என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 99412
நீங்கள் தேடியது "slug 99412"
பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் ஒத்த செருப்பு படம் பற்றி பேசிய ரஜினிகாந்த், ஒரு படம் வெற்றி பெற நான்கு விஷயங்கள் முக்கியம் என்றும், அவை பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தில் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
ஒத்த செருப்பு படத்தில் நடித்து இயக்கி உள்ள பார்த்திபனை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ பதிவில் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது:-
“என் அருமை நண்பர் பார்த்திபன், நல்ல படைப்பாளி. புதிது புதிதாக சிந்திக்கக் கூடியவர். சிறிது காலம் படங்களை இயக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அவர் படம் இயக்க வேண்டும் என்று நான் கேட்டேன். இப்போது தனி ஒருவர் மட்டும் நடிக்கும் வித்தியாசமான ஒத்த செருப்பு படத்தை எடுத்துள்ளார்.
1960-ம் ஆண்டில், இந்தியில் சுனில்தத் ‘யாதே’ என்றொரு படத்தில், தனி ஒருவராக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தியாவிலேயே இந்த ‘ஒத்தசெருப்பு’ 2-வது படம். பார்த்திபனே தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, நடித்தும் இருப்பது உலகிலேயே இல்லாத ஒன்று.
ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும். படத்தின் கரு புதிதாக இருக்க வேண்டும். இதுவரை எவரும் சிந்திக்காததாக இருக்க வேண்டும். நல்ல கருத்து சொல்வதாக இருக்க வேண்டும். குறைந்த பட்ஜெட்டில் எடுத்திருக்க வேண்டும். யதார்த்தமாக இருக்க வேண்டும். நான்காவதாக படத்துக்கு நல்ல விளம்பரம் செய்ய வேண்டும்.
இந்த நான்குமே பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தில் இருக்கிறது. இந்தப் படத்தின் மூலமாக அவர் வெற்றிகளும் விருதுகளும் பெறுவார். இந்த படம் ஆஸ்கார் செல்லும், அதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் பேசிய வீடியோ:
பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வரும் ரஜினிக்கு பிரபல பாடகர் குரல் கொடுக்க இருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முதன்முறையாக ரஜினிகாந்துடன் இணைந்துள்ளார்.
மும்பையில் நடைபெற்று வந்த இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவு அடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும், படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. பிரதிக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு, நிவேதா தாமஸ் என தர்பார் படத்தில் தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாமல் மற்ற திரையுலகில் இருந்தும் நடிகர், நடிகைகள் படக்குழுவில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில் தர்பார் படத்தின் ரஜினி அறிமுக பாடலை அவரது ஆஸ்தான பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட இருப்பதாக தகவல் வருகின்றன. பேட்ட படத்திலும் ரஜினி அறிமுக பாடலான மரண மாஸ் பாடலை அவர்தான் பாடினார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தில் ரஜினிக்கு இரண்டு வேடங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்மைபயில் நடந்து முடிந்தது. தனது காட்சிகளை முடித்து சென்னை திரும்பிய ரஜினி அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக விரைவில் மும்பை செல்லவிருக்கிறார். இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வருகிற மே 29-ந் தேதி தொடங்க இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள்.
படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் உறுதியானது. ரஜினி இந்த படத்தில் சமூக சேவகர், அதிரடி போலீஸ் அதிகாரி என இரட்டை வேடத்தில் நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவல்படி, அவர் என்கவுண்டர் சிறப்பு போலீசாக நடிப்பது தெரியவந்துள்ளது. படப்பிடிப்பு நடந்த கல்லூரியிலேயே குற்றவாளிகளை விசாரிக்கும் சிறப்பு அறையை செட் போட்டு படம்பிடித்துள்ளனர். ரஜினி குற்றவாளியை விசாரிப்பது போன்ற காட்சியை எடுத்துள்ளார்கள்.
மற்றொரு கதாபாத்திரத்தில் ரஜினி தாதாவாக நடிப்பதாக கூறப்படுகிறது. எனினும் படக்குழு இதனை உறுதிப்படுத்தவில்லை.
தாதா ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியான ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா வருகிறார். தற்போது என்கவுண்ட்டர் போலீஸ் காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக வருகிறார். சமூக சேவகராக இன்னொரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மே 29ம் தேதி தொடங்க இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.
