search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார்"

    கிருஷ்ணகிரியில் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி நகர் தர்மராஜா நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் கவிபாரதி (வயது19). இவர் கிருஷ்ணகிரி பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். 

    கடந்த 24-ந்தேதிஅன்று கவிபாரதி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த பெரியசாமி மகன் சக்திவேல் என்பவர் கவிபாரதியிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் வாக்குவாதம் முற்றி கவிபாரதியை சரமாரியாக சக்திவேல்  தாக்கினார். 

    இது குறித்து கவிபாரதி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ராமச்சந்திரன் வழக்குபதிவு செய்து பெண்ணை தாக்கியதாக சக்திவேலை கைது செய்தனர். 
    லாஸ்பேட்டையில் கணவர் இறந்த துக்கத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை சாமிபிள்ளைதோட்டம் அணைக்கரை வீதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி பிரனாம்பாள் (வயது50). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இதற்கிடையே ராஜா கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார்.

    பாசத்துடன் இருந்து வந்த கணவர் திடீரென இறந்ததால் பிரனாம்பாள் சோகத்தில் மூழ்கினார். கணவர் இறந்தது முதல் அவர் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். மகன்கள் நன்றாக கவனித்து வந்தாலும் கணவரின் இறப்பை பிரனாம்பாவால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் மனமுடைந்த பிரனாம்பாள் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர்உசேன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொன்னேரி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரை சேர்ந்தவர் சிவகாமி (வயது 35). கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவர் கடந்த 3 மாதத்துக்கு முன்பு மீஞ்சூரை அடுத்த வாயலூரில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார்.

    கடந்த 3 நாட்களாக அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இந்த நிலையில் சிவகாமி தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

    சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் சிவகாமி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இது குறித்து காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    சிவகாமியின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டு அவரது கழுத்து பாதி அளவு அறுக்கப்பட்டு இருந்தது. மேலும் கை, உடலிலும் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன.

    அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. வீட்டின் கதவு திறந்து கிடந்ததால் சிவகாமியின் உடலை நாய்கள் கடித்து குதறி இருந்தன.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரிய வில்லை. சிவகாமி அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை.

    எனவே கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலையுண்ட சிவகாமி காட்டூர் காலனியில் உள்ள சத்துணவு கூடத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு 12 வயதில் மகன் உள்ளான். அவன் வாயலூர் கொக்கு மேடு பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி உள்ளான்.

    வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஒரத்தநாடு அருகே பெண்ணை தாக்கி 10 பேர் கும்பல் மானபங்கம் செய்த சம்பவம் குறித்து அவர்கள் மீது போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் பஞ்சாயத்து, சமயன்குடிக்காடு, ஆதிதிராவிடர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 39). இவர் வெளியூரில் தங்கி கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவரது மனைவி ஜெயமாலா (35). அந்த கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பிரிவினருக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அதில் ஒரு பிரிவினரை மற்றொரு பிரிவினர் கிராம கட்டுப்பாட்டில் இருந்து விலக்கி வைத்து முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து ஒரத்தநாடு தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டமும் நடைபெற்றது என்றும், அதில் ஏதும் முடிவு எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் மற்றொரு பிரிவினர் ஒரு பிரிவினரிலிருந்து ஒரு சாராரை மட்டும் சேர்த்துக்கொண்டும் பலரை சேர்க்காமல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவ நாளன்று ஜெயமாலா தனியாக வீட்டில் இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த செல்லையன் மகன்கள் பழனிவேல், ஆறுமுகம், சுமுக்கன் மகன் சொட்டு என்கிற மதியழகன், சிங்காரம் மகன் காசி என்கிற காசிநாதன், வைத்திலிங்கம் மகன் அல்லிமுத்து, ராசு மகன் சேகர், சாமிக்கண்ணு மகன் குமார் மற்றும் மூவர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி வீட்டின் உள்ளே நுழைந்து ஜெயமாலாவை தாக்கி மானபங்கம் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மற்றொரு பிரிவினர் தூண்டியதால்தான் தன்னை தாக்கியதாகவும் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்துள்ளார்.

    இப்புகாரின் பேரில் ஒரத்தநாடு ஏட்டு ராஜ்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேற்படி சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஜெயமாலா அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒரத்தநாடு அருகே பெண்ணை 10 பேர் கும்பல் மானபங்கம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஈத்தாமொழி அருகே மூதாட்டியிடம் 5½ பவுன் நகையை மர்மநபர் பறித்து சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜாக்கமங்கலம்:

    ஈத்தாமொழி அருகே புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் ஆதிலிங்கம். கூலி தொழிலாளி. இவரது மனைவி காசிதங்கம் (வயது 60).

    இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இளைய மகள் மட்டும் இவர்களுடன் வசித்து வந்தார். நேற்று உறவினர் திருமணத்திற்காக அவர் சென்றிருந்தார். வீட்டில் காசித் தங்கமும், ஆதிலிங்கமும் இருந்தனர். இரவு காசித்தங்கம் வீட்டிற்கு பின்னால் மாட்டிற்கு தீவனம் வைப்பதற்காக சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்மநபர் ஒருவர் காசித்தங்கத்தின் வாயை பொத்தினார். பின்னர் கழுத்தில் கிடந்த 5½ பவுன் நகையை பறித்துவிட்டு தப்பியோடினார்.

    காசித்தங்கம் திருடன், திருடன் என கூச்சலிட்டார். மனைவியின் சத்தம் கேட்டு ஆதிலிங்கம் அங்கு வந்தார். அக்கம், பக்கத்தினரும் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். திருட்டு போன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து காசித்தங்கம் ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காசித்தங்கம் வெளியே செல்வதை நோட்டமிட்டே மர்மநபர் கைவரிசை காட்டி உள்ளார்.

    எனவே இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொள்ளையனை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    விருத்தாசலம் புறவழிச்சாலையில் உடல் அழுகிய நிலையில் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் புறவழிச்சாலையோர பள்ளத்தில் நேற்று அழுகிய நிலையில் ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது பற்றி விருத்தாசலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, சப்-இன்ஸ்பெக்டர் வீரசேகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், மணவாளநல்லூரை சேர்ந்த கல்யாணசுந்தரம்(வயது 60) என்பதும், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர் என்பதும், தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், நரம்பு தளர்ச்சி காரணமாக கல்யாணசுந்தரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும், கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட அவர், புறவழிச்சாலையில் உள்ள ஒரு சர்வீஸ் கடையில் காரை பழுதுநீக்கம் செய்ய நிறுத்திவிட்டு மாயமானதும் தெரியவந்தது.

    இது குறித்து கல்யாணசுந்தரத்தின் மகன் கணேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் புறவழிச்சாலையை கடந்தபோது, அவ்வழியே சென்ற வாகனம் மோதி கல்யாணசுந்தரம் இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    நெட்டப்பாக்கத்தில் தனியார் கம்பெனி ஊழியரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சேதராப்பட்டு:

    நெட்டப்பாக்கத்தை அடுத்த கல்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 28). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் டயர் தயாரிக்கும் தொழிற்சாலை கேண்டீனில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இவர் கம்பெனியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை வீரமணி முந்திச் சென்றார்.

    இதில், ஆத்திரம் அடைந்த 4 பேரும் வீரமணியை பின்தொடர்ந்து சென்று கல்மண்டபத்தில் வைத்து மறித்து எங்களை எப்படி முந்திச்செல்லலாம்? எனக்கூறி வாக்குவாதம் செய்தனர்.

    இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த ஒருவர் மோட்டார் சைக்கிள் சாவியை எடுத்து வீரமணியை குத்தினார். காயம் அடைந்த வீரமணி இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

    நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் விபல்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். வீரமணியை தாக்கியது நெட்டப்பாக்கத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ் என்பது தெரியவந்தது.

    மேலும் அவருடன் வந்தது பண்டசோழநல்லூரை சேர்ந்த பார்த்திபன் (27). நெட்டப்பாக்கத்தை சேர்ந்த ரஞ்சித் (20) மற்றும் அவரது நண்பர் கார்த்திக் என்பதும் தெரிந்தது.

    இதில், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், ரஞ்சித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கார்த்திக்கை தேடி வருகிறார்கள்.

    புதுவையில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த விரக்தியில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை கூனிமேடு குப்பத்தை சேர்ந்தவர் பழனி. மீனவர். இவரது மனைவி அஞ்சனா (வயது 48). இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் இருந்தனர்.

    மூத்த மகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். 2-வது மகன் ராஜசங்கர் (வயது 23). மகள் 3 ஆண்டுகளுக்கு முன்னர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனிடையே பழனி அப்பகுதியில் சீட்டு பிடித்து வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை திருப்பி தர முடியாமல் போனது. ஊர் பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடைபெற்றது. ஊர் பஞ்சாயத்தார் பழனி குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

    இதனையடுத்து அவர்கள் நல்லவாடு உள்ளிட்ட சில மீனவ கிராமங்களுக்கு சென்றபோது அவர்களும் ஊருக்குள் இவர்களை அனுமதிக்கவில்லை.

    இதனையடுத்து அஞ்சனா தனது மகன் ராஜசங்கருடன் முதலியார்பேட்டை கருமார வீதியில் வாடகை வீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் குடியேறினார். ராஜசங்கருக்கு மீன்பிடி தொழிலை தவிர வேறு எதுவும் தெரியாத காரணத்தினால் வீட்டிலேயே இருந்து வந்தார். அஞ்சனா மீன் விற்று குடும்பத்தை நடத்தி வந்தார். தான் வேலைக்கு செல்லாமல் தாய் வேலைக்கு செல்வதால் ராஜசங்கர் மிகவும் மனவேதனையில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அஞ்சனா மூத்த மகனுக்கு பெண் பார்க்க பூம்புகார் சென்றிருந்தார். இரவு அங்கு தங்கிவிட்டு, மறுநாள் காலை வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போது வீடு பூட்டாமல் மூடப்பட்டிருந்தது. கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜசங்கர் தூக்குபோட்டு பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதனை கண்ட அஞ்சனா கதறி அழுதார்.

