search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99412"

    பொங்கல் பண்டிகையையொட்டி ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்களுக்கு திரையரங்குகளில் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கி உள்ளது. #Petta #Viswasam
    ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகின்றன. இரண்டு படங்களுமே நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் வெளியாகிறது. வெளிநாடுகளிலும் அதிக திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. டிக்கெட் முன்பதிவுகள் நேற்று முன்தினமும், நேற்றும் விறுவிறுப்பாக நடந்தன.

    நிறைய தியேட்டர்களில் 3 நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. அடுத்த வாரம் பொங்கல் பண்டிகையிலும் அதிகமானோர் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு படங்களையும் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கு மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடுகின்றனர்.

    இந்த படங்களுடன் போட்டியிடாமல் ஏற்கனவே சில படங்கள் ரிலீசை தள்ளிவைத்துவிட்டன. பொங்கல் பண்டிகையையொட்டி அதிக காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளித்து உள்ளது. 



    இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணைசெயலாளர் ஸ்ரீதர் கூறும்போது, ‘‘வழக்கமாக தியேட்டர்களில் 4 காட்சிகள் திரையிடப்படும். பொங்கல் பண்டிகையையொட்டி 10-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தினமும் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கி உள்ளது. 

    பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. இரண்டு படங்களுக்கும் டிக்கெட் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடக்கிறது. தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு 2 படங்களும் லாபம் ஈட்டி தரும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார். #Petta #Viswasam

    ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் நட்பு பாராட்டி வரும் ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். #RajiniMakkalMandram #Rajinikanth
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீவிர அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். தொடர்ந்து ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி ஒரு அரசியல் கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    ரஜினி மக்கள் மன்றம் அரசியல் கட்சி போலவே செயல்படுகிறது. ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் புகார் கூறப்படும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நிர்வாகிகளை முறைப்படுத்த அந்தந்த மாவட்டங்கள், அணிகளுக்கு தனித்தனியாக வாட்ஸ்அப் குழுக்கள் இயங்குகின்றன.

    இந்த வாட்ஸ்அப் குழுக்களுக்கு இன்று ரஜினிகாந்த் அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

    அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ்அப் குழுக்களில் இருந்தும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்படி நீக்கப்படும் உறுப்பினர்களை மறு உத்தரவு வரும் வரை குரூப்பில் சேர்க்க கூடாது.


    ரஜினி மக்கள் மன்ற மாவட்ட, ஒன்றிய, நகர வாட்ஸ்அப் குரூப்களில் பிற மாவட்ட நபர்களை சேர்க்க கூடாது. வாட்ஸ்அப் குரூப்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை மட்டுமே உறுப்பினராக சேர்க்க வேண்டும்’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நீக்கப்படும் நிர்வாகிகள் அந்தந்த குழுக்களில் தொடர்வதால் மன்ற பணிகள், முக்கிய முடிவுகள் வெளியில் பகிரப்படுவதால் இந்த உத்தரவு என்று மன்றத்தினர் தெரிவித்தனர். #RajiniMakkalMandram #Rajinikanth
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் பேட்ட படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கும் நிலையில், படத்தின் தெலுங்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #Petta #Rajinikanth
    தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசம் படமும் திரைக்கு வருகிறது. இந்த இரு படங்களுக்கும் தியேட்டர்கள் ஒதுக்குவதில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், சென்னையில் பேட்ட படத்திற்கு அதிக திரைகளும், மற்ற ஊர்களில் விஸ்வாசம் படத்திற்கு கூடுதல் திரைகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ரஜினிக்கு தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் படத்தை மற்ற மொழிகளிலும் ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் பேட்ட படத்திற்கு திரையரங்கு ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    பாலகிருஷ்ணா நடிப்பில் என்.டி.ஆர். வாழ்க்கைப்படம், ராம்சரணின் வினய விதய ராமா, வெங்கடேஷ், வருண் தேஜா நடிப்பில் எஃப் 2 உள்ளிட்ட படங்கள் சங்ராந்திக்கு ரிலீசாக இருப்பதால் இந்த மூன்று படங்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் பேட்ட படத்திற்கு திரைகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



