search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு"

    நீட் நுழைவுத் தேர்வு கடந்த 6-ந்தேதி நடந்தது. இந்த தேர்வுக்கான விடைத்தாள் இன்று காலை சிபிஎஸ்இ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. #NEETExam #NEET

    தருமபுரி:

    எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 6-ந்தேதி நடந்தது. இந்த தேர்வுக்கான விடைத்தாள் இன்று காலை சி.பி.எஸ்.இ. இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதேபோல மாணவ, மாணவிகள் எழுதி இருந்த தேர்வுக்கான விடைத்தாள் மற்றும் கேள்விக்கான பதில்கள் பிரிவு வாரியாகவும் (ஆன்சர் கீ) இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் விடைத்தாள் குறித்து ஆட்சேபணை இருந்தால் ரூ.1000 கட்டி சி.பி.எஸ்.இ.க்கு முறையீடு செய்யலாம். இந்த விடைத்தாள் மற்றும் ஆன்சர் கீ ஆகியவற்றை வருகிற 27-ந்தேதி மாலை 5 மணி வரை மாணவ, மாணவிகள் இணைய தளத்தில் பார்க்கலாம். அடுத்த மாதம் 5-ந்தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளனர். #NEETExam #NEET 

    தமிழகத்தில் 5 விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய தொழில் கூட்டமைப்பு கூறியுள்ளது.
    சென்னை:

    இந்திய தொழில் கூட்டமைப் பின் (சி.ஐ.ஐ.) தெற்கு மண்டல நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு, இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) தெற்கு மண்டலத் தலைவர் ஆர்.தினேஷ் அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழ்நாடு அரசு சார்பில் எளிதான தொழில் செயல்பாடுகளுக்கான ஒரு இணையதளத்தை தயார் செய்ததற்காகவும், அது நல்லமுறையில் இருப்பதற்காகவும் இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) தெற்கு மண்டலத்தின் நிர்வாகிகள் சார்பில் நன்றி தெரிவித்தோம். மேலும் இந்த இணையதளம் குறித்து அனைத்து மக்களும் அறிந்து கொள்ளவேண்டும் என தெரிவித்தோம்.

    இந்த இணையதளத்தை 29 நிறுவனங்கள் ஏற்கனவே உபயோகிக்கின்றனர். அதில், அனைவருக்கும் நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. எனவே, அதை தொடரலாம். சி.ஐ.ஐ.யின் மாடல் கேரியட் சென்டர் மூலம் 4 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கும் இதுபோல ஒரு இணையதளம் தயார் செய்துள்ளனர். அதுவும் நல்லமுறையில் உள்ளது. மேலும், அதனுடைய செயலாக்கத்தை இன்னும் சிறப்பாக உயர்த்தப் போவதாக கூறினார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, ஆர்.தினேஷ் அளித்த பதில்கள் வருமாறு:-

    கேள்வி:- எளிதாக தொழிலாற்றுவதற்காக சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கும் ஒரு இணையதளம் தயார் செய்துள்ளதாக கூறினீர்களே, அதன் மூலம் சிறு தொழில்கள் வளர்ச்சியடைய வாய்ப்பிருக்கிறதா?

    பதில்:- ரூ.10 கோடி முதலீட்டிற்கு குறைவாக உள்ள சிறு தொழில் முனைவோர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் விண்ணப்பித்தால் கட்டணம் கிடையாது. இந்த தகவல் மக்களை சென்றடைய வேண்டும். இதில், விண்ணப்பிக்கும்போது, பல துறைகளுக்கு ஒப்புதலுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. ஒரு இடத்தில் விண்ணப்பத்தைக் கொடுத்தால் அனைத்துத்துறை ஒப்புதல்களும் பெறப்பட்டு வந்துவிடும்.

    முதல்-அமைச்சர் தொடங்கியதை, சிறு தொழில் முனைவோர்கள் உபயோகிக்கத் தொடங்கிவிட்டனர். எளிதாக தொழிலாற்றுவது குறித்து நாங்கள் சென்றமுறை வழங்கிய ஆலோசனைகளையும் சேர்த்துள்ளனர். இந்த இணையதளத்தில் பதிவு செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்னும், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

    கேள்வி:- தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்குவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு இருக்கிறதா? அது உங்களுக்கு திருப்திகரமாக இருக்கின்றதா?

