search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி"

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் முடிவாகி உள்ளது. ராகுல்காந்தியுடன், கனிமொழி மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது. #ParliamentElection #DMK #Congress
    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் முடிவாகி உள்ளது. ராகுல்காந்தியுடன், கனிமொழி மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னையில் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) வெளியிடுகிறார்.

    அ.தி.மு.க.வை தொடர்ந்து, தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி, தொகுதி பங்கீடு விவரங்களை அறிவிக்க இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது.

    தேசிய கட்சியான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்று இறுதி முடிவு எடுப்பதற்காக, டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், கனிமொழி எம்.பி. நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கிய, தொகுதி பங்கீடு, தொகுதிகள் குறித்த செயல் திட்டம் பற்றி கனிமொழி விளக்கி கூறினார். இந்தநிலையில் மீண்டும் ராகுல்காந்தியை கனிமொழி எம்.பி. சந்தித்து பேசினார். நேற்று மாலை 5 மணி தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 7 மணிவரை நீடித்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் என 10 தொகுதிகள் வழங்கப்பட இருக்கிறது.

    முன்னதாக, தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினர்.

    டெல்லியில் ராகுல்காந்தியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விவரங்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பதற்காக கனிமொழி எம்.பி. நேற்று இரவு உடனடியாக சென்னை புறப்பட்டார். தி.மு.க. கூட்டணியில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இன்று (புதன்கிழமை) சென்னை வந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளனர். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் 10 இடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். தொகுதி பங்கீடுக்கான விவரமும் வெளியிடப்படுகிறது. 
    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் ராகுல்காந்தி, கனிமொழி டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர். #ParliamentElection #DMK #Congress
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை தமிழகத்தில் தி.மு.க.வுடன் இணைந்து காங்கிரஸ் சந்திக்க உள்ளது. தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது.



    இந்தநிலையில், காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்று இறுதி முடிவு எடுக்க டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், கனிமொழி எம்.பி. சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் கூட்டணி குறித்து நீண்ட நேர விவாதம் நடந்தது. அப்போது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கிய, தொகுதி பங்கீடு, தொகுதிகள் குறித்த செயல் திட்டம் பற்றி கனிமொழி விளக்கி கூறினார்.

    இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடந்தது. தி.மு.க. 25 இடங்களில் போட்டியிட உள்ளது. மீதம் உள்ள 15 இடங்களில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்கள் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகள் வரை பெறுவதிலேயே குறியாக இருந்தது. தற்போது காங்கிரஸ் தாங்கள் கேட்ட தொகுதிகளில் இருந்து இறங்கி வந்துள்ளது. ஆனாலும் இரட்டை இலக்க தொகுதிகளை பெறுவதில் தான் ஆர்வம் காட்டி வருகிறது. 10-க்கு மேல் ஓரிரு இடங்களையாவது பெற வேண்டும் என்பதில் முனைப்பு காட்டுகிறது.

    ராகுல்காந்தி-கனிமொழி சந்திப்பில் தி.மு.க-காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து மட்டும் பேசப்பட்டது. மற்ற கூட்டணி கட்சிகளின் இடங்கள் குறித்து பேசப்படவில்லை.

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து கனிமொழி மீண்டும் ராகுல்காந்தியை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கான தொகுதிகள், இடங்கள் உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. இதைத்தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் தொகுதிகள் உறுதி செய்யப்பட இருக்கிறது.

    தி.மு.க-காங்கிரஸ் தொகுதி பங்கீடு உறுதியான பிறகு, டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் சென்னை வந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர். அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. #ParliamentElection #DMK #Congress

    அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. சார்பில் பங்கேற்பதற்காக கனிமொழி மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர். #PulwamaAttack #AllPartyMeet #DMK #Kanimozhi #TRBaalu
    சென்னை:

    காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனம் மீது, பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன் வெடிகுண்டு நிரப்பிய காரை மோதினான். இந்த குண்டு வெடிப்பு விபத்தில் 40 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர்.

    இந்த கொடூர செயலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறி இருக்கிறார்கள்.



    இந்த நிலையில், வெடிகுண்டு சம்பவம் குறித்து ஆலோசிக்க டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.

    டெல்லியில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி., டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. எனவே, நேற்று மாலை, தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அங்கு சென்ற கனிமொழி அதே விமானத்தில் சென்னை திரும்பினார்.

