search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99465"

    கருட பகவான் எல்லாப் பெருமாள் கோவில்களிலும் பெரிய திருவடியாக வீற்றிருக்கிறார். இவரை விரதம் இருந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.
    * எதிரிகளை ஜெயிக்கலாம், வழக்குகளில் வெற்றி உண்டாகும்.

    * சர்வரோக நிவாரணம், பிணி பீடைகள் நிவர்த்தி.

    * பில்லி, சூன்யம், ஏவல் கண்திருஷ்டி தோஷம், செய்வினைக் குற்றம் போன்றன நிவர்த்தி ஆகுதல்.

    * ஜாதக கிரக தசாபுத்தி, கோச்சார கிரகங்களால் ஏற்படும்  கண்டாதி தோஷங்கள், விபத்து, ஆயுள் பயம் போன்றன நிவர்த்தி ஆகும்.

    * போட்டி, பந்தயங்களில் வெற்றி கிட்டுதல்.

    * நிலம், வீடு, மனைபோன்றவற்றில் லாபம் ஏற்படல்.

    * திருமண பாக்கியம் கைகூடுதல், புத்திரதோஷம் நீங்கி, புத்திரப்பேறு உண்டாகுதல்.

    * படிப்புகளில், கல்வி சம்பந்தமானவற்றில் தேர்ச்சி பெறுதல், வேலைவாய்ப்புக்கிடைத்தல்.

    * அவரவர் செய்யும் உத்தியோகம், தொழில், வர்த்தகம், வியாபாரத்தில் வெற்றியும், லாபமும் உண்டாகும்.

    * குடும்பத்தில் அமைதி, ஒற்றுமை, சௌக்கியம் உண்டாகும்.

    * கிடைக்க வேண்டிய சொத்துகள், காசு பணம், இழந்த பொருட்களை மீண்டும் பெறுதல் போன்றன கருட பகவான் அருளால் கிடைக்கும்.

    * நியாயமான எண்ணங்கள், ஆசைகள், விருப்பங்கள் நிறைவேறும்.

    * விஷ ஜந்துக்கள், சர்ப்ப வாக்குகளில் இருந்து சதா பாதுகாப்பு சக்தி கிடைக்கும்.

    * விஷம குணங்கள் கொண்ட கொடிய சத்ருக்களிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
    ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஸ்ரீகருட பகவானை, அந்தந்த ராசிக்குரிய கிழமைகளில் வழிபட்டு வர, அதிக நன்மைகளை அடைவர். எந்த ராசியினர் எந்த கிழமை கருட வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஸ்ரீகருட பகவானை, அந்தந்த ராசிக்குரிய கிழமைகளில் வழிபட்டு வர, அதிக நன்மைகளை அடைவர். இங்கு கொடுக்கப்பட்டுள்ள கிழமைகள், பெண்கள் ஆண்கள் இருவருக்கும் பொதுவானதாகும்.

    மேஷம் - புதன், சனி
    ரிஷபம் - செவ்வாய், வியாழன்
    மிதுனம் - திங்கள், செவ்வாய், வியாழன்
    கடகம் - புதன், வெள்ளி
    சிம்மம் - திங்கள், வெள்ளி
    கன்னி - திங்கள், செவ்வாய், வியாழன்
    துலாம் - வியாழன், வெள்ளி
    தனுசு - திங்கள், செவ்வாய்
    மகரம்  - திங்கள், வியாழன்
    கும்பம்  - புதன், வியாழன்
    மீனம் - வெள்ளி, சனி
    கருடனை கைகூப்பி வணங்குதல் கூடாது. கருடனை வணங்கும் போது சொல்ல வேண்டிய கருட அஞ்சலி துதி பின்வருமாறு அறிந்து கொள்ளலாம்.
    கருடனை கைகூப்பி வணங்குதல் கூடாது. மாறாக வலது கை மோதிர விரலால் இரண்டு கன்னங்களில் ஒற்றிக் கொண்டே வணங்க வேண்டும். கருடனை வணங்கும் போது சொல்ல வேண்டிய கருட அஞ்சலி துதி பின்வருமாறு

