search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99754"

    சேலம் விமான நிலைய விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காடையாம்பட்டி:

    சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்காக ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பொட்டியாபுரம், தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

    முதல்கட்டமாக அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்து கையகப்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளை வைத்துள்ள பொதுமக்கள் தாமாகவே முன்வந்து வழங்கிய நிலத்தில் அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலம் எடுப்பு தனி தாசில்தார் சாந்தி தலைமையில் நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் தும்பிப்பாடி கிராமத்திற்கு நில அளவீடு செய்வதற்காக சென்றனர்.

    அப்போது அங்கு திரண்டு வந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விமான நிலைய விரிவாக்க பணிக்காக நிலத்தை ஒப்படைக்க மாட்டோம் என்று கூறியதோடு இங்கு ஆய்வு பணிகள் மேற்கொள்ளக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அப்போது சில விவசாயிகள் நிலத்தை அளவீடு செய்தால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்வோம் என கூறி அங்குள்ள கிணற்று திட்டில் இறங்கி மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அதிகாரிகள் நிலத்தை அளக்காமல் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    இந்த நிலையில் தாராபுரம் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் தீவட்டிப்பட்டி போலீசில் விவசாயிகள் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரில் விமான நிலைய விரிவாக்கத்திற்காக நில அளவீடு செய்ய சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளை அப்பகுதியைச் சேர்ந்த வினோத், கிருஷ்ணன், விஜய், சின்னப்பையன், குமரவேல், எல்லப்பன் உள்பட பலர் தடுத்து நிறுத்தினார்கள், அரசு பணிகளை செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து தீவட்டிப்பட்டி போலீசார் விவசாயிகள் மீது அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டுதல், அச்சுறுத்தும் வகையில் ஒன்றாக கூடுதல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    கஜா புயலால் சேதம் அடைந்த தஞ்சாவூர், திருவாரூரில் மத்தியக் குழு ஆய்வு செய்து வருகிறது. நிவாரணம் வேண்டி விவசாயிகள், பெண்கள் கண்ணீர் மல்க முறையிட்டனர். #Gaja
    தஞ்சாவூர்:

    கஜா புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழுவினர் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் சேத பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கிருந்து நேற்று இரவு தஞ்சை வந்து சங்கம் ஓட்டலில் தங்கினர். இன்று காலை 8.30 மணி அளவில் தஞ்சை சங்கம் ஓட்டலில் இருந்து மத்திய குழுவினர் புயல் சேத பகுதிகளை பார்வையிட புறப்பட்டு சென்றனர்.

    முதலில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே புதூர் பகுதியில் புயலால் சேதமான பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். புயலால் குடிசை வீடுகளை இழந்த விவசாயிகள், பெண்களிடம் சேத விவரங்களை கேட்டனர். அப்போது விவசாயிகளும் பெண்களும் வீடுகளை இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம். எனவே அரசு நிவாரண தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினர்.

    இதைத்தொடர்ந்து மத்திய குழுவினர் சேதமான தென்னை மரங்களை பார்வையிட்டனர். அப்போது தென்னை விவசாயிகள் மத்திய குழுவினரிடம் கூறும்போது, ‘‘ புயல் சேதத்தால் இதுவரை இந்த பகுதியில் 4 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அரசு அறிவித்த நிவாரணம் எங்களுக்கு போதாது. எனவே கூடுதல் நிவாரணம் வழங்க வேண் டும். 20 ஆண்டுகள் பின்னோக்கி எங்களது வாழ்க்கை சென்று விட்டது. இதுவரை அரசு அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

    இதையடுத்து விவசாயிகள் கருத்துகள், மற்றும் சேதமான தென்னை மரங்கள் விவரங்களை மத்திய குழுவினர் குறிப்பெடுத்து கொண்டனர். இதைத்தொடர்ந்து புலவன் காட்டில் சேதமான துணை மின்நிலையத்தை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். பின்னர் நெம் மேலி திப்பியகுடி பகுதிக்கு சென்று சேதமான நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டனர்.