    பதில்:- இப்போது, தொழில் வழிச் சாலைகள், சாலைகள், விமான போக்குவரத்து போன்றவற்றில் அரசால் செய்யப்பட்டுள்ள அர்ப்பணிப்பு தொடர்ந்தால் நிச்சயம் திருப்தி கிடைக்கும். விமான நிலையங்களுக்கு தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்திக் கொடுக்கிறது. 5 விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்காக இணைப்பு என்று பார்த்தால், துறைமுகங்கள், சாலைகள், ரெயில், விமானம் ஆகியவை உள்ளன. இப்போது சென்னை மட்டுமல்லாமல், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலத்தில்கூட, இரவிலும் விமானங்களை இயக்கும் வசதிக்கு நாங்கள் பரிந்துரை செய்திருக்கின்றோம். அனைத்து வகையிலும் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி என்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது. அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்திய தொழில் கூட்டமைப்பில் ஆலோசித்து, வழிவகுத்து கொடுக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    இந்தியாவில் ஊழல் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNadu #mostcorruptstate #CMSIndia #CorruptionStudy2018

    புதுடெல்லி:

    சி.எம்.எஸ். இந்தியா என்ற தனியார் நிறுவனம் ஒன்று, ஊழல் ஆய்வு 2018 என்ற தலைப்பில் பல்வேறு மாநிலங்களில் ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, நாடு முழுவதும் உள்ள 13 மாநிலங்களில் அரசு சேவைகளை பொதுமக்கள் பெறுவதில் உள்ள மாநிலங்கள் குறித்து நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் மாநிலங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 

    அரசு சேவைகளைப் பெறுவதில் லஞ்சம் பெறுவது தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பதாக அந்த ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது. ஊழல் பட்டியலில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் தெலங்கானா, 4-வது இடத்தில் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மாநிலங்களில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகவும் குறைவாகவே உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    மேலும் பஞ்சாப், குஜராத் மாநிலங்களிலும் ஊழல் தடுப்பு மிக மோசமாகவே உள்ளதாகவும், ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் ராஜஸ்தான், கா்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்கள் ஓரளவு கவனம் செலுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. #TamilNadu #mostcorruptstate #CMSIndia #CorruptionStudy2018
    மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த ஓரிரு தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, தமிழகத்தில் பெய்த மழை அளவு நிலவரம் வருமாறு:-

    சிவகங்கையில் 9 சென்டி மீட்டர் மழையும், குளச்சலில் 7 செ.மீ. மழையும், வெண்பாவூர், மானாமதுரை, மாயனூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும் பெய்துள்ளது. சாத்தான்குளம், அரியலூரில் தலா 4 செ.மீ. மழையும், சாத்தூரில் 3 செ.மீ. மழையும், திருக்காட்டுபள்ளி, பேச்சிப்பாறை, மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

    மேலும், சிவகாசி, இரணியல், முசிறி, துறையூர், முதுகுளத்தூர், காரைக்குடி, மதுரை விமானநிலையம், அறந்தாங்கி, சின்னக்கல்லார், திருமங்கலம் போன்ற பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    இந்தநிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    லட்சத்தீவை ஒட்டிய பகுதிகள், தெற்கு இலங்கையை ஒட்டிய பகுதிகளில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. தெற்கு அரபிக் கடலில் 21-ந் தேதி(நாளை) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது.

    தென்மேற்கு பருவமழை அந்தமான் கடற்பகுதிகளில் வருகிற 23-ந் தேதி தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. திருவள்ளூர், வேலூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருச்சி, கரூர், பெரம்பூர் போன்ற மாவட்டங்களில் 100 முதல் 105 டிகிரி வரை அதிகபட்ச வெயில் பதிவாக வாய்ப்பு உள்ளது.

    சென்னையை பொறுத்தவரை வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி வரை பதிவாகலாம் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    சாகர் புயல் காரணமாக இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மராட்டியம் மற்றும் லட்சத்தீவுகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. #Sagar
    திருவனந்தபுரம்:

    அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது தற்போது புயலாக மாறி உள்ளது. இதற்கு வானிலை மையம் சாகர் என பெயரிட்டுள்ளது.

    இப்புயல் ஏடன் வளைகுடாவில் ஏமனுக்கு கிழக்கு-வடகிழக்கில் 390 கி.மீ. தொலைவிலும், ஸ்கோட்ரா தீவுகளில் இருந்து 560 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்புள்ளது.


