search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99412"

    ரஜினி சாருடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேறிவிட்டது, நான் தான் அவருக்கு சரியான ஜோடி என்று நடிகை சிம்ரன் பேசினார். #Petta #PettaAudioLaunch #VijaySethupathi
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

    இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

    நிகழ்ச்சியில் சிம்ரன் பேசியதாவது,

    இது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு. 15 வருடத்திற்கு முன்பே ரஜினி சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை தவறவிட்டுவிட்டேன். அதற்காக வருத்தப்பட்டேன். தற்போது எனது ஆசை நிறைவேறிவிட்டதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மீனா, குஷ்பு, சிம்ரன் மூன்று பேரில் ரஜினிக்கு யார் சரியான ஜோடி என்று கேட்டதற்கு, சிம்ரன் தான் என்றார்.



    திரிஷா பேசும் போது,

    தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் போல் இன்னொருவர் இருக்க முடியாது. அவரிடம் இருந்து ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும் படப்பிடிப்புக்கு காலை 6 மணிக்கு வந்து விடுவார். என்னுடைய கனவை நினைவாக்கிய கார்த்திக் சுப்பராஜ்க்கு நன்றி என்றார். #Petta #PettaAudioLaunch #VijaySethupathi

    பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும், படத்தில் நான் தான் வில்லன் என்று பேட்ட இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி தெரிவித்தார். #Petta #PettaAudioLaunch #VijaySethupathi
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

    இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

    நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியதாவது,

    எல்லாரும் கனவு காணுவாங்க, ஆனா நான் காணாத ஒரு கனவு நடந்தது, ரஜினி சாருடன் இணைந்து நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. அவர் கூட நடிச்சதே பெரிய விஷயம். அவர் கேமரா முன் வந்து நின்றால், அவரை பார்கக நிறைய பேர் இருக்காங்க. ரசிகர்களுக்காக இப்போ வரை அவர் பொறுப்புடன் நடிக்கிறார். அவரைப் போல பொறுப்பான நடிகராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.



    கார்த்திக் சுப்புராஜை ஷார்ட் பிலிம் பண்ணும் போதுல இருந்து தெரியும். ஷார்ட் பிலிம்லயே நிறைய சஸ்பென்ஸ் வைப்பாரு, அடுத்தடுத்த காட்சிகள் சுவாரஸ்யமா இருக்கும். இந்த படத்துலயும் அதே மாதிரியான காட்சிகள் நிறையவே இருக்கு. கடைசி காட்சி வரை எல்லாரையும் பிரமிக்க வைப்பாரு. பேட்டை படத்திலும் எல்லாம் இருக்கு, கடைசி வரை சுவாரஸ்யம் இருக்கு.

    எப்பையமே பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும். நான் படத்தில் வில்லன் தான். மறுபடியும் ஜானுவ இங்கே பார்க்கிறேன். 

    இவ்வாறு பேசினார். #Petta #PettaAudioLaunch #VijaySethupathi

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி நடித்துள்ள `பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக துவங்கியது. #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    `பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. படத்தில் இருந்து மரண மாஸ், உலாலா என இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் அனைத்து பாடல்களும் இன்று வெளியாகிறது.



    இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். #Petta #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவிருக்கும் நிலையில், இந்த படத்தின் மூலம் தனுஷ் - அனிருத் மீண்டும் இணைந்துள்ளனர். #PettaAudioLaunch #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே `பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. ஏற்கனவே படத்தில் இருந்து மரண மாஸ், உலாலா என இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் அனைத்து பாடல்களும் இன்று வெளியாகிறது.

    முன்னதாக படத்தில் இடம்பெறும் பாடல்களின் விவரத்தை படக்குழு நேற்று வெளியிட்டது. அதன்படி படத்தில் 6 பாடல்களும், 5 தீம் மியூசிக்கும் இடம்பெறுகிறது. அதில் `இளமை திரும்புதே' என்ற பாடலை தனுஷ் எழுதியிருக்கிறார். இதன்மூலம் சிறய இடைவேளைக்கு பிறகு அனிருத் - தனுஷ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது இருவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர விவேக் மூன்று பாடல்களையும், கார்த்திக் சுப்புராஜ் ஒரு பாடலையும், கு.கார்த்திக் ஒரு பாடலையும் எழுதியிருக்கின்றனர்.



    பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். #PettaAudioLaunch #Petta #Rajinikanth

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி நடித்துள்ள பேட்ட படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’. 2019 பொங்கல் தினத்தன்று இந்தப் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள்.

    மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    படத்தில் இருந்து மரண மாஸ், உலாலா என இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் அனிருத்தின் இசை கச்சேரியும் இடம்பெறுகிறது.


