என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 99004
நீங்கள் தேடியது "slug 99004"
தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் வகையில் புதிய கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Congress #PChidambaram
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்காக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஏ.கே.அந்தோணி, அகமது பட்டேல், குலாம்நபி ஆசாத், ஜெயராம் ரமேஷ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் அறிக்கையில் எத்தகைய அம்சங்களை இடம் பெற செய்வது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதற்காக ப.சிதம்பரம் மாநில தலைவர்களிடமும் கருத்து கேட்டு வருகிறார்.
இது தவிர தேர்தல் அறிக்கை பொதுமக்களை மிக அதிக அளவில் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் விரும்புகிறார். இதற்காக பல்வேறு தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களிடமும் இது தொடர்பாக யோசனை பெறுவதற்கு ப.சிதம்பரம் திட்டமிட்டுள்ளார். தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் வகையில் புதிய கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை எளிதாக அனுப்புவதற்கு வசதியாக காங்கிரஸ் சார்பில் வாட்ஸ்அப் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் 72920 88245 என்ற எண் மூலம் தங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கலாம். #Congress #PChidambaram
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்காக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஏ.கே.அந்தோணி, அகமது பட்டேல், குலாம்நபி ஆசாத், ஜெயராம் ரமேஷ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் அறிக்கையில் எத்தகைய அம்சங்களை இடம் பெற செய்வது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதற்காக ப.சிதம்பரம் மாநில தலைவர்களிடமும் கருத்து கேட்டு வருகிறார்.
இது தவிர தேர்தல் அறிக்கை பொதுமக்களை மிக அதிக அளவில் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் விரும்புகிறார். இதற்காக பல்வேறு தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களிடமும் இது தொடர்பாக யோசனை பெறுவதற்கு ப.சிதம்பரம் திட்டமிட்டுள்ளார். தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் வகையில் புதிய கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை எளிதாக அனுப்புவதற்கு வசதியாக காங்கிரஸ் சார்பில் வாட்ஸ்அப் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் 72920 88245 என்ற எண் மூலம் தங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கலாம். #Congress #PChidambaram
வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் நோக்கில் அந்நிறுவனம் புதிய வசதியை வழங்குவதற்கான சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. #WhatsApp #Apps
ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலியில் பயனர்களின் சாட் விவரங்களை பாதுகாக்க கைரேகை சென்சார் வசதியை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை செயல்படுத்தியதும், பயனர்கள் கைரேகையை வைத்தால் மட்டுமே செயலியை திறக்க முடியும்.
இதுகுறித்து WABetaInfo, வெளியிட்டிருக்கும் தகவல்களில் இந்த அம்சத்தை உருவாக்குவற்கான முதற்கட்ட பணிகள் மட்டுமே துவங்கி இருக்கிறது. இதனால் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.3 பதிப்பில் செயலிழக்கச் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஃபேஸ் ஐ.டி. மற்றும் டச் ஐ.டி. அம்சங்களை ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் வழங்குவதற்கான சோதனை நடைபெற்றதைத் தொடர்ந்து தற்சமயம் இதேபோன்ற பாதுகாப்பு வசதி ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வழங்கப்பட இருக்கிறது.
புகைப்படம் நன்றி: WABetaInfo
ஐ.ஓ.எஸ். இயங்குதளத்திலும் இதற்கான சோதனை மட்டும் நடைபெற்று இருக்கும் நிலையில், இதுவரை இந்த வசதி வழங்கப்படாமலேயே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் செயலியில் கைரேகை பாதுகாப்பு வசதியை இயக்க செயலியின் செட்டிங்ஸ் -- அக்கவுண்ட் -- பிரைவசி உள்ளிட்ட ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த அம்சத்தை இயக்கினால் மட்டுமே சாட் விவரங்களை பாதுகாக்க முடியும். ஏற்கனவே தங்களது ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு வசதியை செயல்படுத்தி இருப்பின் இந்த அம்சம் தேவைக்கதிகமானதாகும்.
ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ மற்றும் அதற்கும் அதிக இயங்குதளங்களை பயன்படுத்தும் அனைவருக்கும் கைரேகை பாதுகாப்பு வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், இதை செயல்படுத்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் இருக்க வேண்டியதும் அவசியமாகும்.
