என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 99994"
கொழும்பு:
இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங் கேவை கடந்த அக்டோபர் 26-ந் தேதி அதிபர் சிறிசேனா நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டார். அதற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே ராஜபக்சேவுக்கு போதிய எம்.பி.க்கள் ஆதரவு இல்லாததால் பாராளுமன்றத்தை கலைக்க சிறிசேனா உத்தரவிட்டார். அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. முடிவில் பாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் என்றும், புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்தது செல்லாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இது அதிபர் சிறிசேனாவுக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. எனவே ரணில் விக்ரமசிங் கேவை அவர் மீண்டும் பிரதமராக அறிவித்தார். அதே நேரத்தில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை எதிர் கட்சி தலைவராக்கினார்.
இதற்கு முன்பு கடந்த 2015-ம் ஆண்டு முதல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் போதிய உறுப்பினர் இல்லாத ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனா எதிர்கட்சி தலைவர் பதவி வழங்க கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி எம்.பி.க்கள் ராஜபக்சேவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி என்ற கட்சியை உருவாக்கியுள்ளனர். தற்போது அதன் தலைவராக சிறிசேனா இருக்கிறார்.
அதன் அடிப்படையில் புதிய மந்திரி சபையில் 3 முக்கிய இலாக்காக்களை தன்வசம் வைத்துள்ளார். தற்போது, ராஜபக்சே கட்சியுடன், சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியும் இணைந்து புதிய கூட்டணி உருவாகி இருப்பதால் அதிக உறுப்பினர்களை கொண்ட எதிர்கட்சி ஆகி விட்டது. எனவே ராஜபக்சேவை எதிர்கட்சி தலைவராக்கி இருப்பதாக சிறிசோன தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பாராளுமன்றம் கூடியது. அதில் எதிர்கட்சி தலைவராக மகிந்த ராஜபக்சேவை சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிக உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணிக்கு எதிர்க் கட்சி அந்தஸ்து வழங்குவதாக அவர் விளக்கம் அளித்தார். #Rajapaksa
கிரைஸ்ட்சர்ச்:
இலங்கை-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி கிரிக்கெட் போட்டி கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 178 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. சவுத்தி அதிகபட்சமாக 68 ரன் எடுத்தார். லக்மல் 5 விக்கெட்டும், குமாரா 3 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 88 ரன் எடுத்து இருந்தது.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. 90 ரன்கள் பின்தங்கிய நிலை கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது.
நியூசிலாந்தின் வேகப்பந்து வீரர் போலட்டின் அதிரடியான பந்து வீச்சால் இலங்கை அணி நிலைகுலைந்தது. அவர் 15 பந்துகளில் 4 ரன் கொடுத்து இலங்கை அணியின் எஞ்சிய 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதில் 4 வீரர்கள் பேரைரா, லக்மல், சமிரா, குமார ‘டக்அவுட்’ ஆனார்கள்.
அவர் வீசிய 4-வது பந்தில் சில்வா (21 ரன்) ஆட்டம் இழந்தார். 5-வது பாலில் பவுண்டரி கொடுத்தார். அடுத்த பந்தில் ரன் கொடுக்கவில்லை. அதற்கு அடுத்த 2 ஓவர்களில் அவர் 3 விக்கெட்டையும், 2 விக்கெட்டையும் ரன் கொடுக்காமல் கைப்பற்றினார்.
