search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99169"

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் தேதியை மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று வலியுறுத்தியுள்ளார். #Ramtemple #UddhavThackeray #Ayodhyarally
    லக்னோ:

    அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தாமதம் ஆகியுள்ளது.

    2014-ம் ஆண்டு பா.ஜ.க. வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்ததால் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வழிவகை செய்யப்படும் என்று விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா மற்றும் சங்பரிவார் தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.  

    ஆனால் சட்ட சிக்கல்கள் காரணமாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கப்படவில்லை. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா ஆகிய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மிகப்பிரமாண்ட பேரணி நடத்த விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இதற்காக ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். அயோத்தியில் பேரணி நடத்த போலீசார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    இதுதவிர, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் அறிவிப்பை வெளியிட மத்திய அரசை வலியுறுத்தும் நடவடிக்கைகளில் மிக தீவிரமாக உள்ள சிவசேனா சார்பிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை தனியாக ஒரு பேரணி நடத்தப்படுகிறது.

    இந்த பேரணிக்கு தலைமை தாங்குவதற்காக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பிற்பகல் அயோத்தி நகருக்கு வந்தார். சரயு நதியில் புனித நீராடிய அவர் தனது மகனுடன் நதிக்கரையில் நடந்த ஆரத்தி பூஜையில் கலந்து கொண்டார்.



    அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அயோத்தியில் ராமர்  கோவிலை எப்போது கட்டும்? என்ற தேதியை குறிப்பிடுமாறு வலியுறுத்தினார்.

    நாட்கள் கடந்து, மாதங்கள் கடந்து, ஆண்டுகள் கடந்து, தலைமுறைகளும் கடந்துபோய் விட்டது. அயோத்தியில் கோவில் கட்டுவோம் என்று மட்டும் சொல்லும் நீங்கள் அந்த தேதியை ஏன் சொல்வதில்லை? என்று மத்திய அரசுக்கு அவர் கேள்வி எழுப்பினார்.

    ஸ்ரீராமஜென்ம பூமியான அயோத்தியில் ராமருக்கு கோயில் அமைத்தே தீரவேண்டும். ராமர் கோவில் கட்டும் தேதியை முதலில் நீங்கள் அறிவியுங்கள். மற்றவற்றைப் பற்றி எல்லாம் நாம் பிறகு பேசிக் கொள்ளலாம்.

    இதற்காக, கடந்த நான்காண்டுகளாக தூங்கி கொண்டிருக்கும் கும்பகர்ணனை (மோடி தலைமையிலான மத்திய அரசு) எழுப்புவதற்காக நான் முதன்முறையாக இப்போது அயோத்திக்கு வந்திருக்கிறேன்  என்றும் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார். #Ramtemple #UddhavThackeray #Ayodhyarally  
    அயோத்தியில் ராமர்கோவில் கட்ட பா.ஜனதாவுக்கு ஆர்வம் இல்லை என சிவசேனா கட்சி எம்.பி.யும், அதன் மூத்த தலைவர்களில் ஒருவருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். #ShivSena #SanjayRaut #RamTemple
    புதுடெல்லி:

    சிவசேனா கட்சி எம்.பி.யும், அதன் மூத்த தலைவர்களில் ஒருவருமான சஞ்சய் ராவத் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கோ, உத்தரபிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் அரசுக்கோ எந்த ஆர்வமும் இல்லை. அதற்கான அறிகுறியும் அவர்களிடம் தென்படவில்லை. எனவேதான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை மோடி அரசு தாமதப்படுத்தி வருகிறது.

    முத்தலாக் விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டுவர முடியும் என்கிறபோது, அதே வழியில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உள்ள தடைகளை நீக்குவதற்கு ஒரு அவசர சட்டத்தை மத்திய அரசால் ஏன் பிறப்பிக்க முடியாது?

    அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதை நாங்கள் ஒருபோதும் தேர்தல் பிரசாரமாக வைக்கவில்லை. ஆனால் அதை முன்னிறுத்தி பிரசாரம் செய்தவர்களிடம் கோவில் கட்டும் எண்ணம் இல்லை. 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவதற்கு ஆர்.எஸ்.எஸ். பெரிதும் உதவியது. எனவே அவசர சட்டம் பிறப்பிக்க தவறினால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை ஆர்.எஸ்.எஸ். கவிழ்க்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ShivSena #SanjayRaut #RamTemple 
    அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நேற்று மறுப்பு தெரிவித்தது. #Ayodhya #SupremeCourt #HinduMahasabha
    புதுடெல்லி:

    அயோத்தியில் ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பான வழக்கில், மசூதி தொடர்பாக கடந்த 1994-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறும், இதை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு மாற்றவேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    ராமஜென்ம பூமி-பாபர் மசூதி பிரச்சினை தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான எம்.சித்திக் என்பவரின் சட்டப்படியான வாரிசு தொடர்ந்த இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற அவசியம் இல்லை என கடந்த செப்டம்பர் 27-ந் தேதி நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். மேலும் இந்த வழக்கின் பிற அம்சங்கள் குறித்து அக்டோபர் 29-ந் தேதி விசாரிக்கப்படும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர்.

    அதன்படி இந்த வழக்கு கடந்த மாதம் 29-ந் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்ஜய் கிஷண் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அத்துடன் அயோத்தியின் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 தரப்பும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என அலகாபாத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உள்ளிட்ட சுமார் 14 மனுக்களும் உடன் இணைக்கப்பட்டு விசாரணைக்கு வந்தன. இதில் விசாரணை துவங்கியதுமே இந்த வழக்குக்காக உரிய அமர்வு அமைக்கப்பட்டு அடுத்த ஆண்டு (2019) ஜனவரி முதல் வாரத்தில் இருந்து அல்லது அந்த அமர்வின் வசதிக்கு ஏற்ப இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்ஜய் கிஷண் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று அகில பாரத இந்து மகாசபா தரப்பில் வக்கீல் பருன் குமார் சின்கா ஆஜராகி ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது இந்த வழக்கு நெடுநாட்களாக நிலுவையில் இருப்பதால் இதனை அவசர வழக்காக கருதி விரைவில் விசாரணைக்கு உத்தரவிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் ஏற்கனவே நாங்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளோம். இந்த மனுக்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். விரைந்து விசாரிக்கும் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தனர். #Ayodhya #SupremeCourt #HinduMahasabha
    உத்தரப்பிரதேச மாநிலத்தின் பைசாபாத் எனும் மாவாட்டத்துக்கு அயோத்தி என பெயர் மாற்றம் செய்வதாக முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். #UP #YogiAdityanath #Ayodhya
    லக்னோ:

    உத்தரபிரதேச மாவட்டங்களில் பைசாபாத்தும் ஒன்று. இங்குதான் ராமபிரான் அவதரித்த அயோத்தி நகரம் உள்ளது. எனவே இந்த நகரத்தின் பெயரையே, அந்த மாவட்டத்துக்கும் சூட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை நேற்று அயோத்தியில் நடந்த தீபோத்சவ் நிகழ்ச்சியில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

    இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நமது கவுரவம், மரியாதை மற்றும் பெருமையின் சின்னம்தான் அயோத்தி. ராமபிரான் மூலம் அடையாளம் காணப்படும் இந்த அயோத்திக்கு யாரும் அநீதி இழைக்க முடியாது என்பதை உறுதியாக தெரிவிக்கவே நாங்கள் வந்திருக்கிறோம். உலகின் எந்த சக்தியாலும் அயோத்திக்கு அநீதி இழைக்க முடியாது’ என குறிப்பிட்டார்.



    இதைப்போல மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்த யோகி ஆதித்யநாத், ராம ராஜ்ஜியத்தின் அடிப்படையில் நாட்டில் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருவதாக பிரதமர் மோடியையும் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங் சூக், மாநில கவர்னர் ராம் நாயக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக உத்தரபிரதேசத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அலகாபாத்தின் பெயரை, பிரயக்ராஜ் என மாற்றியது குறிப்பிடத்தக்கது. #UP #YogiAdityanath #Ayodhya
    சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை விட உயரமான சிலையை ராமருக்கு அமைக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. #RamStatue #SamajwadiParty

    லக்னோ:

    குஜராத் மாநிலத்தில் உலகிலேயே உயரமான சிலையாக படேல் சிலை 182 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று ராமர் பிறந்த இடமான அயோத்தியிலும் ராமருக்கு மிகப்பெரிய சிலை அமைக்க வேண்டும் என்று சாமியார் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

    இதை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஏற்றுக் கொண்டுள்ளார். அடுத்த வாரம் அவர் அயோத்திக்கு வர உள்ளார். அங்கு சிறப்பு தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நடைபெறுகிறது. அதில் அவர் பங்கேற்கிறார்.

