search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைத்தேர்தல்"

    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. தெரிவித்தது.
    • தே.மு.தி.க. போட்டியிடுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா மற்றும் பா.ம.க. சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    அ.தி.மு.க. சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. மேலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாகவும் தெரிவித்தது.

    இந்த நிலையில், அந்த தொகுதியில் தி.மு.க., பா.ம.க. மற்றும் நா.த.க. என மும்முனை போட்டி ஏற்பட்டது. மேலும், தே.மு.தி.க. போட்டியிடுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.

    இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் விக்ரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது."

    "இதுவரை தமிழகத்தில் நடந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட தேமுதிக விக்ரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறது. காரணம் தேர்தல்கள் என்பது ஜனநாயக ரீதியாக நேர்மையாக நடக்கவேண்டிய தேர்தல்கள் இன்றய கால கட்டத்தில் ஆட்சியர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடதப்படுகிறது."

    "இந்த இடைதேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் அனைத்தும் விரயம் செய்ய விரும்பவில்லை. எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத காரணத்தால் தேமுதிக இந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது. இன்றய ஆட்சியர்களின் கரங்களில் தேர்தல் என்கின்ற ஜனநாயகம் மிக பெரிய கேள்விக்குறியக்கப்பட்டுள்ளது."

    "ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கின்றோம் என்று நாம் பெருமையாக சொல்லி கொண்டாலும் ஜனநாயகம் என்பது இன்றக்கு கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது என்பதை ஒட்டு மொத்த மக்களும், கழகத்தினரும் அறிவர். எனவே இந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.

    • விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை போர் என்று கூறுகிறேன்.
    • தி.மு.க. அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையொடடி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!

    நமது புனித பூமியான விக்கிரவாண்டி சட்டப்பே ரவை தொகுதி பா.ம.க. வேட்பாளராக தம்பி பனையபுரம் சி.அன்புமணி அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

    விக்கிரவாண்டி என்றதும் எனது நினைவில் மட்டுமின்றி, உனது நினைவிலும் தோன்று வது தியாகமும், துரோகமும் தான். அவற்றில் தியாகத்தை முதலில் நினைவு கூர்கிறேன்.

    வன்னியர்களுக்கு தமிழகத் தில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, நான் அறிவித்த 7 நாள் தொடர் சாலைமறியல் போராட்டம் 1987-ம் ஆண்டு நடந்த போது பாப்பனப்பட்டு என்ற இடத்தில் ரெங்கநாதக் கவுண்டர், வீரப்பக் கவுண்டர் ஆகியோரை சுட்டுக் கொன்ற காவல்துறை அடுத்து சித்தணி என்ற இடத்தில் ஏழுமலை என்ற மாவீரனை தங்களின் குண்டுகளுக்கு இரையாக்கியது.

    அப்போதும் கொலைப் பசி அடங்காத காவல்துறை, பனையபுரம் கூட்டுச்சாலையில் போராட்டம் நடத்திய நமது சொந்தங்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தான் ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்கார வேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கயத்தூர் தண்டவராயன் ஆகிய 5 சொந்தங்களும் தங்களின் மார்புகளில் துப்பாக்கி குண்டுகளை வாங்கி உயிர்த்தி யாகம் செய்தனர்.

    தியாகத்தைத் தொடர்ந்து துரோகத்திற்கு வருகிறேன். இதே விக்கிரவாண்டி தொகு தியில் ஐந்தாண்டுகளுக்கு முன் சட்டப்பேரவை உறுப்பி னராக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த ராதாமணி என்பவர் காலமானதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் இடைத்தேர்தல் நடைபெற்றது.

    அதற்கான பரப்புரை தொடங்கும் முன்பே அக்டோபர் 7-ம் நாள் அறிக்கை வெளியிட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின், தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அதன்பின் 5 ஆண்டுகள் ஆகிவிட்டன

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.

    எத்தனை துரோகங்கள் செய்தாலும் வன்னியர்கள் நம்மை ஆதரித்துக் கொண்டே இருப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைமைக்கு இந்தத் தேர்தலில் நாம் பாடம் புகட்ட வேண்டும்.