    இதையடுத்து ஆலடி குமுளை பகுதிக்கு மத்திய குழுவினர் சென்று சேதமான சாலைகளை புகைப்படங்களை மத்திய குழுவினர் பார்த்தனர். பட்டுக்கோட்டை உளூர் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட்டனர். பின்னர் மல்லிபட்டினம், சென்று சேதமான மீனவர்களின் படகுகளை பார்வையிட்டனர். விசைபடகு, நாட்டு படகு மீனவர்கள் மத்திய குழுவினரிடம் கூறும்போது, படகுகளுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகை போதாது. கூடுதல் நிவாரண தொகையை அளிக்க வேண்டும். சுமார் 400 படகுகளுக்கு மேல் சேதமாகி உள்ளது என்று வேதனையுடன் தெவித் தனர். இதையடுத்து முத்துப் பேட்டை பகுதிக்கு சென்று புயல் சேத பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.



    மாலை 4 மணி அளவில் தஞ்சையில் இருந்து புறப்பட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு வெள்ள சேத பகுதிகளை பார்வையிட செல்கிறார்கள். அங்கு புயல் சேத பகுதிகளை பார்வையிட்டு விட்டு இரவு 8 மணிக்கு திருவாரூரில் இருந்து நாகை புறப்பட்டு செல்கிறார்கள். இரவு நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு ஓட்டலில் இக்குழுவினர் தங்குகிறார்கள்.

    நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் புயல் சேத பகுதிகளை பார்வையிடுகிறார்கள். பிற்பகல் 2.30 மணிக்கு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் ஆய்வு செய்துவிட்டு இரவு புதுச்சேரி செல்கின்றனர்.
    மானாமதுரை அருகே கிளங்காட்டூர் மற்றும் 16 கிராம விவசாயிகள் கண்மாய் வரத்து கால்வாயை தாங்களே இணைந்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை அருகே உள்ளது கிளங்காட்டூர் கிராமம், 800 ஏக்கர் பரப்பளவுள்ள கண்மாயை நம்பி 3 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. வைகை ஆற்றில் இருந்து கிருங்காக்கோட்டை என்ற இடத்தில் இருந்து பிரியும் நாட்டார் கால்வாய் மூலம் கிளங்காட்டூர் கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட நாட்டார் கால்வாயில் இதுவரை தண்ணீர் வரவில்லை. இதனால் இந்த கால்வாயை நம்பி உள்ள 18 கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

    கால்நடைகள் குடிக்கக் கூட தண்ணீர் இன்றி பெரும்பாலான கிராம மக்கள் விவசாயத்தை விட்டுவிட்டு மதுரை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டனர். தற்போது வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் நாட்டார் கால்வாயிலும் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கிளங்காட்டூரில் இருந்து 3 கி.மீ. தூரத்திற்கு விவசாயிகளே கால்வாயை தூர்வாரி வருகின்றனர். சமீப காலமாக மழை தண்ணீர் கூட வராததால் கண்மாய் வறண்டு காணப்படுகிறது.

    கால்வாய் முழுவதும் கருவேல மரங்களும், நாணல் புதர்களும் அடர்ந்து இருப்பதால் தண்ணீர் வர வாய்ப்பின்றி உள்ளது. இதனை தவிர்க்க விவசாயிகளே தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, கிளங்காட்டூர் உள்பட சுமார் 16 கண்மாய்களில் கால்நடைகள் குடிக்கக் கூட தண்ணீர் இல்லை.

    இதனால் பலரும் கால்நடைகளை விற்று விட்டனர். வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது நாட்டார் கால்வாயிலும் தண்ணீர் திறக்க வேண்டும். சில நாட்களுக்கு முன்பு சின்னகண்ணூர் கிராமத்திற்கு வந்த அமைச்சர் பாஸ்கரனிடம் கோரிக்கை மனு கொடுத்தோம். அவரும் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்றனர். #tamilnews
    நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு நிரந்தர தடை விதிக்கவேண்டும் என பொட்டிப்புரம் கிராம விவசாயிகள் தெரிவித்துள்ளனர். #BanOnNeutrino #Neutrino #NationalGreenTribunal

