search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏசு"

    கர்த்தருடைய வார்த்தைகளோடு இணைந்து அதில் உள்ள உண்மைகளை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகும்போது நம்மை உருமாற்ற அவருடைய வார்த்தைகள் உதவுகின்றன.
    கர்த்தருடைய வார்த்தைகளோடு இணைந்து அதில் உள்ள உண்மைகளை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகும்போது நம்மை உருமாற்ற அவருடைய வார்த்தைகள் உதவுகின்றன.

    கர்த்தருடைய வார்த்தைகளால் உருவாக்கப்பட்டது வேதாகமம். கர்த்தருடைய வார்த்தைகளோடு இணைந்து அதில் உள்ள உண்மைகளை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகும்போது நம்மை உருமாற்ற அவருடைய வார்த்தைகள் உதவுகின்றன. மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில், ஆண்டவருடைய வார்த்தைகளினால் வேதாகமம் நிறைந்து இருக்கிறது.

    இது ஒரே புத்தகம் தான் என்றாலும், ஆனால் அதில் கடவுள், நாம் அவரை பற்றி என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கு கிடைக்கும் இரட்சிப்பைப்பற்றியும், நாம் இந்த வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை பற்றியும், அவருடைய விருப்பத்தை பற்றியும், மிக தெளிவாகவும், துல்லியமாகவும் நமக்கு விவரிக்கிறார்.

    உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருந்தது (சங்கீதம் 119:105). இந்த பிரபஞ்சத்தையே உருவாக்கிய கடவுளுக்கு தனி நபரின் வாழ்க்கையில் இடைப்பட்டு அவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டிய அவசியமென்ன?. நாம் பெரிய பதவியில் இருந்தாலும், கல்வி மானாக இருந்தாலும், பொருளாதார ரீதியில் மிகப்பெரிய உச்சத்தை எட்டி இருந்தாலும், நல்ல குடும்ப வாழ்க்கையை பெற்றிருந்தாலும், ஏதோ ஒரு வெற்றிடத்தை பூர்த்தி செய்ய கடவுளால் மட்டுமே இயலும்.

    அவருடைய வார்த்தை அதற்கு உறுதுணையாய் நிற்கும். மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். (மத்தேயு 4:4). ஒரு தனிமனிதனை நண் பனாக ஏற்று கொள்ள, நாம் அவருடைய கடந்த கால வாழ்க்கை, சுற்றுப்புறம் அனைத்தையும் அலசி ஆராய்கிறோம்.

    பின்னர் தான் நண்பராக ஏற்றுக்கொள்கிறோம். அதே போல கடவுளுக்கு நம்மை பற்றி அனைத்தும் தெரியும். ஆனால் நமக்கு கடவுளை பற்றி என்ன தெரியும்? அதற்கு அவருடைய வார்த்தைகளுக்கு செவிமடுப்பதே ஒரே வழி. அப்பொழுது தான் நட்பின் ஆழம் பலப்படும். ஆமென்! 
    ‘எல்லாம் நிறைவேறியது’ என்று சொன்ன இயேசுவின் வார்த்தையில் இணைவோம். ‘எல்லாம் புதிதாகும்’ அனுபவத்தைப் பெறுவோம்.
    “எல்லாம் நிறைவேறிற்று” யோவான் 9:30.

    இறைமகன் இயேசு சிலுவையில் கூறிய ஆறாவது வாக்கியம் “எல்லாம் நிறைவேறிற்று” என்பது.

    ஆறாத மனதின் தாகத்தை நிறைவேற்றிய நிம்மதி அந்த வார்த்தையில் எதிரொலிக்கிறது.

    இயேசு மனிதனாக மண்ணில் வந்தார், அதன் நோக்கம் மண்ணுலகின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, உயிர்விட வேண்டும் என்பதே. அந்த நோக்கம் இதோ நிறைவேறிவிட்டது.

    சுற்றியிருந்த மக்கள் நினைத்தது போலவோ, ஆளும் வர்க்கம் நிறைவேறியது போலவோ இது அவர்களுடைய வெற்றியல்ல.

    ‘எல்லாம் முடிந்தது’ என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் “எல்லாம் நிறைவேறியது” என இயேசு அதை தனது வெற்றியாய் மாற்றி எழுதினார்.

