search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99961"

    உண்மையில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் பல்வேறு நம்பிக்கைகளையும், கனவுகளையும் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயங்களை பெற்றோர் கவனத்தில் கொண்டால், நீங்களும் ஒரு மிகச்சிறந்த பெற்றோர்தான்!
    பொதுவாக எல்லா பெற்றோர்களும் தத்தம் குழந்தைகளுக்கு வளமான வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். அவர்களில் ஒரு தரப்பினர், தங்களால் விதவிதமான விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் வாங்கித் தர முடியும் என்பதால் அதை வாடிக்கையாகவும் கொண்டு உள்ளனர்.

    மேலும், இவர்கள் தங்களுடைய குழந்தைகள், அவரவர் விருப்பமானவற்றைத் தேர்ந்து எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கி தந்து, முக்கியமான தருணங்களில், அவர்களாகவே, தங்களுக்கு எது தேவை எது தேவையில்லை? என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுத் தருகிறார்கள்.

    மற்றொரு தரப்பு பெற்றோரோ, தங்களுடைய மகள்/மகன் ஒழுக்க நெறியில் சிறந்தவராகவும், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு இருக்க வேண்டுமென கருதுகின்றனர்.

    இதற்காக, இவ்வகை பெற்றோர் தங்களுடைய வாரிசுகளிடம், கண்டிப்பு மிக்கவராக நடந்து கொள்கின்றனர். இரண்டு தரப்பு பெற்றோரும்/குடும்பத்தினரும் தத்தம் குழந்தைகளை வளர்த்தெடுப்பதன் பின்னணியில், தனித்தனி பாணிகளைக் கையாண்டாலும் ஒருவிதத்தில் இணைந்துப் போகத்தான் செய்கின்றனர்.

    அவர்களை அறியாமல் செய்திடும் ‘தவறுகள்’ தான் அந்த இணைப்புத் தளம். அந்த தவறுகள் என்னென்ன என்பதையும், அவற்றால், எந்தெந்த மாதிரியான வேண்டாத விளைவுகள் ஏற்படும் என்பதையும் சற்று காண்போம்நேரம் செலவிடுவதை விரும்பாத மனப்பான்மைஎந்தவொரு பெற்றோரும் குழந்தைகளுடன் விளையாடியும், கதைகள் சொல்லியும் பொழுதைப் போக்கவே விரும்புகின்றனர். ஆனால், துரதிஷ்டவசமாக, பெற்றோர் இருவருக்கும் வீட்டில் குறைவான ஓய்வு நேரமே கிடைக்கிறது.

    இத்தகைய சூழலில், குழந்தை விளையாடுகிற நேரங்களில் பெற்றோர் தங்களது பணிகளைச் செய்து கொள்வது வாடிக்கை ஆகிவிட்டால் ஏற்கனவே, வளரத் தொடங்கிய குழந்தை தனது வாழ்க்கையைத் தானே தீர்மானிக்க ஆரம்பிக்கிறது. கடந்துபோன மணித்துளிகளை மீட்டெடுக்க எந்தவொரு வழியும் கிடையாது.



    எனவே, மென்மையான அரவணைப்பு, தலையை வருடிக் கொடுத்தல் என உடலளவில் குழந்தையோடு நெருக்கமாக இருக்க முயற்சி செய்யாமல், மனதளவிலும் நெருங்கி இருங்கள். அப்போதுதான் நீங்கள் சேர்ந்து இருக்கும் பொழுதுகளை ரசித்து அனுபவிக்க முடியும்.

    மழலை போன்ற நெருக்கமான உறவுகளைக் கட்டித்தழுவி கொஞ்சுதல் நல்ல அனுபவம் என்றாலும், ஒருசில பெற்றோர் சில நேரங்களில் இதைச் செய்ய விரும்புவது இல்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், பழமைவாதம் அல்லது வழக்கத்தில் இருந்து மறைந்தவை காரணங்களாக முன் வைக்கப்படுகின்றன.

    நீங்கள் மகள்-மகன் இருவருடன் படைப்பாற்றலை உருவாக்கும் கேம்ஸ்களை விளையாடுவதால், ‘அவர்கள் தலைசிறந்த கலைஞனாகவோ, இசை மேதையாகவோ வருவார்கள்’ என நாங்கள் சொல்லவில்லை. அதே வேளையில், அவ்வதிசயம் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்கு பெற்றோராக, தாங்கள் ஓடுதல், கால்பந்தாட்டம், சிலம்பம், நீச்சல், ஆடல்-பாடல் என பல்வேறு செயல்களில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்; இவ்வாறு செய்வதால், அவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளது? எந்தெந்த விளையாட்டுக்களில் அவர்கள் தன்னிகரற்று உள்ளார்கள் என்பதை நீங்கள் கண்டறிய முடியும். மேலும், எதிர்காலங்களில் குழந்தைகளுடைய ஆற்றலை வளர்த்தெடுக்கும் விதமாகவும் உங்களால் செயல்பட முடியும்.

    இரண்டாவதாக, எந்தவொரு தனித்திறனைத் தூண்டும் விளையாட்டாக இருந்தாலும், உதாரணத்துக்கு, அவர்களுடன் சேர்ந்து உரக்கப் படித்தல், பொம்மைகள் வைத்து விளையாடுதல் போன்ற எதுவாக இருந்தாலும், குழந்தைகளுடைய அறிவாற்றல், கற்பனைத்திறன் மற்றும் மொழியறிவை வளரச் செய்யும். இறுதியாக, குழந்தைகளின் ஆற்றலுடன் நீங்கள் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முடியும். மேலும், நீங்கள் இருவரும் சேர்ந்து சிலவற்றை செய்ய இது போதுமானதாக இருக்கும்.