    இந்த தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தினால் தான் அடுத்தத் தேர்தலுக்கு முன்பாகவாவது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தி.மு.க. அரசு முன்வரும். அதனால் தான் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை போர் என்று கூறுகிறேன். இதை பாட்டாளி சொந்தங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    மொத்தத்தில் வன்னி யர்களுக்கான இட ஒதுக் கீட்டை வென்றெடுக்க விக்கி ரவாண்டி இடைத்தேர்தல் நமக்கு மிகச்சிறந்த வாய்ப்பு ஆகும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வுக்கு கிடைக்கும் தோல்வி தான் வன்னிய மக்களுக்கும் சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்கும். இதை உணர்ந்து பாட்டாளி சொந்தங்களும், பிற சமுதாய மக்களுக்கும் விக்கிரவாண்டி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முன்னாள் மத்திய மந்திரியான ப.சிதம்பரத்தின் எக்ஸ் வலைதள பதிவு.
    • பா.ம.க. வேட்பாளரின் வெற்றியை எளிதாக்கும் வகையில் மேலிட உத்தரவு.

    மதுரை:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புக ழேந்தி காலமானதைடுத்து அங்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. தலை மையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.

    அதே வேகத்துடன் தி.மு.க. சார்பில் விக்கிர வாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதைய டுத்து பா.ஜ.க. தலைமையி லான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க.வுக்கு அந்த தொகுதி ஒதுக்கி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டார்.

    அதன்படி அங்கு பா.ம.க. மாநில துணைத்தலைவர் சி.அன்புமணி வேட்பாள ராக போட்டியிடுகிறார். அ.தி.மு.க. வேட்பாளர் யார் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிரடியாக அறிவித்தார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் வலைதளத்தில் இன்று காலை பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அ.தி.மு.க.வின் முடிவானது, அங்கு போட்டியிடும் பா.ம.க. வேட்பாளரின் வெற்றியை எளிதாக்கும் வகையில் மேலிடத்தில் (பா.ஜ.க.வில்) இருந்து உத்தரவு வந்துள்ளது என்பதற்கு இதுவே தெளிவான சான்று ஆகும்.

    எனவே விக்கிரவாண்டி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரின் அமோக வெற்றியை உறுதி செய்யவேண்டும் என்று ப.சிதம்பரம் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    அதேபோல் நேற்று கோவையில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க.வுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று கூறிவிட்டு தற்போது அவர்களுக்காக தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அ.தி.மு.க.வின் இந்த முடிவால் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
    • தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க. சார்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அ.தி.மு.க.வோ விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக் கணிப்பதாக அதிரடி அறி விப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில், "விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற வாய்ப்பு இல்லாததால் தேர்தலை புறக்கணிப்பதாக" தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வின் இந்த முடிவால் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடாமல் அ.தி.மு.க. விலகி உள்ளதால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. களத்தில் இல்லாத நிலையில் தி.மு.க.-பா.ம.க. இடையிலேயே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பு முடிவை தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பாரதீய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. வைத்துள்ள ரகசிய உடன்பாடு இதன் மூலம் வெளிப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    அ.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பு பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க.வுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு இருப்பதாகவும் இது மறைமுக ஆதரவு என்றும் அவர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

    விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகளை அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய இரண்டு கட்சிகளும் கணிசமாக பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் போட்டியில் இருந்து அ.தி.மு.க. விலகியுள்ளதால் அது பா.ம.க.வுக்கு கூடுதல் ஓட்டுகள் கிடைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருப் பதாகவே கூறப்படுகிறது.

    இதனால் பா.ம.க.வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி போட்டியில் இருந்து விலகியுள்ள போதிலும் தி.மு.க. வை தோற்கடிக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. நிச்சயம் உறுதியாக இருக்கும்.