    தந்தை தனக்கு இட்ட பணியை இயேசு நிறைவேற்றி முடித்தார் என்பதே அந்த வாக்கியத்தின் சுருக்கமான விளக்கம்.

    இதன் எபிரேய வார்த்தை ‘டிடிலெஸ்தாய்’ என்பது. அதன் பொருள், ‘கடனை எல்லாம் செலுத்தி முடித்தாயிற்று’ என்பதே. இயேசுவும் பாவங்களுக்கு விலையாகக் கொடுக்க வேண்டிய தன்னுடைய உயிரைக் கொடுத்து இதோ முடித்து விட்டார்.

    ‘எல்லாம் நிறைவேறியது’ எனும் இந்த வாக்கியம் நமது வாழ்வில் புதிய நம்பிக்கைகளை விதைக்கின்ற ஒரு விஷயமாக இருக்கிறது.

    முதலாவது, நமது பாவங்களிலிருந்து நாம் விடுதலையாகி விட்டோம். “கிறிஸ்து ரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம்” (எபேசியர் 1:7) எனும் இறைவார்த்தை இதை உறுதி செய்கிறது.

    பழைய ஏற்பாட்டில் பாவங்களுக்கு ஏற்பவும், பாவம் செய்யும் நபருக்கு ஏற்பவும், பலிகள் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் அந்த பலிகளையெல்லாம் இறை மகன் இயேசுவின் ஒற்றைப் பலி தேவையற்றதாகிவிட்டது.

    இப்போது நாம் செய்யவேண்டிய பலி விலங்குகளை வெட்டுவதல்ல, நம்மை நாமே வெறுத்து இறைவனிடம் சரணடைவது.

    இரண்டாவது, அவர் சாவை வென்று விட்டார். “நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண் கிறோம்” (எபி 2:9) என்கிறது விவிலியம்.

    வான தூதர்களுக்கு மரணம் இல்லை. கடவுளுக்கும் மரணம் என்பதில்லை. மரணம் இல்லாமல் மீட்பு இல்லை. அதனாலேயே இறைமகன் இயேசு மனிதனாய் பூமியில் வரவேண்டியிருந்தது. அவர் பூமியில் வந்து நிராகரிப்பையும், வலியையும், மரணத்தையும் ஏந்தினார்.

    ‘எல்லாம் நிறைவேறியது’ எனும் இயேசுவின் வார்த்தை மரணத்தை வென்ற வார்த்தை. நம்முடைய ஆன்மிக மரணத்துக்கு முடிவு கட்டும் நம்பிக்கையை விதைக்கும் வார்த்தை.

    அவரது மரணத்தையும், உயிர்ப்பையும் நம்பி அவரை ஏற்றுக்கொள்பவர்கள் இதன் மூலம் விண்ணக வாழ்வின் அனுமதிச் சீட்டைப் பெற்றுக் கொள்கின்றனர்.

    மூன்றாவதாக, இறைவனுக்கும் நமக்கும் இடையேயான நேரடி உறவுக்கான கதவைத் திறந்து வைத்திருக்கிறது இயேசுவின் சிலுவை மரணம்.

    பழைய ஏற்பாட்டில் ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலம் மனிதர்களுக்கு அனுமதியற்ற ஒன்றாகவே இருந்தது. அதன் திரைச்சீலையைக் கடந்து செல்ல தலைமைக்குருவுக்கு அதுவும் ஆண்டுக்கு ஒரே ஒரு முறைமட்டுமே அனுமதி உண்டு. அதை மாற்றி நேரடி உறவை உருவாக்கியது, “எல்லாம் நிறைவேறியது” எனும் இயேசுவின் பணியே.

    “இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச்சீலைக்கு ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்துக்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு. ஏனெனில் அவர் ரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி” என்கிறது எபிரேயர் 10:19.

    இறைவனின் மரணம் நம்மை இறைவனின் அருகில் நெருங்குவதற்கு மட்டுமல்ல, நம்மை அவருக்கு ஏற்புடையவராக மாற்றவும் செய்கிறது.

    “தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார்” (எபி 10:14) எனும் வசனம் நமக்கு முழுமையான மீட்பின் நம்பிக்கையாய் இருக்கிறது.

