என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புகார்"
பூந்தமல்லி:
பூந்தமல்லி தாலுகாவுக்கு உட்பட்ட சென்னீர்குப்பம், காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டி உள்ள பகுதிகளில் அனுமதி இல்லாமல் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு இயங்கி வந்தன.
இந்த கிணறுகளில் லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு விற்கப்படுவதாகவும் இதனால் நிலத்தடி நீர் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் புகார் வந்தது.
அதிக அளவில் லாரிகள் செல்வதால் இந்த சாலை மிகவும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறி விட்டது. எனவே இதன் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வருவாய் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட உதவிகலெக்டர் ரத்னா தலைமையில் பூந்தமல்லி தாசில்தார் புனிதவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் வரு வாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அனுமதி இன்றி செயல்பட்டு வந்த ஆழ்குழாய் கிணறுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினார்கள்.
மேலும் அங்கு கொடுக்கப்பட்டு இருந்த மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, போர்வெல், மிஷின்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய அனுமதி இல்லாமல் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை:
மதுரை நாகமலை புதுக்கோட்டை சுப்பிர மணியசிவா தெருவைச் சேர்ந்தவர் ராஜையா (வயது56). இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் ராஜையா வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான தொண்டிக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டில் உள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.83 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜையா நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் திருஞானம் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை எல்லைப் பிள்ளைசாவடி வாஞ்சிநாதன் நகரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி அஞ்சலை. இவர்களுக்கு 4 மகன்கள்.
மூத்த மகன் மணிகண்டன் (வயது 26). கட்டிட வேலை செய்து வந்த இவர் தனது மாமன் மகளை காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்தார்.
பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் சேர்ந்து மணிகண்டன் தனது மனைவியுடன் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். இரவில் மட்டும் அருகில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மணிகண்டன் மனைவியுடன் தூங்க செல்வார்.
இதற்கிடையே மணிகண்டன் தனது தாய் அஞ்சலையிடம் வீட்டை பாக பிரிவினை செய்து தரும்படி வலியுறுத்தி வந்தார். ஆனால், அதற்கு அஞ்சலை சம்மதிக்கவில்லை.
மற்ற மகன்கள் 3 பேருக்கும் திருமணம் செய்து வைத்த பிறகு வீட்டை பாகம் பிரித்து தருவதாக கூறி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மணிகண்டன் மது குடித்து விட்டு தனது தாய் அஞ்சலையிடம் வீட்டை பாகம் பிரித்து தருமாறு மீண்டும் வலியுறுத்தினார். ஆனால், இதற்கு அஞ்சலை மறுத்து விட்டார்.
இதனால் மனமுடைந்த மணிகண்டன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இரவு நேரத்தில் தங்கி இருக்கும் வீட்டுக்கு சென்ற மணி கண்டன் அங்கு மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸ் உதவி சப்- இன்ஸ்பெக்டர் ஜான் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருப்பூர்:
திருப்பூர் காதர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த ஆதிஷ்பாண்டியன் (வயது 26) என்பவர் தங்கி இருந்து கம்பி கட்டும் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் வழக்கம் போல கட்டிட பணியில் ஆதிஷ்பாண்டியன் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கீழ் தளத்தில் இருந்து கம்பி கட்டும் பணிக்கு தேவையான கம்பிகளை சுமந்து கொண்டு மேல் தளத்திற்கு சென்று கொண்டிருந்தார். 3-வது மாடியை அடைந்த போது ஆதிஷ்பாண்டியன் சுமந்து சென்று கொண்டிருந்த கம்பியின் ஒரு பகுதி அருகில் சென்று கொண்டிருந்த மின்சார கம்பியில் உரசியது. இதனால் ஆதிஷ்பாண்டியன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 3-வது மாடியில் இருந்து அவர் கீழே தூக்கி வீசப்பட்டார். இதில் தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திஆதிஷ்பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆதிஷ்பாண்டியன் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தான் கவுசல்யா என்ற பெண்ணை திருமணம் செய்தார். திருமணம் முடிந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வந்த இவர், காதர்பேட்டையில் தங்கி இருந்து, அங்கு கம்பி கட்டும் வேலை செய்து வந்தது தெரியவந்தது.
திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டை கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 28). கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர். இவரது மனைவி அமரஜோதி (26).
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த இவர், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் முருகனுக்கு இந்துமதி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். அதனை மறைத்து என்னை 2-வது திருமணம் செய்துள்ளார். எனது நகைகளை பறித்து விற்பனை செய்து விட்டதோடு அதனை கேட்டால் அடித்துக்கொடு மைப்படுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதற்கிடையில் சப்-இன்ஸ்பெக்டர் தன்னை தாக்கியதாக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் முருகன் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் சுமதி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தாலுகா கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் மனைவி மஞ்சுளா (வயது 40). இவர்களது மகன் முத்துராஜ் (வயது 15).