    இது போல் திரிசூலம், பொழிச்சலூர் பகுதியில் நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க இருந்த டி.ஆர்.பாலு அந்த கூட்டங்களை ரத்து செய்து விட்டு சென்னை விமான நிலையம் வந்தார். பின்னர் இருவரும் டெல்லி புறப்பட்டு சென்றனர். #PulwamaAttack #AllPartyMeet #DMK #Kanimozhi #TRBaalu
    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிடுவார் என்று கீதாஜீவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். #Kanimozhi #DMK

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

    எந்த கட்சி எந்த கூட்டணியில் சேரும் என்பது இன்னும் முடிவாகாத நிலையில் தலைவர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமத்தை தத்தெடுத்து அங்கு எம்.பி. தொகுதி நிதியின் கீழ் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டார்.

    மேலும் அவர் அடிக்கடி தூத்துக்குடி சென்று கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து வந்தார். கிராம சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார். இதன் மூலம் அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.

     


    இப்போது கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறி கீதாஜீவன் எம்.எல்.ஏ. உறுதிப்படுத்தியுள்ளார். கோவில்பட்டி அருகே இலுப்பையூரணியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கீதாஜீவன் பேசுகையில் இந்த தகவலை வெளியிட்டார். அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கனிமொழி எம்.பி. போட்டியிட உள்ளார். கனிமொழி 10 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்து வருகிறார். ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர். இங்குள்ள பிரச்சினைகளை நன்கு அறிந்தவர். இந்த தொகுதியில் அவர் வெற்றி பெற்று நிச்சயமாக மத்திய மந்திரியாக பதவியேற்பார். அதன்பிறகு தூத்துக்குடி மாவட்டத்திற்கு அதிக வளர்ச்சி திட்டங்கள் வரும். மக்களின் குறைகள் அனைத்து நிவர்த்தி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kanimozhi #DMK

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தற்போது பா.ஜனதா அரசை புரிந்து கொண்டுள்ளதாக கனிமொழி கூறியுள்ளார். #Thambidurai #ADMK #BJP #kanimozhi #DMK
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் இருக்கும் பா.ஜனதா அரசு தனக்கு எதிராக குரல் கொடுக்கும் பா.ஜனதா அல்லாத மாநில அரசுகளில் சி.பி.ஐ.யை ஏவி பிரச்சினை கொடுத்து வருகிறது.

    அப்படித்தான் மேற்கு வங்காளத்திலும் செய்து வருகிறது. அதற்கு எதிராக மம்தா பானர்ஜி குரல் கொடுத்து வருகிறார். இது பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும். எதிர்க்கட்சிகளும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவிக்கும்.



    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தற்போது பா.ஜனதா அரசை புரிந்து கொண்டு தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என்று சொல்லி இருக்கிறார். தற்போது பா.ஜனதாவை ஒருவர் புரிந்து கொண்டார். இதேபோல் அவருடன் இருக்கும் ஒவ்வொரு வரும் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #ADMK #BJP #kanimozhi #DMK
    ஜெயலலிதாவின் மரணத்துக்கும் கொடநாடு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார். #kodanad #Kanimozhi #DMK
    கோவில்பட்டி :

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் மண்டபத்தில் தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    ஏழை-எளிய ஒடுக்கப்பட்ட மக்களும் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதற்காகத்தான் தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் போராடி வெற்றி கண்டனர். ஆனால் தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டதால், இடஒதுக்கீடே வீணாகக்கூடிய நிலை உள்ளது.

    தமிழக மாணவர்கள் மருத்துவ கல்வி பயில வேண்டும் என்பதற்காக கலைஞர் கருணாநிதி மாவட்டந்தோறும் அரசு மருத்துவ கல்லூரியை தொடங்கினார். ஆனால் மருத்துவ கல்வி பயில நீட் தேர்வை கட்டாயமாக்கியதால், தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் நமது மாணவர்கள் பயில்வதற்கு பதிலாக, வெளிமாநில மாணவர்கள் பயிலும் அவலநிலை உள்ளது. தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை முற்றிலும் மத்திய அரசு சிதைத்து விட்டது.



    ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே கொடநாட்டில் இருந்த ஆவணங்கள், பொருட்களை திருடுவதற்காக கொள்ளை முயற்சி நடந்தது. கொடநாட்டில் நடந்த 5 கொலைகளுக்கும், திருட்டுக்கும், ஜெயலலிதாவின் மரணத்துக்கும் தொடர்பு இருக்கிறது.