    எனவே பேட்ட படத்தின் தெலுங்கு பதிப்பை ஒரு வாரம் கழித்து ரிலீஸ் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் படக்குழு அதனை உறுதிப்படுத்தவில்லை. எனினும் பாலிவுட்டில் பேட்ட 10-ஆம் தேதி ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ரஜினியுடன், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #PettaPongalParaak #PettaPongal2019 #Petta #Rajinikanth

    ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ள நடிகர் ரஜினி விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். #2Point0 #Rajini
    ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌‌ஷய் குமார், எமி நடிப்பில் கடந்த நவம்பர் 29-ம் தேதி வெளியான படம் 2.0. 3டி தொழில்நுட்பத்தில் வெளியான இந்த படத்துக்கு உலகம் முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளியான ஒரு வாரத்தில் உலகம் முழுக்க ரூ. 500 கோடி வசூலைத் தாண்டியது.

    தமிழ் படங்களை பொறுத்தவரை இது மிகப்பெரிய சாதனை. அடுத்த 10 நாட்களில் படத்தின் மொத்த வசூல் ரூ.1000 கோடியை தொட்டது. அதன் பிறகும் கூட 3டி தொழில்நுட்ப தியேட்டர்களில் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் மாபெரும் வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் படங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளதை பெரிய அளவில் கொண்டாட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டது.



    ஆனால் ரஜினிகாந்த் இதில் ஆர்வம் காட்டவில்லை. வெற்றிக் கொண்டாட்டத்தில் மீட்டிலோ கலந்துகொள்ள விரும்பவில்லை என்று கூறிவிட்டாராம். ரஜினி இல்லாமல் வெற்றியை எப்படி கொண்டாடுவது என்று முடிவெடுத்து அனைத்து கொண்டாட்டத்தையும் தவிர்த்து விட்டார்கள். #2Point0 #Rajini
    பொங்கலுக்கு பிறகு ரஜினிகாந்த் கட்சி தொடர்பான முடிவை அறிவிப்பார் என்று அவரது அண்ணன் சத்யநாராயணராவ் தெரிவித்தார். #SathyanarayanaRao #Rajinikanth
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உனிசெட்டி கிராமத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    நிகழ்ச்சியில் ரஜினிகாந்தின் அண்ணன் சத்ய நாராயணராவ், கர்நாடக மாநில தலைவர் சந்திரகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    விழாவில் 1,069 பேருக்கு வேட்டி, சட்டையும், பெண்களுக்கு சேலைகளும், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில், பேனா ஆகியவை வழங்கப்பட்டன.

    மேலும் நலிவுற்ற பெண் ஒருவருக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது. முடிவில் கெலமங்கலம் ஒன்றிய இணை செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.



    முடிவில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணராவ் நிருபர்களிடம் கூறுகையில், ரஜினிகாந்த் பொங்கலுக்கு பிறகு கட்சி சம்பந்தமான முடிவுகளை அறிவிப்பார் என தெரிவித்தார்.  #SathyanarayanaRao #Rajinikanth
    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் வலுவான கூட்டணியை உருவாக்க பா.ஜ.க.வின் உயர்மட்ட குழு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் பாமக, தேமுதிகவை இழுக்க முயற்சி நடக்கிறது. #parliamentelection #bjp #dmdk #pmk

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் மாநில கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை உறுதி செய்யும் முயற்சிகளில் தேசியக் கட்சிகளான பாரதீய ஜனதாவும், காங்கிரசும் ஈடுபட்டுள்ளன.

    பாரதீய ஜனதாவுக்கு எதிராக பெரும்பாலான மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து “மெகா கூட்டணி”யை உருவாக்க காங்கிரஸ் திட்டமிட்டது. ஆனால் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட சில கட்சிகளின் தயக்கம் காரணமாக காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி உருவாகுமா என்பதில் தெளிவில்லாத நிலை உள்ளது.

    காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் தி.மு.க., தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டுக்கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, சரத்யாதவ் கட்சி உள்பட சில கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆம் ஆத்மி உள்பட சில கட்சிகள் காங்கிரஸ் அணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன.

    இதன் காரணமாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பா.ஜ.க. அணியில் இருந்த சில முக்கிய கட்சிகள் விலகியுள்ளன. பா.ஜ.க. அணியில் உள்ள சில கட்சிகள் அதிருப்தியில் உள்ளன.

    குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், மராட்டியம் மாநிலங்களில் பா.ஜ.க. கூட்டணியில் கருத்து வேறுபாடுகளும், உரசல்களும் நீடித்தப்படி உள்ளன. இதனால் மற்ற மாநிலங்களில் கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைமையில் புதிய அணியை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இந்த கூட்டணியில் சேரும் என்று தெரிகிறது.

    இந்த கூட்டணி வலிமையாக இருப்பதால், அதற்கு சவால் விடும் வகையில் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக சில கட்சிகளை சேர்க்க வேண்டும் என்று தீர்மானித்து அந்த கட்சிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது பா.ஜ.க. கூட்டணியில் ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அந்த கூட்டணியில் 14 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க. ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.

    எனவே இந்த தடவையும் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.வை சேர்க்க விரும்புவதாக மாநில பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை தெரிவித்துள்ளார்.


    பிரதமர் மோடி தலைமையை ஏற்க விரும்பும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரலாம் என்று தமிழிசை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் மிகவும் வலுவான கூட்டணியை உருவாக்க பா.ஜ.க.வின் உயர்மட்ட குழு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. விரைவில் கூட்டணி முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக பாரதீய ஜனதா சில மாதங்களுக்கு முன்பு வரை அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க தீவிரம் காட்டியது. ஆனால் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், எம்.பி.க்கள், எல்.எல்.ஏ.க்களில் கணிசமானவர்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக்கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதை நன்கு உணர்ந்துள்ள பா.ஜ.க. தலைவர்கள் அ.தி.மு.க.வுக்கு பதில் பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் சில கட்சிகளை சேர்க்க தீவிரமாகியுள்ளது. இதற்காக பா.ம.க., தே.மு.தி.க. தலைவர்களுடன் பா.ஜ.க. தலைவர்கள் பேச்சு வார்த்தையைத் தொடங்கி உள்ளனர்.


    பா.ம.க.வுக்கும், தே.மு.தி.மு.க.வுக்கும் அதிக தொகுதிகளை விட்டுத் தரும் வகையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் இது பற்றிய தகவல்களை உறுதி செய்ய பா.ம.க., தே.மு.தி.க. தலைவர்கள் மறுத்து விட்டனர்.

    பா.ஜ.க.வின் இந்த முயற்சியைக் கண்டு அ.தி.மு.க. அதிர்ச்சி அடைந்துள்ளது. பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து விட்டால் பாராளுமன்ற தேர்தல் களத்தில் தனித்து விடப்பட்டு விடுவோம் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து பா.ம.க., தே.மு.தி.க. இரு கட்சிகளையும் தங்கள் அணிக்குள் கொண்டு வர அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. தே.மு.தி.க.வுக்கும் 234 தொகுதிகளிலும் ஓரளவு வாக்குகள் இருக்கிறது.

    பா.ம.க. வட மாவட்டங்களில் நல்ல வலுவான வாக்கு வங்கியுடன் காணப்படுகிறது. எனவே அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. மூன்றும் ஓரணியில் இணைந்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியும் என்ற வியூகம் முன் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டணி உறுதியானால் தமிழ்நாட்டில் பா.ஜ.க. தனிமையாகி விடும். இதனால் பா.ம.க., தே.மு.தி.க.வை வளைக்க பா.ஜ.க.வும் தீவிரமாக உள்ளது.

    பா.ம.க., தே.மு.தி.க. இரு கட்சிகளும் யார் பக்கம் சாய்வார்கள் என்பது தொகுதிகள் எண்ணிக்கையை பொருத்தே அமையும். இந்த நிலையில் ரஜினியின் ஆதரவை பெறவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த கூட்டணிகள் பற்றிய தெளிவான நிலை தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #parliamentelection #bjp #dmdk #pmk 

    சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் வெளியாகி திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறதாம். #Viswasam #Petta
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படமும், ரஜினி நடித்துள்ள பேட்ட படமும் வருகிற ஜனவரி 10-ஆம் தேதி ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது. இந்த இரு படங்களுக்கும் திரையரங்குகளை ஒதுக்குவதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

    எனினும் இரு படங்களுக்குமே சம அளவிலான திரையரங்குகளை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படத்தின் தணிக்கை சான்றிதழின் படி, படத்தின் நீளம் 2 மணி 32 நிமிடம் என்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் ஒரு நாளில் பல காட்சிகளை திரையிட முடியும் என்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்களாம்.