வாட்ஸ்அப் செயலியில் கோல்டு அம்சம் பற்றி விவரங்கள் மீண்டும் பரவ துவங்கி இருக்கிறது. முன்னதாக 2016 ஆம் ஆண்டு இதேபோன்ற தகவல் பரவியது. #Whatsappgold #Apps
உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. அதிகளவு பிரபலமாக இருக்கும் வாட்ஸ்ஆப் செயலியில் அதிகளவு தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வரிசையில் வாட்ஸ்அப் செயலியில் மீண்டும் வாட்ஸ்அப் கோல்டு பற்றிய விவரங்கள் பரப்பப்படுகிறது.
முன்னதாக 2016 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் கோல்டு எனும் செயலியை பதிவிறக்கம் செய்யக் கோரி குறுந்தகவல்கள் பரப்பப்பட்டன. இவ்வாறு செய்யும் போது பயனர்களுக்கு வீடியோ காலிங் வசதி, ஒரே சமயத்தில் 100 புகைப்படங்களை அனுப்பும் வசதி உள்ளிட்டவை கிடைக்கும் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. எனினும் இந்த குறுந்தகவல் போலியானது என பின்னர் அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு செய்வதன் மூலம் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் மால்வேர் டவுன்லோடு ஆகும். தற்சமயம் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் இந்த வதந்தி பரப்பப்படுகிறது.
தற்சமயம் பரப்பப்படும் குறுந்தகவலில்: "வாட்ஸ்அப் கோல்டு பற்றிய விவரங்கள் உண்மை தான். வாட்ஸ்அப்பில் நாளை ஒரு வீடியோ வெளியாகிறது. மார்டினெலி என இந்த வீடியோ அழைக்கப்படுகிறது. அதை திறக்க வேண்டாம். திறக்கும் பட்சத்தில் என்ன செய்தாலும், அதனை சரி செய்ய முடியாது. இத்தகவலை நீங்கள் அறிந்தவருக்கு அனுப்பவும். வாட்ஸ்அப் கோல்டு செயலிக்கு அப்டேட் செய்யக் கோரும் குறுந்தகவல் வந்தால், அதனை திறக்க வேண்டாம்! இந்த வைரஸ் மிகவும் கொடியது. இதை அனைவருக்கும் அனுப்பவும்."
இந்த குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டு இருக்கும் மார்டினெலி என்ற வீடியோ எதுவும் இல்லை. இந்த குறுந்தகவல் கொண்டு பயனர்கள் மத்தியில் பீதியை பரப்ப திட்டமிட்டுள்ளனர். வாட்ஸ்அப் பயன்படுத்துவோரில் பலர் இத்தகவலை தங்களது ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
Got this and am circulating just in case it’s true.
— Anna Moore (@5AMoores) January 3, 2019
FYI: Whatsapp Gold. A video will be launched tomorrow in Whatsapp called Martinelli. DO NOT OPEN it. Its a virus which goes into your phone and nothing will fix it. Do not update to Whatsapp Gold the virus is serious.
இதுபோன்ற குறுந்தகவல்கள் வரும் பட்சத்தில் அவற்றை நம்ப வேண்டாம். வாட்ஸ்அப் செயலிக்கான அப்டேட்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் அவற்றுக்கான பிளே ஸ்டோர் மூலமாகவே வழங்கப்படும். இதுதவிர மூன்றாம் தரப்பு சேவைகள் அல்லது இணைய முகவரிகளில் அப்டேட் வழங்கப்பட மாட்டாது. இதனால் உங்களுக்கு வரும் ஃபார்வேர்டு மெசேஜ்களை நம்பர வேண்டாம்.
வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தின் பீட்டா பதிப்பில் புதிய வசதிகள் சோதனை செய்யப்படுகிறது. #Whatsapp #Apps
வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பீட்டா பயனர்களுக்கு புதிய அம்சம் வழங்கப்படுகிறது. புதிய 2.19.10.21 அப்டேட் மூலம் பயனர்களுக்கு பல்வேறு புதிய வசதிகள் கிடைக்கின்றன.
