search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99004"

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த துரை என்பவருடன் பேசிய ஆடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ADMK #ORaja
    தேனி:

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தற்போது மதுரை மாவட்ட ஆவின் தலைவராக உள்ளார். இவர் நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த துரை என்பவருடன் பேசிய ஆடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோ வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிரப்பட்டு வருவதால், சர்ச்சை எழுந்துள்ளது.

    தற்போது ஓ.ராஜாவும், நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த துரை என்பவருடன் செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    பெரியகுளம் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில், பொருள்களுக்கு அதிக விலை வைத்து விற்கப்படுவதாகவும், அதற்கு ஓ.ராஜா தான் காரணம் என அறிந்துகொண்டு அதை தட்டிக்கேட்ட துரையிடம் போனில் பேசும் ஓ.ராஜா, “ஏன்டா ரேசன் கடைகளுக்கு சென்று பிரச்சனை செய்கிறாய்?” என கேட்கிறார். “நான் நுகர்வோர் அமைப்பில் இருக்கிறேன். ஒரு கார்டுக்கு 40 ரூபாய் கமிஷன் அடிக்கிறார்கள். அதனால்தான் கேட்டேன்” என்கிறார் துரை.

    “நீ தேவையில்லாத வேலை பார்க்கிறாய். உன் பிழைப்பை மட்டும் பார். எல்லாம் எங்களுக்குத் தெரியும். ஒரு மீட்டிங் போட்டு செலவழிக்க வேண்டும் என்றால் ரூ.1 லட்சம் ஆகும். அதற்கு நீயா செலவு செய்வாய்? பணம் சேர்க்காமலும் பதவி இல்லாமலும் காரில் போக முடியுமா? ஓட்டுக்கு ரூ.500 வரை பணம் கொடுத்தால்தான் ஜெயிக்க முடியும். அது போன்ற எங்களுக்கு யார் என்ன செய்கிறார்கள்? என்று தெரியாதா? தேவையில்லாமல் ரேசன் கடைகளில் பிரச்சனை செய்து உன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதே என்று மிரட்டுகிறார். இந்த ஆடியோ வெளியாகி கடும் விமர்சனத்தைச் சந்தித்துள்ளது. #ADMK #ORaja
    இந்தியாவில் வாட்ஸ்அப் பே சேவையை வழங்கும் பணிகளில் மும்முரம் காட்டுவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. #WhatsApp



    ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் வாட்ஸ்அப் பே சேவையை விரைவில் துவங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டிருப்பதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க் தெரிவித்தார். ஃபேஸ்புக் நிறுவன வருவாய் விளக்கக் கூட்டத்தில் பேசிய மார்க், சர்வதேச சந்தைக்கான பேமண்ட்ஸ் சேவையை உருவாக்கி வருவதாக தெரிவித்தார்.

    வாட்ஸ்அப் பே சேவையை இயக்கும் போது தகவல்களை உள்நாட்டிலேயே சேமிக்க வேண்டும் என இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று பீட்டா சோதனை சுமார் பத்து லட்சம் பயனர்களிடையே கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.

    "இந்திய வாட்ஸ்அப் செயலியில் சோதனை நடைபெறுகிறது. மற்ற நாடுகளிலும் இந்த சேவையை துவங்குவோம் என நம்புகிறோம், எனினும் இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது பற்றி தற்போதைக்கு கூற முடியாது. ஆனால் சேவை தொடர்பான பணிகள் நடைபெறுகிறது" என மார்க் சூக்கர்பர்க் தெரிவித்தார். 



    "இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் ஷாப்பிங் மற்றும் மார்கெட் பிளேஸ் அம்சங்கள் இருக்கின்றன. இவற்றை கொண்டு பல லட்சம் பேர் வியாபாரம் மற்றும் சிறு தொழில் செய்து வருவாய் ஈட்டுகின்றனர். இவ்வாறானவர்கள் புதிய வழிகளில் பணம் செலுத்த புதிய சேவை வழி வகுக்கும். 

    குறுந்தகவல் சேவையை பயன்படுத்தும் போது அனைவருக்கும் தனியுரிமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அனைவரும் உரையாடல் மற்றும் பரிமாற்றங்களை மேற்கொள்ள தனிமையை விரும்புகின்றனர் என அவர் தெரிவித்தார்.

