search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு"

    18-வது அகில இந்திய பிஎஸ்என்எல் கைப்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் மோதுகின்றனர்.
    சென்னை:

    18-வது அகில இந்திய பிஎஸ்என்எல் கைப்பந்து போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு 25-20, 19-25, 25-20, 25-15 என்ற கணக்கில் இமாச்சலபிரதேசத்தை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் கர்நாடகா 25-7, 25-14, 25-12 என்ற கணக்கில் உத்தரகாண்டை வீழ்த்தியது.

    இறுதிப் போட்டியில் தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் மோதுகின்றன. #tamilnews
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடுதழுவிய போராட்டம் இன்று நடைபெறும் நிலையில், தமிழகம் - கர்நாடகம் இடையேயான பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது. #BharathBandh #PetrolDieselPriceHike
    சென்னை:

    வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. வணிகர் சங்கங்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 

    தொழிற்சங்கங்களும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் பெரும்பாலான ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயக்கப்படவில்லை. அதேநேரத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கி வருகிறது. அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

    கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முழு அடைப்பு காரணமாக கர்நாடகாவிற்கு இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் மற்றும் சத்தியமங்கலத்தில் நிறுத்தப்பட்டன. தமிழகத்திற்கு இயக்கப்படும் கர்நாடக அரசுப்பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. தமிழகம் - கேரளாவுக்கு இடையேயான பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டன.



    இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்து ரூ. 83.91-க்கும், டீசல் 23 காசுகள் உயர்ந்து ரூ. 76.98-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த முழு அடைப்பு போராட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. #BharathBandh #PetrolDieselPriceHike 

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் தற்போது துவங்கியது. #TNSecretariat #TNCM #Palaniswami
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யும் முடிவு தொடர்பாக தமிழக அரசு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், தற்போது இந்த அமைச்சரவை கூட்டம் துவங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    மிகுந்த எதிர்ப்பார்ப்பு மற்றும் கோரிக்கைகளுக்கு மத்தியில் துவங்கப்பட்டுள்ள இந்த அமைச்சரவை கூட்டத்தில் அந்த 7 பேரின் விடுதலை குறித்து எடுக்கப்படும் முடிவை அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். #TNSecretariat #TNCM #Palaniswami
    எஸ்.பி.ஐ. வங்கியில் 90 கோடி ரூபாய் கடன் வாங்கி ஊழல் செய்த வழக்கில், தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியுள்ளது. #EnforcementDirectorate #TamilNadu
    சென்னை:

    விருதுநகரை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் செண்பகன் என்பவருக்குச் சொந்தமான இன்சுமதி சுத்திகரிப்பு நிலையம் என்ற தனியார் நிறுவனம் எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் சுமார் 87.36 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இதையடுத்து, இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான செண்பகத்துக்கு சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தினர். மதுரை, கோவை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அவருக்கு சொந்தமான 9 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.#EnforcementDirectorate #TamilNadu
    தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாட்டை போக்க மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் 30 லட்சம் டன் மணல் கொண்டுவரப்படுகிறது. இந்த மணல் விற்பனை இந்த மாத இறுதியில் தொடங்கும்.
    சென்னை:

    மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு மணல் இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது.

    இதற்காக ரூ.548 கோடி மதிப்புள்ள 30 லட்சம் டன் மணல் இறக்குமதி செய்ய டெண்டர் கோரப்பட்டது. இதற்கு பல்வேறு நிறுவனங்கள் விண்ணப்பித்தன.

    தற்போது இதில் ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மூலம் மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்படுகிறது.

    இதன்படி, மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் மாதந்தோறும் 5 லட்சம் டன் வீதம் மணல் தமிழகத்துக்கு கொண்டுவரப்படுகிறது. 6 மாதங்களில் மொத்தம் 30 லட்சம் டன் மணல் தமிழகம் வந்து சேரும்.

    தூத்துக்குடி துறைமுகம் மூலம் இந்த மணலை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மணல் விற்பனை இந்த மாத இறுதியில் தொடங்கும்.