#Darbar 1st schedule successfully completed 🎥 🔥🔥 2nd schedule from May 29th 🌟 #ThalaivarinDarbar@rajinikanth@ARMurugadoss#Nayanthara@santoshsivan@anirudhofficial
— Lyca Productions (@LycaProductions) May 15, 2019
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம் 2020 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தில் ரஜினி என்கவுண்டர் போலீசாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். மும்பையில் நடைபெற்ற முதல்கட்ட படப்பிடிப்பில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டு ரஜினி சென்னை திரும்பி உள்ளார்.
படத்தில் ரஜினி போலீசாக நடிப்பது போஸ்டர் மூலம் வெளியான நிலையில் அவர் என்கவுண்டர் சிறப்பு போலீசாக நடிப்பது தெரியவந்துள்ளது. படப்பிடிப்பு நடந்த கல்லூரியிலேயே குற்றவாளிகளை விசாரிக்கும் சிறப்பு அறையை செட் போட்டு படம்பிடித்துள்ளனர்.
ரஜினி குற்றவாளியை விசாரிப்பது போன்ற காட்சியை எடுத்துள்ளார்கள். படப்பிடிப்பில் ரஜினி மற்ற தொழிலாளர்களுடன் ஒரே மேஜையில் அமர்ந்து சாப்பிட்டு ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். மேலும் ரம்ஜான் விரதம் அனுசரிக்கப்படுவதால் படப்பிடிப்பில் கலந்துகொண்ட இசுலாமிய பணியாளர்களுக்கு சிறப்பு இப்தார் விருந்து அளித்தும் சிறப்பித்து இருக்கிறார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து மதத்தை சேர்ந்தவர் என்று கமல்ஹாசன் கூறியிருந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று ரஜினிகாந்த் கூறினார்.
சென்னை:
தமிழ்நாட்டில் 19-ம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அங்கு பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய கமல், ‘நமது நாட்டு தேசியக்கொடியில் உள்ள மூன்று நிறங்களும் பல்வேறு நம்பிக்கைகளை குறிக்கின்றன. இந்த சமநிலையால் பெருமைப்படும் இந்தியர்களில் நானும் ஒருவன். இந்த மூன்று நிறங்களும் சரியாக இருக்க வேண்டும். சமநிலையோடு இங்குள்ள மக்கள் வாழ வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் விருப்பமாக இருக்கும். நான் ஒரு நல்ல இந்தியன் என பெருமையுடன் அறிவிக்க விரும்புகிறேன்.
இந்த இடம் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதால் நான் இதை சொல்லவில்லை. ஆனால், மகாத்மா காந்தியின் சிலைக்கு முன்னால் நின்று இதை சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சே இந்துதான் என கமல் குறிப்பிட்டார்.
கமலின் இந்த பேச்சுக்கு பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்திடம் கமல்ஹாசனின் பேச்சு குறித்து கேட்ட போது, அவர் இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
மே 23-ந்தேதிக்கு பிறகு ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
திருச்சி:
திருச்சி அருகே உள்ள மணிகண்டத்தில் ரஜினி ரசிகர்கள் ரஜினியின் பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டியுள்ளனர். 48 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த மணிமண்டபத்தில் மண்டல பூஜை நடத்தப்பட்டு இன்று 48-வது நாளில் மண்டல அபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த விழாவில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் கலந்து கொண்டு பூஜைகள் செய்தார். இதில் சன்னியாசிகள், சாதுக்களும் கலந்து கொண்டனர்.
அங்கு பத்திரிக்கையாளர்களிடம் சத்யநாராயண ராவ் கூறியதாவது:-
எங்களது பெற்றோருக்கு ரஜினி ரசிகர்கள் மணிமண்டபம் கட்டியுள்ளது மகிழ்ச்சி. அதற்கு 48 நாட்கள் மண்டல பூஜை இன்று அபிஷேகம் நடத்தி செய்கிறார்கள். இதில் சாதுக்கள், சன்னியாசிகள், பொதுமக்கள், பக்தர்கள், ரஜினி மக்கள் மன்ற தொண்டர்கள், ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழக மக்களுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மணிமண்டபத்தை பார்க்க ரஜினிகாந்த் வருவார். அவர் தற்போது மிகவும் பிசியாக உள்ளார். ஆனால் இங்கு நடக்கும் நிகழ்வை அடிக்கடி போனில் கேட்டுக்கொண்டும், வீடியோவில் பார்த்துக் கொண்டும் உள்ளார்.
தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும். ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பை எப்போது அறிவிப்பார் என்று நான் ஏற்கனவே கூறிவிட்டேன். மே 23-ந்தேதிக்கு பிறகு அவர் முக்கிய அறிவிப்பு வெளியிடுவார்.
ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அவர் தாமதம் செய்வதாக சிலர் கூறுகிறார்கள். தாமதம் செய்வது நல்லதுக்காகதான். அவர் தமிழக மக்களுக்கு நிறைய திட்டங்கள் வைத்திருக்கிறார். மணிமண்டபத்தை பார்க்க ரஜினி விரைவில் வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஜினிகாந்த் மே 23-ந்தேதிக்கு பிறகு அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படும் நிலையில் திருச்சியில் மாநாடு நடத்தி அதை அவர் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. திருச்சி அருகே கட்டப்பட்டுள்ள அவரது பெற்றோர் மணி மண்டபத்தை பார்க்க ரஜினி விரைவில் வருகை தர உள்ளதாக அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் கூறியது இதையொட்டி தான் என அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.
திருச்சி அருகே உள்ள மணிகண்டத்தில் ரஜினி ரசிகர்கள் ரஜினியின் பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டியுள்ளனர். 48 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த மணிமண்டபத்தில் மண்டல பூஜை நடத்தப்பட்டு இன்று 48-வது நாளில் மண்டல அபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த விழாவில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் கலந்து கொண்டு பூஜைகள் செய்தார். இதில் சன்னியாசிகள், சாதுக்களும் கலந்து கொண்டனர்.
அங்கு பத்திரிக்கையாளர்களிடம் சத்யநாராயண ராவ் கூறியதாவது:-
எங்களது பெற்றோருக்கு ரஜினி ரசிகர்கள் மணிமண்டபம் கட்டியுள்ளது மகிழ்ச்சி. அதற்கு 48 நாட்கள் மண்டல பூஜை இன்று அபிஷேகம் நடத்தி செய்கிறார்கள். இதில் சாதுக்கள், சன்னியாசிகள், பொதுமக்கள், பக்தர்கள், ரஜினி மக்கள் மன்ற தொண்டர்கள், ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழக மக்களுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மணிமண்டபத்தை பார்க்க ரஜினிகாந்த் வருவார். அவர் தற்போது மிகவும் பிசியாக உள்ளார். ஆனால் இங்கு நடக்கும் நிகழ்வை அடிக்கடி போனில் கேட்டுக்கொண்டும், வீடியோவில் பார்த்துக் கொண்டும் உள்ளார்.
இங்கு நடைபெறும் இந்த மண்டல பூஜை விழாவில் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவும், நலமாக இருக்கவும் மழை பெய்து சுபிட்சம் ஏற்படவும் பூஜைகள் செய்யப்பட்டன.
தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும். ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பை எப்போது அறிவிப்பார் என்று நான் ஏற்கனவே கூறிவிட்டேன். மே 23-ந்தேதிக்கு பிறகு அவர் முக்கிய அறிவிப்பு வெளியிடுவார்.
ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அவர் தாமதம் செய்வதாக சிலர் கூறுகிறார்கள். தாமதம் செய்வது நல்லதுக்காகதான். அவர் தமிழக மக்களுக்கு நிறைய திட்டங்கள் வைத்திருக்கிறார். மணிமண்டபத்தை பார்க்க ரஜினி விரைவில் வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஜினிகாந்த் மே 23-ந்தேதிக்கு பிறகு அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படும் நிலையில் திருச்சியில் மாநாடு நடத்தி அதை அவர் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. திருச்சி அருகே கட்டப்பட்டுள்ள அவரது பெற்றோர் மணி மண்டபத்தை பார்க்க ரஜினி விரைவில் வருகை தர உள்ளதாக அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் கூறியது இதையொட்டி தான் என அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படம் பற்றி பரவி வந்த வதந்திக்கு பிரபல மலையாள நடிகர் செம்பன் விளக்கம் அளித்துள்ளார். #Darbar #Rajinikanth #Nayanthara
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. 3 மாதங்கள் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்த உள்ளனர். ரஜினிகாந்துடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
மேலும் பாலிவுட் நடிகர்கள் பிரதிக் பாபர், சிராக் ஜனி, ஜத்தின் சர்னா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில், பிரபல மலையாள வில்லன் நடிகர் செம்பன் வினோத் ஜோஸ், தர்பார் படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து செம்பன் கூறுகையில், தர்பார் படத்தில் நான் நடிப்பதாக செய்திகள் பரவி வருவதை நானும் பார்த்தேன். ஆனால் தர்பார் படக்குழு என்னை தொடர்பு கொள்ளவே இல்லை என்பது தான் உண்மை. எனினும் அந்த வதந்தி உண்மையானால் மகிழ்ச்சி தான் என்று கூறியிருக்கிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். #Darbar #Rajinikanth #Nayanthara #ChembanVinodJose
Darbar Rajinikanth 167 Rajinikanth AR Murugadoss Lyca Productions YogiBabu Santosh Shivan Anirudh Nayanthara Prateik Babbar JithinSarna Chirag Jani Chemban Vinod Jose தர்பார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் லைகா புரொடக்ஷன்ஸ் ரஜினிகாந்த் 167 யோகிபாபு சந்தோஷ் சிவன் அனிருத் நயன்தாரா பிரதிக் பாபர் சிராக் ஜனி ஜத்தின் சர்னா செம்பன் வினோத் ஜோஸ்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெறும் நிலையில், பாலிவுட் நடிகர்கள் பலர் படக்குழுவில் இடம்பிடித்து வருகின்றனர். #Darbar
பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தி நடிகர் ஜத்தின் சர்னா தர்பார் படக்குழுவில் இணைந்துள்ளார்.
‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஜத்தின் சர்னா மிகச்சிறிய வேடமாக இருந்தாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல இந்தி நடிகர் பிரதிக் பப்பர் வில்லனாக நடிக்கிறார்.
காப்பான் படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடித்துள்ள சிராக் ஜனியும், ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளார். கத்தி படத்தில் நீல் நிதின் முகேஷ், துப்பாக்கியில் வித்யுத் ஜம்வால் என ஏ.ஆர்.முருகதாஸ் வித்தியாசமான நடிகர்களை வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க வைத்திருந்தார்.
இப்படத்திற்கு அகில இந்திய அளவில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்ற நோக்கில் பல இந்தி நடிகர்கள் படக்குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் பணிபுரிகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். #Darbar#Rajinikanth #JithinSarna #PrathikBaber #ChiragJani
எதிர்வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகும் நடிகர் ரஜினிகாந்த் பாராளுமன்ற தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறார். அடுத்த மாதம் அதிரடியான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
அரசியலில் குதிக்காமலேயே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருபவர் ரஜினிகாந்த்.
கடந்த 1996-ம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியான ‘பாட்ஷா’ பட வெற்றி விழாவின் போது ரஜினி பேசிய பேச்சுக்கள் அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு எதிராக அவர் கொடுத்த வாய்ஸ் இப்போதும் பேசப்பட்டு வருகிறது. அப்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., த.மா.கா. கூட்டணிக்கு அவர் அளித்த ஆதரவே வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
அந்த தேர்தலின் போதே ரஜினிகாந்தை அரசியலுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது பலனளிக்கவில்லை. அப்போது இருந்த சூழ்நிலையில் ரஜினிகாந்த் அரசியலில் குதித்து இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருப்பார் என்று அரசியல் நோக்கர்கள் கணித்திருந்தனர்.
ஆனால் ரஜினியோ தனது திரைப்படங்கள் மூலமாக மட்டுமே அரசியல் பேசி வந்தார். அரசியல்வாதியாக மாறாமலே இருந்தார்.
இந்த நிலையில் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய சக்திகளாக திகழ்ந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிட்டார். வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம் என்று ரசிகர்கள் முன்னிலையில் அவர் வெளியிட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றிய ரஜினி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். மாநில, மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமித்து கட்சிக்கான அடித்தளத்தை அமைத்தார்.
இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் ரஜினி பின்வாங்கினார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பே வெளியிட்டு விட்டு தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்கி கொண்டார்.
அதே நேரத்தில் ஓராண்டுக்கு முன்னர் அரசியல் கட்சி தொடங்கிய கமல் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டார்.இது ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்திருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்த ரஜினி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக அறிவித்த ரஜினி தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் எனது நிலைப்பாட்டை மேலும் தெளிவுபடுத்துவேன் என்றும் தெரிவித்து இருந்தார்.
