search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99412"

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படப்பிடிப்பில் நயன்தாரா நேற்று கலந்துகொண்ட நிலையில், படப்பிடிப்பு தள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Darbar
    ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 
    சந்திரமுகி, குசேலன், சிவாஜி படங்களுக்கு பிறகு ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். 

    நேற்று மும்பை சென்ற நயன்தாரா, ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தார். ரஜினியையும், நயன்தாராவையும் காண படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் திரண்டார்கள். அவர்களை பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினர்.



    தர்பார் படத்தில் நயன்தாரா 30 நாட்கள் தொடர்ந்து நடிப்பார் என்று தெரிகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக வருகிறார். சமூக சேவகராக இன்னொரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    நேற்று படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் இருப்போருக்கு ஏ.ஆர்.முருகதாஸ் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.



    மும்பையில் 3 மாதங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம் 2020 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Darbar #Rajinikanth #Nayanthara

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா இன்று இணைகிறார். #Darbar #Rajinikanth
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், நயன்தாரா இன்று படப்பிடிப்பில் இணையவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    படம் முழுக்க வரும் கேரக்டர் என்பதால் இந்த படத்துக்காக தொடர்ச்சியாக 60 நாட்கள் வரை நயன்தாரா கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம். 

    இதற்கு முன்பாக சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களில் நயன்தாரா,  ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ரஜினி இந்த படத்தில் இரண்டு வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். வில்லனாக இந்தி நடிகர் பிரதிக் பாபர் நடிப்பதாக கூறப்படுகிறது.


    மும்பையில் 3 மாதங்கள் தொடர்ச்சியாக தர்பார் படப்பிடிப்பு நடக்க உள்ளது. 

    அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படம் 2020 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Darbar #Rajinikanth #Nayanthara

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் ரஜினிக்கு இரண்டு வேடங்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. #Darbar #Rajinikanth
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. ரஜினி, நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குகிறார்கள். 

    ‘தர்பார்’ படத்தின் முதல் பாதியில் சமூக சேவகராகவும், இரண்டாம் பாதியில் அதிரடி போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் ரஜினி. ஏற்கனவே, ‘மூன்று முகம்‘ படத்தில் ரஜினி நடித்திருந்த அலெக்ஸ் பாண்டியன் வேடம் பிரமாதமாகப் பேசப்பட்டது.



    இப்போது, அலெக்ஸ் பாண்டியன் வேடத்தையே மிஞ்சும் விதமாக ‘தர்பார்’ படத்தில் இடம் பெறும் போலீஸ் அதிகாரி கேரக்டர், பிரமாதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். வழக்கமாக, தன்னுடைய ஒவ்வொரு படத்துக்கும் நடிப்புக்காக தனிமையில் ஹோம் ஒர்க் செய்வது ரஜினியின் வழக்கம். அதுபோல இந்த படத்துக்கும் பல வகையான நடிப்பு பயிற்சிகளை எடுத்துக்கொள்கிறாராம் ரஜினி. #Darbar #Rajinikanth #Nayanthara

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `தர்பார்' படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்ததாக 3 படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #Darbar
    `பேட்ட' படத்தில் ரஜினிகாந்தின் துள்ளலான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `தர்பார்' படத்தில் போலீஸ் அதிகாரியாக அதிரடி வேடத்தில் நடிக்கிறார். மும்பையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது.

    மும்பை புறப்படுவதற்கு முன்பாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் ரஜினிகாந்தை அவசரமாக சந்தித்தார். ஏற்கனவே படையப்பா, முத்து, லிங்கா படங்களை ரஜினியை வைத்து இயக்கியுள்ள ரவிகுமார் மீண்டும் அவருக்காக புது கதை எழுதி இருக்கிறார். முருகதாஸ் படத்துக்கு பிறகு கேஎஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டிலேயே தொடங்கப்பட உள்ளது என்கிறார்கள். இதையடுத்து எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க இருக்கிறார்.



    மேலும் பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக செய்தி வருகிறது. எனவே 2019, 2020 என 2 ஆண்டுகால கால்ஷீட்டை இப்போதே ரஜினி கமிட் செய்து வைத்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. #Rajinikanth #Darbar #KSRavikumar #HVinoth #KarthikSubbaraj

    தேர்தலில் வாக்குப்பதிவின்போது ரஜினிகாந்துக்கு வலதுகையில் மை வைத்தது பற்றி  விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார். #SatyabrataSahoo #Rajinikanth
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த வியாழன் அன்று நடந்தது.

    நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார். இந்த தேர்தலில் ரஜினிகாந்த் வாக்களித்தபோது அவருக்கு வலதுகையில் மை வைக்கப்பட்டது சர்ச்சையாகி இருக்கிறது.