    “மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என இறை மகனின் வருகையின் நோக்கத்தை மிகத் துல்லியமாக மார்க் 10:45 விளக்குகிறது.

    நமது வாழ்க்கையை நாம் ஒரு அலசலுக்கு உட்படுத்த இந்த சிலுவை வார்த்தை அழைப்பு விடுக்கிறது.

    “எல்லாம் நிறைவேறிற்று” என மகிழ்ச்சியாக சொல்லும் நிலையில் நாம் இருக்கிறோமா?. முழுமையாக இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுபவர்களாக இருக்கிறோமா?. இந்த நேரம் நமது வாழ்க்கை முடிந்தால், என்னிடம் தரப்பட்ட பணிகள் “எல்லாம் நிறைவேறிற்று” என சொல்ல முடியுமா? இல்லை, “ஐயோ இன்னும் நான் தொடங்கவே இல்லையே என பதறுவோமா”.

    இறை சித்தத்தை நிறைவேற்ற கீழ்ப்படிதலும், சோதனைகளைத் தாங்கும் மனமும் உள்ளவர்களாக இருக்கிறோமா?

    ‘எல்லாம் நிறைவேறியது’ என்று சொன்ன இயேசுவின் வார்த்தையில் இணைவோம். ‘எல்லாம் புதிதாகும்’ அனுபவத்தைப் பெறுவோம்.

    சேவியர்
    இறைதந்தையிடம் மனிதனின் பாவத்திற்கு பரிகாரமானார். மனித இனத்தையே இறையோடு மீண்டும் இணைத்தார். மரித்த மூன்றாம் நாள் உயிர்த்து இன்றும் வாழ்கிறார்.
    கடவுள், மனிதனை மண்ணால் உருவாக்கி, தன் உயிர் மூச்சை ஊதி உயிருள்ளவனாக ஆக்கினார். அவனுக்கு உற்றதுணையாக ஏவாளை படைத்து பரிசாக்கினார். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். இந்த நிலையில் இறைவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து அவரை மாட்சிமைப்படுத்த வேண்டிய மனிதன், சாத்தானின் குரலுக்கு செவிமடுத்து, தன்னை படைத்த கடவுளின் திட்டத்தை எதிர்த்தான். அதனால் பாவ இருள் பற்றிக்கொண்டது. ஆதி மனிதன் மட்டுமல்ல, அவன் வழி வந்த மனித இனம் முழுவதும் கடவுள் கொடுத்த மேன்மையை இழந்தது. அதனாலேயே கடவுளின் உறவு தூரமானது.

    இந்தநிலையில் இருந்த, பாழ்பட்டு போன மனிதத்தை தேடி வந்த தெய்வம் தான் இயேசு. அவர், நம்மை கடவுளோடு ஒப்புறவாக்கி, இறை உறவிலே மீண்டும் இணைத்து, இழந்து போன மனித மாண்பை வழங்க வந்தவர். இறைத்தந்தையின் அன்பை, மன்னிப்பை, வல்லமையை மக்களுக்கு நற்செய்தியாக அறிவித்து மனம் திரும்புதலுக்கும், இறையாட்சியின் மதிப்பீடுகளுக்கும் மக்களை அழைத்தவர். அவர், பாவிகளுக்கும், பாமரர்களுக்கும், வரிதண்டுவோர்க்கும், வலுக்குறைந்தோர்க்கும் உறவு கரம் கொடுத்து உதவியவர்.

    அவர், பலருடைய மீட்புக்கு விலையாக தன் உயிரை கொடுக்கவே வந்தேன் என்றார். மானிட மகன் சிலுவையில் உயர்த்தப்பட வேண்டும், அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலை வாழ்வு பெறுவர் என்பதை உணர்ந்தார். அதனால் மனமுவந்து சிலுவைச்சாவின் வேதனைக்கும், அவமானத்துக்கும் தன்னை கொடுத்தார். உயிரைக்கொடுத்து நம்மை மீட்டார். அதற்கு தனது விலை மதிப்பில்லா உயிரையும், ரத்தத்தையும் விலையாக கொடுத்தார்.