அடுத்த மாதம் 23-ந் தேதி பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி தனது எண்ணத்தை விரிவாக வெளிப்படுத்த உள்ளார். இது தொடர்பாக அதிரடி அறிவிப்பை அவர் வெளியிடுகிறார்.
தர்பார் படப்பிடிப்புக்காக தொடர்ச்சியாக 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள ரஜினி அடுத்த மாத இறுதியில் அதனை இறுதி செய்கிறார். இதன் பின்னர் சென்னை திரும்பியதும் தனது ரசிகர்களுடன் அவர் மீண்டும் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. இந்த இடைப்பட்ட காலத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களை தேர்தலுக்காக ஆயத்தப்படுத்த முடிவு செய்து உள்ளார்.
இதன்படி தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ரஜினியின் அரசியல் பிரவேச நடவடிக்கைகள் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் ரஜினி ரசிகர்களும் நேரடியாக அரசியல் களத்தில் குதிக்க தயாராகி வருகின்றன. #Rajinikanth
அரசியலில் குதிக்காமலேயே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருபவர் ரஜினிகாந்த்.
கடந்த 1996-ம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியான ‘பாட்ஷா’ பட வெற்றி விழாவின் போது ரஜினி பேசிய பேச்சுக்கள் அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு எதிராக அவர் கொடுத்த வாய்ஸ் இப்போதும் பேசப்பட்டு வருகிறது. அப்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., த.மா.கா. கூட்டணிக்கு அவர் அளித்த ஆதரவே வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
அந்த தேர்தலின் போதே ரஜினிகாந்தை அரசியலுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது பலனளிக்கவில்லை. அப்போது இருந்த சூழ்நிலையில் ரஜினிகாந்த் அரசியலில் குதித்து இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருப்பார் என்று அரசியல் நோக்கர்கள் கணித்திருந்தனர்.
ஆனால் ரஜினியோ தனது திரைப்படங்கள் மூலமாக மட்டுமே அரசியல் பேசி வந்தார். அரசியல்வாதியாக மாறாமலே இருந்தார்.
இந்த நிலையில் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய சக்திகளாக திகழ்ந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிட்டார். வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம் என்று ரசிகர்கள் முன்னிலையில் அவர் வெளியிட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றிய ரஜினி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். மாநில, மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமித்து கட்சிக்கான அடித்தளத்தை அமைத்தார்.
இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் ரஜினி பின்வாங்கினார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பே வெளியிட்டு விட்டு தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்கி கொண்டார்.
அதே நேரத்தில் ஓராண்டுக்கு முன்னர் அரசியல் கட்சி தொடங்கிய கமல் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டார்.இது ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்திருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்த ரஜினி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் உற்சாகம் அடைந்தனர். எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்குமாறு ரசிகர் மன்றத்தினர் அறிவுறுத்தப்பட்டனர்.
சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக அறிவித்த ரஜினி தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் எனது நிலைப்பாட்டை மேலும் தெளிவுபடுத்துவேன் என்றும் தெரிவித்து இருந்தார்.
அடுத்த மாதம் 23-ந் தேதி பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி தனது எண்ணத்தை விரிவாக வெளிப்படுத்த உள்ளார். இது தொடர்பாக அதிரடி அறிவிப்பை அவர் வெளியிடுகிறார்.
தர்பார் படப்பிடிப்புக்காக தொடர்ச்சியாக 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள ரஜினி அடுத்த மாத இறுதியில் அதனை இறுதி செய்கிறார். இதன் பின்னர் சென்னை திரும்பியதும் தனது ரசிகர்களுடன் அவர் மீண்டும் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
இதன்படி தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ரஜினியின் அரசியல் பிரவேச நடவடிக்கைகள் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் ரஜினி ரசிகர்களும் நேரடியாக அரசியல் களத்தில் குதிக்க தயாராகி வருகின்றன. #Rajinikanth
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ’தர்பார்’ படத்தில் ரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு நடிப்பதாக கூறப்படுகிறது. #Darbar #Rajinikanth
ரஜினியின் 167-வது படமான ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ரஜினி நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் `தர்பார்’ படத்தின் தகவல்கள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா நேற்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
’தர்பார்’ படத்தில் நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாக நடிக்கிறார் என்கிற செய்தி வெளியாகி இருக்கிறது. தர்பார் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
இதில் படப்பிடிப்பு நடைபெறும் இடம் மருத்துவமனை போல உள்ளது. அங்கிருந்து நிவேதா தாமஸ் மற்றும் யோகிபாபு இருவருடன் ரஜினி நடந்து வருகிறார். யோகிபாபுவின் காஸ்டியூம் பார்க்கும்போது, அவர் ரஜினியின் அசிஸ்டன்டாக நடிக்கலாம் என தோன்றுகிறது.
