search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலா"

    கர்நாடகாவில் காலா படத்துக்கு தடை விதிக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். #Kaala #NaamThamizharKatchi #Seeman
    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி வருமாறு:-

    ‘காலா’ படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிப்பது மேலும் மேலும் வன்மத்தைக் கூட்டிக்கொண்டே போகும். இது பெரிய இழப்புதான். சத்யராஜ் நடித்த ‘பாகுபலி’ திரைப்படத்திற்கும் இதே நிலை ஏற்பட்டபோதும் நாங்கள் இதே உணர்வில் தான் இருந்தோம். பொன்.ராதாகிருஷ்ணன் ‘காலா’ திரைப்படத்திற்கு குரல் கொடுக்கிறார்.


    ஆனால் சத்யராஜ் நடித்த ‘பாகுபலி’ திரைப்படத்திற்கு ஏன் இதேபோல் குரல் கொடுக்கவில்லை? அவர் நடுநிலையாகத் தானே பேசியிருக்கவேண்டும்? இப்பொழுது அவர்களுக்கு வேண்டியவர்கள் என்பதால் மட்டும் எதிர்த்து குரல் கொடுப்பதா? இது ரஜினி படம் என்று மட்டும் பார்க்கக்கூடாது; இது இந்த மண்ணிலிருந்து வெளிவரும் படம்! ‘மெர்சல்’ படத்திற்கு வராத இடையூறுகளா..? நாளை கமல் படத்திற்கோ? விஜய் படத்திற்கோ? என் படத்திற்கோ இடையூறு ஏற்பட்டாலும் எங்களது நிலைப்பாடு ஒன்றுதான்.

    இவ்வாறு சீமான் கூறினார். #Kaala #NaamThamizharKatchi #Seeman
    திரவிய நாடார் புகழை இருட்டடிப்பு செய்யும் வகையில் வெளியாகும் ‘காலா’ படம் திரையிடப்படும் தியேட்டர்களை முற்றுகையிடுவோம் என்று நாடார் சங்கங்கள் அறிவித்துள்ளன.
    சென்னை:

    நாடார் மக்கள் சக்தி தலைவர் அ.ஹரிநாடார், தமிழ்நாடு நாடார் சங்கத்தலைவர் முத்துரமேஷ் ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    1956-ம் ஆண்டு காலகட்டங்களில் மும்பைக்கு பிழைப்பு தேடிச்சென்ற தமிழர்கள் இனரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்தபோது, அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்ந்தவர், நெல்லை மாவட்டம் உமரிக்காட்டை சேர்ந்த திரவிய நாடார்.

    ‘கூடுவாலா சேட்’ என்று அன்புடன் அழைக்கப்படுகின்ற திரவிய நாடார் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமே, பா.ரஞ்சித் டைரக்‌ஷனில் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘காலா’. ஆனால் இப்படத்தில் திரவிய நாடார் புகழை இருட்டடிப்பு செய்து, கதை நாயகனை ஒரு தலித் சமூக தலைவராக மாற்றியிருக்கிறார் டைரக்டர் ரஞ்சித்.

    ‘காலா’ படம் ஒரு கற்பனை கதை, திரவிய நாடார் கதை அல்ல என்பதை படக்குழு இதுவரை மறுக்கவே இல்லை. இப்படம் திரைக்கு வந்தால் நிச்சயமாக தென் தமிழகத்தில் சாதிய பிரச்சினைகள் நிகழும். எனவே தான் ‘காலா’ படத்தை தடை செய்யக்கோரி வலியுறுத்துகிறோம். ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

    எல்லாவற்றையும் மீறி தமிழர்களை சமூக விரோதிகள் என்று பேசிய ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படம் திரைக்கு வந்தால், திரையிடப்படும் அனைத்து தியேட்டர்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். ‘காலா’ படத்தை நாடார் சமுதாய தலைவர்களுக்கு திரையிட்டு காட்டி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள படக்குழு தயாராக வேண்டும். அதன்மூலம் இச்சமூகத்தில் சாதிய மோதல்கள் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின்போது சென்னை நாடார் சங்க செயலாளர் டி.விஜயகுமார் உடனிருந்தார். #tamilnews
    காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். #Rajini #Kaala
    காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இதனால், அவரது படம் கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. காலா படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், கர்நாடகாவில் காலா வெளியாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது.

    காலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து, கர்நாடக வர்த்தக சபையுடன், தேசிய திரைப்பட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் ‘காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

    வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், படத்தை ரிலீஸ் செய்ய அரசுக்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பு வழங்கியது. அதேநேரத்தில் படம் வெளியாகும் பட்சத்தில் கர்நாடக அரசு திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

    ஆனால், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினிகாந்த் தெரிவிக்க வேண்டும், காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகள் - விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினிகாந்த் கூற வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

    இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம். காவிரி மேலாண்மை பிரச்சனையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல் படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு. காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை. காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது’ என்றார்.
    கர்நாடகாவிற்கு சென்ற கமல்ஹாசன், காலா படத்துக்கு தடைவிதித்தது குறித்து பேசாததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். #Kamal #PrakashRaj #Kaala
    நடிகர் கமல்ஹாசன் கர்நாடகாவுக்கு சென்று முதல்-அமைச்சர் குமாரசாமியை சந்தித்தார். அப்போது காலா படத்துக்கு கர்நாடகாவில் தடைவிதித்தது குறித்து அவர் பேசாதது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    இதற்கு பதில் அளித்த கமல் ‘காலாவை விட, காவிரி முக்கியம்’ என்றார். இதற்கு பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    “கர்நாடக முதல்வரிடம் காலா படம் குறித்து கமல்ஹாசன் பேசாதது தவறு. விஸ்வரூபம் படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டபோது அதை கமல்ஹாசன் பெரிதுபடுத்தினார். உலகமே அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்பதுபோல அவரது பேச்சுக்கள் இருந்தன. ஆனால் காலா படத்துக்கு இப்போது அவர் குரல் கொடுக்காமல் இருக்கிறார்.

    நான் காலா படத்துக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன். எல்லா படங்களுக்காகவும் பேசுவது எனது கடமை. கர்நாடகாவில் காங்கிரஸ், பா.ஜனதா, ம.ஜ.த என்று எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் கருத்துரிமையை பாதுகாக்க வேண்டும். சமூக விரோதிகளின் செயலை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. படத்தை வெளியிடக்கூடாது என்று தடுப்பது தவறு. பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் இருப்பதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும்.” இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.
    ரஜினியின் காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Kaala #Rajini #Dhanush
    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ திரைப்படம் வருகிற 7-ந்தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கி இருக்கிறார். 

    காவிரி பிரச்சனையின் போது, தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதால், அவர் நடிப்பில் உருவாகும் படங்களை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய எதிர்ப்பு கிளம்பியது. காலா படத்தை திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து காலா படத்திற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை காலா படத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது. 



    காலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து, கர்நாடக வர்த்தக சபையுடன், தேசிய திரைப்பட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் ‘காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. 

    இன்று இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், படத்தை ரிலீஸ் செய்ய அரசுக்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பு வழங்கியது. அதேநேரத்தில் படம் வெளியாகும் பட்சத்தில் கர்நாடக அரசு திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

    காலா படத்துக்கு அதிக கட்டணம் வசூலிப்பதை ரஜினி காந்த் தடுக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். #Kaala #PMK #AnbumaniRamadoss
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நாளை மறுநாள் வியாழக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், அந்த படத்திற்கான நுழைவுச் சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன. முதல் இரு நாட்களுக்கு ஒரு நுழைவுச்சீட்டுக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு மொழிப்படத்திற்கும் ஒவ்வொரு அளவில் உள்ளாட்சி வரி வசூலிக்கப்படுவதால், எந்த மொழிப்படம் என்பதைப் பொறுத்து கட்டணம் மாறுபடுகிறது. சென்னையில் தமிழ் திரைப்படங்களுக்கு அதிகபட்சக் கட்டணமாக ரூ.165.78 வசூலிக்கப்படுகிறது. பிற இந்திய மொழிப் படங்களுக்கு ரூ.176.44, ஆங்கிலப் படங்களுக்கு ரூ.184.06 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    காலா திரைப்படத்தைப் பொறுத்தவரை அதிகாரப் பூர்வமாகவே ரூ.207.25 வரை நுழைவுச்சீட்டுக் கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவே இயல்பைவிட அதிகமானக் கட்டணம் எனப்படும் நிலையில் இதைவிட 10 மடங்கு கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை. இந்த அத்துமீறல்களை எந்த சிஸ்டம் அனுமதிக்கிறது என்பதும் புரியவில்லை.

    சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் உள்ள இரண்டாம் நிலை திரையரங்குகளில் சில நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கி விட்டது. அந்த திரையரங்குகளில் பெரும்பாலான இருக்கைகள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே முன்பதிவு செய்யப்பட்டன.

