search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99375"

    அதிமுக தலைமைக் கழகத்தில் 18 தொகுதி சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. #ADMK

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் 18 தொகுதி சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் இன்று காலை நடைபெற்றது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக விருப்ப மனு கொடுத்தவர்களை அழைத்து, தொகுதி நிலவரம், கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்தனர்.

    யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரது வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

    18 தொகுதிக்கும் மொத்தம் 311 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர். அவர்கள் அனைவரும் இன்று நேர்காணலில் பங்கேற்றனர்.

    நேர்காணலில் பங்கேற்றவர்கள் கூறுகையில் யார் வேட்பாளர் என்பதை நேரடியாக தெரிவிக்காமல் கட்சி நிறுத்தும் வேட்பாளரை கருத்து வேறுபாடுகளை மறந்து வெற்றி பெற செய்யபாடுபட வேண்டும் என்று பொதுவான ஆலோசனைகளை வழங்கியதாக தெரிவித்தனர்.

    நேர்காணல் நிகழ்ச்சி பகல் 12.30 மணிக்கு முடிவடைந்ததும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்டச் செயலாளர்களுடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அ.தி.மு.க. தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளதால் யாரும் சோர்வாகிவிடக் கூடாது. நமக்கு வெற்றிதான் முக்கியம். அதற்கேற்ப பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டதாக மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்தனர். #ADMK

    வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு விட்டால் அந்த 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்தி விடலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #ElectionCommissioner #Byelection

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 21 இடங்கள் காலி இடங்களாக உள்ளன.

    திருவாரூர், திருப்பரங்குன்றம், பூந்தமல்லி, ஆம்பூர், ஆண்டிப்பட்டி, ஓட்டப்பிடாரம், பெரம்பூர், பாப்பி ரெட்டிபட்டி, பெரியகுளம், திருப்போரூர், அரூர், சாத்தூர், அரவக்குறிச்சி, சோளிங்கர், நிலக்கோட்டை, பரமக்குடி, தஞ்சாவூர், குடியாத்தம், மானாமதுரை, விளாத்திக்குளம், ஓசூர் ஆகியவையே அந்த 21 தொகுதிகளாகும்.

    இந்த 21 தொகுதிகளுக்கும் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 18-ந்தேதி தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் போது 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளது. தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

    3 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பதற்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதில் உள்நோக்கம் இருப்பதாக சென்னையில் நேற்று நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்த கூடாது என்று எந்த கோர்ட்டும் தேர்தல் ஆணையத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. எனவே 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தாதது மக்கள் விரோத நடவடிக்கை என்று தி.மு.க. குற்றம்சாட்டி உள்ளது. தேர்தல் ஆணையம் இதில் உரிய முடிவு எடுக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று தி.மு.க. எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதற்கிடையே சென்னையில் நேற்று மாலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களை சுமூகமாக நடத்துவது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. பிரதிநிதிகள் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் 3 தொகுதி இடைத்தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.

     


    அதற்கு பதில் அளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, “3 தொகுதிகளின் தேர்தல் பற்றி கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால்தான் இடைத்தேர்தலை நடத்த இயலவில்லை. அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு விட்டால் அந்த 3 தொகுதிகளிலும் இடைத் தேர்தலை நடத்தி விடலாம்” என்றார்.

    இதைத் தொடர்ந்து அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சரவணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் ஏ.கே. போஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து தன்னை எம்.எல்.ஏ. ஆக அறிவிக்க கோரி சரவணன் புதிய மனுதாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. இந்த வழக்கு காரணமாகவே திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலை நடத்த இயலாத நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்ததும், இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக சரவணன் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நேற்று சரவணன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

    இதுபோல அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளின் தேர்தல் வழக்குகளையும் திரும்பப் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. #ElectionCommissioner #Byelection

    தமிழகத்தில் விடுபட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #DMK #TNBypoll
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும், மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பின்னர் அறிவித்தார்.

