search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99994"

    இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது சட்ட விரோதமானது என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது. #SriLanka #SriLankaParliament
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர்  சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை.  எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து மூன்று பிரதான கட்சிகள் உள்பட 13 அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளன.



    அதிபர் சிறிசேனாவின் பாராளுமன்ற கலைப்பு நடவடிக்கை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும், மீண்டும் பாராளுமன்றம் செயல்படுவதற்கு உத்தரவிடவேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியுள்ளன.  

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 7 பேர் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. அதன்பின் நீதிபதிகள் அனைவரும் ஒரே மாதிரியான தீர்ப்பை அளித்தனர். அதன் விவரம் வருமாறு:

    இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது. இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அதிரடியாக தெரிவித்துள்ளது. #SriLanka #SriLankaParliament
    இலங்கையில் ஓரம்கட்டப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக இன்று பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றி அடைந்தது. #confidencemotion #SriLankanParliament #RanilWickremesinghe
    கொழும்பு:

    இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு அந்த பதவியில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி நியமித்தார். அன்றிலிருந்து இலங்கை அரசியலில் தினமும் அதிரடி திருப்பங்களும் குழப்பங்களும் ஏற்பட்டு வருகின்றன.
     
    ராஜபக்சேவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சி தோல்வி அடைந்ததால் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி தேர்தல் நடத்துவதாக சிறிசேனா அறிவித்தார்.

    ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. மேலும் தேர்தலுக்கான ஏற்பாடுகளையும் முடக்கி வைத்துள்ளது. ஆனால் ரணில் விக்ரமசிங்கேவும், ராஜபக்சேவும் பிரதமர் பதவிக்கு உரிமை கோரி வருகின்றனர்.

    ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளை சேர்ந்த 122 உறுப்பினர்கள் மேல் முறையீட்டு கோர்ட்டில் கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த கோர்ட்டு ராஜபக்சே பிரதமராக செயல்பட இடைக்கால தடை விதித்து கடந்த 3-ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ராஜபக்சே 4-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.



    இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீர்மானம் இலங்கை பாராளுமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட்டது.

    225 உறுப்பினர்க்ளை கொண்ட பாராளுமன்றத்தில் இந்த தீர்மானத்தின்மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் விக்ரமசிங்கே ஆதரவு எம்.பி.க்கள் தவிர  தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களித்தனர். 6 உறுப்பினர்களை கொண்ட ஜனதா விமுக்தி பெரமுனா இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்து விட்டது.

    இந்நிலையில், 117 உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. இதன் மூலம் பிரதமராவதற்கு தனக்கு முழுத்தகுதி உள்ளது என்பதை ரணில் விக்ரமசிங்கே மீண்டும் நிரூபித்துள்ளார்.

    இலங்கை அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த திருப்புமுனை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா மற்றும் பொம்மை பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு கிடைத்த மரண அடியாக கருதப்படுகிறது. #confidencemotion #SriLankanParliament #RanilWickremesinghe 
    இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு மனநிலை பாதித்துவிட்டதால் பைத்தியக்காரர் போல் நடந்து கொள்கிறார் என்று முன்னாள் தளபதி சரத்பொன்சேகா கூறி உள்ளார். #Sirisena #SarathFonseka
    கொழும்பு:

    இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரம சிங்கேவை நீக்கி விட்டு முன்னாள் அதிபர் ராஜ பக்சேவை புதிய பிரதமராக சிறிசேனா நியமித்தார்.

    ஆனால், ராஜபக்சேவால் பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியவில்லை. கோர்ட்டு அவர் பிரதமர் பதவியை தொடருவதற்கு தடை விதித்துள்ளது.

    இதனால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதமர் இல்லாமல் இலங்கையில் அரசியல் குழப்பம் நிலவுகிறது.

    இதில், அதிபர் சிறிசேனா எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறி கொண்டு இருக்கிறார்.



    இது சம்பந்தமாக முன்னாள் ராணுவ தளபதியும், எம்.பி.யும் ஆன சரத் பொன்சேகா கூறியதாவது:-

    அதிபர் சிறிசேனா இரவில் ஒன்று பேசுகிறார். விடிந்ததும் வேறு ஒன்றை பேசுகிறார். அவருடைய மனநிலை பாதித்து விட்டது. பைத்தியக்காரர் போல் நடந்து கொள்கிறார்.

    அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிபர், அரசு தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் பதவி ஏற்பதற்கு முன்பு மனநிலை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று விதிகள் இருக்கிறது.