    “குங்குமங்கித வர்ணாய
    குந்தேற்து தவளாயச
    விஷ்ணு வாஹ நமஸ்துப்யம்
    பட்சிராஜாயதே நமஹ”

    ஜாதகப்படி கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கும், ராகு, கேது, சரியான ஸ்தானங்களில் அமையாதவர்களும் இந்த மந்திரங்களைக் கூறிப்பலன் பெறலாம்.
    ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் சுவாமி நட்சத்திரத்தில் கருடன் பிறந்தான். எனவே, ஆவணி மாத சுக்கிலபட்ச பஞ்சமி கருட பஞ்சமியாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் சுவாதி நட்சத்திரம் கருடனின் ஜென்ம நட்சத்திரமாக இருப்பதால் சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் கருடனைத் தரிசனம் செய்வது பெரும் புண்ணியத்தையும், சுபிட்சங்களையும் அளிக்கும். இதேபோல் பஞ்சமி திதியிலும் தரிசிக்க வேண்டும்.

    ஓம் ஷிப ஸ்வாஹா

    ஜாதகப்படி கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கும், ராகு, கேது, சரியான ஸ்தானங்களில் அமையாதவர்களும் இந்த மந்திரங்களைக் கூறிப்பலன் பெறலாம்.
    திருமணம் தடைகள், தாமதங்கள், இடையூறுகள் ஏற்படுபவர்கள் கருட பகவானுக்கு அபிஷேகம் செய்ய, திருமணத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.
    திருமணம் கைகூட தடைகள், தாமதங்கள், இடையூறுகள் ஏற்படுபவர்கள் தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்றோ அல்லது சுவாதி நட்சத்திரம், பஞ்சமி திதி வரும் நாளிலோ கருட பகவானுக்கு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனை, செய்ய, திருமணத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் நீங்கி விரைவில் மிகச் சிறப்பாக திருமணம் நடந்து புத்திரப்பேறும் சித்திக்கும் கருட வழிபாட்டுடன் கருட தரிசனம் செய்ய வேண்டும். தரிசனம் கிடைத்துவிட்டால் பலன் உறுதியாகும்.

    திருமண விஷயத்தில் கருடன்

    திருமண சம்பந்தமாகப் பெண் பார்க்கவோ, அல்லது மாப்பிள்ளை பார்க்கவோ புறப்பட்டு போகும் போது கருட தரிசனம் கிடைத்தால் திருமணம் நடக்கும். அந்த தம்பதிகள் ஆண், பெண் குழந்தைகளுடன் சீரும் சிறப்பான, சகல வசதி வாய்ப்புகளுடனும் நன்றாக இல்லற வாழ்க்கையை வாழ்வார்கள். வாழ்வின் எவ்வித குறையும் ஏற்படாது.
    பெருமாள் கோவிலில் வீற்றிருக்கும் கருட பகவானை வணங்கும் போது பின்வரும் கருட துதியைக் கூறி வணங்கினால் கருட பகவான் அருள்கிட்டும்.
    பெருமாள் கோவிலில் வீற்றிருக்கும் கருட பகவானை வணங்கும் போது பின்வரும் கருட துதியைக் கூறி வணங்கினால் கருட பகவான் அருள்கிட்டும்.

    கருடாய நமஸ்துப்யம் ஸர்வ
    சர்பேந்நர சத்ரவே
    வாஹனாய மஹாவிஷ்ணோ
    தார்ஷ்யாய அமித தேஜயே
    பெருமாளின் வாகனமாக விளங்கும் கருடனுக்கு உரிய விரதம் தான் கருட பஞ்சமி விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி அன்று இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

    பெருமாளின் வாகனமாக விளங்கும் கருடனுக்கு உரிய விரதம் தான் கருட பஞ்சமி விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி அன்று இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