    இந்த உத்தரவால் கடும் அதிருப்தி அடைந்த திமுக, இந்த 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாட முடிவு செய்தது.

    18 சட்டமன்றத் தொகுதிகளுடன் விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த முன்வராவிட்டால் நீதிமன்றம் சென்று தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றியது.



    இந்நிலையில், திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் விடுபட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடும்படி கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், வெள்ளிக்கிழமை அவசர வழக்காக விசாரிப்பதாக கூறியுள்ளது. #DMK #TNBypoll
    பாராளுமன்றத் தேர்தலின்போது, விடுபட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என திமுக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. #DMK #TNBypoll
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும், மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பின்னர் அறிவித்தார்.

    இந்நிலையில், சென்னையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், காலியாக உள்ள 21 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படாததால் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாடவும் முடிவு செய்யப்பட்டது.



    அதன்பின்னர், 18 சட்டமன்றத் தொகுதிகளுடன் திருப்பரங்குன்றம், விடுபட்ட அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    “3 தொகுதிகளில் தேர்தல் நடத்தாததற்கு கூறும் காரணங்கள் அடிப்படை ஆதாரமற்றது. ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம், உயர்நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு வந்துவிட்டது. அந்த 2 தொகுதிகள் தொடர்பான வேறு எந்த வழக்குகளிலும் தேர்தலை நடத்தக்கூடாது என உத்தரவிடப்படவில்லை. தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் ஒரு அரசை மைனாரிட்டி அரசாக நீடிக்க அனுமதிப்பதா?

    எனவே, விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிடப்படும். தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த முன்வராவிட்டால் நீதிமன்றம் சென்று தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #DMK #TNBypoll
    3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்காததால் அதிருப்தி அடைந்துள்ள திமுக, இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #DMK #TNBypoll
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும், மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பின்னர் அறிவித்தார்.



    இந்நிலையில், சென்னையில் இன்று திமுக எம்பி, எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், காலியாக உள்ள 21 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படாததால் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாடவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #DMK #TNBypoll
    21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டி இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Rajinikanth
    ஆலந்தூர்:

    நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். அப்போது போர் வரும்போது பார்த்துக் கொள்வோம் என்று தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து அவர் அரசியல் கட்சி தொடங்குவதற்கான கட்டமைப்பை தொடங்கினார். ரஜினி மக்கள் மன்றம் அமைப்பை உருவாக்கி மாவட்டம் தோறும் நிர்வாகிகளை நியமித்தார். உறுப்பினர் சேர்க்கையும் நடந்தது.

    எனவே ரஜினி விரைவில் தனது அரசியல் கட்சியை அறிவிப்பார் என்று கடந்த ஒரு ஆண்டாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை.மேலும் தொடர்ந்து புதிய படங்களில் நடித்து வந்தார்.

    இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த். சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு, பாராளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.

    எனவே 21 தொகுதி இடைத்தேர்தலில் ரஜினி கட்சி போட்டியிடலாம் என்றும், அதற்குள் புதிய கட்சி அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் இருந்து சென்னைக்கு இன்று மதியம் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்று கூறி இருக்கிறீர்கள். 21 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா?

    பதில்:- இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.

    கே:- தண்ணீர் தரும் கட்சிகளுக்கு தான் ஓட்டு என்று சொல்லி இருக்கிறீர்கள். அது மத்திய கட்சியா? மாநில கட்சியா?

    ப:-இரண்டுமே

    கே:- பாராளுமன்ற தேர்தலில் உங்களுடைய ஆதரவு யாருக்கு?

    ப:- அதைப்பற்றி இப்போது கூறமுடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth
    21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். #MKStalin #DMK

    சென்னை:

    தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மற்றும் 21 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு கொடுத்திருந்தனர்.