    இது குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனக்கு விருப்பமான பாடத்தை படிக்க எதிர்ப்பு தெரிவித்த தந்தை மீது மகள் போலீசில் புகார் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். பாடியில் உள்ள தனியார் கம்பெனியில் துணை மேலாளராக உள்ளார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு தனுஸ்ரீ, யாமினிஸ்ரீ ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    தனுஸ்ரீ திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வுஎழுதி தேர்ச்சி பெற்று இருந்தார். விஜய பாஸ்கர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் தனியாக வசித்து வருவதாக தெரிகிறது.

    இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற தனுஸ்ரீ இதழியல் அல்லது பி.ஏ. (டிபன்ஸ்) படிக்க முடிவு செய்தார். ஆனால் இதற்கு அவரது தந்தை விஜயபாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்து தனக்கு விருப்பமான மேல்படிப்பை படிக்குமாறு கூறி வந்தார்.

    இதனால் தந்தை-மகள் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சான்றிதழ் வாங்க சரஸ்வதி சென்றபோது ஏற்கனவே அவரது சான்றிதழ்களை தந்தை விஜயபாஸ்கர் வாங்கி சென்றிருப்பது தெரிந்தது.

    மேலும் வீட்டில் இருந்த 10-ம் வகுப்பு சான்றிதழும் மாயமாகி இருந்தன. இதுபற்றி தனுஸ்ரீ தனது தந்தையிடம் கேட்டார். அப்போது விஜய பாஸ்கர் தனக்கு விருப்பமான பி.எஸ்.சி. இயற்பியல் அல்லது வேதியியல் படிக்குமாறு அறிவுறுத்தினார். இல்லையேல் மேல் படிப்பு படிக்க வேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

    இதனால் மனவேதனை அடைந்த தனுஸ்ரீ இதுபற்றி வாட்ஸ்-அப் மூலம் போலீசில் புகார் செய்தார். அதில் மேல்படிப்பு படிக்க தனது பள்ளி சான்றிதழை தந்தை தர மறுப்பதாக புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க செவ்வாப்பேட்டை போலீசுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    போலீசார் விஜயபாஸ் கரையும் மாணவி தனுஸ்ரீயையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவியின் விருப்பத்துக்கு ஏற்ப படிக்க வைக்குமாறு விஜய பாஸ்கரிடம் அறிவுரை கூறினர்.
    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது திருவண்ணாமலை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்தபோது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என கோட்சே பற்றி பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    கமல்ஹாசன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை இந்து முன்னணி நிர்வாகி வக்கீல் சங்கர் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பிற மதத்தினரை திருப்திபடுத்த இந்துக்களை கேவலப்படுத்த மதத்தின் பேரில் இந்தியாவில் பிரிவினையை தூண்டி, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தூண்ட முற்படுகின்றார்.

    தீவிரவாதத்தில் மதத்தை முன்னிறுத்த ஒரு புதிய சூழ்நிலையை முன்னெடுத்துள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்க எண்ணுகிறார்.

    எனவே அவரின் தேர்தல் பரப்புரையை ஆராய்ந்து வழக்கு பதிவு செய்து உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவரின் தேர்தல் பிரசாரத்துக்கு தடைவிதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கோவை, திருப்பூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    கோவை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசினார்.

    இந்த கருத்து தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில் கோவை பாரத் சேனா அமைப்பினர் மாவட்ட அமைப்பாளர் குமரேசன் தலைமையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய கமல்ஹாசன் 4 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதி பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர், மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.

    குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் சிவசேனா அமைப்பினர் தெற்கு மாவட்ட செயலாளர் கிட்டாமணி தலைமையில் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.

    இதே போல திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் தலைமையில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

    இன்று கோவையில் பாரத் சேனா சார்பில் கமல்ஹாசனின் உருவ பொம்மை எரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் மாலை 4 மணிக்கு தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு அகிலபாரத இந்து மகா சபை சார்பில் கமல்ஹாசனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நாளை காந்தி பார்க்கில் அகில பாரத அனுமன் சேனா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    ஈச்சம்பாடி அருகே 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மொரப்பூர்:

    தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள ஈச்சம்பாடி தென்பெண்ணையாற்றில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக மிதந்து கிடந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனே கம்பைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என்ற விவரம் ஏதும் உடனே தெரியவில்லை.

    இறந்தவர் யார்? எந்தை ஊரைச் சேர்ந்தவர் என்றும், யாராவது அந்த பெண்ணை அடித்து கொன்றுவிட்டு உடலை ஆற்றில் வீசி சென்றனரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்துவிட்டு உடலை ஆற்றில் வீசி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×