    குழந்தை வளர்ப்பில் அனுபவம் உள்ள பெற்றோர், தத்தம் வாரிசுகளின் திறமைகளை கவனிக்காமல் இருந்ததற்கு வருத்தம் கொள்வார்கள். இருப்பினும், ஒரு சில திறமைகள் மிகச்சிறு வயதிலேயே கண்காணிக்கப்படும்போது, குழந்தைகள் புதுப்புது விளையாட்டுக்களில் ஈடுபடுவதை முயற்சி செய்வார்கள்; மேலும், குறுகிய காலத்துக்குள் வாசிக்கவும் செய்வார்கள்.
    வேலை, சம்பளம் என்பதை மட்டும் அடிப்படையாக கொண்டு படிப்பை தேர்வு செய்து விடக்கூடாது. விருப்பமான துறைகளில் தங்களுக்கு உள்ள வாய்ப்புகளை அறிந்து படிக்க வேண்டும்.
    கல்விதான் ஒரு மனிதனை பண்பு உள்ளவனாக மாற்றுகிறது. கல்வி கற்ற சமுதாயம் தான் உயர்ந்த சமுதாயமாக கருதப்படுகிறது. எனவே அனைவரும் கட்டாயமாக கல்வி கற்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றியது. இதனால் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் கட்டாயமாக கல்வி கற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் இடைநிற்றல் வெகுவாக குறைந்ததால் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதற்காக மாணவ-மாணவிகளுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாநில அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

    பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதையடுத்து மாணவ-மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்து படிக்க வேண்டும். ஆனால் எந்த படிப்பை தேர்வு செய்வது என்பதில் அவர்களுக்கு பல்வேறு குழப்பங்கள் இருக்கும். ஆனால் ஒவ்வொருவரும் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தங்களுக்கு விருப்ப மான பாடத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும். மேல்நிலை கல்வியுடன் படிப்பை விட்டு விடக் கூடாது. நாட்டில் உயர்கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை தற்போதும் குறைவாகவே உள்ளது. அதை உயர்த்த வேண்டியது அவசியம். இதற்கு கல்லூரி படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு என்று மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க வேண்டும். ஆராய்ச்சி நிலை வரை மாணவ- மாணவிகள் படித்தால் தான், அது அவர்களுக்கு மட்டுமின்றி நாட்டிற் கும் பயன் உள்ளதாக இருக்கும்.

    கல்லூரி படிப்பை தொடர கிராமப்புற மாணவர்கள், நகரங்களை தேடி செல்ல வேண்டிய நிலை தற்போதும் உள்ளது. அதற்காக அவர்கள் மனம் தளர்ந்து விடாமல் விருப்பமான படிப்பு மற்றும் கல்லூரியை தேர்வு செய்து படிக்க வேண்டும். எந்த படிப்பை தேர்வு செய்வது என்பதில் மாணவ- மாணவிகளுக்கு பெற்றோர்கள் உதவிகரமாக, வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். மாறாக மாணவ- மாணவிகளை நிர்பந்தம் செய்து, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டு விடக்கூடாது. எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு மாணவர்களின் கல்வி விருப்பத்தை நிறைவேற்ற பெற்றோர்கள் முயற்சி செய்வார்கள். அதை புரிந்து கொண்டு மாணவர்களும் செயல்பட வேண்டும்.

    வேலை, சம்பளம் என்பதை மட்டும் அடிப்படையாக கொண்டு படிப்பை தேர்வு செய்து விடக்கூடாது. விருப்பமான துறைகளில் தங்களுக்கு உள்ள வாய்ப்புகளை அறிந்து படிக்க வேண்டும். அந்த கல்வி தான் வாழ்க்கை முழுவதற்கும் நிறைவை தருவதாக இருக்கும். அப்படி இல்லாத நிலையில் வேலை, சம்பளம் மட்டும் மகிழ்ச்சி அளித்து விடாது. எனவே உயர் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் மாணவ- மாணவிகள் உறுதியாக இருக்க வேண்டும். அது அவர்களை உயர்த்திக் கொள்ளவும், நாட்டை வளப்படுத்துவதற்கும் உதவும் என்பது நிச்சயம்.
    கர்நாடகத்தில் நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவி மற்றும் குழந்தையை கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம், லட்சுமேஸ்வரா வட்டம், கோனாலா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது28), இவரது மனைவி நிர்மலா (25), இவர்களது 6 மாத ஆண் குழந்தை நந்தீஷ்.

    மனைவியின் நடத்தையில் ரமேஷ் சந்தேகப்பட்டார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று நிர்மலாவுடன் ரமேஷ் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது ஆத்திரமடைந்த ரமேஷ் கோடாலியால் நிர்மலா, குழந்தை நந்தீஷை வெட்டி உள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இதையடுத்து லட்சுமேஸ்வரா காவல் நிலையத்தில் ரமேஷ் சரணடைந்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குழந்தைகள் எப்போது பேசும்? இயல்பாக குழந்தைகள் பேசுவதற்கு என்னென்ன பயிற்சிகளைக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பேச பெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என்று பார்க்கலாம்.
    சில குழந்தைகள் விரைவில் பேச தொடங்கும். சில குழந்தைகளுக்கு பேசுவதில் தாமதமாகும். குழந்தைகள் எப்போது பேசும்? இயல்பாக குழந்தைகள் பேசுவதற்கு என்னென்ன பயிற்சிகளைக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பேச (helping your child speech) பெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என்று பார்க்கலாம்.

    ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு பேசும் திறன், கேட்கும் திறன் இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்வது நல்லது. 6 மாத குழந்தைகளுக்கு, வாயிலிருந்து ‘ஜொள்ளு வழிதல்’ அறிகுறி தெரியும். பேச முயற்சி செய்யும் அறிகுறிகளும் தென்படும். இதனால் பேச்சு திறனை உறுதி செய்யலாம்.

    குழந்தையிடம் பேசும்போது, வாய் அசைவைப் பார்த்து, சத்தம் வருவதைக் குழந்தை உணர்ந்து கொண்டு ‘உர்’ என எச்சிலை ஊதி தள்ளும். இதுவே குழந்தை பேச தொடங்குவதற்கான முதல் அறிகுறி. நீங்கள் பேசும்போது உங்களையே பார்த்துக்கொண்டு தானும் பேச முயலுவதைப் போல ‘ங்… ஞ…ங்க…ஞ…’ என்று குரல் எழுப்பும்.