அந்த வகையில் புதிய அம்சங்கள் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம். இந்த அப்டேட் மூலம் செயலியில் சில முக்கிய அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு, செயலியின் ஒட்டுமொத்த அனுபவமும் மேம்படுத்தப்படலாம் என தெரிகிறது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது ஜிஃப்களில் ஸ்டிக்கர்களை சேர்க்க முடியும். இதில் பயனர்கள் நேரம், இருப்பிடம் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளில் கிடைக்கும் தனிப்பட்ட ஸ்டிக்கர்களை பயன்படுத்த முடியும். இந்த அப்டேட்டில் ஸ்டிக்கர்களை தேர்வு செய்ய புதிய வடிவமைப்பு கொண்ட பகுதி வழங்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே இந்த அம்சம் தெரிகிறது. இதுதவிர குரூப்களில் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பதில் அனுப்ப முடியும். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் ஏற்கனவே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. தற்சமயம் இந்த அம்சம் கொண்டு பயனர் தேர்வு செய்யும் குறுந்தகவல்களுக்கு வாட்ஸ்அப் தானாக புதிய சாட் ஸ்கிரீனை திறக்கும். இதில் பயனர்கள் தனிப்பட்ட முறையில் பதில் அளிக்க முடியும்.
இத்துடன் ஸ்டேட்டஸ்களை சரிபார்ப்பதற்கென டெவலப்பர்கள் புதிய வழிமுறையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் வழக்கமாக பயனர்கள் 3D ஃபோர்ஸ் முறையில் வாட்ஸ்அப் கான்டாக்ட்கள் அனுப்பும் குறுந்தகவல்களை சரிபார்ப்பதை போன்று இயங்கும். எனினும், தற்சமயம் இந்த அம்சம் 3D டச் தொழில்நுட்பம் கொண்ட சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். #Whatsapp #Apps
அந்த வகையில் புதிய அம்சங்கள் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம். இந்த அப்டேட் மூலம் செயலியில் சில முக்கிய அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு, செயலியின் ஒட்டுமொத்த அனுபவமும் மேம்படுத்தப்படலாம் என தெரிகிறது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது ஜிஃப்களில் ஸ்டிக்கர்களை சேர்க்க முடியும். இதில் பயனர்கள் நேரம், இருப்பிடம் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளில் கிடைக்கும் தனிப்பட்ட ஸ்டிக்கர்களை பயன்படுத்த முடியும். இந்த அப்டேட்டில் ஸ்டிக்கர்களை தேர்வு செய்ய புதிய வடிவமைப்பு கொண்ட பகுதி வழங்கப்படுகிறது.
புகைப்படம் நன்றி: WABetaInfo
இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே இந்த அம்சம் தெரிகிறது. இதுதவிர குரூப்களில் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பதில் அனுப்ப முடியும். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் ஏற்கனவே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. தற்சமயம் இந்த அம்சம் கொண்டு பயனர் தேர்வு செய்யும் குறுந்தகவல்களுக்கு வாட்ஸ்அப் தானாக புதிய சாட் ஸ்கிரீனை திறக்கும். இதில் பயனர்கள் தனிப்பட்ட முறையில் பதில் அளிக்க முடியும்.
இத்துடன் ஸ்டேட்டஸ்களை சரிபார்ப்பதற்கென டெவலப்பர்கள் புதிய வழிமுறையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் வழக்கமாக பயனர்கள் 3D ஃபோர்ஸ் முறையில் வாட்ஸ்அப் கான்டாக்ட்கள் அனுப்பும் குறுந்தகவல்களை சரிபார்ப்பதை போன்று இயங்கும். எனினும், தற்சமயம் இந்த அம்சம் 3D டச் தொழில்நுட்பம் கொண்ட சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். #Whatsapp #Apps
ஃபேஸ்புக் நிறுவனம் சொந்தமாக க்ரிப்டோகரென்சியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #cryptocurrency
ஃபேஸ்புக் நிறுவனம் தனக்கென க்ரிப்டோகரென்சியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் பண பரிமாற்றம் செய்ய இந்த க்ரிப்டோகரென்சியை பயன்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அமெரிக்க டாலர் மதிப்பு ஏற்ற இறக்க சூழ்நிலை காரணமாக நிலையான மதிப்பு கொண்ட காயின்களை ஃபேஸ்புக் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. தற்சமயம் இந்த க்ரிப்டோகரென்சி உருவாக்குவதற்கான ஆயத்த பணிகள் மட்டுமே துவங்கியிருப்பதால், இது வெளியாக இன்னும் சில காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2014 ஆம் ஆண்டு பேபால் நிறுவன தலைவர் டேவிட் மார்கஸ் ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் செயலியை நிர்வகிக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். பின் மே மாதத்தில் மார்கஸ் ஃபேஸ்புக்கின் பிளாக்செயின் நடவடிக்கைகளுக்கான தலைவராக நியமிக்கப்பட்டார். ஃபேஸ்புக்கின் பிளாக்செயின் குழுவில் தற்சமயம் வரை சுமார் 40 பேர் உள்ளனர்.
ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. அந்த வகையில் உண்மையில் ஃபேஸ்புக் க்ரிப்டோகரென்சியை உருவாக்கி வருகிறதா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
உலகம் முழுக்க ஃபேஸ்புக் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 250 கோடியாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் ஆண்டு வருவாய் மட்டும் 4000 கோடி டாலர்கள் ஆகும். ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் க்ரிப்டோகரென்சி வெளியிடப்படும் பட்சத்தில், இவ்வாறு செய்யும் முதல் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கும்.
வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சர் இன் பிக்சர் மோட் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. #WhatsApp #Android
வாட்ஸ்அப் செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் (பி.ஐ.பி.) ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் வீடியோக்களை வாட்ஸ்அப் செயலியில் இருந்தபடியே பார்க்க வழி செய்யும். யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் இதர தளங்களில் இருக்கும் வீடியோக்களை வாட்ஸ்அப் பி.ஐ.பி. மோட் சப்போர்ட் செய்கிறது.
கடந்த சில மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வந்த பி.ஐ.பி. வசதி ஒருவழியாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது. புதிய பி.ஐ.பி. மோட் வசதி வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.280 வழங்குகிறது. இதுதவிர செயலியில் மேலும் பல்வேறு புதிய வசதிகளை வாட்ஸ்அப் வழங்க இருக்கிறது.
வாட்ஸ்அப் ஐபோன் செயலியில் சமீபத்தில் க்ரூப் காலிங் பட்டன் வழங்கப்பட்டது. இந்த அம்சம் விரைவில் ஆண்ட்ராய்டு செயலியிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் க்ரூப் ஆடியோ அல்லது வீடியோ கால் மேற்கொள்ள முதலில் ஒருவரை அழைத்து, அதன்பின் மற்றவர்களை அழைப்பில் சேர்க்க வேண்டும்.
புதிய வசதி வழங்கப்படும் போது, அழைக்க வேண்டியவர்களை அழைப்புக்கு முன்னதாக சேர்க்க முடியும். இதேபோன்று செயிலயில் டார்க் மோட் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வசதி வழங்கப்படும் பட்சத்தில் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகப்படுத்த முடியும். குறிப்பாக OLED ரக ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன்களில் அதிக பலன்கள் கிடைக்கும்.
ஏற்கனவே வாட்ஸ்அப் செயலியில் டிராப் டவுன் நோட்டிஃபிகேஷன் பேனல் வழங்கப்பட்டது. இந்த வசதி நோட்டிஃபிகேஷன் டிராப் டவுன் பேனலில் இருந்தபடி புகைப்படம் மற்றும் வீடியோக்களின் பிரீவியூக்களை காண்பிக்கும்.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ஆசிரியைக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச படம் அனுப்பிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
அயனாவரத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு செல்போனில் தொடர்ச்சியாக ஆபாச தகவல்கள் வந்தன. வாட்ஸ்-அப் மூலமும் ஆபாச புகைப்படங்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வாட்ஸ் அப்பில் வரும் நம்பரை வைத்து ஆபாச தகவல் அனுப்பியவரின் முகவரியை கண்டு பிடித்தனர்.
அசோக்நகர் 88-வது தெருவை சேர்ந்த ஆகாஷ் (வயது 24). 11-வது அவென்யூ பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 25) ஆகியோர் தான் ஆபாச புகைப்படங்களை ஆசிரியைக்கு அனுப்பியது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் ஆகாஷ் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும் மாணவர் ஆவார்.
அயனாவரத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு செல்போனில் தொடர்ச்சியாக ஆபாச தகவல்கள் வந்தன. வாட்ஸ்-அப் மூலமும் ஆபாச புகைப்படங்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வாட்ஸ் அப்பில் வரும் நம்பரை வைத்து ஆபாச தகவல் அனுப்பியவரின் முகவரியை கண்டு பிடித்தனர்.
அசோக்நகர் 88-வது தெருவை சேர்ந்த ஆகாஷ் (வயது 24). 11-வது அவென்யூ பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 25) ஆகியோர் தான் ஆபாச புகைப்படங்களை ஆசிரியைக்கு அனுப்பியது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் ஆகாஷ் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும் மாணவர் ஆவார்.
