search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு"

    ‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும். நான் அவருக்கு உறுதுணையாக இருப்பேன்’ என்று அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறினார். #LathaRajinikanth #Rajinikanth
    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்துள்ளார். அவர் எப்போது அரசியல் களத்தில் குதித்து, புதிய கட்சியை தொடங்குவார் என்று அவரது ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள். இந்தநிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்திடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- உங்களது கணவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    பதில்:- அவர் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும்.

    கேள்வி:- சினிமா வாழ்க்கையில் ரஜினிகாந்துக்கு உறுதுணையாக இருக்கும் நீங்கள், அரசியலிலும் உறுதுணையாக இருப்பீர்களா?

    பதில்:- அவர் ஆன்மிக பாதை, அரசியல் பாதை என்று என்ன முடிவு எடுத்தாலும் நான் உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருப்பேன்.

    கேள்வி:- ரஜினிகாந்த் நடித்த படங்களிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்தமான படம் எது?

    பதில்:- அப்படி குறிப்பிட்டு சொல்ல முடியாது. பெரிய பட்டியலே இருக்கிறது.



    கேள்வி:- ரஜினிகாந்த் தான் நடிக்கும் திரைப்படங்களின் கதை குறித்து உங்களிடம் விவாதிப்பாரா?

    பதில்:- பொதுவாகவே எல்லா விஷயங்களிலும் நாங்கள் கலந்து ஆலோசிப்போம்.

    கேள்வி:- திரை உலகில் ரஜினிகாந்துக்கு பொருத்தமான ஜோடி யார் என்று நினைக்கிறீர்கள்?

    பதில்:- ஒருத்தர் என்று உண்மையாகவே சொல்லிவிட முடியாது. எல்லோரும் எனக்கு நண்பர்கள். எல்லோரும் எங்களுக்கு வேண்டியவர்கள். எல்லோரையும் நான் மதிக்கிறேன்.
     
    இவ்வாறு அவர் கூறினார். #LathaRajinikanth #Rajinikanth
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் தமிழ்நாடு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்துள்ளது. அபினவ் முகுந்த் சதமடித்து அசத்தினார். #RanjiTrophy #AbhinavMukund
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் நடக்கும் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். 4-வது விக்கெட்டுக்கு அக்‌சாத் ரெட்டி உடன் பவனகா சந்தீப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சதமடித்தனர்.

    சந்தீப் 130 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 246 ரன்கள் சேர்த்தது. அக்சாத் ரெட்டி அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்து 250 ரன்னில் அவுட்டானார். இறுதியில், ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 565 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    தமிழ்நாடு அணி சார்பில் எம்.மொகமது 3 விக்கெட்டும், விக்னேஷ், ரஹில் ஷா தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கவுசிக் காந்தி 24 ரன்னிலும், பாபா அபராஜித் 4 ரன்னிலும் அவுட்டாகினர். மறுபுறம், அபினவ் முகுந்த் நிதானமாக விளையாடி சதமடித்தார்.

    இறுதியில், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 79 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. அபினவ் முகுந்த் 101 ரன்களுடனும், பாபா இந்திரஜித் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். #RanjiTrophy #AbhinavMukund
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்கெதிராக ஐதராபாத் இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 523 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் அக்சாத் ரெட்டி இரட்டை சதம் அடித்து அசத்தினார். #RanjiTrophy #AkshathReddy
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது சுற்று நேற்று தொடங்கியது. திருநெல்வேலியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது. டேன்மே அகர்வால், கேப்டன் அக்‌சாத் ரெட்டி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டேன்மே அகர்வால் 10 ரன்னிலும், ரோகித் ராயுடு 13 ரன்னிலும், ஹிமாலே அகர்வால் 29 ரன்னிலும் அவுட்டாகினர்.
     
