search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிமெயில்"

    கூகுள் நிறுவனம் தனது பயனர் அக்கவுண்ட்களை பாதுகாக்கும் நோக்கில் புது நடவடிக்கையை அமல்படுத்த இருக்கிறது.


    கூகுள் நிறுவனம் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு கொண்டுவரப் போவதாக மே மாத வாக்கில் அறிவித்து இருந்தது. அதன்படி இந்த வழிமுறை நவம்பர் 9 ஆம் தேதி அமலுக்கு வருகிறது.

    இதனை செயல்படுத்திய பின், பயனர் ஒவ்வொரு முறை கூகுள் கணக்கில் லாக்-இன் செய்யும் போதும் குறுந்தகவல் அல்லது மின்னஞ்சலில் ஒருமுறை பயன்படுபத்தக்கூடிய கடவுச்சொல் (ஓ.டி.பி.) வரும். இதனை பதிவிட்டால் தான் கணக்கில் நுழைய முடியும். இந்த வழிமுறை பயனர் கணக்குகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும்.

     கூகுள் 2-ஸ்டெப் வெரிபிகேஷன்

    நவம்பர் 9 ஆம் தேதி முதல் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறை பயனரின் கூகுள் அக்கவுண்டில் தானாக அமல்படுத்தப்பட்டு விடும் என பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கூகுள் நிறுவனம் தெரியப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 150 மில்லியன் கூகுள் பயனர்களின் அக்கவுண்ட்களுக்கு 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூகுள் அறிவித்து இருக்கிறது.
    கூகுளின் ஜிமெயில் ஐ.ஓ.எஸ். தளங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் வழங்கப்படுகிறது. #Gmail



    கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையின் மொபைல் தளங்களில் சமீபத்தில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஐ.ஓ.எஸ். தளத்துக்கான ஜிமெயில் சேவையில் புதிய ஸ்வைப் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

    அதன் படி ஐ.ஓ.எஸ். ஜிமெயில் செயலியில் ஆர்சிவ் (Archive), டிராஷ் (Trash), மார்க் ஆஸ் ரீட்/அன்ரீட் (Mark as read/unread), ஸ்னூஸ் (Snooze) மற்றும் மூவ் டு (Move to) என பல்வேறு அம்சங்களை ஸ்வைப் மூலம் இயக்கலாம். இந்த அம்சம் கொண்டு பல்வேறு அம்சங்களை மிக எளிமையாக ஸ்வைப் செய்தே இயக்க முடியும்.



    பயனர்கள் ஸ்வைப் அம்சத்தை இயக்க ஐ.ஓ.எஸ். ஜிமெயில் செயலியின் செட்டிங்ஸ் -- ஸ்வைப் ஆக்ஷன்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்யலாம். மேலும் இதே அம்சங்களை கொண்டு நோட்டிஃபிகேஷன்களையும் இயக்கலாம். உதாரணத்திற்கு மின்னஞ்சல்களை ஸ்னூஸ் செய்ய ஜிமெயில் ஐ.ஓ.எஸ். நோட்டிஃபிகேஷனை அழுத்திப் பிடித்து ஸ்னூஸ் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்யும் போது எதுவரை மின்னஞ்சல்களை ஸ்னூஸ் செய்ய வேண்டும் என்பதை தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். இத்துடன் புதிய அம்சங்களுடன் அட்டாச்மென்ட் க்விக் வியூ, அக்கவுண்ட்களிடையே ஸ்விட்ச் செய்தல் உள்ளிட்டவையும் சேர்க்கப்பட்டுள்ளன. 
    ஃபேஸ்புக் வலைதளத்தில் நீங்கள் கடந்து வரும் போஸ்ட்களுக்கு தானாக கமென்ட்களை பரிந்துரை செய்யும் புதிய வசதி சோதனை செய்யப்படுகிறது. #Facebook



    ஃபேஸ்புக் தளத்தில் நீங்கள் கடந்து வரும் பதிவுகளுக்கு தானாக கமென்ட்களை பரிந்துரை செய்யும் புதிய வசதி சோதனை செய்யப்படுகிறது.

