search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99375"

    அரியானாவின் ஜிந்த் சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் கிருஷண் லால் மித்தா வெற்றி பெற்றார். #Jindbypoll #BJP #KrishanLalMiddha
    சண்டிகர்;

    அரியானா மாநிலத்தில் தற்போது மனோகர்லால் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள ஜிந்த் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த லோக்தளம் கட்சியைச் சேர்ந்த ஹரி சந்த் மித்தா மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    கடந்த திங்கட்கிழமை அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க சார்பில் கிருஷ்ணா நிறுத்தப்பட்டார். இவர் மறைந்த எம்.எல்.ஏ. ஹரிசந்த் மித்தாவின் மகன். லோக்தளம் கட்சியில் இருந்து விலகிய அவருக்கு பா.ஜ.க. வேட்பாளராக வாய்ப்பு அளித்து இருந்தது.

    அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ரந்தீப் சுர்ஜித் வாலா நிறுத்தப்பட்டார். ஏற்கனவே கைதால் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த இவரை திட்டமிட்டு ராகுல் இந்த தொகுதி இடைத்தேர்தலில் களமிறக்கி இருந்தார்.

    இந்திய தேசிய லோக்தளம் கட்சி உமத் என்பவரை வேட்பாளராக நிறுத்தி இருந்தது. இந்திய தேசிய லோக்தளம் கட்சியில் விலகிய அஜய்சிங் சவுதாலா சமீபத்தில் ஜனநாயக ஜனதா கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கி இருந்தார். அந்த கட்சி சார்பில் அவர் தனது மகன் திக்விஜய் சவுதாலாவை போட்டியிட வைத்தார்.



    இதனால் ஜிந்த் தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டது. கடந்த திங்கட்கிழமை நடந்த ஓட்டுப் பதிவில் 76 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு அங்குள்ள அர்ஜுன் ஸ்டேடியத்தில் ஜிந்த் தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டன.

    இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிட்ட கிருஷண் லால் மித்தா 50,566 வாக்குகள் பெற்று, 12,935 வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

    ஜனநாயக ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட திக்விஜய் சவுதாலா 37,631 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். 

    காங்கிரஸ் சார்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரந்தீப்சிங் சுர்ஜித்வாலா 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனால் அரியானா மாநில காங்கிரசார் அதிர்ச்சி அடைந்தனர். #Jindbypoll #BJP #KrishanLalMiddha
    காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் எப்போது இடைத்தேர்தல் நடத்த கூறினாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தமிழக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #TNElectionOfficer #SatyabrataSahoo

    சென்னை:

    தேசிய வாக்காளர் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட வாக்காளர்கள் உதவி மையத்தை ரிப்பன் மாளிகையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன. காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் எப்போது தேர்தல் நடத்த கூறினாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    100 சதவீத வாக்காளர் அட்டை வழங்கி உள்ளோம். புதிய வாக்காளர் அட்டை பிப்ரவரி 1-ந்தேதி முதல் வழங்கப்படும். வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான தகவல்களுக்கு 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதா? என்று கேட்ட போது, அதுபற்றி சட்டசபை செயலாளரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்றார். #TNElectionOfficer #SatyabrataSahoo

    தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் தமிழகத்தில் தானாகவே அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்படுவதோடு அக்கட்சியே இல்லாமல் போய்விடும் என காங்கிரஸ் பிரமுகர் கூறியுள்ளார். #ADMK #Congress
    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் கலியபெருமாள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகனுக்கு புதுவை காங்கிரஸ் ஆட்சியை பற்றி பேசுவதற்கு தகுதிகள் இல்லை.

    புதுவையில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் படிப்படியாக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசின் நிதி நிலைமைக்கேற்றவாறு நிறைவேற்றி வருகிறது.

    மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்ற முதலமைச்சர் நாராயணசாமி எந்த அளவுக்கு போராடி வருகிறார் என்று புதுவை மக்கள் நன்கு அறிவர். திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவது யார்? என்றும் நன்கு அறிவர்.

    ஆனால், தமிழகத்தில் நடப்பது அ.தி.மு.க. ஆட்சி அல்ல. அங்கு மோடியின் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அதனால் அங்கு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த கவர்னர் துணையாக இருந்து வருகிறார்.

    ஆனால், புதுவையில் அந்த மாதிரி இல்லை. அன்பழகன் எம்.எல்.ஏ.வுக்கு தைரியம் இருந்தால் பொங்கல் பரிசு பொருட்கள் ஏன் அனைத்து கார்டுகளுக்கும் வழங்க கவர்னர் அனுமதி வழங்கவில்லை என கவர்னரை எதிர்த்து போராட வேண்டும்.