போலட்டின் அதிரடியான பந்து வீச்சில் இலங்கை அணி 41 ஓவர்களில் 104 ரன்னில் சுருண்டது. மேத்யூஸ் 33 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
74 ரன்கள் முன்னிலையில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. தொடக்க வீரர்கள் ராம்டாம், லாதம் அரைசதம் அடித்தனர். ராவல் 76 ரன்னில் ஆட்டம் இழந்தார். #NZvSL
கொழும்பு:
இலங்கையின் தென் பகுதியில் தங்காலை குட வெல்ல என்ற துறைமுக நகரம் உள்ளது. இன்று காலை 6.30 மணியளவில் அங்கு ரோட்டில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தது.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கிருந்து மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
அதில் 4 பேர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 9 பேருக்கு குண்டுகாயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கியால் சுட்ட மர்மநபர்கள் உடனடியாக மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர். எதற்காக இந்த சம்பவம் நடந்தது என தெரியவில்லை. கொலையாளிகள் பயன்படுத்தியது டி56 ரக துப்பாக்கி மற்றும் குண்டுகள் என போலீசார் தெரிவித்தனர். #SriLankaFiring
கொழும்பு:
இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26-ந்தேதி அதிபர் மைத்ரி பால சிறிசேனா நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே ராஜபக்சேவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால் அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலை அறிவித்தார். இதற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாதது என அறிவித்தது. பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கியது சட்ட விரோதம் என்றும் தீர்ப்பு அளித்தது.
அதன் பின்னர் பாராளுமன்றத்தில் ராஜபக்சே மீது எதிர்க்கட்சிகள் 2 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வெற்றி பெற்றனர். இருந்தும் அவரை பதவியில் இருந்து அதிபர் சிறிசேனா நீக்க வில்லை. இந்த நிலையில் பிரதமர் பதவியில் ராஜபக்சே தொடர்ந்து நீடிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.
இதனால் அதிபர் சிறிசேனாவுக்கும், ராஜபக்சேவுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பிரதமர் பதவியை ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார்.
அதை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக சிறிசேனா அறிவித்தார்.
பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. அதற்காக ரணில் விக்ரமசிங்கே ஜனாதிபதி அலுவலகம் வந்தார். அவருடன் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த எம்.பி.க்களும், கட்சி உறுப்பினர்கள் ஏராளமானோரும் வந்து இருந்தனர். உறுப்பினர்கள் 4 பேர் மட்டுமே சென்றனர்.
காலை 11.16 மணியளவில் ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் இலங்கையில் கடந்த 51 நாட்களாக நீடித்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வந்தன.
ரணில் விக்ரமசிங்கேவை தொடர்ந்து புதிய மந்திரிகள் நாளை (17-ந்தேதி) பதவி ஏற்கிறார்கள். 30 பேர் மந்திரிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.
அவர்களில் 6 பேர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர்கள். இதன்மூலம் ரணில் விக்ரமசிங்கே கூட்டணி அரசு அமைக்கிறார். #RanilWickremesinghe #PrimeMinister
இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால் ரனில் விக்ரமசிங்கேவை அதிரடியாக நீக்கிய சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி புதிய பிரதமராக நியமித்தார்.
இதனால் இலங்கை அரசியலில் வரலாறு காணாத குழப்பம் நிலவியது. இதனால் சிறிசேனாவுக்கு நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தை அதிரடியாக கலைத்து விட்டு தேர்தலை அறிவித்தார். இதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.
இந்த வழக்கில் கடந்த 13-ந்தேதி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது சட்ட விரோதம் என அறிவித்தது. இதைப்போல ராஜபக்சே மற்றும் அவரது தலைமையிலான மந்திரி சபை செயல்படுவதற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட கோர்ட்டு உத்தரவையும் நேற்றுமுன்தினம் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.
இந்த 2 உத்தரவுகளையும் தொடர்ந்து அதிபர் சிறிசேனா மற்றும் ராஜபக்சேவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இலங்கை அரசியலில் மேலும் குழப்பம் அதிகரிப்பதை விரும்பாத ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்தார். அதன்படி நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பதவியேற்பார் எனவும், இந்த பதவியேற்பு நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 30 பேர் கொண்ட மந்திரிசபை நாளை (திங்கட்கிழமை) பதவியேற்கிறது.
முன்னதாக, ரனில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக ஒரு போதும் நியமிக்கமாட்டேன் என அதிபர் சிறிசேனா கூறி வந்தார். ஆனால் நேற்று முன்தினம் அவருடன் தொலைபேசியில் பேசிய சிறிசேனா, பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக தெரிகிறது.