    அதேநேரத்தில் ரஜினியின் பேட்ட படத்தின் நீளம் (2 மணி 51 நிமிடம்) அதிகம் தான் என்றாலும், அது ரசிகர்களை தொய்வு செய்யாது என்றும் கூறப்படுகிறது. இந்த இரு படங்களின் டிரைலர்களும் சமீழுத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

    பொங்கல் பண்டிகையில் இந்த இரு படங்களை தவிர்த்து வேறு எந்த படமும் ரிலீசாவது இன்னமும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Viswasam #AjithKumar #Petta #Rajinikanth

    ரஜினி நடித்திருக்கும் ‘பேட்ட’ படத்தில் அவருக்கு ஜோடியாகும் வாய்ப்பை பிரபல நடிகை தவறவிட்டதாக கூறியிருக்கிறார். #Petta #Rajini
    சூர்யா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் மீரா மிதுன். அதற்கு முன்பே 8 தோட்டாக்கள் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவர், இந்த படத்தின் மூலம் இன்னும் அதிகம் கவனிக்கப்பட்டார்.

    மிஸ் சௌத் இந்தியா அழகி பட்டத்தை வென்ற இவர் சென்னையைச் சேர்ந்த அக்மார்க் தமிழ் பொண்ணு. படிப்பு, நடனம் என்று மட்டுமே இருந்த இவரை அவரது உயரமும் நிறமும் ஒரு மாடல் அழகியாகவே பலருக்கும் தோன்றச் செய்தது. 



    மாடலிங் சினிமா இரண்டிலுமே சமமான கவனம் செலுத்தவே விரும்புகிறார் மீரா மிதுன். மாடலிங்கில் இருந்தபோதே இவரை ஊக்கப்படுத்தி அவ்வப்போது உற்சாகம் கொடுத்த நடிகர் விஷால், சினிமாவிற்கு வருமாறு முன்பே அழைப்பு விடுத்திருக்கிறார்.

    ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடிப்பதற்காக ஆடிஷனுக்கு அழைக்கப்பட்ட மீரா மிதுன், லுக் டெஸ்ட், ஸ்கிரீன் டெஸ்ட் வரை சென்றுவிட்டார். ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த வாய்ப்பு அவருக்கு கைகூடாமல் போய்விட்டது. அவருக்குப் பதிலாக பின்னர் அந்த கேரக்டரில் நடித்தவர் திரிஷா என சமீபத்தில் தான் மீராவுக்கு தெரியவந்திருக்கிறது.



    அதேபோல கமல் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் மீரா மிதுன். அதுவும் சில காரணங்களால் கடைசி நேரத்தில் இவரை விட்டு விலகிப்போனது. விலகிப்போன வாய்ப்புகள் மீண்டும் வேறு வடிவத்தில், வேறு படங்களில் தன்னைத் தேடிவரும் என திடமாக நம்புகிறார் மீரா மிதுன்.
    `பேட்ட' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வேறொரு படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Petta #Rajinikanth #KarthickSubbaraj
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் `பேட்ட' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    `பேட்ட' படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், சமீபத்தில் வெளியாகிய டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் ரஜினி ரசிகர்களுக்கு இந்த படம் விருந்தாக அமையும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.



    `பேட்ட' படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படம் அரசியல் படமாக இருக்காது என்றும், சூப்பர் ஸ்டார் படத்தில் இடம்பெறும் அம்சங்கள் அனைத்தும் இருக்கும் என்றும் முருகதாஸ் கூறியுள்ளார். ரஜினிகாந்த் தற்போது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார். ரஜினி சென்னை திரும்பியவுடன் ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படம் தொடங்கவிருக்கிறது.

    இந்த நிலையில், இந்த படத்தை முடித்த பிறகு ரஜினி மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் கூறிய வேறொரு கதை ரஜினிக்கு பிடித்திருப்பதாகவும், முருகதாஸ் படத்தை முடித்த பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.



