search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99052"

    • சம்பவதன்று வீட்டில் இருந்த சிறுமி வெளியே செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார்.
    • ஆனால், மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் ஓகேனக்கல்லை அடுத்த ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 17வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவதன்று வீட்டில் இருந்த சிறுமி வெளியே செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். ஆனால், மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடிவருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் இண்டூர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த சிறுமி திடீரென்று காணவில்லை. இதுகுறித்து அவரது தந்தை இண்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • தோழி திருமணத்துக்கு சென்ற இளம்பெண் மாயமாகி உள்ளார்
    • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

    திருச்சி,

    பெரிய மிளகு பாறை புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் இவரது மகள் பவித்ரா (வயது 23). பட்டதாரியான இவர், சம்பவத்தன்று சேலத்தில் உள்ள தமது தோழி திருமணத்துக்கு புறப்பட்டுச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவரது தாயார் இந்திரா செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் மாயமான பவித்ராவை போலீசார் தேடி வருகின்றனர்.

    • திருமணமான பெண் மாயமாகி உள்ளார்
    • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கூத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தனபால்(வயது 57). இவரது மகள் கவுசல்யா (33). இவரை காரைக்காட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த வேலுசாமி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கவுசல்யா கூத்தங்குடியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்து விட்டார். கடந்த 3-ந் தேதி காலை தா.பழூர் அரசு மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற அவர், பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து தா.பழூர் போலீசில் தனபால் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து கவுசல்யாவை தேடி வருகிறார்.

    • எலக்ட்ரீசியன் மாயமானார்.
    • இன்ஸ்பெக்டர் கோட்டசாமி வழக்கு ப்பதிவு செய்து வாலிபரை தேடி வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே சின்னபெருமாள் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன், எலக்ட்ரீ சியன். வேலைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் அருண் பாண்டியனின் தந்தை அழகர் கொடுத்த புகாரி ன்பேரில் இன்ஸ்பெக்டர் கோட்டசாமி வழக்கு ப்பதிவு செய்து வாலிபரை தேடி வருகிறார்.

    • சிறுமி-கல்லூரி மாணவி மாயமானார்கள்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள எஸ்.புதுப்பட்டி நல்லம்மாள் நகரை சேர்்நதவர் ரத்னா. இவரது 17 வயது மகள் பிளஸ்-2 ேதர்வில் 3 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. அதற்காக வீட்டில் இருந்து படித்து வந்தார். எப்போதும் செல்போனிலேயே மூழ்கி இருந்ததால் ரத்னா அவரை கண்டித்துள்ளார்.

    இந்த நிலையில் ரத்னா வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்தபோது மகளை காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்ைல. இதுகுறித்து மல்லி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேத்தூர் அருகே அயன்கொல்லங்கொண்டான் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற சூசையப்பர், ஆடு வியாபாரி. இவரது மகள் வெண்ணிலா(வயது19). தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் சூர்யா வெளியூர் சென்று திரும்பியபோது மகளை காணவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை.

    இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதல் ஜோடி மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் மாரீஸ்வரி(வயது19). இவர் கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    அதே கல்லூரியில் படிப்பவர் சங்கரப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்த ராமஜெயம் என்பவரின் மகன் தனுஷ்வரன்(20), மாரீஸ்வரியும், தனுஷ் வரனும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கல்லூரிக்கு சென்ற மாரீஸ்வரி மதியம் வீடு திரும்பவில்லை.

    பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர். மாலையில் அவரது சகோதரர் பிரேம்குமாருக்கு செல்போனில் மாரீஸ்வரி அழைத்துள்ளார். கல்லூரியில் உடன் படிக்கும் தனுஷ்வரனை காதலித்த தாகவும், அவருடன் சென்றிருப்பதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் கூறினார். இதுகுறித்து பிரேம்குமார் பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து தந்தை பாலமுருகன் சங்கரப்பநாயக்கன்பட்டிக்கு சென்று ராமஜெயத்திடம் விசாரித்துள்ளார். அப்ேபாது ராமஜெயம் தனக்கும் இப்போதுதான் தனது மகன் அழைத்ததாகவும் தன்னுடன் படிக்கும் மாரீஸ்வரியை அழைத்து சென்றிருக்கிறேன். அவளை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து இரு வீட்டாரும் காதல்ஜோடியை பற்றி பலரிடம் விசாரித்தும், அவர்களை பல இடங்களில் தேடியும் பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள் என்றும் தெரியவில்லை.

    இதைத்தொடர்ந்து மகளை மீட்டு தருமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.

    • 30-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதன். இவரது மனைவி தனலட்சுமி (வயது33). இவர்களுக்கு இசைநாதன் என்ற மகனும், இளமதி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன மாதன் அவரது மனைவியை பல இடங்களில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் தனலட்சுமி இதுகுறித்து அவரது கணவர் மாதன் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதியவர் திடீரென மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முத்துக்கூறு நாகராஜ்(வயது60) என்பவர் தனது உறவினர்களுடன் சாமி கும்பிட வந்தார். அப்போது நாகராஜ் கோவிலுக்குள் செல்லாமல் வடக்கு சித்திரை வீதியில் உள்ள காலணிகள் பாதுகாப்பு அறை அருகில் காத்திருப்பதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து சாமி கும்பிட சென்ற உறவினர்கள் திரும்பி வந்து பார்த்தபோது நாகராஜ் மாயமாகி இருந்தார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மீனாட்சி அம்மன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • இளம்பெண் மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மலைக்கனி. இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று மலைக்கனி வேலைக்கு சென்று விட்டு திரும்பியபோது மகள் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மலைக்கனி அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • கோழி வியாபாரி மாயமானார்.
    • அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் சண்முகா நகரை சேர்ந்த கோழி வியாபாரி சந்திரகுமார் (வயது55). இவருடைய மனைவி நாகரஞ்சனி. இவர்களது ஒரே மகன் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் சந்திரகுமார் கரிசல்பட்டியில் உள்ள தனது உறவினர் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். மனைவி நாகரஞ்சனி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவர் வீட்டில் இல்லை. அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.

    அதில் வேலை விசயமாக வெளியூருக்கு போகிறேன் என்று எழுதியிருந்தார். இதையடுத்து தனது கணவரை நாகரஞ்சனி பல இடங்களில் தேடினார். ஆனால் அவர் கிடைக்காததால், தனது கணவர் மாயமானது குறித்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • குளித்தலையில் நர்சிங் மாணவி மாயமானார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    குளித்தலை அடுத்த சிவாயம் பஞ்., ஈச்சம்பட்டி காலனியை சேர்ந்தவர் காமாட்சி (வயது 38). கூலி தொழிலாளி. இவரது மகள் மேனகா தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 30-ந் தேதி இரவு குடும்பத்துடன் அனைவரும் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அதிகாலையில் எழுந்து பார்த்த போது மேனகாவை காணவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து காமாட்சி, தன் மகளை காணவில்லை என கொடுத்த புகார்படி குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூர் அருகே கல்லூரி மாணவி மாயமானார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவி கோபிகாவை தேடி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவரது மகள் கோபிகா. இவர் புன்னம்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கோபிகா பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை வேல்முருகன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவி கோபிகாவை தேடி வருகின்றனர்.

    ×