    இதில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு விருப்ப மனு கொடுத்தவர்களை தொகுதி வாரியாக அழைத்து அண்ணா அறிவாலயத்தில் இன்று நேர்காணல் நடத்தப்பட்டது.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொருவரையும், தனித்தனியாக அழைத்து அவர்களிடம் நேர்காணல் நடத்தினார். கட்சியில் எவ்வளவு காலம் பணியாற்றி இருக்கிறீர்கள்? இதற்கு முன்பு தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் உண்டா? தேர்தல் செலவு செய்ய பணம் உள்ளதா? என்பது போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டார்.

    ஒவ்வொரு தொகுதியிலும் விருப்ப மனு செய்தவர்களிடம் நேர்காணல் நடத்திய பிறகு அந்த தொகுதியின் மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர், மாவட்ட நிர்வாகிகளை அழைத்து கருத்துக்கள் கேட்டார்.

     


    திருவாரூர், திருப்பரங்குன்றம், பூந்தமல்லி, ஆம்பூர், ஆண்டிப்பட்டி, ஒட்டப்பிடாரம், பெரம்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, பெரியகுளம், திருப்போரூர், அரூர், சாத்தூர், அரவக்குறிச்சி, சோளிங்கர், நிலக்கோட்டை, பரமக்குடி, தஞ்சாவூர், குடியாத்தம், மானாமதுரை, விளாத்திகுளம், ஓசூர் ஆகிய தொகுதிகளுக்கு இன்று நேர்காணல் நடந்தது.

    பரமக்குடி தொகுதிக்கு சம்பத்குமார், பாலு, சீதா ராணி, ஜெயமுருகன், தமிழ ரசி, வி.நக்கீரன், தங்கராஜ், பூமிநாதன், இசைவீரன், குமரகுரு, முருகேசன், கதிரவன், செல்வி, சஞ்சய் ஆகியோர் நேர்காணலுக்கு வந்திருந்தனர்.

    சாத்தூர் தொகுதிக்கு மல்லி ஆறுமுகம், கடற்கரை ராஜ், சீனிவாசன், விளாத்திக்குளம் தொகுதிக்கு சோ.ரவி, நவீன், கலைச்செல்வி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்பட 20 பேர் வந்திருந்தனர்.

    ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு மாடசாமி, சண்முகையா, சுசிந்தா, பூங்குமார், ராஜேந்திரன், காசிவிஸ்வநாதன், அனந்த், ஆறுமுக பெருமாள், இளையராஜா, பெரியகுளம் தொகுதிக்கு ஜீவா, பிச்சை, கணேசன், நாகலிங்கம், முத்துசாமி, காமராஜ், சரவணகுமார் உள்ளிட்ட 14 பேர் வந்திருந்தனர்.

    பெரம்பூர் தொகுதி நேர்காணலில் ஜெயராமன், கமலக்கண்ணன், என்.வி.என். சோமு மகள் டாக்டர் கனிமொழி, தமிழ்வளன், தேவ ஜவஹர், ஆர்.டி.சேகர், மலர் விழி, இரா.கருணாநிதி, யுவராஜ், நரேந்திரன், ஆனந்த், முருகன், லோகநாதன், நெடுமாறன், ரவி ஆகிய 15 பேர் வந்திருந்தனர்.

    இன்று 21 சட்டசபை தொகுதிக்கு நேர்காணல் நடைபெற்றதால் அண்ணா அறிவாலயத்தில் நிர்வாகிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அந்தந்த தொகுதிக்கும் விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் மட்டுமின்றி அவர்களின் ஆதரவாளர்களும் திரளாக வந்ததால் அண்ணா அறிவாலயம் களை கட்டியது. #MKStalin #DMK

    தமிழகத்தில் 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின்போது வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். #SatyabrataSahoo #EC
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. எப்போது வேண்டுமானாலும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் தமிழகம் வரலாம். எனவே நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். தலைமை தேர்தல் கமிஷனர் வரும் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம்.

    தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேவையான நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழக காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து இன்று அரசுத் துறை செயலாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தை தலைமைச் செயலாளர் கூட்ட இருக்கிறார்.