    அதே போல் இலங்கையிலும் கொண்டு வர வேண்டும். தேவைப்பட்டால் அதிபர் சிறிசேனா 2 வாரம் மனநல ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வரலாம்.

    இதற்கு தேவை என்றால் சட்ட திருத்தங்களை கூட உருவாக்கலாம். சிறிசேனா தொடர்ந்து அரசியல் சாசன சட்டத்தை மீறி வருகிறார்.

    என்னை அதிபர் ஆக்கி இருந்தால் இது போன்று ஒரு போதும் நடந்து கொள்ள மாட்டேன். அரசியல் சட்டத்தை மீற மாட்டேன்.

    யாரோ எழுதி கொடுத்த புத்தகத்தை ஜனாதிபதி தாத்தா என்ற பெயரில் தனது பேத்தியை வைத்து வெளியிடுகிறார். அப்படிப்பட்ட நபர் தான் இங்கு அதிபராக இருக்கிறார்.

    இவ்வாறு பொன்சேகா கூறினார்.  #Sirisena #SarathFonseka
    மகிந்தா ராஜபக்சே பிரதமராக நீடிக்க தடை விதித்து இலங்கை சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. #Srilanka #MahindaRajapakse #SupremeCourt
    கொழும்பு:

    இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரம சிங்கேவுக்கும் இடையிலான பனிப்போரில் கடந்த மாதம் 26-ம் தேதி அதிரடி திருப்பம் ஏற்பட்டது.

    பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரம சிங்கேவை நீக்கியும், முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை பிரதமர் பதவியில் அமர்த்தியும் சிறிசேனா உத்தரவிட்டார். நாடாளுமன்றத்தையும் முடக்கினார்.

    நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பல தரப்பிலும் குரல் வலுத்தது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை சிறிசேனா கடந்த 14-ம் தேதி  கூட்டினார்.  ராஜபக்சே குதிரைப்பேரம் நடத்தியும், பெரும்பான்மையை நிரூபிக்கத்தக்க அளவுக்கு தேவையான எம்.பி.க்கள் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே, அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்து கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டார். நாடாளுமன்ற தேர்தல் ஜனவரி 5-ம் தேதி நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.



    ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை அறியாமல் பொதுத்தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரியா குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், அந்நாட்டு எம்.பி.,க்கள் 122 பேர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரித்தது. அப்போது, மகிந்த ராஜபக்சே பிரதமராக செயல்படவும், அமைச்சரவை கூட்டம் நடத்தவும் இடைக்கால தடை விதித்துள்ளது.

    மேலும், ராஜபக்சேவும், அவரால் அமைச்சராக நியமிக்கப்பட்டவர்களும், டிசம்பர் 12-ம் தேதி ஆஜராகவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Srilanka #MahindaRajapakse #SupremeCourt
    இலங்கை அரசில் மற்றொரு அதிரடியாக, இலங்கை மந்திரிகள் அரசு பணத்தை செலவு செய்வதற்கு தடை விதித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது. #SriLankaParliament #SriLankaMinisters
    கொழும்பு:

    இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி பிரதமர் விக்ரமசிங்கேவை அதிரடியாக நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். அன்று முதல் இலங்கையில் அரசியல் நெருக்கடி உருவானது. பின்னர் சிறிசேனா, சுமார் 20 மாதங்கள் முன்னதாகவே நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, உடனே தேர்தல் நடத்த உத்தரவிட்டார்.
     
    ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அதிபரின் முடிவை ஏற்கமறுத்து, தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைத்தது. விக்ரமசிங்கே, ராஜபக்சே இருவரும் தாங்கள் தான் பிரதமர் என்று அறிவித்தனர். விக்ரமசிங்கே தன்னை நீக்கியது செல்லாது, தனக்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்று கூறிவந்தார்.

    சபாநாயகர் கரு ஜெயசூரியா, ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவரை சட்டப்படி பிரதமராக இந்த அவை ஏற்றுக்கொள்ளாது என்று அறிவித்தார். விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய முன்னணி ராஜபக்சே மீது 3 நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவந்தது. ஆனாலும் ராஜபக்சே பதவி விலக மறுத்துவிட்டார்.