    இறைதந்தையிடம் மனிதனின் பாவத்திற்கு பரிகாரமானார். மனித இனத்தையே இறையோடு மீண்டும் இணைத்தார். மரித்த மூன்றாம் நாள் உயிர்த்து இன்றும் வாழ்கிறார். தன் உயிரை விலையாக கொடுத்து நமக்கு நிலை வாழ்வு தந்தார். இயேசு போற்றி.

    அருட்சகோதரி. மிரியம், அமலவை சபை,

    சோபியா இல்லம், திண்டுக்கல்.  
    இயேசு கிறிஸ்துவில் பிரியமானவர்களே, எருசலேமிலே சாலமன் ராஜா தனது தந்தை தாவீது காண்பிக்கப்பட்ட மோரியா மலையில் ஆலயத்தை கட்ட ஆரம்பித்து, ஏழு வருடத்தில் கட்டி முடித்தான்.
    தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம் பண்ணுவாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்? (2 நாளா.6:18)

    இயேசு கிறிஸ்துவில் பிரியமானவர்களே, எருசலேமிலே சாலமன் ராஜா தனது தந்தை தாவீது காண்பிக்கப்பட்ட மோரியா மலையில் ஆலயத்தை கட்ட ஆரம்பித்து, ஏழு வருடத்தில் கட்டி முடித்தான். பின்னர் ‘வானாதி வானங்களுக்கும் மேலான இறைவன் மனுஷரோடே பூமியிலே வாசம் பண்ணுவாரோ. ஒவ்வொரு மனிதனின் இருதயத்தில் தங்கி தாபரித்து மனிதரோடு வசிப்பாரோ. இந்த ஆலயத்தில் செய்யும் விண்ணப்ப ஜெபத்தை கேட்க உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்து இருப்பதாக நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்’ என்று தன்னை தாழ்த்தி ஜெபம் செய்யத் தொடங்கினான்.

    சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இரவிலே சாலமனுக்குத் தரிசனமாகி, ‘நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களை தாழ்த்தி, முழு இருதயத்தோடு என் முகத்தைத் தேட தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால், பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு அவர்கள் பாவத்தை மன்னித்து அவனவனுடைய கிரியைகளின்படி தக்கதாய் பலன் அளித்து ஆசீர்வதிப்பேன்’ என்றார்.

    சாலமனின் தாழ்மையினால் தேவன் அவனோடு பேசினார்.

    ‘மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள், பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்’. (1 பேதுரு 5:5)

    ஒருவனுடைய வாழ்வில் பெருமையும், தாழ்மையும் உண்டு. எல்லா தீமைக்கும் வித்தாகிய பெருமை மனுஷனுடைய இருதயத்தில் ஆழமாக பதிந்துள்ளது. நமது உள்ளத்தில் வீணான பல மேன்மை பாராட்டுதலால் பெருமை வருகிறது. பெருமையோ ஒருவனுடைய வாழ்க்கையை அழித்துவிடுகிறது.

    தாழ்மை என்பது தேவன் நமக்கு அளிக்கும் சக்தி வாய்ந்த ஓர் ஆயுதமாகும். வேலை செய்யும் இடத்தில் தாழ்மை, பிரயாணத்தில் தாழ்மை, எல்லா காரியத்திலும் தாழ்மை என்று செயல்பட்டால் ஒருபோதும் இடறல் வருவது இல்லை.

    தாழ்ந்த இடத்தில் தண்ணீர் நிற்கும். உயர்ந்த இடத்தில் தண்ணீர் நிற்காது. மெய்யான, பரிசுத்தமான மனத்தாழ்மையாக வாழ்கிறவர்கள் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் பூரண சமாதானத்தின் விளக்கு பிரகாசித்துக் கொண்டு இருக்கும்.

    ராஜாவாகிய சவுல் தேவ வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் தன்னைத்தானே உயர்த்தியபோது, அவனை தேவன் புறக்கணித்து தள்ளினார். ஒரு பொல்லாத ஆவி அவனைப் பிடித்துக் கொண்டது.

    ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்த தாவீது, தன்னைத் தானே தாழ்த்தினபோது பலம் பெற்று இஸ்ரவேலின் ராஜாவாக மாறினார். நாற்பது வருஷம் அரசாண்டார்.