    4-வது விக்கெட்டுக்கு அக்‌சாத் ரெட்டி உடன் பவனகா சந்தீப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அக்‌சாத் ரெட்டி சதம் அடிக்க சந்தீப் அரைசதம் அடித்தார். இருவரும் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். அக்‌சாத் ரெட்டி 114 ரன்களுடனும், சந்தீப் 74 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சந்தீப் பொறுப்புடன் விளையாடி சதமடித்தார். அவர் 130 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 246 ரன்கள் சேர்த்தது. அக்சாத் ரெட்டி அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார். 

    இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 523 ரன்கள் எடுத்துள்ளது. அக்சாத் ரெட்டி 248 ரன்களுடனும், சாமா மிலிந்த் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    தமிழ்நாடு அணி சார்பில் விக்னேஷ், எம் முகமது, ரஹில் ஷா தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள். #RanjiTrophy #AkshathReddy
    தமிழ்நாடு, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. #Potato
    புதுடெல்லி:

    இந்திய தோட்டக்கலை உற்பத்தியில் முதன்மை வாய்ந்தது உருளைக்கிழங்கு. மலைப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் இந்த உருளைக்கிழங்குகள் குறித்து மத்திய ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் ஆய்வு செய்தது.

    நுண்ணிய ஒட்டுன்னி மூலம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 4 மாநில உருளைக்கிழங்கில் பூச்சி தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடும் ஒன்றாகும்.

    இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    இந்த 4 மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு விதை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்கள் மற்ற மாநிலங்களில் இருந்து உதவியை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    4 மாநிலங்களில் உருளைக்கிழங்குக்கு விதிக்கப்பட்ட தடையால் ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் இருக்காது. பஞ்சாப், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Potato
    தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி நடப்பதால்தான் தினமும் மழை பெய்கிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். #ADMK #MinisterSengottaiyan

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி பெரியார்திடலில் அதிமுக வின் 47-வது ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு, பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசியதாவது:-

    பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சியில்தான் சத்துணவுத்திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

    அதைத் தொடர்ந்து ஆட்சி செய்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொட்டில் குழந்தை திட்டம், மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், லேப்டாப் வழங்கும் திட்டம், உள்ளிட்ட பல என்னற்ற திட்டங்களைக் கொண்டு வந்து தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கினார்.

    அவர் மறைந்த பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான இந்த ஆட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நிறைவேற்றி வருகிறது. அதிமுகவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் வரை இக்கட்சியை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.


    அதிமுகவில் சாதாரண தொண்டர்கள் கூட மிகப்பெரிய பதவிக்கு வரலாம் என்ற நிலை உள்ளது. திமுக போல குடும்ப அரசியல் அதிமுகவில் இல்லை. திமுக ஆட்சி காலத்தில் தமிழகம் மின்வெட்டால் இருண்டு கிடந்தது. மின்வெட்டை கண்டு பிடித்தவர் அப்போதைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆவார். இந்த ஆட்சியில் அனைவருக்கும் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு, மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. திருப்பரங்குன்றம், திருவாரூர் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெறும். துணிச்சல் இருந்தால் தி.மு.க. தனியாக போட்டியிட தயாரா?

    தமிழ்நாட்டில் மிகச் சிறப்பான நல்ல ஆட்சி நடைபெறுவதால் தான் தினமும் மழை பெய்து கொண்டு இருக்கிறது. விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் கல்வித்துறையில் வரும் மார்ச் மாதத்திற்குள் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. மேலும், 3ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் துவங்கப்படும். பிளஸ் 2 முடித்தவுடன் வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடிய கல்வி வழங்கப்படும்.

    1 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் சீருடைகள் மாற்றம் செய்யப்படும். கோபியில் புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளது. மேலும், அத்தாணி-சத்தி சாலை, ஈரோடு -நீலகிரி சாலை, கோபி -பெருமாநல்லூர் சாலை ஆகியவை 4 வழிச்சாலைகளாக மாற்றப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். #ADMK #MinisterSengottaiyan

    தமிழ்நாட்டை பற்றி நவ்ஜோத் சித்து தெரிவித்த கருத்துக்காக ஒவ்வொரு தென்னிந்தியரிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. #NavjotSingh #Rahulshouldapologise
    புதுடெல்லி:

    இந்தியாவில் உள்ள பலதரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத் சித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி ஏற்பு விழாவுக்கு சென்று வந்ததும் அந்நாட்டு ராணுவ தளபதியுடன் சிரித்து கைகுலுக்கியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பாகிஸ்தானை நான் விரும்புவது ஏன்? என்பதற்கு விளக்கம் அளிப்பதுபோல் நேற்று ஒரு கருத்தை சித்து வெளியிட்டிருந்தார்.

    கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு இலக்கிய விழாவில் பேசிய சித்து, ‘நான் தமிழ்நாட்டுக்கு சென்றால் அங்குள்ள மொழி புரியாது. ஒன்றிரண்டு தமிழ் வார்த்தைகள் தவிர எனக்கு வேறெதுவும் தெரியாது.


    அங்குள்ள உணவு பிடிக்காது என்று சொல்வதற்கில்லை. இருந்தாலும், தொடர்ந்து அதை நீண்ட நாட்களுக்கு சாப்பிட முடியாது. அதேபோல் அவர்களின் கலாசாரமும் முற்றிலும் வேறுவிதமானது.

    ஆனால், நான் பாகிஸ்தானுக்கு பயணம் செய்யும்போது இந்த சிரமம் இல்லை. மொழி உள்பட அங்குள்ள அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது’ என்று  குறிப்பிட்டிருந்தார்.

    அவரது இந்த கருத்துக்கு பா.ஜ.க. இன்று கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக,  கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க. மேலிடத் தலைவர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ், சித்து கூறிய கருத்துக்காக ஒவ்வொரு தென்னிந்தியரிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    உங்கள் கட்சி (காங்கிரஸ்) பாகிஸ்தானை நேசிப்பதும், உங்கள் கட்சியினர் பாகிஸ்தானின் புகழ்பாடி வருவதும் எங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டை பற்றி சித்து தெரிவித்த கருத்துக்காக அவர் நீக்கம் செய்யப்பட வேண்டும்.



    இதற்காக ஒவ்வொரு தென்னிந்தியரிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். நவ்ஜோத் சித்துவையும் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #RahulGandhi #GVLNarasimhaRao #NavjotSingh #Rahulshouldapologise
    தமிழகத்தின் தென்மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #TNRain
    சென்னை:

    அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதில் சிவகங்கை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. #TNRain
    தமிழகத்துக்கு வரும் 7-ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், 4 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். #TN #RedAlert #NDRF #Rain #TNRain
    வேலூர்:

    தமிழகம் மற்றும் கேரளாவில் வரும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

    இந்த ரெட் அலர்ட்டை தொடர்ந்து கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும், கடலில் மீன் பிடிக்க சென்றவர்களை கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த மழையில் இருந்து தமிழகத்துக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட அதிகாரிகளுடனும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்நிலையில், தமிழகத்தின் மதுரை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அரக்கோணத்தில் இருந்து இந்த மீட்புக்குழு தற்போது இந்த 4 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளது. #TN #RedAlert #NDRF #Rain #TNRain
    தமிழகத்தில் கனமழை குறித்து ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். #TNRain #TNRedAlert #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சியினால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், அதன் பிறகு மேலும் 3 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் வரும் 7-ம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுமார் 25 செ.மீ அளவு மழை பெய்யும் என பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குனர் சத்திய கோபால் தெரிவித்துள்ளார்.



    இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், அதீத கனமழையால் ஏரி, ஆறுகளில் மதகுகள் அல்லது கரை உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சீர்செய்ய 5 லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். கனமழையில் இருந்து பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பது குறித்து 32 மாவட்ட அதிகாரிகளுடன் நாளை மற்றும் நாளை மறுநாள் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். #TNRain #TNRedAlert #TNCM #EdappadiPalaniswami
    தமிழகத்திலுள்ள அனைத்து விடுதிகளிலும் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் கல்வி விடுதி பணியாளர் நலச்சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் கோபால் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் வடமலை வரவேற்று பேசினார். சங்க ஆலோசகர் யாக்கோப்துரைராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில பொதுச் செயலாளர் ராமலிங்கம், மாநில பொருளாளர் அறிவழகன், மாநில அமைப்பு செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் சஞ்சய் காந்தி, பொருளாளர் பிரகதி, மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழகத்திலுள்ள அனைத்து விடுதிகளிலும் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் , ஒரு விடுதிக்கு குறைந்த பட்சம் 2 சமையலர்கள் நியமிக்க வேண்டும் , புதிய பென்சன் முறையை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் , துப்புரவு பணியாளர் அனைவருக்கும் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கல்வி தகுதி உள்ள சமையலர், காவலர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் போன்ற பணி வழங்கிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில தலைவர் கோபால் சிறப்புரையாற்றினார். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன் நன்றி கூறினார். #tamilnews
    தமிழ்நாட்டில் கட்டிட அனுமதிக்கு விண்ணப்பிக்க ஒரே கட்டணமாக ரூ.500 செலுத்தினால் போதும் என்னும் திட்டம் வரும் 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கட்டிட அனுமதிக்கு விண்ணப்பிக்க மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் கட்டணம் ஒரே மாதிரி இல்லாமல் பல்வேறு வகைகளில் இருந்தது. இப்போது ஒரே கட்டணமாக 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நகராட்சி நிர்வாண ஆணையர் பிரகாஷ் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் ‘அம்ருத்’ திட்ட விதிகளின்படி, தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சிகளில் கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறைகளில் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடி, ஆன்லைன் முறையில் கட்டிட அனுமதி விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதற்கான கட்டணங்கள் ஒரே சீரான நடைமுறை இல்லாமல் இருந்தது. இதில் மாற்றங்கள் செய்யப்பட்டு இனி ஒரே மாதிரியான கட்டண நடை முறை அமல்படுத்தப்படும்.

    இதன்படி கட்டிட அனுமதி கோரி இணைய வழி வாயிலாக விண்ணப்பம் செய்பவர்கள் ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் பரிசீலனை கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும்.

    கட்டணங்களை இணைய வழியில் பெறுவதற்கும், நகரமைப்பு அலுவலர், ஆய்வாளர்கள் திட்ட அனுமதி வழங்கும் அதிகாரி ஆகியோர் டிஜிட்டல் கையெழுத்து முறையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்த மாறுதல்கள் அனைத்தும் அக்டோபர் 15-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் மேலும் 11 இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #MinisterVijayabaskar
    சென்னை:

    மாமல்லபுரம் அரசு அரசு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்டுள்ள 24 மணிநேர அவசர சிகிச்சை மையத்தினை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் திறந்து வைத்து பேசியதாவது:-

    இன்று தொடங்கப்பட்டுள்ளதை போன்ற அவசர சிகிச்சை மையங்கள் வெளிநாடுகளில் மட்டுமே காண முடிந்தது. ஆனால் தற்போது உலகத்தரம் வாய்ந்த அவசர சிகிச்சை மையங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுபோன்ற மையங்கள் மேலும் ஸ்ரீபெரும்புதுர், மாதனூர், சூளகிரி, காரிய மங்கலம், ஆசனூர், தாராபுரம், திருச்செங்கோடு, காரமடை, நாங்குநேரி, ஆலங்குளம் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய 11 இடங்களில் விரைவில் அமைக்கப்படும்.



    தமிழகத்தில் சாலை விபத்துக்களால் ஏற்படும் இறப்பை குறைக்க தமிழக அரசு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்னெடுப்பு திட்டத்தை ரூ.57 கோடி செலவில் அறிமுகப்படுத்த உள்ளது.

    மருத்துவமனை முன் கவனிப்பு, மருத்துவமனை கவனிப்பு, மருத்துவமனை புனர்வாழ்வு போன்ற மூன்று அம்சங்களும் ஒருங்கிணைக்கப்படும். மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

    மேலும், 24 கோடி ரூபாய் செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் பொன்னேரி மற்றும் நசரத்பேட்டையில் நிறுவப்படும் என்றார். #MinisterVijayabaskar

    ×