    நவம்பர் 14, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 2 முறை தோற்கடிக்கப்பட்ட பின்னரும் ராஜபக்சே எப்படி பிரதமர் பதவியில் நீடிக்கலாம் என பல்வேறு கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தன. 16-ம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பின்போது வரலாறு காணாத வன்முறை ஏற்பட்டது. நாற்காலிகளும், மிளகாய் பொடியும் வீசப்பட்டது. போலீசார் அவைக்கு உள்ளே அழைக்கப்பட்டதும் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சில எம்.பி.க்களும் காயம் அடைந்தனர். இந்த வன்முறை குறித்து விசாரணை நடத்த சபாநாயகர் நேற்று ஒரு குழுவை அமைத்தார்.

    இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் பிரதமர் அலுவலகம் அரசு நிதியில் செலவுகளை செய்வதற்கு தடை விதித்து நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது ராஜபக்சேவுக்கு மற்றொரு மிகப்பெரிய அடியாக கருதப்படுகிறது.

    இந்நிலையில், இலங்கை அரசில் மற்றொரு அதிரடியாக, இலங்கை மந்திரிகளும் அரசு பணத்தை செலவு செய்வதற்கு தடை விதித்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் தீர்மானம் இன்று நிறைவேறியது. 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 122 உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. #SriLankaParliament #SriLankaMinisters
    இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாளை தடையை மீறி கொண்டாடியதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைதானார். #LTTEchief #LTTEsupremo #VelupillaiPrabhakaran #RIPVelupillaiPrabhakaran
    கொழும்பு:

    இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டு போரில் 2009-ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  

    பிரபாகரனின் 64-வது பிறந்தநாளான நவம்பர் 26-ம் தேதியை இன்று உலகம் முழுவதும் வாழும் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களும், இலங்கையில் வாழும் தமிழின மக்களும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இலங்கையில் தமிழர்கள் பெருவாரியாக வாழும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த கொண்டாட்டம் களைகட்டியது.

    பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடக்கூடாது, விழாவில் யாரும் கலந்துகொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு எச்சரித்திருந்தும் அங்கு பல பகுதிகளில் இன்று பிறந்தநாள் விழாக்கள் நடத்தப்பட்டது .



    இந்நிலையில், வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த இடமான வெல்வெட்டித்துறையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அங்கு வைத்திருந்த பிறந்தநாள் கேக் மற்றும் பிரபாகரனை புகழும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பேனர்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபாகரன் பிறந்தநாளை நினைவு கூரும் வகையில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அவரைப்பற்றிய பதிவுகள் அதிகமாக காணப்பட்டன.  #LTTEchief  #LTTEsupremo #VelupillaiPrabhakaran #RIPVelupillaiPrabhakaran
    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற கடைசி நாளில் 75 ரன்கள் தேவைப்படுவதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பல்லேகெலேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலி்ல் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்கள் சேர்த்தது. பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கருணாரத்னே (63), தனஞ்ஜெயா டி சில்வா (59), ரோஷென் சில்வா (85) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 336 ரன்கள் குவித்தது.

    46 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் ஜோ ரூட் அபாரமாக ஆடி 124 ரன்கள் குவித்தார். விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் அரைசதம் அடிக்க இங்கிலாந்து 80.4 ஓவரில் 346 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை சார்பில் அகிலா தனஞ்ஜெயா 6 விக்கெட் வீழ்த்தினார்.



    இதையடுத்து, 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணரத்னே அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். ஏஞ்சலோ மேத்யூஸ் பொறுப்புடன் ஆடி 88 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

    நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்துள்ளது. விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெலா 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் 4 விக்கெட் கைப்பற்றினார்.

    போட்டியின் இறுதி நாளில் இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 75 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 3 விக்கெட்டுகள் மட்டுமே உள்ள நிலையில் இலங்கை அணி வெற்றி பெறுமா அல்லது இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #SLvENG
    மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் வெற்றி பெற்றனர். #WomensWorldT20
    கயானா:

    மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

    இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் ’ஏ’ பிரிவில் உள்ள நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி 31 ரன்னில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

    முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 18.4 ஓவர்களில் 76 ரன்னில் சுருண்டது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இருந்தது. தென் ஆப்பிரிக்கா முதல் தோல்வியை தழுவியது.

    இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் இலங்கை அணி 25 ரன்னில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.

    முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 97 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய வங்காளதேசம் 72 ரன்னில் சுருண்டது.

