என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 99693
நீங்கள் தேடியது "அஞ்சலி"
தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் அஞ்சலி, தன்னைப் பற்றி வரும் வதந்திகளுக்கு ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன், இப்போது இல்லை என்று கூறியிருக்கிறார். #Anjali
தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் காதல் என்று கிசுகிசுக்கள் பரவின. பின்னர் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அஞ்சலி அளித்த பேட்டி வருமாறு:-
நான் டப்பிங் கலைஞராக சினிமா பயணத்தை ஆரம்பித்து, அதன்பிறகு நடிகையானேன். அம்மாவுக்கு நடிகையாக ஆர்வம் இருந்தது. அது பலிக்காததால் என்னை நடிகையாக்கி கனவை நிறைவேற்றிக்கொண்டார். நான் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகப்போகிறேன் என்று தகவல்கள் பரவி உள்ளன. அதில் சிறிதும் உண்மை இல்லை.
திருமண செய்தியே பொய். அப்படி திருமணம் செய்துகொண்டாலும் சினிமாவை ஏன் விட வேண்டும். கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் உள்ளது. புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு நான் சொல்லும் அறிவுரை என்னவென்றால் முழுமையான நடிகை ஆவதற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் அக்கறையும், ஆர்வமும் இருக்க வேண்டும். சாதிக்க பிடிவாதமும் இருக்க வேண்டும்.
நான் மற்றவர்களை நோகடிப்பதாக பேசுகிறார்கள். அதில் உண்மை இல்லை. இதுவரை யாரையும் நோகடித்தது இல்லை. என்னை பற்றி வதந்திகள் வரும்போது ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன். இப்போது கண்டு கொள்வது இல்லை.” இவ்வாறு அஞ்சலி கூறினார்.
அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘சித்துபாத்’ படம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. #Sindhubaadh #VijaySethupathi
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக `சூப்பர் டீலக்ஸ்' படம் திரைக்கு வர இருக்கிறது. அதேநேரத்தில் தான் ஒப்பந்தமாகியுள்ள மற்ற படங்களிலும் விஜய் சேதுபதி தீவிரம் காட்டி வருகிறார்.
அந்த வகையில், பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார், விஜய் சேதுபதியின் 26-வது படத்தை இயக்குகிறார். `சிந்துபாத்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கே புரொடக்ஷன்ஸ் மற்றும் வன்சன் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
அருண்குமார் - விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை ஏப்ரல் 11ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Sindhubaath #VijaySethupathi
சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். #SulurMLA #MLAKanagaraj
கோவை:
எம்எல்ஏ கனகராஜ் உடல் காமநாயக்கன்பாளையம், வி.மேட்டூர் சேர்மன் தோட்டத்தில் அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
அமைச்சர் வேலுமணி மற்றும் எம்.பி., எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. #SulurMLA #MLAKanagaraj
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் (வயது 64) இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் என பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
எம்எல்ஏ கனகராஜ் உடல் காமநாயக்கன்பாளையம், வி.மேட்டூர் சேர்மன் தோட்டத்தில் அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
அமைச்சர் வேலுமணி மற்றும் எம்.பி., எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. #SulurMLA #MLAKanagaraj
திண்டிவனம் அருகே இன்று சாலை விபத்தில் உயிரிழந்த அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரனின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். #RajendranMP
திண்டிவனம்:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் டாக்டர் ராமதாசின் பா.ம.க. இடம்பெற்றுள்ளது.
அந்த கட்சிக்கு 7 தொகுதிகளை அ.தி.மு.க. ஒதுக்கியுள்ளது.
இதையொட்டி அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு விருந்து அளிக்க பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று இரவு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விருந்து நிகழ்ச்சி திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் முதல்- அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சென்னைக்கு புறப்பட்டு வந்து விட்டனர்.