    இந்த நிலையில், பேட்ட படத்தின் வடக்கு ஆற்காடு,தெற்கு ஆற்காடு, செங்கல்பட்டு, மதுரை, சேலம் பகுதிகளின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியிருக்கிறது. 2013-ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டிப்புலி படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் உடன் கூட்டணி வைத்ததில் மகிழ்ச்சி என்று உதயநிதி ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Petta #Rajinikanth

    பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், அந்த படத்தில் ரஜினி அரசியல்வாதியாக நடிப்பதாக கூறப்படுகிறது. #Naarkali #Rajinikanth166 #ARMurugadoss
    ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படம் ரிலீஸ் ஆகி வசூலை குவித்து வருகிறது. முதல் வாரத்திலே படத்தின் வசூல் ரூ.500 கோடியை தாண்டியிருப்பதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.

    இந்த நிலையில் ரஜினி நடிப்பில் அடுத்ததாக `பேட்ட’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதில் படக்குழு தீவிரமாக இருக்கிறது. பேட்ட படத்தில் ரஜினியுடன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

    பேட்ட படத்திற்கு பிறகு ரஜினி முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த படம் முருகதாசின் கத்தி, சர்கார் படங்களை போலவே அரசியல் படமாகத் தான் இருக்கும் என்கிறார்கள்.



    ரஜினியும் அரசியலில் இறங்கியிருக்கும் நிலையில், இது அவரது அரசியலுக்கு ஏற்ற வகையில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

    அந்த வகையில் ரஜினி படத்துக்கு நாற்காலி என்று பெயர் வைப்பதற்கான ஆலோசனைகள் நடப்பதாக கூறப்படுகிறது. முருகதாஸ் படங்களின் பெயர்கள் எப்போதுமே பரபரப்பை ஏற்படுத்தும். நாற்காலி என்று தலைப்பு வைக்கும் பட்சத்தில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரிக்கும். படத்தில் ரஜினி முதல்வராக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. #Naarkali #Rajinikanth166 #ARMurugadoss

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்க இருக்கிறார்கள். #PettaAudioLaunch #Rajinikanth #VijaySethupathi
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பேட்ட’. வரும் பொங்கல் தினத்தன்று இந்தப் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள்.

    மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இதுவரை இந்தப் படத்தின் 3 போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. பேட்ட படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இடம்பெறும் ரஜினியின் அறிமுக காட்சியான மரண மாஸ் பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. அடுத்த பாடல் ஊலலலா இன்று மாலை இணையத்தில் வெளியாக இருக்கிறது.



    பேட்ட படத்தின் முழு பாடல்கள் வெளியீடு வருகிற 9-ந் தேதி (ஞாயிறு) அன்று தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறுகிறது. விழாவில் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி உள்பட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் இதை படக்குழு அறிவிக்கவில்லை. ஆனால் நிகழ்ச்சி நடக்க இருக்கும் தனியார் கல்லூரி தரப்பில் இருந்து இது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #PettaAudioLaunch #Rajinikanth #VijaySethupathi

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவ சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. #Karunanidhistatue #KamalHaasan #Rajinikanth
    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவ சிலை அறிவாலய வளாகத்தில் திறக்கப்படுகிறது. அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகள் ஒரே இடத்தில் அமைக்கப்படுகிறது. சிலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    வருகிற 16-ந்தேதி (ஞாயிறு) நடைபெறும் விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.


    விழாவுக்கு அகில இந்திய அளவில் தலைவர்கள் அழைக்கப்படுகிறார்கள். 9-ந் தேதி (ஞாயிறு) மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று சோனியா காந்தியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்குகிறார்.

    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

    ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இருவரும் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர்கள். எனவே விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #DMK #Karunanidhistatue #KamalHaasan #Rajinikanth
    ரஜினியின் 2.0 படத்திற்கு உலகம் முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தின் முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #2Point0 #2Point0MegaBlockbuster
    ஷங்கர் - ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    முன்னதாக படம் ரிலீசான 4 நாட்களில் ரூ.400 கோடியை வசூலித்து சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவதால் அடுத்தடுத்த வாரங்களில் வசூல் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    இதற்கிடையே படத்தை வருகிற மே 2019-ல் சீனாவில் பிரம்மாண்டமாக 10,000 திரையரங்குகளில், 57,000 திரைகளில் (47,000 3டி திரைகள்) வெளியாக இருக்கிறது. #2Point0 #2Point0MegaBlockbuster #Rajinikanth

    இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்த தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றிய முழு தகவலை இங்கே பார்க்கலாம். #ForbesIndiaCeleb100 #ForbesIndia
    இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சல்மான் கான் இந்த ஆண்டில் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.

