என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புகார்"
வெம்பாக்கம்:
வெம்பாக்கம் அருகே உள்ள சோதியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 52). கூலி தொழிலாளி. இவரது மகள் மகேஸ்வரி (19). சம்பவத்தன்று பச்சையப்பன் தனது மகள் மகேஸ்வரியை காஞ்சிபுரத்திற்கு பைக்கில் அழைத்து சென்று கொண்டிருந்தார்.
சோதியம்பாக்கம் கோழிபண்ணை அருகே சென்றபோது எதிர காரில் வந்த 3 நபர்கள் பைக்கை மறித்து பச்சையப்பனை கத்தியை காட்டி மிரட்டி தாக்கினர். பின்னர் மகேஸ்வரியை காரில் கடத்தி சென்று விட்டனர்.
இது குறித்து பச்சையப்பன் தூசி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை கடத்தி சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெள்ளூர் புதுவளைவு பகுதியை சேர்ந்த ஆசைதம்பி மகன் ஜெயச்சந்திரன் (வயது 35). திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தென்பறையை சேர்ந்தவர் தமிழ்மாறன். இவர்கள் 2 பேரும் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வந்தனர். இது தொடர்பாக அவர்களுக்கிடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் தமிழ்மாறன் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த தனது உறவினரும் போலீஸ் அதிகாரியுமான ஒருவர் மூலம் பாப்பாநாடு போலீஸ் நிலையத்தில் ஜெயச்சந்திரன் மீது புகார் செய்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, ஏட்டு சதீஷ் ஆகியோர் ஜெயச்சந்திரனை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்து உள்ளனர். அப்போது ஜெயச்சந்திரனை தாக்கி அவரது செல்போனை பறித்து வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீஸ் நிலையம் சென்ற ஜெயச்சந்திரன் நீண்ட நேராமாக வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை ஆசைதம்பி மற்றும் உறவினர்கள் பாப்பாநாடு போலீஸ் நிலையத்துக்கு வந்து பார்த்த போது ஜெயச்சந்திரனை போலீசார் தாக்கி செல்போனை பறித்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து சட்ட விரோதமாக ஜெயச்சந்திரனை போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் தாக்கியதாக உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ய போவதாக ஜெயச்சந்திரனின் உறவினர்கள் தெரிவித்தனர். போலீஸ் நிலையத்தில் வாலிபரை விசாரணைக்கு அழைத்து இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
மார்த்தாண்டம்:
மார்த்தாண்டம் அருகே உள்ள செறுகோல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகுமார் (வயது 40). இவரது மனைவி லதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜகுமார் மார்த்தாண்டம் மீன் மார்க்கெட்டில் மீன் இறக்கும் வேலை பார்த்து வந்தார். இதேபோல நேற்று காலை வேலைக்கு செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு ராஜகுமார் மார்த்தாண்டம் சென்றார். திடீரென மார்த்தாண்டத்தில் இருந்து ராஜகுமாரின் மனைவிக்கு ஒருவர் செல்போனில் பேசினார். உங்கள் கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு திடீரென இறந்து விட்டார். அவரது உடல் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ராஜகுமாரின் மனைவியும், உறவினர்களும் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தனர். அங்கு ராஜகுமாரின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அவர் எப்படி திடீரென இறந்தார் என தெரியவில்லை. எனவே அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தனர். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள களியங்காட்டில் முதியவர் ஒருவர் நேற்று மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இது தொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல்:
வரதட்சணைக்காக மருமகளை வீட்டை விட்டு சப்-இன்ஸ்பெக்டர் விரட்டியதால் மனமுடைந்து விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ரமேஷ் என்பவருக்கும் கன்னிவாடி அருகே உள்ள குரும்பபட்டியைச் சேர்ந்த சுகந்தி (வயது 21) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 8 மாத கைக்குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு ரமேஷ் வேலை இல்லாமல் இருந்ததால் அவர் தொழில் தொடங்க ரூ.5 லட்சம் பணம் வாங்கி வருமாறு மாமனார் சுப்பிரமணி அவரை கொடுமைபடுத்தி வந்துள்ளார்.
இதனால் குழந்தை பிறந்தவுடன் அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். மேலும் சுகந்தி வேறு ஒரு வாலிபருடன் பழகுவதாகவும் குற்றம் சாட்டினார். சம்பவத்தன்று சுகந்தி வீட்டுக்கு சென்ற சுப்பிரமணி மற்றும் ரமேஷ் வரதட்சணை ஏன் வாங்கி வரவில்லை? என சத்தம் போட்டுள்ளனர்.
இதனால் மனமுடைந்த சுகந்தி விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வரதட்சணைக்காக போலீஸ் அதிகாரியே மருமகளை வீட்டை விட்டு விரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள பால்பண்ணை தெரு தர்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜூ. (வயது 31). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தைகள் இறந்து விட்டனர். இதனால் ராஜூ கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் சோகத்தில் இருந்து வந்துள்ளார்.
மேலும் ராஜூவின் மனைவி ராமபிரியா மற்றும் குழந்தைகள் இறந்தது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ராஜூவின் பெற்றோர் உள்பட 3 பேர் மீது விசாரணை நடந்து வருகிறது.
இதனால் ராஜூ மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராஜூவின் தந்தை முருகன் அளித்த புகாரின் பேரில் கடமலைக்குண்டு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:
திருமங்கலம் மறவன்குளம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மச்சக் காளை. இவரது மகள் மகாலட்சுமி (வயது 19). இவர் வயிற்று வாலியால் அவதிப்பட்டார். இதனால் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்தபோது மகாலட்சுமி வயிற்றில் 8 மாத குழந்தை இறந்த நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், மகளிடம் விசாரித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குருசாமி மகன் குமரேசன் (25) தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மகாலட்சுமி தெரிவித்தார்.
இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2 பேரும் காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி குமரேசன் பலமுறை உல்லாசம் அனுபவித்ததாகவும் மகாலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது திருமணத்திற்கு மறுப்பதாகவும் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பூரில் வேலை பார்த்து வரும் குமரேசனை தேடி வருகின்றனர்.
நெல்லை:
ஏர்வாடியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 33). இவர்களுக்கு வரதன் (8), வாசன் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனம் உடைந்த முருகேஸ்வரி 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு ஏர்வாடியில் உள்ள தந்தை வீட்டருகே தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். அவரது மகன்களும் அந்தப் பகுதியில் உள்ள பள்ளிகூடத்தில் 3-ம் வகுப்பு மற்றும் 1-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முருகேஸ்வரியையும் அவரது 2 மகன்களையும் காணவில்லை. கணவர் செல்வம் வீட்டுக்கோ, உறவினர் வீட்டுக்கோ செல்லவில்லை. அவரது செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது. அவரைப்பற்றிய விபரங்கள் தெரியாததால், சித்தப்பா கண்ணன் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஸ்வரியையும், 2 மகன்களையும் தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்