    நீங்கள் பேசும் சத்தம் பார்த்து தன் கவனத்தைத் திருப்புவதும் நல்ல அறிகுறிதான். காது நன்றாக கேட்கிறது. எனவே, பேச்சும் இயல்பாக வரும் என அர்த்தம். குழந்தை பேசுவதற்கு முன்பு அதன் கேட்கும் திறன் நன்றாக இருக்க வேண்டும். நாம் பேசுவதை குழந்தை நன்கு கூர்ந்து கவனித்த பின்பு, அதற்கு பதில் சொல்லவோ செய்கை செய்யவோ முயற்சி செய்யும்.

    கேட்கும் திறன், புரிந்து கொள்ளும் திறன் சரியாக இருக்க வேண்டும். அதற்கான வளர்ச்சி இருந்தால் மட்டுமே, விரைவில் குழந்தையால் பேச முடியும். பேசவும் தொடங்கும். முதல் ஒன்றிரண்டு மாதங்கள் நாம் பேசுவதை நாம் வாய் அசைப்பதைக் கவனிக்கும். தலை அசைப்பதைக் கவனிக்கும். கை, கால் ஆட்டுவதைப் பார்க்கும்.

    ‘ங்ஞா, ங்ஞா’ என்ற வார்த்தைதான் குழந்தைக்கு பேச வரும். பசி வரும் போது, தன்னை யாரும் கவனிக்காதபோது இப்படி சத்தமிடும். அடித்தொண்டையிலிருந்து இப்படி கத்தி சத்தம் போடும். பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள் தினமும் குழந்தையிடம் பேசி, சிரித்து, கொஞ்சி விளையாட வேண்டும்.

    என்ன பன்றீங்க… சாப்டீங்களா… பாப்பாக்கு பசிக்குதா… பாப்பாக்கு தூக்கம் வரலையா என எதாவது குழந்தையிடம் பேசி கொண்டு இருப்பது நல்லது. இதுவே மிகவும் முக்கியமான பயிற்சி. குழந்தைகள் நீங்கள் பேசுவதைௐ கவனிக்கும். மெல்ல மெல்ல ஒவ்வொரு எழுத்தாக குழந்தையும் சத்தம் போட ஆரம்பிக்கும்.

    குழந்தையை சுற்றி பெரியவர்கள் உட்கார்ந்து பேசும் வீட்டில், வெகு விரைவில் குழந்தைகள் பேசுவார்கள்… 10 மாதத்திலே ஒரு குழந்தை இரண்டு எழுத்துகளை கோர்த்து பேசும் அளவுக்கு திறன் கொண்டிருந்தான். அதற்கு காரணம் அந்த வீட்டில் உள்ள அனைவரும் குழந்தையிடம் அவ்வப்போது பேசி கொஞ்சி விளையாடியதே முக்கிய காரணம்.

    அம்மா சொல்லு, அப்பா சொல்லு, அண்ணா சொல்லு என உறவுகளின் பெயரை சொல்ல சொல்லி பழக்குவது குழந்தைகளுக்கான சிறந்த பயிற்சி. மா, ப்பா, தா, வா இப்படி ஒவ்வொரு எழுத்தாக குழந்தையிடம் பேசி பேசி கற்பிக்கலாம்.
    சில குழந்தைகள், பிறந்தது முதல் நான்கு மாதங்கள் வரையில் தூங்குவதற்கு சிரமப்படும். காரணம், பிரசவம் வரை தாயின் கருவறைச் சூழலில் இருந்த குழந்தை அதன் பின்னர் புறஉலகுச் சூழலுக்கு பழகிக்கொள்வதில் எதிர்நோக்கும் சிரமங்கள்தான்.
    சில குழந்தைகள் இரவில் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அழுதுகொண்டே இருக்கும். இதனால் தாயின் தூக்கம் கெடுவது மட்டுமே பிரச்சினை அல்ல. தூக்கமின்மை காரணமாக உடல்நல, மனநல பிரச்சினைகளும் பிரசவித்த தாய்க்கு ஏற்படக்கூடும்.

    சில குழந்தைகள், பிறந்தது முதல் நான்கு மாதங்கள் வரையில் தூங்குவதற்கு சிரமப்படும். காரணம், பிரசவம் வரை தாயின் கருவறைச் சூழலில் இருந்த குழந்தை அதன் பின்னர் புறஉலகுச் சூழலுக்கு பழகிக்கொள்வதில் எதிர்நோக்கும் சிரமங்கள்தான். தாயின் வயிற்றுக்குள் பனிக்குடத்தில் இருக்கும் குழந்தை, தன் அம்மா நடக்கும்போதும், குனிந்து நிமிரும் போதெல்லாம், பனிக்குடத்தில் தூளி ஆடுவதுபோல, ஆடிக்கொண்டே உறக்கத்தில் இருக்கும்.

    இரவு அம்மா தூங்கும்போது அதற்குத் தூளி அசைவு கிடைக்காது என்பதால், தூக்கம் வராமல் விழித்துக்கொள்ளும். இதனால்தான் கர்ப்பிணிகள் பகலைவிட இரவு நேரத்தில் தங்கள் சிசுவின் அசைவுகளை அதிகமாக உணர்வார்கள். இந்த தூக்க முறையை, சில குழந்தைகள் பிறந்து நான்கு மாதங்கள் வரையிலும் தொடர்வார்கள். இரவில் குழந்தைகள் தூங்காமல் இருக்க இதுவும் ஒரு காரணம். இந்த முறையை மாற்றுவதற்கு, குழந்தையின் பகல் தூக்கத்தின் அளவைக் குறைப்பதிலிருந்து ஆரம்பித்து சில விஷயங்களை மேற்கொள்ளலாம்.