    ஆனால், வணிக வளாங்களில் உள்ள முதல் நிலை திரையரங்குகள் உள்ளிட்ட பெரும்பாலான திரையரங்குகளில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கும், இன்று காலையும் முன்பதிவு தொடங்கின. இவற்றில் முன்பதிவு தொடங்கும் போதே 95 சதவீதம் இருக்கைகள் நிரம்பியிருந்தன.

    அவற்றுக்கான நுழைவுச் சீட்டுகள் தான் சட்டவிரோதமாக சில முகவர்களுக்கு வழங்கப்பட்டு, கள்ள சந்தையில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 5 சதவீதம் முன் வரிசை இருக்கைகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்கப்படுகின்றன. இதை வர்ணிக்க பகல்கொள்ளை என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை.

    நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களைக் கூறுகின்றனவா, இல்லையா? என்பது ஒருபுறமிருக்க அவரது திரைப்படங்களை, அவை வெளியாகும் நாளிலோ, அதற்கு வாய்ப்பில்லை என்றால் அடுத்த சில நாட்களிலோ கண்டு மகிழ வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் லட்சியம் ஆகும்.

    இதற்காக, ரஜினியின் ஏழை ரசிகர்கள் கூட கடன் வாங்கி ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொட்ட தயாராக உள்ளனர். ரசிகர்களின் இந்த பலவீனம் தான் நடிகர் ரஜினி மற்றும் அவரது படத்தயாரிப்பாளர்களின் பலம். ஆனால், இந்தக் கலாச்சாரம் தான் சட்ட விரோத கள்ளச்சந்தையை ஊக்குவிப்பதுடன், ஏழை ரஜினி ரசிகர்களை கடன்காரர்களாக்குவதற்கும் வகை செய்து வருகிறது.

    ஆனால், இப்போது காலம் மாறியிருக்கிறது. சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அரிதாரம் பூசுவதற்கு ஆயத்தமாகி வருகிறார். உரிமைகளுக்காக போராடுவது சமூகவிரோதிகளின் செயல் என்று அவர் கூறினாலும் கூட, தமது திரைப்படத்தில் கைத்தட்டல்களை வாங்குவதற்காக உரிமைகளுக்காக அவர் போராடுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

    சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்; விதிமீறல்களையும், ஊழல்களையும் ஒழிக்க வேண்டும் என்பது தான் நடிகர் ரஜினிகாந்தின் நோக்கம் என்றால், அதற்கான நடவடிக்கைகளை தமது திரைப்படத்திற்கான நுழைவுச்சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதிலிருந்து தொடங்க வேண்டும்.

    அதற்காக தாம் நடித்த காலா திரைப்படத்தை நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் கொடுத்து பார்க்கக்கூடாது என்று தமது ரசிகர்களுக்கு நண்பர் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை மூலமாகவோ, காணொலி பதிவு மூலமாகவோ உடனடியாக அறிவுறுத்த வேண்டும்.

    கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்வதுடன், அந்த திரையரங்குகளில் காலா திரைப்படம் திரையிடப்படுவதை தயாரிப்பாளர் மூலம் தடுத்து நிறுத்தவும் நண்பர் ரஜினிகாந்த் முன்வர வேண்டும். அப்போது தான் நண்பர் ரஜினிகாந்த் அவரது நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Kaala #PMK #AnbumaniRamadoss
    காலா புரோமஷன் நிகழ்ச்சிக்காக ஐதராபாத் சென்ற ரஜினி, தான் எதிர்பார்த்ததை விட குறைவாக தான் எதிர்ப்புகள் வந்திருப்பதாக கூறியிருக்கிறார். #Kaala #Rajinikanth
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாக ரஜினி தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ரஜினி விளக்கம் அளிக்கும் வகையில் ரஜினி அளித்த பேட்டி வருமாறு:-

    கே:- தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக நீங்கள் தெரிவித்த கருத்துக்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளரே?

    ப:- சிலர் நான் சொன்னதை திரித்து சொல்லி வருகிறார்கள். இப்போது தொழில்நுட்பம் பெறுகிவிட்டது. யூடியூப் வீடியோவில் என்ன வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். நான் என்ன சொல்லி இருக்கேன். என்ன பேசி இருக்கேன் என்பது அதில் உள்ளது. இதில் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை. 

