search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜமவுலி"

    ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் பிரியாமணி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #RRR #Priyamani
    ராஜமவுலி திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள், கதாநாயகனுக்கு சமமாக பேசப்படுவார்கள். தற்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் ஆர்ஆர்ஆர் படத்திற்கு இதுவரை நாயகி மற்றும் மற்ற நடிகர் பற்றிய அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

    இந்நிலையில், தற்போது நடிகை பிரியாமணி, ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக நடிப்பது யார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், பிரியாமணி நடிப்பது உறுதியாகியிருக்கிறது.



    இவர் நாயகியாகவா அல்லது மற்ற கதாபாத்திரமா என்பது முறையான அறிவிப்புக்குப் பின்னரே தெரிய வரும். கடந்த 2007-ஆம் ஆண்டு ஜூனியர் என்டிஆரை வைத்து ராஜமவுலி இயக்கிய ‘எமடோன்கா’ என்ற தெலுங்கு படத்தில் பிரியாமணி நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #RRR #Priyamani

    இயக்குநர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்ட சசிகுமார் அடுத்ததாக வரலாற்று படமொன்றை இயக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், விஜய்யை வைத்து அந்த படத்தை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Vijay #Sasikumar
    நடிகர் சசிகுமார் சமீபத்தில் இயக்குனர் ராஜமவுலியை சந்தித்திருந்தார். சசிகுமார் ஒரு வரலாற்று திரைப்படம் எடுக்க திட்டமிட்டுள்ளார். வரலாற்று திரைப்படங்கள் எடுப்பதில் கைதேர்ந்தவர் ராஜமவுலி என்பதால், சமீபத்தில் அவரை சந்தித்து ஆலோசனை பெற்றுள்ளார். சமீபத்தில் இருவரும் சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை, சசிகுமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

    ராஜமவுலி இயக்கத்தில் சசிகுமார் நடிக்க இருப்பதாக வதந்திகள் வந்த நிலையில், சசிகுமார் இயக்கவிருக்கும் படத்திற்காக ராஜமவுலியை சந்தித்தது தெரியவந்தது. அந்த படத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.



    சில ஆண்டுகளுக்கு முன்பு சசிகுமார், விஜய்யிடம் ஒரு வரலாற்று திரைப்படக் கதையை சொன்னபோது அவர் மிகவும் ரசித்து நிச்சயம் பண்ணலாம் என சொல்லியிருக்கிறார். இதை சசிகுமாரே ஒரு பேட்டியில் கூறி இருந்தார். எனவே சசிகுமார் இயக்கத்தில் வரலாற்று படத்தில் விஜய் நடிக்கிறார் என்பதை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

    விஜய் தற்போது ஏ.ஆர்.முருகாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். விஜய் அடுத்ததாக அட்லியுடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் சசிகுமார் இயக்கத்தில் நடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். #Vijay #Sasikumar

    பாகுபலி இரண்டு பாகங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து சிவகாமி, கட்டப்பா கதாபாத்திரங்களின் முன்கதையை இணைய தொடராக பிரமாண்டமாக இயக்கும் முயற்சியில் ராஜமவுலி இறங்கியுள்ளார். #Baahubali3 #Rajamouli
    பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்கும் உலக அளவில் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, ராஜமவுலி இயக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜுனியர் என்.டி.ஆரையும் ராம்சரணையும் இணைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.

    அதற்கு முன்பு தற்போது அவர் பாகுபலி படத்தில் இடம்பெற்ற சிவகாமி, கட்டப்பா கதாபாத்திரங்களின் முன்கதையை இணைய தொடராக பிரமாண்டமாக இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

    கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆனந்த் நீலகண்டன் எழுதிய ‘தி ரைஸ் ஆஃப் சிவகாமி’ புத்தகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் புத்தகத்தை தழுவி ராஜமவுலி மூன்று பாகங்களாக தொடரை இயக்க உள்ளார்.