இதற்கிடையே ரஜினிகாந், நயன்தாரா நடிக்கும் காட்சிகளின் புகைப்படங்களும் வெளியாகி படக்குழுவுக்கு அதிச்சியை அளித்துள்ளது. #Darbar #Rajinikanth #Nayanthara #YogiBabu
பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசனின் துணிச்சலை பாராட்டவதாக இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார். #KamalHaasan #Perarasu
கன்னியாகுமரி:
விஜய் நடித்த சிவகாசி, திருப்பாச்சி, அஜித்குமார் நடித்த திருப்பதி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் பேரரசு. இவர் இன்று கன்னியாகுமரி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சினிமா உலகில் கடந்த 15 ஆண்டுகளாக உள்ளேன். 9 படங்களை இயக்கி இருக்கிறேன். மலையாளத்தில் சாம்ராஜ்யம் 2 படத்தையும் இயக்கியுள்ளேன். ஜூன் மாதம் மேலும் 2 அல்லது 3 படங்களை இயக்க உள்ளேன்.
ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க விருப்பம் உள்ளது. அந்த லட்சியம் விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் மக்கள் சேவைக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்ற வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசனின் துணிச்சலை பாராட்டுகிறேன்.
நானும் மக்கள் பிரச்சனைகளுக்காக நடந்த போராட்டங்களில் பங்கெடுத்து உள்ளேன். ஜல்லிக்கட்டு, விவசாயிகள் பிரச்சனைக்காக போராடியுள்ளேன். மீனவர்கள் பிரச்சனைக்காகவும் போராடுவேன்.
கன்னியாகுமரியில் துறைமுகம் அமைவதால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்காகவும் போராடுவேன்.
தேர்தல் நேரங்களில் மட்டும் அரசியல் கட்சிகள் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறுகிறது. அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த பின்பு விவசாயிகளுக்கு தேவையானவற்றை செய்பவர்களே உண்மையான அரசியல்வாதிகள். மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகளில் இலவசம் அளிப்பது பற்றி கூறும்போது, அதனை தேர்தல் கமிஷன் கண்டிக்க வேண்டும். ஓட்டுக்காக இலவசம் தருவதாக அறிவிப்பதும் லஞ்சம்தான் என்பதை உணர வேண்டும். மாதம் தோறும் வங்கியில் பணம் போடுகிறேன் என்று கூறுவதை தேர்தல் கமிஷன் தடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் யார் அதிக பணம் கொடுத்தார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். இந்த வெற்றி உண்மையான வெற்றியாக இருக்காது. எனக்கு அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை. நான் அரசியலுக்கு வரும்போது, அப்போது எந்த கட்சி நல்ல கட்சியாக எனக்கு தோன்றுகிறதோ, அந்த கட்சியில் சேர்ந்து பணியாற்றுவேன்.
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து சில நாடுகள் மட்டுமே கண்டனம் தெரிவித்து உள்ளன. இதனை உலக நாடுகள் அனைத்தும் கண்டிக்க வேண்டும்.
ஒரு மதத்திற்கு எதிராக இன்னொரு மதத்தினர் வன்முறையில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. ஒரு மதத்தை இன்னொரு மதம் எதிர்ப்பதற்கும் உரிமை இல்லை.
வேலூர் ஜெயிலில் இருக்கும் ராஜீவ் கொலை கைதிகளான நளினி, முருகன், பேரறிவாளன் ஆகியோரை 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தேன். அவர்கள் ஆயுள் கைதிகள் அனுபவிக்கும் தண்டனை காலத்தை விட அதிக தண்டனை அனுபவித்து விட்டார்கள்.
