search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99197"

    பட்டாசுகள் பாதுகாப்பாய் வெடிப்பது முதல் அதனை வெடித்து முடித்து சுத்தம் செய்வது வரை அனைத்து நிலையிலும், மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம்.
    தீபாவளிக்கு பட்டாசுதான் ஒரு முழுமையை தரும். அதனால் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவதில்லை. ஏதேனும் ஒர் வெடியோ, மத்தாப்போ, வீட்டின் முன் வைத்து வெடிப்பதன் மூலம் தீபாவளியின் முழுமையான மகிழ்ச்சி வெளிப்பாடு நிறைவேறுகிறது. மகிழ்ச்சியோடு வெடி வெடிப்பது என்பது, சில சமயம் தவறான மற்றும் எதிர்பாராத செயல்பாடுகளின் மூலம் விபத்துகளை ஏற்படுத்தி விட கூடும். எனவே மகிழ்ச்சியான தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிப்பது என்பது கவனத்துடன் கையாள வேண்டும். பட்டாசுகள் பாதுகாப்பாய் வெடிப்பது முதல் அதனை வெடித்து முடித்து சுத்தம் செய்வது வரை அனைத்து நிலையிலும், மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம்.

    பட்டாசு வெடிக்கும் போது செய்ய கூடாதவை:-

    நாம் அணிகின்ற ஆடை என்பது எளிதில் தீப்பற்றி விடாத வகையில் இருத்தல் வேண்டும். நைலான், பாலிஸ்டர் ஆடைகள் அணிந்து கொண்டு பட்டாசு வெடித்தல் கூடாது. பருத்தி துணிகள் அணிவது பாதுகாப்பானது. பட்டாசு வெடிக்கும் போது வெளிவரும் தீப்பொறி பட்டாலும் நைலான் ஆடைகள் பொசுங்கி விட கூடும். அதுபோல், தரை வரை புரள விட்டு செல்லும் பிரமாண்ட ஆடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பது கூடாது. புதிய ஆடைகளை வெளியே மற்றும் விருந்தினர் வீட்டிற்கு செல்லும் போது அணிந்து சென்று பட்டாசு வெடிக்கும் போது பருத்தியிலான கச்சித மான ஆடைகள் அணிதல் வேண்டும்.

    பட்டாசுகள் கொளுத்து வதற்கு தீக்குச்சி மற்றும் லைட்டர் போன்றவற்றை பயன்படுத்த கூடாது. நீளமான குச்சியுடன் கூடிய ஊதுபத்தி, மத்தாப்பூ போன்றவை மட்டுமே பயன்படுத்திட வேண்டும். பட்டாசிற்கும் நமக்கும் சற்று இடைவெளி இருப்பது மிகவும் அவசியம்.

    வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க செய்கிறோம் என அதனை கையில் எடுத்து ஆராய்ச்சி செய்வதும் கூடாது. ஒருமுறை தீப்பொறி பட்ட பட்டாசு என்பது சில சமயம் சற்று தாமதமாக கூட வெடிக்க கூடும். எனவே வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுப்பது, மீண்டும் மீண்டும் அதன் மீது நெருப்பு வைப்பது போன்ற பணிகளை செய்தல் கூடாது.

    கையில் வைத்து வெடிப்பது, பொதுமக்கள் செல்லும் போது அவர்கள் மீது தூக்கி எறிந்து பட்டாசு வெடிப்பது போன்ற செயல்களை செய்தல் கூடாது.

    வீட்டின் உட்புறம் மற்றும் வாகன நிறுத்தம் உள்ள பகுதிகளில் பட்டாசு வெடித்தல் கூடாது.

    பட்டாசுகள் வைத்திருக்கும் இடத்தில் அருகில் விளக்குகள்,வெப்பமான மின் விளக்குகள் எரிய விடக்கூடாது. அது போல் பட்டாசுகளை கையில் வைத்து கொண்டு பிற பட்டாசுகளை வெடிக்க செய்யக் கூடாது.

    நெருக்கமான வீடுகள் உள்ள பகுதியில் பட்டாசு வெடிப்பது தவிர்த்திட வேண்டும். மேலும் ஓலை வீடுகள் அருகில் ராக்கெட் போன்ற பாய்ந்து செல்லும் வெடிகளை வெடிப்பதை தவிர்த்திட வேண்டும். மத்தாப்பூ கம்பிகளை பற்ற வைத்து விட்டு ஆங்காங்கே தூக்கி எறிதல் கூடாது. பாதுகாப்பாக ஓர் பகுதியில் சேகரித்து பின்னர் அதனை வெளியேற்றிட வேண்டும்.



