search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லண்டன்"

    இங்கிலாந்து நாட்டில் சூனியம் செய்து பெண்களை பாலியல் தொழிலுக்காக ஜெர்மன் நாட்டிற்கு கடத்தி வந்த நர்ஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
    லண்டன்:

    லண்டனைச் சேர்ந்த ஜோசப்பின் இயாமு என்ற செவிலி, சூனியம் செய்து பெண்களை பாலியல் தொழிலுக்காக ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு கடத்தியதாக கைது செய்யப்பட்டார்.  விசாரணையில், 2009-ம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற இயாமு தேசிய சுகாதார மையத்தில் செவிலியாக பணி புரிந்து வருவதாகவும், இவருக்கு பில்லி சூனியம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருப்பதும் தெரியவந்தது.

    இந்த பில்லி சூனியம் செய்வதன் மூலம் பெண்களை கடத்தி, அவர்களை கோழியின் இதயம், புழு, மற்றும் இரத்தம் போன்றவற்றை குடிக்கச் செய்து அவர்களை பாலியல் தொழிலுக்காக ஜெர்மன் நாட்டுக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், 30 ஆயிரம் முதல் 38 ஆயிரம் யூரோப் அளவுக்கு பணம் வாங்கிக் கொண்டு தங்களை பாலியல் தொழிலுக்காக விற்று விடுவதாகவும், இயாமு பில்லி சூனியம் செய்வதால் அவரை எதிர்க்க பயந்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்ட இயாமு மீது பர்மிங்காம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடத்தப்பட்ட பெண்கள் ஜெர்மனியில் ஒப்படைக்கப்பட்டவுடன் இமாமுவின் வேலை முடிந்துவிட்டதாகவும், அதன்பின் அங்கு உள்ளவர்கள் அந்த பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாகவும் வழக்கு விசாரணையின் போது அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    10 வார காரலமாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, பாலியல் தொழிலுக்காக பெண்களை கடத்தி வழக்கில் இயாமு குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

    பிரிட்டனில் கொண்டு வரப்பட்ட நவீன அடிமைகளுக்கான சட்டத்தில் தண்டனைக்கு உள்ளாக்கப்படும் முதல் குற்றவாளி ஜோசப்பின் இயாமு என்பது குறிப்பிடத்தக்கது. 
    இங்கிலாந்தின் மேடம் துசாட்ஸ் மியூசியத்தில் பிரபல யோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை அமைக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #MadameTussaudsMuseum #Ramdev
    லண்டன்:

    சர்வதேச அளவில் புகழ்பெற்ற மேடம் துசாட்ஸ் மெழுகு சிலை அருங்காட்சியகம் லண்டனில் அமைந்துள்ளது. இங்கு உலக நாடுகளில் பிரபலமானவர்களின் மெழுகு சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வரிசையில், பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் மெழுகு சிலை இந்த அருங்காட்சியகத்தில் விரைவில் இடம் பெறவுள்ளது.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு லண்டன் சென்றுள்ள பாபா ராம்தேவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், யோகாவை உலகளவில் பிரபலப்படுத்தும் முயற்சியாக எனது மெழுகு சிலை நிறுவப்பட வேண்டும் என அவர்கள் கேட்டு கொண்டனர். ஆனால் நான் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தேன். இங்கு சிலை நிறுவப்படுவதன் மூலம் பல்வேறு நாட்டினர் யோகாவின் பெருமைகளை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பதால் சிலை அமைக்க ஒப்புக் கொண்டேன். இதையடுத்து, எனது மெழுகு சிலை விரைவில் அமையவுள்ளது என தெரிவித்தார். #MadameTussaudsMuseum #Ramdev
    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 300 இடங்களுக்கு மேல் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என நிதி மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். #PiyushGoyal #BJP #2019Election
    லண்டன்:

    லண்டனில் நடைபெற்று வரும் இந்தியா யுகே வார விழாவில் மத்திய நிதி மந்திரி பியூஷ் கோயல் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    முத்ரா என்ற திட்டத்தின் மூலம் 120 மில்லியன் கடன்களை கொடுத்துள்ளோம். இந்த கடன் மூலம் மக்களை அவர்களது சொந்தக் காலில் நிற்க வைத்துள்ளோம். நாங்கள் தொடர்ந்து வங்கிகளை வலுப்படுத்துவோம். அரசு வங்கிகளை தனியார்மயமாக்குவது என்ற எண்ணம் இல்லை. அதுபோல நடக்காது.