    பகல் நேரத்தில் குழந்தையைக் கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் சாத்தப்பட்ட கும்மிருட்டு சூழலில் தூங்க வைக்காமல், இயல்பான வெளிச்சம் உள்ள சூழலில் உறங்க வைக்கலாம். இது நீடித்த உறக்கத்தை தவிர்க்கச் செய்யும். இரவில் குழந்தை உறங்கும் அறை வெளிச்சம், ஓசைகள், ஒளிர்திரைகள் இன்றி இருக்க வேண்டும்.

    குழந்தைக்கு வீட்டுப் பெரியவர்களின் பேச்சு, கிரைண்டர், மிக்ஸி, தொலைக்காட்சி போன்ற சத்தங்களைப் பழக்க வேண்டும். அப்போதுதான் புற ஒலிகளுக்கும், புறச்சூழலுக்கும் இணக்கம் ஆவார்கள். கடைகளில் ‘நேப் பெட்‘ என்பது கிடைக்கும். அது கருவறை போன்றதோர் உணர்வை கொடுக்கும் என்பதால் அதைப் பயன்படுத்தி குழந்தைகளை உறங்க வைக்கலாம்.

    குழந்தை விழித்திருக்கும்போது பாலூட்டுவது, குளிக்க வைப்பது, சிறுநீர், மலம் சுத்தம் செய்வது என அம்மாவுக்கு தொடர்ச்சியாக வேலை இருந்துகொண்டே இருக்கும். அதனால், பகலோ இரவோ, குழந்தை உறங்கும் நேரமெல்லாம் தாயும் உறங்கி ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்.

    தூக்கமின்மை பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகிற தாய்மார்கள், இரவு வேளைகளில் தூக்கம் தொலைக்காமல் இருக்க, பிரஸ்ட் பம்ப்‘ மூலம் பாலை எடுத்துச் சேமித்து வைத்து, குழந்தைக்கு வேறு யார் மூலமாகவாவது அதைப் புகட்டச் சொல்லலாம். பசி, அழுத்தும் உடைகள், மூச்சு விடுவதில் சிரமம், உடல்நலக் குறைவு எனக் குழந்தைகள் இரவில் தூங்காமல் அழுவதற்குக் காரணங்கள் பல என்பதால், அவற்றையும் கண்காணிக்க வேண்டும்.
    பெற்றோர் குழந்தைகள் தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.
    பெற்றோர் குழந்தைகள் தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.

    * குழந்தை தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.

    * தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும். மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது.

    * தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க வேண்டும். உடலைக் காயப்படுத்துவதாக அமையக் கூடாது.

    * தண்டித்த உடனே பாசத்தைக் காட்டாது, குழந்தை தன தவறைப் புரிந்து கொண்டவுடன் அதிகப் பாசத்தைக்காட்டலாம்.

    * தண்டனை கொடுத்தது குழந்தை செய்த தவறுக்குத்தான், அதன் மீதுள்ள வெறுப்பினால் அல்ல என்பதைக் குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டும்.

    * குழந்தை தவறு செய்தால் உடனே தண்டிக்க வேண்டும். நீண்ட நேரம் கழித்துத் தண்டிப்பது முறையல்ல.

    * குழந்தை தவறு செய்தால், தொடர்ந்து தண்டிக்க வேண்டும். ஒரு முறை தண்டிப்பதும், மறுமுறை ஊக்குவிப்பதாகவும் இருந்தால் குழந்தையின் தவறுகள் தொடரும்.

    * குழந்தை மீது பாசம் உள்ளவர்கள் தண்டித்தால் உடனடி பலன் கிடைக்கும். தொடர்ந்து வெறுப்புக் காட்டி வருபவர் தண்டித்தால் எதிர் விளைவுகள் தான் உருவாகும்.

    * குழந்தையைத் தண்டிக்கும் முன் செய்த தவறு பற்றியும் கொடுக்கப் போகும் தண்டனை பற்றியும் குழந்தையிடம் சொல்லி விட வேண்டும்.

    * தண்டனைக்கு உடல் ரீதியான அணுகு முறையை விட மனரீதியான அணுகு முறையே சிறந்தது.
    ஃபாஸ்ட் ஃபுட் ஆரோக்கியத்தின் எதிரி... இது தெரிந்திருந்தாலும் குழந்தைகளின் அடம் பெற்றோரைப் பணிய வைக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இன்றைய பெற்றோர் குழந்தைகளை ஜீனியஸ் ஆக்க அதிகம் மெனக்கெடுகிறார்கள். அதே நேரத்தில், உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை. குழந்தைகளை ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட அனுமதிக்கிறார்கள். அதனால் குழந்தைகள் வகுப்பறையில் கவனச் சிதறலுக்கு ஆளாகிறார்கள். பாடங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள அவர்களால் முடிவதில்லை. வீட்டுப் பாடம் எழுத ஆர்வம் இல்லாமல் தவிர்க்கிறார்கள். இந்தப் பிரசனை சம்பந்தப்பட்ட குழந்தையை ‘முட்டாள்’ என அடையாளப்படுத்துகிறது.

    அதிக அளவு ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடும் குழந்தைகள் சோம்பலையே வெளிப்படுத்துகிறார்கள். யோசிக்கவே சிரமப்படுகிறார்கள். நேர்மறை சிந்தனைகள் குறைகின்றன. உளவியல் சிக்கல்கள் மனதில் மையம் கொள்கின்றன. பாக்கெட் சிப்ஸுகளில் சோடியமும் பொட்டாசியமும் அதிக அளவு உள்ளன. இவை உடலில் அதிகமாகத் தேங்கும்போது ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்படுகிறது. அதிலுள்ள அதிகக் காரமும் ஆரோக்கியத்துக்கு எதிரியே! இந்தச் சுவைக்கு நாக்குப் பழகி விடுவதால் சத்தான உணவுகளை குழந்தைகள் விரும்புவதில்லை. கசப்பு, உவர்ப்பு, புளிப்பு உள்ளிட்ட சுவைகள் குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகின்றன.