ஐபோன்களுக்கான வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் க்ரூப் கால்களை மிக எளிமையாக மேற்கொள்ளும் புது வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. #WhatsApp
ஐபோன் மாடல்களுக்கான வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் க்ரூப் கால்களை எளிமையாக மேற்கொள்ள புது அப்டேட் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஐ.ஓ.எஸ். பீட்டா செயலியின் அங்கமாக புது அம்சம் வழங்கப்படுகிறது. இத்துடன் க்ரூப் கால்களை நேரடியாக நியூ கால் ஸ்கிரீனில் (New Call screen) இருந்து மேற்கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.
புது அப்டேட் வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை தொடர்ச்சியாக பிளே செய்யும் வசதியும் வழங்குகிறது. இந்த வசதிகளை பயன்படுத்த ஐபோனில் ஐ.ஓ.எஸ். 8.0 அல்லது அதற்கும் அதிக பதிப்புகளை பயன்படுத்த வேண்டும். மேம்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் காலிங் வசதி சாட் விண்டோவை திறக்கும் போது காணப்படுகிறது.
புது மாற்றம் மூலம் க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால்களை மிக எளிமையாக மேற்கொள்ள முடியும். அதற்குரிய ஆப்ஷனை கிளிக் செய்ததும், நீங்கள் கால் செய்ய வேண்டியவர்களை வாட்ஸ்அப் மூலம் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் வாய்ஸ் கால் அல்லது வீடியோ கால் மேற்கொள்ள வேண்டுமா என்ற ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதில் நீங்கள் விரும்பும் ஆப்ஷனில் ஒன்றை தேர்வு செய்யலாம்.
வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் கால் செய்யும் போது, நீங்கள் அட்ரெஸ் புக்கில் சேமித்து வைத்திருக்கும் எண்களுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும். வாட்ஸ்அப் க்ரூப் கால் செய்ய அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் நீங்கள் துவங்கும் க்ரூப் காலில் மூன்று புது நபர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும்.
புது க்ரூப் காலிங் பட்டன் முன்னதாக ஐ.ஓ.எஸ். பீட்டா 2.18.110.17 வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டது. இந்த பீட்டா அப்டேட் ஐபோன் பயனர்களுக்கு டெஸ்ட்ஃபிளைட் (TestFlight) மூலம் வழங்கப்பட்டது. டெஸ்ட்ஃபிளைட் என்பது, செயலிகளை ஓவர்-தி-ஏர் மூலம் சோதனை செய்யும் ஆப்பிள் நிறுவனத்தின் சேவையாகும்.
புதிய க்ரூப் காலிங் பட்டன் தவிர ஐ.ஓ.எஸ். வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் புதிய க்ரூப் கால் ஷார்ட்கட் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஷார்ட்க்ட் நியூ கால் ஸ்கிரீனில் இடம்பெற்று இருக்கிறது. ஷார்ட்கட் பட்டனை கிளிக் செய்து நேரடியாக க்ரூப் கால் துவங்கி, அதிகபட்சம் மூன்று நபர்களை சேர்த்துக் கொள்ள முடியும்.
ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ள க்ரூப் காலிங் அம்சங்கள் ஆன்ட்ராய்டு தளத்தில் இதுவரை வழங்கப்படவில்லை. க்ரூப் கால் ஷார்ட்கட் வசதி கடந்த மாத ஆன்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் வழங்கப்பட்டு இருந்தது. எனினும், ஆன்ட்ராய்டு சாதனங்களுக்கு புது அம்சத்திற்கான பொதுப்படையான அப்டேட் இதுவரை வழங்கப்படவில்லை. #WhatsApp
வாட்ஸ்அப் செயலியில் நோட்டிஃபிகேஷன்களில் இருந்து நேரடியாக வீடியோக்களை பார்க்க புதிய வசதி சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Whatsapp #Apps
வாட்ஸ்அப் செயலியில் புதிய வசதிகளை வழங்குவதற்கான பணிகளில் அந்நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. புதிய அப்டேட்டகள் செயலியின் அடிப்படை வசதிகளுடன் பயனுள்ள பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.
அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் நோட்டிஃபிகேஷன்களில் இருந்தபடியே வீடியோக்களை நேரடியாக பார்க்கும் வசதியை உருவாக்கி வருவதாக தெரிகிறது.
