search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோதிகா"

    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகும் `காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஜோதிகா அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டாராம். #KaatrinMozhi #Jyothika
    `தும்ஹரி சூளு' படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கிறது `காற்றின் மொழி'. ஜோதிகா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை ராதா மோகன் இயக்க்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்திருந்தது. 

    இந்த நிலையில், படத்தை ஜோதிகாவின் பிறந்தநாளான அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்ய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்தும் குழு அனுமதி அளித்துள்ளது.

    இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடித்து வருகிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 



    போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார். விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. #KaatrinMozhi #Jyothika 

    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகும் `காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஜோதிகா அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டாராம். #KaatrinMozhi #Jyothika
    `நாச்சியார்' படத்தை தொடர்ந்து ஜோதிகா மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' மற்றும் ராதா மோகன் இயக்கத்தில் `காற்றின் மொழி' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். 

    சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கிய நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பிலேயே தனது அனைத்து காட்சிகளையும் ஜோதிகா முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடித்து வருகிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 



    போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார். படத்தை ஆயுதபூஜை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #KaatrinMozhi #Jyothika 

    மன்மதன், செக்கச் சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிம்பு - ஜோதிகா இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார்கள். #STR #Simbu #Jyothika
    சிம்பு, ஜோதிகா இணைந்து நடித்த ‘மன்மதன்’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்த ஜோடி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஜோதிகா நடித்து வரும் ‘காற்றின் மொழி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சிம்பு. இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றிருக்கிறது. இந்த படப்பிடிப்பின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

    ராதா மோகன் இயக்கத்தில் உருவாகும் ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடிக்கிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 



    போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார். இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `தும்ஹரி சூளு' படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. #KaatrinMozhi #Jyothika #Simbu
    திருமணத்திற்குப் பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜோதிகா, குழந்தைகளை கவனிப்பதில் சூர்யாவே சிறந்தவர் என்று கூறியிருக்கிறார். #Suriya #Jyothika
    திருமணத்துக்கு பின் சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த ஜோதிகா இப்போது நடிப்பில் மறுபடியும் பிசியாக இருக்கிறார். உங்களுக்கான வேடங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு ’உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் 36 வயதினிலே படத்துக்குப் பிறகு ஒன்றரை வருடம் வரை எனக்கு எந்தப் படமும் வரவில்லை. ‘மகளிர் மட்டும்’ தொடங்கிய போதுதான் நிறைய படங்கள் வந்தன. அவற்றில் நான்கு படங்கள் பெரிய ஹீரோக்களின் படங்கள்.

    ஆனால் பெண்களுக்கு முக்கியத்துவ‌ம் தந்து பவர்புல்லா இருந்தால் மட்டும்தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வந்து நடிக்கிறேன். அந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாகவும் கதாபாத்திரமாகவும் இருக்கவேண்டும்’ என்று கூறி இருக்கிறார்.



    சூர்யா பற்றி கேட்டதற்கு ‘என்னைவிட குழந்தைகளை கவனிப்பதில் அவர்தான் பெஸ்ட். அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை செய்ய விடுவார். நான் கொஞ்சம் கண்டிப்பான தாய்’ என்று பதில் அளித்து இருக்கிறார்.
    மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மாடல் அழகி டயானா எரப்பா நடித்திருப்பதாக சிம்பு கூறியிருக்கிறார். #CCV #STR
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `செக்கச் சிவந்த வானம்'. அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு செர்பியாவில் சமீபத்தில் முடிந்தது. 

    இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மாடல் அழகி டயானா எரப்பா நடித்திருப்பதாக சிம்பு வெளியிட்ட வீடியோவில் கூறியிருக்கிறார். சிம்பு - டயானா எரப்பா சம்பந்தப்பட்ட காட்சிகள் கடைசியாக செர்பியாவில் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் படத்தின் டப்பிங் பணிகள் துவங்க இருக்கிறது. 



    சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். 

    தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது. படத்தை வருகிற செப்டம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. #CCV #STR #Simbu #DayanaErappa

    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகும் `காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. #KaatrinMozhi #Jyothika
    ஜோதிகா நடிப்பில் கடைசியாக வெளியான `நாச்சியார்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். 

    இந்த நிலையில், ஜோதிகாவின் அடுத்த படமான காற்றின் மொழி படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று துவங்கியிருக்கிறது. பூஜையில் நடிகர் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா, ராதாமோகன், எம்.எஸ்.பாஸ்கர், தனஞ்ஜெயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நடிகர் சிவக்குமார் கிளாப்போர்டை அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

    ராதா மோகன் இயக்கும் இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடிக்கிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 



    போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார். படப்பிடிப்பை ஒரு மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது, படம் வருகிற அக்டோபரில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `தும்ஹரி சூளு' படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. #KaatrinMozhi #Jyothika 

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் `செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில், நடிகர் சிம்பு அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #CCV
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `செக்கச் சிவந்த வானம்'. அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் என பலரும் இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு செர்பியாவில் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

    சமீபத்தில் துபாயில் படப்பிடிப்பை முடித்த மணிரத்னம், அடுத்ததாக செர்பியாவில் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்தார். இந்த நிலையில், சிம்பு காட்சிகளுடன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது. 



    சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். 

    தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது. விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்க இருப்பதாகவும் படத்தை வருகிற செப்டம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. #CCV #VijaySethupathi

    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகவிருக்கும் `காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #KaatrinMozhi #Jyothika
    ஜோதிகா நடிப்பில் கடைசியாக வெளியான `நாச்சியார்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். 

    இந்த நிலையில், ஜோதிகாவின் அடுத்த படமான காற்றின் மொழி படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் 4-ஆம் தேதி துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி ஒருமாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது, படம் வருகிற அக்டோபரில் ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 



    ராதா மோகன் இயக்கும் இந்த படத்தில் இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடிக்கிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார். 

    இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `தும்ஹரி சூளு' படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. #KaatrinMozhi #Jyothika 

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் `செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #CCV
    மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்படிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதி அவரது காட்சிகளை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

    மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் இணைந்து நடிக்கின்றனர். 

    படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அரவிந்த்சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ் அருண் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழு முடித்துவிட்ட நிலையில், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. சிம்புவும் சமீபத்தில் துபாய் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். இந்த நிலையில், விஜய் சேதுபதியும் அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டாராம்.



    ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இருக்கும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

    சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. 

    படத்தை வருகிற அக்டோபரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #CCV #VijaySethupathi

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் `செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், சிம்பு - விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளுடன் படப்பிடிப்பு நிறைவடையவிருக்கிறது. #CCV
    மணிரத்னம் தற்போது முன்னணி நட்சத்திரங்களை வைத்து `செக்கச் சிவந்த வானம்' படத்தை இயக்கி வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

    படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் அரவிந்த்சாமி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்தார்.  அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அருண் விஜய் அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துவிட்டனர். தற்போது மணிரத்னம், சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை துபாயில் படமாக்கி வருகிறார். 



    அதேநேரத்தில் ஜோதிகாவின் காட்சிகளும் விரைவில் முடியவிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் சிம்பு, விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும், இந்த மாத இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. படம் வருகிற அக்டோபரில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. #CCV #STR #VijaySethupathi

    ×