search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி"

    டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனிமொழி எம்.பி. டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். #FarmersProtest #Kanimozhi #PMmodi
    சென்னை:

    பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி சென்று ஏற்கனவே அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்கள். இப்போது அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் பாராளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். இதில் தமிழக விவசாயிகள் உள்ளிட்ட பலர் அரை நிர்வாணமாக ஊர்வலத்தில் கோ‌ஷம் எழுப்பியபடி சென்றனர்.

    இதுபற்றி கனிமொழி எம்.பி. டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து வருமாறு:-


    தமிழக விவசாயிகள் டெல்லி வீதியில் நிர்வாண போராட்டம் நடத்தியபோதே பிரதமர் ஓடிவந்து ஆறுதல் என்னும் ஒற்றைத்துணி கொண்டு மூடி மறைக்காததன் விளைவு இன்று இந்திய அளவில் 5 லட்சம் விவசாயிகள் நிர்வாண ஊர்வலத்தில் வந்து நிற்கின்றது.

    விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுகின்றது.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.  #FarmersProtest #Kanimozhi #PMModi
    தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலை நடத்தும் தைரியம் ஆட்சியாளர்களுக்கு இல்லை என்று கருங்கல் பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார். #kanimozhi #dmk #byelection

    கருங்கல்:

    தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி குமரி மாவட்டத்தில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    கருங்கல்லில் இரவு நடந்த தி.மு.க. அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தமிழக மக்கள் இன்று பல்வேறு சோதனைகளை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். மத்தியில் ஓரு மதவாத அரசு, மாநிலத்தில் ஒரு மக்கள் விரோ ஆட்சி. மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி மீண்டும்ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என நினைத்து பல்வேறு செயல்திட்டங்களை வகுத்து செயல்பட்டு கொண்டிருக்கிறது பாரதீய ஜனதா. அதற்கு ஊதுகுழலாக தமிழக அரசும் ஜால்ரா போடுகிறது. இவர்களுக்கு மக்களை பற்றி எந்த அக்கறையும் கிடையாது.

    ஆட்சியை பிடிப்பதிலும், இருக்கும் ஆட்சியை தக்கவைப்பதை பற்றியும் மட்டுமே அவர்கள் சிந்தித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் கலைஞரின் தலைமையில் இருந்த அரசு மக்களுக்காக பல்வேறு செயல்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியது. அதேபோல மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலனுக்கான பல திட்டங்களை செயல்படுத்துவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத அரசு விரைவில் அகற்றப்படும். 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் என உறுதியாக கூற முடியாது. அதனை நடத்தும் தைரியம் ஆட்சியாளர்களுக்கு இல்லை. பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. அப்போது உங்களுக்காக பணியாற்ற தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் வர்த்தகர் அணி மாவட்ட துணை தலைவர் சத்தியராஜ், கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் டி.பி.ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #kanimozhi #dmk #byelection

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சந்திப்பு பா.ஜனதாவை பதட்டம் அடைய வைத்துள்ளது என்று கனிமொழி எம்பி கருத்து தெரிவித்துள்ளார். #Kanimozhi #DMK #MKStalin #BJP
    சென்னை:

    பா.ஜனதாவுக்கு எதிராக புதிய கூட்டணி அமைக்க ஆந்திர முதல்-மந்திரி சந்திபாபு நாயுடு தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.

    இதற்காக டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இதனைதொடர்ந்து ஒவ்வொரு மாநிலமாக சென்று பா.ஜனதா அல்லாத கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் சென்று மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவே கவுடாவை சந்தித்தார்.சென்னையில் நேற்று மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு சந்தித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.




    இந்த சந்திப்பு குறித்து கனிமொழி எம்.பி. டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து வருமாறு:-

    தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபுநாயுடு முன்னெடுத்து வரும் பா.ஜனதா எதிர்ப்பு கூட்டணிக்கான முயற்சிகள் பா.ஜனதாவை பதட்டம் அடைய வைத்துள்ளது. இந்தியாவின் மதசார்பற்ற தன்மையை பாதுகாக்க வேண்டியது காலத்தின் தேவை.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளதை போல, மதவாத பா.ஜனதாவையும், ஊழல் அ.தி.மு.க.வையும் தோற்கடித்தே தீர வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும்.

    இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார். #Kanimozhi #DMK #MKStalin #BJP


    திமு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் கசிந்துள்ளன. #DMK #ParliamentElection
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது.

    தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் நடக்க வாய்ப்பு இருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். எனவே பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலையும் சந்திக்க தி.மு.க. தயாராகி வருகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி, புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை தி.மு.க. நியமித்துள்ளது. இதுதவிர மொத்தம் உள்ள 65 ஆயிரம் பூத்களுக்கும் தலா 21 பேர் கொண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    கூட்டணி பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாலும், காங்கிரசுடன் கூட்டணி அமைவது உறுதி என்று கூறப்படுகிறது. கூட்டணியில் இணையும் மற்ற கட்சிகள் எவை என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த நிலையில் திமு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் கசிந்துள்ளன.

    இந்தமுறை பாராளுமன்ற தேர்தலில் கட்சியிலும், மக்களிடமும் செல்வாக்கு உள்ளவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்ய தி.மு.க. மேலிடம் முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகள் பற்றிய விவரங்கள் தெரிய வந்துள்ளன.


    தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி 2007-ம் ஆண்டு பாராளுமன்ற மேல்-சபை எம்.பி. ஆனார். தொடர்ந்து 2013-லும் மேல்-சபை எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த பதவி 2019 ஜூலை 24-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    இந்த நிலையில், நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்று தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளில் கனிமொழி ஏற்கனவே இறங்கியுள்ளார். தூத்துக்குடி அருகில் உள்ள ஒரு கிராமத்தை தத்தெடுத்து தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து வருகிறார்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்தது. போராட்டத்துக்கும் ஆதரவு அளித்தது. இதையடுத்து நடந்த கருத்துக் கணிப்பில் கனிமொழி இங்கு போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது.

    இதுதவிர தூத்துக்குடி தொகுதியில் நாடார்கள் ஓட்டு அதிகம் உள்ளது. கிறிஸ்தவர்கள் ஆதரவும் இருக்கிறது. தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள்.

    குலசேகரபட்டினத்தில் ராக்கெட் தளம் கொண்டு வரும் முயற்சியிலும் கனிமொழி இறங்கியுள்ளார். எனவே தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகள் இப்போதே தொடங்கி விட்டன என்று கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

    முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. முதன்மை செயலாளருமான டி.ஆர்.பாலு, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் மத்திய மந்திரியாக இருந்தபோது பல முக்கிய திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்.

    கத்திபாரா மேம்பாலம், கோயம்பேடு, விமானநிலைய மேம்பாலங்களும் இவருடைய முயற்சியால் கட்டப்பட்டன. இது டி.ஆர்.பாலு போட்டியிடுவதற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

    தற்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டால் தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், மதுரவாயல், அம்பத்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இவருக்கு உறுதுணையாக இருந்து தேர்தல் பணியாற்றுவார்கள். எளிதாக வெற்றி பெற முடியும். எனவே டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதி என்று சொல்லப்படுகிறது.


    ஆ.ராசா நீலகிரி தொகுதியில் வெற்றி பெற்று மத்திய மந்திரி ஆனார். மீண்டும் இதே தொகுதியில் ஆ.ராசா போட்டியிடுவார் என்று தெரிகிறது. கடந்த முறை 2ஜி வழக்கு காரணமாக இவருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

    தற்போது அந்த வழக்கில் நிரபராதி என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. எனவே துணிச்சலுடன் இந்த தொகுதியில் போட்டியிட உள்ளார். அதற்கான பணிகள் தொடங்கி விட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன் ஏற்கனவே மத்திய சென்னை பகுதியில் வெற்றி பெற்றவர். மீண்டும் இவர் இதே தொகுதியில் போட்டியிட இருப்பதாக தெரிகிறது. இந்த தொகுதியில் இப்போதே தி.மு.க.வினர் களம் இறங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் முன்பு அரக்கோணம் தொகுதியில் வெற்றி பெற்று மந்திரி ஆனார். கடந்தமுறை தொகுதி மாறி நின்றார். இந்த முறை மீண்டும் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தெரிகிறது. இதற்கு தி.மு.க. மேலிடம் அனுமதி வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

    இதுபோல் தி.மு.க.வின் பிரபலங்கள் பலர் இப்போதே தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி குறித்து கட்சியிடம் தெரிவித்து இருக்கிறார்கள். நிச்சயம் அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இப்போதே போட்டியிட விரும்பும் தொகுதிகளில் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டார்கள் என்று கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தெரிவித்தனர். #DMK #ParliamentElection
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக தேவையில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #SellurRaju #EdappadiPalaniswami
    மதுரை:

    அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு மதுரை மண்டலத்துக்கு அதிக பஸ்களை வழங்கி உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தான் பஸ் கட்டணம் குறைவு.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாய குடும்பத்தில் பிறந்தவர். யார் வேண்டுமானாலும் அவரை எளிதில் அணுகலாம். அவர் தலைவர்களின் வாரிசாக வந்தவர் அல்ல.