இவன் கலிங்கப்பட்டி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். முத்துராஜ் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும் நடந்து முடிந்த காலாண்டு தேர்வையும் சரியாக எழுதவில்லையாம். தேர்விலும் 4 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் 4-ந் தேதி பள்ளிக்கு செல்கிறேன் என கூறி சென்றவன் பின்னர் இரவு வரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் முத்துராஜை தேடி வருகின்றனர்.
சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
ஆடு, கோழி இறைச்சி வியாபாரம் செய்து வரும் நான் கடந்த 2015-ம் ஆண்டு வாடகைக்கு இடம் பார்த்தேன். அப்போது அன்வர் பாட்ஷா என்பவர் ஒரு டிரஸ்டின் தலைவராக இருப்பதாக கூறி அணுகினார்.
ஒக்கியம் துரைப்பாக்கத்தில் ஆலிமா காலனி மெயின் ரோட்டில் 18 கிரவுண்டு இடம் உள்ளதாக கூறினார். அதில் 4800 சதுரஅடி இடத்தை வாடகைக்கு விடுவதாக கூறினார். இதற்காக முன் பணமாக ரூ.6 லட்சம் கொடுத்தேன். பின்னர் காலி இடத்தை சமன் செய்து கூரை போடுவதற்காக ரூ.40 லட்சம் செலவு செய்தேன். 11 மாதத்துக்கு பின்னர் வாடகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. அப்போது அன்வர் பாட்ஷாவிடம் மேலும் ரூ.2 லட்சம் கொடுத்தேன்.
இந்த நிலையில் அந்த இடம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி கேட்டபோது அன்வர் பாஷா முறையாக பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து கடந்த 24-ந்தேதி நீலாங்கரை போலீசில் புகார் அளித்தேன். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே அன்வர்பாஷா மீதும் இதற்கு உடந்தையாக இருக்கும் வக்பு வாரிய அதிகாரி சாதிக் பாட்ஷா மீதும் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். நான் இழந்த பணத்தையும் மீட்டு தருமாரும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும், கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக அந்த பெண் அஜித்குமாரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து முதல் மனைவியை விவாகரத்து செய்ய போவதாக கூறி அஜித்குமார் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தஞ்சை ஜெபமாலை புரத்தை சேர்ந்த கோகிலா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கோகிலாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது அவர் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதற்கிடையே அஜித்குமார் தனது முதல் மனைவியிடம் சமரசம் பேசி அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதுபற்றி அறிந்த கோகிலா மற்றும் அவரது உறவினர்கள் அஜித்குமாரிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். அதற்கு அஜித்குமார் முதல் மனைவியுடனும் சேர்ந்து வாழ்வேன் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி 2-வது மனைவி கோகிலா வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் அஜித்குமார் முதல் மனைவியை விவாகரத்து செய்து விடுவேன் என்று தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக கூறியுள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள உன்னிப்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் சந்தனமாரி. இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார்.
சம்வத்தன்று மாலை சந்தனமாரி கல்லூரி முடிந்து பஸ்சில் ஊருக்கு வந்தார். கள்ளிக்குடி பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர், அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் சந்தனமாரியை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுட்டதாக கூறப்படுகிறது.
திடீரென்று அந்த வாலிபர் மாணவியை வலுக்கட்டாயமாக தனது மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார். இதை அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றும் பலனில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் தந்தை சந்திரன் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகளை ஆவல்சூரன் பட்டியைச் சேர்ந்த நாகார்ஜூன் என்பவர் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளார். இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் குரசாமி-பஞ்சு, சகோதரி அழகு ஆகியோர் உள்ளனர்.
சந்தனமாரி குறித்து அவர்களிடம் சென்று கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மகளை மீட்டுத்தர வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் மாணவியை கடத்திய நாகார்ஜூன், அவரது குடும்பத்தினர் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்யாறு:
செய்யாறு அடுத்த பிரம்மதேசம் ஜெ.ஜெ. நகரை சேர்ந்த 17 வயது மாணவன், வெம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்துவருகிறார். இந்த மாணவன் சரிவர படிக்காததால், பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதையடுத்து, கோபித்துக் கொண்டு மாணவன் வீட்டில் இருந்து கடந்த 27-ந் தேதி வெளியேறினார். எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது இதுவரை தெரியவில்லை.
இதுபற்றி, பிரம்மதேசம் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து மாணவனை தேடி வருகின்றனர்.
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள வேலாயுதம் பாளையத்தைச் சேர்ந்தவர் முத்து (வயது 31). ஆட்டோ டிரைவராக உள்ளார். நேற்று நண்பர்களுடன் ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டு இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (29) என்பவர் அங்கு வந்து தகராறு செய்தார்.
மேலும் ஆட்டோவை அடித்து நொறுக்கி முத்துவை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த முத்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேபோல் லோகநாதனை சொத்து தகராறு காரணமாக செந்தில்குமார், முத்து, ஜெயராம் ஆகியோர் தாக்கி கத்தியால் குத்தி மிரட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்து லோகநாதனும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முத்து மற்றும் லோகநாதன் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்