    பட்டாசு வெடிக்கும் போதுசெய்ய வேண்டியவை

    பட்டாசு வெடிக்கும் போது காலில் செருப்பு அணிந்து தான் வெடித்திட வேண்டும்.

    ஓரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் மணல் போன்றவை அருகில் வைத்திருப்பது வேண்டும்.

    எந்த ஒரு பட்டாசை வெடிக்கும் முன்னும் அதன் பெட்டியில் குறிப்பிட்டுள்ள செயல்முறைகளை படித்து பார்த்து அதற்கு ஏற்ப வெடித்திட வேண்டும்.

    பட்டாசு வாங்கும் போது அது முறையான அனுமதி பெற்று தயாரிக்கப்பட்ட தரமான பட்டாசு தானா என ஆராய்ந்து வாங்குதல் வேண்டும்.

    குழந்தைகளை பட்டாசு வெடிக்கும் பகுதியில் இருந்து தூர நிற்க வைத்து பார்க்க செய்ய வேண்டும். பெரிய வெடிகளை குழந்தைகளிடம் கொடுத்து வெடிக்க செய்கிறோம் என ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டாம்.

    பெரும்பாலும் திறந்த வெளி பகுதிகளில் பட்டாசு வெடிப்பது நன்மையளிக்கும். ஓரே நேரத்தில் பல வெடிகள் மற்றும் மத்தாப்பூகளை கொளுத்துவது வேண்டாம்.

    வெடிக்காத பட்டாசுகள் மீது தண்ணீர் ஊற்றி அதனை அணைத்து விட வேண்டும்.

    சாலைகளில் பட்டாசு வெடிக்கும் போது மக்கள் நடமாட்டத்தை கவனித்து பட்டாசு வெடித்தல் வேண்டும். யாரேனும் வந்தால் உடனே முன்னெச்சரிக்கையாக சைகை செய்து அவர்களை அங்கேயே தூரமாக நிற்க செய்திட வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது குனிந்து முகத்தை அதன் அருகில் கொண்டு சென்று பற்ற வைக்க கூடாது. நீளமான குச்சி ஊதுபத்திகள் அதிகம் பயன்படுத்திடல் வேண்டும்.

    முதலுதவி மற்றும் பாதுகாப்பபு நடவடிக்கைகள்

    பட்டாசுகள் எதிர்பாராவித மாக அதிகபடியாய் வெடித்து விபத்து ஏற்படின் வாளியில் உள்ள தண்ணீர் மற்றும் மணலை கொட்டி அணைத்திட வேண்டும்.

    நமது கால், கைகளில் ஏதேனும் தீப்பட்டு விட்டால் உடனே தண்ணீரை ஊற்றி அதனை குளிர்ச்சி படுத்திவிட்டே பின் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

    கண்கள் மீது ஏதும் தீப்பொறி பட்டு விட்டால் நன்றாக தண்ணீர் விட்டு கழுவி விட வேண்டும். மெல்லிய ஆடைகள் அணிவதை தவிர்த்து கனமான ஆடைகள் அணிவது மிகுந்த நன்மையளிக்கும்.

    பெரும்பாலும் தீபாவளி சமயத்தில் வீடுகளின் ஜன்னல் களை மூடியே வைத்திருப்பது நல்லது. ஏனெனில் உயர சென்று வெடிக்கும் வெடி, ராக்கெட் போன்றவை தவறுதலாக வீட்டின் ஜன்னல் வழியே உள்ளே வர வாய்ப்பிருக்கிறது.

    விளக்குகள் ஏற்றி வைத்திருப்பின் அதன் அருகே துணிகள் மற்றும் திரை சீலைகள் படாமல் பார்த்து கொள்ளவும். குழந்தைகள் பட்டாசு வெடித்து முடித்ததும் கைகளை நன்றாக கழுவிவிட சொல்லவும். பட்டாசுகளில் இரசாயன துகள்கள் கைகளில் பட்டு ஓவ்வாமை ஏற்படவும், உணவுகளோடு சேர்ந்து உடலுக்குள் செல்லவும் வாய்ப்பு உள்ளது.

    எனவே தீபாவளியின் போது பாதுகாப்பாய் பட்டாசு வெடிப்போம். மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்.
    சுப்ரீம் கோர்ட் உத்தரவின் எதிரொலியாக, தீபாவளி அன்று கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. #Diwali #Crackers #TNGovt #SC
    சென்னை:

    தீபாவளி பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து, பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கூடுதல் நேரம் ஒதுக்க மறுத்துவிட்டது. 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டது.