    நெட் பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ள இந்தத் தொடருக்கு, ஒரு எபிசோடு தயாரிக்க 20 மில்லியன் டாலர்கள் வரை செலவாகும். லக்னோவில் நடைபெற்றுவரும் இதன் படப்பிடிப்பில் சஞ்சய் தத், மனிஷா கொய்ராலா இணைந்து நடித்து வருகின்றனர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி இணைந்து நடிக்கிறார்கள். #Baahubali3 #Rajamouli

    மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’, மற்றும் தற்போது உருவாகி ‘செக்கச்சிவந்த வானம்’ ஆகிய படங்களில் நடித்து வரும் அதிதி ராவ், ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க ஆசை இருப்பதாக கூறியிருக்கிறார். #AditiRao
    நடிகை அதிதி ராவ் தமிழில் 2007ஆம் ஆண்டு ‘சிருங்காரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின் பாலிவுட் படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தார்.

    மீண்டும் பத்து வருட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் நல்ல அறிமுகம் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார்.

    கடந்த ஜூன் 15ஆம் தேதி வெளியான ‘சம்மோஹனம்’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகியுள்ளார் அதிதி. அப்படத்தில் அவரது நடிப்பை இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட பலரும் பாராட்டியிருந்தனர்.

    இந்நிலையில் தனது ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அதிதி ராவ் ராஜமவுலியின் பாராட்டு குறித்து கூறுகையில், “அவரது பாராட்டு காவிய கதை சொல்லின. அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தையும் தூண்டிவிட்டுள்ளது.



    ஏற்கனவே மணிரத்னம், சஞ்சய் லீலா பன்சாலி எனப் பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ள எனக்கு ராஜமவுலி படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவும், விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
    நடிகையர் திலகம் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். #Rajamouli #KeerthySuresh
    இயக்குனர் ராஜமவுலியின் படத்தில் தலைகாட்ட ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று கதாநாயகிகள் தவம் கிடக்கும் நிலையில் அவர் படத்தில் கதாநாயகியாகவே நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேசுக்கு கிடைத்து இருக்கிறது.

    அண்மையில் வெளியான நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படத்தில் கீர்த்தி சுரேசின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆனால் முதலில் பாராட்டியவர் இயக்குனர் ராஜமவுலி தான். அப்போதே ராஜமவுலி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என தகவல் வந்தது. அது உறுதியாகி இருக்கிறது. ராஜமவுலி அடுத்து தெலுங்கு முன்னணி நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரை வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். 

    இதில் இரண்டில் ஒரு ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் கேட்டுள்ளனர். இது தொடர்பாக கீர்த்தியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். ராம் சரண், ஜூனியர் என். டி.ஆரில் யாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. 

    படத்திற்கு தற்போது ஆர்ஆர்ஆர் என்று பெயர் வைத்துள்ளனர். ஆர்.ஆர்.ஆர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் துவங்கி, படம் 2020-ம் ஆண்டு ரிலீசாகும். #Rajamouli #KeerthySuresh
    பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாக இருக்கும் `ஆர்ஆர்ஆர்' படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #RRR #KeerthySuresh
    நடிகையர் திலகம் படத்திற்காக பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அண்மையில் வேறு எந்த தென்னிந்திய நடிகையும் இந்த அளவுக்கு பாராட்டுகளை பெற்றது கிடையாது. கீர்த்தி சுரேசின் நடிப்பை முதலில் பாராட்டியவர் எஸ் எஸ் ராஜமவுலி. 

    இப்போது தான் இயக்கவிருக்கும் படத்திலும் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜமவுலி அடுத்து ஜூனியர் என்.டிஆரையும், ராம்சரணையும் இணைத்து வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். 



    கடந்த ஞாயிறு இரவு நடிகர் அல்லு அரவிந்த் கொடுத்த இரவு விருந்து ஒன்றில் ராஜமவுலியும், கீர்த்தி சுரேஷும் சந்தித்துள்ளனர். அப்போது இதுகுறித்து பேசியுள்ளனர். கீர்த்தி சுரேஷ் இப்போது தமிழில் விஜய்யுடன் ஒரு படமும், விஷாலுடன் சண்டக்கோழி 2 படத்திலும், விக்ரமுடன் சாமி 2 படத்திலும் நடித்து வருகிறார். எனவே விரைவில் ராஜமவுலி படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. #RRR #KeerthySuresh
    ×