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் பகுதியில் அம்பரப்பர் மலையை குடைந்து ரூ.1500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதனை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இம்மனுவை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதிக்கு இடைக்கால தடை விதித்தும், தேசிய வனவிலங்குகள் வாரியத்தின் அனுமதியை பெறுமாறும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு பொட்டிப்புரம் கிராம மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பொட்டிபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது

    பெரியகருப்பன்:- ஆரம்ப கட்டத்தில் இருந்தே நியூட்ரினோ ஆய்வுமையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறோம். எங்களுக்கு உதவியாக தேனி மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் ஆதரவு தெரிவித்தனர். நியூட்ரினோ ஆய்வு மையம் அமையும் போது ஏற்படக்கூடிய பாதிப்புகள்குறித்து நாங்கள் கேட்ட பல கேள்விகளுக்கு அதிகாரிகளால் சரியான பதில் அளிக்க முடியவில்லை.


    தற்போது பசுமை தீர்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பு ஓரளவுக்கு ஆறுதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை நிரந்தரமாக தடை செய்யவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

    பிச்சைமுத்து :- மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் போலியான அறிக்கைகளை பெற்று நியூட்ரினோ ஆய்வுமையம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. இப்பகுதிக்கு நேரடியாக வந்து பார்வையிட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டிருக்கவேண்டும். மேற்கு தொடர்ச்சி மலை வனவிலங்குகள் மற்றும் பறவைகள் வாழும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.


    இங்கு நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால் இயற்கை பாதிக்கப்படுவதுடன் விவசாயமும் செய்யவே முடியாத நிலை உருவாகும். இதற்காகத்தான் நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். மத்திய மாநில அரசுகள் விவசாயிகளை அழிக்கும் இத்திட்டத்தை கைவிடவேண்டும். #BanOnNeutrino #Neutrino #NationalGreenTribunal

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. #diwali
    நொய்யல்:

    தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 6-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே இனிப்பு வகைகள் பிரதானமாக இருக்கும். இதற்காக வெல்லம் தயாரிக்கும் பணி கரூர் பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. முத்தனூர், கவுண்டன்புதூர், நடையனூர், கரைப்பாளையம், நொய்யல், சேமங்கி, கொளத்துப்பாளையம், வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர்.

    நிலத்தில் கரணை பதித்தவுடன் பல விவசாயிகள் புகளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டிச் செல்வதற்கு பதிவு செய்கின்றனர். பதிவு செய்யாத விவசாயிகள் கரும்பு விளைந்தவுடன் பல்வேறு பகுதிகளில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,300-க்கு விற்பனை செய்கின்றனர்.

    கொள்முதல் செய்யப்படும் கரும்புகளை நவீன எந்திரத்தின் மூலம் சாறு பிழிந்து இரும்பு கொப்பரையில் ஊற்றி காய வைத்து சரியான பதத்துடன் பாகு வந்தவுடன், மர அச்சுத் தொட்டியில் ஊற்றி உலர வைத்து குப்புற கவிழ்த்து மர சுத்தியலால் தட்டுகின்றனர். அதிலிருந்து அச்சு வெல்லம் விழுகிறது.

    அதேபோல மரத்தொட்டியில் கரும்பு பாகை ஊற்றி உலர வைத்து துணிகள் மூலம் உருண்டை பிடித்து உருண்டை வெல்லம் தயாரிக்கப்படுகிறது. பின்னர் நன்கு உலர வைத்து சாக்குகளில் 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயாரிக்கப்படுகிறது. தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை வியாபாரிகள் வாங்கி லாரிகள் மூலம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    தீபாவளிக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ளதால் இந்த பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி இரவு-பகலாக நடந்து வருகிறது. கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,150-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,150-க்கும் வியாபாரிகள் வாங்கிச்சென்றனர். இந்த வாரம் ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1,200-க்கும், அச்சு வெல்லம் ரூ.1200-க்கும் வாங்கிச் செல்கின்றனர். வெல்லத்துக்கு ஓரளவு விலை கிடைப்பதால், விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #diwali
    செந்துறை அருகே விவசாயிகள் வேலியுடன் அமைத்த பாதையில் அரியலூர் டிஎஸ்பி, செந்துறை தாசில்தார் உமாசங்கரி ஆகியோர் தலைமையில் வேலி அமைக்கும் பணி தீவிரமாக் நடந்து வருகிறது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலங்கைச்சேரியிலிருந்து நல்லாம்பாளையம் வரை நீர்வழி மற்றும் வண்டி பாதை உள்ளது. இந்த பாதையை அப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப்பாதையை விவசாயிகள் பயன்படுத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் விவசாயிகளிடம் பேசி பட்டா நிலங்களை சேர்த்து மண் பாதை அமைத்தார்.

    இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் உஞ்சினி கிராமத்தில் இயங்கிவரும் சுண்ணாம்புக்கல் சுரங்க நிர்வாகம் இந்த பாதையில் லாரிகளை இயக்க முயற்சித்தது. இதனை இலங்கைச்சேரி விவசாயிகள் போராட்டம் நடத்தி தடுத்தனர்.

    கடந்த சில தினங்களாக மீண்டும் பாதை அமைத்து லாரிகளை இயக்க முயற்சி செய்தனர். இதனை கண்ட இலங்கைச்சேரி விவசாயிகள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதனைத்தொடர்ந்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி தலைமையில் 2 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது விவசாயிகள் விவசாய பயன்பாட்டுக்காக எங்களது பட்டா நிலங்களை விட்டு கொடுத்துள்ளோம் என்று கூறினர்.

    சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் ஜோதி மற்றும் அரியலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் தாஸ் ஆகியோர் பார்வையிட்டு விவசாய நிலங்களை அளவீடு செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் செந்துறை கிராம நிர்வாக அதிகாரி இளையராஜா, தலைமை சர்வேயர் அடங்கிய குழுவினர் 2 நாட்கள் அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர். அளவீடு செய்ததில் விவசாயிகள் பட்டா நிலம் ஒரு மீட்டருக்கு மேலாக சாலை பகுதியில் உள்ளது என்று அளவு காட்டினார்கள். மேலும் தங்களது வேலிகளை இந்த அளவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி சென்றனர். அதனை தொடர்ந்து விவசாயிகள் விட்டுக்கொடுத்த தங்களது பட்டா நிலங்களை மீண்டும் கைப்பற்றி வருவாய்த் துறையினர் கொடுத்த அளவு படி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் விவசாயிகள் வேலியுடன் அமைத்த பாதையில் அரியலூர் டி.எஸ்.பி.மோகன்தாஸ், செந்துறை தாசில்தார் உமாசங்கரி ஆகியோர் சென்று, பணியாளர்கள் உதவியுடன் பாதையில் மணலை கொட்டி லாரிகள் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் கழுமலையாறு படித்துறையை தூர்வாரி சீரமைத்து கொடுத்த விவசாயிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் கழுமலையாறு உள்ளது. இந்த ஆற்றை நம்பி தில்லைவிடங்கன், திட்டை, திருத்தோணிபுரம், தென்பாதி, சீர்காழி, அகணி, கொண்டல், வள்ளுவக்குடி, நிம்மேலி, மருதங்குடி, கைவிளாஞ்சேரி உள்ளிட்ட கிராஙம்களை சேர்ந்த விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் கழுமலையாறு சீர்காழி நகர் பகுதியின் வடிகாலாகவும் இருந்து வருகிறது.

    இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் எதிரில் மயிலாடுதுறை சாலையில் கழுமலையாற்றில் இரு புறமும் படித்துறை இருந்து வந்தது. இதனை சீர்காழி, தென்பாதி மற்றும் நகர்வாசிகள் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் பயன் படுத்தி வந்தனர். ஆனால், காலப்போக்கில் படித்துறை முறையாக பராமரிக்கப்படாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு படித்துறை மண்ணை போட்டு மூடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்கள் கழுமலையாற்றில் உள்ள படித்துறையை சீரமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் இதுநாள் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றி படித்துறையை சீரமைக்காததால் நேற்று கழுமலையாறு பாசன சங்கம் சார்பில் விவசாயிகள் படித்துறைக்கு செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கடந்த 10 ஆண்டுகளாக மண்ணுக்குள் புதைந்திருந்த படித்துறையை சீரமைத்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் படித்துறையை சீரமைத்து கொடுத்த விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

    ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    தாமரைக்குளம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டத்துக்காக மேலூர், புதுச்சாவடி, ஜெயங்கொண்டம், தேவனூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்கள் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டது. அப்போது வழங்கப்பட்ட இழப்பீடு தொகை போதுமானதாக இல்லை என விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

    இதையடுத்து ஜெயங்கொண்டத்தில் 2 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையில், ஏக்கர் ஒன்றிற்கு குறைந்தது ரூ.13 லட்சம் வழங்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அனல்மின் திட்டத்துக்கு நிலம் கொடுத்த மேலூர் கிராமமக்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு சந்தை மதிப்பை விட இரண்டு மடங்கு கூடுதலாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து கலெக்டர், தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் கோரிக்கை மனு எழுதி கொடுத்தனர். #tamilnews
    வங்கி கடன்களை தாராளமயமாக்கியதன் மூலம் மத்தியில் ஆளும் அரசு விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்டு வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #farmerswelfare #Modi
    சண்டிகர்:

    வெள்ளையர் ஆட்சிக்காலத்தின்போது விவசாயிகளின் உரிமைகளுக்காக போராடியவரும், விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டங்களை வடிவமைக்க முன்னோடியாக இருந்தவருமான தீன்பந்து சோட்டு ராம் என்பவரின் 64 அடி உயர சிலையை அரியானா மாநிலம், சம்ப்லா கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

    சோட்டு ராமின் பேரனும் மத்திய மந்திரியுமான பிரேந்தர் சிங், அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கத்தார் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சோட்டு ராமின் போராட்டமும், உழைப்பும் இந்த மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு இன்றும் ஊக்க சக்தியாக இருப்பதாக புகழாரம் சூட்டினார்.

    விவசாயத்துறைக்கு மத்திய அரசு அளித்து வரும் முக்கியத்துவம் தொடர்பாக சுட்டிக்காட்டிய மோடி, வட்டிக்காரர்களின் கோரப்பிடியில் விவசாயிகளும், சிறு வணிகர்களும் சிக்காமல் இருக்க இவர்களுக்கு அரசு வங்கிக் கடன்கள் தாராளமயமாக்கப்பட்டுள்ளது.



    வங்கிகளின் கதவுகள் விவசாயிகளுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் மட்டும் சுமார் 66.50 லட்சம் மக்களுக்கு ஜன் தன் திட்டத்தின் மூலம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

    விவசாயிகளின் விளைபொருட்களுக்கு தற்போது உரிய விலை கிடைத்து வருவதாகவும், பயிர் காப்பீடு, நவீன வகை விதைகள், மண் வளத்தை பெருக்க போதுமான உரம் ஆகியவற்றை அரசு அளித்து வருவதாகவும் மோடி தெரிவித்தார். #farmerswelfare  #Modi #SirChhotuRam 
    விவசாயிகள் மருந்துகள் மூலம் விவசாயம் செய்வதை விட்டு இயற்கை விவசாயம் செய்ய முயற்சிக்க வேண்டும் என நீலகிரி கலெக்டர் இன்னசெண்ட் திவ்யா கூறியுள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கெங்கரை ஊராட்சி மெட்டுக்கல்லில் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 116 விவசாய பயனாளிகளுக்கு விலையில்லா நுண்ணீர் பாசன கருவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கி கூறியதாவது,

    நீலகிரி மாவட்டம் இயற்கையும் பசுமையும் நிறைந்த மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது விவசாயம் தான். விவசாயிகளான நீங்கள் மருந்துகள் மூலம் விவசாயம் செய்வதை விட்டு இயற்கை விவசாயம் செய்ய முயற்சிக்க வேண்டும். இயற்கை விவசாயம் செய்ய செலவு மிகவும் குறைவு. இங்குள்ள விவசாயிகள் விவசாயத்தில் மிகவும் ஈடுபாட்டுடனும், அக்கறையுடனும் இருக்கின்றீர்கள். எனவே அனைவரும் இயற்கை விவசாயம் செய்து பயனடைய வேண்டுமெனவும், வருங்கால சந்ததியினருக்கு கல்வி அறிவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

    ஆகவே நீங்கள் உங்களுடைய குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து அவர்கள் ஒரு நல்ல நிலையை அடைந்து உங்களுக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் தேனீ வளர்ப்பிற்காக 200 தேன் பெட்டிகளை செய்து கொடுத்தநிறுவனத்திற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.2,26,750 காசோலையினை கலெக்டர் வழங்கினார்.