    புதிய வசதியின் மூலம் ஃபேஸ்புக் தளத்தில் நீங்கள் கடந்து போகும் போஸ்ட்களுக்கு ஃபேஸ்புக் சார்பில் கமென்ட்கள் பரிந்துரை செய்யப்படும். குறிப்பிட்ட போஸ்ட்களின் அர்த்தத்தை தானாக புரிந்து கொள்ளும் ஃபேஸ்புக் மென்பொருள் அதற்கு பொதுவான கமென்ட்களை பரிந்துரை செய்யும், பின் அதனை பதிவிட நீங்கள் ஒற்றை கிளிக் செய்தாலே போதுமானது.

    தற்சமயம் சோதனை செய்யப்படும் இந்த அம்சம் கூகுளின் ஜிமெயில் சேவையில் சமீபத்தில் வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரிப்ளை அம்சத்தை போன்றதாகும், எனினும் ஃபேஸ்புக்கில் சோதனை செய்யப்படும் புதிய வசதி போஸ்ட்களை தானாக புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற கமென்ட்களை பரிந்துரை செய்யும்.



    நேரலை வீடியோக்களில் பயனர்கள் கண்டறிந்த புதிய அம்சம் வழங்கப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிடப்பட்டு இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில் ஃபேஸ்புக் பரிந்துரை செய்திருக்கும் கமென்ட்கள் சிறியதாக இருந்தாலும், அவை சீராக வேலை செய்வதாகவே தெரிகிறது.

    புதிய வசதியின் மூலம் ஃபேஸ்புக் தள பயன்பாட்டை அதிகரிக்க முடியும். எனினும், இந்த போஸ்ட்களில் பிழை ஏற்படுத்தும் டூல்கள் பயன்படுத்தாமல் இருப்பதை ஃபேஸ்புக் உறுதிப்படுத்த வேண்டும்.

    சமீபத்தில் ஃபேஸ்புக் தளத்தில் யுவர் டைம் ஆன் ஃபேஸ்புக் எனும் அம்சம் வழங்கப்பட்டது. இந்த அம்சம் கொண்டு ஃபேஸ்புக்கில் எவ்வளவு நேரம் செலவிட்டிருக்கிறோம் என பயனர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
    கூகுளின் ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஏற்கனவே டெஸ்க்டாப் வெர்ஷனில் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #Gmail #Apps


    கூகுளின் மேம்படுத்தப்பட்ட ஜிமெயில் தளத்தில் புதிய கான்ஃபிடென்ஷியல் மோட் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை டெஸ்க்டாப் தளத்தில் மட்டும் வழங்கப்பட்டு இருந்த நிலையில், இந்த அம்சம் ஆன்ட்ராய்டு தளத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. 

    சர்வெர் சைடு அப்டேட் என்பதால் புதிய அம்சம் அனைவருக்கும் கிடைக்க சில காலம் ஆகும் என்றே தெரிகிறது. கான்ஃபிடென்ஷியல் மோட் மூலம் அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின் தானாக அழிந்து விடும். ஜிமெயில் அல்லாத அக்கவுனட்களில் மின்னஞ்சலை திறக்க பிரத்யேக லின்க் அனுப்பப்படும்.

    ஜிமெயில் பயனர்களுக்கு மின்னஞ்சல்கள் வழக்கமான மின்னஞ்சல்களை போன்றே வரும். கான்ஃபிடென்ஷியல் மோட் பயன்படுத்த மின்னஞ்சலை கம்போஸ் செய்து மேலே காணப்படும் மெனுவில் உள்ள புதிய கான்ஃபிடென்ஷியல் மோட் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும். 

    இவ்வாறு செய்ததும் ஜிமெயில் சார்பில் குறிப்பிட்ட கால அளவை நிர்ணயித்து, மின்னஞ்சலை இயக்க பாஸ்வேர்டு செட் செய்ய வேண்டுமா என்றும் கோரும். கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்தால் வேலை முடிந்தது. மின்னஞ்சலை அனுப்பியதும் அதனை மாற்ற முடியாது. 
    கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் ஆன்ட்ராய்டு தளத்தில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்யும் வசதியை வழங்க இருக்கிறது. #Gmail


    ஜிமெயிலில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்யும் வசதியை வழங்க இருக்கிறது. இதுவரை பயனர்கள் மின்னஞ்சல் ஷெட்யூல் செய்ய மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி வரும் நிலையில் புதிய அம்சம் பலருக்கு பயன்தரும் வகையில் இருக்கும்.