    தாழ்மையுள்ளவர்களுக்கு மிகுதியான பிரதிபலன்களைப் பரலோகத்தில் சேர்த்து வைக்கிறார். அவர்கள் ஆத்துமா நித்திய இளைப்பாறுதலை காண்பார்கள்.

    ‘அவர் மனுஷ ரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி...’ (பிலி.2:8,9)

    சர்வ அதிகாரமும் நிறைந்த தேவனாகிய இயேசு குறித்து தேவதூதன் மரியாளிடத்தில் பேசிய போது, ‘பரிசுத்த ஆவி உன்மேல் வரும். உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும். ஆதலால் உன்னிடத்தில் பிறக்கிறவர் பரிசுத்தர்’ என்றான்.

    இயேசு மிகுந்த ஆடம்பர அரண்மனையில் பிறக்கவில்லை. அவர் மிகுந்த தாழ்மையில், அசுத்தமும் துர்நாற்றமுள்ள ஒரு மாட்டு தொழுவத்திலே பிறந்தார். நம்மை பாவத்திலிருந்து மீட்கும் படியாக பரலோகத்தின் சகல மகிமையையும் விட்டு ஒரு மனிதனாகும்படி இறங்கி வந்தார். அவரது இந்த உலக வாழ்க்கையின் தொடக்கம் எவ்வளவு தாழ்மையாக இருந்தது என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்.

    முப்பதாவது வயதில் யோர்தான் நதிக்குச் சென்று யோவான் ஸ்நானனிடம் ஞானஸ்நானம் பெற்று, எல்லோருக்கும் நன்மை செய்கிறவராய் சுற்றித் திரிந்தார். வியாதி உள்ளவர்களை குணமாக்கினார். பிசாசுகளை துரத்தி, அனேக அற்புதங்களை செய்து மரித்தோரை உயிரோடு எழுப்பினார்.

    கல்வாரி சிலுவைக்கு முன் சீடர்களின் கால்களை கழுவினார். கெத்சமனே தோட்டத்தில் பிதாவை நோக்கி ஜெபம் செய்தபோது, இயேசுவை பிடித்துச் சென்றனர். இரவில் ஐந்து பிரதான ஆசரியர்களால் விசாரிக்கப்பட்டு கன்னத்தில் அறைந்து, கோலால் அடித்து பரியாசம் செய்து, தலையில் முள்முடி சூட்டி சிலுவை சுமந்து சென்றபோது வாரினால் அடித்தார்கள். அடிக்கிறவர்களுக்கு தன் முதுகையும், தாடை மயிரை பிடுங்குகிறவர்களுக்கு தன் தாடையையும் ஒப்புக்கொடுத்தார். மூன்று ஆணிகளால் சிலுவையில் அறைந்து சரீரம் தொங்கினபோதும், ‘பிதாவே இவர்களை மன்னியும்’ என்றார்.

    அவரின் தாழ்மையை யாரால் வர்ணிக்க முடியும். பிதாவாகிய தேவன் எல்லா நாமத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் இயேசுவை உயர்த்தினார்.

    ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம் சி.பூமணி, சென்னை-50. 
    சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறை சந்திப்பு சகாயபுரத்தில் உள்ள இடைவிடா சகாய அன்னை ஆலய திருவிழா நாளை ( வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
    சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறை சந்திப்பு சகாயபுரத்தில் இடைவிடா சகாய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    நாளை மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். விழாவுக்கு அருட்பணியாளர் ஞானசேகரன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் ஜான் பெனிட்டோ மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு நற்செய்தி கூட்டம் நடக்கிறது.

    திருவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு செபமாலை, திருப்பலி, நற்செய்தி கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    13-ந் தேதி மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    19-ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் டயனீஷியஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஜான்சன் மறையுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.

    திருவிழாவின் இறுதி நாளான 20-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு, முதல்திருப்பலி நடைபெறும். தொடர்ந்து காலை 8 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலி, முதல் திருவிருந்து வழங்குதல் ஆகியவை நடக்கிறது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்குகிறார். மாலை 6 மணிக்கு திருப்பலி, தொடர்ந்து கலை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான் கென்னடி, இணை பங்குத்தந்தை நியுமேன் மற்றும் பங்குபேரவை நிர்வாகிகள், பங்கு மக்கள் இணைந்து செய்து வருகிறார்கள். 
    ×