    ஃபேஸ்புக் சேவையை தினமும் பயன்படுத்துவோர் எண்ணிக்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 8 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன.
    வாட்ஸ்அப் செயலியில் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் விரைவில் புதிய எமோஜி ஸ்டைல் வழங்கப்பட இருக்கிறது. #WhatsApp



    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் புதிய எமோஜி ஸ்டைல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எமோஜிக்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட் பகுதியில் சேர்க்கப்பட இருக்கிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.110 பதிப்பில் இந்த வசதி வழங்கப்படுகிறது.

    எனினும், இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு தற்சமயம் வரை செயலிழக்கப்பட்டுள்ளது. முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் அம்சம் பற்றிய தகவல் வெளியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து தற்சமயம் எமோஜி பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு தளத்தில் ஸ்கிரீன்ஷாட்களை முடக்குவதற்கான வசதியை வழங்க இருப்பது பற்றிய விவரமும் வெளியானது.

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.110 வெர்ஷனில் பயனர்களுக்கு புதிய எமோஜி ஸ்டைல் டூடுள் பிக்கர் மூலம் கிடைக்கும். புதிய எமோஜி ஏற்கனவே செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் எமோஜிக்களுக்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய எமோஜி ஸ்டைல் ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இது பயனரின வழக்கமான சாட்களில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வராது.



    புதிய எமோஜி ஸ்டைல் பற்றிய ஸ்கிரீன்ஷாட் ஒன்றும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய எமோஜி ஸ்டைல் வழக்கமாக வாட்ஸ்அப் சாட்களில் காணப்படும் எமோஜிக்களை போன்றே காட்சியளிக்கிறது. ஸ்டேட்டஸ் அப்டேட் பகுதியில் வழங்கப்பட்டிருப்பதால் இது வழக்கமான சாட்களில் பயன்படுத்த முடியாது என்றே தெரிகிறது.

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.110 பதிப்பில் வழங்கப்பட்டுள்ள நிலையிலும் இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்த அம்சம் எப்போது அனைவருக்கும் வழங்கப்படும் என்பது குறித்தும் இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

    புகைப்படம் நன்றி: WABetaInfo
    உலகின் பல்வேறு பகுதிகளில் நேற்று சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் முடங்கியதால் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. #Facebook #WhatsApp #Instagram
    புதுடெல்லி:

    பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் இன்று அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்று இருக்கின்றன. இத்தகைய ஊடகங்களில் நாள்தோறும் மணிக்கணக்கில் நேரம் செலவிடும் இளைய தலைமுறையினர் ஏராளம். அப்படி சமூக ஊடகங்களில் ஒன்றிப்போனவர்களுக்கு, அவற்றின் முடக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடும். அப்படி ஒரு நிகழ்வு நேற்றும் நடந்து விட்டது.

    விடுமுறை தினமான நேற்று காலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் முடங்கி விட்டன. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் ஒரே நேரத்தில் இந்த செயலிழப்பு நிகழ்ந்தது.

    இந்த நேரத்தில் வலைத்தள பயனாளர்களால் தங்கள் கணக்குகளை பயன்படுத்த முடியவில்லை. இதனால் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. எனினும் சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு இந்த முடக்கம் படிப்படியாக சீரடைந்தது. அதன்பிறகே அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் ஒருமுறை இதுபோல ஏற்பட்ட செயலிழப்பு சீரடைய 24 மணி நேரம் வரை எடுத்தது குறிப்பிடத்தக்கது.   #Facebook #WhatsApp #Instagram 
    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் ஆர்ச்சிவ்டு சாட்களுக்கான புதிய அம்சங்கள் சோதனை செய்யப்படுகிறது. #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெகேஷன் மோட் அம்சம் சோதனை செய்யப்படுவது பற்றிய விவரங்கள் வெளியானது. இதில் உரையாடல்களை ஆர்ச்சிவ் செய்யும் வழிமுறைகள் இடம்பெற்றிருந்தன. 

    வாட்ஸ்அப் செயலியில் வெகேஷன் மோட் இதுவரை வழங்கப்படாத நிலையில், இக்னோர் ஆர்ச்சிவ்டு சாட்ஸ் (Ignore archived chats) எனும் அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது. இத்துடன் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.101 பதிப்பில் பிரத்யேக ஆர்ச்சிவ்டு சாட்ஸ் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. 