    தமிழ் சினிமாவை பொறுத்தவரை, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (ரூ.66.75 கோடியுடன்) 11-வது இடத்தை பிடித்துள்ளார். 

    ரஜினிகாந்த் (ரூ.50 கோடி) 14-வது இடத்தையும், விஜய் (ரூ.30.33 கோடி) 26-வது இடத்திலும், விக்ரம் (ரூ.26 கோடி) 29-வது இடத்திலும் உள்ளனர். சூர்யா (ரூ.23.67 கோடி), விஜய் சேதுபதி (ரூ.23.67 கோடி) இருவரும் 34-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.



    தனுஷ் (ரூ.17.65 கோடி) 53-வது இடத்திலும், டாப்சி (ரூ.15.48 கோடி) 67-வது இடத்திலும், நயன்தாரா (ரூ.15.17 கோடி) 69-வது இடத்திலும், கமல்ஹாசன் (ரூ.14.2 கோடி) 71-வது இடத்தையும் பிடித்துள்ளனர். #ForbesIndiaCeleb100 #ForbesIndia 

    இந்தியாவில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் சல்மான் கான், அக்‌ஷய் குமார், தீபிகா படுகோனோ, ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். #ForbesIndiaCeleb100 #ForbesIndia
    இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது.

    இந்த பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சல்மான் கான் இந்த ஆண்டில் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். சல்மான் நடித்த டைகர் ஜிந்தா ஹே கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டியது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு வெளியாகிய ரேஸ் 3 படம் மற்றும் விளம்பர படங்கள் மூலமும் அவர் இத்தனை கோடியை சம்பாதித்துள்ளார்.

    சல்மான் கானைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி (ரூ.228.09 கோடி) இரண்டாவது இடத்திலும், அக்‌ஷய் குமார் (ரூ.185 கோடி) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.



    இந்தப் பட்டியலில் நடிகை தீபிகா படுகோனே (ரூ.112.8 கோடி) 4-வது இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் முதல் 5 இடங்களுக்குள் முன்னேறிய பெண் பிரபலம் என்ற பெருமை தீபிகாவுக்கு கிடைத்துள்ளது.

    தீபிகாவை தொடர்ந்து தோணி (ரூ.101.77 கோடி) 5-வது இடத்திலும், அமீர் கான் (ரூ.97.5 கோடி), அமித்தாப் பச்சன் (ரூ.96.17 கோடி), ரன்வீர் சிங்(ரூ.86.67 கோடி), சச்சின் டெண்டுல்கர் (ரூ.80 கோடி), அஜய் தேவ்கன்(ரூ.75.5 கோடி) அடுத்த இடங்களுடன் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.



    ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (ரூ.66.75 கோடி) 11-வது இடத்தை பிடித்துள்ளார். ரஜினிகாந்த் (ரூ.50 கோடி) 14-வது இடத்தையும், விஜய் (ரூ.30.33 கோடி) 26-வது இடத்திலும், விக்ரம் (ரூ.26 கோடி) 29-வது இடத்திலும் உள்ளனர். சூர்யா (ரூ.23.67 கோடி), விஜய் சேதுபதி (ரூ.23.67 கோடி) இருவரும் 34-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

    தனுஷ் (ரூ.17.65 கோடி) 53-வது இடத்திலும், நயன்தாரா (ரூ.15.17 கோடி) 69-வது இடத்திலும், கமல்ஹாசன் (ரூ.14.2 கோடி) 71-வது இடத்தையும் பிடித்துள்ளனர். #ForbesIndiaCeleb100 #ForbesIndia 

    ரஜினியின் 2.0 படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தை அடுத்ததாக சீனாவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #2Point0 #2Point0InChina #2Point0MegaBlockbuster
    ஷங்கர் - ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. ரிலீசான 4 நாட்களில் படம் ரூ.400 கோடியை வசூலித்து சாதனை படைத்தது. 6 நாட்களில் படத்தின் வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. படத்துக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்த வண்ணமாகவே உள்ளது.

    இந்த நிலையில், 2.0 படம் வருகிற மே 2019ல் சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாக இருப்பதாக லைகா புரொடக்‌ஷன்ஸ் அறிவித்துள்ளது. 2.0 படத்தின் சீன ரிலீஸ் உரிமையை எச்.ஒய் மீடியோ கைப்பற்றியிருக்கிறது.


    சீன மொழில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இந்த படத்தை மொத்தமாக 10,000 திரையரங்குகளில், 57,000 திரைகளில் (47,000 3டி திரைகள்) வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் 3டி-யில் அதிக திரைகளில் வெளியாகும் வெளிநாட்டு படங்களின் பட்டியலில் 2.0 இடம்பிடித்துள்ளது. #2Point0 #2Point0InChina #2Point0MegaBlockbuster #Rajinikanth

    ×