    இது மக்களிடம் போய் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க. அரசு அனைத்து ஊடகங்களையும் மிரட்டி வருகிறது. இதனை நாம் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கு இப்போது இருந்தே பிரசாரத்தை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #kodanad #Kanimozhi #DMK
    காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்காவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Congress #PriyakaGandhi #DMK #MKStalin
    சென்னை:

    காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்காவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் தீவிர அரசியலில் இணைந்துள்ள பிரியங்கா காந்திக்கு எனது வாழ்த்துக்கள், அவரது புதிய அவதாரம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


    இதேபோல் தி.மு.க. எம்.பி. கனிமொழியும் பிரியங்காவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் “கிழக்கு உத்தரபிரதேச காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்திக்கு வாழ்த்துக்கள்”, அவரது பணி சிறக்க வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். #Congress #PriyakaGandhi #DMK #MKStalin
    அஜித் எடுத்திருப்பது நல்ல முடிவு. அவருக்கு என் வாழ்த்துக்கள் என்று தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. கூறினார். #Kanimozhi #Ajith
    தூத்துக்குடி:

    தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என தி.மு.க. தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் கூட்டம் நடைபெற்றது வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 18-ந் தேதி முதல் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இதில் அக்கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டு வருகிறார். ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பேட்மாநகரம், பேரூர், முக்காணி, பழையகாயல் பகுதிகளில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    முத்தலாக் சட்டத்தில் ஆண்களுக்கு 3 ஆண்டு சிறை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் பாதிக்கப்படுபவர்களின் குழந்தைகளை யார் கவனிப்பார்கள்?. எனவே முத்தலாக் சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்த சட்டத்தை எதிர்ப்போம். கொடநாடு விவகாரத்தில் வக்கீல்கள் யாருக்காக வேண்டுமானாலும் ஆஜராகலாம். ஜாமீன் எடுக்கலாம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் புகைப்படம் யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். அதை வைத்து ஆஜராகக்கூடாது என எப்படி சொல்ல முடியும்.

    தலைமை செயலகத்தில் ஓ. பன்னீர்செல்வம் யாகம் வளர்த்தது தவறு தான். தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியின்போது கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தற்போது குறைந்துகொண்டே வருகிறது. மத்திய-மாநில அரசுகள் 40 நாட்கள் கூட வேலை கொடுப்பதில்லை. சரியான ஊதியம் வழங்கப்படுவதில்லை.

    சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் இன்று தமிழகத்திற்கு எத்தனையோ நல்ல திட்டங்கள், தொழில் வளங்கள் வந்திருக்கும். மீனவர்களுக்கு பாதுகாப்பாக அமைந்திருக்கும். மத்திய-மாநில ஆட்சிகள் இத்திட்டத்தை நிறுத்தக்கூடிய சூழலை உருவாக்கியிருக்கிறார்கள்.

    பெரியார் கோவிலுக்குள் செல்லமாட்டார். ஆனால் அனைவரும் கோவிலுக்குள் செல்ல போராடியவர். கோவிலுக்குள் அனைவரும் செல்ல வேண்டும் என போராடியது தி.மு.க. ஆனால் போகக்கூடாது என சொல்வது பா.ஜ.க.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் கனிமொழி எம்.பி.யிடம் நடிகர் அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து கேட்டனர். அதற்கு அவர் அஜித் எடுத்திருப்பது நல்ல முடிவு. அவருக்கு என் வாழ்த்துக்கள் என்று கூறினார். #Kanimozhi #Ajith
    அரசியலுக்கு வரமாட்டேன் என்று அஜித் சொல்லியிருப்பது வரவேற்க வேண்டிய நல்ல முடிவு என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். #Ajith #AjithKumar #Kanimozhi
    சென்னை:

    நடிகர் அஜித் ரசிகர்களில் சிலர் தமிழிசை சவுந்தராஜன் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்த செய்தி பரவியது.