    அவர் மீது வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை தி.மு.க.வினர் சுமத்தி உள்ளனர். அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளதால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தி.மு.க.வினர் கூறுகிறார்கள்.


    முதல்-அமைச்சர் மீது குற்றச்சாட்டு இருந்தால், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றால் எந்த மாநிலத்திலும் முதல்- அமைச்சர் பதவியில் இருக்க முடியாது.

    அ.தி.மு.க. அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக பொய்யான குற்றச்சாட்டை தி.மு.க.வினர் கூறி வருகிறார்கள்.

    ஏற்கனவே 2ஜி முறைகேடு வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது துணைவியார் தயாளு அம்மாள், மகள் கனிமொழி, முன்னாள் மத்திய மந்திரி ராசா ஆகியோர் சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்டபோது கருணாநிதி பதவி விலகினாரா?

    நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி. அ.தி.மு.க. அரசு மீது ஊழல் குற்றச்சாட்டை கூற தி.மு.க.வினருக்கு எந்த தகுதியும் இல்லை. பொய் புகார்களை சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #SellurRaju #EdappadiPalaniswami
    பணி செய்யும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அத்துமீறல் குறித்தும் அடையாளம் காட்ட வேண்டும் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். #kanimozhi #metoo

    சென்னை:

    பணி செய்யும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அத்துமீறல் குறித்தும் அடையாளம் காட்டும் வகையில் ‘மீ டூ’ (நானும் தான்) என்ற தலைப்பில் பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.

    சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்காக ‘மீ டூ’ என்ற பெயரில் ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதுவே தற்போது டுவிட்டரில் பிரசாரமாக உருவெடுத்துள்ளது.

    பாலியல் அத்துமீறலை அம்பலப்படுத்தும் விதமாக தொடங்கிய இந்த பிரசாரம் தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பெண்களால் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

    சில வாரங்களுக்கு முன்பு இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா, படப்பிடிப்பின் போது நடிகர் நானா படேகர் தன்னிடம் அத்துமீறியதாக புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மத்திய மந்திரி அக்பர் உள்பட பலருக்கு எதிராக மீ டூ பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    அரசியல், திரை உலகம் என பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்கள் மீதும் பாலியல் புகார்கள் இப்போது வெளிஉலகுக்கு தெரியவருகிறது.

    தமிழகத்தில் பிரபல திரைப்பட பாடல் ஆசிரியரான கவிஞர் வைரமுத்து மீது பத்திரியாளர் சந்தியா மேனன் மற்றும் பாடகி சின்மயி ஆகியோர் அடுத்தடுத்து ‘மீ டு’ ஹேஸ்டேக்கில் புகார் தெரிவித்தது தற்போது பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கு டுவிட்டரில் பதில் அளித்த வைரமுத்து அறியப் பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரீகம் நாடு எங்கும் இப்போது நாகரீகமாகி வருகிறது.

    சமீப காலமாக நான் தொடர்ச்சியா அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அதில் இதுவும் ஒன்று. உண்மைக்கு புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவது இல்லை. உண்மையை காலம் சொல்லும் என்று தெரிவித்தார்.

    பாடகி சின்மயி கருத்துக்கு திரைப்பட பிரபலங்களான சமந்தா, சித்தார்த், வரலட்சுமி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ‘மீ டூ’ பிரசாரத்துக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    மீடு பிரசாரம் இன்னும் பல விவாதங்களை காண வேண்டும். இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    உண்மையை இந்த உலகுக்கு சொல்ல வேண்டும். பாலியல் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த முயற்சியை ஆதரிப்போம். முகமூடிக்கு பின் ஒளிந்திருக்கும் முகங்களை பெண்கள் அடையாளம் காட்டட்டும். பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று கூறி உள்ளார். #kanimozhi #metoo

    சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மயிலை மாங்கொல்லையில் இன்று மாலை அ.தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் கண்டன பொதுக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி.பேசுகிறார். #DMK #Kanimozhi
    சென்னை:

    சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மயிலை மாங்கொல்லையில் இன்று மாலை அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டன பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

    அனைத்து துறைகளிலும் நடைபெறும் ஊழலை கண்டித்து நடத்தப்படும் இந்த பொதுக் கூட்டத்துக்கு பகுதிச் செயலாளர் த.வேலு தலைமை தாங்குகிறார். இதில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றுகிறார்கள்.