ராஜேந்திரன் எம்.பி.யுடன் அவரது உறவினர் தமிழ்ச்செல்வன் வந்தார். திண்டிவனம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை திண்டிவனம் பகுதியில் பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ராஜேந்திரன் எம்.பி. கார் திண்டிவனம் போலீஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது பனி மூட்டம் காரணமாக சாலையில் இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. காரில் இருந்த ராஜேந்திரன் எம்.பி., கார் டிரைவர் அருமைச்செல்வம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
திண்டிவனம் போலீசார் அவர்களை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ராஜேந்திரன் எம்.பி. பரிதாபமாக இறந்தார். அவருக்கு வயது 62.
காயம் அடைந்த அருமைச் செல்வம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் திண்டிவனம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்தில் இறந்த ராஜேந்திரன் எம்.பி.யின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள ராஜேந்திரன் எம்.பி.யின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அமைச்சர் சிவி.சண்முகம் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்களும் ராஜேந்திரன் எம்.பி. உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்பு அவர்கள் ராஜேந்திரன் எம்.பி.யின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
ராஜேந்திரன் எம்.பி.யின் சொந்த ஊர் திண்டிவனம் அருகே உள்ள ஆதனப்பட்டு. சாந்தா என்ற மனைவியும், விக்னேஷ்வரன் என்ற மகனும், திவ்யா, தீபிகா ஆகிய மகள்களும் உள்ளனர். #RajendranMP #ADMK #Edappadipalaniswami #OPS
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் டாக்டர் ராமதாசின் பா.ம.க. இடம்பெற்றுள்ளது.
அந்த கட்சிக்கு 7 தொகுதிகளை அ.தி.மு.க. ஒதுக்கியுள்ளது.
இதையொட்டி அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு விருந்து அளிக்க பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று இரவு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விருந்து நிகழ்ச்சி திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் முதல்- அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சென்னைக்கு புறப்பட்டு வந்து விட்டனர்.
ராஜேந்திரன் எம்.பி. திண்டிவனத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் இரவு தங்கினார். இன்று காலை 6 மணிக்கு கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். காரை அருமைச்செல்வம் என்பவர் ஓட்டினார்.
இன்று காலை திண்டிவனம் பகுதியில் பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ராஜேந்திரன் எம்.பி. கார் திண்டிவனம் போலீஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது பனி மூட்டம் காரணமாக சாலையில் இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. காரில் இருந்த ராஜேந்திரன் எம்.பி., கார் டிரைவர் அருமைச்செல்வம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
திண்டிவனம் போலீசார் அவர்களை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ராஜேந்திரன் எம்.பி. பரிதாபமாக இறந்தார். அவருக்கு வயது 62.
காயம் அடைந்த அருமைச் செல்வம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் திண்டிவனம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்தில் இறந்த ராஜேந்திரன் எம்.பி.யின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு கார் மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
அமைச்சர் சிவி.சண்முகம் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்களும் ராஜேந்திரன் எம்.பி. உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்பு அவர்கள் ராஜேந்திரன் எம்.பி.யின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
ராஜேந்திரன் எம்.பி.யின் சொந்த ஊர் திண்டிவனம் அருகே உள்ள ஆதனப்பட்டு. சாந்தா என்ற மனைவியும், விக்னேஷ்வரன் என்ற மகனும், திவ்யா, தீபிகா ஆகிய மகள்களும் உள்ளனர். #RajendranMP #ADMK #Edappadipalaniswami #OPS
தஞ்சையில் உடல்நலக்குறைவால் இறந்த ஆட்டோ டிரைவரின் உடலை பார்த்து பள்ளி குழந்தைகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது அனைவரின் மனதையும் உருக்கியது. #SchoolChildrens
தஞ்சாவூர்:
தஞ்சை சுங்காந்திடல் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். ஆட்டோ டிரைவரான இவர் காலை, மாலை வேளைகளில் குழந்தைகளை பள்ளியில் விடுவது, அழைத்து வருவது வழக்கம். 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று வந்தார். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், தேஜாஸ்ரீ, ரித்திகா ஸ்ரீ என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கதிர்வேல் எப்போதும் எல்லோருடனும் அன்பாக பழகக்கூடியவர். ஆட்டோவில் வரும் குழந்தைகளை தனது சொந்த குழந்தைகள் போலவே கவனித்து கொள்வார். காலை நேரத்தில் எப்போதும் கைகளில் சாக்லெட் வைத்திருப்பார். பள்ளிக்கு செல்ல குழந்தைகள் அடம் பிடித்தால் சாக்லேட்டை கொடுத்து அன்பாக பேசி அழைத்து செல்வார்.
