என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தமிழ்நாடு"
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.வின் அதிக ஓட்டுகள் மேற்கு வங்காளத்திலும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்திலும் ஏராளமான ஓட்டுகள் இருப்பதால் அதனை பெறுவதற்காக மு.க.ஸ்டாலின் கொல்கத்தாவுக்கு சென்று இருப்பார்.
ஒரு தொகுதியை விட்டால் மற்றொரு தொகுதிக்கு எட்டாத கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு இமயத்தை மோதப்போகிறோம் என்று சொல்லி யாராவது வந்தால் எப்படி இருக்கும். அதுபோல்தான் நிகழப்போகிறது. அது மகா கூட்டணி கிடையாது. துண்டு கலவைகள் கொண்டது.
தமிழகத்தில் ராணுவ பூங்கா உருவாக்க வந்தபோது கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது ரூ.1,500 கோடியில் ஏழை, எளிய மக்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை வழங்கி இருக்கும் பிரதமரை எதிர்த்து போராட்டம் நடத்தினால் அது தமிழகத்துக்கு துரோகம் செய்யும் கூட்டம் பெருகிக்கொண்டு இருக்கிறது என்பதை அடையாளம் காட்டும்.
எந்த கட்சியுடனும் பாரதீய ஜனதா கட்சிக்கு தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடுகள் கிடையாது. மத்திய மந்திரி பியூஸ் கோயல் 20 அல்லது 22-ந் தேதி வருவார். அப்போது தேர்தல் சம்பந்தமாக விவாதிப்பார். இவ்வாறு அவர் கூறினார். #PMModi #PonRadhakrishnan
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-டெல்லி அணிகள் இடையிலான கடைசி லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி முதல் இன்னிங்சில் 432 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய டெல்லி அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்து இருந்தது. ஜான்டி சித்து 104 ரன்னுடனும், லலித் யாதவ் 65 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய டெல்லி அணி முதல் இன்னிங்சில் 133.1 ஓவர்களில் 336 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. லலித் யாதவ் 91 ரன்னில் கேட்ச் ஆனார். ஜான்டி சித்து 140 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். தமிழக சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்து 96 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அத்துடன் ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் தமிழக அணிக்கு 3 புள்ளி கிடைத்தது. இதனால் தனது பிரிவில் (பி) 8-வது இடத்தை பிடித்த தமிழக அணி அடுத்த சீசனில் இதே பிரிவில் நீடிப்பதை உறுதி செய்தது. அதே சமயம் தனது பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட டெல்லி அணி அடுத்த சீசனில் ‘சி’ பிரிவுக்கு தரம் இறக்கப்படுகிறது.
கால்இறுதி ஆட்டங்கள் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. கால்இறுதி ஆட்டங்களில் விதர்பா-உத்தரகாண்ட், சவுராஷ்டிரா-உத்தரபிரதேசம், கர்நாடகா-ராஜஸ்தான், கேரளா-குஜராத் அணிகள் மோதுகின்றன. #RanjiTrophy
சட்டசபையில் இன்று அமைச்சர் டி.ஜெயக்குமார் 10 சதவீத இடஒதுக்கீடு குறுத்து பேசியதாவது:-
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு பற்றிய செய்தியை நாங்களும் படித்தோம். அதைப்பற்றிய சட்டம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
1921-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் சமுதாய இடஒதுக்கீடு வழங்குவதில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. 50 சதவீத இட ஒதுக்கீடு முன்பு இருந்தது. பின்னர் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடாக வழங்கப்பட்டது.
அம்மா முதல்வராக இருந்தபோது டெல்லி சென்று அன்றைய பிரதமர் நரசிம்மராவை சந்தித்து 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்தார். அப்போது நான் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தேன்.
சமூகநீதி காத்த புரட்சித் தலைவியின் நடவடிக்கையை அனைத்து கட்சிகளும் பாராட்டின. திராவிட கழக தலைவர் கி.வீரமணி, சமூகநீதி காத்த வீராங்கனை என்று பாராட்டினார்.
புரட்சித்தலைவி அமல்படுத்திய 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் வராமல் தமிழக அரசு பாதுகாக்கும். மத்திய அரசின் கொள்கை முடிவு பற்றி அரசு ரீதியான எந்த தகவலும் வரவில்லை. அதை அறிந்த பிறகு எங்கள் கருத்தை தெளிவுபடுத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார். #MinisterJayakumar
மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் இன்று முதல் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்த போராட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்களும் இன்றைய போராட்டத்தில் பங்கெடுத்துள்ளதால் தமிழகத்தில் பஸ் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது.
ஆனால் இன்று காலை அதுபோன்று எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த போராட்டத்துக்கு ஆட்டோ தொழிற்சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதனால் ஆட்டோக்களும் ஓடாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று காலையில் வழக்கம் போல பஸ்-ஆட்டோக்கள் ஓடின.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து எப்போதும் போல முழு அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. அனைத்து வழித்தடங்களுக்கும் எந்தவித தடங்கலும் இன்றி பஸ்கள் இயக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 95 சதவீத பஸ்கள் ஓடின.
