என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இடைத்தேர்தல்"
- வேட்பாளர் தேர்வு, வெற்றிக்கான வியூகங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
- கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம் :
பல்லடம் ஊராட்சி ஒன்றியம் 1வது வார்டு இச்சிப்பட்டியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்தநிலையில் பல்லடம் கிழக்கு ஒன்றியதி.மு.க.அலுவலகத்தில் ஒன்றிய பொறுப்பாளர் சோமசுந்தரம் தலைமையில் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேட்பாளர் தேர்வு, வெற்றிக்கான வியூகங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில் கொ.ம.தே.க. மாவட்டசெயலாளர் கரைப்புதூர் ராஜேந்திரன், காங்கிரஸ் வட்டார தலைவர் புண்ணியமூர்த்தி,
இந்தியக் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் பரமசிவம், மதிமுக. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 27-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது.
- வேட்புமனு விவரம், உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
திருப்பூர் :
தமிழகத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரகத்தில் 498 பதவிகள், நகர்ப்புறத்தில் 12 என 510 பதவிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி ஒன்றியம் -16வது வார்டு, பல்லடம் ஒன்றியம் - 1வது வார்டு, ஊத்துக்குளி ஒன்றியம் - இச்சிபாளையம் ஊராட்சி தலைவர், அவினாநி- அய்யம்பாளையம் ஊராட்சி (6வது வார்டு), குடிமங்கலம் ஊராட்சி - 1வது வார்டு, காங்கயம் -ஆலாம்பாடி 9வது வார்டு, பொங்கலூர் - வடக்கு அவிநாசிபாளையம் 7 வது வார்டு, உடுமலை - அந்தியூர் 2வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.நகர உள்ளாட்சியில் பதவிகள் காலியில்லை. மொத்தம் 8பதவிகளுக்கான தேர்தலுக்கு 30 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வார்டு வாரியாக, வாக்காளர் பட்டியலும் தயார்நிலையில் உள்ளன.
தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியாளர் என 50 பேர் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து பல்லடம், அவிநாசி ஒன்றியங்கள், ஊத்துக்குளி இச்சிப்பாளையம் ஊராட்சி, வார்டு தேர்தல் நடக்கும் ஊராட்சி முழுமைக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மாவட்ட அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூறுகையில், 27-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது. வரும் 28ந்தேதி பரிசீலனை, 30ந் தேதி வரை வாபஸ் பெற அவகாசம் வழங்கப்படும். ஓட்டுப்பதிவு ஜூலை 9ந் தேதி காலை,7மணி முதல், மாலை,6மணி வரை நடக்கும். ஓட்டு எண்ணிக்கை, 12-ந் தேதி நடைபெறும். கிராமங்களில் இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி ஒன்றிய அலுவலகம் மற்றும் வார்டு உறுப்பினருக்கு, அந்தந்த ஊராட்சி அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் நடக்கும். வேட்புமனு விவரம், உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றனர்.
- தற்செயல் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது.
- அந்தியூர் ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
திருப்பூர் :
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு அடுத்த மாதம் 9-ந் தேதி தற்செயல் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்தில் 16-வது வார்டு உறுப்பினர், பல்லடம் ஒன்றியத்தில் 1-வது வார்டு உறுப்பினர், ஊத்துக்குளி ஒன்றியத்தில் இச்சிப்பாளையம் ஊராட்சி தலைவர், அவினாசி ஒன்றியத்தில் அய்யம்பாளையம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர், குடிமங்கலம் ஒன்றியம், குடிமங்கலம் 1-வது வார்டு உறுப்பினர், காங்கயம் ஒன்றியம் ஆலாம்பாடி ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர், பொங்கலூர் ஒன்றியம் வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர், உடுமலை ஒன்றியம் அந்தியூர் ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் கடந்த 18-ந்தேதி நடந்து முடிந்தது. பணப்பட்டு வாடா புகாரால் வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீதி உள்ள 38 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
இதேபோல 18 சட்டமன்ற தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் (தனி), சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதன்படி இந்த 4 தொகுதிகளிலும் அன்று தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன.
ஆளும் கட்சியான அ.தி.மு.க., எதிர்க்கட்சியான தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் நேரடியாக மோதுகின்றன. தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மு.க. ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார். சூலூரில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன், ஒட்டப்பிடாரத்தில் சண்முகையா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
அ.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 4 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. இன்னும் சில தினங்களில் அக்கட்சி சார்பில் போட்டியிடுபவர்களின் பெயர்களை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் வெளியிட உள்ளனர்.
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது. தங்கள் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களை நாளை தினகரன் அறிவிக்கிறார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை இருவரும் விரைவில் அறிவிக்க உள்ளனர்.
நடந்து முடிந்த பாராளுமன்ற மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு போட்டியாக அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் களம் இறங்கினார்கள். இதனால் தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவியது. 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அதே நிலை உருவாகி உள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் தினகரன், கமல், சீமான் ஆகியோரின் கட்சி வேட்பாளர்கள் கணிசமான அளவில் வாக்குகளை பெற்று இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. உளவு பிரிவு போலீசாரும் இது தொடர்பாக அறிக்கை அளித்துள்ளனர். இதன் காரணமாக இந்த 3 கட்சிகளின் நிர்வாகிகளும் உற்சாகமாக காணப்படுகிறார்கள்.