ஆட்டோவில் வரும் குழந்தைகளுக்கு காய்ச்சல் அடித்தால் பெற்றோரிடம் உங்க குழந்தைக்கு உடம்பு சரியில்லை, கவனிச்சு பாருங்க என கூறிவிட்டுதான் செல்வார். இதனால் குழந்தைகள் தொடங்கி அவர்களின் பெற்றோர் வரை அனைவரிடமும் நன் மதிப்பை பெற்று விளங்கினார். குழந்தைகளும் டிரைவர் ‘‘கதிர் அங்கிள்’’ என எப்போதும் பாசத்துடன் அழைத்து அன்பாக பழகிவந்தனர்.
இந்தநிலையில் கதிர்வேலுக்கு கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த 19-ந் தேதி உடல்நிலை மோசமான நிலையில் திடீரென இறந்துவிட்டார். அவரின் இறுதி காரியத்திற்கு எல்லோரும் தயாராகி கொண்டிருந்தனர். அப்போது கதிர்வேல் ஆட்டோவில் தினமும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அனைவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு கூட செல்லாமல் பள்ளி சீருடையிலேயே அஞ்சலி செலுத்த வந்தனர். அப்போது ஒரு குழந்தை கண்ணீர் விட்டு ‘‘டிரைவர் அங்கிள்... நாங்க எல்லோரும் வந்திருக்கோம். கண் திறந்து பாருங்க’’ என கதறியது மனதை உருக்குவதாக இருந்தது. மற்ற குழந்தைகள் கண்ணாடி பெட்டிக்குள் கிடத்தியபடியிருந்த அவரின் உடலை பார்த்து எங்களை இனிமேல் நீங்க ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துபோக வரமாட்டிங்களா என கேட்டதும் கதிர்வேலின் குடும்பம் மட்டுமின்றி அங்கிருந்த அனைவரும் கண்ணீர்விட்டனர். எல்லா பிள்ளைகளையும் நல்லா பார்த்து கிட்டவரோட இரண்டு பிள்ளைகளின் எதிர்கால நிலைமைதான் இனி பெரிய கேள்வி குறியாக இருக்கு என்று அங்கிருந்தவர்கள் கண் கலங்கினர்.
தங்களை பாதுகாப்பாக பாசத்துடன் அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் உடலை பார்த்து பள்ளி குழந்தைகள் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #SchoolChildrens
தஞ்சை சுங்காந்திடல் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். ஆட்டோ டிரைவரான இவர் காலை, மாலை வேளைகளில் குழந்தைகளை பள்ளியில் விடுவது, அழைத்து வருவது வழக்கம். 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று வந்தார். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், தேஜாஸ்ரீ, ரித்திகா ஸ்ரீ என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கதிர்வேல் எப்போதும் எல்லோருடனும் அன்பாக பழகக்கூடியவர். ஆட்டோவில் வரும் குழந்தைகளை தனது சொந்த குழந்தைகள் போலவே கவனித்து கொள்வார். காலை நேரத்தில் எப்போதும் கைகளில் சாக்லெட் வைத்திருப்பார். பள்ளிக்கு செல்ல குழந்தைகள் அடம் பிடித்தால் சாக்லேட்டை கொடுத்து அன்பாக பேசி அழைத்து செல்வார்.
ஆட்டோவில் வரும் குழந்தைகளுக்கு காய்ச்சல் அடித்தால் பெற்றோரிடம் உங்க குழந்தைக்கு உடம்பு சரியில்லை, கவனிச்சு பாருங்க என கூறிவிட்டுதான் செல்வார். இதனால் குழந்தைகள் தொடங்கி அவர்களின் பெற்றோர் வரை அனைவரிடமும் நன் மதிப்பை பெற்று விளங்கினார். குழந்தைகளும் டிரைவர் ‘‘கதிர் அங்கிள்’’ என எப்போதும் பாசத்துடன் அழைத்து அன்பாக பழகிவந்தனர்.