    இந்த கூட்டங்களில் சேகரிக்கப்படும் தகவல்கள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    தேர்தல் வரவிருப்பதையொட்டி 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய 25-ந்தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அதிகாரிகள் இடமாற்றம் நடந்து வருகிறது. ஒரு சில துறைகள் சில ஆலோசனைகளை கேட்டு உள்ளன. அதுகுறித்த தகவல்கள் தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில், ‘வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு அளித்தார்கள்’ என்பதை உறுதி செய்து கொள்வதற்கான ‘வி.வி.பி.ஏ.டி. எந்திரம்  (ஒப்புகை சீட்டு) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த முறை மூலம் காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடக்கும் வாக்குப்பதிவின் போது ஒரு வாக்காளருக்கு 7 நிமிடங்கள் வரை தேவைப்படும்.

    தேர்தல் தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் ஒரே பெயர் பல முறை இடம் பெற்றிருப்பது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் ஒருவருடைய பெயர் பல இடங்களில் இருந்தால் அதனை உடனடியாக நீக்க அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.



    கடந்த 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் உள்ள 67 ஆயிரத்து 664 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது. இதில் 7 லட்சத்து 31 ஆயிரத்து 333 பேர் விண்ணப்பங்களை அளித்து உள்ளனர். அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 53 ஆயிரத்து 912 விண்ணப்பங்களும், குறைந்த பட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 258 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. இதில் தகுதி உள்ளவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியை 15 நாட்களுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    கூடுதலாக வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பித்து இருப்பதால் கூடுதலாக வாக்குச்சாவடிகளும் தேவைப்படும். இதுகுறித்து இந்திய தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

    ஆசிரியர்களுக்கு பதில் இதர துறை ஊழியர்களையும் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது. ஆனால் அனைத்து கிராமங்களிலும் போதுமான அரசு ஊழியர்கள் இருப்பதில்லை. இதுகுறித்து அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடமும் கருத்து கேட்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #SatyabrataSahoo #EC

    சுப்ரீம் கோர்ட்டில் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. #SupremeCourt
    புதுடெல்லி:

    மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பின்னர் கஜா புயல் நிவாரண பணிகளை காரணம்காட்டி அத்தொகுதியில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது அப்பகுதியில் நிலைமை சீராக தொடங்கிவிட்டது.

    அதேபோல திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற இருந்த இடைத்தேர்தலும் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை காரணம்காட்டி நிறுத்தப்பட்டது. எனவே, இந்த இரு தொகுதிகளிலும் உடனடியாக இடைத்தேர்தலை அறிவிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அமர்வில் நடைபெற்றது. மனுதாரர் கே.கே.ரமேஷ் தரப்பில் வக்கீல் ஜெயசுகின் ஆஜராகி வாதாடினார்.

    விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், திருவாரூர் இடைத்தேர்தல் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், திருப்பரங்குன்றம் தொகுதியை பொறுத்தவரை சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் ஐகோர்ட்டு தேர்தல் நடத்துவது குறித்து தடை ஏதும் விதிக்கவில்லை என்றால் உடனடியாக தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர். #SupremeCourt
    பாராளுமன்ற தேர்தலோடு 21 சட்டசபைக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். #Parliamentelection #DMK #Thirumavalavan

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ் நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 10 சதவீதம் தொகுதிகள் காலியாக இருப்பது இதுவே முதல் முறையாகும். அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால் அந்தத் தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி சட்டப் பேரவையில் பெரும்பான்மை இல்லாத ஒரு கட்சியின் ஆட்சி தொடர்வதற்கும் அதுவே காரணமாக இருக்கிறது.