    கருடபஞ்சமி தொடர்பாக கூறப்படும் கதை:-

    முன்னொரு காலத்தில் 7 அண்ணன்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தாள். அவர்கள் விறகு வெட்டி பிழைப்பு நடத்தி வந்தனர். ஒருநாள் தங்கை ஆனவள் தன் அண்ணன்களுக்குக் கஞ்சி கொண்டு சென்றாள். அப்போது வானில் கருடன் ஒன்று நாகத்தைக் கவ்விக்கொண்டு சென்றது. அப்போது அந்த நாகம் கக்கிய விஷம் தங்கை கொண்டு சென்ற கஞ்சியில் விழுந்துவிட்டது. அதை அறியாத அவள் அண்ணன்கள் அனைவருக்கும் அந்த கஞ்சியை பரிமாறினாள். அதை உண்ட அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்.

    “தினமும் செய்வது போலத்தானே செய்தோம். இன்று இப்படி ஆகிவிட்டதே... என்று அழுது புரண்ட அவள், தன் அண்ணன்களை காப்பாற்ற வேண்டி இறைவனிடம் மன்றாடினாள். சிவனும், பார்வதியும் அங்கே தோன்றி அவள் அழுகைக்கான காரணத்தை கேட்டனர்.... அவள் நடந்ததைக் கூறினாள். அதற்கு அவர்கள், “ இன்று கருடபஞ்சமி. நீ அதை மறந்து, அதற்குரிய பூஜை செய்யாமல் வந்துவிட்டாய். அது தான் உன் பிரச்சினைக்கு காரணம்.

    இங்கேயே இப்போதே நாங்கள் சொல்வதை போல் நாகருக்கு பூஜை செய். கங்கணக்கயிற்றில் ஏழு முடிச்சிட்டு, நாகர் இருக்கும் புற்று மண்எடுத்து, அட்சதை சேர்த்து, இறந்து கிடக்கும் உன் அண்ணன்கள் முதுகில் குத்து. அவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள்” என்று சொல்லி கருட பஞ்சமியின் முக்கியத்துவத்தை அவளுக்கு உணர்த்தினர். அவளும் அதேபோல் செய்தாள். இறந்து கிடந்த அண்ணன்கள் அனைவரும் உயிர் பெற்று எழுந்தனர். இதை பிரதிபலிக்கும் வகையில் கருடபஞ்சமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.


    இன்றும் கூட, கருட பஞ்சமி அன்று பெண்கள் தங்கள் உடன் பிறந்தவர்கள் முதுகில் அட்சதை இட்டு குத்தி, அவர்கள் தரும் சீரைப்பெற்றுக்கொள்வதை சில இடங்களில் காணலாம்.

    விரதமுறை

    வளர்பிறை பஞ்சமியில் கருடனுக்குரிய விரதத்தை கடைபிடிக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து குளித்து தூய்மையான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

    தூய்மையான இடத்தில் பூக்களால் அலங்கரித்து ஐந்து நிறங்களைக் கொண்ட கோலங்கள் போட வேண்டும். நடுவில் ஒரு பலகை போட்டு, அதன் மேல் தலை வாழை இலையை விரித்துப் பச்சரிசியைக் கொட்டி வைத்து, அதன் மேல் சக்திக்கு தகுந்தபடி பொன், வெள்ளி, தாமிரம், அல்லது மண் இவற்றில் ஏதாவது ஒன்றால் செய்யப்பட்ட பாம்பின் வடிவம் ஒன்றைச் செய்து அரிசியின் மேல் வைக்க வேண்டும்.

    பாம்பின் படத்தின் நடுவில் மஞ்சளால் செய்யப்பட்ட கவுரிதேவியின் வடிவத்தை வைத்து அலங்காரங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும். பருத்தி நூலால் ஆன மஞ்சள் சரட்டை சார்த்தவும்.

    இப்படிப் பூஜை செய்பவர்களின் கோரிக்கைகள் எல்லாம் முழுமையாக நிறைவேறும். சகல விதமான செல்வங்களையும் பெறுவார்கள். அதோடு முக்தியும் அடைவர். இந்த பூஜை செய்வதனால் நாக தோஷம் நீங்கும்.
    கருட பகவான் எல்லாப் பெருமாள் கோவில்களிலும் பெரிய திருவடியாக வீற்றிருக்கிறார். இவரது வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மரீசி எனும் மகரிஷிக்கு கச்யப மகரிஷிமகனாகப் பிறந்தார். இவர் தட்சப்பிரஜாபதியின் மகள்களான கத்ரு, விநதை என்பவர்களை மணந்து கொண்டார்.