    மொபைலில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதால், இதே அம்சம் இணையத்திற்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிமெயில் மொபைல் செயலியின் கம்போஸ் ஆப்ஷனின் அருகில் உள்ள ஷெட்யூல் சென்ட் எனும் அம்சம் புதிதாக சேர்க்கப்படுகிறது.

    ஷெட்யூல் செய்யும் அம்சம் மொபைல் மற்றும் இணைய பதிப்புகளுக்கு ஒரே சமயத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கு எவ்வித ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை. ஷெட்யூல் இ-மெயில் அம்சம் மின்னஞ்சல்களை டைப் செய்து, அதன் பின் நீங்கள் விரும்பும் நேரத்தில் அவை தானாக செல்லும் படி இருக்கும்.

    ஜிமெயிலின் புதிய செயலியை ஏ.பி.கே. வடிவில் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். அவசரம் இல்லை என்பவர்கள் பிளே ஸ்டோரில் அப்டேட் கிடைக்கும் வரை காத்திருக்கலாம். #Gmail #Apps
    ஜிமெயில் சேவையின் பாதுகாப்பு குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு கூகுள் தரப்பில் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் மூன்றாம் தரப்பு செயலிகளின் ஊழியர்களால் பயனரின் மின்னஞ்சல்களை படிக்க முடியும் என்ற சர்ச்சை அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய நிலையில், கூகுள் சார்பில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்த பதில் கூகுள் வலைப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் மூன்றாம் தரப்பு செயலிகள் சார்பில் கேட்கப்படும் தகவல்கள் பெரும்பாலும், அவர்களுக்கு அவசியமானது தானா என்றும், அவை சரியாக தங்களை வெளிப்படுத்திக் கொள்வதை கூகுள் மிகவும் கண்டிப்புடன் கண்கானிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட தகவல்களில் மென்பொருள் உருவாக்குவோரில் நூற்றுக்கணக்கானோர் மூன்றாம் தரப்பு ஜிமெயில் செயலிகளின் மூலம் பயனரின் மின்னஞ்சல்களை ஸ்கேன் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது. சில சமயங்களில் டெவலப்பர்களின் பணியாளர்கள் ஜிமெயில் பயனர்களின் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை இயக்க வசதி பெற்றிருந்தனர் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    நிறுவனங்களுக்கு இலவச மின்னஞ்சல் சேவையை வழங்கும் ரிட்டன் பாத் எனும் விளம்பர நிறுவனம் தனது பணியாளர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன் 8000 பயனர் மின்னஞ்சல்களை வாசிக்க அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அந்நிறுவன மென்பொருள்களை மேம்படுத்த பயன்படுத்தப்படுவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் தெரிவிக்கப்பட்டது.

    இதே வலைப்பதிவில் கூகுள் பயனரின் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறது என்ற தகவல்களும் இடம்பெற்றிருக்கிறது. இதில் விளம்பரங்களை வழங்குவதற்கு என பயனர் மின்னஞ்சல்களை ஸ்கேன் செய்யும் வழக்கத்தை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. மேலும் சில தானியங்கி வழிமுறைகளால் பலர் 'கூகுள் உங்களின் மின்னஞ்சல்களை வாசிக்கிறது' என தவறாக புரிந்து கொள்கின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    "உண்மையில் கூகுள் தரப்பில் யாரும் உங்களது மின்னஞ்சல்களை வாசிப்பதில்லை, எனினும் பயனர் சார்பில் பிரத்யேக சூழல்களில் முறையான அனுமதி பெறப்பட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காகவோ அல்லது பிழை திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என கூகுள் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது."
    ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான ஜிமெயில் செயலியின் புதிய அப்டேட் பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன்களை அதன் முக்கியத்துவம் பார்த்து, அதன்பின் வழங்குகிறது.


    ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான ஜிமெயில் செயலியில் கூகுள் புதிய அப்டேட் வழங்கியுள்ளது. புதிய அப்டேட் பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன்களை அனுப்பும் வழிமுறையை மாற்றியிருக்கிறது.

    ஜிமெயில் இன்பாக்ஸ்-இல் முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களை பெறும் போது, அதனை செயலி சரியாக கண்டறிந்து கொள்ளும். ஜிமெயிலின் மெஷின் லெர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, நீங்கள் முதலில் படிக்க விரும்பும் மின்னஞ்சல்களை கண்டறியும்.

    புதிய அம்சத்தை செயல்படுத்த ஐஓஎஸ் தளத்தின் ஜிமெயில் செயலியின் செட்டிங்ஸ் மெனு -- நோட்டிஃபிகேஷன் -- ஹை ப்ரியாரிட்டி ஒன்லி (ஏettings menu -- Notifications -- High priority only) ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். 



    முதற்கட்டமாக இந்த அம்சம் ஐஓஎஸ் இயங்குதளத்தில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. எனினும், விரைவில் ஆன்ட்ராய்டு தளத்திலும் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது டீஃபால்ட் அம்சம் கிடையாது என்பதால், பயனர்கள் இதனை செட்டிங்ஸ் மெனு சென்று தேர்வு செய்ய வேண்டும். அனைத்து ஐஓஎஸ் பயனர்களுக்கும் இந்த அம்சம் இன்னும் சில தினங்களில் வழங்கப்பட்டு விடும் என கூகுள் தெரிவித்துள்ளது.
    ஜிமெயில் ஆன்டராய்டு செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. புதிய அம்சம் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டு வருகிறது. இவை மின்னஞ்சல்களில் வலது மற்றும் இடது புறமாக ஸ்வைப் செய்து அவற்றின் ஆக்ஷன்களை கஸ்டமைஸ் செய்கிறது. 

    ஆன்ட்ராய்டு தளத்தின் புதிய வெர்ஷன் 8.5.20-வில் கிடைக்கும் இந்த வசதி, வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்டில் கிடைக்குமா அல்லது இது சர்வெர் சார்ந்த அப்டேட்டா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் ஜிமெயில் பயனர்கள் இனி வலது மற்றும் இடது புற ஸ்வைப்களுக்கான கன்ட்ரோல்களை மாற்றியமைக்க முடியும். 

    ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் வழக்கமாக இருபுறமும் ஸ்வைப் செய்தால் மின்னஞ்சல்கள் ஆர்ச்சிவ் செய்யப்படும். ஆன்ட்ராய்டு போலீஸ் மூலம் முதலில் கண்டறியப்பட்ட இந்த அம்சம் மே 30-ம் தேதி வாக்கில் வெளியிடப்பட்ட சமீபத்திய அப்டேட் மூலம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    புதிய அம்சத்தை இயக்க ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியின் செட்டிங்ஸ் -- ஜெனரல் செட்டிங்ஸ் -- ஸ்வைப் ஆக்ஷன்ஸ் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன்களில் ஆர்ச்சிவ், டெலீட், மார்க் ஆஸ் ரீட்/ அன்ரீட், மூவ் டூ மற்றும் ஸ்னூஸ் போன்ற ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

    புதிய அப்டேட் மூலம் ஜிமெயில் இந்த அம்சத்தை அதிகம் தெரிவிக்கவில்லை என்றாலும், பிழை திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் ஜிமெயில் தளத்தில் மிகப்பெரிய அப்டேட் வழங்கப்பட்டது. அந்த வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய வடிவமைப்பு மாற்றம் செய்யப்பட்டது. இதே அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு இமெயில் ஷார்ட்கட்கள், ஸ்மார்ட் ரிப்ளை, கான்ஃபிடென்ஷியல் மோட் மற்றும் நேட்டிவ் ஆஃப்லைன் மோட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டது.
    கூகுள் மேப்ஸ் செயலியில் இதுவரை வழிகாட்டி வந்த நீல நிற நேவிகேஷன் அம்பு நீக்கப்பட்டு அனிமேஷன் வாகனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    கூகுள் மேப்ஸ் செயலியில் சத்தமில்லாமல் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கமாக கூகுள் மேப்ஸ் சேவைகளில் நமக்கு வழி காட்டி வந்த நீல நிற நேவிகேஷன் அம்பு நீக்கப்பட்டு விட்டது.