    இலங்கை அணி பெற்ற முதல் வெற்றியாகும். அந்த அணி ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவிடம் தோற்று இருந்தது. வங்காளதேசம் 3-வது தோல்வியை சந்தித்தது. பேட்டிங்கில் இருந்து வெளியேற்றப்பட்டது,

    இன்று நடைபெறும் ஆட்டம் ஒன்றில் ‘பி’ பிரிவில் உள்ள இந்தியா- அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி முதல் 2 ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்தை தோற்கடித்து ஹாட்ரிக் வெற்றியுடன் அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

    அயர்லாந்து அணி தான் மோதிய 2 ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருந்தது.

    இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் 2-வது வெற்றிக்காகவும், நியூசிலாந்து முதல் வெற்றிக்காகவும் காத்திருக்கின்றன. #WomensWorldT20
    இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 285 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. #England #SriLanka #SecondTestCricket
    பல்லகெலே:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
     
    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பல்லகெலேயில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் ரோரி பர்ன்ஸ், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஜென்னிங்ஸ் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பென் ஸ்டோக்ஸ் 19 ரன்னிலும், கேப்டன் ஜோ ரூட் 14 ரன்னிலும் அவுட்டாகினர். பொறுப்புடன் ஆடிய ரோடி பர்ன்ஸ் 43 ரன்னில் வெளியேறினார்.

    தொடர்ந்து இறங்கிய ஜோஸ் பட்லர் அரை சதமடித்து 63 ரன்னில் அவுட்டானார். மொயின் அலி 10 ரன்னிலும், பென் போக்ஸ் 19 ரன்னிலும், அடில் ரஷித் 31 ரன்னிலும், ஜேக் லீச் 7 ரன்னிலும் வெளியேறினர்.

    இறுதியில், சாம் கர்ரன் 64 ரன்களில் அவுட்டாக இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.  இங்கிலாந்து 75.4 ஓவரில் 285 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    இலங்கை அணி சார்பில் தில்ருவான் பெராரா 4 விக்கெட்டும், மலிந்தா புஷ்பகுமாரா 3 விக்கெட்டும், அகிலா தனஞ்செயா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது. #England #SriLanka #SecondTestCricket
    இலங்கை முன்னாள் வீரர் தில்கரா லோகுதிகே சூதாட்ட புகாரில் நீக்கப்பட்டதன் மூலம் ஒரே மாதத்தில் 3 வீரர்களை ஐசிசி சஸ்பெண்ட் செய்துள்ளது. #ICC #DilharaLokuhettige
    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணி சூதாட்ட பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது.

    அந்நாட்டின் முன்னாள் அதிரடி வீரரும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான ஜெயசூர்யா மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஊழல் புகாரை கூறி இருந்தது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டது.

    அதைத்தொடர்ந்து கடந்த 31-ந்தேதி இலங்கை முன்னாள் வேகப்பந்து வீரரும், அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான நுவன் சொய்சா சிக்கினார். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த நிலையில் இலங்கை முன்னாள் வீரர் தில்கரா லோகுதிகே மீதும் மேட்ச் பிக்சிங் புகார் கூறப்பட்டு அவரை ஐ.சி.சி. சஸ்பெண்டு செய்துள்ளது.

    கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் 10 ஓவர் ‘லீக்’ போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் ஆல்ரவுண்டரான தில்கரா சூதாட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக ஐ.சி.சி. ஊழல் தடுப்புக்குழு விசாரித்தது.

    ஆட்டத்தின் போக்கை மாற்றி முடிவை நிர்ணயம் செய்தல், வீரர்களை நேரடியாக தொடர்பு கொண்டு விதிமீறலில் ஈடுபட வலியுறுத்தியது போன்ற புகார்கள் அடிப்படையில் அவரை சஸ்பெண்டு செய்து உள்ளது.

    ஆட்டத்தில் விளையாடாமலேயே தில்கரா முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து அவர் 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க ஐ.சி.சி. அவகாசம் வழங்கி உள்ளது.

    38 வயதான தில்கரா 9 ஒருநாள் ஆட்டம் மற்றும் இரண்டு 20 ஓவர் சர்வதேச போட்டியில் விளையாடி இருக்கிறார். #ICC #DilharaLokuhettige
    இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் இன்று தொடங்குகிறது. #England #SriLanka #SecondTestCricket
    பல்லகெலே:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பல்லகெலேயில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த டெஸ்டிலும் கோலோச்சி, இலங்கை மண்ணில் 17 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை வெல்வதில் இங்கிலாந்து தீவிரம் காட்டுகிறது.

    இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ காயமடைந்ததால் காலே டெஸ்டில் அறிமுக விக்கெட் கீப்பராக பென் போக்ஸ் சேர்க்கப்பட்டார். சதம் அடித்து சாதனை படைத்த பென் போக்ஸ், விக்கெட் கீப்பிங்கில் 3 கேட்ச், ஒரு ரன்-அவுட் செய்து ஆட்டநாயகனாக ஜொலித்தார். பேர்ஸ்டோ காயத்தில் இருந்து குணமடைந்து நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் பேர்ஸ்டோ- பென் போக்ஸ் ஆகியோரில் யாருக்கு இடம் என்ற குழப்பம் ஏற்பட்டது.

    இந்த சூழலில் அணியில் மாற்றம் இல்லை, பென் போக்ஸ் அணியில் நீடிப்பார் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெளிவுப்படுத்தியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக பேர்ஸ்டோ வியக்கத்தக்க வகையில் பங்களிப்பை அளித்து வருகிறார். ஆனாலும் இங்குள்ள சீதோஷ்ண நிலையில் பென் போக்சே விக்கெட் கீப்பிங்குக்கு பொருத்தமானவராக இருப்பார் என்றும் ஜோ ரூட் குறிப்பிட்டார். ஆடுகளம் நன்கு உலர்ந்து சுழற்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் காணப்படுவதால், 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் தாக்குதலை தொடுக்க இங்கிலாந்து காத்திருக்கிறது. பேட்டிங்கில் மொயீன் அலி சரியாக ஆடாதால் இந்த டெஸ்டில் 3-வது வரிசையில் ஜோஸ் பட்லரை இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொயீன் அலி பின்வரிசைக்கு தள்ளப்படுகிறார்.

    முதலாவது டெஸ்டில் படுதோல்வி அடைந்த இலங்கை அணி எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. காயம் காரணமாக கேப்டன் சன்டிமால் இந்த டெஸ்டில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக சுரங்கா லக்மல் அணியை வழிநடத்த இருக்கிறார். மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் ஓய்வு பெற்று விட்டதால், அவரது இடத்தில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் புஷ்பகுமாரா இறங்குகிறார். முந்தைய டெஸ்டில் மேத்யூஸ் (இரண்டு இன்னிங்சிலும் அரைசதம்) தவிர வேறு யாரும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களும் ரன் குவிக்க வேண்டியது அவசியமாகும்.

    இந்த மைதானத்தில் இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது இதுவே முதல் முறையாகும். இலங்கை அணி இங்கு 6 டெஸ்டில் விளையாடி 1-ல் வெற்றியும், 2-ல்தோல்வியும், 3-ல் டிராவும் கண்டுள்ளது. போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

    இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், கீடான் ஜென்னிங்ஸ், ஜோஸ் பட்லர், ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, பென் போக்ஸ், சாம் குர்ரன், அடில் ரஷித், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    இலங்கை: கவ்ஷல் சில்வா, கருணாரத்னே, ரோஷன் சில்வா, குசல் மென்டிஸ், மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா, தனஞ்ஜெயா டி சில்வா, தில்ருவான் பெரேரா, சுரங்கா லக்மல் (கேப்டன்), அகிலா தனஞ்ஜெயா, மலின்டா புஷ்பகுமாரா.

    காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 321 ரன்களை எடுத்துள்ளது. #ENGvSL
    கொழும்பு:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள், ஒரு டி 20 போட்டி மற்றும்  3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.

    முதலில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அடுத்து நடந்த ஒரே ஒரு டி 20 போட்டியிலும் இங்கிலாந்து வென்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கல்லே மைதானத்தில் நேற்று தொடங்கியது. 

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக
    ரோரி பர்ன்ஸ், கேடன் ஜெனிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.

    ரோரி பர்ன்ஸ் 9 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய மொயின் அலி முதல் பந்திலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெனிங்ஸ் 46 ரன்களில் அவுட்டானார்.



    கேப்டன் ஜோ ரூட் 35 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 7 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 38 ரன்னிலும் வெளியேறினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் பொறுப்புடன் ஆடினார். அவருக்கு சாம் கர்ரன் ஒத்துழைப்பு கொடுத்தார். சாம் கர்ரன் 48 ரன்களில் அவுட்டானார். அடில் ரஷித் 35 ரன்னில் வெளியேறினார்.

    முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 91 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்துள்ளது. பென் போக்ஸ் 87 ரன்களுடனும், ஜேக் லீக் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இலங்கை அணி சார்பில் தில்ருவான் பெராரா 4 விக்கெட்டும், சுரங்க லக்மால் 2 விக்கெட்டும் எடுத்தனர். #ENGvSL
    ×