    தன் மனைவியர் இருவர் மீதும் மாறாத அன்புடன் வாழ்ந்து வந்தார் கச்யபர். பல்லாண்டுகள் ஆகியும் குழந்தைச்செல்வம் இல்லாததால் கச்யப மகரிஷி, புத்ர காமேஷ்டி யாகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    அந்த யாகத்தில் கலந்து கொள்ள தேவர்களும், முனிவர்களும் சமித்துக்களோடு வந்திருந்தனர். தேவர்களின் தலைவனான இந்திரனும் பொரச மரத்தின் கிளையையே யாகத்திற்காக ஒடித்துக்கொண்டு வந்திருந்தான்.

    பிரம்மாவின் மனதில் தோன்றிய புத்திரர் க்ருது என்பவர்.இவர் க்ரியா என்பவரை மணந்து பத்தாயிரம் பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். அவர்கள் சுண்டு விரலின் பாதிக்கும் குறைவான உயரத்துடன் காணப்பட்டனர். அவர்களை வாலகில்யர்கள் என்று அழைத்தனர்.

    இந்த வாலகில்யர்கள் மகா தபஸ்விகளாக விளங்கினர். தினமும் சூரிய மண்டலத்தை வலம் வந்தும் ஆல மரத்திலும் மூங்கில் இலைகளிலும் தலைகீழாகத் தொங்கியும் கடுந்தவம் செய்து வந்தனர். இவர்களும் யாகத்திற்கு வரத்தொடங்கினர்.

    இவர்கள் யாகத்திற்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்யவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டனர். எனவே இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு சிறிய சமித்தை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு மிகவும் சிரமத்துடன் நடந்து வந்தனர்.

    கச்யப மகரிஷி யாகம் செய்வதற்கு முதல்நாள் நாட்டில் நல்ல மழை பெய்திருந்தது. அதனால் வழியெங்கும் மழைநீர் தேங்கி இருந்தது. ஒரு மாட்டின் குளம்படி பட்டு பள்ளமாகி இருந்த இடத்திலும் மழைநீர் தேங்கி இருந்தது. அந்த இடத்தை பத்தாயிரம் வாலகில்யர்களும் கடக்கும்போது சில வாலகில்யர்கள் அதில் விழுந்து விட்டனர். இதைக் கண்ட இந்திரன் கேலி செய்து சிரிந்து விட்டான்.

    மனம் நோந்த வாலகில்யர்கள், இனி நாங்களே புது இந்திரனை உண்டாக்குவோம் என்று சொல்லி மகாயாகம் செய்யத்தொடங்கி விட்டனர். இதை நாரத மகரிஷி இந்திரனிடம் தெரிவித்தார். உடனே இந்திரன் கலங்கித் தவித்தான். தான் அறியாமல் செய்த தவற்றை உணர்ந்து வருந்தினான். இதில் இருந்து விடுபட என்ன வழி என்று நாரத மகரிஷியிடம் கேட்டான். அதற்கு அவரும் கச்யப மகரிஷியை சரணடைந்து உதவி கேள் என்றார். உடனே இந்திரனும் கச்யப மகரிஷியின் திருவடியில் சரணடைந்து தன்னைக்காக்கும்படி வேண்டினான். மனம் உருகிய கச்யப மகரிஷி, வாலகில்யர்களிடம் பிரம்மதேவனால் பதவியில் அமர்த்தப்பட்ட இந்திரனை சபிக்க வேண்டாம். இவனது குற்றத்தை உடனே நிறுத்துங்கள் என்றார்.