சென்னையில் 33 பஸ் டெப்போக்கள் முன்பும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். கோயம்பேடு பஸ் நிலையத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
வங்கி ஊழியர்களும் இன்றைய போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் வங்கி பணிகள் பாதிக்கப்பட்டது. 50 ஆயிரத்துக்கும் அதிகமான காசோலைகள் தமிழக வங்கிகளில் முடங்கியுள்ளது.
இதனால் பணப்பரிவர்த்தனை முற்றிலுமாக முடங்கி காணப்பட்டது. இருப்பினும். ஏ.டி.எம். மையங்கள் வழக்கம்போல செயல்பட்டன.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் சட்டங்களை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறைகளில் பங்கு விற்பனைகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
இன்றும், நாளையும் நடைபெறும் இந்த போராட்டத்தால் அரசு அலுவலகங்களில் பணிகள் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தால் சென்னையில் மத்திய அரசு அலுவலகங்களில் பணிகள் முடங்கின. சாஸ்திரி பவன், ராஜாஜி பவன் போன்ற இடங்களில் செயல்படும் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 2 நாட்கள் விடுப்பு எடுத்துவிட்டு வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலக ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல ஏ.ஜி.ஆபீஸ், மத்திய கணக்கு தணிக்கை துறை அலுவலகம், சுங்க வரி மற்றும் கலால் வரி அலுவலகங்களிலும் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வருமான வரித்துறை அலுவலகத்தில் மத்திய அரசு அதிகாரிகள் சம்மேளன பொதுச்செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டதோடு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. #Bharatbandh #Centretradeunions
தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந்தேதி (இன்று) முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
பிளாஸ்டிக்குகளால் ஆன தட்டு, தேநீர் குவளை, தண்ணீர் குவளை, தண்ணீர் பாக்கெட், கைப்பை, கொடி, உறிஞ்சு குழல் உள்பட 14 வகையான பொருட்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு அதை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து பெரும்பாலான ஓட்டல், கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக எளிதில் மக்கும் வகையிலான கைப்பைகளை வழங்க ஆரம்பித்தனர்.
பிளாஸ்டிக் தடை காரணமாக துணிப்பைகளை விலை கொடுத்து வாங்கி அதில் பொருட்களை வைத்து கொண்டு செல்கிறார்கள். சிலர் வீட்டில் இருந்து துணிப்பைகளை எடுத்து வந்து பொருட்களை வாங்கி செல்கிறார்கள்.
பிளாஸ்டிக் கைப்பை, தட்டு, தேநீர், குவளை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்று வந்த கடை வியாபாரிகள் தற்போது அதற்கு பதில் எளிதில் மக்கக்கூடிய கைப்பைகள், துணிப்பைகள், சணல் பை, பாக்கு மட்டை தட்டுகள், பேப்பர் குவளை, மரக்கட்டையிலான கரண்டி ஆகியவற்றை விற்பனை செய்ய தொடங்கி விட்டனர்.
இறைச்சி கடை மற்றும் இட்லி, தோசை மாவு கடைகளுக்கு பாத்திரங்களுடன் செல்கிறார்கள். இப்படி பிளாஸ்டிக் பொருட்கள் தடை காரணமாக பெரும்பாலானவர்கள் மாறிவிட்டனர்.
தமிழக அரசு அறிவித்துள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தடை இன்று முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது. அதன்படி 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் பறிமுதல், அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று தலைமை செயலகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், பயன்படுத்தும் பொதுமக்களுக்கு எவ்வளவு அபராதம் விதிப்பது, பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் அபராதத்துக்கு உள்ளாவார்கள். பிளாஸ்டிக் தடையை கண்காணிப்பதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் உத்தரவுபடி தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருள் தடை திட்டத்தை அமல்படுத்த தீவிர கண்காணிப்பில் இன்று முதல் ஈடுபடுகிறார்கள்.
ஏற்கனவே பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் வீடுகளில் வைத்துள்ளனர். அதனை சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வரும்போது அவர்கள் மூலம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் வீடுகளில் உள்ள பழைய பிளாஸ்டிக் கைப்பை போன்றவற்றை குப்பை சேகரிப்பவர்களிடம் வழங்கலாம். #Plasticban #TN
வருகிற பாராளுமன்ற தேர்தலில் யார் பிரதமராக வருவார் என்பதில் அ.தி.மு.க. முக்கிய பங்காற்றும். மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா பெங்களூரு சிறையில் இருந்தபொழுது அவதிப்பட்டார். அவருக்கு கர்நாடகாவில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி உரிய உதவிகளை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, மேகதாது உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் திராவிட கட்சிகள் தான் காரணம் என்றும், இதுகுறித்து தன்னுடன் விவாதிக்க தயாரா? என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சவால் விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய தம்பிதுரை, மேகதாது திட்டத்திற்கு அனுமதி அளித்தது யார்? என்னுடன் பொன்.ராதாகிருஷ்ணன் விவாதிக்க தயாரா? என்று பதில் சவால் விடுத்துள்ளார். #Thambidurai #ADMK
வளசரவாக்கம், ராமாபுரம் போலீஸ் நிலையங்களை உள்ளடக்கிய வளசரவாக்கம் சரகத்தில் புதிதாக 1270 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதை இன்று காலை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
50மீட்டர் இடைவெளியில் ஒரு கண்காணிப்பு கேமரா என்கிற இலக்கை நோக்கி செயல்பட்டு வரும் எங்களுக்கு அதை பூர்த்தி செய்யும் வகையில் இந்த சரகத்தில் 1270கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் செய்துள்ளதை மனதார பாராட்டுகிறேன்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை ஆந்திரா மாநிலத்தில் வைத்து பிடித்தோம் அதற்கு கண்காணிப்பு கேமரா தான் பெரிதும் எங்களுக்கு உதவியாக இருந்தது.