    இதன் மூலம் தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று மணல்குவாரி செயல்பாடுகளின் திட்ட இயக்குனரகம் தெரிவித்துள்ளது.#tamilnews
    மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள மொத்தம் 56 ஆயிரத்து 825 சதுர கி.மீ. நிலப்பரப்பை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. #NGT #WesternGhats
    புதுடெல்லி:

    மேற்கு தொடர்ச்சி மலையில், குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் உள்ள மொத்தம் 56 ஆயிரத்து 825 சதுர கி.மீ. நிலப்பரப்பை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பான வரைவு அறிவிக்கையை மேற்கண்ட 6 மாநிலங்களுக்கும் அனுப்பி கருத்து கேட்டது. ஆனால், பெரும்பாலான மாநிலங்கள் கருத்து தெரிவிக்கவில்லை.இதற்கிடையே, வரைவு அறிவிக்கை காலாவதி ஆனதால், மீண்டும் வெளியிட அனுமதி கேட்டு, பசுமை தீர்ப்பாயத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அணுகியது. அதை விசாரித்த நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு, ‘மாநிலங்களின் தாமதம், சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவாது’ என்று கண்டனம் தெரிவித்தது.

    மேலும், மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தில், சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த செயல்பாடுகளுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி தரக்கூடாது என்று தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது. #NGT #WesternGhats
    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) சில இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) சில இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இந்த நிலை ஒருவாரம் நீடிக்கும். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வானம் மேக கூட்டமாக இருக்கும். சில நேரங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

    இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரம் பெய்த மழை அளவு வருமாறு:-

    செஞ்சி 4 செ.மீ., மதுரை விமானநிலையம், பூண்டி தலா 3 செ.மீ., புதுச்சேரி, பெருங்களூர் தலா 2 செ.மீ., திருத்தணி, சிவகங்கை தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. 
    தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையாக பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது. #MID #Tamilnadu
    புதுடெல்லி:

    நடப்பு ஆண்டின் தென்மேற்கு பருவமழை பற்றிய புள்ளி விவரங்களை இந்திய வானிலை ஆராய்ச்சி துறை வெளியிட்டது. அதில், தென்னிந்தியாவில், தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதில், மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தென்னிந்தியாவில், மொத்தம் 125 மாவட்டங்கள் உள்ளன. அவற்றில், 54 மாவட்டங்களில் பற்றாக்குறையாகவும், 2 மாவட்டங்களில் மிகஅதிக பற்றாக்குறையாகவும் பருவமழை பெய்துள்ளது. அதாவது, 40 சதவீத மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறையாகவே பெய்துள்ளது.

    அதிகம் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 32 மாவட்டங்களில், 20 மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. ஒரு மாவட்டத்தில், மிகஅதிக பற்றாக்குறையாக பெய்துள்ளது.

    தென்மேற்கு பருவமழையால் நிலைகுலைந்துள்ள கேரளாவில், 10 மாவட்டங்களில் அதிக மழையும், 2 மாவட்டங்களில் மிகஅதிக மழையும் பெய்துள்ளது.

    புதுச்சேரியில் மொத்தம் உள்ள 4 மாவட்டங்களிலும் பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது.

    கர்நாடகாவில், மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில், 14 மாவட்டங்களில் பற்றாக்குறையாகவும், 2 மாவட்டங்களில் மிகஅதிக பற்றாக்குறையாகவும் பருவமழை பெய்துள்ளது.

    ஆந்திர மாநிலத்தில் ராயலசீமா பகுதியில் உள்ள 4 மாவட்டங்களிலும், இதர பகுதியில் உள்ள 2 மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது.

    தெலுங்கானாவில், மொத்தம் உள்ள 31 மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் மிகஅதிக பற்றாக்குறையாக பருவமழை பெய்துள்ளது. லட்சத்தீவிலும், பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது.

    நாடுதழுவிய அளவில், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், மழைப்பொழிவு 27 சதவீதம் பற்றாக்குறையாக உள்ளது. நாட்டில் உள்ள 91 பெரிய அணைகளின் மொத்த கொள்ளளவில் 63 சதவீத நீர்மட்டம் உள்ளது. தென்னிந்தியாவில், 31 அணைகளில் 76 சதவீத நீர்மட்டம் உள்ளது.

    இவ்வாறு இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.  #MID #Tamilnadu

    சென்னையை சேர்ந்த 3 வயது சிறுமி சஞ்சனா மூன்றரை மணி நேரத்தில் ஆயிரத்து 111 அம்புகளை எய்தி உலக சாதனைக்கு முயன்றதன் மூலம் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். #Chennai #Sanjana
    சென்னை:

    சென்னையை சேர்ந்த வில்வித்தையில் ஆர்வம் கொண்ட சிறுமி தனது 3 வயதிலேயே கின்னஸ் சாதனைக்கான அரிய முயற்சியில் ஈடுபட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சென்னை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பிரேம்நாத் என்பவரின் மகள் சஞ்சனா.