    வாட்ஸ்அப் பீட்டா ஆப் டவுன்லோடு செய்யும் அனைவருக்கும் இந்த அம்சம் வழங்கப்படுகிறது. புதிய பீட்டா செயலியில் மற்றபடி பெரிய மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. 



    இனி பயனர்கள் ஆர்ச்சிவ்டு சாட்ஸ் அம்சத்தை ஹோம் பேஜில் இருக்கும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்தே இயக்க முடியும். இதனால் பயனர்கள் சாட் ஃபீட்களில் ஸ்கிரால் செய்ய வேண்டிய அவசியமின்றி ஆர்ச்சிவ்டு சாட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்திடலாம். 

    முன்னதாக பார்க்கப்பட்ட வெகேஷன் மோடிற்கு மாற்றாகவே புதிய இக்னோர் ஆர்ச்சிவ்டு சாட்ஸ் (Ignore archived chats) அம்சம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் புதிய மெசேஞ்கள் வரும்போது குறுந்தகவல்கள் தானாக அன்-ஆர்ச்சிவ் ஆவதை தடுக்கும்.

    புதிய இக்னோர் ஆர்ச்சிவ்டு சாட்ஸ் அம்சத்தை இயக்க செட்டிங்ஸ் -- நோட்டிஃபிகேஷன்ஸ் -- இக்னோர் ஆர்ச்சிவ்டு சாட்ஸ் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். எனினும், இந்த அம்சம் தற்சமயம் உருவாக்கப்படுகிறது. இந்த அம்சத்தை உடனடியாக பயன்படுத்த புதிய பீட்டா செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.
    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பரீட்டா செயலியில் பல்வேறு புதிய அம்சங்Kள் சோதனை செய்யப்படுகின்றன. #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியில் டார்க் மோட், மேம்பட்ட சர்ச் மற்றும் கைரேகை வசதி உள்ளிட்டவை சேர்க்கப்பட இருக்கின்றன. சமீபத்தில் வாட்ஸ்அப் செயலியில் ஃபார்வேர்டிங் இன்ஃபோ மற்றும் ஃபிரீக்வென்ட் ஃபார்வேர்டிங் என இரு அம்சங்களை சோதனை செய்வதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் புதிய வாய்ஸ் மெசேஜ் அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.86 பதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட வாய்ஸ் மெசேஜ்களை தொடர்ச்சியாக பிளே செய்ய முடியும். 

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் உருவாக்கப்படும் இந்த அம்சம் முன்னதாக வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். பீட்டா 2.18.100 பதிப்பில் காணப்பட்டது. கூடுதலாக புதிய பீட்டா அப்டேட்டில் பிக்சர் இன் பிக்சர் மோட் (பி.ஐ.பி. மோட்) மேம்படுத்தப்பட்டிருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு மே மாதத்தில் பி.ஐ.பி. மோட் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் வழங்கப்பட்டு பின் டிசம்பர் மாதம் ஆண்ட்ராய்டில் வழங்கப்பட்டது.



    இதுவரை ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பி.ஐ.பி. மோட் சாட்களிடையே நேவிகேட் செய்து கொண்டே வீடியோக்களை பார்க்கும் வசதி வழங்கிய நிலையில், ஆண்ட்ராய்டு தளத்தில் ஒரு சாட் ஸ்கிரீனில் இருந்தபடி வீடியோ பார்க்கும் வசதி வழங்கப்பட்டிருந்தது. எனினும், புதிய ஆண்ட்ராய்டு அப்டேட்டில் ஐ.ஓ.எஸ். தளத்தில் இருப்பது போன்று ஆண்ட்ராய்டிலும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 

    மேம்பட்ட பி.ஐ.பி. மோட் கொண்டு வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்கள் சிறிய வீடியோவினை சாட் ஸ்கிரீனை விட்டு வெளியேறினாலும் தொடர்ந்து பார்க்க முடியும். எனினும் சமீபத்திய பீட்டா பதிப்பில் இந்த வசதி செயலிழக்க செய்யப்பட்டிருக்கிறது. இந்த அம்சம் எப்போது அனைவருக்கும் வழங்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் டார்க் மோட் அம்சம் சோதனை செய்யப்படுகிறது. விரைவில் இதற்கான அப்டேட் வழங்கப்படலாம். #WhatsApp



    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா ஆப் 2.19.82 வெளியிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட் செயலியில் டார்க் மோட் வசதியை வழங்கியிருக்கிறது. செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டார்க் மோட் அம்சம் ஒருவழியாக பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது.

