search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99110"

    • ரூ.200 பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ரெட்டிதோப்பு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக, ஆம்பூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று, பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த பாக்யராஜ் மற்றும் குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது.

    • துலாம்பூண்டி கிராமத்தில் சூதாட்டம் நடை பெறுவதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு புகார் கிடைத்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள துலாம்பூண்டி கிரா மத்தில் சூதாட்டம் நடை பெறுவதாக திருக்கோ விலூர் போலீசாருக்கு புகார் கிடைத்தது. புகாரின் பேரில் விரைந்து சென்ற திருக்கோ விலூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் பஸ் நிறுத்தம் பின்புறம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சூதாடிக் கொண்டிருந்த துலாம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய திருக்கோவிலூரைச் சேர்ந்த தர்மா மற்றும் மாயக் கண்ணன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • கள்ளச்சாராய விற்பனை முற்றலும் தடுக்கப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மண்டல் டி.ஐ.ஜி.யாக இருந்த பாண்டியன் பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து விழுப்புரம் மண்டல டி.ஐ.ஜியாக ஜியாவுல் ஹக் நியமிக்கப்பட்டார். அவர் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட விரோத செயல்கள் குறித்து பொது மக்கள் தகவல் அளிக்கலாம். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்த முடியும். தகவல் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் லாட்டரி சீட்டு விற்பனை, சூதாட்டம் முற்றிலும் ஒழிக்கப்படும். பொது மக்கள் எப்போது வேண்டுமானாலும் குறைகளை தெரிவிக்கலாம். ரவுடிகளை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராய விற்பனை முற்றலும் தடுக்கப்படும். புதுைவ மாநிலம் அருகில் விழுப்புரம் உள்ளதால் புதுவையில் இருந்து சாராயம் கடத்தி விற்பனை செய்யப்படுவதை தடுக்க சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்க ப்பட்டு கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
    • ரொக்கம் ரூ. 5,340 பறிமுதல் செய்தனர்.

     பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவி குட்டை பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து காமநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள குட்டை பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட, கரடிவாவியைச் சேர்ந்த ரவி (30),கார்த்தி (36),ஸ்ரீதர் (24), அம்மாசை (24), வடிவேல் (34) ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரொக்கம் ரூ. 5,340 பறிமுதல் செய்தனர்.

    • போலீசாரை கண்டதும் 5 பேரும் தப்பியோட முயற்சி செய்தனர்.
    • தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ஊருக்கு மேற்கு பகுதியில் உள்ள செங்குளத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு சீட்டு விளையாடி கொண்டிருந்த 5 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சி செய்தனர். அதில் 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அவர்கள் கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் (வயது 33), பெரியசாமி (40), சொக்கம்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி (48) ஆகியோர் என்பதும், அவர்கள் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ. 84 ஆயிரத்து 900-ஐ கைப்பற்றினர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கொடுவாய் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் சூதாட்டம் நடைபெற்றது தெரியவந்தது.
    • காங்கயத்தை அடுத்த கொடுவாய் பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஊதியூா் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

    காங்கயம்:

    காங்கயத்தை அடுத்த கொடுவாய் பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஊதியூா் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கொடுவாய் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் சூதாட்டம் நடைபெற்றது தெரியவந்தது.இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட திருப்பூா் பகுதியை சோ்ந்த மணிகண்டன் (50), லோகநாதன் (61), ஆறுமுகம் (50), வாசுதேவன் (63), பிரபாகரன் (41), சரவணகுமாா் (38) உள்பட 13 பேரை கைது செய்த போலீசாா், அவா்களிடமிருந்த ரூ.1.80 லட்சத்தை பறிமுதல் செய்தனா். 

    • வடசிறுவள்ளூர் பகுதியில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
    • வட சிறுவள்ளூர் ஏரிக்கரை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே 5 பேர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடசிறுவள்ளூர் பகுதியில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது வட சிறுவள்ளூர் ஏரிக்கரை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே 5 பேர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். அப்போது போலீசார் வருவதைப் பார்த்து அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் விரட்டிச்சென்று 5 பேரையும் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 27), முருகன் (40), தேவபாண்டலத்தை சேர்ந்த கிருஷ்ணன் (29), சங்கராபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் (48), முத்துசாமி (60) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் ேபாலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

    • 2 குழுவினர் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வி குறித்து பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அவர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருப்பதி:

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் போட்டியை வைத்து பல்வேறு இடங்களில் சூதாட்டம் நடைபெற்று வருகின்றன.

    சென்னை-பெங்களூர் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியை வைத்து தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம், மைலார் தேவப்பள்ளி பகுதியில் கிரிக்கெட் சூதாட்டம் நடந்தது.

    2 குழுவினர் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வி குறித்து பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவலறிந்த போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை கண்ட சிலர் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    அதில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சீட்டு விளையாடி கொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
    • ரூ. 36 ஆயிரத்து 100 மற்றும் 6 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி சீனந்தோப்பு பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக நேற்று மாலை ஆறுமுகநேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    சீட்டு விளையாட்டு

    இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் மற்றும் போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர்.

    அங்கே சிலர் வட்டமாக அமர்ந்தபடி ' உள்ளே வெளியே' என்று கூறி பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    கைது

    விசாரணையில் அவர்கள் தலைவன்வடலி முத்துலிங்கம் (45), பரமன் குறிச்சி சுயம்புலிங்கம் (44), காயாமொழி பால கிருஷ்ணன் (59), காயல்பட்டினத்தை சேர்ந்த சாமு சிராபுதீன்(50), செய்யது(50), தக்கியா சாகிப்(47),சுயம்புலிங்கம் (47), சாகுல் ஹமீது(60) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் அவர்கள் வைத்திருந்த சீட்டுக்கட்டு, ரூ.36 ஆயிரத்து 100 மற்றும் 6 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.46 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். அப்போது வெள்ளக்கோட்டை பகுதியில் 6 பேர் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

    இதையடுத்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.46 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீசார், சூதாடிய வெள்ளக்கோட்டையைச் சேர்ந்த அருண்குமார் (வயது 31), சோலையப்பன் (41), கீழத்தெரு ரமேஷ் (52), திருச்சுழி ரூபன் (41), அன்பு நகர் ஆறுமுகம் (40), முஸ்லிம் கிழக்கு தெரு பாதுஷா (35) ஆகியோரை கைது செய்தனர்.

    • பணம் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த பெருமுகையில் பணம் வைத்து சூதா டுவதாக சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பெருமுகை குடிநீர் தொட்டியின் பின்பகுதியில் மலையடிவாரத்தில் 6 பேர் சூதாடி கொண்டிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர்.
    • 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த பி. முட்லூர் பகுதியில் ஒரு கும்பல் சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததாக பரங்கி ப்பேட்டை இன்ஸ்பெக்டர் குணபாலனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு சீட்டு விளையாடிக் கொண்டிருந்த 10 பேர் கொண்ட கும்பல் தங்களது மோட்டார் சைக்கிளை சம்பவ இடத்திலேயே விட்டு விட்டு அனைவரும் தப்பித்து ஓடினார்கள்.

    இதனை தொடர்ந்து போலீசார் அந்த நபர்களை விரட்டி சென்று பிடிக்க முயன்ற போது யாரும் சிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த 10 மோட்டார் சைக்கிள், 13 ஆயிரத்து 230 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×