    என்றாலும் பட்டாசு வெடிக்கும் 2 மணி நேரம் எது என்பதை தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

    அதன்படி, தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு நேரம் நிர்ணயித்தது.

    இந்த உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பக்கூடிய சரவெடி போன்ற பட்டாசுகள் வெடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதேபோல் பட்டாசு கடைகளில் அதிக புகை வரக்கூடிய மற்றும் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்கவும், பட்டாசு கடைகளில் பட்டாசு விற்பனை செய்வதை கண்காணிப்பது தொடர்பாகவும் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்த உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.



    அந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதையும், கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்வதையும் கண்காணிக்க தனி போலீஸ் படைகள் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்தந்த மாவட்டங்களில் இதுதொடர்பாக கண்காணிப்பு தனிப்படைகள் அமைக்க அறிவுரை வழங்கப்பட்டது.

    இதன்பேரில் தமிழகம் முழுவதும் சுமார் 500 கண்காணிப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கோர்ட்டு உத்தரவை மீறி, பட்டாசு வெடித்தால் அது கோர்ட்டு அவமதிப்பு செயல் ஆகும்.

    இதற்கு இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின் கீழ் 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க வழிவகை உள்ளது.

    எனவே பொதுமக்களும், பட்டாசு வியாபாரிகளும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறாமல் நடந்துகொள்ள வேண்டும் என்று அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னையை பொறுத்தமட்டில், நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்படும் என்றும், கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசுகள் வெடிக்கும் பட்சத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    வழக்கமாக தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பாகவே சென்னை மாநகரம் பட்டாசு வெடியால் கோலாகலமாக காணப்படும். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதில் அதிக ஆர்வம் இல்லாமல் உள்ளனர். #Diwali #Crackers #TNGovt #SC
    தீபாவளியை பயந்து பயந்து கொண்டாட வேண்டிய சூழ்நிலையை உருவாக்க கூடாது என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #BJP #TamilisaiSoundararajan
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு இந்தியாவில் வளர்ந்து வரும் அரசியல் நட்சத்திரம் என்ற விருதை அமெரிக்க நிறுவனம் வழங்கியது. விருது பெற்றுவிட்டு டாக்டர் தமிழிசை நேற்று இரவு சென்னை திரும்பினார்.

    சென்னை விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜனதாவினர் உற்சாக வரவேற்பளித்தனர். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர்.

    கட்சி நிர்வாகிகள் நரேந்திரன், எம்.என்.ராஜா, வினொஜ் செல்வம், தாமரை மணிகண்டன், காளிதாஸ், வழக்கறிஞர்கள் பிரிவு செயலாளர் தங்கமணி, முத்துக்கண்ணன், ஜெய் சங்கர், தனஞ்செயன், கிருஷ்ணகுமார், மோகன ராஜா, பாஸ்கர், தசரதன் உள்பட பலர் சால்வைகள், மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.

    விவேகானந்தரின் மண்ணில் இருந்து அவருக்கு பெருமை சேர்த்த மண்ணில் சென்று விருது பெற்றது மகிழ்ச்சி. இந்த விருதை பா.ஜனதா தொண்டர்களுக்கும், தமிழர்களுக்கும் சமர்பிக்கிறேன். அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நான் இல்லை.

    அமெரிக்காவில் நம் பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. நேர்மறையான அரசியலை அவர்கள் விரும்புகிறார்கள். உலக அளவில் இந்தியாவின் கவுரவம் உயர்ந்து வருகிறது.

    ஒலியும், ஒளியும் சேர்ந்தது தான் தீபாவளி பண்டிகை. இதில் ஒலிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொழிலையும், மகிழ்ச்சியையும் பாதிக்கும். பண்டிகையை பண்டிகையாக கொண்டாட விட வேண்டும். தண்டனை விழாவாக்க கூடாது. வேண்டிய தீபாவளியை பயந்து பயந்து கொண்டாட வேண்டிய சூழ்நிலையை உருவாக்க கூடாது.

    ஏற்கனவே கோர்ட்டு தீர்ப்பால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் மத்தியில் கூடுதல் நேரம் பட்டாசு வெடித்தால் 6 மாதம் ஜெயில் என்று பீதியை ஏற்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan
    ரெயில்களில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து காட்பாடியில் சோதனை நடத்தப்பட்டது.
    வேலூர்:

    தீபாவளி என்றாலே பட்டாசு தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். அந்த அளவுக்கு பட்டாசுகளை மக்கள் வெடித்து மகிழ்ச்சி அடைவார்கள்.