    கீரை, காய்கறிகளைத் தவிர்ப்பதால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் தடுக்கப்படுகிறது. உடல் மட்டுமின்றி மனரீதியான அபாயங்களையும் உருவாக்கும் ஃபாஸ்ட் ஃபுட், குழந்தைகளை ஒரு கட்டத்தில் அடிமைப்படுத்தி விடுகிறது. உறுப்புகளையும் ஹார்மோன்களையும் பாதிக்கிறது. சிந்திக்கும் திறனைக் குறைத்து அறிவுத் தேடலுக்கு தடை போடுகிறது.



    அடம் பிடிக்கும் குழந்தைகள் பொறுப்புகளை தட்டிக் கழிக்கும் மனப்பக்குவத்தை அடைகிறார்கள். இந்த உணவுக் கலாசாரம் குழந்தைகளின் நிகழ்காலத்தை மட்டுமின்றி, எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்குகிறது. உணவின் உளவியலைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப வீட்டில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

    எந்த மாற்றத்தையும் மனதில் இருந்து தொடங்க வேண்டும். குழந்தைகளிடம் எதிர்பார்க்கும் மாற்றத்துக்கு பெற்றோரே ரோல் மாடல்! ஃபாஸ்ட் ஃபுட் விளைவுகளை குழந்தைகளுக்கு மெல்லச் சொல்லி புரிய வைக்கலாம். ஆசிரியர், மருத்துவர், நண்பர்கள் மூலம் குழந்தைகளுக்குப் புரியும்படி சொல்லலாம். சமைக்கத் திட்டமிடும் போது, குழந்தைகளை இணைத்துக் கொள்ளலாம். இன்றைய சமையல் என்ன, எந்த காய் சமையலுக்கு, என்ன பொரியல் என்பதிலும் சுட்டிகளின் விருப்பத்துக்கு மதிப்பளிக்கலாம். வீட்டில் நன்கு சமைத்துச் சாப்பிடும் போது ஃபாஸ்ட் ஃபுட் தேவை குறையும்.

    சத்தான தானிய வகைகளில் குழந்தைகளுக்குப் பிடித்த சுவையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். சர்க்கரைக்கு பதிலாக பனைவெல்லம் பயன்படுத்தலாம். அது, ரத்தசோகையை கட்டுப்படுத்தி, புத்திக்கூர்மையை அதிகரிக்கும். இயற்கை சார்ந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். இவற்றைச் சாப்பிடுவதால் என்னென்ன சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன என்பதைப் புரிய வைக்கலாம். உணவை ரசித்து, சுவைத்து சாப்பிடப் பழக்க வேண்டும். 
    குழந்தைகளுக்கு மொழியைக் கற்றுத்தருவதில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானது. பெற்றோர் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடும்போது அவர்கள் உங்களோடு பேசப் பேச மொழித்திறன் அதிகரிக்கிறது.
    குழந்தைகளுக்கு மொழியைக் கற்றுத்தருவதில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானது. ஆனால் பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் கணினித்திரையையும், டிவி திரையையும் பார்ப்பதும், பொம்மைகளுடன் விளையாடுவதுமாக கழிகிறது அவர்களுடைய பொழுதுகள். இதுபோன்ற சூழலில் சூழல்களில் குழந்தைகள் பேசுவதற்கான வாய்ப்பு குறைந்து, கேட்பது மட்டுமே நடக்கிறது. ஒரு விஷயத்தை எப்படிப் பேச வேண்டும் என்பது தெரியாமல் குழந்தைகள் வளர நாம் காரணமாகிறோம். இடம், பொருள் அறிந்து பேச வேண்டிய தெளிவும் அவர்களிடம் இருப்பதில்லை.

    * பெற்றோர் குழந்தைகளுடன் பேசவும், விளையாடவும் நேரம் ஒதுக்க வேண்டும். பெற்றோர் அவர்களோடு சேர்ந்து விளையாடும்போது அவர்கள் உங்களோடு பேசப் பேச மொழித்திறன் அதிகரிக்கிறது.

    * குழந்தைகள் தொலைக்காட்சி, கைப்பேசி மற்றும் வீடியோ கேம் ஆகியவற்றில் அதிக நேரம் செலவளிப்பதைக் குறைப்பது அவசியம். இவற்றில் நேரம் செலவளிக்கும்போது பெரும்பாலும் அவர்கள் பேசுவதில்லை.

    * மற்ற குழந்தைகளுடன் இணைந்து புத்தகம் வாசிப்பது, கதை சொல்வது, பாடல் பாடுவது போன்ற வாய்ப்புகளை உருவாக்குங்கள்.

    * குழந்தைகள் படுக்கைக்குச் சென்ற பின் தூக்கம் பிடிக்கும் வரை கதை புத்தகங்கள் வாசித்துக் காட்டலாம். இதனால் கற்பனை வளம் கூடுவதுடன் மொழி வளமும் அதிகரிக்கும்.

    * குழந்தைகள் விரும்பும் வகையில் கலர்புல்லான படங்கள் கொண்ட புத்தகங்களை அறிமுகம் செய்வதோடு குழந்தைகளிடம் அது பற்றிய கற்பனை மற்றும் கதைகளைச் சொல்ல வைத்துக் கேட்கலாம். மழலை மெல்ல மெருகேருவதை உணரலாம்.

    * குழந்தைகள் புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்கும் கேள்விகளுக்கு பொறுப்பாக பதில் சொல்லுங்கள். அறிவில் சேகரிக்கும் விஷயங்கள் மொழியிலும் வெளிப்படும்.

    * குழந்தைகளுக்கு உறவுகளை அறிமுகம் செய்யுங்கள். அவர்களைச் சந்தித்து உறவாடவும், உறையாடவும் வாய்ப்பளிக்கலாம். இதன் வழியாக அவர்கள் உற்சாகத்துடன் பேசிப்பழகுகின்றனர்.

    * குழந்தைகளை விடுமுறை நாட்களில் புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்குள்ள மார்க்கெட், கோயில். பொது இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்கள் பார்க்கும் பொருட்கள் பற்றிப் பேச வேண்டும்.