    மேலும் இந்த படத்தை முடித்த பிறகு ரஜினி, எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும், அந்த படத்திற்கு பிறகு அவர் முழுநேர அரசியலில் கவனம் செலுத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது. #Petta #Rajinikanth #KarthickSubbaraj #Rajinikanth167

    பாகுபலி என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த ராஜமவுலி, ரஜினியை வைத்து நான் படம் இயக்கினால் ஒவ்வொரு காட்சிக்கும் விசில் பறக்கும் என்று கூறியிருக்கிறார். #Rajamouli #Rajinikanth
    தெலுங்கு திரை உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு அமைந்திருக்கும். ராஜமவுலி தெலுங்கு நடிகர்களை வைத்து மட்டுமே படத்தை இயக்கியுள்ளார்.

    தற்போது ஜூனியர் என்டிஆர், ராம்சரணை வைத்து படம் இயக்கும் அவர், அதற்கு அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்க இருப்பதாக செய்தி வருகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ராஜமவுலியிடம் நீங்கள் தமிழ் நடிகர்களை வைத்து படம் இயக்குவதாக இருந்தால் உங்கள் தேர்வு ரஜினியா இல்லை கமலா? என கேள்வி கேட்கப்பட்டது.



    அதற்கு ராஜமவுலி நான் ரஜினியை வைத்துதான் படம் இயக்குவேன். நான் அவருடன் இணையும் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்கள் விசில் பறக்கும்’ என்று பதில் அளித்துள்ளார். #Rajamouli #Rajinikanth
    நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்த்து கொள்ள தயாராக இருக்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMModi #Rajinikanth #kamalhassan
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

    அதில், தென்னிந்தியாவில் கால் பதிக்கும் வகையில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் திட்டம் உள்ளதா? என்று கேட்கப்பட்டது.

    அதற்கு மோடி கூறியதாவது:-

    எங்கள் அடித்தளத்தை விரிவுபடுத்த தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். எங்களுடன் வர விரும்பும் ஒவ்வொருவரையும் அரவணைத்து சேர்த்து கொள்ள தயாராக இருக்கிறோம். இது, பிராந்திய உணர்வுகளை வலுப்படுத்தும் எங்கள் நோக்கத்துடன் தொடர்புடையது.



    2014-ம் ஆண்டில் இருந்தே நிறைய கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் முயற்சி நடந்து வருகிறது. அதன்படி, வடகிழக்கு மாநிலங்களில் சில கட்சிகள் சேர்ந்துள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி சேருமா என்றால், அதுபற்றி இங்கு விவாதிக்க முடியாது இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:-

    2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், மக்களுக்கும், மெகா கூட்டணிக்கும் இடையிலான மோதலாக இருக்கும். கடந்த நான்கரை ஆண்டுகளாக எங்கள் அரசு செய்த பணிகளை எண்ணிப்பார்த்து பா.ஜனதா மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் என்று கருதுகிறேன். அவர்களின் அறிவுக்கூர்மை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

    மோடி அலை ஓய்ந்து விட்டதாக சிலர் கூறுகிறார்கள். இதன்மூலம், மோடி அலை இருப்பதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு நன்றி.

    பா.ஜனதாவுக்கு எதிராக சில கட்சிகள் மெகா கூட்டணி சேர்ந்துள்ளன. இவை, ஊழலை பரவலாக்கிய கட்சிகள். மத்தியிலும், மாநிலங்களிலும் கொள்ளை அடித்தன. இந்த ஊழல் சக்திகளை ஆதரிப்பதா? வேண்டாமா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

    இந்த கட்சிகளிடம் ஒற்றுமையே கிடையாது. கடந்த 5 ஆண்டு கால செய்திகளை அலசி பார்த்தால், இக்கட்சிகள் ஒற்றுமையாக எதுவும் செய்தது இல்லை. வெவ்வேறு குரலில் பேசி வருகிறார்கள். தங்களை காப்பாற்றிக் கொள்ள ஒருவருக்கொருவர் ஆதரவு தேவைப்படுகிறது. அதற்காகவே அடுத்தவரின் கையை பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இது ஒரு விளையாட்டு.

    இவர்களின் ஒரே செயல் திட்டம், மோடியை ஒழிப்பதுதான். நாட்டுக்கு செய்யப் போவது என்ன என்ற செயல் திட்டமே அவர்களிடம் இல்லை. இவர்களின் மெகா கூட்டணி முயற்சி, ஏற்கனவே தெலுங்கானா சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்து விட்டது.