    அப்போது சிலை அமைப்பதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிலை 152 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட உள்ளது. அதாவது இந்த சிலை படேல் சிலையை விட 30 மீட்டர் உயரம் குறைவாக இருக்கும்.

     


    அயோத்தி சரயூ நதி ஓரமாக சிலை அமைக்கலாம் என திட்டமிட்டுள்ளனர். எந்த இடத்தில் சிலை அமைப்பது என்று இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

    இதற்கிடைய சர்தார் வல்லபாய் படேல் சிலையை விட உயரமான சிலையை ராமருக்கு அமைக்க வேண்டும் என்று சமாஜ் வாடி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர் அசம்கான் கூறியதாவது:-

    படேல் சிலை அமைக்க திட்டமிட்டபோதே ராமர் சிலையையயும் அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கலாம். அதை யார் தடுத்தது.

    படேல் சிலையை விட ராமருக்கு சிறிய சிலையை அமைக்க திட்டமிடுகிறார்கள். அதாவது பிரதமர் அமைத்த சிலையைவிட உயரமான சிலை அமைக்க கூடாது என்ற எண்ணம் உத்தரபிரதேச முதல்-மந்திரிக்கு உள்ளது. அவ்வாறு இருக்க கூடாது.

    சர்தார் வல்லபாய் படேல் சிலையை விட ராமர் சிலை உயரமாக கட்டப்பட வேண்டும். அயோத்தியில் மட்டுமல்ல ராம்பூரிலும் ராமருக்கு மிகப்பெரிய சிலை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #RamStatue #SamajwadiParty

    அயோத்தியில் நடைபெற உள்ள தீபாவளி கொண்டாட்டத்தின் இறுதி நாளான தீப உற்சவத்தில் தென்கொரிய அதிபரின் மனைவி பங்கேற்க உள்ளார். #Ayodhya #DiwaliCelebrations #KoreasFirstLady
    லக்னோ:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் தீப உற்சவம் நடைபெறுகிறது. இதில் உபி கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்த கொண்டாட்டத்தில் தென்கொரிய அதிபர் மூன் ஜேன் இன் மனைவி கிம் ஜங்-சூக் பங்கேற்க உள்ளார். இவர் மூன்றாவது நாள் நடைபெற உள்ள பிரமாண்ட தீப உற்சவத்தில் பங்கேற்கிறார். அன்றைய தினம் சுமார் 3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தப்படும்.



    சிறப்பு விமானம் மூலம் 5ம் தேதி லக்னோ வந்து சேருகிறார் கிம் ஜங்-சூக். அவருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரவு விருந்து அளித்து உபசரிக்கிறார். மறுநாள் (6-ம் தேதி) தனது குழுவினருடன் லக்னோவில் இருந்து அயோத்திக்கு செல்லும் கிம் ஜங்-சூக், சரயு நதிக்கடையில் நடைபெறும் தீப உற்சவ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    பின்னர், ராணி ஹர் ஹூவாங்-ஓக் நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் கிம் ஜங்-சூக். அயோத்தி இளவரசியான சூரிரத்னா தென் கொரியா சென்று அந்நாட்டு மன்னரை மணந்தபின்னர் ஹர் ஹூவாங்-ஓக் என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    உ.பி.யில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கிம் ஜங்-சூக் 7-ம் தேதி காலை சிறப்பு விமானம் டெல்லி சென்று, அங்கிருந்து கொரியாவுக்கு புறப்படுகிறார்.