இந்தநிலையில் கதிர்வேலுக்கு கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த 19-ந் தேதி உடல்நிலை மோசமான நிலையில் திடீரென இறந்துவிட்டார். அவரின் இறுதி காரியத்திற்கு எல்லோரும் தயாராகி கொண்டிருந்தனர். அப்போது கதிர்வேல் ஆட்டோவில் தினமும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அனைவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு கூட செல்லாமல் பள்ளி சீருடையிலேயே அஞ்சலி செலுத்த வந்தனர். அப்போது ஒரு குழந்தை கண்ணீர் விட்டு ‘‘டிரைவர் அங்கிள்... நாங்க எல்லோரும் வந்திருக்கோம். கண் திறந்து பாருங்க’’ என கதறியது மனதை உருக்குவதாக இருந்தது. மற்ற குழந்தைகள் கண்ணாடி பெட்டிக்குள் கிடத்தியபடியிருந்த அவரின் உடலை பார்த்து எங்களை இனிமேல் நீங்க ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துபோக வரமாட்டிங்களா என கேட்டதும் கதிர்வேலின் குடும்பம் மட்டுமின்றி அங்கிருந்த அனைவரும் கண்ணீர்விட்டனர். எல்லா பிள்ளைகளையும் நல்லா பார்த்து கிட்டவரோட இரண்டு பிள்ளைகளின் எதிர்கால நிலைமைதான் இனி பெரிய கேள்வி குறியாக இருக்கு என்று அங்கிருந்தவர்கள் கண் கலங்கினர்.
தங்களை பாதுகாப்பாக பாசத்துடன் அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் உடலை பார்த்து பள்ளி குழந்தைகள் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #SchoolChildrens
ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் சைலண்ட் த்ரில்லராக உருவாகும் புதிய படத்தில் மாதவனுடன் அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி, ஷாலினி பாண்டே இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். #Madhavan #AnushkaShetty
இரண்டு படத்தில் மாதவன் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அனுஷ்கா. சுமார் 12 வருடங்களுக்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைகிறது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் சைலண்ட் திரில்லராக உருவாகும் இந்த படத்தை ஹேமந்த் மதுகர் இயக்குகிறார். கோபி மோகன், கோனா வெங்கட் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் சுப்பாராஜு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் பணியாற்றவிருக்கும் இந்த படத்திற்கு, கோபி சுந்தர் இசையமைக்கிறார்.
ஷானியேல் டியோ ஒளிப்பதிவு செய்ய, யனா ருசனோவா கலை பணிகளை கவனிக்கிறார். காஸ்மோஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ், கிரண் ஸ்டுடியோஸ் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. #Madhavan #AnushkaShetty #Anjali #ShaliniPandey
திருப்பூரில் இறந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின் போது சிலர் பாகிஸ்தான் நாட்டின் கொடிகளை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரம்பிய காரை மோதியதில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் பலியானார்கள். இறந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் குமரன் சிலை முன்பு நடைபெற்றது. இந்து அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் இறந்த ராணுவ வீரர்களுக்கு விளக்கேற்றி வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதில் ஆர்.எஸ்.எஸ். நகர தலைவர் வாசுநாதன், பா.ஜனதா வடக்கு மாவட்ட தலைவர் சின்னசாமி, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம், இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார், லகு உத்யோக் பொறுப்பாளர் மோகனசுந்தரம், பி.எம்.எஸ். சார்பில் சந்தானம் மற்றும் தொழில் துறையினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது சிலர் பாகிஸ்தான் நாட்டின் கொடிகளை தீ வைத்து எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வடக்கு போலீசார் எரிந்த கொடிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
இந்த நிலையில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வருகிற 20-ந் தேதி மாலை 4.30 மணிக்கு திருப்பூர் டவுன்ஹாலில் தொடங்கி மாநகராட்சி அலுவலகம் முன்புறம் உள்ள காந்தி சிலை வரை அஞ்சலி ஊர்வலம் நடத்தப்பட உள்ளது.