    கே.சந்திரசேகர ராவ் 3-வது அணி அமைக்க முயற்சி செய்கிறாரா என்று எனக்கு தெரியாது. சிவசேனா கட்சியின் குற்றச்சாட்டை பொறுத்தவரை, சில எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகாதபோது, பா.ஜனதா மீது நிர்ப்பந்தம் செலுத்தி, அதை பெற முயற்சிப்பதே ஆகும். மாநில உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே வருகிறோம். கூட்டணி கட்சிகளை பலி கொடுத்து நாங்கள் வளர வேண்டும் என்று நினைக்க மாட்டோம்.

    வருகிற மக்களவை தேர்தலில் பா.ஜனதாவுக்கு 180 தொகுதிகளுக்கு மேல் கிடைக்காது என்று சிலர் கூறுகிறார்கள். இதற்காக அறிவியல்ரீதியாக ஆய்வு நடத்தப்பட்டதா? கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் கூட பா.ஜனதாவுக்கு 180 தொகுதிக்கும் குறைவாகவே கிடைக்கும் என்று இதே நபர்கள் கூறினார்கள். அதே அணுகுமுறை தொடருகிறது. மக்களை கவருவதற்காக இப்படி சொல்கிறார்கள். மக்களின் அறிவுக்கூர்மை மீது நம்பிக்கை வைப்போம் என்பதுதான் எல்லா அரசியல் கணிப்பாளர்களுக்கும் நான் சொல்ல விரும்பும் விஷயம்.

    சட்டசபை தேர்தலில் தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்காது என்பது முன்பே தெரிந்ததுதான். சத்தீஷ்காரில் தெளிவான தீர்ப்பு தரப்பட்டுள்ளது. மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது.

    15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததால், அரசுக்கு எதிராக அதிருப்தி இருந்துள்ளது. இந்த பின்னடைவு குறித்து ஆலோசித்து வருகிறோம்.

    ஊழலில் சிக்கிய காங்கிரசார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவது தவறு. அவர்கள் ஜாமீனில்தான் வெளியே இருக்கிறார்கள். நிதிமுறைகேட்டில் சிக்கிய காங்கிரசின் முதல் குடும்பமே (சோனியா) ஜாமீனில்தான் இருக்கிறது.

    ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் கோர்ட்டுகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இது சிறிய விஷயம் அல்ல. அரசியல் பழிவாங்குதலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. கோர்ட்டு என்ன தீர்ப்பு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம். ஆனால், தாமதம் கூடாது.

    காங்கிரஸ் இல்லா பாரதம் அமைப்பது பற்றி நான் விரிவாக பேசி இருக்கிறேன். சாதியம், குடும்ப அரசியல், ஜனநாயக விரோதம், ஊழல் ஆகியவைதான் காங்கிரசின் அரசியல் கலாசாரம். இந்த கலாசாரத்தில் இருந்து விடுபடுவதுதான், காங்கிரஸ் இல்லா பாரதம் அமைப்பதன் நோக்கம். ஜனநாயகத்தில் வலிமையான எதிர்க்கட்சி இருக்க வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக, அதிலும் காங்கிரஸ் தோற்று விட்டது.

    அரசியல் வன்முறைகளை நான் கண்டிக்கிறேன். பா.ஜனதா தொண்டர்கள் பலர், கேரளா, மேற்கு வங்காளம், அசாம், காஷ்மீர், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொல்லப்பட்டுள்ளனர். இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. தொண்டர்கள் எப்படி நடக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் அறிவுறுத்த வேண்டும்.

    பணமதிப்பு நீக்க நடவடிக்கை திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அதுபற்றி ஓராண்டுக்கு முன்பிருந்தே எச்சரித்து வந்தோம். கருப்பு பணம் வைத்திருந்தால், அதை அரசிடம் கொடுத்து, அபராதம் செலுத்தி தப்பித்துக் கொள்ளுங்கள் என்று கூறினோம்.