    கவலை வேண்டாம், அம்பு குறிக்கு மாற்றாக அழகிய கார் பொம்மைகளை வழங்கியுள்ளது. புதிய பொம்மை கார் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உங்களை அழைத்து செல்லும். உங்களது விருப்பத்திற்கு ஏற்ப அதிவேக எஸ்யுவி அல்லது பிக்கப் டிரக் என எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.



    புதிய அம்சம் வெளியாக எவ்வித காரணமும் அறிவிக்கப்படாத நிலையில், இதன் மூலம் நேவிகேஷன் அனுபவம் முன்பை விட வித்தியாசமானதாக இருக்கும். ஸ்வாப் செய்ய பயணத்தின் போது டிரைவிங் நேவிகேஷன் மோடில் உள்ள அம்பு குறியை தட்டி, உங்களுக்கு விருப்பமான வாகனத்தை தேர்வு செய்ய செய்யலாம். 

    இந்த அம்சம் முதற்கட்டமாக கூகுள் மேப்ஸ் சேவையின் ஐஓஎஸ் பதிப்பில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இதற்கான அப்டேட் வழங்குவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் இந்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில், அசிஸ்டண்ட் உள்ளிட்ட சில அம்சங்களில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வகையில் புதிய அம்சங்கள் அவ்வப்போது சிறிய அப்டேட்கள் மூலம் வழங்கப்படுகின்றன.
    ஜிமெயில் தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நட்ஜ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கூகுளின் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலில் வடிவமைப்பு மாற்றத்துடன் பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன. 

    சமீபத்தில் நடந்து முடிந்த கூகுள் IO 2018 நிகழ்வில் பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. இதில் இடம்பெற்றிருந்த அம்சங்களில் ஒன்றான மென்ஷன் எனும் அம்சம், மின்னஞ்சல் டைப் செய்யப்படும் போது இடையே மற்றவர்களை டேக் செய்ய @ குறியீட்டை பயன்படுத்த வழி செய்கிறது.

    இந்த அம்சம் ஜிமெயிலில் மின்னஞ்சல் டைப் செய்யும் போது இடையே கான்டாக்ட்களை சேர்க்கும் வசதியை வழங்குகிறது. அதன் படி கான்டாக்ட்களை மின்னஞ்சலில் இணைக்க '@' குறியீடு மற்றும் குறிப்பிட்ட கான்டாக்ட்-இன் பெயரை டைப் செய்ய வேண்டும். இதே அம்சம் கூகுள் பிளஸ் தளத்தில் '+' குறியீடு மற்றும் பெயரை டைப் செய்தால் வேலை செய்கிறது. @ அல்லது + குறியீடுகளுடன் பெயரை டைப் செய்ய துவங்கும் போதே குறிப்பிட்ட கான்டாக்ட்களை பார்க்க முடியும். அதில் இருந்து கான்டாக்ட்-ஐ தேர்வு செய்யலாம். 

    பயன்படுத்த எளிமையாக இருப்பதோடு மின்னஞ்சல் சேவையை அதிகளவு பயன்படுத்துவோருக்கு இது அதிகப்படியான நேரத்தை மிச்சப்படுத்துகிறது. இந்த அம்சம் ஜிமெயிலின் ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் இயங்குதள செயலிகளில் இன்னமும் அப்டேட் செய்யப்படவில்லை என்பதால் முதற்கட்டமாக வாடிக்கையாளர்கள் இதனை வெப் சேவையில் மட்டுமே பயன்படுத்த முடியும்.


    கோப்பு படம்

    சமீபத்தில் ஜிமெயில் தளத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டன. இவற்றில் ஒன்று தான் நட்ஜ் (Nudge), இந்த அம்சம் வாடிக்கையாளர்கள் செட் செய்த நேரத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சல் குறித்த நினைவூட்டலை வழங்கும். 