    தேர்தல் நடைமுறை விதிகளின்படி வாக்களிப்பவரின் இடது கை ஆள் காட்டி விரலில் தான் மை வைக்கப்பட வேண்டும். இடது கை விரலில் காயம் என்றாலோ மை வைக்க முடியாத சூழ்நிலை என்றாலோ அதற்கு அடுத்த விரலில் மை வைக்கப்படவேண்டும். ஒருவேளை இடது கையில் மை வைக்க முடியாதபட்சத்தில் தான் வலது கையில் மை வைக்கப்படவேண்டும்.

    ரஜினிகாந்த் வாக்களிக்கும்போது அவருக்கு மை வைத்த அலுவலர் பதற்றத்தில் அவரது வலது கையில் மை வைத்துவிட்டதாக தெரிகிறது. கடந்த 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் நடிகர் அஜித்துக்கு ஆள்காட்டி விரலுக்கு பதிலாக நடுவிரலில் மை வைக்கப்பட்டு விட்டது.

    அதை மீடியாவுக்கு முன்னால் காட்டக்கூடாது என்று கையின் நான்கு விரல்களையும் சேர்த்து காண்பித்தார். அதுபோன்ற ஒரு தர்மசங்கடம் ரஜினிக்கும் அவருக்கு மை வைத்த அலுவலருக்கும் ஏற்பட்டுள்ளது.



    சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. முன்னணி நடிகர் என்பதால் அலுவலர் பதற்றத்தில் செய்தாரா? இதற்கு எப்படி ரஜினி சம்மதித்தார்? இது விதிமீறலில் வராதா? இது போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

    இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த சத்யபிரத சாகு ‘தேர்தல் பணியில் இருந்த ஊழியர்கள், தவறுதலாக ரஜினிகாந்தின் வலது கைவிரலில் அடையாள மையை வைத்திருக்கலாம்.

    ரஜினி ஓட்டு போட வரும்போது பத்திரிகையாளர்கள் உள்பட பெருங்கூட்டம் கூடியதால் அவசரத்தில் தேர்தல் அதிகாரி இடது கைவிரலுக்கு பதில் வலது கைவிரலில் மை வைத்திருக்கலாம்.

    பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் தவறு செய்தது தொடர்பாக அறிக்கை கேட்கப்படும். மேலும், அதிக ரசிகர்களுடன் வாக்குச்சாவடி மையத்துக்கு ரஜினிகாந்த் வந்ததாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக அறிக்கை கேட்கப்படும்.

    அதேபோல் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் ஆகியோர் சிறப்பு விதியின்படி வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது குறித்தும் அறிக்கை கேட்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #SatyabrataSahoo #Rajinikanth

    அடுத்த சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார். ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் என ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். #TNpolls #Rajinikanth
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தற்போது நடைபெறும் 22 சட்டசபை தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆளும்கட்சியின் பலம் குறைந்து சட்டசபை தேர்தல் நடந்தால் நீங்கள் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘அடுத்த சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார். “அடுத்த ஓட்டு ரஜினிக்கே” ஹேஷ்டேக் போட்ட ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்’ என்றார்.

    தேர்தல் ஆணையம் கடந்த முறையை விட இந்த முறை சிறப்பாக பணியாற்றியுள்ளது.



    மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? என்ற கேள்விக்கு மே.23-ல் பதில் தெரிந்துவிடும் என அவர் குறிப்பிட்டார். #TNpolls #Rajinikanth

    ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்துள்ளனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருந்தது. #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே #அடுத்த_ஓட்டு_தலைவருக்கே #Rajinikanth
    சென்னை:

    ரஜினிகாந்தின் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு வர சொல்லி அழைப்பதும் அவர் இழுத்தடிப்பதும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி ரஜினி தன் அரசியல் வருகையை உறுதிப்படுத்தினார்.

    தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்த ரஜினி ‘அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி அரசியல் கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் பணிகளில் ரஜினி தீவிரம் காட்டினார்.

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ரஜினி களம் இறங்குவார் என்று எல்லோரும் எதிர் பார்த்தார்கள். ஆனால் அவர் வழக்கம்போல் ‘இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. அடுத்து வரவுள்ள சட்டசபை தேர்தலில் பார்த்துக்கொள்வோம்’ என்று அறிவித்தார். இது ரஜினி ரசிகர்களிடையே கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    ரஜினி ரசிகர்கள் இந்த பாராளுமன்ற தேர்தலில் தங்களுக்கு பிடித்த கட்சிக்கு வாக்களித்தனர். இந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் சீமான், கமல் ஆகியோருக்கு வரவேற்பு கிடைத்துள்ளதாக பேசப்படுகிறது. இளைய தலைமுறை வாக்குகள் அதிக அளவில் இவர்களுக்கு கிடைக்கலாம் என்ற கணிப்புகள் எழுந்தன. இது ரஜினி ரசிகர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியது.