    அந்த வகையில் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம். இந்த அம்சம் முதற்கட்டமாக பீட்டா பதிப்பில் மட்டும் சோதனை செய்யப்படுகிறது. சமீபத்திய பீட்டா பதிப்புகளில் வெளியான விவரங்களில் மேலும் புதிய அம்சங்கள் வாட்ஸ்அப் செயலியில் சேர்க்கப்பட இருப்பதை வெளிப்படுத்தின. 

    வாட்ஸ்அப் செயலியில் அனைவருக்கும் டார்க் மோட் வசதி எப்போது வழங்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.82 பதிப்பில் சேர்க்கப்பட்டிருக்கும் டார்க் மோட் வசதியின் ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. 



    ஸ்கிரீன்ஷாட்களின் படி புதிய மோட் நோட்டிஃபிகேஷன் செட்டிங்ஸ், டேட்டா, ஸ்டோரேஜ் செட்டிங்ஸ், சாட் செட்டிங்ஸ் மற்றும் அக்கவுண்ட் செட்டிங் உள்ளிட்டவற்றில் இயங்குகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் டார்க் மோட் வசதி OLED பேனல்களுக்கு ஏற்றதாக இருக்காது என்றும் இது டார்க் கிரே நிறம் சார்ந்து உருவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த அம்சம் தற்சமயம் தானாக எனேபிள் செய்யப்படவில்லை. இதனால் செயலியை புதிய 2.19.82 வெர்ஷனுக்கு அப்டேட் செய்திருந்தாலும் இந்த அம்சத்தினை பார்க்க முடியாது. வாட்ஸ்அப் செயலியில் டார்க் மோட் வசதி வழங்குவதற்கான பணிகள் கடந்த ஆண்டு முதல் மேற்கொள்ளப்படுகிறது.

    சமீபத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.19.80 பதிப்பில் ஃபார்வேர்டிங் இன்ஃபோ (Forwarding Info) மற்றும் ஃபிரீக்வன்ட்லி ஃபார்வேர்டெட் (Frequently Forwarded) என இரு அம்சங்கள் சேர்க்கப்பட்டன. பார்வேர்டிங் இன்ஃபோ மூலம் நீங்கள் உங்களது நண்பர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல் எத்தனை பேருக்கு ஃபார்வேர்டு செய்யப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதனை மெசேஞ் இன்ஃபோ பகுதியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    புகைப்படம் நன்றி: WABetaInfo
    வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில் புதிய திட்டத்தை துவங்கியிருக்கிறது. #WhatsApp



    வாட்ஸ்அப் நிறுவனம் ஷேர் ஜாய், நாட் ரூமர்ஸ் (Share Joy, Not Rumours) எனும் புதிய திட்டத்தை துவங்கியுள்ளது. புதிய திட்டத்தின் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை மிகவும் கவனமாக பயன்படுத்துவது பற்றி கற்பிக்க இருக்கிறது. 

    முன்னதாக தொலைகாட்சி, அச்சு ஊடகம் மற்றும் ரேடியோ விளம்பரங்களின் மூலம் வாட்ஸ்அப் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை நிறுத்துவது பற்றி பயனர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது. முதற்கட்டமாக இந்தியா முழுக்க பல லட்சம் பேருக்கு போலி தகவல்கள் பரவுவதை தடுக்கும் முறைகள் கொண்டு சேர்க்கப்பட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் பொது தேர்தல் விரைவில் துவங்க இருப்பதையொட்டி, வாட்ஸ்அப் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்கும் நடவடிக்கைகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் வழிமுறைகள் எவ்வித சிரமமும் இன்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.



    தேர்தல் ஆணையம் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதே எங்களின் முக்கிய குறிக்கோள். பயனர்கள் போலி தகவல்களை எதிர்கொள்ளும் போது அவற்றை எவ்வாறு கண்டறிவது பற்றிய விவரங்களை வழங்குவதன் மூலம் அவர்களது பாதுகாப்பை அதிகப்படுத்த முடியும் என வாட்ஸ்அப் இந்தியா தலைவர் அபிஜித் போஸ் தெரிவித்தார்.

