த பேச்சுவார்த்தையில், டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு பற்றி விவாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. #NorthKoreaOfficialinUSA #TrumpKimsummit #KimYongchol
    வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபரும், ஜப்பான் பிரதமரும் தெரிவித்துள்ளனர். #TrumpKimsummit #Trump #ShinzoAabe
    வாஷிங்டன்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ம் தேதி சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது.

    இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட டிரம்ப் பின்பு மறுத்தார். இதற்கிடையே தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை கிம் ஜாங் அன் முற்றிலுமாக தகர்த்ததுடன் டிரம்பை சந்தித்து பேசுவதிலும் உறுதியாக இருந்தார். இதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதற்கு பலனும் கிடைத்தது. கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை மீண்டும் டிரம்ப் உறுதிப்படுத்தினார். 

    இந்நிலையில், வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபரும், ஜப்பான் பிரதமரும் தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் நேற்று தொலைபேசியில் பேசினர். வட கொரியாவுடனான சந்திப்பு குறித்து இருவரும் ஆலோசித்தனர். அப்போது, வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்பும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பு தெரிவித்துள்ளது. #TrumpKimsummit #Trump #ShinzoAabe
    புங்யேரி பகுதியில் இருந்த அணு குண்டு பரிசோதனை மையத்தை வடகொரியா அரசு நிர்மூலமாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

    பியாங்யாங்:

    ஏவுகணைகளை வைத்து உலகை மிரட்டிவரும் வடகொரியா, தன்வசம் வைத்துள்ள அணு ஆயுதங்களை தங்களிடம் தந்தால் வாங்கிகொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், வடகொரியாவின் வடகிழக்கில் மண்ட்டாப் மலைப்பகுதியில் உள்ள புங்யே-ரி பகுதியில் அந்நாடு அணு குண்டு பரிசோதனை நடத்தும் மையத்தையும், இதற்காக மலைகளை குடைந்து வெட்டப்பட்ட ரகசிய சுரங்கங்களையும் நிர்மூலமாக்கி மூடிவிட வடகொரியா அரசு முடிவெடுத்தது.

    இதைதொடர்ந்து, அணு குண்டு பரிசோதனை மையம் தகர்க்கப்படுவதை நேரில் வந்து பார்க்குமாறு உலகின் முக்கிய ஊடகங்களுக்கு வடகொரியா அரசு அழைப்பு விடுத்திருந்தது. நேற்று அந்த இடமும், சுரங்கங்களும் தகர்க்கப்பட்ட காட்சிகளை சில ஊடகங்கள் யூடியூபில் வெளியிட்டுள்ளன. #NorthKorea #Punggyerinucleartestsite

    அந்த வீடியோவைக் காண...,
    <

    சிங்கப்பூரில் நடைபெறுவதாக இருந்த டொனால்ட் டிரம்ப்- கிம் ஜாங் அன் பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. #TrumpKimSubmit #KimJongUn #DonaldTrump
    வாஷிங்டன் :

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை தகர்க்க வேண்டும். கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் போன்ற பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது.



    அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்து விட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதற்கிடையே, தென்கொரியா உடன் சமீபத்தில் நடக்க இருந்த சந்திப்பை வடகொரியா ரத்து செய்தது. டிரம்ப் உடனான சந்திப்பு முடிவில் இருந்து விலகுவோம் என எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

    இதுதொடர்பாக நேற்று வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அதிபர் ட்ரம்ப் கூறியதாவது, கிம் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது சிறப்பான ஒன்றாக இருக்கும். இப்போது அது நடக்கவில்லை என்றாலும், சில காலத்திற்கு பின்னர் நடக்கலாம். சிங்கப்பூர் சந்திப்பு வேலைக்கு ஆகாது என்பதற்கான காரணங்கள் நிறைய உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் இது வேலை செய்யாது என்பதல்ல. ஆனால், ஜூன் 12 சந்திப்பு வேலைக்கு ஆகாது என்றே தோன்றுகிறது என அவர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில்,  வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன்-க்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கடிதம் எழுதியுள்ளளார். அதில், அவர்கள் இருவருக்கும் இடையே ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அவர் குறிப்பிட்டுள்ளார். #TrumpKimSubmit #KimJongUn #DonaldTrump
    அணு ஆயுத திட்டத்தை முழுமையாக கைவிடும்படி அமெரிக்கா வலியுறுத்தினால் டிரம்புடன் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையை ரத்து செய்துவிடுவதாக வடகொரியா மிரட்டியுள்ளது. #KoreaThreatensUS #TrumpKimTalks
    பியாங்யாங்:

    அணு ஆயுத பரிசோதனைகள், ஏவுகணை சோதனைகளால் தொடர்ந்து சர்வதேச நாடுகளை மிரட்டி வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், தற்போது மற்ற நாடுகளுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க விரும்புகிறார். இனி அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்றும் அறிவித்த அவர் கடந்த மாதம் தென்கொரியா அதிபர் மூன் ஜேஇன் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தை உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்த கிம் முடிவு செய்தார். இந்த சந்திப்பு ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், தென்கொரியாவில் நடைபெறும் அமெரிக்கா-தென்கொரியா ராணுவ ஒத்திகை வடகொரியாவை ஆத்திரம் அடையச் செய்துள்ளது. தென்கொரியா உடன் இன்று நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து மேற்கொண்ட ராணுவ பயிற்சி வடகொரியா உடனான உறவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளது.

    மேலும், அணு ஆயுத திட்டங்களை முழுமையாக கைவிட அமெரிக்க வலியுறுத்தினால் சிங்கப்பூரில் ஜூன் 12ல் நடக்க உள்ள டிரம்ப்- கிம் ஜாங் இடையிலான பேச்சுபேச்சுவார்த்தை ரத்தாகும் என வடகொரியா எச்சரித்துள்ளது. அமெரிக்காவுடன் பொருளாதார உறவு வைத்துக்கொள்ள மாட்டோம் என்றும் மிரட்டியுள்ளது.

    அணு ஆயுத திட்டங்களை கைவிட்டால் அமெரிக்கா உரிய இழப்பீடு கொடுக்க முன்வந்திருப்பதை ஏற்க மாட்டோம். எங்களது பொருளாதார மேம்பாட்டிற்கு அமெரிக்காவின் எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை என வடகொரியா கூறியுள்ளது. இத்தகவலை வடகொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    இந்த விஷயத்தில் வடகொரியாவின் நிலைப்பாட்டை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தங்கள் கூட்டாளிகளுடன் உள்ள நெருக்கம் தொடரும் என்றும் வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு செயலாளர் செய்தி வெளியிட்டுள்ளார். #KoreaThreatensUS #TrumpKimTalks

    அணு குண்டு மற்றும் அணு ஆயுதங்களை தடை செய்யும் உலக நாடுகளின் முயற்சியில் வடகொரியாவும் இணையும் என ஐக்கிய நாடுகளின் சபைக்கான வடகொரியா தூதர் இன்று உறுதியளித்துள்ளார். #NorthKorea #nucleartest
    ஜெனிவா:

    ஜெனிவா நகரில் இன்று போர் ஆயுதங்கள் ஒழிப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் வடகொரியா நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் சபை தூதர் ஹான் டாய் சாங் பங்கேற்று பேசினார்.

    'அணு குண்டு மற்றும் அணு ஆயுதங்களின் சோதனைகளை கைவிடுவதும் இதன் தொடர்ச்சியாக தயாரிப்புகளை நிறுத்துவதும் உலகளாவிய அளவில் போர் ஆயுதங்களை ஒழிப்பதில் முக்கிய பங்களிப்பாகும். அவ்வகையில், முற்றிலுமாக அணு ஆயுத சோதனைகளை தடை செய்யும் சர்வதேச நாடுகளின் முயற்சியில் வடகொரியாவும் இணையும்' என அவர் குறிப்பிட்டார். #NorthKorea #nucleartest
    அணு குண்டு சோதனை மையத்தை நிர்மூலமாக்க முடிவு செய்துள்ள வட கொரியாவின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். #kimjongun #trump
    வாஷிங்டன்:

    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அதற்கு முன்னதாக வடகொரியா தன்வசம் வைத்துள்ள அணு ஆயுதங்களை தங்களிடம் தந்தால் வாங்கிகொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, வடகொரியாவின் வடகிழக்கில் மண்ட்டாப் மலைப்பகுதியில் உள்ள புங்யேரி பகுதியில் அந்நாடு அணு குண்டு பரிசோதனை நடத்தும் மையத்தையும், இதற்காக மலைகளை குடைந்து வெட்டப்பட்ட ரகசிய சுரங்கங்களையும் நிர்மூலமாக்கி மூடிவிட வடகொரியா முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில், அணு குண்டு சோதனை மையத்தை நிர்மூலமாக்க முடிவு செய்துள்ள வட கொரியாவின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், எங்கள் சந்திப்பு நடப்பதற்கு முன்னதாகவே அணு குண்டு சோதனை மையத்தை நிர்மூலமாக்க போவதாக வடகொரியா அறிவித்துள்ளது.  
    வடகொரியாவின் இந்த உறுதியான நடவடிக்கைக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். #kimjongun #trump
    ×