    புதுவையில் காங்கிரஸ் ஆட்சி விரைவில் அகற்றப்படும் என்று அன்பழகன் கூறுகிறார். தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் தமிழகத்தில் தானாகவே அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்படுவதோடு அக்கட்சியே இல்லாமல் போய்விடும் என்பதை மறந்து விட வேண்டாம்.

    புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக்கு எம்.ஜி.ஆரும். ஜெயலலிதாவும் ஆட்சியை விட்டுக்கொடுத்தார் என்று கூறியுள்ளார். அது கூட்டணி முடிவு. காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து வாக்குகளை பெற்றதால் தான் தமிழகத்தில் அப்போது ஆட்சி அமைக்க அ.தி.மு.க.வால் முடிந்தது என்பது யாவரும் அறிந்தது.

    இதுபோல் அரசியல் பேசாமல் தமிழகத்துக்கு சென்று அரசியல் கற்று பின்னர் புதுவையில் அரசியல் பேச வந்தால் ஏற்புடையதாக இருக்கும்.

    இவ்வாறு கலியபெருமாள் கூறியுள்ளார். #ADMK #Congress
    திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து அந்த தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. #ThiruvarurByElection
    திருவாரூர்:

    திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.

    இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (வியாழக் கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 10-ந் தேதி. வேட்பு மனு வாபஸ் பெற 14-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து 28-ந் தேதி ஓட்டுப்பதிவும், 31-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

    தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் அரசியல் கட்சிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் வாகன சோதனையில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    எந்தவித அசம்பாவித சம்பவமும் இன்றி தேர்தலை ஜனநாயக முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான நிர்மல்ராஜ் தெரிவித்தார்.#ThiruvarurByElection
    அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு தயார் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #ThangaTamilSelvan

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் 20 தொகுதி இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு அ.தி.மு.க.வும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இணைய வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்களும் பாரதிய ஜனதா மேலிடமும் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இதுபற்றி தினகரனின் ஆதரவாளரான தங்கதமிழ்ச் செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இணைய வேண்டும். அப்போதுதான் வர இருக்கிற தேர்தல்களில் முழு வெற்றியை பெற முடியும் என்பது தொண்டர்களின் கருத்தாக உள்ளது.

    தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்றால் அ.தி.மு.க. இரு அணிகளும் இணைய வேண்டும் என்று தான் எல்லா நிர்வாகிகளும் விரும்புகிறார்கள்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்ற ஒரே கோரிக்கைதான் 18 எம்.எல்.ஏ.க்களின் ‘அஜண்டாவாக இருந்தது. டி.டி.வி தினகரனின் நிபந்தனை, கூடுதலாக 4, 5 அமைச்சர்கள் பதவியை விட்டு விலக வேண்டும் என்பதுதான்.


    ஆனால் எடப்பாடி தரப்பு சசிகலா குடும்பத்தை தவிர யார் வந்தாலும் சேர்த்து கொள்வோம் என்கிறார்கள்.

    எனவே யார்-யார் பதவியில் இருக்க வேண்டும், யார்-யார் விலக வேண்டும் என்பதை பெருந்தன்மையுடன் பேசி முடிவெடுக்க வேண்டும். இரு தரப்பிலும் பேசினால் கட்சிகள் இணைவது சாத்தியம்தான்.

    ஏற்கனவே ஜெ.அணி, ஜானகி அணி என 2 பிரிவாக இருந்த போதுதான் தி.மு.க. ஜெயித்து ஆட்சியை பிடித்தது. அந்த தவறை உணர்ந்து இரு அணிகளும் பின்னர் இணைந்தது. ஆட்சியையும் பிடித்தது.

    அதே போன்ற ஒரு கால கட்டம்தான் இப்போது வந்துள்ளது. ஆளும் கட்சியிடம் உளவுப் பிரிவு உள்ளதால் யாருக்கு பலம் அதிகம் உள்ளது என்ற சர்வே இருக்கும். அதன் அடிப்படையில் பதவி கொடுக்கலாம்.

    தமிழ்நாடு முழுவதும் மக்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்திக்கும் ஒரே தலைவராக டி.டி.வி. தினகரன் வலம் வருகிறார். ஆனால் ஆளும் கட்சியில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்ற ஊர்களுக்கு சென்று தொண்டர்களை சந்திக்க முடிவதில்லை. சேலம் மாவட்டத்திலேயே அவர் 5 நாட்கள் முகாமிட்டு தங்குகிறார்.

    எனவே யாருக்கு மக்களிடம் செல்வாக்கு உள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அம்மாவின் சபதத்தை நிறைவேற்ற வேண்டுமானால் ஆளும் கட்சிதான் விட்டு கொடுத்து வரவேண்டும்.

    கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்பி விட்டார்கள். 18 எம்.எல்.ஏ.க் களை தகுதி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். இதைவிட இழப்பதற்கு எங்களிடம் என்ன இருக்கிறது?

    அ.தி.மு.க.வில் உள்ள 10 பேர் சுய நலத்துக்காக கட்சியையும், ஆட்சியையும் இழக்க வேண்டுமா? என்பதை சிந்தியுங்கள்.

    அ.தி.மு.க. இணைந்தால் கட்சிக்கு மிகப்பெரிய பலம் கிடைக்கும். தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பாரதிய ஜனதா கூட்டணி சேர்ந்தால் அ.தி.மு.க. ‘அவுட்’ ஆகி விடும். இதுதான் இன்றைய நிலை.

    இவ்வாறு தங்க தமிழ்ச் செல்வன் கூறினார். #ThangaTamilSelvan

    இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். #Thangamani

    குடியாத்தம்:

    தமிழகத்தில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி உள்பட 18 சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் களப்பணிகளை அ.தி.மு.க.வினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் பூத்கமிட்டி அமைப்பது, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை என களப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களான மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தூசி மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து அமைச்சர் பி.தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வீடுகளுக்கு மின்இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு படிப்படியாக கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வுக்கு டி.டி.வி.தினகரனை தவிர யார் வேண்டுமானாலும் வரலாம் என முதல்-அமைச்சர் ஏற்கனவே கூறியிருக்கிறார்.

    அ.தி.மு.க., எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் இயக்கம். இந்த இயக்கத்தில் நாங்கள் யாரையும் இழுத்து சேர்க்கவில்லை. கழகத்தில் தானாக வந்து சேர்ந்து கொண்டிருந்தனர். பொதுமக்கள் ஆதரவு இருக்கிறது. முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் சிறப்பாக நிர்வாகத்தை கொண்டிருக்கின்றனர். அதனை பார்த்து தற்போது வரை கழகத்தில் 1½ கோடி உறுப்பினர்கள் சேர்ந்து இருக்கின்றனர்.

    மற்ற கட்சிகளில் இருந்து அழைத்து வந்து கட்சியில் சேர்க்க வேண்டிய அவசியம் அ.தி.மு.க.விற்கு இல்லை. இங்கு அனைவரும் வந்து சேரலாம் என்பது எங்கள் நோக்கம்.

    முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அ.தி.மு.க.வில் சேர முயற்சி செய்தார். நாளை தி.மு.க. ஆட்சிக்கு வரவில்லை என்றால் வேறு கட்சிக்கு சென்று விடுவார்.

    தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பிற்கு தேவையான நிதியை பெற முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசை தொடர்ந்து கேட்டு வருகிறோம். விரைவில் மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதி கிடைக்கும். இடைத்தேர்தலுக்காக கட்சியினர் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thangamani

    பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #GajaCyclone #OPanneerSelvam
    பெரியகுளம்:

    பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட 28, 29,30 ஆகிய வார்டுகளில் கஜா புயல் காரணமாக வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. ஆனால் அதிகாரிகள் யாரும் நிவாரணபணிகளை மேற்கொள்ளவில்லை.

    எனவே அப்பகுதியை சேர்ந்த மக்கள் கால்நடைகளுடன் தண்டுபாளையத்தில் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஆர்.டி.ஓ மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருவாய்த்துறையை சேர்ந்த ஊழியர் ஒருவர் மறியல் செய்தவர்களை ஒருமையில் பேசினார்.

    இதனால் தள்ளுமுள்ளு மற்றும கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அதிகாரிகள் பொதுமக்களை சமரசம் செய்தனர். அதன்பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 3 வார்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நகராட்சி ஆணையர் கமலாவுடன் சென்று பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு இடைத்தேர்தல் வருவதால் நீங்கள் வருகிறீர்களா? எங்கள் பகுதிக்கு யாரும் வரக்கூடாது.

    ஓட்டு வாங்கும்போது வந்த நீங்கள் இதுவரை எங்களது பகுதியில் என்ன நடக்கிறது என்றுகூட பார்க்கவில்லை. வெள்ளம் பாதித்த எங்களுக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்கவேண்டும். இல்லாவிட்டால் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை வீசி எறிந்துவிடுவோம் என்று ஆவேசமாக பேசினர்.

    அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் பொதுமக்களை சமரசம் செய்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை வேறுபகுதிக்கு அழைத்துச்சென்றனர்.