    அடுத்த 30 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை வலுப்படுத்துவதில் கடந்த 4 ஆண்டுகளாக செலவிட்டுள்ளோம். நிறைய கட்டமைப்பு மாற்றங்களை 4 ஆண்டுகளில் செய்து வந்துள்ளோம். நிதி பற்றாக்குறை அதிகமாக இருந்து வருகிறது. பண வீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது.

    மக்களுக்கும், நாட்டுக்கும் தேவையான நடவடிக்கையை மட்டும் எடுங்கள் என பிரதமர் மோடி எங்களிடம் அறிவுறுத்தி உள்ளார். 

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். #PiyushGoyal #BJP #2019Election
    பிரிட்டன் தலைநகர் லண்டனின் தெற்கு பகுடியில் உள்ள லாக்போரோக் ரெயில் நிலையத்தில் மூன்று பேர் ரெயில் மோதி உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
    லண்டன்:

    பிரிட்டன் தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள லாக்போரோக் ரெயில் நிலையத்தில் இன்று காலை மூன்று நபர்கள் ரெயில் மோதி பலியாகியுள்ளனர். அவர்கள் குறித்த விபரங்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பலியான மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவராகவோ, நண்பர்களாகவோ இருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    எப்படி அவர்கள் மூவரும் ரெயில் மோதி இறந்தனர் என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 
    பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஓட்டலின் மேற்கூரையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 100க்கு மேற்பட்ட வீரர்கள் போராடி வருகின்றனர். #London #Knightsbridge #Fire
    லண்டன்:
     
    பிரிட்டன் தலைநகரான லண்டனின் மத்தியில் அமைந்துள்ளது நைட்ஸ் பிரிட்ஜ் ஓட்டல். இந்த ஓட்டலின் மேற்கூரையில் இன்று திடீரென தீ பிடித்து எரிந்தது.



    இதில் ஏற்பட்ட புகையால் அந்த பகுதி கருமையாக காட்சியளித்தது. தகவல் அறிந்து அங்கு 20க்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்றன.

    அதில் 120க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. #London #Knightsbridge #Fire
    இங்கிலாந்தின் லண்டன் நகரில் ஏற்பட்ட தொடர் மின்னல்களால் 200க்கு மேற்பட்ட விமானங்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். #StanstedAirport #Lightning #FlightsDelayed
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டில் கடந்த சில தினங்களாக வானிலை மாறியுள்ளது. இதனால் அங்கு தொடர் மின்னல்கள் ஏற்பட்டு வருகின்றன.

    கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 60,000க்கு மேற்பட்ட மின்னல்கல் பதிவாகி உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த தொடர் மின்னல்களால் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    லண்டன் விமான நிலையத்தில் மட்டும் சுமார் 200க்கு மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. மேலும், புறப்பட இருந்த 31 விமானங்களும், வருகை தரவிருந்த 18 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.



    இதுதொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியங்களுக்கு வருந்துகிறோம். விமானங்களின் அப்போதைய நிலவரம் குறித்து விமான நிலையத்திடம் அறிந்து கொள்ள வேண்டும் என பயணிகளை கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

    ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் பல விமானங்கள் மாற்று வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டன. மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விடுமுறை தினமான நேற்று விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடுமையாக அவதிப்பட்டனர். #StanstedAirport #Lightning #FlightsDelayed
    ஸ்டெர்லைட் போராட்டக்காரளுக்கு நிறுவனத்துக்கு எதிராக நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து, லண்டனில் உள்ள உரிமையாளர் வீட்டின் முன் போராட்டம் நடைபெற்றது. #Sterliteprotest#BanSterlite #policefiring
    லண்டன்:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    அவர்களை தடுத்து நிறுத்தும்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 11 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து லண்டனில் உள்ள உரிமையாளர் வீட்டில் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

    லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் வீடு அமைந்துள்ளது. தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் வாழ் தமிழர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் அனில் அகர்வால் வீட்டின் முன்பு திரண்டனர். அங்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. #Sterliteprotest#BanSterlite #policefiring
    மும்பையை சேர்ந்த மைனா மகிளா தொண்டு நிறுவனத்துக்காக சமூக சேவையாற்ற பிரிட்டன் இளவரசி மேகன் மார்க்லே விருப்பம் தெரிவித்துள்ளார். #MeghanMarkle #MynaMahilaFoundation
    லண்டன்:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செயல்பட்டு வருவது மைனா மகிளா தொண்டு நிறுவனம். கடந்த 2015-ல் தொடங்கப்படட இந்த அமைப்பு பெண்கள் சுயமாக சம்பாதிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    இதற்கிடையே, கடந்த ஆண்டு மெகன் மார்க்லே இந்தியா வந்தபோது மைனா தொண்டு நிறுவன பணிகளில் ஈர்க்கப்பட்டார். அந்த நிறுவனத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக கூறினார்.

    இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் இளையமகன் ஹாரிக்கும் மேகன் மார்கலுக்கும் நேற்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.



    இதில் மைனா மகிளா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சுஹானி ஜலோடா உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், லண்டனில் உள்ள கொல்கத்தா கேண்டீனில் நாளை நடக்கவுள்ள நிகழ்ச்சியிலும் அவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    திருமணம் முடிந்ததும் மணமகளை சென்று பார்த்த மைனா மகிளா தொண்டு நிறுவனத்தினர், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவர்களிடம், இந்தியாவில் சமூக சேவையாற்ற உள்ளதாக பிரிட்டன் இளவரசி மேகன் மார்க்லே தெரிவித்துள்ளார்.

    பிரிட்டன் அரசு அங்கீகரித்துள்ள ஏழு இந்திய தொண்டு நிறுவனங்களில் மைனா மகிளா தொண்டு நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. #MeghanMarkle #MynaMahilaFoundation
    பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிரவ் மோடி தற்போது லண்டனில் இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. #NiravModi #ED #PNBScam

    புதுடெல்லி:

    மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய குடும்பத்தினரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கி விட்டு அதை திரும்பச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் புகார் அளித்த நிலையில் நிரவ் மோடியும், அவருடைய குடும்பத்தினரும் வெளிநாட்டு தப்பிச்சென்று விட்டனர். 

    இந்த வழக்கில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் நிரவ் மோடி அவருடைய குடும்பத்தினர் தவிர, பஞ்சாப் நேஷனல் வங்கியின் 4 உயர் அதிகாரிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்ட இருந்தன. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்த 4-ம் காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வழக்கமான அறிக்கை தாக்கல் செய்தது.

    அதில், “நிரவ் மோடி வங்கிக்கு செலுத்தவேண்டிய ஒட்டு மொத்த கடன் தொகை ரூ.14,356 கோடி ஆகும். வங்கி உறுதியளிப்பு கடிதங்களை தவறான முறையில் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளிலும் இந்த மோசடி நடந்து இருக்கிறது. இதில் நிரவ் மோடியின் ஆபரண நிறுவனமும், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலரும் ஈடுபட்டு உள்ளனர்” என்று கூறப்பட்டு இருக்கிறது. 

    இந்நிலையில், வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிரவ் மோடி தற்போது லண்டனில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த பாஸ்போர்ட் மூலம் லண்டன் சென்றிருப்பதாகவும், அவரது சகோதரர் நிஷால் மோடி பெல்ஜியம் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அண்ட்வெர்ப் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #NiravModi #ED #PNBScam
    ×