    அதற்கேற்ற வகையில் அ.தி.மு.க.வினரின் செயல் பாடுகள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    தி.மு.க., பா.ம.க. வேட்பா ளர்களோடு நாம் தமிழர் கட்சியின் அபிநயாவும் தனித்து போட்டியிடுகிறார். தி.மு.க., பா.ம.க. இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் நாம் தமிழர் வேட்பாளர் வழக்கம் போல கணிசமான ஓட்டுகளை வாங்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 3 பேர் மட்டுமே களத்தில் நிற்பதால் நாம் தமிழர் கட்சி வேட்பா ளர் பிரிக்கும் ஓட்டுகளும் விக்கிரவாண்டி தொகுதி யில் முக்கியத்துவம் பெறும் என்றே எதிர்பார்க்கப்ப டுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீத ஓட்டுகளை வாங்கி அங்கீகரிக்கப்பட்ட கட்சி யாக மாறி இருக்கும் நாம் தமிழர் கட்சியும் விக்கிர வாண்டி தொகுதியில் உற்சாகமாக களம் இறங்கியுள்ளது.

    விக்கிரவாண்டி தொகுதியில் யாரும் எதிர்பாராத வகையில் அதிக வாக்குகளை நாங்கள் வாங்குவோம் என்று அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பு, தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதிக ஓட்டு கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெறுவோம் என்று தி.மு.க.வினர் தெரிவித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு விக்கிரவாண்டி தொகுதியிலும் பெரிய வெற்றியை பெறுவதற்கு ஆளும் கட்சியான தி.மு.க. வேகம் காட்டி வருகிறது. அந்த கட்சி நிர்வாகிகளும் சுறுசுறுப்போடு தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.

    பா.ம.க., நாம் தமிழர் கட்சியினரும் தேர்தல் பணியில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.

    • இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
    • இரட்டை இலை இல்லாமல் ஒரு தேர்தல் நடக்கிறது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

    இந்தநிலையில் விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால் இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இந்தநிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிக்க கூடாது என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். இது தொடர்பாக நடிகை கஸ்தூரி அளித்த பேட்டி வருமாறு:-

    ஜனநாயக நாட்டில் தேர்தலை மக்கள் புறக்கணிக்கவே கூடாது. அதற்கான விழிப்புணர்ச்சியை நாம் ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டிருக்கும் போது தமிழ்நாட்டின் 2-ம் பெரிய கட்சியான அ.தி.மு.க.வே தேர்தலை புறக்கணிக்கிறது என்பது எனக்கு ஏற்புடையது இல்லை. அவர்கள் போட்டியிட வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

    இரட்டை இலை இல்லாமல் ஒரு தேர்தல் நடக்கிறது என்பது தமிழ்நாட்டில் இது முதல் தடவை என்று நான் நினைக்கிறேன். எனவே இது எனக்கு ஏற்க முடியாத ஒரு அறிவிப்பாக இருக்கிறது. இதை எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகி கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற பலரது விருப்பமாக இருக்கிறது.

    தி.மு.க. இருக்கும் இடத்தில் அ.தி.மு.க. அதை எதிர்க்க வேண்டும். அப்போதுதான் அது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உருவாக்கிய ஒரு அ.தி.மு.க.வாக இருக்கும். அவர்கள் ஒதுங்கிப்போவது என்பது கண்டிப்பாக பா.ஜ.க. தான் இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சி, நாங்கள் 3-வது இடத்துக்கு வந்து விட்டோம் என்று அவர்களே வாக்குமூலம் கொடுப்பது போல் இருக்கிறது. என்னாலும், என்னைப்போல் இருப்பவர்களாலும் அதை ஜீரணிக்கவே முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இடைத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெறாது என்பதால் புறக்கணிப்பு.
    • மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அதிமுக, மீண்டும் ஆட்சியில் அமரும்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தேர்தலை கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கமல்ல அதிமுக.

    கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின்போது வாக்காளர்களை அடைத்து வைத்து ஜனநாயக படுகொலை அரங்கேற்றப்பட்டது.

    மக்களை அடைத்து வைத்தால், அந்த இடத்திற்கே சென்று மக்களை சந்திப்பேன் என நான் எச்சரித்தேன். மக்களவை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள், வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவார்கள்.

    ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவார்கள் என்பதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிக்கிறோம். இடைத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெறாது என்பதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்.

    மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அதிமுக, மீண்டும் ஆட்சியில் அமரும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 21-ந் தேதி நடக்கிறது.
    • தேர்தல் மன்னன் பத்மராஜன் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    விக்கிராவண்டி:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 10-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். ஆனால் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கபடவில்லை.

    இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 21-ந் தேதி நடக்கிறது.

    வேட்புமனு தாக்கல் காலை 11 மணிக்கு தொடங்கியது. இதை தொடர்ந்து 11.10 மணிக்கு அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பு தலைவர் அக்னி ஆழ்வார் சுயேட்சையாக போட்டியிட ரூபாய் நோட்டு மாலை அணிந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.


    பின்னர் அவர் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை ரூ.10 ஆயிரத்தை சில்லரை காசுகளை மூட்டையாக கொண்டு வந்து தேர்தல் அலுவலரிடம் வழங்கினார். அதற்கு அடுத்தபடியாக தேர்தல் மன்னன் பத்மராஜன் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    மேலும் நூர் முகமது, ராஜேந்திரன் ஆகியோரும் சுயேட்சையாக போட்டியிட தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

    • நாளை மாலை 6 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
    • வெற்றி பெறுவதற்கான வியூகத்தை மேற்கொள்வது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலை சந்திக்க தி.மு.க. சுறுசுறுப்புடன் தயாராகி உள்ளது.

    தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தி.மு.க. சார்பில் 10 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த குழுவில் தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் மற்றும் 9 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, லட்சுமணன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஒவ்வொரு ஒன்றியத்தையும் தனித்தனியாக கவனிப்பதற்காக தேர்தல் பணிக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தேர்தல் பணிக்குழுவினர் நாளை விக்கிரவாண்டியில் கூடி ஆலோசனை நடத்துகிறார்கள். அங்குள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நாளை மாலை 6 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் 9 அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள். பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு விக்கிரவாண்டி தொகுதியிலும் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை மேற்கொள்வது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

    நாளை வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில் அதன் தொடர்ச்சியாக பிரசாரங்களை மேற்கொள்வது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    • வருகிற 14-ந்தேதி வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது.
    • பா.ஜனதா கட்சியின் ஆதரவை பா.ம.க. கோர முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ள பா.ம.க. தனது கூட்டணியில் உள்ள பா.ஜனதாவின் ஆதரவை கோரி வருகிறது.

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந்தேதி மரணம் அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலி இடமாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அங்கு ஜூலை 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப் படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. வருகிற 14-ந்தேதி வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது.

    மனுதாக்கல் செய்ய 21-ந் தேதி கடைசி நாள். இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

    கடந்த 2019-ல் அ.தி.மு.க. ஆட்சியின் போதும் விக்கிரவாண்டி தொகுதி யில் இடைத்தேர்தல் நடந்தது. அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 1,13,766 ஓட்டுகள் பெற்று 44,924 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது தி.மு.க. 68,842 ஓட்டு வாங்கி தோல்வி அடைந்தது. அடுத்து 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார்.

    இப்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பெற்ற ஓட்டுகளை விட அ.தி.மு.க. 6,823 ஓட்டுகள் மட்டுமே குறைவாக பெற்றிருந்தது.

    தொடர் தோல்வியாலும், பாராளுமன்ற தேர்தலில் 81 சட்டசபை தொகுதிகளில் பா.ஜனதாவுக்கு கீழே போனதாலும் அக்கட்சிக்கு விக்கிரவாண்டி சோதனை களமாக மாறி உள்ளது.

    சோர்ந்திருக்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்த இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில், அ.தி.மு.க. களம் இறங்க உள்ளது.

    இம்முறையும் முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்ச் செல்வன் போட்டியிடுவார் என தெரிகிறது.

    பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. அங்கு போட்டியிட முடிவு செய்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் ஒரு இடம் கூட பெறாத நிலையில் 2026 சட்டசபை தேர்தல் வரை பா.ம.க. பா.ஜனதாவுடன் கூட்டணியில் நீடிக்கும் என தெரிகிறது.

    அதற்கு ஏற்ப பா.ம.க. அங்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பா.ஜனதா கட்சியின் ஆதரவை பா.ம.க. கோர முடிவு செய்துள்ளது.