    * குழந்தைகள் தங்களது தேவைகளை வாய்விட்டு கேட்கப்பழக்குங்கள். எது வேண்டும், வேண்டாம் என்று முடிவெடுப்பதற்கான சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கட்டும். நிறைய சிந்திக்கவும், சிந்தித்ததை வார்த்தைகளில் பரிமாறிக் கொள்ள வாய்ப்பிருக்கும் பட்சத்தில் குழந்தைகள் மொழி அழகும், மேன்மையும் பெறுகிறது.

    * புதிய நபர்களை எப்படி பேச்சில் அணுக வேண்டும் என்பதற்கு நீங்களே ரோல்மாடலாக இருங்கள்.

    * குழந்தைகள் பெரும்பாலும் உங்களிடம் இருந்தே பல விஷயங்களையும் கற்றுக் கொள்கின்றனர். எதைப் பேசும்போதும் கவனத்துடன் செயல்படுங்கள்.

    * மேடையில் பலர் முன் பேச பயப்படும் குழந்தைகளை அவரது நண்பர்கள் மத்தியில் பேசப் பழக்குங்கள். நன்றாகப் பேசும்போது பாராட்டுங்கள். தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அது அவர்கள் மொழியில் வெளிப்படும்.
    தற்போதுள்ள குழந்தைகளுக்கு சரியான, ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் இல்லை. பின்வரும் ஆரம்பக்கட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, குழந்தைகளை ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய வைக்கலாம்.
    பெற்றோர்களுக்கு இருக்கும் பொதுவான புகார்களில் ஒன்று, அவர்களுடைய குழந்தைகளுக்கு சரியான, ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் இல்லை என்பதே. உங்கள் குழந்தை 10 வயதிலேயே குண்டான, உடல் பருமன் தொல்லை இருப்பவராக மாறும் வரை காத்திருக்காதீர்கள். பின்வரும் ஆரம்பக்கட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய வைக்கலாம்.

    * ஆரோக்கியமான உணவுகளை உண்ண தொடங்குவதற்கு முன்பு, ஆரோக்கியமான ஷாப்பிங்கைத் தொடங்குவது முக்கியமானது. விவசாயிகள் சந்தைக்கும், ஆர்கானிக் கடைகளுக்கும், சூப்பர் மார்க்கெட்களுக்கும் நேரடியாக குழந்தைகளை அழைத்து செல்லுங்கள், அப்போதுதான் பல்வேறு வகையான தயாரிப்புகளுக்கு இடையே உங்கள் குழந்தைகளால் வேறுபாடுகளை அறிந்து கொள்ள முடியும்.

    * உணவு உண்ணும் செயல்முறையில் உங்கள் குழந்தைகளை இன்னும் அதிகமான அளவில் ஈடுபடுத்த, அவர்களையே பொருட்களைத் தேர்வு செய்ய அனுமதிக்கவும். அவர்களே தேர்ந்தெடுத்த ஃப்ரெஷ்ஷான பொருட்களை வைத்து, என்ன சமைக்கலாம் என்று அவர்களிடம் கேட்கலாம், தேர்ந்தெடுக்கும், முடிவெடுக்கும் ஆற்றல் தம்மிடம் இருப்பதாகத் தெரிந்து கொள்ளும் குழந்தைகள், உணவைக் குறித்து இன்னும் நேர்மறையாகவும், சோதனை முயற்சிகளுக்கு தயாராகவும் உணர்வார்கள்.



    * குழந்தைகளை, நீங்கள் சமைக்கும்போதும் உணவுப்பொருட்களை சுத்தம் செய்யும்போதும் உங்களுடன் வேலைசெய்ய கூறுங்கள், அதில் உணவு சமைப்பதற்கான முன்னேற்பாடுகளான, நறுக்குதல், வெட்டுதல் போன்ற வேலைகளும் உள்ளடங்கும். குழந்தைகளுக்குப் பாதுகாப்பான கத்திகளை குழந்தைகளிடம் தருவதன் மூலம், அவர்களையும் நறுக்கும் வேலைகளில் ஈடுபடுத்தலாம். இறுதி வரை இந்த வேலைகளில் அவர்கள் ஈடுபடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். உணவை சுவைத்து பார்க்க, எப்படி இருக்கிறது என்று கேட்க, இன்னும் சில மாற்றங்கள் செய்ய அனுமதிக்கவும். இதனால் அவர்கள் உணவு செய்யும் செயல்முறையின் ஒரு அங்கமாக தங்களை உணர்வார்கள், உணவுக்கு உரிமைதன்மையை உணர்ந்து கொள்வார்கள். பிறகு, உணவு ஒரு முழுமையான சரிவிகித உணவாக எப்படி மாறுகிறது என்பதைப் புரிந்து கொள்ள தொடங்குவார்கள்.

    * நீங்கள் பார்ப்பதைத்தான் சாப்பிடுவீர்கள். உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜ் அல்லது கிச்சன் மேடைகளில், ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் இடுபொருட்களைக் காட்சிப்படுத்துங்கள். அதிக கலோரி உணவுகள், பதப்படுத்திய உணவுகள், சோடா மற்றும் இனிப்புகள் வீட்டில் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