இதில் தொழில்துறையினர், பொதுமக்கள், வணிக அமைப்பினர் கலந்து கொள்ள உள்ளனர். #tamilnews
காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரம்பிய காரை மோதியதில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் பலியானார்கள். இறந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் குமரன் சிலை முன்பு நடைபெற்றது. இந்து அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் இறந்த ராணுவ வீரர்களுக்கு விளக்கேற்றி வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதில் ஆர்.எஸ்.எஸ். நகர தலைவர் வாசுநாதன், பா.ஜனதா வடக்கு மாவட்ட தலைவர் சின்னசாமி, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம், இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார், லகு உத்யோக் பொறுப்பாளர் மோகனசுந்தரம், பி.எம்.எஸ். சார்பில் சந்தானம் மற்றும் தொழில் துறையினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது சிலர் பாகிஸ்தான் நாட்டின் கொடிகளை தீ வைத்து எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வடக்கு போலீசார் எரிந்த கொடிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
இந்த நிலையில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வருகிற 20-ந் தேதி மாலை 4.30 மணிக்கு திருப்பூர் டவுன்ஹாலில் தொடங்கி மாநகராட்சி அலுவலகம் முன்புறம் உள்ள காந்தி சிலை வரை அஞ்சலி ஊர்வலம் நடத்தப்பட உள்ளது.
இதில் தொழில்துறையினர், பொதுமக்கள், வணிக அமைப்பினர் கலந்து கொள்ள உள்ளனர். #tamilnews
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொல்கத்தாவில் இன்று மம்தா பானர்ஜி தலைமையில் அமைதி பேரணி நடந்தது. #Mamatamarch #candlelightmarch #Pulwamaattack
கொல்கத்தா:
இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் இன்று மாலை கொல்கத்தா நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி, வாயில் கருப்புத்துணி கட்டியவாறு, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். #Mamatamarch #candlelightmarch #Pulwamaattack
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விவாதிப்பதற்காக டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எல்லா வகையிலான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் இன்று மாலை கொல்கத்தா நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி, வாயில் கருப்புத்துணி கட்டியவாறு, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். #Mamatamarch #candlelightmarch #Pulwamaattack
புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு, மவுன ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. #PulwamaAttack #Peoplepaytribute
ஜம்மு:
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நேற்று முன்தினம் நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். பலியான வீரர்களின் உடல்கள் நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டன.
இந்த தாக்குதல் சம்பவம் மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் இரங்கல் மற்றும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலமும் நடத்தி வருகின்றனர்.
உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் லடாக் புத்த சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
வீரர்களின் யாத்திரையில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை சேர்ந்த மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், வீரர்களின் இறுதி யாத்திரைக்காக சென்றுள்ளனர். #PulwamaAttack #Peoplepaytribute
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நேற்று முன்தினம் நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். பலியான வீரர்களின் உடல்கள் நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டன.
பாலம் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாரமன், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் வீரர்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வீரர்களின் உடல்களுக்கு அந்தந்த மாநில தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் லடாக் புத்த சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
வீரர்களின் யாத்திரையில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை சேர்ந்த மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், வீரர்களின் இறுதி யாத்திரைக்காக சென்றுள்ளனர். #PulwamaAttack #Peoplepaytribute
நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாக கிசுகிசு பரவிய நிலையில், இதுகுறித்த ஜெய் அளித்த பேட்டியில், அஞ்சலியுடனான நட்பு தொடரும் என்றும், கண்டிப்பாக தான் காதல் திருமணம் தான் செய்வேன் என்றார். #Jai #Anjali #Nayanthara
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஜெய் நடிப்பில் ‘பார்ட்டி’, ‘நீயா-2’ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து ‘மதுரராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
‘எங்கேயும் எப்போதும்’, ‘பலூன்’ ஜெய்க்கும், அஞ்சலிக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்தி பரவியது. ஆனால், அந்த காதல் சீக்கிரமே முறிந்து போனதாகவும் பேசப்படுகிறது.
இதுபற்றி ஜெய்யிடம் கேட்டபோது, “நானும், அஞ்சலியும் நெருங்கி பழகியது உண்மைதான். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. அஞ்சலி என் காதலி அல்ல; தோழிதான். எங்கள் நட்பு தொடரும்” என்று கூறினார்.