    புதிய நட்ஜ் அம்சம் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தை செட் செய்து, மின்னஞ்சல் மீண்டும் எப்போது இன்பாக்ஸ்-இல் தோன்ற வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும். இவ்வாறு செய்ததும் குறிப்பிட்ட மின்னஞ்சல் உங்களது இன்பாக்ஸ்-இல் தெரியும். இந்த அம்சம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்குகிறது.

    உங்களுக்கு வரும் புதிய மின்னஞ்சல்களை கேமரா மூலம் பார்க்கப்படும். இந்த அம்சம் ஜிமெயில் தளத்தின் வலதுபுறத்தில் காணப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் மின்னஞ்சல்களை கொண்டு வருகிறது. இந்த அம்சம் தானாகவே ஆக்டிவேட் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், விரும்பாதவர்கள் இதனை ஸ்விட்ச் ஆஃப் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.
    கூகுளின் ஜிமெயில் தளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் புதிய வசதிகளை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    கூகுளின் அதிகம் பயன்படுத்தும் தளங்களில் ஒன்றான ஜிமெயில் சமீபத்தில் அதிகப்படியான அம்சங்கள் சேர்க்கப்பட்டன. கூகுள் I/O 2018 நிகழ்வுக்கு முன் இன்டர்ஃபேஸ் முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், கூகுள் விழாவில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

    புதிய அம்சங்கள் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்குவதாக அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் ஜிமெயில் சமீபத்திய அப்டேட் மிகவும் முக்கியத்துவம் வாயந்ததாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலானோருக்கும் அதிகம் தேவைப்படும் அம்சமாக இருக்கும் ஆஃப்லைன் சப்போர்ட் ஜிமெயிலில் சேர்க்கப்பட்டுள்ளது.

    இதனால் ஜிமெயில் சேவையை இன்டர்நெட் இல்லாமலும் பயன்படுத்த முடியும். இதனால் மின்னஞ்சல்களை படிப்பதோடு மட்டுமின்றி அவற்றை டெலீட் செய்வது, எழுதுவது, தேடுதல் மற்றும் ஆர்சிவ் போன்ற சேவைகளை இன்டர்நெட் இணைப்பின்றி பயன்படுத்த முடியும். ஆஃப்லைனில் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் இன்டர்நெட் இணைப்பு கிடைத்ததும் சின்க் செய்யப்பட்டு விடும்.



    இந்த அம்சத்தை பயன்படுத்த க்ரோம் பிரவுசர் 61 வெர்ஷன் தேவைப்படுகிறது. ஜிமெயிலில் ஆஃப்லைன் மோட் ஆக்டிவேட் செய்வது எப்படி என்பதை கீழே காணலாம்..,

    வழிமுறை 1: கூகுள் க்ரோம் வெர்ஷன் 61 டவுன்லோடு செய்யவும்.

    வழிமுறை 2: ஜிமெயிலில் செட்டிங்ஸ் ஐகானை க்ளிக் செய்யவும்.

    வழிமுறை 3: டிராப்-டவுன் மெனுவில் செட்டிங்ஸ் டேப்-ஐ க்ளிக் செய்யவும்

    வழிமுறை 4: மெனு பாரில் காணப்படும் ஆஃப்லைன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

    வழிமுறை 5: இனி எனேபிள் ஆஃப்லைன் மெயில் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

    வழிமுறை 6: உங்களது தேவைக்கு ஏற்ப செட்டிங்-களை மாற்றியமைக்கலாம்.

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஆப்ஷன்களை செயல்படுத்தியதும், ஜிமெயில் சேவையை இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே பயன்படுத்த துவங்கலாம்.

    ஜிமெயில் சேவையில் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் பெரும்பாலான பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் மின்னஞ்சல்களை டைப் செய்யும் போதே வாக்கியங்களை முழுமை செய்ய கூகுள் பரிந்துரைக்கும். இதை கொண்டு முழுமையாக டைப் செய்யாமல் டேப் பட்டனை க்ளிக் செய்து மிக எளிமையாக மின்னஞ்சலை டைப் செய்யலாம்.
    ×