    ஆனால், மோடியும் மற்றவர்களை போல்தான் இருப்பார் என்று நினைத்துக்கொண்டு, மிகச்சிலர் மட்டுமே கருப்பு பணத்தை ஒப்படைத்தனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான், விஜய் மல்லையா, மெகுல் சோக்சி போன்றவர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடினர். அவர்கள் இன்றோ, நாளையோ இந்தியாவுக்கு கொண்டுவரப்படுவார்கள். இந்தியாவின் பணத்தை திருடியவர்கள், ஒவ்வொரு ரூபாய்க்கும் இழப்பீடு அளித்தே தீர வேண்டும்.

    ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கூறுவது, என் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டு அல்ல, என் அரசின் மீதானது. தனிப்பட்ட குற்றச்சாட்டு என்றால், நான் எங்கே, எப்போது, யாரிடம் பணம் வாங்கினேன் என்று தோண்டி பார்க்கட்டும்.

    இந்த குற்றச்சாட்டை சுப்ரீம் கோர்ட்டே நிராகரித்து விட்டது. இருந்தாலும், எந்த ஆதாரமும் இல்லாமல் பேசுகிறார்கள். அவர்களிடம் ஊடகங்கள் கேள்வி கேட்க வேண்டும்.

    எத்தனை அவதூறுகள் என் மீது வீசப்பட்டாலும், ராணுவத்துக்கு என்ன தேவையோ அதை வாங்கி தருவேன். எல்லாமே இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும் என்று நினைத்ததுதான் நான் செய்த குற்றம்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படியே, முத்தலாக் தடைக்கான அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. எண்ணற்ற இஸ்லாமிய நாடுகளில் கூட முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இது மத நம்பிக்கை சம்பந்தப்பட்டது அல்ல. ஆண்-பெண் சமத்துவம், சமூக நீதி சம்பந்தப்பட்டது.

    சபரிமலை பிரச்சினை என்பது பாரம்பரியம் தொடர்பானது. ஆண்கள் செல்லக்கூடாத கோவில்கள் கூட உள்ளன. அங்கு ஆண்கள் செல்வது இல்லை.

    சபரிமலை பற்றி தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட்டு அமர்வில் இடம்பெற்ற ஒரு பெண் நீதிபதி, சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என தனியாக தீர்ப்பு எழுதி உள்ளார். அவரது தீர்ப்பை கவனமாக படிக்க வேண்டும். அதுபற்றியும் விவாதம் நடத்த வேண்டும். இப்பிரச்சினையை எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புபடுத்தக்கூடாது.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். #PMModi #Rajinikanth #kamalhassan
    பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நவாசுதீன் சித்திக், ரஜினியை காப்பியடிக்க முயற்சித்தேன் என்று கூறியிருக்கிறார். #Petta #NawazuddinSiddiqui
    ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி எனப் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 10ம் தேதி ‘பேட்ட’ படம் ரிலீசாக இருக்கிறது.

    இந்நிலையில், தனியார் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த நவாசுதீன் சித்திக், ரஜினி பற்றிய தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். “ரஜினிகாந்தின் எளிமைதான் அவரை ரஜினிகாந்தாக வைத்துள்ளது. அவர் இன்று இருக்கும் நிலைக்கும் அவரது எளிமைதான் காரணம்.

    நிஜவாழ்வில் அவர் எளிமையாக இருப்பதால்தான், திரையில் அவரால் ஒரு ஆளுமையாக இருக்க முடிகிறது. ரஜினியின் ஈர்ப்பு அற்புதம். ஒரு காட்சியில் அவர் எழுந்து நின்று ஸ்டைலாக நடப்பதைப் பார்த்தே சுற்றி இருப்பவர்கள் கைதட்ட தொடங்கி விட்டார்கள். சிறுவயதிலிருந்து நிறைய ரஜினி படங்களைப் பார்த்திருக்கிறேன். அவரது ஸ்டைல் என்னை மிகவும் பாதித்துள்ளது.



    அதை நான் ‘கேங்ஸ் ஆப் வாசிபூர்’ படத்திலும் ஒரு காட்சியில் முயற்சித்து இருந்தேன். ரஜினி படப்பிடிப்பு தளத்துக்குள் நுழையும்போது, யாருக்குமே அவர் வருவது தெரியாது. அவர் வேலை முடித்துவிட்டுக் கிளம்பும்போதும் அப்படித்தான்” என்று கூறி இருக்கிறார்.
    ×