    புத்தாடை வாங்குவதற்கு ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதுவதை போல பட்டாசு கடைகளிலும் அலைமோதும். இப்படி வாங்கப்படும் பட்டாசுகளை ரெயில்களில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பட்டாசுகளை ரெயிலில் எடுத்து செல்ல கூடாது என காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ரெயில் நிலையங்களில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ரெயில்களில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை எடுத்து செல்லக்கூடாது. மீறி எடுத்து சென்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

    இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் கூறுகையில்:-

    இந்திய ரெயில்வே சட்டம் 164வது பிரிவின் படி, ரெயில்களில் பட்டாசு, பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட இதர வெடிபொருட்களையும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களையும் எடுத்து செல்வது குற்றச்செயலாகும்.

    இந்த சட்டத்தின்படி அதிகபட்சம் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், பட்டாசு கொண்டு செல்ல கூடாது என அறிவுறுத்தி வருகிறோம்.

    விதிமுறையை மீறி பட்டாசு கொண்டு செல்லப்படுவது கண்டறிப்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    தமிழகத்தில் தீபாவளி நாளில் 2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. #Diwali #DiwaliCrackers #CrackersBurstingTime #SupremeCourt
    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசுகளை தயாரிக்கவோ விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை இல்லை என தீர்ப்பளித்தது. அதேசமயம், பட்டாசுகளை தயாரிக்கவும் வெடிக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

    குறிப்பாக தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது இரவு 11.30 மணி முதல் இரவு 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என நிபந்தனை விதிக்கப்பட்டது. மேலும், பட்டாசு தயாரிக்கவும், விற்பனை செய்யவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.



    இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழக அரசின் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு வக்கீல் பா.வினோத் கன்னா மனுவை தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், கோர்ட்டு உத்தரவின்படி குறைந்த அளவு நேரமான 2 மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கும் போது ஒரே நேரத்தில் அனைவரும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பெருமளவில் மாசுக்கேடு விளைவிக்கும் என்றும், தீபாவளியின் போது தமிழ்நாட்டில் வசிக்கும் மக்கள் அன்று கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க (அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை) அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    அந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் அரசு வக்கீல் பா.வினோத் கன்னா கோரிக்கை விடுத்தார்.

    இதேபோல் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பான நிபந்தனைகளை தளர்த்தக்கோரி சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த இரண்டு மனுக்களும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி என்றும், எந்த 2 மணி நேரம் என்பதை அரசு முடிவு செய்யலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    காலையில் ஒன்றரை மணிநேரம், மாலையில் ஒன்றரை மணி நேரம் அனுமதி வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

    பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்த தமிழக மக்கள் இந்த தீர்ப்பினால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். #Diwali #DiwaliCrackers #CrackersBurstingTime #SupremeCourt

    தீபாவளி சீட்டு நடத்தி அனுமதியில்லாமல் பட்டாசு விநியோகம் செய்யும் நபர்களிடமிருந்து பொதுமக்கள் பட்டாசு வாங்க வேண்டாம் என்று காஞ்சீபுரம் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #Diwali
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசின் அனுமதியின்றி பட்டாசு கடை வைத்திருந்தாலோ, பட்டாசு தயாரித்தாலோ, வீட்டிலேயே வைத்து விற்பனை செய்தாலோ, நிதி சீட்டு நடத்தி அதன் மூலம் பொது மக்களுக்கு பட்டாசு விநியோகம் செய்தாலோ சட்டப்படி குற்றமாகும்.

    இவ்வாறு ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டால் வெடி பொருட்கள் சட்டம் 1884 மற்றும் வெடி பொருட்கள் விதிகள் 2008-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    பட்டாசு கடை நடத்த உரிமம் பெற்றுள்ள வியாபாரிகள் கடையில் உரிமத்தின் நகலை பொதுமக்கள் அறியும் வகையில் காட்சிபடுத்திட வேண்டும். விதிகளுக்குட்பட்டு தீ தடுப்பு சாதனங்களுடன் கடை அமைக்கப்பட வேண்டும்.