    சொந்த ஊரிலேயே ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக பொதுமக்கள் செயல்பட்டதால் அ.தி.மு.கவினரும், அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். #GajaCyclone #OPanneerSelvam
    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நடத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #HCMaduraiBench #Byelection #Thiruvarur #Thiruparankundram
    மதுரை:

    தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது இடைத்தேர்தல் நடத்தாத தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினர்.



    மேலும் தேர்தலுக்கான கால அட்டவணை இருக்கிறதா? என்று கேட்ட நீதிபதிகள், தேர்தல் நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர். #HCMaduraiBench #Byelection #Thiruvarur #Thiruparankundram 
    20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் இப்போதே தீவிரமாக இறங்கிவிட்டனர். #DMK #ADMK

    சென்னை:

    தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏற்கனவே பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. சார்பில் இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரனும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இடைத்தேர்தலுக்கான பணிகளில் இறங்கி உள்ளனர்.

    இந்த இடைத்தேர்தலுக்கான பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் இப்போதே தீவிரமாக இறங்கிவிட்டனர். தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலை சேகரித்து வைத்துள்ளனர்.

    தொகுதியில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளை தொடங்கி விட்டனர். அ.தி.மு.க., தி.மு.க. வினர் போட்டி போட்டு தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள்.

    சென்னையில் பெரம்பூர் தொகுதியில் உள்ள திரு.வி.க. நகர் பஸ்நிலையம் அருகே உள்ள சுவர்களில் தி.மு.க.வினர் உதயசூரியன் சின்னம் வரைந்து வருகிறார்கள். இதேபோல் அ.தி.மு.க.வினர் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே சுவர்களில் இரட்டை இலை சின்னம் வரைந்து வருகிறார்கள்.

    தினகரன் கட்சியினரும் சின்னம் வரைவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதுபோல் 20 தொகுதிகளிலும் இடைத் தேர்தலுக்கான வேலைகளில் அ.தி.மு.க.-தி.மு.க. தொண்டர்கள் இறங்கி உள்ளனர். #DMK #ADMK

    கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர் என முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #KarnatakaBypoll #Kumarasamy
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தில் 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 சட்டசபை தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது அன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடந்தது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் - மஜத கூட்டணி கட்சி 4 -1 என்ற கணக்கில் வென்றது.  

    இந்நிலையில், கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர் என முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூட்டணிக்கு கிடைத்த தார்மீக வெற்றி. கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற கூட்டணி நீடிக்காது எனக்கூறிய பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர்.



    காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலின்போது 28 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு. அதன் முதல் படிதான் இந்த வெற்றி.

    மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த வெற்றியால் அத்துமீறி செயல்படுபவர்களாக மாறமாட்டோம். தங்கள் கூட்டணி தொடர்பான பாஜக குற்றச்சாட்டை மக்கள் நிராகரித்து உள்ளனர் என தெரிவித்துள்ளார். #KarnatakaBypoll #Kumarasamy 
    கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெற்ற வெற்றி டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பெற்ற வெற்றிபோல் உள்ளது என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #KarnatakaBypoll #Chidambaram
    சென்னை:

    கர்நாடகம் மாநிலத்தில் 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 2ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது அன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடந்தது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் - மஜத கூட்டணி கட்சி 4 -1 என்ற கணக்கில் வென்றது.  

    இந்நிலையில், முன்னாள் நிதி மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கூறுகையில், கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் - மஜத பெற்ற வெற்றி டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பெற்ற வெற்றிபோல் உள்ளது என தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், கர்நாடக இடைத்தேர்தல்களில் 4-1 என்ற வெற்றி விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெறும் டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் போல் உள்ளது. இதில் கற்க வேண்டிய பாடம்: கூட்டணி பலன் தந்துள்ளது என பதிவிட்டுள்ளார். #KarnatakaBypoll #Chidambaram
    கர்நாடக மாநிலம், ஷிவ்மோகா பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ராகவேந்திரா 52,148 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். #Yeddyurappa #BYRaghavendrawins #Shivamogga #LokSabhabypoll
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா தொகுதி பா.ஜ.க. எம்.பி.யும் அம்மாநில முன்னாள் முதல் மந்திரியுமான எடியூரப்பா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து, காலியாக இருந்த ஷிவமோகா, மன்டியா, பல்லாரி ஆகிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த மூன்றாம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.  

    அம்மாநிலத்தை ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்தித்தன.

    கடந்த மூன்றாம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் ஷிவமோகா தொகுதி பா.ஜ.க. வேட்பாளரும் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா மகனுமான ராகவேந்திரா, 52,148 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரான முன்னாள் முதல் மந்திரி பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பா தோல்வியை தழுவினார். #Yeddyurappa #BYRaghavendrawins #Shivamogga #LokSabhabypoll 
    ×