    கே:- காலா படத்தின் புரமோ‌ஷனுக்காகவே ரஜினி தூத்துக்குடி சென்றதாக விமர்சிக்கப்படுகிறதே? சாரிங்க... அது பற்றி நான் சொல்ல விரும்பல. ஆண்டவன் அருளால் என்னோட ரசிகர்கள், மக்களோட ஆதரவு உள்ளது. படம் ஒடுவதற்காக இந்த மாதிரி ஸ்டண்ட் கொடுக்கணும்னு அவசியம் இல்ல. சினிமாவுக்கு வந்து 43 வரு‌ஷம் ஆகுது. இந்த வயசுல நான் அதுமாதிரி செய்யணும்னு அவசியம் இல்லை.

    கே:- அரசியலில் குதித்துள்ள உங்களையும், உங்கள் தொழிலையும் தொடர்புபடுத்தி பேசுறத எப்படி பார்க்கிறீங்க?

    ப:- அவங்க அப்படித்தான் பண்ணுவாங்க. என்ன பண்றது. அரசியல் வேற, சினிமா தொழில் வேற.



    கே:- அரசியல் பிரவேசத்துக்கு அப்புறம் காலா படம் வருது. உங்க மன்றத்தின் சார்பா என்ன வேண்டுகோள் விடுக்கிறீர்கள்?

    ப:- எதிர்ப்புகள் இன்னும் கம்மியா இருக்கேன்னு நான் பார்த்துட்டு இருக்கேன். இதைவிட ஜாஸ்தியா இருக்கும்னு நினைச்சேன். படம் நல்லா இருந்தா 100 சதவீதம் நன்றாக ஓடும். நன்றாக இருந்தால் ஏற்றுக் கொள்வார்கள்.

    கே:- காலா படத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதே?

    ப:- கர்நாடகாவில் ஒரு பிரச்சினையும் வராது என்று எதிர்பார்க்கிறேன். எதிர்ப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. இது கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கும் தெரியும். அங்கு நமது தமிழக மக்கள் மட்டுமல்ல. பல லட்சம் பிறமொழி மக்களும் இந்த படத்தை பார்க்க மிகுந்த ஆர்வமாக உள்ளனர். எனவே அவர்களை ஏமாற்றக் கூடாது. எனவே கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட உறுதியான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். தேவையான பாதுகாப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கு. நான் மதிக்கும் பெரியவர் தேவேகவுடாவும் இருக்கிறார். அவர் நிச்சயம் படத்தை தடை செய்ய விடமாட்டார்.

    கே:- பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாத நிலையில் அவர் போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருகிறாரே?

    ப:- சார்... அது பற்றி நான் கருத்து கூறவிரும்பவில்லை.

    கே:- நீட் தேர்வு வேண்டாம் என்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

    ப:- இதுபற்றி பெரியவர்கள் கலந்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு ரஜினி கூறினார். #Kaala #Rajinikanth

    ரஜினிகாந்த் நடித்த காலா படத்தை திரையிட கர்நாடக மாநிலத்தில் எழுந்துள்ள எதிர்ப்பு தொடர்பாக பா.ஜ.க. தலைவர் ஈஸ்வரப்பா இன்று கருத்து தெரிவித்துள்ளார். #Kaala #BJPsupportsKaala
    ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வரும் 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக சமீபத்தில் ரஜினி தெரிவித்திருந்த கருத்துகளை முன்வைத்து, இந்தப் படத்தை திரையிடப் போவதில்லை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தீர்மானித்துள்ளது.

    இந்த தடையை மீறி கர்நாடகாவில் காலா திரைப்படம் வெளியானால் இங்குள்ள சில கன்னட அமைப்பினரால் அசம்பாவித சம்பவங்கள் நிகழலாம் என்ற அச்சத்தில் திரையரங்க உரிமையாளர்கள் உள்ளதாக தெரிகிறது.

    இந்நிலையில், ரஜினிகாந்த் நடித்த காலா படத்தை திரையிட கர்நாடக மாநிலத்தில் எழுந்துள்ள எதிர்ப்பு தொடர்பாக பா.ஜ.க. தலைவர் ஈஸ்வரப்பா இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

    சிக்மகளூருவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈஸ்வரப்பா, ‘அவர்கள் (அரசியல் உள்ளிட்ட) எந்த துறையில் இருந்தாலும் கலைஞர்கள் இந்த நாட்டின் சொத்து. அவர்கள் ஒரு மொழிக்கோ, பிராந்தியத்துக்கோ மட்டும் உட்பட்டவர்கள் அல்ல என்று குறிப்பிட்டார்.

    மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் இந்த கர்நாடக மாநில மக்களுக்கு மட்டுமே சொந்தக்காரராக இருந்ததில்லை. நாட்டின் பல பகுதிகளில் பல விருதுகளை அவர் பெற்றுள்ளர். எனவே, கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் எப்போதுமே ஒட்டுமொத்த நாட்டுக்குமே சொந்தமானவர்கள்தான் என்றும் அவர் தெரிவித்தார். #BJPsupportsKaala
    ரஜினியின் காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் தனுஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #Kaala #Rajini #Dhanush
    நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் வருகிற 7-ந்தேதி தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார்.

    கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் ரஜினி படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை படத்திற்கு தடை விதித்துள்ளது. 



    காலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து, கர்நாடக வர்த்தக சபையுடன், தேசிய திரைப்பட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் ‘காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    காலா பட டிக்கெட் விலை உயர்வு பற்றி டுவிட்டரில் பா.ம.க. தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். #Kaala #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் ‘காலா’ பட டிக்கெட் விலை உயர்வு பற்றி டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்து வருமாறு:-

    ஜோரா கைத்தட்டுங்க. காலா திரைப்படத்திற்கு முன்பதிவு தொடங்கியது. வழக்கமான அதிகபட்சக் கட்டணம் ரூ.165.78-க்கு பதிலாக ரூ.207.24-க்கு விற்கப்படுகிறதாம்.

    இதில் கொடுமை என்னவென்றால் காலா திரைப்படத்தில் ஏழைப் பங்காளனாக நடிக்கிறாராம் ரஜினிகாந்த். ஏழைப் பங்காளன்.... ஏழைப் பங்காளன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kaala #Ramadoss
    ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் ரிலீஸாக இருக்கிறது. #Kaala #Rajinikanth
    ரஜினியின் காலா படம் வருகிற 7-ந்தேதி வெளியாகிறது. பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். தனுஷ் தயாரித்துள்ளார்.

    தமிழகத்தின் தென் மாவட்டத்தில் இருந்து மும்பை சென்று வசிக்கும் தாராவி தமிழர்களுக்காக போராடிய தாதாவின் கதை தான் காலா. இதற்கிடையே ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    படம் ரிலீசுக்கு இடையே தூத்துக்குடி சென்ற ரஜினி தெரிவித்த கருத்துக்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்தது. 

    சில அமைப்புகள் காலா படத்துக்கு எதிராக போராட தயாராகி வருகின்றன. தமிழகம் முழுக்க இதுவரை 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் காலா வெளியீட்டை உறுதி செய்திருக்கின்றன. சென்னையில் மட்டும் இதுவரை 45-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலா திரையிடப்படுவது உறுதியாகி இருக்கிறது.

    தென் மாவட்டங்களில் ரஜினியின் காலா படத்தை புறக்கணிப்போம் என்ற ரீதியில் பரப்பிவருகிறார்கள். சென்னையிலும் சில அமைப்புகள் காலா வெளியாகும் போது படம் வெளியாகும் திரையரங் குகளின் முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பது போலீசுக்கு தெரிய வந்துள்ளது.



    இதனால் காலா படத்துக்கு பாதுகாப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. காலா வெளியாகும் திரையரங்குகள் எண்ணிக்கை இன்னும் முழுமை அடையவில்லை. எனவே திரையரங்கு எண்ணிக்கை மேலும் கூட வாய்ப்புள்ளதாக திரைப்பட வினியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

    காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து இருப்பதாக கூறி கன்னட அமைப்புகள் கர்நாடகத்தில் ‘காலா’ படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி உள்ளனர். கர்நாடகத்தில் ‘காலா’ படத்தை திரையிடக் கூடாது என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கும், கன்னட அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் ‘காலா’ படத்தை திரையிட தடை செய்து கர்நாடக வர்த்தக சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. படத்தை ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. #Kaala #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், காலா படத்தின் புரோமஷனுக்காக ரஜினிகாந்த் இன்று ஐதராபாத் சென்றுள்ளார். #Kaala #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ரஜினி மும்பையில் வாழும் தமிழ் மக்களுக்காக போராடும் தலைவனாக நடித்திருக்கிறார். நிலத்தின் உரிமைக்காக போராடும் கதையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருக்கிறது.

    படத்தின் ரிலீசையொட்டி தெலுங்கு பதிப்புக்கான விளம்பர நிகழ்ச்சி கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தூத்துக்குடி கலவரம் காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மதியம் 12.30 மணிக்கு ரஜினி விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டு சென்றார். 



    தனுஷின் வுண்டர்பார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். #Kaala #Rajinikanth

    ×