இவர்களை விடுவிக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடப்பட்டது. இப்போது நடந்த பாரதிய ஜனதா ஆட்சியில் கூட அவர்கள் விடுவிக்கப்படாதது மர்மமாக உள்ளது. இவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளும், கவர்னரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல் முறையாக நடக்கவில்லை. பலரது வாக்குரிமை மறுக்கப்பட்டு உள்ளது.
பெரும்பாலானவர்களுக்கு பூத் சிலிப் கூட வழங்கப்படவில்லை. இதில் தேர்தல் ஆணையம் முறையாக நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #Perarasu
விஜய் நடித்த சிவகாசி, திருப்பாச்சி, அஜித்குமார் நடித்த திருப்பதி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் பேரரசு. இவர் இன்று கன்னியாகுமரி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சினிமா உலகில் கடந்த 15 ஆண்டுகளாக உள்ளேன். 9 படங்களை இயக்கி இருக்கிறேன். மலையாளத்தில் சாம்ராஜ்யம் 2 படத்தையும் இயக்கியுள்ளேன். ஜூன் மாதம் மேலும் 2 அல்லது 3 படங்களை இயக்க உள்ளேன்.
ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க விருப்பம் உள்ளது. அந்த லட்சியம் விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் மக்கள் சேவைக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்ற வேண்டும்.
ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்களின் மன நிலை மாறவேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்குவது தேசத்துக்கு செய்யும் துரோகம். இது நல்ல அரசியல் இல்லை. இது பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
நானும் மக்கள் பிரச்சனைகளுக்காக நடந்த போராட்டங்களில் பங்கெடுத்து உள்ளேன். ஜல்லிக்கட்டு, விவசாயிகள் பிரச்சனைக்காக போராடியுள்ளேன். மீனவர்கள் பிரச்சனைக்காகவும் போராடுவேன்.
கன்னியாகுமரியில் துறைமுகம் அமைவதால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்காகவும் போராடுவேன்.
தேர்தல் நேரங்களில் மட்டும் அரசியல் கட்சிகள் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறுகிறது. அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த பின்பு விவசாயிகளுக்கு தேவையானவற்றை செய்பவர்களே உண்மையான அரசியல்வாதிகள். மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகளில் இலவசம் அளிப்பது பற்றி கூறும்போது, அதனை தேர்தல் கமிஷன் கண்டிக்க வேண்டும். ஓட்டுக்காக இலவசம் தருவதாக அறிவிப்பதும் லஞ்சம்தான் என்பதை உணர வேண்டும். மாதம் தோறும் வங்கியில் பணம் போடுகிறேன் என்று கூறுவதை தேர்தல் கமிஷன் தடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் யார் அதிக பணம் கொடுத்தார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். இந்த வெற்றி உண்மையான வெற்றியாக இருக்காது. எனக்கு அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை. நான் அரசியலுக்கு வரும்போது, அப்போது எந்த கட்சி நல்ல கட்சியாக எனக்கு தோன்றுகிறதோ, அந்த கட்சியில் சேர்ந்து பணியாற்றுவேன்.
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து சில நாடுகள் மட்டுமே கண்டனம் தெரிவித்து உள்ளன. இதனை உலக நாடுகள் அனைத்தும் கண்டிக்க வேண்டும்.
ஒரு மதத்திற்கு எதிராக இன்னொரு மதத்தினர் வன்முறையில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. ஒரு மதத்தை இன்னொரு மதம் எதிர்ப்பதற்கும் உரிமை இல்லை.
வேலூர் ஜெயிலில் இருக்கும் ராஜீவ் கொலை கைதிகளான நளினி, முருகன், பேரறிவாளன் ஆகியோரை 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தேன். அவர்கள் ஆயுள் கைதிகள் அனுபவிக்கும் தண்டனை காலத்தை விட அதிக தண்டனை அனுபவித்து விட்டார்கள்.
இவர்களை விடுவிக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடப்பட்டது. இப்போது நடந்த பாரதிய ஜனதா ஆட்சியில் கூட அவர்கள் விடுவிக்கப்படாதது மர்மமாக உள்ளது. இவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளும், கவர்னரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல் முறையாக நடக்கவில்லை. பலரது வாக்குரிமை மறுக்கப்பட்டு உள்ளது.
பெரும்பாலானவர்களுக்கு பூத் சிலிப் கூட வழங்கப்படவில்லை. இதில் தேர்தல் ஆணையம் முறையாக நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #Perarasu
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X