    இது தொடர்பான வீடியோக்களை வாட்ஸ்அப் உடன் இணைந்திருக்கும் நாஸ்காம் மற்றும் டி.இ.எஃப். மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட இருக்கின்றன. இந்த வீடியோக்களில் போலி விவரங்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்றும் இவற்றை மற்றவர்களுக்கு அனுப்பும் போது ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

    கடந்த சில மாதங்களில் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஃபார்வேர்டு செய்யப்படும் குறுந்தகவல்களை அடையாளப்படுத்தும் தகவல் இடம்பெறுகிறது. இத்துடன் ஒருவர் அதிகபட்சம் ஃபார்வேர்டு செய்யும் குறுந்தகவல்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
    வாட்ஸ்அப் செயலியின் ஃபார்வேர்டு மெசேஜ் அம்சத்திற்கு இரண்டு பெரிய அப்டேட்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியில் இன்-ஆப் பிரவுசிங் மற்றும் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் உள்ளிட்ட அம்சங்கள் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இரு அம்சங்களும் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை கண்டறிய பயனர்களுக்கு வழி செய்யும். 

    இந்நிலையில், ஃபேஸ்புக்கின் குறுந்தகவல் செயலியில் ஃபார்வேர்டெட் மெசேஜ் அம்சம் கொண்டு போலி தகவல்களை எதிர்க்கும் நடவடிக்கைகளில் அந்நிறுவனம் ஈடுபட இருப்பதாக தெரிகிறது. இதற்கென வாட்ஸ்அப் இரண்டு பெரிய அம்சங்களை செயலியில் சேர்க்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இரு அம்சங்களும் ஃபார்வேர்டிங் இன்ஃபோ (Forwarding Info) மற்றும் ஃபிரீக்வன்ட்லி ஃபார்வேர்டெட் (Frequently Forwarded) என அழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார்போல் இருஅம்சங்களும் எவ்வாறு வேலை செய்யும் என்பதை புரிந்து கொள்ளலாம். பார்வேர்டிங் இன்ஃபோ மூலம் நீங்கள் உங்களது நண்பர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல் எத்தனை பேருக்கு ஃபார்வேர்டு செய்யப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதனை மெசேஞ் இன்ஃபோ பகுதியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


    புகைப்படம் நன்றி: wabetainfo

    இந்த பகுதியை இயக்க பயனர் அனுப்பிய குறுந்தகவலை அழுத்திப்பிடித்து பின் இன்ஃபோ ஆப்ஷனை குறிக்கும் (i) ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இது சாட் விண்டோவின் மேல் காணப்படும். இந்த அம்சம் கொண்டு நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்பிய ஃபார்வேர்டெட் மெசேஞ்களில் மட்டுமே வேலைசெய்யும். 

    உங்களுக்கு வரும் ஃபார்வேர்டெட் மெசேஞ்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள அதே குறுந்தகவலை நீங்கள் உங்களது காண்டாக்ட்களுக்கு ஃபார்வேர்டு செய்து மெசேஞ் இன்ஃபோ பகுதியில் அது எத்தனை பேருக்கு ஃபார்வேர்டு செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

    ஃபிரீக்வென்ட்லி ஃபார்வேர்டெட் அம்சத்தில், ஒருவர் குறுந்தகவலை நான்கு அல்லது அதற்கும் அதிகமானோருக்கு ஃபார்வேர்டு செய்திருந்தால் பயனர் அனுப்பிய குறுந்தகவலில் பார்க்க முடியும்.  

    வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்களும் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் அடுத்த பீட்டா அப்டேட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அம்சங்களும் வாட்ஸ்அப் பீட்டா 2.19.80 ஆண்ட்ராய்டு பதிப்பில் வழங்கப்பட்டிருக்கிறது. ஐ.ஓ.எஸ். தளங்களில் இந்த அம்சம் வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு கீபோர்டில் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் எமோஜி சேர்க்கப்படுகிறது. #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியில் போட்டோக்களை டூடுள் செய்யும் போது எமோஜி மற்றும் ஸ்டிக்கர்களை தேட வழி செய்யும் அம்சம் விரைவில் சேர்க்கப்பட இருக்கிறது.