    காலியாக உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்துவதுதான் முறையானதாக இருக்கும். தனித்தனியே தேர்தல் நடத்துவதால் ஏற்படும் பொருள் செலவையும், காலவிரயத்தையும் அது தடுக்கும். அதுமட்டு மின்றி இடைத்தேர்தல் என்றாலே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது தான் என்ற கேவலமான நிலையையும் அது மாற்றும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலோடு காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #Parliamentelection #DMK #Thirumavalavan

    பாராளுமன்ற தேர்தலுடன் 20 தொகுதி இடைத்தேர்தலையும் நடத்த தயாராக உள்ளோம் என்று தமிழக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #SatyabrataSahoo

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள ஒப்புகை சீட்டுடன் மின்னணு வாக்குபதிவு எந்திரத்தை செயல்படுத்த தேர்தல் கமி‌ஷன் திட்டமிட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குசாவடிகளிலும் மின்னணு எந்திரத்துடன் ஒப்புகைச்சீட்டு முறையை செயல்படுத்த பொதுமக்களுக்கு செயல் விளக்கம் இன்று தொடங்கியது.

    சென்னையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர செயல் விளக்கம் அளிக்க 32 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாகனங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் செல்லும். அங்கு பொது மக்கள் ஓட்டுப்பதிவு செய்து யாருக்கு வாக்களிக்கிறோம் என்கிற தகவலை உறுதி செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சென்னையில் அண்ணாநகர் மத்திய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒப்புகைச்சீட்டு செயல் விளக்க திட்டத்தினை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பின்னர் சத்யபிரத சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது. ஓசூர் சட்டசபை தொகுதி இன்னும் காலியானதாக அறிவிக்கப்படவில்லை.

    காலியானதாக அறிவித்தால் அதற்கான ஆயத்த பணிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம்.

    மின்னணு வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு செயல்விளக்கம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் நடத்தப்படும். 10 நாட்களுக்குள் இதனை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். தேவைப்பட்டால் கூடுதலாக நாட்கள் ஒதுக்கப்படும்.

    இந்த ஒப்புகை சீட்டு முறையின் மூலம் கள்ள ஓட்டினை தடுக்க முடியும். யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்வதோடு, ஓட்டு எண்ணிக்கையின் போது ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் இந்த பெட்டியினை திறந்து அதில் உள்ள சீட்டினை எண்ண முடியும். வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு தருவதில்லை. 7 வினாடிகள் மட்டுமே பார்க்க முடியும்.

    ஒருவாகனம் தினமும் 5 வாக்குச்சாவடிகளுக்கு சென்று செயல் விளக்கம் அளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செயல்விளக்க நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு ஓட்டுப்பதிவு செய்தனர். துணை தேர்தல் அதிகாரி லலிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #SatyabrataSahoo

    அரியானாவின் ஜிந்த் சட்டசபை தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதற்கு காரணமான வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். #Jindbypoll #BJP #KrishanLalMiddha #Modi
    சண்டிகர்;

    அரியானா மாநிலத்தில் ஜிந்த் தொகுதிக்கு கடந்த திங்கட்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க சார்பில் கிருஷ்ணா நிறுத்தப்பட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ரந்தீப் சுர்ஜித் வாலா நிறுத்தப்பட்டார். ஜனநாயக ஜனதா கட்சி சார்பில் திக்விஜய் சவுதாலா போட்டியிட்டார்.

    கடந்த திங்கட்கிழமை நடந்த ஓட்டுப் பதிவில் 76 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு அங்குள்ள அர்ஜுன் ஸ்டேடியத்தில் ஜிந்த் தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டன. பாஜக சார்பில் போட்டியிட்ட கிருஷண் லால் மித்தா 50,566 வாக்குகள் பெற்று, 12,935 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 



    இந்நிலையில், அரியானாவின் ஜிந்த் சட்டசபை தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதற்கு காரணமான வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அரியானாவில் பாஜக வேட்பாளரை வெற்றி பெற வைத்த ஜிந்த் தொகுதி மக்களுக்கு நன்றி. பாஜக வாக்குறுதி அளித்தபடி தொகுதியில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு சேவையாற்றும் அரியானா முதல் மந்திரி மற்றும் பாஜகவினருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். #Jindbypoll #BJP #KrishanLalMiddha #Modi
    ×