    இதன் காரணமாக ஏடன் வளைகுடா மற்றும் அதையொட்டி உள்ள மேற்கு மத்திய பகுதிகள் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளது. 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும், புயலின் தாக்கம் அதிகரிக்கும்போது காற்றின் வேகம் 90 கி.மீட்டருக்கு அதிகமாகவும் வீச வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    சாகர் புயல் காரணமாக இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மராட்டியம் மற்றும் லட்சத்தீவுகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. #Sagar
    தமிழகத்தில் உள்ள இடங்களுக்கு மருத்துவ பட்டமேற்படிப்புக்கான கலந்தாய்வு இன்று சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது.
    சென்னை:

    மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்று முடிவு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள இடங்களுக்கு மருத்துவ பட்டமேற்படிப்புக்கான கலந்தாய்வு இன்று (சனிக் கிழமை) காலை 11 மணிக்கு சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது. இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாற்றுத்திறன் அல்லாத மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு 23-ந் தேதி வரை நடக்கிறது.

    அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 864 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீடு போக கிடைத்துள்ள 117 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு 122 என மொத்தம் 1,103 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பல் மருத்துவ பட்டமேற்படிப்புக்கு அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 23 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு 96 இடங்களுக்கான கலந்தாய்வு 22-ந் தேதி பகல் 2 மணிக்கு தொடங்கி 23-ந் தேதி முடிவடைகிறது.#tamilnews
    தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-

    கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவானதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இன்று(புதன்கிழமை) இடியுடன் கூடிய மழை பெய்யும். தென் மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்.

    காஞ்சீபுரம், திருவள்ளூர், சேலம், மதுரை, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் 100.4 முதல் 104 டிகிரி வரை இருக்கும்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    திருச்செங்கோடு 7 செ.மீ., தொண்டி, மணமேல்குடி தலா 5 செ.மீ., தேவகோட்டை 4 செ.மீ., கூடலூர் பஜார், பவானி, பட்டுக்கோட்டை, ஓட்டப்பிடாரம் தலா 3 செ.மீ., குமாரபாளையம், காரைக்குடி, தேனி மாவட்டம் கூடலூர், சூளகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர், உத்தமபாளையம், பெண்ணாகரம், தாளவாடி, பவானிசாகர், போடிநாயக்கனூர் தலா 2 செ.மீ., அன்னூர், பெரியகுளம், சேலம், வேடசந்தூர், ராதாபுரம், பெருந்துறை, கொடுமுடி, ஒகேனக்கல், ராஜபாளையம், பாப்பிரெட்டிப்பட்டி, ஏற்காடு, ஈரோடு, பாண்டவராயர்தலை தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 
    தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு குடிமராமத்து பணிக்காக 1,511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.#ADMK #EdappadiPalanisamy
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானியில் காலிங்கராயன் மணிமண்டபம் திறப்பு விழா, வளர்ச்சித்திட்ட பணிகள் தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பவானி அரசு ஆண்கள் பள்ளிக்கூட ஆண்டு விழா ஆகிய விழாக்கள் பவானி அரசு ஆண்கள் பள்ளிக்கூட மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவில் கலந்துகொண்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1899-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. என்னை உருவாக்கி உங்கள் முன் நிறுத்தியிருப்பது இந்த பள்ளி தான். நான் படித்த பள்ளி இது. 1967-ம் ஆண்டு முதல் 6-ம் வகுப்பில் இருந்து 11-ம் வகுப்பு அதாவது எஸ்.எஸ்.எல்.சி. வரை இங்கு படித்தேன்.

    சிறந்த ஆசிரியர்கள் பெருமக்கள் எங்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்தனர். அதையெல்லாம் நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பள்ளிக்கூடத்தில் படித்து முதல்-அமைச்சராக உருவாகி இருக்கிறேன் என்றால் அந்த பெருமை இந்த பள்ளிக்கூடத்தை சாரும்.

    குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 65 சதவீதம் மக்கள் விவசாயப்பணி செய்கிறார்கள். உடலுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் விவசாயத்துக்கு நீர் முக்கியம். இந்த நீர் இருந்தால்தான் விவசாயிகளும், வேளாண்மையும் நன்றாக இருக்கும். எனவே கடந்த ஆண்டு 1,519 ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் மூலம் சீரமைக்கப்பட்டது.