    இதுதவிர வாட்ஸ்அப் பீட்டா செயலியில் திருநங்கைகளை சிறப்பிக்கும் எமோஜி சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் மற்ற பாலினத்தவரை குறிக்கும் எமோஜிகளும் வாட்ஸ்அப் செயலியில் இடம்பெற்றிருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் திருநங்கைகளை குறிக்கும் எமோஜி வழங்கப்பட இருப்பது பற்றி ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

    இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். எனினும் இதுகுறித்து வாட்ஸ்அப் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. இத்துடன் எமோஜிபீடியா வலைதளத்தின் உதவியுடன் திருநங்கை எமோஜியை சாட்களில் மறைக்கும் வசதியை சேர்த்திருக்கிறது.



    இந்த அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.56 வெர்ஷனில் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், திருநங்கை எமோஜி வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.73 வெர்ஷனில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இத்துடன் புகைப்படங்களை கொண்டு தேட வழி செய்யும் சர்ச் பை இமேஜ் (Search by Image) அம்சமும் விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சர்ச் பை இமேஜ் அம்சம் கொண்டு பயனர்கள் அனுப்பிய அல்லது அவர்களுக்கு அனுப்பப்பட்ட புகைப்படம் உண்மையானது தானா என கண்டறிந்து கொள்ள முடியும். இந்த அம்சம் தற்சமயம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இது விரைவில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இவைதவிர, வாட்ஸ்அப் செயலியில் ஆடியோக்களை அனுப்பும் முன் அவற்றை கேட்கச் செய்யும் வசதியும் விரைவில் சேர்க்கப்பட இருக்கிறது. இத்துடன் ஒரேசமயத்தில் அதிகபட்சம் 30 ஆடியோ ஃபைல்களை பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட இருக்கிறது. 
    2019 பொது தேர்தலையொட்டி வாட்ஸ்அப் செயலியில் போலி தகவல்களை கண்டறிவது பற்றி அதன் பயயனர்களுக்கு பாடம் எடுக்க வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது. #WhatsApp



    இந்தியாவில் விரைவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி வாட்ஸ்அப் மற்றும் நாஸ்காம் பவுன்டேஷன் இணைந்து போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்க டிஜிட்டல் கல்வியறிவு வகுப்புக்களை நடத்த திட்டமிட்டுள்ளன. 

    இருநிறுவனங்களிடையே ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தத்தின் படி இந்தியாவில் போலி தகவல்களை கண்டறிவது மற்றும் வாட்ஸ்அப் செயலியில் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளன.



    பயிற்சியின் அங்கமாக மக்களுக்கு குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்வதில் கவனமாக செயல்படுவது பற்றியும் கற்பிக்கப்பட இருக்கிறது. பயிற்சியை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றும் வகையில் உண்மையில் நடந்த சிறு கதைகள், ஃபார்வேர்டு ஆகும் தவறான குறுந்தகவல்களை எப்படி சட்ட வல்லுநர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது பற்றியும் விளக்கப்பட இருக்கிறது.

    இந்தியாவில் பன்மொழி பயன்பாடு பின்பற்றப்படுவதால், பயிற்சியை பல்வேறு மொழிகளில் நடத்த வாட்ஸ்அப் மற்றும் நாஸ்காம் திட்டமிட்டுள்ளன. இருநிறுவனங்கள் இணைந்து நடத்தும் முதல் பயிற்சி மார்ச் 27 ஆம் தேதி டெல்லியில் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து பல்வேறு பயிற்சி வகுப்புக்கள் இந்தியா முழுக்க நகர்ப்புறம், ஊரக பகுதிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட இருக்கிறது.

    நாஸ்காம் பவுன்டேஷனை சேர்ந்த தன்னார்வ தொண்டு செய்யும் குழுவினரிடையே ‘Each One Teach Three’ (ஒருவர் மூவருக்கு பயிற்சியளிப்பது) எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன்மூலம் ஒவ்வொருத்தரும் மூன்று பேருக்கு பயிற்சி அளிக்க உறுதியளிக்க வேண்டும்.
    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வீடியோக்களை பகிர்வதை தடுக்க வலியுறுத்தி பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். #PollachiCase #CBCID
    கோவை:

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை 4 நாள் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் இந்த கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார்கள் குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


    இதற்கிடையே மதுரை ஐகோர்ட் இந்த வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது.

    இதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் பேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய வீடியோக்கள் பகிரப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளனர். #PollachiCase #CBCID
    ×