    இந்த செய்திக்காக தனது அரசியல் நிலைப்பாடு பற்றி அஜித் நீண்ட அறிக்கையை வெளியிட்டார். ‘அரசியலில் தனிப்பட்ட கருத்துகள், விருப்பு வெறுப்புகள் உண்டு. ரசிகர்கள் அவரவர் விருப்பப்படி அரசியலில் ஈடுபடலாம். ஆனால் அதில் என் பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தாதீர்கள். எந்த சமயத்திலும் அரசியல் பற்றி சினிமாவில் கூட நான் எதுவும் பேசியதில்லை’ என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


    இதுபற்றி தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கனிமொழி எம்.பி.யிடம் கேட்டபோது, ‘அஜித் சிறந்த நடிகர். அவருடைய அரசியல் பற்றிய கருத்துக்கு நன்றி. அரசியலுக்கு வரமாட்டேன் என்று அஜித் சொல்லியிருப்பது வரவேற்க வேண்டிய நல்ல முடிவு’ என்று கூறினார். #Ajith #AjithKumar #Kanimozhi
    பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிடுவது தொடர்பாக கட்சி தலைமை எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவேன் என்று கனிமொழி எம்.பி. கூறினார். #DMK #Kanimozhi
    தூத்துக்குடி:

    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் கிராம ஊராட்சிகள்தோறும், ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாநில நிர்வாகி ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    தூத்துக்குடி மாவட்டத்துக்கு பொறுப்பாளராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். முதல் நிகழ்ச்சியாக அவர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குச்சாலையில் குளத்தூர் ரோட்டில் உள்ள மைதானத்தில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். 4 வழிச்சாலையில் மேம்பாலம் வேண்டும். குடிநீர் வசதி, பேருந்து வசதி வேண்டும். நூலகத்துக்கு புத்தகம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர் கனிமொழி எம்பி. பேசியதாவது:‍-

    அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியவில்லை. தேர்தல் நடத்தினால் வெற்றி பெற முடியாது என்பதாலேயே அ.தி.மு.க. அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.

    விரைவில் தி.மு.க. ஆட்சிக்கு வரும். இங்கே மக்கள் தெரிவித்த குறைகள் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தீர்க்கப்படும்.

    டாஸ்மாக் கடை இல்லாத தமிழகத்தை உருவாக்க முயற்சிகளை எடுப்போம். விரைவில் தேர்தல் வரும். பாராளுமன்ற தேர்தலும், சில நேரத்தில் சட்டமன்ற தேர்தலும் சேர்ந்து வந்தாலும் வரும். நமக்கு நல்லவழி கிடைப்பதற்கு அதுதான் வழியாக இருக்கும். தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வரும். மத்தியிலும் ஆட்சி மாற்றம் வரும். நீங்கள் வைத்து இருக்கும் அத்தனை கோரிக்கைகளையும் நிச்சயமாக விரைவில் நிறைவேற்றி தருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நிருபர் களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேருவதற்கான அத்தனை வாய்ப்பும் இருக்கிறது. இதனால் தான் அ.தி.மு.க. முன்னேறியவர்களுக்கான 10 சதவீதம் இடஒதுக்கீட்டை எதிர்த்து வாக்களிக்கவில்லை. இது அவர்கள் கூட்டணியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமில்லை, தமிழ்நாடே இந்த ஆட்சி கலைய வேண்டும் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது.

    டாஸ்மாக் கடையை பொறுத்தவரை ஒரு கார்பரேட் நிறுவனம் போன்று அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் நான் தூத்துக்குடியில் போட்டியிடுவது தொடர்பாக தி.மு.க. தலைவரிடம்தான் கேட்க வேண்டும். கட்சியின் தலைவர் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கனிமொழி எம்.பி. இன்று கோவில்பட்டியில் நகர தி.மு.க. சார்பில் நடைபெற்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

    மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட உள்ளதாக தகவல் பரவிவரும் நிலையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 12 நாட்கள் கனிமொழி முகாமிட்டு, மக்களை சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  #DMK #Kanimozhi
    மத்தியிலும், மாநிலத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று தூத்துக்குடி அருகே நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். #Kanimozhi #DMK
    தூத்துக்குடி :

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குச்சாலையில் குளத்தூர் ரோட்டில் உள்ள மைதானத்தில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று மாலை நடந்தது. வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    மக்கள் அடிப்படை வசதிகள், பள்ளிக்கூடம், மேம்பாலம் வசதி உள்ளிட்ட பல பிரச்சினைகளை இங்கு எடுத்து வைத்தனர். இந்த ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால், நம் பிரச்சினைகளை எடுத்து சொல்லக்கூடிய அளவில் தலைவர்கள் இருந்து இருப்பார்கள். அவர்கள் அந்த பிரச்சினைகளை சரிசெய்து தந்து இருக்க முடியும். ஆனால் அ.தி.மு.க. அரசு தேர்தல் வைத்தால் வெற்றிபெற மாட்டோம் என்று தெரிந்து, தேர்தல் நடத்துவது இல்லை.