    * நீங்கள் சமைக்கும்போதே, உங்கள் குழந்தைகளை ஒரு உணவில் இடவேண்டிய இடுபொருட்களைத் தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். அப்போது, நீங்கள் ஒரு கறியை சமைக்கிறீர்கள் என்றால், அதில் என்னென்ன காய்கறிகளை சேர்க்க விரும்புகிறார்கள் என்று உங்கள் குழந்தையிடம் கேட்கவும். அது, உணவு தொடர்பான சிந்தனையைத் தூண்டும். அதுமட்டுமல்லாமல்,  பல்வேறு வகையான மசாலா மற்றும் ஃப்ளேவர்களை அறிமுகப்படுத்தவும். இது நல்ல வழிமுறையாக இருக்கும், இதனால்,உங்கள் குழந்தையின் சுவை உணர்வு மற்றும் விருப்பங்கள்  பல்வேறு சுவைகளையும் அறியக்கூடியதாக மாறும்.
    பெற்றோர் தங்களுக்குள்ளான சண்டையால் குழந்தையிடம் பரிவாக பேசாமல், கவனிக்காமல், அவர்களின் தேவைகளை பார்த்துக்கொள்ளாமல் இருப்பதால் குழந்தைகள் தாம் தனிமைபடுத்தப்பட்டு இருப்பதுபோல உணர்கிறார்கள்.
    பெற்றோர்க்கு இடையிலான விவாகரத்து பிரச்சனையால் குழந்தைகள் மனதளவிலும், உடலளவிலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் பெற்றோர் தங்களுக்குள்ளான சண்டையால் குழந்தையிடம் பரிவாக பேசாமல், கவனிக்காமல், அவர்களின் தேவைகளை பார்த்துக்கொள்ளாமல் இருப்பதால் குழந்தைகள் தாம் தனிமைபடுத்தப்பட்டு இருப்பதுபோல உணர்கிறார்கள்.

    குழந்தைப் பருவ ஆரோக்கிய வளர்ச்சிக்கு பெற்றோரின் அரவணைப்பும், அன்பும் சரியாக கிடைக்காமல் தன்னை மாற்றுத்திறனாளிக்கு இணையாக நினைப்பதுடன், அச்சூழல் குழந்தைகளை வன்முறை குணம் கொண்டவர்களாகவும் மாற்றிவிடுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் தன் அம்மா-அப்பா இருவரிடமும் இருந்து அன்பான அரவணைப்பும், அச்சமில்லாத வளர்ப்பு முறையும் கட்டாயம் கிடைக்க வேண்டும்.

    எல்லா பிரச்னைகளும் மனம் விட்டுப் பேசித் தீர்க்கக் கூடியவையே. கணவன் - மனைவிக்கு இடையேயும் சண்டை வருவது இயல்புதான். அதனை ஆரம்பக் கட்டத்திலேயே குழந்தைகள் பார்வையில் இல்லாத வகையில், தங்களுக்குள் பேசித் தீர்த்து வன்மத்தை வளர்க்காமல் அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழ்கையை இன்பமாகக் கழிக்கலாம். குறிப்பாக ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ரோல்மாடல் தன் பெற்றோர்தான்.

    அதன்படி தன் பெற்றோரைப் போலவே என் வாழ்க்கையும் மகிழ்ச்சியும், முடிந்தவரையில் பிறருக்குப் பயன்தரும் வகையிலும் அமைய வேண்டும் என ஒரு குழந்தை நினைக்க வேண்டும். மாறாக தன் பெற்றோரின் சண்டை, வன்மத்தைப் பார்த்து வளர்ந்து, அதுப்படியே தன் வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளக் கூடாது.

    குழந்தைகள் மனித வளத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. அவர்கள் இருக்கும் இடத்தை மிகவும் மகிழ்ச்சியானதாக மாற்றிவிடுவார்கள். அந்த மகிழ்ச்சி பெற்றோர்கள், தாத்தா-பாட்டி, உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், சமூகத்தினர் என எல்லோர் வாயிலாகவும் கிடைக்க வேண்டும். அதில் முதலானவர்களும் முடிவானவர்களும் பெற்றோரே.

    உங்கள் குழந்தை பலர் போற்றும் வண்ணம் இன்பமாய் வாழவேண்டுமா அல்லது தங்களால் வாழ்க்கையையே இழக்க வேண்டுமா என்பது பெற்றோராகிய நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
    கோடை விடுமுறையில் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியோடு எங்கேனும் சென்றுவர வேண்டும் என்றும் நினைப்பீர்கள் அல்லவா! அதற்கான திட்டமிடலில் நீங்கள் அவசியம் செய்யக்கூடாதவை பற்றிப் பார்ப்போம்.
    கோடை விடுமுறையில் ஒரு வாரமோ, இரு வாரங்களோ பிள்ளைகளுடன் மகிழ்ச்சியோடு எங்கேனும் சென்றுவர வேண்டும் என்றும் நினைப்பீர்கள் அல்லவா! அதற்கான திட்டமிடலில் நீங்கள் அவசியம் செய்யக்கூடாதவை பற்றிப் பார்ப்போம்.

    1. முதலில் திட்டமிடுவது பெற்றோரான உங்களின் வேலை மட்டும்தான் எனும் நினைப்பிலிருந்து வெளியே வாருங்கள். ஏனெனில், இந்தக் கோடை விடுமுறை உங்களின் பிள்ளைகளுக்கானது. எனவே, அவர்கள் எவ்வாறு செலவழிக்க விரும்புகிறார்கள் என்பதை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். பின்பு, குடும்பத்தினர் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து ஆலோசித்து விடுமுறைக்கான திட்டமிடலை முடிவுசெய்யுங்கள்.

    2. ஆலோசனை செய்கிறேன் என்று அங்கு உங்களின் கருத்தைக் கடுமையாக வற்புறுத்தாதீர்கள். குடும்பத் தலைவர் எனும் முறையில் உங்கள்மீது மதிப்பும் சிறு அச்சமும் பிள்ளைகளுக்கு இருக்கக்கூடும். அதனால், நீங்கள் சொல்வதை மறுத்துப்பேச முடியாத நிலையில் இருக்கலாம். அவ்விதம் நிகழாத வண்ணம் நெகிழ்வான உரையாடலாக அமையட்டும்.

    3. வெளியூர் செல்வது என முடிவெடுத்துவிட்டீர்கள் எனில், அங்கும் பாடப் புத்தகங்களை எடுத்துவர வேண்டும் என்ற விதியை உருவாக்காதீர்கள். அது, சுற்றுலா செல்லும் மனநிலையைக் கெடுத்துவிடலாம். சுற்றுலாவுக்கு வரவில்லை என்றும்கூட பிள்ளைகள் கூறிவிடலாம். ஒருவேளை, பிள்ளைகள் தாங்களாகவே பாடப் புத்தகங்களை எடுத்துவந்தால் அதற்கும் தடை போட வேண்டும்.