    பிரபல கராத்தே வீரரும், வில் வித்தை பயிற்சி அளித்து வருபவருமான ஷிஹான் ஹுசேனியிடம் பயிற்சி பெற்ற சிறுமி சஞ்சனா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதை வாழ்வின் இலட்சியமாக கொண்டுள்ளார். சமீபத்தில் சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கலைக்கல்லூரியில் இவரது கின்னஸ் சாதனை முயற்சி வெற்றிகரமாக அரங்கேறியுள்ளது.



    3 வயது சிறுமியான சஞ்சனா சுமார் 3 மணி நேரத்தில் ஆயிரத்து 111 அம்புகளை எய்து தனது வயதை கடந்த இலக்கை எட்டியுள்ளார். இதுகுறித்து சுட்டி சஞ்சனா பேசுகையில், இந்த முயற்சியின் போது தமக்கு சிறுதும் வலிக்கவோ அல்லது சோர்வடையவோ இல்லை என புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.

    இந்த சிறுமியை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வைப்பதே தங்களது இலட்சியம் என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். சஞ்சனா எய்த அம்புகள் மிகச்சரியாக இலக்கை எட்டியதுபோல், வெகுவிரைவில் தமிழக வீராங்கனையாக சஞ்சனா தனது இலக்கை எட்டுவார் என அனைவரும் அவருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். #Chennai #Sanjana
    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AtalBihariVajpayee #RIPVajpayee #BanwarilalPurohit #TN #CMPalaniswami
    சென்னை:

    பாஜகவின் பிதாமகன் என அழைக்கப்படும், வாஜ்பாய் வாழும்போதே பாரத ரத்னா வாங்கிய தனி பெரும் சிறப்புக்கு சொந்தக்காரர். இவர் தனது 93-வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனயில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்தார்.

    வயது மூப்பின் காரணமாக சிகிச்சைகள் ஏதும் பலனளிக்காமல், இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று (16.8.18) மாலை காலமானார். இவரது இறப்புக்கு பல்வேறு தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த வாஜ்பாயின் மறைவு வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.



    இதேபோல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்தியில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு இந்தியாவிற்கே பேரிழப்பு என தெரிவித்துள்ளார். இவர் உட்பட, டிடிவி தினகரன் போன்ற அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    வலிமையான தலைவரையும், நல்ல மனிதரையும் நாடு இழந்துவிட்டதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee #BanwarilalPurohit #TN #CMPalaniswami
    தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் கல்வி உதவித்தொகைக்கு வழங்க வேண்டிய ரூ.18 ஆயிரம் கோடியை அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் கையாடல் செய்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல். #SupremeCourt
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில், எம்.எல்.சர்மா என்ற வக்கீல், பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அவர் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம், பஞ்சாப், மராட்டியம் ஆகிய 5 மாநிலங்களில், எஸ்.சி., எஸ்.டி. சமூக மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு வழங்க வேண்டிய ரூ.18 ஆயிரம் கோடியை அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் கையாடல் செய்துள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுவரையிலான கணக்குகளை தணிக்கை செய்த இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி இதை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆகவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இதை அவசர மனுவாக விசாரிக்குமாறு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வக்கீல் எம்.எல்.சர்மா நேற்று வலியுறுத்தினார். அடுத்த வாரம் இம்மனுவை விசாரிக்க நீதிபதிகள் சம்மதம் தெரிவித்தனர். 
    ஆந்திர கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. #ChennaiRain
    சென்னை:

    கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் தூறிக்கொண்டே இருந்தது.

    இந்தநிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-



    மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்கு விட்டு, விட்டு மழை பெய்யும்.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடல் காற்று மணிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

    நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக ஆர்.எஸ்.மங்கலம், வால்பாறை, சேந்தமங்கலத்தில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருந்தது. சின்னக்கல்லார், செங்கோட்டை, மற்றும் தேவலாவில் தலா 2 சென்டி மீட்டர் மழையும், சேலம், திருவாரூர், கொல்லிமலை, பாபநாசம், பெருந்துறை, கூடலூர், தொண்டி, தென்காசி, சென்னை டி.ஜி.பி. அலுவலகம், உத்தமபாளையம், சென்னை வடக்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புழல் உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியிருந்தது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  #ChennaiRain
    ×