search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99161"

    இனிப்பு வகைகளை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு 270 டன் விற்பனை ஆனது. இந்த ஆண்டு 400 டன் விற்பனை ஆகியுள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறினார்.
    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    ஆவின் நிறுவனம் வரலாற்றில் இல்லாத அளவில், தீபாவளி விற்பனை அமைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் 83 கோடி ரூபாய்க்கு ஆவின் பொருட்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு தீபாவளியின்போது ஆவின் விற்பனை ரூ.55 கோடியாகத்தான் இருந்தது.

    குறிப்பாக, கடந்த ஆண்டு ஆவின் நெய் 600 டன் விற்பனை ஆனது. ஆனால் இந்த ஆண்டு 900 டன் விற்பனை ஆகியுள்ளது. இனிப்பு வகைகளை பொறுத்த வரையில் கடந்த ஆண்டு 270 டன் விற்பனை ஆனது. இந்த ஆண்டு 400 டன் விற்பனை ஆகியுள்ளது.

    ஆவின் நெய்

    பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.330 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அரசு துறைகளை சார்ந்த அனைவரும் ஆவின் இனிப்புகளை வாங்கி உள்ளனர். 27 லட்சத்து 60 ஆயிரம் வீடுகளுக்கு தினமும் ஆவின் பால் விநியோகிக்கப்படுவதால், பால் கவர்களில் ஆவின் இனிப்புகள் விளம்பரம் செய்யப்பட்டது. அந்த வகையில் ஆவின் பொருட்கள் பற்றிய விளம்பரம் ஒரே நேரத்தில் 27 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கும் நேரடியாக சென்றடைந்துள்ளது.

    அடுத்தவாரம் சிங்கப்பூருக்கு ஆவின் பொருட்களை அளிக்க உள்ளோம். மிக விரைவில் பக்கத்து மாநிலம் மற்றும் நாடுகளுக்கும் ஆவின் பொருட்களை விற்பனைக்கு அனுப்பி வைக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    நுகர்வோர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த பால்வளத்துறை வளாகத்தில், ஐஸ்கிரீம், நறுமணப்பால், கூல் காபி ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார்.
    சென்னை:

    ஆவின் நிறுவனம் நுகர்வோர்களின் தேவைக்கேற்ப சென்னை மாநகரில் சராசரியாக தினசரி 12.30 லட்சம் லிட்டர் பால், மற்றும் ரூ.20 கோடி மதிப்பிலான பால் பொருட்களை மாதம் தோறும் விற்பனை செய்து வருகிறது.

    சென்னை நகரில் நுகர்வோர்களின் தேவைகளைக் கண்டறிந்து அதற்கேற்ப பொருட்களை வழங்கி, விற்பனையை உயர்த்தத் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றது.

    தற்போது பிஸ்தா, பாதாம், மேங்கோ, கிரேப், ஸ்டிராபெரி, பைன்ஆப்பிள், பிளாக்கரண்ட், லிட்சி, ஆரெஞ்சு, சாக்லெட் என பத்து வகையான குல்பி ஐஸ்கிரீம்கள், மேங்கோ, ஸ்டிராபெரி, பைன்ஆப்பிள், கிரேப், ஆரெஞ்சு, சர்க்கரையில்லா வெண்ணிலா என ஆறு வகையான யோகர்ட், பைன் ஆப்பிள், ஏலக்காய், சாக்லேட், பிஸ்தா, ஸ்டிராபெரி என ஐந்து வகையான நறுமணப்பால் மற்றும் கூல் காபி போன்ற பால் பொருட்கள் பொது மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றது. தற்பொழுது 24 வகையான பால் பொருட்கள் மற்றும் 80 வகையான ஐஸ்கிரீம்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    நுகர்வோர்களின் தேவையை மேலும் பூர்த்தி செய்யும் வகையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த பால்வளத்துறை வளாகத்தில், ஐஸ்கிரீம், நறுமணப்பால், கூல் காபி ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டங்கள் தொடர்பான கையேடு மற்றும் பசுந்தீவன மேம்பாட்டுத் திட்டக் கையேட்டினை வெளியீட்டு, இணையம் மற்றும் ஒன்றியங்களில் பணியாற்றும் 5036 பணியாளர்களுக்கு ரூ.691.45 லட்சம் மதிப்பீட்டிற்கான போனஸ் தொகையினை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

    நுகர்வோர் தங்கள் புகார் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்க 24 மணி நேரம் நுகர்வோர் நலன் மற்றும் சேவைப் பிரிவு கட்டணமில்லா தொலைபேசி 1800 425 3300 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
    ×