    தென் கொரிய அதிபரின் மனைவி வருகையையொட்டி அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  #Ayodhya #DiwaliCelebrations #KoreasFirstLady

    இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரவீன் தொகாடியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு கோரிக்கைகள் விடுவதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் பிரதமருக்கு ஆணையிட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #PMModi #AyodhyaRamTempleIssue #PravinTogadia #RSS
    மும்பை:

    விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்து ராஜ்ஜியம் என்பது இஸ்லாமியர்களுக்கு இடமில்லை என்பது பொருள் அல்ல என்ற பகவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    பசுக்களை கொல்பவர்களையும், பாகிஸ்தான் கொடியேந்தி காஷ்மீரில் இருப்பது போன்ற இஸ்லாமியர்கள் இல்லாததே இந்து ராஜ்ஜியம் என தெரிவித்துள்ளார். மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.



    அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என பிரதமர் ஏமாற்றிவிட்டதாக குறிப்பிட்ட தொகாடியா, எஸ்.சி., எஸ்.டி. சட்டப்பிரிவு வந்தபோது அதில் முடிவு எடுக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை எனக்கூறிய பிரதமர் மோடி, அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்தின் முடிவே இறுதியானது என கூறுகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய பிரவீன் தொகாடியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கோரிக்கைகளை விடுப்பதற்கு பதிலாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் உத்தரவிட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #PMModi #AyodhyaRamTempleIssue #PravinTogadia #RSS
    அயோத்தி நிலப் பிரச்சினை தொடர்பான மறுஆய்வு விவகாரத்தை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அக்டோபர் 29-ம் தேதி முதல் விசாரிக்கும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வரவேற்றுள்ளது. #AyodhyaMatter #IsmailFaruquiCase #SupremeCourt #RSS
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி பகுதி யாருக்கு சொந்தம்? என்ற பிரச்சனை பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த பிரச்சனைகளில் ஒன்றான இஸ்மாயில் ஃபரூக்கி என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த 1994-ல் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில், மசூதிகள் முஸ்லிம் மதத்துடன் ஒருங்கிணைந்த இடங்கள் அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.



    இந்த தீர்ப்பை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு மறுஆய்வு செய்ய வேண்டும் என இஸ்லாமியர்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை அக்டோபர் 29-ம் தேதி முதல் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வே விசாரித்து தீர்ப்பளிக்கும் என உத்தரவிட்டது.

    இந்நிலையில், இந்த தீர்ப்பை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வரவேற்றுள்ளது. மேலும், அயோத்தி விவகாரத்தில் முறையான விசாரணை நடைபெற்று உடனடியாக தீர்ப்பு வழங்கப்படும் என நம்புவதாகவும் ஆர்.எஸ்.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #AyodhyaMatter #IsmailFaruquiCase #SupremeCourt #RSS
    அயோத்தி மற்றும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் 497-ஆவது பிரிவு செல்லுபடியாகுமா? என்பது தொடர்பான வழக்கிலும் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. #Ayodhya
    புதுடெல்லி,

    உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் ராமஜென்ம பூமி எனக் கூறப்படும் சர்ச்சைக்குரிய பகுதி எவருக்குச் சொந்தம் என்பது தொடர்பான பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறுகிறது.

    கடந்த 1950-ஆம் ஆண்டில் ஹிந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த கோபால் சிங் என்பவர் அயோத்தி நிலத்துக்கு உரிமை கோரி முதன்முதலாக மனுதாக்கல் செய்தார். அதேபோன்று இஸ்லாமிய அமைப்பு சார்பில் சித்திக் என்பவரும் மனு தாக்கல் செய்தார். மனுதாரர்கள் இருவருமே இறந்துவிட்ட நிலையிலும், அதுதொடர்பான வழக்கு இன்னமும் நிலுவையில் இருந்து வருகிறது.

    இதனிடையே, ராமஜென்ம பூமி தொடர்பாக எம்.இஸ்மாயில் ஃபரூக் என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த 1994-இல் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில், மசூதிகள் முஸ்லிம் மதத்துடன் ஒருங்கிணைந்த இடங்கள் அல்ல என்று தெரிவிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் மூலம் மறுஆய்வு செய்யக் கோரி முஸ்லிம்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் கொண்ட அமர்வு வியாழக்கிழமை (இன்று) தீர்ப்பளிக்கவுள்ளது.

    அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை, சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகியவை சம பாகங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-இல் அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களும் சுப்ரீம் கோர்ட் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், இந்திய தண்டனையியல் சட்டத்தின் 497-ஆவது பிரிவு செல்லுபடியாகுமா? என்பது தொடர்பான வழக்கிலும் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. இப்பிரிவானது, வேறொரு நபரின் மனைவி என்று தெரிந்திருந்தும், அந்த நபரின் சம்மதத்துடனோ, சம்மதம் இல்லாமலோ அப்பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்பவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வகை செய்கிறது.
    பா.ஜ.க.வின் தீர்மானத்தின்படி அயோத்தியில் வரும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும் என ராம் விலாஸ் வேதாந்தி தெரிவித்துள்ளார். #RamMandir
    லக்னோ:

    2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது, மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமருக்கு மிக பிரமாண்டமான கோயில் அமைக்கப்படும் என பா.ஜ.க. வாக்குறுதி அளித்திருந்தது.

    தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த பின்னர் இதுதொடர்பாக பிரதமர் மோடியோ, மத்திய மந்திரிகளோ பரபரப்பான அறிக்கை ஏதும் வெளியிடவில்லை. சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் மேல்முறையீடு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் வெளிப்படையான கருத்துகள் வெளியிடுவதை இவர்கள் தவிர்த்து வருகின்றனர்.

    ஆனால், பா.ஜ.க.வை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் எம்.பி.க்களும் அவ்வப்போது ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக தங்களது எண்ணத்தை பதிவு செய்து வருகின்றனர்.

    அவ்வகையில், பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் எம்.பி.யும், ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்பின் தலவருமான ராம் விலாஸ் வேதாந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    பா.ஜ.க.வின் தீர்மானத்தின்படி அயோத்தியில் வரும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். #RamMandir #RamVilasVedanti
    அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது உறுதி; எந்த தேதி என்பதை ராமர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசியதாவது:-

    பா.ஜனதாவின் பலம் அதிகரித்து வருவதை கண்டு எதிர்க்கட்சிகள் கவலை அடைந்துள்ளன. இதனால் நாட்டின் வளர்ச்சியை அக்கட்சிகள் எதிர்க்கின்றன. பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் கைகோர்த்துள்ளன. நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அக்கட்சிகள் நினைக்கின்றன. அந்த குழப்பத்தில் ஆதாயம் அடைய அந்த கட்சிகள் விரும்புகின்றன.

    கூட்டணிக்கு தலைமை வகிப்பது யார் என்பதை கூட எதிர்க்கட்சிகளால் தீர்மானிக்க முடியவில்லை. கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திறன் கொண்ட ஒரு தலைவரை எதிர்க்கட்சிகளால் முன்னிறுத்த முடியவில்லை.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது உறுதி. இதில் மக்கள் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால் ராமர்தான் கோவில் கட்டப்பட வேண்டிய தேதியை முடிவு செய்ய வேண்டும்.

    நாட்டின் வளர்ச்சியை முன்வைத்து 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை பா.ஜனதா எதிர்கொள்ளும். தேர்தலில் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக சாதியை வைத்து அரசியல் செயயும் எண்ணம் பா.ஜனதாவுக்கு இல்லை. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #YogiAdityanath #RamaTemple
    ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி லக்னோவில் இருந்து அயோத்திக்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி பேரணி நடத்தப்போவதாக பிரவீன் தொகாடியா அறிவித்துள்ளார். #PravinTogadia
    பைசாபாத்:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவரான பிரவீன் தொகாடியா  தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கைக்கு ஆதரவு திரட்டுவதற்காக அக்டோபர் மாதத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து அயோத்தி வரை பேரணி நடத்த இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பைசாபாத் மற்றும் அயோத்திக்கு இன்று சென்ற பிரவீன் தொகாடியா, ராமர் கோவில் இயக்கத்திற்கு தொடர்புடைய தலைவர்களை சந்தித்து பேசினார். அதன்பின்னர், பேரணி நடத்தும் தேதியை அறிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டும் வகையில், வரும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி லக்னோவில் இருந்து அயோத்தி வரை பேரணி நடத்த உள்ளேன். ராம ஜென்ம பூமிக்காக இந்துக்கள் செய்த தியாகத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையிலும், ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் இந்த பேரணி நடத்தப்படுகிறது. இதில், லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள்’ என்றார்.

    ராமர் கோவில் விஷயத்தில் மோடி இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக பிரவீன் தொகாடியா குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. #PravinTogadia
    ×