    இந்த ஆண்டில் 1,511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த ஏரிகளில் நீர் வரத்து கால்வாய், கரைகள் பலப்படுத்துதல், மதகுகளை சீரமைத்தல், ஆழப்படுத்துதல், உபரிநீர் செல்லும் கால்வாயை தூர்வாரி சரிசெய்தல் ஆகிய பணிகள் செய்யப்பட உள்ளன. இந்த பணிகள் அனைத்தும் அந்தந்த பகுதி விவசாய சங்கங்களுக்கு வழங்கப்படும். சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி குடிமராமத்து பணிக்கு செலவாகும் தொகை முழுவதும் அரசு அவர்களுக்கு வழங்கும். இதனால் எந்த தவறும் நடந்து விடாமல் பணிகள் நடைபெறும்.

    இந்த பணிகள் நிறைவடைந்தால் மழைக்காலங்களில் தண்ணீர் குளம், ஏரிகளில் தேங்கி விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படும். இதுபோல் மழைக்காலங்களில் மட்டும் நீர் ஓடும் ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி வீணாக செல்லும் தண்ணீரை தேக்கி வைக்க 3 ஆண்டுகளுக்கான திட்டம் போடப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும். இந்த ஆண்டுக்கு ரூ.350 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் தடுப்பணைகள் கட்டி நிலத்தடி நீர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நான் படித்த பவானி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்துக்கு சில கோரிக்கைகளை நிறைவேற்றி தர ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் கேட்டு கொண்டு உள்ளனர். அந்த கோரிக்கைகள் இந்த அரசு நிறைவேற்றி தரும். இங்கு ஆயிரம் மாணவர்கள் அமரும் வகையில் புதிய கலையரங்கம், பள்ளிக்கூட சிறப்பு பராமரிப்பு நிதி, சுற்றுச்சுவர் ஆகியவற்றுக்கு ரூ.1 கோடி தேவை என்று தெரிவித்தனர். அந்த தொகையை முழுமையாக தமிழக அரசு வழங்கும்.

    இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #ADMK #EdappadiPalanisamy
    இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளுக்கு இலவசமாக 5 ஆயிரம் டன் அரிசியை வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து இறைவனை வழிபடுவது வழக்கம். இந்த மாதம், இஸ்லாமியர்களின் புனித மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளிலிருந்து வருடந்தோறும் அரசு சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, இந்த ஆண்டும் இஸ்லாமிய அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று, தமிழகம் முழுவதும் உள்ள 3000 மசூதிகளுக்கு, சுமார் 5 ஆயிரத்து 145 டன் அளவிலான அரிசியை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #CMpalaniswami #freericetomosques
    2017-18ம் நிதியாண்டில் அதிக அளவில் தனிநபர் கடன்கள் வாங்கியதில் தென் மாநிலங்கள் முன்னணியில் இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RBI
    மும்பை:

    2017-18ம் நிதியாண்டில் அதிக அளவில் தனிநபர் கடன்கள் வாங்கியதில் தென் மாநிலங்கள் முன்னணியில் இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென் இந்தியாவை பொறுத்த வரையில் அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக கர்நாடகா உள்ளது. இந்த மாநிலத்தில் ரூ.1.6 லட்சம் கோடிக்கு தனிநபர் கடன் வாங்கப்பட்டுள்ளது.

    ரூ.1.5 லட்சம் கோடி கடன் வாங்கி தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. கேரளா ரூ.91,000 கோடியும், தெலுங்கானா ரூ.90,200 கோடியும், ஆந்திரா ரூ.72,100 கோடியும் கடன் வாங்கியுள்ளன.

    தென் மாநிலங்கள் வாங்கிய மொத்த கடன் ரூ.5.7 லட்சம் கோடியாகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017-18 நிதியாண்டில் தென்னிந்தியாவின் தனிப்பட்ட கடன் மதிப்பு 37 சதவீத உயர்வைக் கண்டுள்ளது. வட மாநிலங்களின் தனிப்பட்ட கடன் மதிப்பு 21 சதவீதம் ஆகும். மேற்கு மாநிலங்களின் கடன் மதிப்பு 14 சதவீதமாக உயர்வைக் கண்டுள்ளது.

    தனியார் கடன் நிறுவனங்களில் குறிப்பாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் ஊடுருவல் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் வேகமாக அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. #RBI #ReserveBank
    ×