அந்த வேகத்திலேயே 4 தொகுதி இடைத்தேர்தல் களத்திலும் குதிக்க தயாராகி உள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை முடிவு செய்யப்பட உள்ளனர்.
4 தொகுதிகளிலும் நாளை (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. வருகிற 29-ந்தேதி வேட்பு மனுதாக்கலுக்கு கடைசி நாளாகும். 30-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. வேட்பு மனுக்களை திரும்ப பெற மே 2-ந்தேதி கடைசி நாளாகும்.
இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் இன்னும் சில தினங்களில் பிரசாரத்தை தீவிரப்படுத்த உள்ளனர்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மே 1-ந்தேதி தனது பிரசாரத்தை தொடங்குகிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் பிரசார பயணமும் தயாராகி வருகிறது.
தினகரன் 1-ந்தேதி முதல் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். கமல், சீமான் ஆகியோரும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் பதிவான ஓட்டுகள் மே 23-ந்தேதி எண்ணப்படுகின்றன. சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கையும் அன்றைய தினமே நடைபெறுகிறது. அன்று மாலையிலேயே அனைத்து தேர்தல் முடிவு களும் வெளியாகிறது.
9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:-
1. பூவிருந்தவல்லி - ஏழுமலை
2. பெரம்பூர் - வெற்றிவேல்
3. திருப்போரூர் - கோதண்டபாணி போட்டி
4. குடியாத்தம் - ஜெயந்தி பத்மநாபன்
5. ஆம்பூர் - பாலசுப்பிரமணி
6. அரூர் - முருகன்
7. மானாமதுரை - மாரியப்பன் கென்னடி,
8. சாத்தூர் - சுப்பிரமணியன்
9. பரமக்குடி - முத்தையா
ஏற்கனவே கோரக்பூர், புல்பூர் பாராளுமன்ற தொகுதிகளை பா.ஜனதா இழந்த நிலையில் தற்போது தொடர் தோல்வியை தழுவியிருப்பது முதல்-மந்திரி ஆதித்யநாத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
5 பாராக்கள் கொண்ட இந்த கவிதைக்கு தடம் மாறிச் சென்றது அதிகாரிகள் ஆட்சி என்ற தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார்.
இதேபோல் பைரியா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திரா சிங் கூறுகையில், தேர்தல் தோல்விக்கு ஊழலே காரணம். தாசில்தார் தொடங்கி போலீஸ் நிலையங்கள் வரை ஊழல் பரவி விட்டது. அதிகாரிகளும், போலீசாரும் மக்களை தொல்லைப்படுத்துவதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டார்கள். முதல்-மந்திரி அதை தடுக்க தவறியதால் அரசு மதிப்பு மரியாதையை இழந்து விட்டது என்றார்.
இதற்கிடையே ஈடாவா நகரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஆதித்யநாத் பேசுகையில், ஊழல்வாதிகளும், அவர்களை ஆதரிப்பவர்களும் பயங்கரவாதிகள். அவர்கள் கூட்டணி வைத்து பிரதமர் மோடிக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்றார். #UPbypolls #YogiAdityanath
உறுப்பினர்கள் மறைவு, பதவி விலகல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் காலியான 11 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இதில், உத்தர பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பால்கர், பந்தாரா மற்றும் நாகாலாந்து ஆகிய மக்களவைத் தொகுதியின் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
இதேமாநிலத்தின் பால்கர் தொகுதியில் பாஜக 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துள்ளது. நாகாலாந்து மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நாகலாந்து ஜனநாயக மக்கள் கட்சி முன்னிலையில் உள்ளது.
தங்களது வசமிருந்த 2 மக்களவை தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. சட்டசபை தொகுதிகளை பொறுத்தவரை, உத்தரபிரதேசத்தில் பாஜக வசமிருந்த நூர்புரில் சமாஜ்வாதி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபில் அகாலி தளம் வசமிருந்த ஷாகோட் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
ஜார்கண்டில் கோமியா, சில்லி ஆகிய இரண்டு தொகுதிகளையும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தக்க வைத்துள்ளது. கேரளாவில் செங்கனூர் தொகுதியை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தக்க வைத்துள்ளது. பீகாரில் ஆளும் ஜனதா தளம் வசமிருந்த சோகிஹட் தொகுதியை லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி கைப்பற்றியுள்ளது.
மஹாராஷ்டிராவின் பாலஸ் காடேகான் சட்டசபை தொகிதியில் காங்கிரஸ் உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேகாலயாவின் அம்பாடி தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்துள்ளது. உத்தரகாண்டின் தாராலி தொகுதியை ஆளும் பாஜக தக்கவைத்துள்ளது.
மேற்கு வங்கத்தின் மஹேஸ்தலா தொகுதியை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தக்க வைத்துள்ளது. கர்நாடகாவில் வாக்காளர் அடையாள அட்டை கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டு தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட ஆர்.ஆர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளது பாஜகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. #bypoll
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்