    கூட்டத்தில் கு.க.செல்வம், எம்.கே.மோகன், குமரி விஜயகுமார், எம்.டி.ஆர். நாதன், துரை, வெல்டிங் மணி, ஐ.கென்னடி, செல்வி சவுந்தரராஜன், ராணி ரவிச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அன்பு கபாலி, ரேவதி, மலர், டில்லிராணி உள்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

    இதே போல் வருகிற 1-ந்தேதி (திங்கள்) மாலை 6 மணிக்கு தி.நகர் பஸ் நிலையம் அருகே முத்துரங்கன் சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி, ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றுகின்றனர். பகுதிச் செயலாளர்கள் ஜெ.கருணாநிதி, கே.ஏழுமலை, வட்டச் செயலாளர் உதயசூரியன், ஜானகிராமன், அசோக்நகர் சுப்பையா, லலிதாபுரம் துரை மற்றும் ஏராளமானோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். #DMK #Kanimozhi
    நிச்சயமாக எனக்கு தமிழக முதல்-அமைச்சராகும் எண்ணம் இல்லை டெல்லி அரசியலே போதும் என்று தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கூறினார். #Kanimozhi #DMK
    சென்னை:

    தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., சென்னையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம், ‘உங்களுக்கு முதல்-அமைச்சராகும் எண்ணம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நிச்சயமாக எனக்கு முதல்-அமைச்சராகும் எண்ணம் இல்லை. டெல்லி அரசியல் எனக்கு பழக்கமான ஒன்று. எனவே பழகிய ஒரு இடத்திலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

    தி.மு.க.வில் பெண் உறுப்பினர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா? என்று அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, நிச்சயமாக, மாவட்ட செயலாளர்கள் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள். எனவே பெண்கள் இன்னும் அதிகமாக அரசியலில் பங்கெடுத்து கொள்ள வேண்டும். முக்கிய பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்பதே இன்றைய முக்கியமான தேவை ஆகும்.’ என கனிமொழி எம்.பி. பதில் அளித்தார்.  #Kanimozhi #DMK
    ஒடிசா மாநிலத்தில் நடந்துவரும் 58-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 2-வது நாளான நேற்று பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை சி.கனிமொழி தங்கப்பதக்கத்தை வென்றார். #NationalOpenAthletics
    புவனேஸ்வரம்:

    58-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை சி.கனிமொழி (13.71 வினாடி) தங்கப்பதக்கத்தை வென்றார்.

    சிறப்பு அழைப்பு மூலம் கலந்து கொண்ட ஜப்பான் வீராங்கனை சிமோரா (13.74 வினாடி) வெள்ளிப்பதக்கமும், தமிழக வீராங்கனை ஆர்.நித்யா (13.99 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

    கனிமொழி சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் தலைமை பயிற்சியாளரும், மத்திய கலால் வரி சூப்பிரண்டுமான பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார். #NationalOpenAthletics
    சென்னையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அழைப்பிதழில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் பெயர்களுடன் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரது பெயர்கள் அழைப்பிதழில் இடம் பெற்றுள்ளது. #MKStalin
    சென்னை:

    தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்டங்கள் தோறும் இந்த விழா நடத்தப்பட்டது.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா வருகிற 30-ந்தேதி சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

    இதுதொடர்பான அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரது பெயர்களுடன் தி.மு.க. முன்னணி தலைவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரது பெயர்கள் அழைப்பிதழில் இடம் பெற்றுள்ளது.


    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளரும் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி. தினகரன் பெயரும் அழைப்பிதழில் உள்ளது. இதன்மூலம் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளும், தினகரன் எம்.எல்.ஏ.வும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பார்களா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தி.மு.க. முன்னணி நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, அரசு விழா என்ற முறையில் அழைப்பிதழில் பெயர்களை போட்டிருப்பார்கள்.