    முன்னதாக ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தல் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் தூய்மை பணி குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்நிகழ்ச்சியில் குன்னூர் சாந்திராமு எம்.எல்.ஏ., தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்ரமணியசாம்ராஜ், தோட்டக்கலை உதவி இயக்குநர் மீராபாய், தோட்டக்கலைத்துறை அலுவலர் சந்திரன் கோத்தகிரி வட்டாட்சியர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்ஜனார்த்தனன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிவேலன், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது சர்வதேச அகிம்சை நாளான இன்று போலீசார் நடத்திய தடியடிக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். #Farmersrally #RahulGandhi
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாட்களாக 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    அனைத்து மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கத்தினர் பல்லாயிரக்கணக்கானோர் 'கிசான் கிராந்தி' என்ற பெயரில் கடந்த 23-ம் தேதி பேரணியாக புறப்பட்டு தலைநகர் டெல்லி நோக்கி வந்தனர்.
     
    இன்று இந்த பேரணி காசியாபாத் பகுதியை கடந்து உத்தரப்பிரதேசம்  - டெல்லி எல்லைப்பகுதியை வந்தடைந்தது.  டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாத வகையில் ராஜ்காட் செல்லும் பாதையில் அதிரப்படை போலீசார் தடுப்பு வேலி அமைத்திருந்தனர்.


    இதனால் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. தடுப்பு வேலிகளை டிராக்டர்களால் மோதி தடையை மீற முயன்றனர். அவர்கள் கலைந்து செல்வதற்காக  போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், லேசான தடியடி நடத்தியும் நடவடிக்கை எடுத்தனர்.

    இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ‘இரண்டாண்டு காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தின் தொடக்கமாக சர்வதேச அகிம்சை தினமான இன்று  டெல்லிக்குள் அமைதியாக நுழைய முயன்ற விவசாயிகள் மீது இந்த பா.ஜ.க. அரசு காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியுள்ளது.

    அவர்களின் கோரிக்கைகள் நாட்டின் தலைநகருக்குள் நுழைய முடியாதபடி முடக்கப்பட்டுள்ளது’ என தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். #Farmersrally #RahulGandhi
    டெல்லி எல்லைக்குள் நுழைய முடியாமல் போராடிவரும் வடமாநில விவசாய சங்க பிரதிநிதிகளுடன் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். #RajnathSingh #Delhifarmerprotests #KisanKrantiPadyatra
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாட்களாக 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    அனைத்து மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கத்தினர் பல்லாயிரக்கணக்கானோர் 'கிசான் கிராந்தி' என்ற பெயரில் கடந்த 23-ம் தேதி பேரணியாக புறப்பட்டு தலைநகர் டெல்லி நோக்கி வந்தனர்.
     
    இன்று இந்த பேரணி காசியாபாத் பகுதியை கடந்து உத்தரப்பிரதேசம்  - டெல்லி எல்லைப்பகுதியை வந்தடைந்தது.  டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாத வகையில் ராஜ்காட் செல்லும் பாதையில் அதிரப்படை போலீசார் தடுப்பு வேலி அமைத்திருந்தனர்.

    இதனால் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. தடுப்பு வேலிகளை டிராக்டர்களால் மோதி தடையை மீற முயன்றனர். அவர்கள் கலைந்து செல்வதற்காக  போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், லேசான தடியடி நடத்தியும் நடவடிக்கை எடுத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களமாக மாறியது.


    இதற்கிடையில், இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வேளாண்மைத்துறை இணை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் இன்று பிற்பகல் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்நிலையில், டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசாரின் நடவடிக்கைக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சில அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். #RajnathSingh #Delhifarmerprotests #KisanKrantiPadyatra
    ×