    எனவே அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் உருவாக்கி டிரெண்ட் செய்ய தொடங்கினார்கள். நேற்று இரவு வரை இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டிங்கில் இருந்தது.

    இந்த முறை வாக்களித்து விட்டேன், அடுத்த முறை கண்டிப்பாக ரஜினிக்குத் தான் என் வாக்கு என்று ரஜினி ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். திடீர் என்று உருவாக்கப்பட்ட இந்த ஹேஷ்டேக், இந்திய அளவில் முதலிடத்துக்கு சென்றது ரஜினி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே #Rajinikanth
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் ஒரு முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் பிரதிக் பாபர் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Darbar #Rajinikanth
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார்.

    தர்பார் படத்தில் நடிக்கும் வில்லன்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்தி நடிகர் பிரதிக் பாபரை வில்லன் கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் 2015-ல் வெளியான ‘பாகி’ 2 படத்தில் வில்லனாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளும் கிடைத்தன.



    அந்த படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்து, தர்பார் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தர்பார் படத்தில் பிரதிக் பாபர் மும்பையை ஆட்டி வைக்கும் தாதாவின் மகனாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர், நடிகைகள் தேர்வு தொடர்ந்து நடக்கிறது.

    மும்பையில் 3 மாதங்கள் தொடர்ச்சியாக தர்பார் படப்பிடிப்பு நடக்க உள்ளது. பொங்கல் பண்டிகையன்று படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது. #Darbar #Rajinikanth #Nayanthara #ARMurugadoss

    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று துவங்கிய நிலையில், ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். #LokSabhaElections2019
    12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 96 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    சரியாக காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அனைவரும் தங்களது வாக்கினை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள பள்ளியில் வாக்களித்தனர். நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள பள்ளியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். நடிகர் கமல்ஹாசன் தனது மகள் சுருதிஹாசனுடன் தேனாம்பேட்டையில் உள்ள பள்ளியில் வாக்கினை பதிவு செய்தார். முன்னதாக கமல் வாக்குப்பதிவு செய்த பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்ததால், காத்திருந்து தனது ஓட்டை பதிவு செய்துவிட்டு சென்றார்.



    மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் தங்களது ஓட்டை பதிவு செய்தனர். #LokSabhaElections2019 #Rajinikanth #KamalHaasan #AjithKumar #Vijay 

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக இல்லாமல், வில்லியாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Darbar #Rajinikanth
    பேட்ட படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

    ஆனால் அவர் இப்படத்தில் ரஜினியின் ஜோடி இல்லை, படத்தில் ரஜினிக்கு ஜோடியே இல்லை என்றும் தகவல் வருகிறது. தந்தை மகள் பாசத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார் எனவும், நயன்தாரா இந்த படத்தில் ரஜினிக்கு வில்லியாக அல்லது ஒரு முக்கியமான கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



    படம் முழுக்க வரும் கேரக்டர் என்பதால் இந்த படத்துக்காக தொடர்ச்சியாக 60 நாட்கள் வரை நயன்தாரா கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம். ஏற்கனவே சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களில் ரஜினி-நயன்தாரா ஜோடி இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #Darbar #Rajinikanth #Nayanthara #ARMurugadoss

    தமிழ்ப் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை கூறியுள்ளார். #TamilNewYear
    உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் இன்று சித்திரை முதல் நாளான தமிழ்ப் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். பொதுமக்களுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 



    இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களுக்கு ட்விட்டரில் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் பகிர்ந்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் `தர்பார்' படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், படத்தில் ஒரு பாடலை விக்னேஷ் சிவன் எழுதுவதாக கூறப்படுகிறது. #Darbar #Rajinikanth
    ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் `தர்பார்' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 
    மும்பை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

    அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அனிருத் - விக்னேஷ் சிவன் இடையே நல்ல நட்பு இருக்கிறது. இவர்களது கூட்டணியில் உருவாகிய பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கடைசியாக அனிருத் இசையில் வெளியான பேட்ட படத்தில் விக்னேஷ் சிவன் வரியில் பாடல்கள் இல்லை என்ற குறை இருந்தது. அது தர்பார் படத்தின் மூலம் நினைவாகலாம்.



    தர்பார் படத்தில் அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் ஒரு பாடல் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மும்பை சென்ற விக்னேஷ் சிவன், ரஜினியை சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். டி.சந்தானம் கலை பணிகளையும், ராம் லக்‌ஷ்மன் சண்டைக்காட்சிகளையும் வடிவமைக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Darbar #Rajinikanth #Nayanthara #ARMurugadoss #Anirudh #VigneshShivn

    ×