    இது குறித்து முடிவு செய்வதற்காக பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெறும் என தெரி கிறது.

    இதற்கிடையே பா.ம.க. விருப்பத்தை ஏற்று அக் கட்சிக்கு தொகுதியை விட்டுக்கொடுப்பது பற்றி தமிழக பா.ஜனதா தலைமை இன்று முடிவெடுத்து அறிவிக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதனால் பா.ஜனதா தலைமை இன்று முடி வெடுத்து அறிவிக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். பா.ஜனதா வின் ஆதரவை கேட்டு பா.ம.க. பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் 8.14 சதவீத ஓட்டுகளை பெற்று மாநில கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்து களம் காண உள்ளது.

    இதன் காரணமாக விக்கிரவாண்டியில் 4 முனை போட்டி ஏற்படுவது உறுதியாகி உள்ளது.

    • அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
    • 4 முனைப்போட்டி நிலவுவதால் ஒவ்வொரு கட்சியும் தீவிர பரிசீலனை.

    சென்னை, ஜூன்.11-

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் 6-ந்தேதி மரணம் அடைந்ததால் அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    இதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. அதன்படி வருகிற 14-ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய 21-ந்தேதி கடைசி நாளாகும்.

    தேர்தலுக்கு நாள் நெருங்கி விட்ட காரணத்தால் இந்த தேர்தலில் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகிறது.

    இதில் தி.மு.க. வேட்பாளர் யார்? என்பது நாளைக்குள் (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டு விடும் என்று அறிவாலய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் தி.மு.க.வில் 'சீட்' கேட்டு அமைச்சர் பொன்முடி மகன் கவுதமசிகாமணி, மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், மாநில விவசாய பிரிவு செயலாளர் அன்னியூர் சிவா, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் ஆகிய 4 பேர் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் மீண்டும் போட்டியிட அமைச்சர் பொன்முடி மகன் கவுதமசிகாமணி முயற்சி செய்திருந்தும் அவருக்கு அப்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    அதனால் இடைத்தேர்தலில் நின்று எம்.எல்.ஏ.வாகி விட வேண்டும் என்ற முனைப்பில் இப்போது கவுதம சிகாமணி 'காய்' நகர்த்தி வருகிறார். ஆனால் இவரைப் போல் கட்சியில் முக்கியஸ்தராக இருக்கும் மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரனும் எம்.எல்.ஏ. சீட் கேட்டு வருகிறார். இதில் ஜெயச்சந்திரனுக்கு தான் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

    இதேபோல் அ.தி.மு.க.வில் கடந்த முறை போட்டியிட்ட முத்தமிழ்ச்செல்வனுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏனென்றால் 2021 தேர்தலில் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி 93,730 ஓட்டுகள் வாங்கி இருந்த நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்ச்செல்வன் 84,157 வாக்குகள் பெற்று கடும் போட்டியை உருவாக்கி இருந்தார். அதாவது 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி வெற்றி பெற்றிருந்தார்.

    நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்ட ஷீபா ஆஸ்மி 8,216 வாக்குகளும், அ.ம.மு.க. வேட்பாளர் 3,053 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

    2021 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜனதா கட்சிகள் இணைந்திருந்தது. அதன் பிறகு இப்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி விட்டது. இனி வரும் தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து விட்டார்.

    எனவே இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை நிறுத்தினாலும் பா.ம.க.வும் வேட்பாளரை களம் இறக்குகிறது.

    பா.ம.க. சார்பில் சிந்தாமணி புகழேந்தி ஏகமனதாக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் நாம் தமிழர் கட்சியும் ஏற்கனவே போட்டியிட்ட ஷீபா ஆஸ்மியை வேட்பாளராக நிறுத்தும் என தெரிகிறது.

    விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதால் ஒவ்வொரு கட்சியும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களை நிறுத்த ஆயத்தமாகி வருகிறது. அப்போதுதான் வெற்றி எளிதாக கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 72,188 வாக்குகளும், அ.தி.மு.க. 65,365 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 8,352 வாக்குகள் வாங்கி உள்ளது.