இதேபோல் சமீபத்தில் பள்ளியில் இருந்து கடத்தி செல்லப்பட்ட ஒரு குழந்தையை பள்ளி அருகில் ஒரு சிறிய ஜூஸ் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா உதவியால் தான் 5 மணி நேரத்தில் மீட்டோம்.
நள்ளிரவு பெண்கள் தனியாக சென்று வீடு திரும்பிட பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடு அலுவலகம் மற்றும் வணிக வளாகம் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது அவசியம் மேலும் சாலையை நோக்கி அந்த கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி காவல்துறைக்கு பொதுமக்கள் தங்கள் ஆதரவை தந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் விளம்பர பலகைகள் வைக்க அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது. அதில் தனியார் விளம்பர பலகைகளுக்கு அனுமதி இல்லை என்றும் அரசு மற்றும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் வைப்பதுதான் விளம்பர பலகை என்றும் அந்த சட்ட திருத்தத்தில் கூறப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விளம்பர பலகை உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு சட்ட திருத்தத்துக்கு கடந்த 30.8.18 அன்று இடைக்கால தடை விதித்தனர்.
கடந்த 10.12.18 அன்று வழக்கு விசாரணை நீதிபதிகள் சுப்பையா, மற்றும் புகழேந்தி அமர்வில் வந்தது.
இந்த விசாரணையின் போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், சிறப்பு அரசு பிளீடர் சண்முகநாதன் ஆகியோர் அரசு தரப்பிலும், மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், தாளமுத்தரசு, ஆர்த்தி ஆகியோர் தனியார் விளம்பர பலகை உரிமையளார்கள் சார்பாக ஆஜரானார்கள்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட பிறகு நீதிபதிகள், தனியார் விளம்பர பலகை உரிமம் பெற விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப் பங்களை நிராகரிக்க கூடாது என்றும், இந்த வழக்கு முடியும்வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் விளம்பர பலகைகள் மீது எந்தவித நடவடிக்கைகளும் எடுக்க கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். #HCMaduraiBench
சர்வதேச எய்ட்ஸ் நோய் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல் வெளியிடப்பட்டது.
அதில் தமிழ்நாட்டில் எய்ட்ஸ் நோய் தாக்குதல் அதிகரித்து உள்ளது. அதுவும் புதிதாக இளைஞர்களை பெருமளவில் பாதித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டில் 20 முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள் 432 பேரை எய்ட்ஸ் தாக்கி இருந்தது. 2017-2018-ம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 554 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் நடப்பு ஆண்டில் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே 318 பேரை எய்ட்ஸ் நோய் பாதித்துள்ளது.
2015 முதல் 2016-ம் ஆண்டில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 435 பேரை எய்ட்ஸ் நோய் தாக்கியிருந்தது. அது 2017-2018-ம் ஆண்டில் 536 ஆக அதிகரித்தது. தற்போது ஏப்ரல் மற்றும் அக்டோபருக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் புதிதாக 435 எய்ட்ஸ் நோயாளிகள் உருவாகியுள்ளனர்.
பாதுகாப்பற்ற முறையில் ‘செக்ஸ்’ மற்றும் ஒரே ஊசியை பலருக்கு பயன்படுத்துவது போன்ற காரணங்களால் 10 வயது சிறுவர்கள் முதல் 25 வயது இளைஞர்கள் வரை எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் 1,12,778 எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். அவர்களில் சென்னையில் தான் அதிக அளவில் இருக்கின்றனர் என பொது சுகாதார துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எய்ட்ஸ் நோயை தடுக்க சமூக வலை தளங்கள், உள்ளிட்ட பல ஊடகங்களை பயன்படுத்தலாம். அதன் மூலம் இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #AIDS #TN
புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் வணிகர்கள் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய மத்திய அரசு கால அவகாசத்தை நீட்டித்து உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நாகை, தேனி, தஞ்சை, சிவகங்கை, திருச்சி, கரூர், ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் வணிகம் செய்பவர்கள், அக்டோபர் மாதத்துக்குரிய ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதி, டிசம்பர் 20-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அதுபோல், ‘தித்லி’ புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வியாபாரம் செய்பவர்கள், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்துக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்ய நாளை வரை (வெள்ளிக்கிழமை) அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. #GST #AndhraPradesh #TamilNadu #GajaCyclone
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்