    ஆனால் வாலகில்யர்கள் யாகத்தை நிறுத்தமாட்டோம் என்று மறுத்துவிட்டனர். அதனால் கச்யப மகரிஷி, அப்படியானால் நீங்கள் உண்டாக்கும் இந்திரன் பறவைகளின் அரசனாக வேண்டுமானால் இருக்கட்டும். மகாவிஷ்ணுவையே சுமக்கும் பாக்கியத்தைப் பெற்று, அனைவராலும் பெரிய திருவடி என்று போற்றப்படுவான் என்று வேண்டிக் கொண்டார்.

    மனம் இளகிய வாலகில்யர்கள், கச்யபரின் வேண்டுகோளுக்கு இணங்கி அவ்வாறே ஆகட்டும் என்று ஒத்துக்கொண்டனர். மேலும் அப்படி உருவாகும் பிள்ளைக்கு கச்யபரே தந்தையாக இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர். கச்யபரும் ஒத்துக்கொண்டு இந்திர யாகத்தின் பலனையும் புத்ர காமேஷ்டி யாகத்தின் பலனை பெற்று தன் இல்லத்தை அடைந்தார்.

    அங்கு தன் மனைவியர் இருவரையும் அழைத் யார் யாருக்கு எப்படிப்பட்ட குழந்தைகள் வேண்டும் என்று கேட்டார். அதற்கு மூத்தவளான கத்ரு என்பவள் அனைத்து சக்திகளையும் ஒருங்கே பெற்று மகிமைகளை உடைய ஆயிரம் பிள்ளைகள் ஒரே நேரத்தில் பிறக்க வேண்டும் என்று வேண்டினாள். இளையவள் விநதை, கத்ருவிற்கு பிறக்கப்போகும் ஆயிரம் குழந்தைகளுக்கு ஈடான இரண்டு தவப்புதல்வர்கள் வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். அப்படியே ஆகட்டும் என்று வாழ்த்தி யாகப் பலன்களை சமமாகப் பங்கிட்டு அவர்களுக்கு வழங்கினார் கச்யபர்.

    கத்ரு ஆயிரம் முட்டைகளையும், விநதை இரண்டு முட்டைகளையும் பெற்றனர். ஐநூறு வருடங்கள் கழித்து, ஆயிரம் முட்டைகளில் இருந்தும் ஆயிரம் மகா சக்தி வாய்ந்த நாகங்கள் தோன்றின. அவற்றில் அநந்தனும், சங்கபாலனும் வெண்மை நிறத்தோடும், வாசுகியும் பத்மனும் சிவப்பு நிறத்தோடும், மஹாபத்மனும் தட்சகனும் மஞ்சள் நிறத்தோடும், கார்க்கோடகனும் குளிகனும் கறுப்பு நிறத்தோடும் பிறந்தனர்.

    தன் சகோதரிக்கு ஆயிரம் குழந்தைகள் பிறந்தும், நமக்கு இரண்டு குழந்தைகள் இன்னும் பிறக்கவில்லையே என்ற வேதனையில் ஒரு முட்டையை உடைத்தாள் விநதை. அதில் இருந்து மேல்பாகம் நல்ல ஒளி பொருந்திய உடலோடும், கீழ்பாகம் எதுவும் வளர்ச்சி அடையாமலும் ஒரு பறவை தோன்றியது. தான் அவசரப்பட்டதை உணர்ந்த விநதை அழத்தொடங்கினாள். அப்பொழுது பாதி உடலோடு தோன்றி பறவை, தாங்கள் அவசரப்பட்டு முட்டையை உடைத்தனதால் இந்த விபரீதம் நடந்தவிட்டது. எனவே நீங்கள் யாரைக்கண்டு பொறாமைப் பட்டீர்களோ, அவருக்கு ஐநூறு ஆண்டுகள் அடிமையாகப் பணி செய்வீர்கள்.

    அதன்பிறகு இரண்டாவது முட்டையில் இருந்து தோன்றும் என் தம்பியே உங்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பான் என்று கூறியது.
    சில காலங்கள் சென்றதும், விநதை தன்னையும் தன் மகன் கருடனையும் அடிமையிலிருந்து விடுதலை செய்யும்படி கத்ருதேவியிடம் கேட்டுக்கொண்டாள்.