    4. வெளியூர் செல்வதற்குத் தேர்ந்தெடுக்கும் இடம், உறவினர் வீடாகவோ அதன் அருகே இருக்கும் சுற்றுலா தளமாகவோ இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்காதீர்கள். பிள்ளைகள் பார்ப்பதற்கு விரும்பும் இடங்களாகத் தேர்வு செய்வதே நல்லது. அப்போதே, சுற்றுலா மகிழ்ச்சியோடு அமையும்.

    5. கோடை விடுமுறையைக் கழிக்க வெளியூர் செல்வதுதான் ஒரே வழி என்று நினைத்துவிடவும் வேண்டாம். பிள்ளைகள் வீட்டிலிருந்து கொண்டே நண்பர்களோடு புதிதாக ஏதேனும் செய்ய விரும்பினால், மறுக்காமல் சம்மதம் சொல்லுங்கள். உள்ளூரில் பார்க்க வேண்டிய இடங்கள் எனப் பிள்ளைகள் கூறினால், அங்கும் அழைத்துச் செல்வதற்குத் தயக்கம் காட்டாதீர்கள்.

    இவை தவிர, சுற்றுலா செல்லும்போது தன் நண்பர் யாரையாவது அழைத்துவருவதாக உங்கள் பிள்ளை சொன்னால், குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் எனக் கறார்தனம் காட்டாதீர்கள். பிள்ளையின் நண்பரின் பெற்றோரோடு பேசி, அவரை அழைத்துச் செல்ல அனுமதிபெறுங்கள். முடிந்தால் இரு குடும்பங்களும் இணைந்து செல்வது இன்னும் சிறப்பானது. சுற்றுலா சென்றதுக்கான நினைவுகளை ஏந்தி வருவதற்கு தயாராகச் செல்லுங்கள். 
    பண்பு சார்ந்தும், அறிவு சார்ந்தும் தங்களை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பாக விடுமுறை காலத்தை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு விட்டது. இனி ஜூன் மாதம் பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கப்படும். இந்த கோடை விடுமுறையை குதூகலமாக கொண்டாட மாணவ- மாணவிகள் தயாராகி விட்டனர். இந்த விடுமுறை காலம் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். நெருக்கடியான மனநிலையில் இருந்து விடுபட்டு உற்றார், உறவினர்களிடம் நெருங்கி பழக ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    செல்போன் போன்ற சாதனங்களை கையில் வைத்துக்கொண்டு மாணவ-மாணவிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடாது. அது அவர்களிடம் மன அழுத்தத்தையும், உடல் சோர்வையும் ஏற்படுத்தி விடும். எனவே பெற்றோர்கள் மாணவ-மாணவிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். மேலும் இன்டர்நெட் மற்றும் சமூகவலைதளங்களில் அவர்களின் செயல்பாடு எந்த அளவுக்கு உள்ளது? என்பதையும் அறிந்து வைத்திருப்பது உத்தமம். ஏனெனில் அதில் நிறைய பிரச்சினைகள், ஆபத்துகளும் உள்ளன.

    இதில் இருந்து விடுபட நண்பர்களுடன் கூடி விளையாடி மகிழ வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்தாலும் அதிலும் உற்சாகம் கிடைக்கும். பொழுது போக்கு என்பது மாணவர்களுக்கு உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும் அளிப்பதாக இருக்க வேண்டும். அதை விடுத்து மாணவ-மாணவிகளை வீட்டுக்குள்ளேயே முடங்கி விட செய்வதாக இருந்து விடக்கூடாது.

    அதே நேரத்தில் மாணவ-மாணவிகள் விளையாட செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இருந்திட வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் விலகியே இருக்க வேண்டும். ஆசைவார்த்தை கூறுவதை நம்பி தெரியாதவர்களிடம் சென்று விடக்கூடாது. பரிசுப்பொருட்கள், உணவுப்பொருட்கள் என எந்த பொருட்களை அறிமுகம் இல்லாத நபர்கள் வாங்கிக்கொடுத்தால், அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது.

    வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எங்கு செல்கிறோம்? எவ்வளவு நேரத்தில் திரும்பி வருவோம்? என்பது உள்ளிட்ட தகவல்களை வீட்டில் உள்ள பெற்றோர்கள், உறவினர்களிடம் தவறாமல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும். வெளியில் சென்றிருக்கும் போது சுவையான, சுவாரசியமான சம்பவங்கள், சோக சம்பவங்கள் என எது நடந்தாலும் வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதில் ஒளிவுமறைவு இருக்கக்கூடாது. பெற்றோர்கள், உறவினர்களின் ஆதரவுடன் தான் மாணவ-மாணவிகள் எதையும் எதிர்கொள்ள முடியும். பிரச்சினைகளை தெரிவித்தால் தான், அதற்கு பெரியவர்களால் தீர்வு காண முடியும். தவறுகளை மூடி மறைப்பதால் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

    மாணவ-மாணவிகள் விடுமுறையில் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அது போன்ற நேரங்களில் தங்களுக்கோ, தங்களால் பிறருக்கோ தவறு ஏதாவது நேர்ந்து விடாமல் கவனமுடன் செயல்பட வேண்டும். எதிலும் அவசரம் காட்டக்கூடாது. பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    விடுமுறை காலம் என்பது மாணவ-மாணவிகளுக்கு பிடித்தமான, குதூகலமான காலம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த நாட்களில் தங்களுக்கு பிடித்தமான கலைகளை மாணவ-மாணவிகள் கற்றுக்கொள்ளலாம். தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

    பண்பு சார்ந்தும், அறிவு சார்ந்தும் தங்களை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பாக விடுமுறை காலத்தை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உறவினர்களுடன் பழகி அன்பை பெறலாம். கோடை விடுமுறை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதில் இருந்து மாணவ-மாணவிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
    ×