    பொதுமக்கள், அனுமதியில்லாமல் பட்டாசு விநியோகம் செய்யும் நபர்களிடமிருந்து பட்டாசு வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #Diwali

    மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. சிந்தாமணி மாளவியா, ‘நான் தீபாவளி அன்று இரவு 10 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிப்பேன்’ என தெரிவித்துள்ளார். #BJP #ChintamaniMalviya #FireCrackers
    போபால்:

    தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. சிந்தாமணி மாளவியா, ‘நான் தீபாவளி அன்று இரவு 10 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிப்பேன்’ என தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் தீபாவளி பண்டிகையை பாரம்பரிய முறைப்படி கொண்டாடுவேன். இரவு 10 மணிக்கு லட்சுமி பூஜை முடிந்த பிறகே பட்டாசுகள் வெடிப்பேன். இந்து பாரம்பரியங்களில் பிறரின் தலையீட்டை நான் சகித்துக்கொள்ள மாட்டேன். என் மத பாரம்பரியத்தை கடைப்பிடிப்பதற்காக சிறை செல்வதாக இருந்தாலும், அதற்காக சந்தோஷப்படுவேன். இந்து விழாக்களை எப்போது கொண்டாட வேண்டும் என்பதற்கு ஏற்கனவே இந்து நாட்காட்டி உள்ளது. விழாக்களை நடத்த கால நேரம் நிர்ணயம் விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முகலாயர்கள் ஆட்சியின் போது கூட, இந்து விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது இல்லை.

    இவ்வாறு சிந்தாமணி மாளவியா கூறி உள்ளார். 
    தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு கோர்ட்டு விதித்துள்ள நிபந்தனைகளை ரத்து செய்ய அரசு முயற்சிக்க வேண்டும் என ராமகோபாலன் கூறியுள்ளார். #Diwali
    சென்னை:

    இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக கருதப்பட்டு வருவது நீதிமன்றங்கள்.

    ஆனால், சமீப காலங்களில் அடுத்து அடுத்து வந்த தீர்ப்புகளான, ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது, தகாத உறவு குற்றமில்லை என்றது, ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்பது உள்பட பல தீர்ப்புகள் இந்துக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளன.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பது குறித்த தீர்ப்பு நேற்று வந்துள்ளது. தீபா வளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும். அதே சமயம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய நாட்களில் இரவு 11.55 மணியிலிருந்து 12.30 மணி வரை வெடிக்கலாம்.

    கண்டிப்பாக தீபாவளி இரவு நேரத்தில் கொண்டாடப் படுவதில்லை. ஒரு மதத்தின் நம்பிக்கையை ஏற்போம். பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை மதிக்க வேண்டிய அவசியமில்லை என்ற இரட்டை நிலைப் பாடு, ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கிவிடும். மக்களின் கடைசி நம்பிக்கையாக இருந்த நீதிமன்றங்கள் இன்று, அவநம்பிக்கையின் முதலிட மாக மாறுவது ஆபத்தானது என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்டுகிறது.

    உச்சநீதி மன்றம், பட்டாசு வெடிக்க விதித்துள்ள கட்டுப்பாடு களை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சியை உடனே எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. நமது பாரம்பரிய விழாக்கள், பண்டிகைகள் குறித்து போடப்படும் வழக்குகளில் இன்னமும் அரசு வழக்கறி ஞர்கள் அதிக கவனம் கொடுத்து வாதாடி மக்களின் உணர்வுகளை, உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

    வருகின்ற தீபாவளி திருநாள் எந்தவித இடர் பாடும் இல்லாமல் மக்கள் கொண்டாட, இந்து முன்னணி இயக்கம், மக்களை ஒருங்கிணைத்து ஜனநாயக வழியில் போராடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Diwali
    திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டாசுகளை சில்லறை விலையில் விற்பனை செய்வதற்கு நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    பட்டாசுகளை சில்லறை விற்பனை செய்வதற்கான தற்காலிகமாக உரிமம் இணைய வழி மூலமாக விண்ணப்பம் செய்து பெற நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு சட்டமன்றத்தில் நடந்த மானிய கோரிக்கையின் மீது அறிவிக்கப்பட்டது.

    வணிகர்கள் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக இவ்வுரிமங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதாலும், கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரின் அறிவுரைப்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டாசு சில்லறை விற்பனை செய்வதற்கு தற்காலிக உரிமம் பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    உரிமம் பெற விரும்பும் வணிகர்கள் வெடிபொருள் சட்ட விதிகள்-2008ல் சொல்லப்பட்டுள்ள விதிகளின்படி தங்களுடைய விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வருகிற 28-ந் தேதிக்குள் மாவட்ட கலெக்டருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

    ×