“எனக்கு மிகவும் பிடித்த நடிகை நயன்தாரா. மிகவும் மென்மையானவரும் அவர் தான். 2013-ல் நாங்கள் இருவரும் ‘ராஜாராணி’ படத்தில் இணைந்து நடித்தோம். படப்பிடிப்பின்போது எங்கள் இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அது இப்போதும் தொடர்கிறது. தொடர்ந்து அவருடன் பல படங்களில் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்றார்.
“திருமணம் பற்றி கேட்டதற்கு, எனது திருமணம் பற்றி நான் யோசிக்கவே இல்லை. அப்படி திருமணம் செய்துகொள்வதாக இருந்தால், அது காதல் திருமணமாகத்தான் இருக்கும்.” இவ்வாறு நடிகர் ஜெய் கூறினார். #Jai #Anjali #Nayanthara #Neeya2 #Party
சேதுபதி படத்தை தொடர்ந்து அருண்குமார் - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் சிந்துபாத் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டதாக விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். #Sindhubaath #VijaySethupathi
`பேட்ட' படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக `சூப்பர் டீலக்ஸ்' படம் திரைக்கு வர இருக்கிறது. அதேநேரத்தில் தான் ஒப்பந்தமாகியுள்ள மற்ற படங்களிலும் விஜய் சேதுபதி தீவிரம் காட்டி வருகிறார்.
அந்த வகையில், பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார், விஜய் சேதுபதியின் 26-வது படத்தை இயக்குகிறார். `சிந்துபாத்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கே புரொடக்ஷன்ஸ் மற்றும் வன்சன் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
#Sindhubaadh dubbing started ✌🏻
— VijaySethupathi (@VijaySethuOffl) January 20, 2019
An #SUArunkumar Film | A @thisisyr musical |
Produced @KProductionsInd & @VANSANMOVIES@yoursanjali@Rajarajan7215@irfanmalik83@mounamravi@Muzik247in@CtcMediaboypic.twitter.com/1bUogXAFPy
அருண்குமார் - விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிலையில், தற்போது படத்தின் டப்பிங் பணிகள் துவங்கிவிட்டதாக நடிகர் விஜய் சேதுபதி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Sindhubaath #VijaySethupathi
ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி - சாதனா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்தின் முன்னோட்டம். #Peranbu #Ram #Mammootty #Anjali
ஸ்ரீ ராஜலஷ்மி பிலிம்ஸ் சார்பில் பி.எல்.தேனப்பன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேரன்பு’ .
மம்முட்டி நாயகனாக அஞ்சலி நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, ‘தங்க மீன்கள்’ சாதனா, லிவிங்ஸ்டன், திருநங்கை அஞ்சலி அமீர், அருள்தாஸ், சுராஜ் வெஞ்சரமூட், சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர், படத்தொகுப்பு - சூர்யா பிரதாமன், கலை இயக்குநர் - குமார் கங்கப்பன், பாடல்கள் - வைரமுத்து, கருணாகரன், சுமதி ராம், தயாரிப்பாளர் - பி.எல்.தேனப்பன், இணை தயாரிப்பு - டி.சரஸ்வதி, தயாரிப்பு நிறுவனம் - ஸ்ரீ ராஜலஷ்மி பிலிம்ஸ், எழுத்து, இயக்கம் - ராம்.
‘பேரன்பு’ படம் பற்றி இயக்குநர் ராம் பேசும் போது,
“இந்த படத்தின் நாயகன் மம்முட்டி, எல்லோரையும் போல் சுயநலமுள்ள சாதாரண மனிதர். இவர் எப்படி ‘பேரன்பு’ கொண்டவராக மாறுகிறார்? என்பதே படத்தின் கதை. புதிரான ஒரு கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார். படத்துக்காக ஒரு ஏரிக் கரையோரத்தில் வீடு போன்ற அழகான அரங்கு அமைக்கப்பட்டு, அதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.” என்றார்.
பல்வேறு சர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வென்றுள்ள இந்த படம் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Peranbu #Ram #Mammootty #Anjali
பேரன்பு டிரைலர்:
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X