    இதில் பங்கேற்பது குறித்து இதுவரையில் கட்சி தலைமையிடம் இருந்து எங்களுக்கு எந்த உத்தரவும் இல்லை என்றார்.  #MKStalin #Kanimozhi #TTVDhinakaran
    இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என்று பிரதமருக்கு கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். #Kanimozhi #Modi
    சென்னை:

    இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என்று பிரதமருக்கு கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.  #Kanimozhi #Modi

    இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் 2-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க வேண்டும் என்ற தி.மு.க. மற்றும் தமிழக மக்களின் கோரிக்கையை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். இந்தியாவிலேயே தற்போது ஒரே ஒரு ராக்கெட் ஏவுதளம் தான் உள்ளது. அது ஸ்ரீஹரிகோட்டாவில் இயங்குகிறது என்பது உங்களுக்கு தெரியும்.



    விண்வெளி திட்டங்களை மேம்படுத்தியுள்ள மற்ற நாடுகள் அனைத்தும் பல்வேறு ராக்கெட் ஏவுதளங்களை வைத்துள்ளன. எனவே ஸ்ரீஹரிகோட்டாவில் இயங்கும் ராக்கெட் ஏவுதளத்துக்கு உதவியாக மற்றொரு புதிய ஏவுதளத்தை உருவாக்குவது அவசியமாக உள்ளது.

    2013-ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந் தேதியன்று நான் கேட்ட கேள்விக்கு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), நாடாளுமன்றத்தில் தன் பதிலை முன்வைத்தது. அதில், ஸ்ரீஹரிகோட்டாவில் தற்போதுள்ள ராக்கெட் ஏவுதளத்தின் திறன்களை பரிசீலித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான ராக்கெட் ஏவும் தேவைகளை அறிந்தும், புதிய ஏவுதளத்தின் தேவை குறித்தும் மதிப்பிடுவதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.

    குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளத்தை அமைப்பது குறித்து 2013-ம் ஆண்டு பிரதமருக்கு, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதி யிருந்தார். மகேந்திரகிரியில் உள்ள திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தில் (எல்.பி.எஸ்.சி.) உள்ள விஞ்ஞானிகளின் விரிவான சாத்தியக்கூறு ஆய்வின் அடிப்படையில் தான் நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.

    எல்.பி.எஸ்.சி.யின் முன்னாள் தலைமை பொதுமேலாளரின் கருத்துப்படி, குலசேகரன்பட்டினத்தில் இருந்து மங்கள்யான் செயற்கைக்கோள் ஏவப்பட்டு இருந்தால், 1,350 கிலோ எடையுள்ள உபகரணங்களுக்கு பதிலாக 1,800 கிலோ எடையுள்ள உபகரணங்களை அனுப்பியிருக்க முடியும்.

    பூமத்தியரேகைக்கும், எல்.பி.எஸ்.சி.க்கும் அருகில் இருப்பதால் இந்தியாவின் அடுத்த ராக்கெட் ஏவுதளம் உருவாக்க குலசேகரன்பட்டினம் தான் சிறந்த இடமாக இருப்பதற்கு உகந்த சூழ்நிலை உள்ளது. எனவே, இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை குலசேகரன்பட்டினத்தில் உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார். #DMK #Kanimozhi #DMKProtest
    திண்டிவனம்:

    விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார்பில் திண்டிவனம் வண்டிமேடு வ.உ.சி. திடலில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    மு.க.ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் ஆர்ப்பாட்டம் இது. தமிழகத்தில் ஊழல், லஞ்சம், கொள்ளை அதிகரித்துள்ளது.

    கேரளாவில் மழையால் ஏற்பட்ட பாதிப்பை விட, தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பை விட அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் பேரழிவுக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.

    அத்தனை துறைகளிலும் ஊழல் நடக்கிறது. நல்ல அதிகாரிகள் மாற்றப்பட்டு அவர்களை தொல்லைக்கு ஆளாக்குகிறார்கள். மக்களால் ஓட்டுப்போட்டு முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி வரவில்லை. தமிழகத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் முதல்-அமைச்சராகி உள்ளார்.

    இந்த ஆட்சியில் எந்த திட்டமும் வளர்ச்சி அடையவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. தலைமை செயலாளர் இந்த அரசுக்கு பினாமியாக செயல்படுகிறார். நீதிமன்றத்தையும், போலீசாரையும் அவமதித்த பாரதிய ஜனதா பிரமுகர் எச்.ராஜா கைது செய்யப்படவில்லை.

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை அமைப்பதில் முதல்-அமைச்சர் எடப்பாடி ஆர்வமாக உள்ளார். இதற்கு கமி‌ஷன்தான் காரணம்.

    இவ்வாறு அவர் பேசினார். #DMK #Kanimozhi #DMKProtest
    ×