    அதற்கு கத்ருதேவி தேவலோகத்தில் இருக்கும் அமிர்தத்தை சன்மானமாகக் கொடுத்தால் விடுதலை செய்கிறேன் என்று சொன்னாள். உடனே கருடன் தன் தாயின் அருளாணையால் அமிர்த கலசத்தை கொண்டுவர தேவலோகம் சென்றான்.

    தேவர்களுக்கும், கருடனுக்கும் நடந்த போரில் கருடன் தேவர்களை வீழ்த்திவிட்டு அமிர்த கலசத்தைக் கொண்டு வரும் வேளையில் மகா விஷ்ணு தேவர்களின் வேண்டுகோளின்படி கருடனை தாக்க முனைந்தார். கருடனுடன் ஸ்ரீமந்நாராயணன் வெற்றி தோல்வி இன்றி சரிசமமாக 21 நாட்கள் போர் செய்தார் கருடனைத் தோற்கடிக்க மகாவிஷ்ணுவால் முடியவில்லை.

    காசியபரிடம் கருடன் கற்ற போர் வித்தைகளினால் பெருமானை எதிர்த்து, அவருக்கு சரிசமமாக போர் செய்தான் 21 நாட்கள். இது கருடனின் அபார வலிமையை குறிக்கிறது. மேலும் கருடனின் மாத்ருபக்தியும், மாதுர்வாக்ய பரிபாலனமும் அவனுக்கு அளவற்ற ஆற்றலை அளித்தது. 21-ம் நாள் கழித்து கருடனுக்கு ஓர் சிந்தனை தோன்றியது. மகா விஷ்ணுவே நம்மை எதிர்த்து வெற்றி பெற முடியவில்லை. இந்த சிந்தனை எப்போது கருடனுக்கு தோன்றும் என்பதற்காக காத்திருந்த பெருமான் ஸ்ரீமந் நாராயணமூர்த்தி போரை நிறுத்திவிட்டு கருடனின் தாய் பக்தியை பாராட்டினார்.

    மேலும் “கருடா உமக்கு என்ன வேண்டும் வரம் கேள் அளிக்கிறேன்” என்றார். அதற்கு கருடன் கர்வம் கொண்டு, “நீர் வேண்டுமானால் என்னிடம் வரம் கேள் தருகிறேன்” என்றான். உடனே பகவான் “வாக்கு தவறக்கூடாது” என்று சத்தியம் வாங்கி கொண்டு, “கருடா நீ எனக்கு வாகனமாக இருந்து சேவை செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

    கருடனின் கர்வம் ஒழிந்தது! ஞானம் பிறந்தது. “அமிர்த கலசத்தை தாயிடம் சேர்ப்பித்துவிட்டு பிறகு வந்து உமது வாகனமாகி சேவை புரிகிறேன் என்று விஷ்ணுவிடம் அனுமதி பெற்று தாயிடம் அமிர்தத்தை சேர்ப்பித்தான். அதை கருடனின் தாய் விநதை, கத்ருதேவியிடம் கொடுத்து அடிமையிலிருந்து விடுவித்து கொண்டாள். பிறகு கருடன் விஷ்ணு வாகனம் ஆனார்!
    கல்வியில் ஏற்படும் தடைகள், தோல்விகள், விலகி, வெற்றி கிடைக்க புதன்கிழமையிலும், நவமி, பஞ்சமி திதிகளில், ஜென்ம நட்சத்திரத்தில் கருட வழிபாடு செய்யவும்.
    கல்வியில் ஏற்படும் தடைகள், தோல்விகள், விலகி, வெற்றி கிடைக்க புதன்கிழமையிலும், நவமி, பஞ்சமி திதிகளில், ஜென்ம நட்சத்திரத்தில் கருட வழிபாடு செய்யவும். பூர்வ சாபதோஷங்களை நிவர்த்தி செய்வது தொடர்ந்து பஞ்சமி திதி கருட வழிபாடு ஆகும். குறிப்பாக சர்ப்ப, விஷ ஜந்துக்களின் சாப, தோஷங்கள், துறவிகள் சாபத்திற்கு விமோசனம் கருட வழிபாட்டில் கிட்டும். துறவிகளின் அதிதெய்வம் கருடன் ஆகும்.

    ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்படும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் கருட வழிபாடு நல்லதோர் தீர்வைப் பெற்றுத் தரும் பக்தியும், சிரத்தையும், பூரண நம்பிக்கையும் தான் முக்கியம்.
    காஞ்சீபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் கருடசேவைத் திருவிழா நடைபெறுகிறது.
    காஞ்சீபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் கருடசேவைத் திருவிழா நடைபெறுகிறது. வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் ஆண்டிற்கு மூன்று முறை கருடோற்சவம் நடைபெறுகிறது.

    அவை வைகாசி மாதம் நடைபெறும். பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் கருடசேவையும், ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் கூடிய பெரியாழ்வாரின் சாற்று முறையன்று நடைபெறும் கருடசேவையும், ஆடி மாதம் பவுர்ணமி அன்று நடைபெறும் கஜேந்திர மோட்ச கருடசேவையும் ஆகும். இவற்றில் வைகாசி மாதம் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் கருடசேவைதான் சிறப்பானது. அதிகாலை நான்கு மணிக்கே அத்திகிரி வரதனின் ஆலயக் கதவுகள் திறக்கப்பெற்று கருட சேவையைத் தரிசிக்கலாம்.

    தங்கக் கருடனின் மீது சிறப்பான அலங்காரத்துடன் பெருமாள் எழுந்தருளி ஒரு மணி நேரம் மண்டபத்தில் கருடசேவை சாதிக்கும் பெருமாள் ஐந்து மணிக்கு ஆலயத்தில் உள்ள ஒவ்வொரு சந்நிதியிலும் எழுந்தருளுகிறார்.

    அரைமணி நேரத்திற்கெல்லாம் எல்லா சந்நிதிகளிலும் எழுந்தருளியதும் கோபுரவாயில் நோக்கி பெருமாளை சுமந்து செல்கின்றனர். தங்கக் கருடனின் மீதமர்ந்த பெருமாளைத் தூக்கி வரும் அன்பர்கள் கருடன் தன் இறக்கைகளை அசைத்து பறப்பதுபோல் அசைத்து அசைத்து தூக்கி வருகிறார்கள். பெருமாளின் கருடசேவை கோபுர வாயிலை அடைகிறது.

    அதுவரை பட்டர் ஒருவர்தான் நேராகப் பிடித்திருந்த குடையைச் சற்றே சாய்த்துப் பிடிக்கிறார். இது தொட்டையாசாரியார் சேவை எனப்படும். அதன் வரலாறு. சோளிங்கபுரத்தில் தொட்டையாசாரியார் என்ற பெயர் கொண்ட வைணவப் பெரியார் ஒருவர் இருந்தார். அவர் காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார். அவர் இந்தப் பெருமாளின் கருடோற்சவத்தைப் போற்றி சுலோக பஞ்சகம் ஒன்று எழுதியவர்.

    ஒவ்வொரு ஆண்டும் அவர் தவறாமல் காஞ்சீபுரம் வந்து கருடோற்சவத்தைக் கண்டு தரிசிப்பார். ஒரு வருடம் அவரால் இயலாமை காரணமாக கருடசேவையைத் தரிசனம் செய்ய காஞ்சீபுரம் வரமுடியவில்லை.

    கருடசேவை அன்று அதிகாலையில் சோளிங்கர் மலையபுரத்தில் இருந்த தக்கான் குளத்தில் நீராடி பெருமாளை வணங்கிய இவர் கருடோற்சவத்தைக் காண இயலவில்லை என்று ஏங்கினார். பெருமாள் தன் கருடசேவைக் காட்சியை அவர் இருந்த இடத்திலேயே அருளினார். இதனால்தான் குடையை சாய்த்துப் பிடிக்கிறார்கள்.
    ×