தங்கள் தலைவருக்கு (ரனில் விக்ரமசிங்கே) பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் என அதிபரின் செயலாளர் தெரிவித்தாக, ஐக்கிய தேசிய கட்சி பொதுச்செயலாளர் அகிலா விராஜ் காரியவாசம் கூறினார். முன்னதாக ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் திடீரென பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே பதவி விலகியதுடன், புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பதவியேற்பதை தொடர்ந்து, அங்கு சுமார் 2 மாதங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வருகிறது. #RanilWickremesinghe #SriLanka #PrimeMinister #MahindaRajapaksa
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயை கடந்த அக்டோபர் 26-ந்தேதி அதிபர் மைத்ரிபால் சிறிசேனா நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார்.
இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதோடு இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தல் தேதியையும் சிறிசேனா அறிவித்தார். இதனால் இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சிறிசேனா நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் ராஜபக்சே அரசுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே கட்சியால் 2 முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ரணில் விக்ரமசிங்கே அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை பாராளுமன்றத்தில் ராஜபக்சேவால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியவில்லை. இது சம்பந்தமாக 3 முறை நடந்த வாக்கெடுப்பிலும் அவர் தோல்வி அடைந்தார். ஆனாலும் ராஜபக்சே பதவி விலக மறுத்தார்.
இதற்கிடையே ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் தலைமையில் 122 எம்.பி.க்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த 3-ந்தேதி விசாரித்த கோர்ட்டு ராஜபக்சே பிரதமராக செயல்பட தடை விதித்தது.
இதை எதிர்த்து ராஜபக்சே சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இதனை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடையை நீக்க முடியாது என்று உத்தரவிட்டது.
இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது.
அதில் குறைந்தபட்சம் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் இலங்கை பாராளுமன்றத்தை சிறிசேனா கலைக்க முடியாது என்று தீர்ப்பு கூறியது.
இலங்கை பாராளுமன்றத்தை சிறிசேனா கலைக்க உத்தரவிட்டது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு காரணமாக அவர் புதிய பிரதமரை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
புதிய பிரதமரை 17-ந்தேதி நியமிக்க போவதாகவும், ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் நியமிக்க போவதில்லை என்றும் சிறிசேனா தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.
நாளை காலை 10.30 மணிக்கு ரணில்விக்ரமசிங்கே 5-வது முறையாக இலங்கை பிரதமராக ஜனாதிபதி அலுவலகத்தில் பதவியேற்கிறார். இதை ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த எம்.பி.யான ரஜிதசேனரத்னே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ரணில் விக்ரமசிங்கே அதிபர் சிறிசேனாவுடன் பதவியேற்பு குறித்து தொலைபேசியில் ஆலோசனை செய்ததாக தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கே மந்திரிசபையில் எத்தனை பேர் இடம் பெறுவார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
ரணில் விக்ரமசிங்கே மட்டும் நாளை பதவியேற்பார். மந்திரிகள் 17-ந்தேதி பதவி ஏற்பார்கள். 30 பேர் கொண்ட மந்திரிசபை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இலங்கையில் கடந்த 50 நாட்களாக நடைபெற்று வந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டாலும் முக்கிய அமைச்சக பதவிகளை சிறிசேனா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Rajapaksa #RanilWickramasinghe
இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அக்டோபர் 26-ம் தேதி அதிபர் சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். அதிலிருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை. எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி அடைந்தார்.
இதற்கிடையே அதிபரின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இலங்கை பிரதமராக ராஜபக்சே செயல்பட இடைக்கால தடை விதித்தது. பின்னர் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், இலங்கை பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அறிவித்தது. மேலும், பாராளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் தெரிவித்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ராஜபக்சே பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே நாளை மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். #RajapaksaResigns
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்