    இந்த அரசாங்கம் மக்களை பற்றி, மக்கள் பிரச்சினை பற்றி கவலைப்படக்கூடிய அரசாங்கமாக இல்லை. விரைவில் தேர்தல் வரும். பாராளுமன்ற தேர்தலும், சில நேரத்தில் சட்டமன்ற தேர்தலும் சேர்ந்து வந்தாலும் வரும். நமக்கு நல்லவழி கிடைப்பதற்கு அதுதான் வழியாக இருக்கும். தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வரும். மத்தியிலும் ஆட்சி மாற்றம் வரும். நீங்கள் வைத்து இருக்கும் அத்தனை கோரிக்கைகளையும் நிச்சயமாக விரைவில் நிறைவேற்றி தருவோம்.

    தேர்தல் வரும் போது நமக்கு நல்லதை செய்யக்கூடிய ஆட்சி எது, யாருடைய ஆட்சி வந்தால் நல்லது நடக்கும். நியாயம் நடக்கும் என்பதை புரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும். விரைவில் தி.மு.க. ஆட்சி வரும். அப்போது அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றி தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kanimozhi #DMK
    பாராளுமன்றத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. செயல்பட்டது என்று கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினார். #DMK #Kanimozhi #ADMK #BJP
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி., டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    பொருளாதாரத்தில் பின் தங்கிய பொது பிரிவினருக்கு 10 சதவீத இடம் ஒதுக்கீடு செய்து மத்திய பா.ஜனதா அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மக்களை ஏமாற்றுவதற்காக இதை செய்துள்ளனர்.

    இந்த இடஒதுக்கீட்டை தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இதுபற்றிய கருத்தை பதிவு செய்துள்ளார். பாராளுமன்றத்திலும் தி.மு.க. இதை எதிர்த்து ஓட்டு போட்டுள்ளது.

    அ.தி.மு.க.வும் இந்த சட்டத்தை எதிர்ப்பது போல பேசினார்கள். ஆனால் அது வெறும் நடிப்பு. அ.தி.மு.க. எம்.பி.க்கள் எதிர்த்து ஓட்டுப் போடவில்லை. பா.ஜனதா ஆணைப்படி அவர்கள் வெளிநடப்பு செய்து விட்டனர்.

    இதன்மூலம் பா.ஜனதாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. செயல்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. இந்த சட்ட மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.

    பொது பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆண்டு வருமானம் 8 லட்சம் இருக்கலாம் என்று நிர்ணயித்து இருக்கிறார்கள். நாட்டில் மற்ற பிரிவில் 97 சதவீதம் பேர் குறைந்த வருமானம் உள்ளவர்கள்தான். அவர்களுக்கு என்ன நியாயம்?

    மத்திய பா.ஜனதா அரசு இந்துத்துவா, இந்துஸ்தான் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது. பள்ளிகளில் இந்தியை திணிக்க முயற்சி செய்து வருகிறது. இந்தியை எதிர்க்கும் திராவிட இயக்கத்துக்கு எதிராக செயல்படுகிறார்கள்.


    டி.டி.வி.தினகரன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்ததாக கூறினார்கள். அவரை விமர்சனம் செய்ய தினகரனுக்கு எந்தவித தகுதியும் இல்லை.

    இவ்வாறு கனிமொழி கூறினார்.

    டி.கே.ரங்கராஜன் கூறியதாவது:-

    கனிமொழிக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனக்கும் அவருக்கும் எந்தவித மோதலோ, கருத்து வேறுபாடோ இல்லை.

    10 சதவீத இடஒதுக்கீடு பிரச்சனையில், அகில இந்திய கட்சி என்ற அளவில் சில மாநிலங்களை கருத்தில் கொண்டு ஆதரவாக ஓட்டு போடும் நிலை ஏற்பட்டது. ஆனால் சட்ட மசோதாவை ஆதரித்து பேசவில்லை. குறைகளை சுட்டிக்காட்டி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #Kanimozhi #ADMK #BJP
    ×