    இதையெல்லாம் கணக்கு போட்டு பார்க்கும்போது 4 முனை போட்டி நிலவினால் தி.மு.க., அ.தி.மு.க. இடையே தான் கடும் போட்டி நிலவும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. பா.ம.க. நிறுத்தும் வேட்பாளரை பொறுத்து அரசியல் களம் மாறுபட வாய்ப்பு உள்ளது.

    தி.மு.க. ஆளும் கட்சியாக இருப்பதால் இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க 15 அமைச்சர்கள் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நியமிக்க கூடும் என தெரிகிறது.

    எனவே விக்கிரவாண்டி தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவுவதால் ஒவ்வொரு கட்சியும் வேட்பாளரை நிறுத்த தீவிர பரிசீலனையில் இறங்கி உள்ளது.

    • தி.மு.க. வேட்பாளர் யார் என்பது இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • விக்கிரவாண்டி தேர்தலில் மீண்டும் 4 முனை போட்டி ஏற்படும் என தெரிகிறது.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி இருந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி மரணம் அடைந்தார்.

    இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

    அந்த சமயத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிட்டது.

    தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி பாராளுமன்ற முதல் கட்ட தேர்தல் நடந்தது. அடுத்த 6 கட்ட தேர்தல் பல்வேறு கட்டங்களாக மற்ற மாநிலங்களில் நடந்தது. இதனால் 7-வது கட்டமாக இறுதி கட்ட தேர்தலின்போது விக்கிரவாண்டி தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.


    இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10- ந் தேதி (அடுத்த மாதம்) நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது.

    அதில் ஜூன் 14-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும், ஜூன் 21-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் அட்டவணை வெளியிட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 24-ந் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி 26-ந் தேதி (புதன்கிழமை) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூலை 10-ந் தேதி வாக்குப்பதிவு என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூலை 13-ந் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    ஜூலை 15-ந் தேதி தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இந்த முறை மீண்டும் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க. வேட்பாளர் யார் என்பது இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2021 தேர்தலின் போது தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி 93,730 ஓட்டுகள் வாங்கி இருந்தார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் நின்ற முத்தமிழ்ச்செல்வன் 84,157 வாக்குகள் பெற்றார். 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி வெற்றி பெற்றிருந்தார். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷீபா ஆஸ்மி 8,216 வாக்குகளும், அ.ம.மு.க. வேட்பாளர் அய்யனார் 3,053 வாக்குகளும் பெற்றிருந்தனர்.


    அப்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜனதா இணைந்திருந்தது. ஆனால் இப்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி விட்டது. இனி வரும் தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பா.ம.க. நீடித்து தேர்தலை சந்தித்தது.

    இந்த கூட்டணி விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. போட்டியிடுவது தற்போது உறுதியாகி உள்ளது. இதில் தி.மு.க. நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை இன்று அறிவித்துள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளார். எனவே பா.ம.க.வும் இந்த தேர்தலில் வேட்பாளரை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சியும் களத்தில் இறங்க உள்ளது. எனவே விக்கிரவாண்டி தேர்தலில் மீண்டும் 4 முனை போட்டி ஏற்படும் என தெரிகிறது.

    விக்கிரவாண்டி தேர்தலோடு சேர்த்து 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் ஜூலை 10-ந் தேதி நடக்கிறது.

    மேற்கு வங்காளத்தில் 4 தொகுதிக்கும், இமாச்சலப்பிரதேசம்-3, உத்தரகாண்ட்-2, பீகார், மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் தலா 1 இடங்களிலும் தேர்தல் நடக்கிறது.

    • விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
    • தேர்தல் முடிந்து ஜூலை 13ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக, தி.மு.க.,வை சேர்ந்த புகழேந்தி இருந்தார். இவர் உடல் நலக்குறைவால் ஏப்ரல் 6-ந் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடந்தது. பாராளுமன்ற தேர்தல் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நடந்த இறுதிக் கட்ட தேர்தலின் போது, விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

    ஆனால் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதி தொடங்கும் என்றும், தேர்தல் முடிந்து ஜூலை 13ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    ×