இதன் மூலம் நோட்டிஃபிகேஷனில் இருந்தபடியே மெசேஜ்களுக்கு பதில் அளிக்கும் வழிமுறை அதிகளவு மேம்படும். இதுவரை வாட்ஸ்ப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் வீடியோ மெசேஜ்களை பார்க்க, செயலியை திறந்து குறிப்பிட்ட லின்க்கை கிளிக் செய்ய வேண்டும். புதிய வசதி வழங்கப்படும் போது, நோட்டிஃபிகேஷனில் இருந்தே நேரடியாக வீடியோ பார்த்து விட முடியும்.
✅ WhatsApp is rolling out the possibility to view videos directly in the push notification for any iOS beta user having the 2.18.102.5 version installed!
— WABetaInfo (@WABetaInfo) November 20, 2018
It will be available soon for App Store users.
இதன் மூலம் மெசேஜை பார்த்தாலே பயனர்களின் லாஸ்ட் சீன் மாறிவிடும். மேலும் புதிய வசதியுடன் நோட்டிஃபிகேஷனில் இருந்தபடியே செயலியில் வரும் அனைத்து வித மெசேஜ்களையும் பார்க்க முடியும் என்பதோடு, லாஸ்ட் சீன் மாறாமல் இருக்கும். சில பயனர்களுக்கு லாஸ்ட் சீன் நேரம் பெரியதாக இல்லை என்றாலும், சிலர் அவற்றை முக்கியமானதாக பார்ப்பர்.
லாஸ்ட் சீன் மூலம் பயனர்கள் தங்களது நண்பர்கள் அல்லது உறவினர்களின் குறுந்தகவல்களை பார்த்து இருப்பார்களா, இல்லையா என்பதை குறுந்தகவல் அனுப்பியவர் பார்த்து புரிந்து கொள்ள முடியும். மேலும் பயனர் ஆன்லைனில் இருந்துகொண்டு குறுந்தகவலுக்கு பதில் அனுப்பாமல் இருப்பதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.
புதிய அம்சம் சோதனை செய்யப்படுவதை WABetaInfo மூலம் தெரியவந்து இருக்கிறது. புதிய வசதியை வாட்ஸ்அப் முதற்கட்டமாக ஐ.ஓ.எஸ். தளத்தில் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருக்கும் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பேக்களை அழிப்பதாக ஆப்பிள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் இந்தியாவுக்கான தலைவராக அபிஜித் போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #WhatsApp
ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் இந்தியா தலைவராக அபிஜித் போஸ் நியமனம் செய்யப்பட்டார். வாட்ஸ்அப் செயலி பயனர்கள் எண்ணிக்கை உலகில் மற்ற நாடுகளை விட அதிக பயனர்களை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது.
முன்னதாக அபிஜித் போஸ் மொபைல் பேமென்ட் நிறுவனமான இசிடேப் இணை நிறுவனர் மற்றும் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இத்துடன் வாட்ஸ்அப் இந்தியாவின் முதல் தலைவராக அபிஜித் போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் இந்தியா தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அபிஜித் போஸ் 2019ம் ஆண்டின் துவக்கத்தில் பதவியேற்க இருக்கிறார். கலிபோர்னியாவை தொடர்ந்து முதல் முறையாக வாட்ஸ்அப் நிறுவனத்தின் நாடு முழுக்க பணியாற்றும் குழுவினை அபிஜித் உருவாக்க இருக்கிறார். இதற்கான தலைமையகம் குர்கிராமில் அமைகிறது.
அபிஜித் போஸ் மற்றும் அவரது குழுவினர் இணைந்து வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை மேம்படுத்தி, சிறு மற்றும் பெரும் வியாபார மையங்கள் தங்களது வாடிக்கையாளர்களுடன் இணைந்திருக்கச் செய்வதில் பணியாற்றுவர் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்சமயம் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
“இந்தியாவின் அதிவேக டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பொதுமக்கள் இணைந்திருந்து ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் புதிய சேவைகளை வழங்குவதில் வாட்ஸ்அப் குறிக்கோளாக கொண்டுள்ளது. வெற்றிபெற்ற தொழிலதிபரான அபிஜித் இந்தியா முழுக்க வியாபாரங்களை மேற்கொள்ளும் நுணுக்கங்கள் அறிந்து வைத்திருக்கிறார்,” என வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அதிகாரியான மேட் இடிமா தெரிவித்தார்.
வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் என்பவரை வாட்ஸ்-அப் நிறுவனம் நியமித்து இருக்கிறது. #WhatsApp #AbhijitBose #India
புதுடெல்லி:
சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘வாட்ஸ்-அப்’ செயலியை கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் 130 கோடி வாட்ஸ்-அப் வாடிக்கையாளர்களில் சுமார் 20 கோடி பேர் இந்தியர்கள் ஆவர்.
இவ்வாறு மிகப்பெரிய வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் என்பவரை வாட்ஸ்-அப் நிறுவனம் நியமித்து இருக்கிறது. பிரபல மின்னணு பணப்பரிமாற்ற செயலியான எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
போலி செய்திகள் வேகமாக பரவுவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பதாக வாட்ஸ்-அப் நிறுவனம் மீது இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், இந்த தலைவர் நியமனம் நடந்திருக்கிறது. முன்னதாக குறைதீர் அதிகாரியை நியமிக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் அதிகாரி ஒருவரை வாட்ஸ்-அப் நிறுவனம் சமீபத்தில் நியமித்தது குறிப்பிடத்தக்கது. #WhatsApp #AbhijitBose #India
சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘வாட்ஸ்-அப்’ செயலியை கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் 130 கோடி வாட்ஸ்-அப் வாடிக்கையாளர்களில் சுமார் 20 கோடி பேர் இந்தியர்கள் ஆவர்.
இவ்வாறு மிகப்பெரிய வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் என்பவரை வாட்ஸ்-அப் நிறுவனம் நியமித்து இருக்கிறது. பிரபல மின்னணு பணப்பரிமாற்ற செயலியான எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
போலி செய்திகள் வேகமாக பரவுவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பதாக வாட்ஸ்-அப் நிறுவனம் மீது இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், இந்த தலைவர் நியமனம் நடந்திருக்கிறது. முன்னதாக குறைதீர் அதிகாரியை நியமிக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் அதிகாரி ஒருவரை வாட்ஸ்-அப் நிறுவனம் சமீபத்தில் நியமித்தது குறிப்பிடத்தக்கது. #WhatsApp #AbhijitBose #India
ஸ்னாப்சாட் செயலிக்கு போட்டியாக வாட்ஸ்அப் செயலியில் புது அம்சத்தை அறிமுகம் செய்யும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsApp
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சத்தினை ஒவ்வொரு மாதமும் சுமார் 45 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதே அம்சத்தை சுமார் 18.8 கோடி ஸ்னாப்சாட் பயனர்கள் பயன்படுத்துகின்றனர். ஏ.ஆர். செல்ஃபி மாஸ்க், அனிமேஷன் ஜிஃப், பிட்மோஜி போன்ற வசதிகள் வழங்கப்படாததே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதுதவிர இந்த ஆண்டின் இரண்டு மற்றும் மூன்றாவது காலாண்டுகளில் ஸ்னாப்சாட் பயனர்கல் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து இருக்கிறது. எனினும், ஸ்னாப்சாட் செயலியில் தானாக மறைந்துபோகும் சாட் வசதி வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் புகைப்படம், வீடியோக்கள் மற்றும் எழுத்துக்களை நிரந்தரமாக பதிவிடும் வசதி மட்டுமே வழங்கப்படுகிறது.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பதிவிட்டதும், அவற்றை அழிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், இது ஸ்டேட்டஸ் பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே வேலை செய்யும். இன்ஸ்டாகிராம் செயலியில், நிரந்தரமாகவும், குறைந்த நேரத்திற்கு என புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ள முடியும். டெக்ஸ்ட் பதிவுகள் நிரந்தரமானவை ஆகும்.
இதேபோன்ற அம்சத்தை வாட்ஸ்அப் மிக எளிமையாக தனது செயலியில் வழங்க இருக்கிறது. இதற்கு பயனர்கள் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிடும் போது தானாக குறிப்பிட்ட நேரத்திற்கு பின் மறைந்துபோகச் செய்ய டைமர் வசதியை சேர்க்க முடியும். வாட்ஸ்அப் செயலியில் தானாக அழிந்து போகும் ஸ்டேட்டஸ் வசதி விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப்பில் எழுத்துக்கள் தானாக அழிந்து போகச் செய்யவோ அல்லது எவ்வளவு நேரம் தெரிய வேண்டும் என்பதை மிக எளிமையாக வழங்க முடியும் என கூறப்படுகிறது. இதுவரை இந்த அம்சம் வழங்கலாமா என்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X